search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Campus Examination"

    • வாசுதேவநல்லூர் எஸ்.தங்கப்பழம் பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு கல்லூரியில் வளாகத்தேர்வு நடத்தப்பட்டது.
    • வளாகத் தேர்வில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கும் விழா நடைபெற்றது.

    சிவகிரி:

    வாசுதேவநல்லூர் எஸ்.தங்கப்பழம் பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயிலும் பெட்ரோ கெமிக்கல் என்ஜினியரிங், மெக்கானிக்கல் என்ஜினியரிங், சிவில் என்ஜினியரிங் மாணவர்களுக்கு கல்லூரியில் வளாகத்தேர்வு நடத்தப்பட்டது. தூத்துக்குடி ஸ்பிக் லிமிடெட் கலந்து கொண்டு தேர்வை நடத்தியது. வளாகத் தேர்வில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கும் விழா நடைபெற்றது.

    விழாவிற்கு எஸ்.தங்கப்பழம் கல்வி குழும நிறுவனர் எஸ்.தங்கப்பழம், தாளாளர் எஸ்.டி.முருகேசன் ஆகியோர் தலைமை தாங்கினர். கல்லூரி முதல்வர் ராமநாதன் வரவேற்று பேசினார். தூத்துக்குடி ஸ்பிக் லிமிடெட் பொதுமேலாளர் செந்தில்நாயகம், துணை பொதுமேலாளர் சண்முகம் ஆகியோர் மாணவர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினர். வளாகத் தேர்வு ஏற்பாடுகளை வேலைவாய்ப்பு அலுவலர், அனைத்து துறை தலைவர்கள் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.

    • நெல்லை ஏ.கே.ஓய். பாலிடெக்னிக் கல்லூரியில் இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு சென்னை பி.எஸ்.ஏ. நிறுவனம் சார்பில் வளாகத்தேர்வு நடைபெற்றது.
    • 165 மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட வளாகத்தேர்வில் 77 பேர் தேர்ச்சி பெற்று பணி நியமனம் பெற்றனர்.

    நெல்லை:

    நெல்லை ஏ.கே.ஓய். பாலிடெக்னிக் கல்லூரியில் இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு சென்னை பி.எஸ்.ஏ. நிறுவனம் சார்பில் வளாகத்தேர்வு நடைபெற்றது. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமனம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    கல்லூரி தலைவர் ஏ.கே.ஓய். செய்யது அப்துல் காதர் அறிவுறுத்தலின் படி நடைபெற்ற வளாகத்தேர்வுக்கு கல்லூரி இயக்குனர் எஸ். செய்யது முஹம்மது தலைமை தாங்கினார். கல்லூரி இயக்குனர் எம். செய்யது முஹம்மது முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் அயூப் வரவேற்று பேசினார்.

    இதில் சென்னை பி.எஸ்.ஏ. நிறுவனத்தை சேர்ந்த மனித வள மேம்பாட்டு மேலாளர்கள் ரஞ்சித், சரவணன் ஆகியோர் கலந்து கொண்டு வளாகத்தேர்வினை நடத்தினர்.

    165 மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட வளாகத்தேர்வில் 77 பேர் தேர்ச்சி பெற்று பணி நியமனம் பெற்றனர்.

    தேர்வு பெற்ற மாணவ, மாணவிகளை கல்லூரி இயக்குனர்கள், முதல்வர், துணை முதல்வர், அனைத்து துறை தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர். முடிவில் கல்லூரி துணை முதல்வர் எஸ். முஹம்மது மதார் கூறினார். ஏற்பாடுகளை அனைத்து துறை தலைவர்கள் மற்றும் ஆசிரியர்கள் செய்தி ருந்தனர்.

    • காளீஸ்வரி கல்லூரியில் வளாகத்தேர்வு நடந்தது.
    • வணிகவியல் துறை உதவிப்பேராசிரியர் ராஜீவ் காந்தி வரவேற்றார்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரிப் பணி அமர்வு மையத்தின் சார்பில் கல்லூரி மாணவர்களுக்கான வளாகத் தேர்வு நடந்தது.

    வணிகவியல் துறை உதவிப்பேராசிரியர் ராஜீவ் காந்தி வரவேற்றார். முதல்வர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார்.அவர் பேசுகையில், உலக அளவில் எண்ணற்ற வாய்ப்புகள் குவிந்து கிடக்கின்றன. நமக்கான வாய்ப்புகள் உருவாகும் பொழுது அதைத் தவறவிடாமல் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

    துணை முதல்வர் பாலமுருகன் வாழ்த்துரை வழங்கினார். சென்னையைச் சேர்ந்த ''டெக்னோ ஸ்கூல்'' நிறுவனம் வளாகத் தேர்வை நடத்தியது. இதில் கணினித் துறைகளைச் சேர்ந்த 15 மாணவர்கள் பங்கு பெற்றனர். நிறுவன மேலாளர் சாமுவேல் மார்டின் நிறுவனத்தின் நோக்கம், அறிமுகம், பணியின் தன்மை குறித்து எடுத்துரைத்தார்.

