என் மலர்
நீங்கள் தேடியது "திருப்பதி கோவில்"
- டோக்கன்கள் இல்லாத பக்தர்கள் மீதமுள்ள 7 நாட்களுக்கு நேரடியாக அனுமதிக்கப்படுவார்கள்.
- டிக்கெட்டுகளுக்கான முன்பதிவு வருகிற 5-ந்தேதி ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் டிசம்பர் 30-ந் தேதி முதல் ஜனவரி 8-ந் தேதி வரை வைகுண்ட ஏகாதசி தரிசனம் நடைபெற உள்ளது. கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக முதல் 3 நாட்களுக்கு ஆன்லைனில் டிக்கெட் பெற்ற பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். இதற்கான டிக்கெட் ஆன்லைன் மூலம் வெளியிடப்பட்டது.
கடந்த 27-ம் தேதி தொடங்கிய பதிவு நேற்று மாலை 5 மணிக்கு முடிந்தது. மொத்தம் 24,05,237 பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர். இன்று மதியம் 2 மணிக்கு ஆன்லைன் குலுக்கல் முறையில் பக்தர்களுக்கு தரிசன டிக்கெட ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
தேர்ந்தெடுக்கப்பட்ட பக்தர்களுக்கு செல்போன் மூலம் ஒரு குறுஞ்செய்தி அனுப்பப்படும். அதில் உள்ள இணைப்பைத் திறந்து இலவச டோக்கன்களை பதிவிறக்கம் செய்யலாம்.
டிசம்பர் 30-ந் தேதிக்கு 57 ஆயிரம் டோக்கன்களும், 31-ம் தேதிக்கு 64 ஆயிரமும், ஜனவரி 1-ம் தேதிக்கு 55 ஆயிரம் பக்தர்களுக்கு டிக்கெட் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
டோக்கன்கள் இல்லாத பக்தர்கள் மீதமுள்ள 7 நாட்களுக்கு நேரடியாக அனுமதிக்கப்படுவார்கள். அதே நேரத்தில், ரூ.1,000 தரிசனம் டிக்கெட் ஒதுக்கீடு ஒரு நாளைக்கு 15,000 என்ற விகிதத்திலும், ரூ.300 சிறப்பு நுழைவு தரிசனங்களும் 1,000 ஸ்ரீவாணி தரிசன டிக்கெட்டுகளும் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
இந்த டிக்கெட்டுகளுக்கான முன்பதிவு வருகிற 5-ந்தேதி ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.
- முன்பதிவு செய்யும் பக்தர்கள் தேர்வு செய்யப்பட்டு செல்போன் மூலம் தகவல் அனுப்பப்படும்.
- திருப்பதி கோவிலில் நேற்று 59,548 பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
திருப்பதி கோவிலில் டிசம்பர் மாதம் 30-ந்தேதி முதல் ஜனவரி 8 வரை 10 நாட்கள் வைகுண்ட துவார தரிசனம் நடைபெற உள்ளது.
சாதாரண பக்தர்களுக்கு முன்னுரிமை அளித்து, தேவஸ்தானம் பெரும்பாலான சிறப்பு சலுகைகளை ரத்து செய்துள்ளது. வைகுண்ட ஏகாதசி முதல் 3 நாட்களுக்கு ஆன்லைனில் பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். மீதமுள்ள 7 நாட்கள் நேரடி தரிசனம் வழங்கப்படுகிறது.
நேற்று காலை 10 மணிக்குத் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது. ஒரு மணி நேரத்திற்குள் 2.16 லட்சம் பக்தர்கள் பதிவு செய்தனர். மாலைக்குள் மொத்தம் 4.60 லட்சம் பேர் பதிவு செய்தனர். டிசம்பர் 1 ஆம் தேதி வரை வாய்ப்பு இருப்பதால் இந்த எண்ணிக்கை மிகப்பெரியதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்பதிவு செய்யும் பக்தர்கள் தேர்வு செய்யப்பட்டு செல்போன் மூலம் தகவல் அனுப்பப்படும். அதன் அடிப்படையில் 3 நாட்கள் தரிசனம் செய்யலாம்.
