search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cm relief fund"

    கஜா புயல் பாதிப்பிற்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கியது. GajaCyclone #GajaCycloneRelief #CPI
    சென்னை:
        
    தமிழகத்தில் கடந்த மாதம் கஜா புயல் கரையை கடந்தது. இந்த புயலால் நாகை, திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் கடுமையாக சேதமடைந்தன. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று பிரதமர் மோடியிடம் தெரிவித்தார். கஜா புயல் பாதித்த பகுதிகளை மத்திய குழுவினர் பார்வையிட்டு சென்றுள்ளனர்.

    இதற்கிடையே, கஜா புயல் பாதிப்புக்காக பொதுமக்கள் நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்கி வருகின்றனர்.

    இந்நிலையில், கஜா புயல் பாதிப்பிற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் 10 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்துள்ளது.

    இதுதொடர்பாக, முதலமைச்சர் பழனிசாமியை சந்தித்த இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில துணைச்செயலாளர் சுப்பராயன் 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை இன்று வழங்கினார். #GajaCyclone #GajaCycloneRelief #CPI
    கஜா புயல் பாதிப்பிற்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு கேரள அரசு சார்பில் 10 கோடி ருபாய் வழங்குவதாக அறிவித்துள்ளது. GajaCyclone #GajaCycloneRelief #Kerela #PinaryiVijayan
    திருவனந்தபுரம்:
        
    தமிழகத்தில் கடந்த வாரம் கஜா புயல் கரையை கடந்தது. இந்த புயலால் நாகை, திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் கடுமையாக சேதமடைந்தன. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    மேலும், கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று பிரதமர் மோடியிடம் நேரில் தெரிவித்தார். இதற்கிடையே, கஜா புயல் பாதித்த பகுதிகளை மத்திய குழுவினர் பார்வையிட்டனர்.

    இதற்கிடையே, கஜா புயல் பாதிப்புக்காக பொதுமக்கள் நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்கி வருகின்றனர்.

    இந்நிலையில், கஜா புயல் பாதிப்பிற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு கேரள அரசு சார்பில் 10 கோடி ரூபாய் நிதியுதவி அளிக்கப்பட உள்ளது.

    இதுதொடர்பாக, கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், கஜா புயலால் பாதிப்படைந்த தமிழக மக்களுக்கு கேரள அரசு சார்பில் 10 கோடி ரூபாய் அளிக்கப்பட உள்ளது. கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு எங்கள் ஆதரவு என்றும் உண்டு என பதிவிட்டுள்ளார்.



    கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு கேரள அரசு 10 கோடி ரூபாய் வழங்கியதற்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் டுவிட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.

    ஏற்கனவே, கஜா புயல் பாதிப்புக்கு உதவும்படி கேரள முதல் மந்திரி பினராயி விஜயனுக்கு கமல்ஹாசன் கடிதம் மூலம்  வேண்டுகோள் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. #GajaCyclone #GajaCycloneRelief #Kerela #PinaryiVijayan
    கஜா புயல் பாதிப்பிற்காக தமிழக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு கேரள கவர்னர் சதாசிவம் ஒரு லட்சம் ருபாய் வழங்கினார். GajaCyclone #GajaCycloneRelief #Sathasivam
    திருவனந்தபுரம்:
        
    தமிழகத்தில் கடந்த வாரம் கஜா புயல் கரையை கடந்தது. இந்த புயலால் நாகை, திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் கடுமையாக சேதமடைந்தன. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று பிரதமர் மோடியிடம் நேரில் தெரிவித்தார். கஜா புயல் பாதித்த பகுதிகளை மத்திய குழுவினர் பார்வையிட்டனர்.



