search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மதிமுக- பம்பர சின்னம்: நாளை காலைக்குள் முடிவெடுக்க தேர்தல் ஆணையத்திற்கு கெடு
    X

    மதிமுக- பம்பர சின்னம்: நாளை காலைக்குள் முடிவெடுக்க தேர்தல் ஆணையத்திற்கு கெடு

    • இந்த வழக்கு மீதான விசாரணை இன்று பிற்பகல் விசாரணைக்கு வந்தது.
    • தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை தள்ளி வைத்தனர்.

    தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள ம.தி.மு.க. திருச்சி தொகுதியில் போட்டியிடுகிறது. அக்கட்சியின் பொதுச் செயலாளரான வைகோவின் மகன் துரை வைகோ அந்த தொகுதியில் தனி சின்னத் தில் போட்டியிட முடிவு செய்துள்ளார்.

    ம.தி.மு.க. வின் சின்னமாக இருந்த பம்பரம் சின்னத்தை இந்த தேர்தலில் தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று வைகோ சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

    இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வைகோ தரப்பில் தங்கள் கோரிக்கையை ஏற்று கட்சி நிர்வாகிகளின் பெயர்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்த தேர்தல் ஆணையம், பம்பரம் சின்னத்தை ஒதுக்கீடு செய்யவில்லை.

    வேட்பு மனு தாக்கலுக்கு நாளை கடைசி நாள் என்ப தால் தங்கள் கோரிக்கையை பரிசீலிக்கும்படி தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

    இதற்கு பதில் அளித்த தேர்தல் ஆணையம் தரப்பு வக்கீல், சட்டப்படி அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி 2 தொகுதிகளுக்கு மேல் போட்டியிடும் பட்சத்திலேயே ஒரே சின்னம் ஒதுக்கப்படும் என்றும், ம.தி.மு.க. வின் கோரிக்கை மீது இன்று முடிவெடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

    14 ஆண்டுகளுக்கு முன்பு அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட நிலையில் ம.தி.மு.க. வுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்வது தொடர்பாக சம்பந்தப்பட்ட தொகுதியின் தேர்தல் அதிகாரி தான் முடிவு எடுப்பார் என்றும் தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து பம்பரம் சின்னம் பொது சின்ன பட்டியலில் உள்ளதா? இல்லையா? என்பது குறித்து இன்று பிற்பகல் விளக்கம் அளிக்கும்படி தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை தள்ளி வைத்தனர்.

    அதன்படி, இந்த வழக்கு மீதான விசாரணை இன்று பிற்பகல் விசாரணைக்கு வந்தது.

    பம்பரம் சின்னம் கோரி மதிமுக அளித்த விண்ணப்பத்தின் மீது நாளை காலை 9 மணிக்குள் முடிவெடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    பம்பரம் சின்னம் கோரி மதிமுக சார்பில் பொதுச்செயலாளர் வைகோ தொடர்ந்த வழக்கு நாளை பிற்பகல் 2.15 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×