மேலும் சிறப்பு நுழைவு தரிசனங்கள் மற்றும் ரூ 300 ஸ்ரீவாணி தரிசன டிக்கெட்டுகள் ஒதுக்கீடு டிசம்பர் 5-ந்தேதி ஆன்லைனில் வெளியிடப்படும். அன்றைய https://ttdevasthanams. ap. gov. in என்ற முகவரியில் பதிவு செய்யலாம்.
திருப்பதி கோவிலில் நேற்று 59,548 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 25,781 பேர் முடிகாணிக்கை செலுத்தினர். ரூ.4.54கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் 15 மணி காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
- ஏழுமலையானை தரிசிக்க செல்லும்போது முதல் மந்திரியாக இல்லாமல் நான் வரிசையில் இறைவனிடம் செல்கிறேன்.
- ஒவ்வொரு மாநிலத்திலும் ஏழுமலையான் கோவிலை கட்ட பக்தர்கள் முன் வர வேண்டும்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், அமராவதி வெங்கடபாலத்தில் ஏழுமலையான் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் 2-வது பிரகாரம், 7 மாடி மகாராஜா கோபுரம், 3 கோபுரங்கள் ஆர்ஜித சேவை மண்டபம், வாகன ரத மண்டபம், பஞ்சமுக ஆஞ்சநேய சாமி சிலை மற்றும் புஷ்கரணி ரூ.260 கோடி மதிப்பில் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.
இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினார். பின்னர் அவர் பேசியதாவது:-
ஏழுமலையான் முன்னிலையில் மக்கள் தூய்மையாகவும், சுத்தமாகவும், தூய எண்ணங்களுடன் இருக்க வேண்டும். கோவில் விரிவாக்க பணிகள் 2 ஆண்டுகளில் நிறைவடையும் நான் சிறு வயதிலிருந்து ஏழுமலையானை வணங்கி வருகிறேன்.
ஏழுமலையானை தரிசிக்க செல்லும்போது முதல் மந்திரியாக இல்லாமல் நான் வரிசையில் இறைவனிடம் செல்கிறேன். அங்கு சாதாரண மனிதனாக இருப்பதுதான் என்னுடைய உணர்வு. தவறு செய்தவர்கள் அடுத்த பிறவில்தான் தண்டிக்கப்படுவார்கள் என்று நினைக்கிறார்கள்.
தவறு செய்தவர்களுக்கு இந்த பிறவிலேயே அவர்களை ஏழுமலையான் தண்டிப்பார். சாமியை தரிசிக்க செல்லும் அனைவரும் இதை நினைவில் கொள்ள வேண்டும். ஏழுமலையானை யாரும் அவதூறு செய்ய விடமாட்டேன். கடந்த 2003-ம் ஆண்டு குண்டு வெடிப்பில் இருந்து எனது உயிரை காப்பாற்றியவர் ஏழுமலையான்.
ஒவ்வொரு மாநிலத்திலும் ஏழுமலையான் கோவிலை கட்ட பக்தர்கள் முன் வர வேண்டும். மும்பையில் ரூ.100 கோடி மதிப்பில் ஏழுமலையான் கோவிலை கட்ட ரேமன்ட் நிறுவனம் முன் வந்துள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
- வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.
- ஏழுமலையானை குலதெய்வமாக கருதுகிறேன்.
ஆந்திரா டி.வி சேனலில் பிரபல தொகுப்பாளினியாக விளங்கி வருபவர் சிவஜோதி. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது சகோதரர் சோனுவுடன் திருப்பதியில் ஏழுமலையான தரிசிக்க வந்தார்.
அப்போது ரூ.10 ஆயிரம் தரிசன டிக்கெட் வாங்கினார். தரிசனத்திற்கு நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிவஜோதி மற்றும் அவரது சகோதரர் சோனு ஆகியோர் ரூ.10 ஆயிரம் தரிசன டிக்கெட் வாங்கி தரிசனத்திற்காக மணிக்கணக்கில் காத்திருந்தோம். பிரசாதம் வாங்க நீண்ட நேரம் பிச்சைக்காரர்களைப் போல் காத்திருந்தோம் என வீடியோ எடுத்து வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராமில் பதிவு செய்தனர்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைக் கண்ட தேவஸ்தான அதிகாரிகள் சிவஜோதியின் ஆதார் கார்டை முடக்கினர். வருங்காலங்களில் சிவஜோதி ஏழுமலையானை தரிசிக்க அனுமதிக்க மாட்டோம் என தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் சிவஜோதி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தெரிந்தோ தெரியாமலோ என்னுடைய வாயிலிருந்து வார்த்தைகள் தவறாக வந்துவிட்டது. என்னுடைய வீட்டில் ஏழுமலையான் படம் உள்ளது. ஏழுமலையானை குலதெய்வமாக கருதுகிறேன். என் வயிற்றில் வளரும் குழந்தையை கூட ஏழுமலையானாக கருதுகிறேன். எங்கள் குடும்பத்தில் அனைவரும் அனைத்து தெய்வங்களையும் வணங்கி வருகிறோம். என் மீதான தவறுக்கு மன்னித்து விடுங்கள் என பதிவு செய்துள்ளார்.
