search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வளாக தேர்வில் தேர்வான மாணவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்ட காட்சி.
    X
    வளாக தேர்வில் தேர்வான மாணவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்ட காட்சி.

    திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் வளாக தேர்வு

    திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் வளாக தேர்வு நடைபெற்றது.
    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் கணினி அறிவியல்துறை சார்பில் வளாகத் தேர்வு நடைபெற்றது. சிங்கப்பூரை தலைமையிடமாக கொண்ட சென்னை சிக்ஸ்டார் கன்சல்டன்சி மென்பொருள் நிறுவனம் இந்த தேர்வை நடத்தியது. 

    இதில் 8 கணினி அறிவியல் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் 2 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். தேர்வான மாணவர்களுக்கு நியமன ஆணை வழங்கப்பட்டது.

    கல்லூரி முதல்வர் டாக்டர் மகேந்திரன் தேர்வான மாணவர்களுக்கு நியமன ஆணைகளை வழங்கினார். கணினி அறிவியல் துறைத்தலைவர் டாக்டர் வேலாயுதம் வளாக தேர்விற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். 

    நிகழ்ச்சியில் பேராசிரியர் பாலகிருஷ்ணன், சிக்ஸ்டார் கன்சல்டன்சி நிறுவன இணை நிறுவனர் சுப்பிரமணியசிவா ஆகியோர் கலந்து கொண்டனர். தேர்வான மாணவர்களை முதல்வர், செயலர் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர்.
    Next Story
    ×