என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேர்தல் தேதி அறிவிப்பு"

    • தமிழ்நாட்டில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 5.67 கோடி
    • முதல்முறை வாக்காளர்கள் எண்ணிக்கை 12.51 லட்சம்

    தமிழகத்தின் 16-வது  சட்டப்பேரவையின் பதவிக்காலம் வரும் மே 10ம் தேதி முடிவடைகிறது. இந்நிலையில் 17-வது சட்டப்பேரவைக்கான தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவித்தது. டெல்லி தேர்தல் ஆணைய அலுவலகத்தில், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் அறிவித்தார். அதன்படி வரும் ஏப்ரல் 23ம் தேதி, தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. 

    வியாழன் தேர்தல்! திங்கள் ரிசல்ட்!

    தமிழ்நாட்டில் ஏப்ரல் 23 வியாழக்கிழமை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. வாக்குப்பதிவு முடிந்து 10 நாட்கள் கழித்து மே 4-ம் தேதி திங்கட்கிழமை வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவு அறிவிக்கப்படவுள்ளது.

    வேட்புமனு விவரம் :

    மனு தாக்கல் தொடக்கம்

    மார்ச் 30

    மனு தாக்கல் முடிவு

    ஏப்ரல் 06

    வேட்புமனு பரிசீலனை

    ஏப்ரல் 07

    வேட்புமனு திரும்பபெற

    ஏப்ரல் 09

    ஆண்களை விட பெண்களே அதிகம்!

    தமிழகத்தில் மொத்தம் 5.67 கோடி வாக்காளர்கள் உள்ள நிலையில், அதில் ஆண்களை விட பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகம்.  

    மொத்த வாக்காளர்கள்

    5.67 கோடி

    முதல் முறை வாக்காளர்கள்

    12.51 லட்சம்

    85 வயதுக்கு மேற்பட்டவர்கள்

    4 லட்சம்

    பெண் வாக்காளர்கள்

    2.90 கோடி

    ஆண் வாக்காளர்கள்

    2.77 கோடி

    மூன்றாம் பாலினத்தவர்கள்

    7,617

    தமிழ்நாட்டில் 75,032 வாக்குச்சாவடிகள்!

    தமிழ்நாட்டில் 75,032 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படவுள்ளதாகவும், அதில், நகர்ப்புறங்களில் 30,967 வாக்குச்சாவடிகளும், கிராமப்புறங்களில் 44,065 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்படும் என தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தெரிவித்தார். 

    • திமுகவில் 4 இடங்களும், அதிமுக சார்பில் 2 இடங்களும் காலியாகும் நிலையில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
    • வரும் 26ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது.

    பாராளுமன்றத்தில் மக்களவை, மேல்சபை என 2 அவைகள் உள்ளன. தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் மக்களவை எம்.பி. ஆகிறார்கள். எம்.எல்.ஏ.க்கள் மூலம் மேல்சபை எம்.பி.க்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

    மேல்சபை எம்.பி.க்களின் (மாநிலங்களவை) பதவிகாலம் 6 ஆண்டுகள் ஆகும். 10 மாநிலங்களில் உள்ள 37 உறுப்பினர்களின் பதவி காலம் முடிவடைகிறது.

    இந்தநிலையில் காலியாகும் 37 மேல்சபை எம்.பி.க்களுக்கான தேர்தல் தேதியை தேர்தல் கமிஷன் இன்று அறிவித்துள்ளது.

    தமிழ்நாடு, மராட்டியம், மேற்குவங்காளம், ஒடிசா, அசாம், பீகார், சத்தீஸ்கர், அரியானா, இமாச்சலபிரதேசம், தெலுங்கானா ஆகிய 10 மாநிலங்களில் உள்ள 37 இடங்களுக்கான மேல்சபை தேர்தல் அடுத்த மாதம் (மார்ச்) 16-ந்தேதி நடை பெறுகிறது.

    தமிழ்நாட்டில் 6 எம்.பி.க்கள் இடம் காலியாகுகிறது.

    தி.மு.க.வை சேர்ந்த என்.ஆர்.இளங்கோ, பி.செல்வ ராசு, திருச்சி சிவா, டாக்டர் கனிமொழி என்.வி.என்.சோமு ஆகியோரது பதவி காலமும், அ.தி.மு.க.வை சேர்ந்த எம்.தம்பிதுரை, மற்றும் அ.தி.மு.க. சார்பில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோரின் பதவி காலமும் ஏப்ரல் 2-ந்தேதி முடிவடைகிறது. இந்த 6 மேல்சபை எம்.பி. இடங்களுக்கும் தேர்தல் நடைபெறுகிறது.