- அனைத்து சிறப்புரிமை தரிசனங்களும் டிசம்பர் 30-ந்தேதி முதல் ஜனவரி 8-ந்தேதி வரை ரத்து செய்யப்படுகின்றன.
- வி.ஐ.பி. தரிசனத்திற்கான அனைத்து பரிந்துரை கடிதங்களும் ரத்து செய்யப்படுகின்றன.
திருப்பதி கோவிலில் டிசம்பர் மாதம் 30-ந்தேதி முதல் ஜனவரி 8-ந்தேதி வரை 10 நாட்கள் வைகுண்ட துவார தரிசனத்திற்கான விரிவான ஏற்பாடுகள் மற்றும் விரிவான வழிகாட்டுதல்களை திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
சாதாரண பக்தர்களுக்கு முன்னுரிமை அளித்து, தேவஸ்தானம் பெரும்பாலான சிறப்பு சலுகைகளை ரத்து செய்துள்ளது. வைகுண்ட ஏகாதசி முதல் 3 நாட்களுக்கு ஆன்லைனில் பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். மீதமுள்ள 7 நாட்கள் நேரடி தரிசனம் வழங்கப்படுகிறது.
முதல் 3 நாட்களுக்கு 1+3 குடும்ப ஒதுக்கீட்டின் கீழ் டோக்கன்கள் ஒதுக்கப்படும், இதில் நான்கு உறுப்பினர்கள் வரை அனுமதிக்கப்படுவார்கள்.
பக்தர்கள் நவம்பர் 27-ந் தேதி காலை 10 மணி முதல் டிசம்பர் 1-ந் தேதி மாலை 5 மணி வரை தேவஸ்தான வலைத்தளம், தேவஸ்தான மொபைல் செயலி அல்லது அரசு வாட்ஸ்அப் பாட் (9552300009) வழியாக பதிவு செய்ய வேண்டும்.
ஆன்லைன் டிக்கெட் தேர்வு முடிவுகள் டிசம்பர் 2-ந்தேதி பிற்பகல் 2 மணிக்கு அறிவிக்கப்படும்.
மீதமுள்ள நாட்களுக்கான தரிசன அட்டவணை மற்றும் டிக்கெட் விற்பனையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 2-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை சர்வ தரிசனத்திற்கு, சாதாரண பக்தர்கள் வைகுந்தம் வரிசை வளாகம்2 மூலம் டோக்கன்கள் இல்லாமல் நேரடியாக சர்வ தரிசனத்தைப் பெறலாம்.
ஸ்ரீவாணி அறக்கட்டளை டிக்கெட்டுகளுக்கு (ஜனவரி 2-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை), ஒரு நாளைக்கு 1,000 டிக்கெட்டுகள் டிசம்பர் 5-ந் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும்.
ரூ.300 கட்டண தரிசனத்திற்கு ஒரு நாளைக்கு 15,000 டிக்கெட்டுகள் டிசம்பர் 5-ந்தேதி பிற்பகல் 3 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும்.
மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், கைக்குழந்தைகள் உள்ள பெற்றோர், பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கான அனைத்து சிறப்புரிமை தரிசனங்களும் டிசம்பர் 30-ந்தேதி முதல் ஜனவரி 8-ந்தேதி வரை ரத்து செய்யப்படுகின்றன.
