search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "for selling ganja"

    • கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த ஜெய தீபன் என்பவரை பவானிசாகர் போலீசார் கைது செய்தனர்.
    • 750 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கோபி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீ சார் அங்கு கஞ்சா எனும் போதை பொருளை விற்பனை செய்து கொண்டி ருந்த சத்தியமங்கலம் சிக்கரசம்பாளையம் பகுதியை சேர்ந்த மனோகரன் மகன் சதீஷ் (வயது 26) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    பின்னர் அவர் விற்பனைக்காக வைத்திருந்த 500 கிராம் எடையுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்து வருகின்றனர்.

    இதேபோல் பவானிசாகர் இலங்கை அகதிகள் முகாம் பகுதியில் கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த அதே பகுதியை சேர்ந்த முனீஸ்வரன் மகன் ஜெய தீபன் (28) என்பவரை பவானிசாகர் போலீசார் கைது செய்தனர்.

    பின்னர் அவர் வைத்திருந்த 750 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ரவிச்சந்திரன் (27), சூரம்பட்டி வலசு, அண்ணா வீதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் (37) என்பது தெரியவந்தது.
    • திருவண்ணாமலையில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து இங்கு விற்பனை செய்ய முயன்றது தெரியவந்தது.

    ஈரோடு,

    ஈரோடு சூரம்பட்டி போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது சூரம்பட்டி வலசு, நேதாஜி ரோடு பகுதியில் சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர்.அப்போது அவர்களிடம் 1.200 கிலோ கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது.

    விசாரணை யில் அவர்கள் வீரப்பன் சத்திரம் பகுதி யைச் சேர்ந்த ரவிச்சந்திரன் (27), சூரம்பட்டி வலசு, அண்ணா வீதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் (37) என்பது தெரியவந்தது.

    மேலும் சட்டவிரோதமாக கஞ்சாவை கடத்தி வந்து விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.

    இதையடுத்து, போலீசார் அவர்கள் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.மேலும், அவர்களிடமிருந்து ரூ. 24 ஆயிரம் மதிப்பிலான 1.200 கிலோ கிராம் கஞ்சா மற்றும் பணம் ரூ. 700 ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

    இதேபோல, கடத்தூர் போலீசார், கோபியை அடுத்துள்ள சிங்கிரி பாளையம், மாதேஸ்வரன் தோட்டம் முன்பாக சந்தேகத்துக்கிடமாக இருசக்கர வாகனத்தில் நின்றிருந்த இருவரைப் பிடித்து விசாரித்தனர்.

    அதில் அவர்கள் இருவரும் திருவண்ணாமலையில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து இங்கு விற்பனை செய்ய முயன்றது தெரியவந்தது.

    மேலும் விசாரணையில் அவர்கள் இருவரும் நம்பியூர் மேட்டுக்காடு பகுதியைச் சேர்ந்த ரமேஷ்குமார் (35), கோபி, ஒடையகவுண்ட ன்பாளையம் பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் (32) என்பதும் தெரியவந்தது.இதையடுத்து, போலீசார் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

    மேலும் அவர்களிடமிருந்து ரூ. 3,000 மதிப்பிலான 100 கிராம் கஞ்சா, பணம் ரூ. 1,500 மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

    • ஈரோடு மாவட்டம் பெருந்துறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக கஞ்சா விற்பனை அதிகரித்து வருகின்றது
    • ரகசிய தகவலின் அடிப்படையில் போலீசார் சோதனை செய்து கஞ்சா பொட்டலங்கள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்களை கைது செய்து வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக கஞ்சா விற்பனை அதிகரித்து வருகின்றது. இதை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அவ்வப்போது வரும் ரகசிய தகவலின் அடிப்படையில் போலீசார் சோதனை செய்து கஞ்சா பொட்டலங்கள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்களை கைது செய்து வருகின்றனர்.

    இந்நிலையில், பெருந்துறையில் பல்வேறு பகுதியில் போலீசார் கஞ்சா விற்பனை நடைபெறுகிறதா? என்று சோதனை செய்தனர்.

    அப்போது கஞ்சா விற்றதாக திருப்பூர் மாவட்டம் ஊத்துகுளியை சேர்ந்த சக்திவேல்(29), ராமு என்பவரது மகன் தினேஷ்கு மார்–(23), பெருந்துறை குள்ளம்பாளை யத்தை சேர்ந்த தனசேகர்(31) ஆகிய 3 பேரை பெருந்துறை போலீசார் கைது செய்தனர்.

    இதில் தனசேகர் பெருந்துறை யில் உள்ள ஒரு தனியார் வங்கியில் ஊழியராக வேலை பார்த்து வருவது தெரிய வந்தது.

    கைதானவர்களிடம் இருந்து 130 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதாக பெருந்துறை போலீசார் கூறினர்.

    கஞ்சா விற்பனையில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சூர்யா என்கிற ஆசிக் (24) என்பதும், கஞ்சா விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.
    • மோட்டார் சைக்கிளில் இருந்த பையில் கஞ்சா இருப்பது தெரியவந்தது.

