search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கஞ்சா விற்பனை செய்த 189 பேர் கைது
    X

    கஞ்சா விற்பனை செய்த 189 பேர் கைது

    • கஞ்சா உபயோகப்படுத்துவதால் ஏற்படும் தீமைகள், கஞ்சா விற்பனை செய்வோர் மீது மேற்கொள்ளப்படும் சட்ட நடவடிக்கைகள் உள்ளிட்ட விவரங்கள் குறித்து மாணவ, மாணவிகளிடையே எடுத்துரைக்கப்பட்டது.
    • தொடர்ந்து சட்ட விரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய ப்பட்டுள்ளனர் என்றார்.

    ஈரோடு:

    தடை செய்யப்பட்ட கஞ்சா விற்பனையை முற்றி லும் ஒழிக்கும் நோக்கில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து உட் கோட்ட போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பள்ளி, கல்லூரிகளில் கஞ்சா தடுப்பு விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டன.

    இதில் கஞ்சா உபயோக ப்படுத்துவதால் ஏற்படும் தீமைகள், கஞ்சா விற்பனை செய்வோர் மீது மேற்கொள்ளப்படும் சட்ட நடவடிக்கைகள் உள்ளிட்ட விவரங்கள் குறித்து மாணவ, மாணவிகளிடையே எடுத்துரைக்கப்பட்டது.

    மாவட்டம் முழுவதும் 41 இடங்களில் இந்த விழிப்பு ணர்வு கூட்டங்கள் நடை பெற்றன. மேலும், கஞ்சா விற்பனை செய்யும் நபர்களைக் கைது செய்ய ஈரோடு மாவட்டத்தில் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் தலை மையில் 53 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    இந்த குழுக்கள் மூலமாக நேற்று ஒரே நாளில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் 9 பேர் மீது 5 வழக்குகள் பதிவு செய்ய ப்பட்டுள்ளன.

    இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசி மோகன் கூறும்போது,

    ஈரோடு மாவட்டத்தில் கஞ்சா, போதை பொருள் விற்பனையை தடுக்கும் வகையில் பல்வேறு நட வடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டில் இதுவரை 144 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 107 கிலோ கஞ்சா பறிமுதல் செய்ய ப்பட்டு, 189 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    மேலும், தொடர்ந்து சட்ட விரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய ப்பட்டுள்ளனர் என்றார்.

    Next Story
    ×