சுய நெறிமுறை பிரமுகர்களுக்கு மட்டுமே விஐபி பிரேக் தரிசனம் வழங்கப்படும். வி.ஐ.பி. தரிசனத்திற்கான அனைத்து பரிந்துரை கடிதங்களும் ரத்து செய்யப்படுகின்றன. மேலும் அனைத்து ஆர்ஜித சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
திருப்பதி கோவிலில் நேற்று 72,677 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 24,732 பேர் முடிகாணிக்கை செலுத்தினர். ரூ.3.26 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் 12 மணி காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
- திருப்பதியில் தற்போது கடும் பனிப்பொழிவு தொடங்கி உள்ளதால் பக்தர்கள் குளிரில் நடுங்கி வருகின்றனர்.
- திருப்பதியில் நேற்று 68,615 பேர் தரிசனம் செய்தனர்.
திருப்பதியில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்கு வந்தனர். நேற்று காலை முதல் மேலும் தரிசனத்திற்கு பக்தர்கள் குவிந்தனர். இதனால் பக்தர்கள் தரிசனத்திற்கு தங்கி செல்லும் வைகுந்தம் அறைகள் அனைத்தும் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தன.
இதனால் கோவிலுக்கு வெளியே நீண்ட தூரம் தரிசனத்திற்காக பக்தர்கள் காத்திருந்தனர். திருப்பதியில் தற்போது கடும் பனிப்பொழிவு தொடங்கி உள்ளதால் பக்தர்கள் குளிரில் நடுங்கி வருகின்றனர்.
திருப்பதியில் நேற்று 68,615 பேர் தரிசனம் செய்தனர். 27,722 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.23 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. பக்தர்கள் 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
- திருப்பதி மலைக்கு வந்து பத்மாவதி தாயார் விருந்தினர் மாளிகையில் தங்கினார்.
- ஜனாதிபதி வருகையை முன்னிட்டு திருப்பதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
திருப்பதி:
ஜனாதிபதி நேற்று மாலை 4.30 மணிக்கு தனது மகள் இதி ஸ்ரீ முர்மு மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் ரேணிகுண்டா விமான நிலையத்திற்கு வந்தார்.
ஜனாதிபதி திரவுபதி முர்முக்கு அறநிலையத்துறை மந்திரி ராம நாராயண ரெட்டி, உள்துறை அமைச்சர் வாங்கலபுடி அனிதா, கலெக்டர் வெங்கடேஸ்வரர், எம்.எல்.ஏ. புலிவர்த்தி நானி உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
பின்னர் சாலை மார்க்கமாக பத்மாவதி தாயார் கோவிலில் தரிசனம் செய்தார். பின்னர் திருப்பதி மலைக்கு வந்து பத்மாவதி தாயார் விருந்தினர் மாளிகையில் தங்கினார்.
இன்று காலை 9.30 மணி அளவில் வராஹ சாமியை தரிசனம் செய்தார். ஜனாதிபதி திரவுபதி முர்முக்கு தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.நாயுடு, தலைமை நிர்வாக அதிகாரி அணில் குமார் சிங்கால், கூடுதல் தலைமை நிர்வாக அதிகாரி வெங்கைய்ய சவுத்ரி வரவேற்பு அளித்து கோவிலுக்குள் அழைத்துச் சென்றனர்.
இதையடுத்து திரவுபதி முர்மு குடும்பத்தினருடன் ஏழுமலையானை தரிசனம் செய்கிறார்.
ஜனாதிபதி வருகையை முன்னிட்டு திருப்பதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
- வருகிற 30-ந் தேதி முதல் ஜனவரி 8 வரை 10 நாட்களுக்கு வைகுண்ட துவார தரிசனம் நடைபெற உள்ளது.
- ஒரு மணி நேரத்திற்கு 4,300 முதல் 4,700 பேர் வரை தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
திருமலை:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த ஆண்டு வைகுண்ட ஏகாதேசி தரிசன டிக்கெட் கவுண்டரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பக்தர்கள் பலியானார்கள். இந்த சம்பவத்தை தொடர்ந்து இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி தரிசனத்தில் இது போன்ற அசம்பாவிதங்களை தவிர்க்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வருகிற 30-ந் தேதி முதல் ஜனவரி 8 வரை 10 நாட்களுக்கு வைகுண்ட துவார தரிசனம் நடைபெற உள்ளது.
வைகுண்ட துவார தரிசனத்தின் முதல் 3 நாட்களுக்கு ஆன்லைனில் தரிசன டோக்கன் பெற்றவர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.
