search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "AKY Polytechnic College"

    • நெல்லை ஏ.கே.ஓய். பாலிடெக்னிக் கல்லூரியில் இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு சென்னை பி.எஸ்.ஏ. நிறுவனம் சார்பில் வளாகத்தேர்வு நடைபெற்றது.
    • 165 மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட வளாகத்தேர்வில் 77 பேர் தேர்ச்சி பெற்று பணி நியமனம் பெற்றனர்.

    நெல்லை:

    நெல்லை ஏ.கே.ஓய். பாலிடெக்னிக் கல்லூரியில் இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு சென்னை பி.எஸ்.ஏ. நிறுவனம் சார்பில் வளாகத்தேர்வு நடைபெற்றது. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமனம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    கல்லூரி தலைவர் ஏ.கே.ஓய். செய்யது அப்துல் காதர் அறிவுறுத்தலின் படி நடைபெற்ற வளாகத்தேர்வுக்கு கல்லூரி இயக்குனர் எஸ். செய்யது முஹம்மது தலைமை தாங்கினார். கல்லூரி இயக்குனர் எம். செய்யது முஹம்மது முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் அயூப் வரவேற்று பேசினார்.

    இதில் சென்னை பி.எஸ்.ஏ. நிறுவனத்தை சேர்ந்த மனித வள மேம்பாட்டு மேலாளர்கள் ரஞ்சித், சரவணன் ஆகியோர் கலந்து கொண்டு வளாகத்தேர்வினை நடத்தினர்.

    165 மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட வளாகத்தேர்வில் 77 பேர் தேர்ச்சி பெற்று பணி நியமனம் பெற்றனர்.

    தேர்வு பெற்ற மாணவ, மாணவிகளை கல்லூரி இயக்குனர்கள், முதல்வர், துணை முதல்வர், அனைத்து துறை தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர். முடிவில் கல்லூரி துணை முதல்வர் எஸ். முஹம்மது மதார் கூறினார். ஏற்பாடுகளை அனைத்து துறை தலைவர்கள் மற்றும் ஆசிரியர்கள் செய்தி ருந்தனர்.

    • சமத்துவ பொங்கல் விழாவிற்கு ஏ.கே.ஒய். செய்யது அப்துல் காதர் தலைமை தாங்கினார்.
    • விழாவில் மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை ஏ.கே.ஒய். பாலிடெக்னிக் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா கல்லூரி வளாகத்தில் கொண்டாடப்பட்டது. கல்லூரி தலைவர் ஏ.கே.ஒய். செய்யது அப்துல் காதர் தலைமை தாங்கி உழவு தொழிலின் பெருமை குறித்து பேசினார்.

    கல்லூரி துணை தலைவர் ஷேக் செய்யது அப்துல்லாஹ், கல்லூரி இயக்குனர்கள் செய்யது முஹம்மது, செய்யது முஹம்மது, அப்துல் வாஹாப்தீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் பேராசிரியர் அயூப் வரவேற்று பேசினார்.

    சிறப்பு விருந்தினராக நெல்லை அரசு வக்கீல் சங்கர் கலந்து கொண்டு தமிழர் பண்பாடு மற்றும் உறவுகளின் பலம் குறித்து விளக்கி பேசினார். இதில் ஹனிபா, ராஜ்குமார், வக்கீல் காந்தாரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    விழாவினை மனித வள மேம்பாட்டு பயிற்சியாளர் மற்றும் வானொலி அறிவிப்பாளர் இசக்கி முத்தையா தொகுத்து வழங்கினார். பாடகர் சடகோபன் நம்பி அனைத்து சமய பாடல்களை பாடி மாணவ, மாணவிகளை உற்சாக படுத்தினார்.

    மேலும் மாணவ, மாணவிகளுக்கு உறியடி, கோலப்போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு, கேடயங்கள் வழங்கி பாராட்டினர்.

    முன்னதாக கல்லூரி பேராசிரியர்கள், மாண விகள் பொங்கலிட்டனர். அனைவருக்கும் சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது. கல்லூரி துணை முதல்வர் முஹம்மது மதார் நன்றி கூறினார். ஏற்பாடுகளை அனைத்து துறை தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் செய்திருந்தனர்.

    ×