    இதற்கிடையே, கஜா புயல் பாதிப்புக்காக பொதுமக்கள் நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.30 கோடி ருபாய் வரை நன்கொடை வழங்கியுள்ளனர் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், கஜா புயல் பாதிப்பிற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு கேரள மாநிலத்தின் கவர்னர் சதாசிவம்  ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையை இன்று வழங்கியுள்ளார். #GajaCyclone #GajaCycloneRelief #Sathasivam
    கஜா புயல் பாதிப்பிற்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு அதிமுக சார்பில் ஒரு கோடி ருபாய் வழங்கியுள்ளது. GajaCyclone #GajaCycloneRelief #AIADMK
    சென்னை:
        
    தமிழகத்தில் கடந்த வாரம் கஜா புயல் கரையை கடந்தது. இந்த புயலால் நாகை, திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் கடுமையாக சேதமடைந்தன. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    மேலும், கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று பிரதமர் மோடியிடம் நேரில் தெரிவித்தார். இதற்கிடையே, கஜா புயல் பாதித்த பகுதிகளை மத்திய குழுவினர் பார்வையிட்டனர்.

    இதற்கிடையே, கஜா புயல் பாதிப்புக்காக பொதுமக்கள் நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்கி வருகின்றனர்.



    இந்நிலையில், கஜா புயல் பாதிப்பிற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அதிமுக சார்பில் ஒரு கோடி ரூபாய் நிதியுதவி அளிக்கப்பட்டது.

    கஜா புயல் நிவாரணத்திற்கு அதிமுக சார்பில் ரூ.1 கோடி ரூபாய்க்கான நிதியை முதலமைச்சர் பழனிசாமியிடம், அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம் இன்று வழங்கினார்.

    இதேபோல், கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஜெயலலிதா பேரவை சார்பில் ரூ.50 லட்சத்துக்கான காசோலையை முதல்வர் பழனிசாமியிடம் அமைச்சர் உதயகுமார் இன்று வழங்கினார். #GajaCyclone #GajaCycloneRelief #AIADMK
    கஜா புயல் பாதிப்பிற்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு நடிகர் அஜித்குமார் 15 லட்சம் ருபாய் வழங்கியுள்ளார். GajaCyclone #GajaCycloneRelief #AjithKumar
    சென்னை:
        
    தமிழகத்தில் கடந்த வாரம் கஜா புயல் கரையை கடந்தது. இந்த புயலால் நாகை, திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் கடுமையாக சேதமடைந்தன. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    மேலும், கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று பிரதமர் மோடியிடம் நேரில் தெரிவித்தார். இதற்கிடையே, கஜா புயல் பாதித்த பகுதிகளை மத்திய குழுவினர் இன்று மாலை பார்வையிட்டு வருகின்றனர்.



    இதற்கிடையே, கஜா புயல் பாதிப்புக்காக பொதுமக்கள் நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.13 கோடியே 32 லட்சத்து 67 ஆயிரத்து 288 நன்கொடை வழங்கியுள்ளனர் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், கஜா புயல் பாதிப்பிற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நடிகர் அஜித்குமார் ரூ.15 லட்சம் இன்று வழங்கியுள்ளார். #GajaCyclone #GajaCycloneRelief#AjithKumar
    கேரள மாநிலம் மழை வெள்ளத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கும் நிலையில், அவர்களுக்கு உதவும் வகையில் முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு பொதுமக்கள் தங்கள் பங்களிப்பை வழங்கும்படி ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். #KeralaRain #KeralaFloods #Rahul
    புதுடெல்லி:

    கேரள மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் 12 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 1924-ம் ஆண்டுக்கு பிறகு மிக கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பேரழிவை ஏற்படுத்தி உள்ளது. ராணுவம், கடற்படை, விமானப்படை, கடலோர காவல்படை மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். நீர்நிலைகளில் நீர்மட்டம் மேலும் உயரலாம் என கணிக்கப்பட்டுள்ளதால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில் கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு மற்றும் சேதம் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கவலை தெரிவித்துள்ளார்.