மீதமுள்ள 7 நாட்களுக்கு வைகுண்ட ஏகாதேசி தரிசனத்திற்கான டோக்கன் நேரடியாக வழங்கப்படும் பக்தர்கள் நேரடியாக திருமலையை அடைந்து வைகுண்ட துவார தரிசனம் செய்யலாம்.
இந்த 10 நாட்களில் சுமார் 8 லட்சம் பேருக்கு தரிசனம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஒரு மணி நேரத்திற்கு 4,300 முதல் 4,700 பேர் வரை தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நவம்பர் 27 முதல் டிசம்பர் 1 வரை முதல் 3 நாட்கள் தரிசனத்திற்கான டோக்கன்களுக்கு பக்தர்கள் தெலுங்கு, தமிழ், கன்னடம், ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் தேவஸ்தான வலைத்தளம், மொபைல் செயலி மற்றும் வாட்ஸ்அப் மூலம் பதிவு செய்யலாம். டிசம்பர் 2-ந்தேதி தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு தகவல் அனுப்பப்படும்.
வைகுண்ட ஏகாதசி தரிசனம் செய்வதற்கு முதல் 3 நாட்களில் ஆன்லைன் டோக்கன் இல்லாத பக்தர்கள் திருப்பதி மலைக்கு நேரடியாக வர வேண்டாம் என தெரிவித்தனர்.
திருப்பதி கோவிலில் நேற்று 66,966 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 21.535 பேர் முடிகாணிக்கை செலுத்தினர். ரூ.4.19 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
நேரடியாக இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 12 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
- குடும்பப் பொறுப்புகள் மற்றும் வேலை அழுத்தங்கள் காரணமாக அவர் கடுமையான மன அழுத்தத்தை எதிர்கொண்டார்.
- தனது கணவர் அபிஷேக்குடன் திருமலைக்கு வந்த பூஜா, கோவிலில் முன் பகுதிக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள துனியைச் சேர்ந்தவர் நூத்தி பூஜா (வயது 24), ஐதராபாத்தில் உள்ள ஒரு ஐ.டி.நிறுவனத்தில் பணிபுரிகிறார். அவர் தற்போது வீட்டிலிருந்து வேலை செய்து வருகிறார்.
அவர் நள்ளிரவு வரை கம்ப்யூட்டர் முன் அமர்ந்து வேலை செய்ய வேண்டியிருந்தது. மறுபுறம், குடும்பப் பொறுப்புகள் மற்றும் வேலை அழுத்தங்கள் காரணமாக அவர் கடுமையான மன அழுத்தத்தை எதிர்கொண்டார்.
இந்த நிலையில் திருப்பதி தேவஸ்தானம் அறிவித்த 'கோவிந்த கோடி' திட்டத்தைப் பற்றி அறிந்தார். பூஜா, ஏழுமலையானின் பெயர்களை எழுத முடிவு செய்தார். ஆரம்பத்தில் ஒரு லட்சம் பெயர்களை எழுத விரும்பினாலும், அதிலிருந்து கிடைத்த மகிழ்ச்சியுடன் அவர் தொடர்ந்து 10 லட்சம் தடவை எழுதி முடித்தார்.
மொத்தம் 10,01,116 கோவிந்த நாமங்களை எழுதியுள்ள அவருக்கு திருப்பதி கோவிலில் விஐபி பிரேக் தரிசனத்தை சிறப்பாக வழங்கியது.
தனது கணவர் அபிஷேக்குடன் திருமலைக்கு வந்த பூஜா, கோவிலில் முன் பகுதிக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.
சுவாமியின் ஆசியுடன் முதல் கடபத்திலிருந்து அவரைத் தரிசனம் செய்யும் பாக்கியம் தனக்குக் கிடைத்ததில் மகிழ்ச்சி என தெரிவித்தார்.
- கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை ஆகியவற்றுக்கான தரிசன டிக்கெட்டுகளை 21-ந்தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும்.
- ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் 25-ந் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும்.
திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க அடுத்த ஆண்டு (2026) பிப்ரவரி மாதம் வழிபட ஆன்லைனில் பல்வேறு தரிசன டிக்கெட்டுகள், தங்குமிட அறைகள் ஒதுக்கீடு வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி கோவிலில் உள்ள ஆர்ஜித சேவைகளான சுப்ர பாதம், தோமாலை, அர்ச்சனை, அஷ்டதள பாத பத்மாராதனை போன்ற டிக்கெட்டுகள் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு வெளியிடப்படுகின்றன.
