search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bambaram symbol"

    • அதிமுக தலைமையிலான கூட்டணியில், தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு.
    • தேமுதிக வேட்பாளர்களை ஆதரித்து அதிமுக தலைவர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி முதல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. அதிலும், முதற்கட்ட தேர்தலில் தமிழகத்தின் 39 மற்றும் புதுச்சேரி தொகுதிக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.

    தமிழகத்தில், திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் தேர்தலில் களம் காண தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதில், அதிமுக தலைமையிலான கூட்டணியில், தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

    தேமுதிக வேட்பாளர்களை ஆதரித்து அதிமுக தலைவர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், கடலூரில் தேமுதிக சார்பில் போட்டியிடும் சிவக்கொழுந்துக்கு ஆதரவாக அதிமுக- தேமுதிக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது.

    கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசினார். அப்போது அவர்," கடலூர் பாராளுமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணியில் தேமுதிக வேட்பாளராக சிவக்கொழுந்து போட்டியிடுகிறார்.

    அதிமுகவில் சாதாரண தொண்டர் கூட உச்சப்பட்ட பதவியில் உட்கார முடியும். அந்த வகையில் நம்மை போன்ற சாதாரண தொண்டரை இன்றைக்கு தேமுதிக பொதுச்செயலாளர், வேட்பாளராக அறிவித்துள்ளார்.

    அவருடைய சின்னம் பம்பரம் சின்னம். பம்பரம் சின்னத்திற்கு வாக்கிளியுங்கள் என்றார்.

    அப்போது குறுக்கிட்ட நிர்வாகி ஒருவர், சின்னத்தை தவறாக கூறிவிட்டதாக சி.வி சண்முகம் காதில் எச்சரித்தார்.

    தவறை சுதாரித்து கொண்ட சிவி சண்முகம், " மன்னித்துவிடங்கள். சின்னத்தை தவறாக சொல்லிவிட்டேன். டிவி பார்த்துக் கொண்டிருந்தேன். நீதிமன்றத்தில் ஒரு கட்சிக்கு அடிமேல் அடி விழுந்து கொண்டே இருந்தது. அந்த ஞாபகத்தில் கூறிவிட்டேன். நம்முடைய வேட்பாளர் முரசு சின்னத்தில் நிற்கிறார்" என்று கூறி சமாளித்தார்.

    சி.வி சண்முகம் பேசிய அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • ஒரு தொகுதியில் போட்டியிடுவதால் சின்னம் ஒதுக்க முடியாது.
    • பம்பரம் சின்னம் ஒதுக்க உத்தரவிடும்படி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு.

    மக்களவை தேர்தலில் மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்கும்படி தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

    மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தங்களுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க உத்தரவிடும்படி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

    இந்த வழக்கு தொடர்பான இன்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது, ஒரு தொகுதியில் போட்டியிடுவதால் சின்னம் ஒதுக்க முடியாது என்றும் ஒரே மாநிலத்தில் இரு தொகுதிகளில் போட்டியிட்டால் தான் ஒதுக்கீட்டு சின்னம் ஒதுக்க முடியும் என்ற தேர்தல் ஆணைய உத்தரவு சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

    அங்கீகாரம் ரத்தாகும் பட்சத்தில் சின்னத்தை பொது சின்னமாக தேர்தல் ஆணையம் அறிவிக்க வேண்டும். ஆனால், பம்பரம் சின்னம் பொது சின்னமாக அறிவிக்கப்படவில்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

    மற்ற மாநிலத்தில் மேலும் ஒரு தொகுதியில் போட்டியிட தயார் என மதிமுக வாதம் செய்தது.

    ஆனால், வேட்புமனு தாக்கல் நிறைவடைந்துள்ள நிலையில் உத்தரவு பிறப்பிக்க முடியாது என உயர்நீதிமன்றம் கூறி தலைமை நீதிபதி அமர்வு இந்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டது.

    • இந்த வழக்கு மீதான விசாரணை இன்று பிற்பகல் விசாரணைக்கு வந்தது.
    • தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை தள்ளி வைத்தனர்.

    தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள ம.தி.மு.க. திருச்சி தொகுதியில் போட்டியிடுகிறது. அக்கட்சியின் பொதுச் செயலாளரான வைகோவின் மகன் துரை வைகோ அந்த தொகுதியில் தனி சின்னத் தில் போட்டியிட முடிவு செய்துள்ளார்.

    ம.தி.மு.க. வின் சின்னமாக இருந்த பம்பரம் சின்னத்தை இந்த தேர்தலில் தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று வைகோ சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

    இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வைகோ தரப்பில் தங்கள் கோரிக்கையை ஏற்று கட்சி நிர்வாகிகளின் பெயர்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்த தேர்தல் ஆணையம், பம்பரம் சின்னத்தை ஒதுக்கீடு செய்யவில்லை.

    வேட்பு மனு தாக்கலுக்கு நாளை கடைசி நாள் என்ப தால் தங்கள் கோரிக்கையை பரிசீலிக்கும்படி தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

    இதற்கு பதில் அளித்த தேர்தல் ஆணையம் தரப்பு வக்கீல், சட்டப்படி அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி 2 தொகுதிகளுக்கு மேல் போட்டியிடும் பட்சத்திலேயே ஒரே சின்னம் ஒதுக்கப்படும் என்றும், ம.தி.மு.க. வின் கோரிக்கை மீது இன்று முடிவெடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

    14 ஆண்டுகளுக்கு முன்பு அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட நிலையில் ம.தி.மு.க. வுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்வது தொடர்பாக சம்பந்தப்பட்ட தொகுதியின் தேர்தல் அதிகாரி தான் முடிவு எடுப்பார் என்றும் தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து பம்பரம் சின்னம் பொது சின்ன பட்டியலில் உள்ளதா? இல்லையா? என்பது குறித்து இன்று பிற்பகல் விளக்கம் அளிக்கும்படி தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை தள்ளி வைத்தனர்.

    அதன்படி, இந்த வழக்கு மீதான விசாரணை இன்று பிற்பகல் விசாரணைக்கு வந்தது.

    பம்பரம் சின்னம் கோரி மதிமுக அளித்த விண்ணப்பத்தின் மீது நாளை காலை 9 மணிக்குள் முடிவெடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    பம்பரம் சின்னம் கோரி மதிமுக சார்பில் பொதுச்செயலாளர் வைகோ தொடர்ந்த வழக்கு நாளை பிற்பகல் 2.15 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    ×