search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "800 வெற்றி"

    • திருப்பூர் நகரப்பகுதியில் மின் இணைப்பு பெறுவது சவாலாக மாறியுள்ளது.
    • உள்ளாட்சி அமைப்புகளிடம் பணி நிறைவு சான்று பெறுவது கட்டாயமாகியுள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் மின் பகிர்மானத்தில், பனியன் நிறுவனங்கள் அதிகம் இருப்பதால் 2 லட்சத்துக்கும் அதிகமான மின் இணைப்புகள் உள்ளன. இந்தநிலையில் வளர்ந்து வரும் நகரப்பகுதியில் வீடு, கடைகள் மின் இணைப்பு கிடைக்காமல் தத்தளித்து வருகின்றன.

    இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், திருப்பூர் நகரப்பகுதியில் மின் இணைப்பு பெறுவது சவாலாக மாறியுள்ளது. நூற்றுக்கணக்கான கடைகளுக்கு இணைப்பு பெற முடியவில்லை. வீட்டு இணைப்பாக இருந்தால் மாதம் 500 ரூபாய் வரை கட்டணம் செலுத்துவோம். தற்காலிக இணைப்பில் 5000 ரூபாய் வரை கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. பணி நிறைவு சான்று கிடைக்காததால், மக்களுக்கு நஷ்டம். மின்வாரியத்துக்கு கூடுதல் வருவாய் கிடைப்பதால் அவர்களும் கண்டுகொள்வதில்லை. தமிழக அரசு தலையிட்டு வணிக வளாகம், வீடுகள் மின் இணைப்பு பெறும் நடைமுறையை எளிதாக்க வேண்டும் என்றனர்.

    அனைத்து பொது தொழிலாளர் நல அமைப்பினர், முதல்வருக்கு அனுப்பிய மனுவில், பணி நிறைவு சான்று கிடைக்காமல் திருப்பூரில் மட்டும் வீடுகள், கடைகள் என 800 கட்டடங்கள் மின் இணைப்பு பெற முடியாமல் உள்ளன.தற்காலிக மின் இணைப்பை பயன்படுத்துவதால், மின் கட்டணமாக 200 முதல் 400 ரூபாய்க்கு பதிலாக, 4,000 ரூபாய் வரை செலுத்தி வருகின்றனர். தமிழக அரசு இதற்கு விரைவில் தீர்வு வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

    மாநகராட்சி கமிஷனர் கிராந்தி குமார் கூறுகையில்,மாநகராட்சி வார்டுகளில், கட்டுமான பணி நிறைவடைந்தது என விண்ணப்பித்தால் கள ஆய்வு நடத்தி பணி நிறைவு சான்று வழங்கப்படும். சான்று வழங்குவதில் எவ்வித குழப்பமோ, தயக்கமோ இல்லை. இதுவரை பெறாதவர்கள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்என்றார்.

    மின் பகிர்மான மேற்பார்வை பொறியாளர் ஸ்டாலின் பாபு கூறியதாவது:-

    கடந்த 2019 முதல் மின் இணைப்பு வழங்க, உள்ளாட்சி அமைப்புகளிடம் பணி நிறைவு சான்று பெறுவது கட்டாயமாகியுள்ளது. மூன்று குடியிருப்புகள் வரை கட்டப்படும் வீடுகளுக்கு மட்டும் இதிலிருந்து விதிவிலக்கு உள்ளது. அதிலும் கட்டிடத்தின் மொத்த உயரம், 12 மீட்டருக்கு உட்பட்டு இருக்க வேண்டும்.மற்ற வீடுகள், கடைகள், தொழிற்சாலை கட்டடங்களுக்கு பணி நிறைவு சான்றிதழ் கட்டாயம் தேவை. உள்ளாட்சி அமைப்புகளிடம் பெறும் கட்டிட உரிமத்தில் உள்ளபடியே கட்டடம் அமைந்துள்ளது என்பதை உறுதி செய்யவே பணி நிறைவு சான்றிதழ் கேட்கிறோம். பணி நிறைவு சான்றிதழ் இல்லாவிட்டால் மின் இணைப்பு வழங்க இயலாது.

    சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் 800 வெற்றிகளை பதிவுசெய்துள்ள செர்பியா வீரர் நோவக் ஜோகோவிச், தன்னால் 50 வயது வரை கூட விளையாட முடியும் என கூறியுள்ளார். #QueensClubChampionships #NovakDjokovic #Djokovic800

    லண்டன்:

    லண்டனில் குயின்ஸ் கிளப் சாம்பியன்ஷிப் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி போட்டியில் செர்பியா வீரர் நோவக் ஜோகோவிச் - பிரான்ஸ் வீரர் அட்ரியன் மன்னாரினோ ஆகியோர் பலப்பரீட்சை செய்தனர்.

    இந்த போட்டியின் முதல் செட்டை ஜோகோவிச், 7-5 என போராடி கைப்பற்றினார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய அவர் இரண்டாவது செட்டை 6-1 என எளிதாக கைப்பற்றினார். இதன்மூலம் 7-5, 6-1 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்ற ஜோகோவிச் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார். அவர் இன்று நடைபெறும் அரையிறுதி போட்டியில் பிரான்ஸ் வீரர் ஜெர்மி சார்டியை எதிர்கொள்கிறார்.

    நேற்றைய போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் சர்வதேச டென்னிஸ் தொடர் போட்டிகளில் 800 வெற்றிகளை ஜோகோவிச் பதிவு செய்தார். இந்த சாதனையை எட்டிய 10-வது வீரர் என்ற பெருமையை ஜோகோவிச் பெற்றார். இந்த வெற்றிக்கு பின் ஜோகோவிச் பேட்டியளித்தார்.


    பிரான்ஸ் வீரர் ஜெர்மி சார்டி

    அப்போது, உங்களால் எத்தனை வயது வரை விளையாட முடியும் என அவரிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், 40 என யார் சொன்னது? நான் 50 என்றேன். எனவே இன்னும் 19 ஆண்டுகள் மீதமுள்ளது. நான் இரண்டு மடங்கு வெற்றிகள் பெற நிறைய நேரம் இருக்கிறது. 50, 60, 70. எவ்வளவு என தெரியவில்லை. அதற்கு எந்த வரம்பையும், எந்த எண்ணையும் நிர்ணயிக்க விரும்பவில்லை. 

    எனக்கு விளையாட வேண்டும் எனும் எண்ணம் இருக்கும் வரை நான் விளையாடுவேன். இந்த விளையாட்டை நான் உண்மையாகவே அனுபவித்து விளையாடுகிறேன், எனவே இன்னும் நிறைய நேரம் இருக்கும் என நம்புகிறேன். எனக்கு பிடித்ததை நான் செய்கிறேன், மேலும் அதில் வெற்றி பெற முடிகிறது என்பதை நினைத்து மகிழ்ச்சியாக இருக்கிறது.

    நான் காயம் அடைந்த போதும், அறுவை சிகிச்சையின் போது எல்லாவற்றையும் நினைத்து, எனக்குள் நானே கேள்வி கேட்டு கொண்டிருந்தேன். ஆனால் எல்லோருக்கும் அந்த தருணங்கள் வரும் என்பது உங்களுக்கு தெரியும். எல்லோருக்கும் சந்தேகமான தருணங்கள் உள்ளன. அது தான் வாழ்க்கை. வாழ்க்கை வரும் சுழற்சிகள், உங்களுக்கு பாடங்களை கற்றுக்கொடுக்கிறது. நீங்கள் அவற்றில் இருந்து கற்றுக் கொள்கிறீர்களா, இல்லையா என்பது உங்களை பொருந்தே இருக்கிறது.

    நான் சொன்னது போல, எவ்வளவு காலம் எடுக்கும், என்று முடியும் என்பதை நான் நிர்ணயிக்க விரும்பவில்லை. எனக்கு 31 வயதாகிறது, இருப்பினும் உண்மையில் நான் 19 வயது போல் உணர்கிறேன். நான் தொடர்ந்து போக விரும்புகிறேன், அதை என்னை எங்கு கொண்டுசெல்கிறது என்பதையும் காண விரும்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #QueensClubChampionships #NovakDjokovic #Djokovic800
    மாணவர்கள் இல்லாததையும், மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதையும் காரணம் காட்டி 800 தொடக்கப் பள்ளிகளை மூடும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.#PMK #Ramadoss
    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் மாணவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ள 800-க்கும் கூடுதலான அரசு பள்ளிகளை மூட தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மாணவர்களின் இடை நிற்றலைக் கட்டுப்படுத்த அதிக எண்ணிக்கையில் புதிய பள்ளிகள் தொடங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை அதிகரித்து வரும் நிலையில் அரசின் இந்த முடிவு கடுமையாக கண்டிக்கத்தக்கது.