இந்த ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளை 20-ந்தேதி காலை 10 மணி வரை மின்னணு டிப் செய்ய ஆன்லைனில் பதிவு செய்யலாம். 20-ந் தேதி முதல் 22-ந் தேதி மதியம் 12 மணிக்கு முன் பணம் செலுத்தியவர்களுக்கு இந்த டிக்கெட்டுகள் வழங்கப்படும்.
கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை ஆகியவற்றுக்கான தரிசன டிக்கெட்டுகளை 21-ந்தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும்.
அங்கப்பிரதட்சண டோக்கன்களுக்கான ஒதுக்கீடு 24-ந்தேதி காலை 10 மணிக்கும், ஸ்ரீவாணி தரிசன டிக்கெட்டுகள் காலை 11 மணிக்கும், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான டோக்கன்கள் மாலை 3 மணிக்கும் வெளியிடப்படும். ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் 25-ந் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும்.
பக்தர்கள் ஸ்ரீவாரி ஆர்ஜித சேவை மற்றும் தரிசன டிக்கெட்டுகள், தங்குமிட டிக்கெட்டுகள் ஆகியவற்றை திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://ttdevasthanams.ap.gov.in மூலம் மட்டுமே முன்பதிவு செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
- அமைச்சர் கே.என்.நேரு திருப்பதி கோவிலுக்கு ரூ.44 லட்சம் நன்கொடை கொடுத்ததாக தகவல் வெளியானது
- அமைச்சர் கே.என்.நேருவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அண்மையில், அமைச்சர் கே.என்.நேரு திருப்பதி கோவிலுக்கு ரூ.44 லட்சம் நன்கொடை கொடுத்ததாக கூறப்படும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி, அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக சில நாட்களுக்கு முன்பு அமைச்சர் கே.என்.நேருவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த கே.என்.நேரு, "நான் பணம் கொடுக்க கூடாதா? நான் திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலுக்கு ரூ.44 லட்சம் காணிக்கை வழங்கியது குறித்து விமர்சனம் செய்யட்டும்... எல்லோரும் என்னை நல்லவன் என்று சொல்வார்களா?" என்று கோவமாக பதில் அளித்தார்.
இந்நிலையில், இன்று அமைச்சர் கே.என்.நேருவிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து மீண்டும் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், "திருப்பதி கோவிலுக்கு நான் நன்கொடை கொடுக்கவில்லை. என்னிடம் அவ்வளவு பணமில்லை. என்னுடைய குடும்ப உறுப்பினர்கள் என் பெயரில் நன்கொடை கொடுத்துள்ளார். எனக்கு இது முன்னரே தெரிந்திருந்தால் வேண்டாம் என்று கூறியிருப்பேன்" என்று தெரிவித்தார்.
- திருப்பதியில் நேற்று 68,075 பேர் தரிசனம் செய்தனர்.
- நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 18 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட துவார தரிசனம் டிசம்பர் 30-ந்தேதி முதல் ஜனவரி 8-ந் தேதி வரை 10 நாட்கள் நடைபெற உள்ளது.
இதுகுறித்து திருப்பதி தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி வெங்கய்ய சவுத்ரி மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி அணில் குமார் சிங்கால் ஆகியோர் கூறியதாவது:-
வைகுண்ட துவார தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைன் மற்றும் நேரடியாக வழங்குவது குறித்து ஒரு வாரத்தில் அறிவிக்கப்படும்.
ஸ்ரீவாணி தரிசன டிக்கெட்டுகள் வழங்குதல் மற்றும் சிறப்பு தரிசன டிக்கெட் வழங்குதல், சலுகை தரிசன டிக்கெட் வழங்குவது தொடர்பாக அமைக்கப்பட்ட குழுவினர் அளித்த அறிக்கையின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
வைகுண்ட தரிசன பாதையில் உள்ள கேமராக்கள் கட்டளை கட்டுப்பாட்டு மையம் மூலம் கண்காணிக்கப்படும். இதன் மூலம் பக்தர்களை கட்டுப்படுத்தி சிரமமின்றி தரிசனத்திற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
திருப்பதியில் நேற்று 68,075 பேர் தரிசனம் செய்தனர். 26,535 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 3.80 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 18 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.