    ‘ஆயிரக்கணக்கான மக்கள் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கின்றனர். நிவாரண முகாம்கள் நிரம்பிவிட்டன. பலர் உடைமைகளை இழந்து தவிக்கின்றனர். அவர்களுக்கு நாம் உதவ வேண்டும். எனவே, முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு பொதுமக்கள் தங்களால் இயன்ற நிதியை வழங்க வேண்டும்’ என ராகுல் டுவிட்டர் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    மேலும், முதலமைச்சரின் நிவாரண நிதியை வழங்குவதற்கான கேரள அரசின் இணையதள முகவரியையும் (donation.cmdrf.kerala.gov.in) ராகுல் தனது டுவிட்டரில் டேக் செய்துள்ளார். #KeralaRain #KeralaFloods #Rahul
    விபத்தில் உயிரிழந்த உஷாவின் குடும்பத்திற்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்த ரூ.7 லட்சம் நிதியுதவியை அவரது கணவரிடம் கலெக்டர் வழங்கினார்.#Usha #InternationalWomensDay
    திருச்சி:

    திருச்சி துவாக்குடி சுங்கச்சாவடி அருகே போக்குவரத்து இன்ஸ்பெக்டர் காமராஜ் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக தஞ்சை மாவட்டம் பாபநாசத்தை சேர்ந்த ராஜா, தனது மனைவி உஷாவுடன் பைக்கில் வந்தார்.

    அந்த சமயம் போலீசார் பைக்கை சோதனை செய்த போது ராஜா தொடர்ந்து சென்றதாக கூறப்பட்டது. இதனால் இன்ஸ்பெக்டர் காமராஜ் அவர்களை பின் தொடர்ந்து பைக்கை நிறுத்த முற்பட்டபோது பைக்கின் பின்னால் சென்ற ராஜா மற்றும் அவரது மனைவி சாலையில் கீழே விழுந்தனர்.

    இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே உஷா பலியாகினார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விபத்தில் உயிரிழந்த உஷாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி வழங்குவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

    முதல்வர் அறிவிப்பின்படி, தமிழ்நாடு முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.7 நிதியுதவியினை, திருச்சி மாவட்ட கலெக்டர் ராசாமணி உஷாவின் கணவர் ராஜாவிடம் வழங்கினார்.

    அப்போது சார் ஆட்சியர் கமல்கிஷோர், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொறுப்பு) பழனிதேவி, பேரிடர் மேலாண்மை வட்டாட்சியர் ஜவகர் ஆகியோர் உடனிருந்தனர்.திருச்சி:

    திருச்சி துவாக்குடி சுங்கச்சாவடி அருகே போக்குவரத்து இன்ஸ்பெக்டர் காமராஜ் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக தஞ்சை மாவட்டம் பாபநாசத்தை சேர்ந்த ராஜா, தனது மனைவி உஷாவுடன் பைக்கில் வந்தார்.

    அந்த சமயம் போலீசார் பைக்கை சோதனை செய்த போது ராஜா தொடர்ந்து சென்றதாக கூறப்பட்டது. இதனால் இன்ஸ்பெக்டர் காமராஜ் அவர்களை பின் தொடர்ந்து பைக்கை நிறுத்த முற்பட்டபோது பைக்கின் பின்னால் சென்ற ராஜா மற்றும் அவரது மனைவி சாலையில் கீழே விழுந்தனர்.

    இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே உஷா பலியாகினார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விபத்தில் உயிரிழந்த உஷாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி வழங்குவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

    முதல்வர் அறிவிப்பின்படி, தமிழ்நாடு முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.7 நிதியுதவியினை, திருச்சி மாவட்ட கலெக்டர் ராசாமணி உஷாவின் கணவர் ராஜாவிடம் வழங்கினார்.

    அப்போது சார் ஆட்சியர் கமல்கிஷோர், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொறுப்பு) பழனிதேவி, பேரிடர் மேலாண்மை வட்டாட்சியர் ஜவகர் ஆகியோர் உடனிருந்தனர்.#Usha #InternationalWomensDay
    ×