    ஈரோடு

    ஈரோடு தெற்கு போலீசார் சூரம்பட்டி பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சூரம்பட்டி நேதாஜி வீதியில் சந்தேகத்துக்கிடமாக நின்று கொண்டிருந்த நபரை பிடித்து விசாரித்தனர்.

    அதில் அவர் அதே பகுதியை சேர்ந்த சூர்யா என்கிற ஆசிக் (24) என்பதும், கஞ்சா விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

    மேலும் அவரிடம் இருந்து ரூ.3 ஆயிரம் மதிப்பிலான 125 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

    இதேபோல கொல்லம்பாளையம் ரவுண்டான அருகில் ஈரோடு தெற்கு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வேகமாக மோட்டார் சைக்களில் வந்த நபரைத் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர்.

    அப்போது, மோட்டார் சைக்கிளில் இருந்த பையில் கஞ்சா இருப்பது தெரியவந்தது. விசாரணையில் அவர் திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில், நஞ்சப்பகவுண்டர் வலசு பகுதியை சேர்ந்த சுதர்சன் (26) என்பது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அவர்மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும், அவர் விற்பனை செய்வதற்காக கடத்தி வந்த ரூ.2,200 மதிப்பிலான 110 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

    • கஞ்சா உபயோகப்படுத்துவதால் ஏற்படும் தீமைகள், கஞ்சா விற்பனை செய்வோர் மீது மேற்கொள்ளப்படும் சட்ட நடவடிக்கைகள் உள்ளிட்ட விவரங்கள் குறித்து மாணவ, மாணவிகளிடையே எடுத்துரைக்கப்பட்டது.
    • தொடர்ந்து சட்ட விரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய ப்பட்டுள்ளனர் என்றார்.

    ஈரோடு:

    தடை செய்யப்பட்ட கஞ்சா விற்பனையை முற்றி லும் ஒழிக்கும் நோக்கில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து உட் கோட்ட போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பள்ளி, கல்லூரிகளில் கஞ்சா தடுப்பு விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டன.

    இதில் கஞ்சா உபயோக ப்படுத்துவதால் ஏற்படும் தீமைகள், கஞ்சா விற்பனை செய்வோர் மீது மேற்கொள்ளப்படும் சட்ட நடவடிக்கைகள் உள்ளிட்ட விவரங்கள் குறித்து மாணவ, மாணவிகளிடையே எடுத்துரைக்கப்பட்டது.

    மாவட்டம் முழுவதும் 41 இடங்களில் இந்த விழிப்பு ணர்வு கூட்டங்கள் நடை பெற்றன. மேலும், கஞ்சா விற்பனை செய்யும் நபர்களைக் கைது செய்ய ஈரோடு மாவட்டத்தில் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் தலை மையில் 53 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    இந்த குழுக்கள் மூலமாக நேற்று ஒரே நாளில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் 9 பேர் மீது 5 வழக்குகள் பதிவு செய்ய ப்பட்டுள்ளன.

    இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசி மோகன் கூறும்போது,

    ஈரோடு மாவட்டத்தில் கஞ்சா, போதை பொருள் விற்பனையை தடுக்கும் வகையில் பல்வேறு நட வடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டில் இதுவரை 144 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 107 கிலோ கஞ்சா பறிமுதல் செய்ய ப்பட்டு, 189 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    மேலும், தொடர்ந்து சட்ட விரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய ப்பட்டுள்ளனர் என்றார். 

    • புளியம்பட்டி போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேரிடம் மேற்கொண்ட சோதனையில் 3 பாக்கெட்டுகளில் 300 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.
    • இதையடுத்து, அவர்கள் 4 பேர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்த னர். பின்னர், செல்வகுமார், சதீஷ்குமார், அன்சர் ஹசன் ஆகியோரை கைது செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம், புளியம்பட்டி, அம்மன் நகர் மாரியம்மன் கோவில் அருகே, புளியம்பட்டி போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேரிடம் மேற்கொண்ட சோதனையில் 3 பாக்கெட்டுகளில் 300 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.

    அதை பவானிசாகர் பகுதியைச் சேர்ந்த முகிலன் (33) என்பவரிடம் இருந்து விற்பனைக்காக வாங்கி வந்ததும் தெரியவந்தது.விசாரணையில், அவர்கள் புளியம்பட்டி, எரங்காட்டு ப்பாளையத்தைச் சேர்ந்த செல்வகுமா ர் (25), செங்குந்தபுரத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் (27), புளியம்பட்டியைச் சேர்ந்த அன்சர் ஹசன் (29) என்பது தெரியவந்தது.

    இதையடுத்து, அவர்கள் 4 பேர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்த னர். பின்னர், செல்வகுமார், சதீஷ்குமார், அன்சர் ஹசன் ஆகியோரை கைது செய்தனர்.

    ×