    தமிழ்நாட்டில் காலியாகும் 6 மேல்சபை எம்.பி.க்களுக்கான தேர்தலில் வேட்பு மனு தாக்கல் வருகிற 26-ந் தேதி தொடங்குகிறது. மார்ச் 5-ந்தேதி கடைசி நாளாகும். மனுக்கள் மீதான பரிசீலனை 6-ந்தேதி நடக்கிறது. மார்ச் 9-ந்தேதி மனுவை திரும்ப பெறுவதற்கான கடைசி நாளாகும்.

    போட்டி இருந்தால் தேர்தல் நடைபெறும். மார்ச் 16-ந்தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும். அன்று மாலை 5 மணிக்கு வாக்குகள் எண்ணப்படும். இந்த தேர்தல் நடைமுறைகள் அனைத்தும் மார்ச் 20-ந்தேதி முடிவடையும்.

    மாராட்டியம் மாநிலத்தில் 7 மேல்சபை எம்.பி.க்கள், ஒடிசாவில் 4 உறுப்பினர்கள், மேற்கு வங்காளத்தில் 5 எம்.பி.க்கள் ஆகியோரின் பதவி காலமும் ஏப்ரல் 2-ந்தேதி முடிவடைகிறது.

    அசாம் (3), பீகார் (5), சத்தீஸ்கர் (2), அரியானா (2), இமாச்சலபிரதேசம் (1), தெலுங்கானா (2) ஆகிய மாநிலங்களில் உள்ள மேல்சபை எம்.பி.க்களின் பதவி காலம் ஏப்ரல் 9-ந்தேதி முடிவடைகிறது.

    இந்த 9 மாநிலங்களில் காலியாகும் 31 மேல்சபை எம்.பி.க்களின் தேர்தலும் மார்ச் 16-ந்தேதி நடக்கிறது.

    • தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் அன்றைய தினத்தில் இருந்து தேர்தல் நடைமுறை அமலுக்கு வந்து விடும்.
    • அலுவலகங்களுக்கு இப்போது பொது மக்கள் மட்டுமின்றி கட்சி நிர்வாகிகளும் வந்து செல்கின்றனர்.

    சென்னை:

    பாராளுமன்றத்துக்கு தேர்தல் தேதி அநேகமாக வருகிற சனி அல்லது ஞாயிற்றுக் கிழமை அறிவிக்கப்படக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் அன்றைய தினத்தில் இருந்து தேர்தல் நடைமுறை அமலுக்கு வந்து விடும்.

    அதன் பிறகு முதலமைச்சர் முதற்கொண்டு அமைச்சர்கள் வரை கட்சிப் பணிக்கு செல்லும் போது அரசு வாகனங்களை பயன்படுத்தக்கூடாது. சொந்த கார் அல்லது தனியார் வாகனங்களை பயன்படுத்தி கட்சி நிகழ்ச்சிகளுக்கு செல்ல வேண்டும்.

    அதுமட்டுமின்றி சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தொகுதி தோறும் அலுவலகங்கள் உள்ளன. இந்த அலுவலகங்களுக்கு இப்போது பொது மக்கள் மட்டுமின்றி கட்சி நிர்வாகிகளும் வந்து செல்கின்றனர். அரசியல் ஆலோசனை கூட்டங்களும் இங்கு நடைபெறுவது வழக்கம்.

    ஆனால் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் அங்கு கட்சி நிர்வாகிகள் வரக் கூடாது என்பதற்காக அரசு சார்பில் உள்ள எம்.எல்.ஏ.க் கள், எம்.பி.க்கள் அலுவலகங்களை பூட்ட வேண்டும் என்று தேர்தல் கமிஷன் உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.

    மாவட்ட கலெக்டர்கள் மற்றும் மாநகராட்சி ஆணையர்கள் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள உத்தர விடுவார்கள் என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    தேர்தல் தேதி அறிவிக்க இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் எம்.எல்.ஏ.க்களும் எம்.பி.க்களும் இப்போதே தங்களது அலுவலகத்தில் உள்ள சொந்த பொருட்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி வருகின்றனர்.

    ×