search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சிகளுக்கு விறுவிறுப்பாக வாக்குபதிவு
    X

    மருதாடு ஊராட்சி மன்ற தலைவருக்கான இடைத்தேர்தல் இன்று நடந்தது. வாக்காளர்களை வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்ட காட்சி.

    கடலூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சிகளுக்கு விறுவிறுப்பாக வாக்குபதிவு

    கடலூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சிகளுகளில் வாக்குபதிவு செய்யப்பட்டது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் 14 ஊராட்சி ஒன்றியங்களில் காலியாக உள்ள ஒருமாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கும், 4 ஊராட்சி மன்ற தலைவர்கள் பதவிக்கும், 26 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கும் என மொத்தம் 31 பதவி இடங்களை நிரப்புவதற்கான இடைத்தேர்தல் இன்று (சனிக்கிழமை) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி இன்று காலை 7 மணிக்கு வாக்குபதிவு தொடங்கியது. காலை முதலே வாக்காளர்கள் வரிசசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்தனர்.

    கடலூர் ஒன்றியத்தில் கடலூர் முதுநகர் (நான்முனிசிபல்) 9-வது வார்டுக்கும், கீழ்குமாரமங்கலத்தில் 6-வது வார்டுக்கும், மருதாடு பஞ்சாயத்து தலைவர் பதவிக்கும் இடைத்தேர்தல் நடந்தது. இந்த தேர்தல் மாலை 6 மணிவரை நடக்கிறது. இதில் பதிவான வாக்குகள், வருகிற 12-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) எண்ணப்படுகிறது. இதற்கிடையே இடைத்தேர்தலையொட்டி தேர்தல் நடைபெறும் பகுதிகளில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் மேற்பார்வையில் 700-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு,பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    Next Story
    ×