என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    கஞ்சா விற்ற வங்கி ஊழியர் உள்பட 3 பேர் கைது
    X

    கஞ்சா விற்ற வங்கி ஊழியர் உள்பட 3 பேர் கைது

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஈரோடு மாவட்டம் பெருந்துறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக கஞ்சா விற்பனை அதிகரித்து வருகின்றது
    • ரகசிய தகவலின் அடிப்படையில் போலீசார் சோதனை செய்து கஞ்சா பொட்டலங்கள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்களை கைது செய்து வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக கஞ்சா விற்பனை அதிகரித்து வருகின்றது. இதை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அவ்வப்போது வரும் ரகசிய தகவலின் அடிப்படையில் போலீசார் சோதனை செய்து கஞ்சா பொட்டலங்கள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்களை கைது செய்து வருகின்றனர்.

    இந்நிலையில், பெருந்துறையில் பல்வேறு பகுதியில் போலீசார் கஞ்சா விற்பனை நடைபெறுகிறதா? என்று சோதனை செய்தனர்.

    அப்போது கஞ்சா விற்றதாக திருப்பூர் மாவட்டம் ஊத்துகுளியை சேர்ந்த சக்திவேல்(29), ராமு என்பவரது மகன் தினேஷ்கு மார்–(23), பெருந்துறை குள்ளம்பாளை யத்தை சேர்ந்த தனசேகர்(31) ஆகிய 3 பேரை பெருந்துறை போலீசார் கைது செய்தனர்.

    இதில் தனசேகர் பெருந்துறை யில் உள்ள ஒரு தனியார் வங்கியில் ஊழியராக வேலை பார்த்து வருவது தெரிய வந்தது.

    கைதானவர்களிடம் இருந்து 130 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதாக பெருந்துறை போலீசார் கூறினர்.

    கஞ்சா விற்பனையில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×