    அரசு பள்ளிகளில் மாணவர்கள் போதிய அளவில் சேராததற்கு அரசாங்கம் தான் முழுப் பொறுப்பு ஏற்க வேண்டும். அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவுவதாலும், கட்டமைப்பு வசதிகள் போதிய எண்ணிக்கையில் இல்லாததாலும் தான் பெற்றோர் தங்களின் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்கின்றனர்.

    தமிழகத்திலுள்ள பல அரசு பள்ளிகளில் கல்வித்தரம் தனியார் பள்ளிகளை விட சிறப்பாக இருந்தாலும் கூட, அரசு பள்ளிகள் என்றால் அங்கு கல்வித் தரமாக இருக்காது என்ற தவறான எண்ணம் கடந்த 25 ஆண்டுகளாக மக்களின் பொதுப்புத்தியில் பதிவாகி விட்டது. இந்த மாயையை அகற்றவும், அரசு பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் அரசு எதுவும் செய்யவில்லை.

    ஒரு மாணவர் கூட இல்லாத அரசு பள்ளிகள், பத்துக்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட அரசு பள்ளிகள் அமைந்துள்ள இடங்களில் தனியார் பள்ளிகள் அதிக எண்ணிக்கையில் உள்ளன. ஆனால், அவற்றில் இடம் கிடைக்காது என்று கூறும் அளவுக்கு அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். அதற்குக் காரணம் அந்த பள்ளிகளில் போதிய அளவில் ஆசிரியர்களும், கட்டமைப்பு வசதிகளும் இருப்பது தான். அதே போன்ற வசதிகள் அரசு பள்ளிகளில் இருந்தால் அங்கும் மாணவர்கள் அதிகமாக சேருவார்கள். அவ்வாறு செய்ய ஆட்சியாளர்கள் தவறியதால் தான் அரசு பள்ளிகளில் போதிய அளவில் மாணவர்கள் சேரவில்லை. அரசு பள்ளிகளின் இன்றைய நிலைக்கு அரசு தான் காரணம் என்னும் நிலையில், அந்த பள்ளிகளை மூடி மாணவர்களை தண்டிப்பது எந்த வகையில் நியாயம்?

    5 வயது நிறைந்த அனைத்துக் குழந்தைகளும் தொடக்கப் பள்ளியில் சேருவதை உறுதி செய்ய, அருகமைப் பள்ளி தத்துவத்தின்படி, ஒவ்வொரு குடியிருப்பிலும் ஓர் அரசுப் பள்ளி இருக்க வேண்டியது அவசியமாகும். ஆனால், இப்போது ஒரு கிலோ மீட்டருக்கு ஒரு பள்ளி என்ற நிலை தான் உள்ளது. இந்த நிலையை மாற்ற இன்னும் கூடுதலாக அரசுத் தொடக்கப்பள்ளிகள் தொடங்கப்பட வேண்டிய நிலையில், இருக்கும் பள்ளிகளையும் மூடத் துடிப்பதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.

    ஊரகப்பகுதிகளில் மேல்நிலை வகுப்புகளில் 30க்கும் குறைவான மாணவர்கள் உள்ள பாடப்பிரிவுகள், நகர்ப்பகுதிகளிலும், ஆங்கில வழிக் கல்வி முறையிலும் 15க்கும் குறைவான மாணவர்கள் உள்ள பாடப்பிரிவுகள் ஆகியவற்றை மூடவும் தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது. தமிழக அரசின் இந்த திட்டங்கள் செயல்வடிவம் பெற்றால் கிராமப்புற மாணவர்களின் கல்வி வாய்ப்புகள் பறிக்கப்பட்டுவிடும். இது அனைவருக்கும், அனைத்து வாய்ப்புகளும் வழங்கப்பட வேண்டும் என்ற இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை நோக்கத்திற்கு எதிரானது ஆகும். இந்த அநீதியை அனுமதிக்க முடியாது.

    எனவே, மாணவர்கள் இல்லாததையும், மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதையும் காரணம் காட்டி 800 தொடக்கப் பள்ளிகளை மூடும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும். மாறாக, அந்த பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், போதிய எண்ணிக்கையில் ஆசிரியர்களை நியமித்தல் ஆகியவற்றின் மூலம் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #PMK #Ramadoss
    ×