    பின்னர் நிறுவனத்திற்குத் தேவையான பணியா ளர்களை எழுத்துத்தேர்வு, கலந்துரையாடல் மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்தார்.

    இந்த வளாகத் தேர்வி ற்கான ஏற்பாடுகளை பணி அமர்வு மையப் பொறுப்பாளர்கள் லட்சுமணக்குமார், ராஜீவ் காந்தி ஆகியோர் செய்திருந்தனர். முனைவர் லட்சுமணக்குமார் நன்றி கூறினார்.

    திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் வளாக தேர்வு நடைபெற்றது.
    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் கணினி அறிவியல்துறை சார்பில் வளாகத் தேர்வு நடைபெற்றது. சிங்கப்பூரை தலைமையிடமாக கொண்ட சென்னை சிக்ஸ்டார் கன்சல்டன்சி மென்பொருள் நிறுவனம் இந்த தேர்வை நடத்தியது. 

    இதில் 8 கணினி அறிவியல் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் 2 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். தேர்வான மாணவர்களுக்கு நியமன ஆணை வழங்கப்பட்டது.

    கல்லூரி முதல்வர் டாக்டர் மகேந்திரன் தேர்வான மாணவர்களுக்கு நியமன ஆணைகளை வழங்கினார். கணினி அறிவியல் துறைத்தலைவர் டாக்டர் வேலாயுதம் வளாக தேர்விற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். 

    நிகழ்ச்சியில் பேராசிரியர் பாலகிருஷ்ணன், சிக்ஸ்டார் கன்சல்டன்சி நிறுவன இணை நிறுவனர் சுப்பிரமணியசிவா ஆகியோர் கலந்து கொண்டனர். தேர்வான மாணவர்களை முதல்வர், செயலர் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர்.
    தென்காசி அருள்மிகு செந்திலாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியில் வளாகத்தேர்வு நடைபெற்றது.
    தென்காசி:

    தென்காசி அருள்மிகு செந்திலாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியில் சென்னையில் செயல்பட்டு வரும் பெஸ்டன் என்ஜினீயர்ஸ் அண்ட் கன்சல்டன்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் எலெக்ட்ரிக்கல் மற்றும் சிவில் துறையில் இறுதியாண்டு பயிலும் மாணவ- மாணவிகளுக்கு வளாகத்தேர்வு நடைபெற்றது.

    நிறுவனத்தின் சார்பில் வேலவன் மற்றும் குமரகுரு ஆகியோர் கலந்து கொண்டு நேர்முக தேர்வுகளை நடத்தினர். முன்னதாக, பெஸ்டன் நிறுவனத்தில் பணியில் சேரும் மாணவர்களின் வளர்ச்சி மற்றும் மாணவர்களின் எதிர்காலத்தில் பெஸ்டன் நிறுவனத்தின் பங்களிப்பு பற்றி நிறுவனத்தின் வேலவன் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். 

    வளாகத்தேர்வில் செந்திலாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியிலிருந்து 4 பேர், இதர 10 பாலிடெக்னிக் கல்லூரிகளிலிருந்து 82 மாணவ-மாணவிகளும் மற்றும் 2 பொறியியல் கல்லூரிகளிலிருந்து 4 பேரும் கலந்து கொண்டனர். 

    தேர்வு செய்யப்பட்ட மாணவ-மாணவிகளுக்கு கல்லூரி தாளாளர் டாக்டர் புதிய பாஸ்கர், நிர்வாக இயக்குனர் கல்யாணி, கல்லூரி முதல்வர் சேவியர் இருதயராஜ், நிர்வாக அதிகாரி மணிகண்டன் மற்றும் அனைத்து துறை தலைவர்களும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    இதற்கான ஏற்பாடுகளை வேலை வாய்ப்பு அதிகாரிகள் ஆறுமுகம் மற்றும் சிவா ஆகியோர் செய்திருந்தனர். எலெக்ட்ரிக்கல் துறையில் இறுதியாண்டு பயிலும் மாணவர் மொஹம்மதுகனி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அதே துறையை சேர்ந்த மாணவர் செய்யதுமசூது வரவேற்றார். 
    ×