என் மலர்
இந்தியா

இந்தியாவில் தேர்தல் என்பது ஜனநாயக திருவிழா- ஞானேஷ் குமார்
- தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் மற்றும் புதுச்சேரி வாக்காளர்களுக்கு வாழ்த்துகள்.
- 5 மாநிலங்களிலும் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான தேர்தல் அட்டவணையை வெளியிடுவது தொடர்பான செய்தியாளர் சந்திப்பு நடைபெற்று வருகிறது.
டெல்லியில் இந்திய தேர்தல் தலைமைத்தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் செய்தியாளர்களை சந்தித்து வருகிறார்.
அப்போது அவர் உரையாற்றியதாவது:-
கடந்த சில மாதங்களாக 5 மாநிலங்களிலும் உயரதிகாரிகள், அரசியல் கட்சிகளை சந்தித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களிலும் தேர்தல் ஆணையம் ஆய்வு செய்ததை அடுத்து இன்று தேர்தல் தேதி அறிவிக்கப்படுகிறது.
தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் மற்றும் புதுச்சேரி வாக்காளர்களுக்கு வாழ்த்துகள். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியில் களத்தில் உழைத்த, ஒத்துழைத்த ஊழியர்களுக்கு வாழ்த்துகள்.
5 மாநிலங்களிலும் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதில், தமிழகத்தில் உள்ள 5.67 கோடி வாக்காளர் உள்பட 5 மாநிலங்களிலும் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
இளைஞர்கள், புதிய வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்.
சட்டமன்ற தேர்தலுக்காக தமிழ்நாட்டில் 75,032 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்படும்.
தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களில் நடைபெறும் தேர்தல் பணியில் 8.5 லட்சம் பாதுகாப்பு அதிகாரிகள் உள்ளிட்ட 25 லட்சம் அதிகாரிகள் ஈடுபட உள்ளனர்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.






