என் மலர்tooltip icon

    வழிபாடு

    • கலியுகத்தில் திருமால் எடுத்த அவதாரமே ‘அய்யா வைகுண்டர்’ அவதாரம் ஆகும்.
    • ஸ்ரீமன் நாராயணன், வைகுண்டராக அவதரித்து வந்தபோது சப்த மாதர்களை திருக்கல்யாணம் புரிந்தார்.

    இறைவன் அவதாரத்தின் முக்கிய நோக்கமே, அன்பான பக்தர்களை காப்பதுதான். இருப்பினும் அன்பரை காக்க அவதரிக்கும்போது வம்பரையும் (தீயவர்) அழிக்கிறான், இறைவன். அவ்வாறே அன்பான சான்றோர் மக்களை காத்து வம்பான கலியனை அழிப்பதற்காக, கலியுகத்தில் திருமால் எடுத்த அவதாரமே 'அய்யா வைகுண்டர்' அவதாரம் ஆகும்.

    இறைவன் தனது அவதாரத்தின்போது வாழ்ந்து காட்டுவதன் வாயிலாகவும், வழிகாட்டுவதன் மூலமாகவும் நாம் நல்வழியில் வாழ்வதற்கான உபதேசங்களை தருகின்றார். அவ்வகையில் பெற்றோரிடம் பிள்ளைகள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் சொல்லியுள்ளார். பெற்றோரை மதித்து அவர்களுக்கு உரிய மரியாதை கொடுத்து, அவர்களின் சொல்படி நடப்பதால் கிடைக்கும் நன்மையையும் அகிலத்திரட்டு அம்மானை மூலமாக எடுத்துரைக்கிறார்.

    துவாபர யுகத்தின் முடிவில், இறந்த உறவினர்களுக்கு செய்ய வேண்டிய இறுதிச் சடங்குகளை செய்யும்படி, பாண்டவர்களுக்கு பகவான் கிருஷ்ணர் உத்தரவிட்டார். இந்தநிலையில் கர்ணனுக்கு மோட்சம் அளிப்பதற்கான பணிகளும் நடைபெற்றது. அப்போது அங்கு வந்த வியாசர், "பாவிகளோடு இருந்த கர்ணனுக்கு மோட்சம் அளிப்பதன் காரணம் என்ன?" என்று கேட்டார்.

    அதற்கு கிருஷ்ணர், "திரேதா யுகத்தில் ராவணனை அழிப்பதற்காக, நான் ஸ்ரீராமனாக அவதரித்திருந்தேன். அந்த வேளையில் எனக்கு தொண்டு செய்வதற்காக வாலியாக படைக்கப்பட்டவன்தான் இந்த கர்ணன். ஆனாலும் ராவணனோடு வாலிக்கு இருந்த நட்பின் காரணமாக, நான் அவனை மறைந்திருந்து கொல்லும் நிலை உண்டானது. மார்பில் அம்பு பாய்ந்து உயிர் போகும் தருவாயில் என்னை உணர்ந்து கொண்ட வாலி என்னைப் பணிந்து, 'நன்றியுள்ள திருமாலே.. நான் உமக்கு ஏவல் செய்வதற்காகவே படைக்கப்பட்டவன். முன்பு அமிர்தம் கடையும்போது என்னை ஒரு புறத்தில் நிறுத்தி வேலை செய்ய வைத்து அழகு பார்த்தவர் நீங்கள். அப்படி இருக்கையில் நீங்கள் சொல்லியிருந்தால், ராவணனின் பத்து தலைகளையும் கொய்து, கொன்றிருக்க மாட்டேனா' என்று கேட்டான்.

    அப்போது நான், 'நீ எனக்கு ஏவல் செய்வதற்காகவே பிறந்தாய். இருப்பினும் எனக்கு ஆகாத பாவியான ராவணனுடன் நட்பு கொண்டிருந்தாய். அதோடு ராவணனிடம் 'உனக்கு எதிரி.. எனக்கும் எதிரி' என சபதமும் செய்திருந்தாய். நான் உன்னை மறைந்திருந்து தாக்காவிட்டால், ராவணனுக்கு நீ செய்த சத்தியத்தையும் மீறி, நீ என்னோடு நட்புகொண்டிருப்பாய். என் பக்தன் ஒருவன், அவனுடைய சத்தியத்தை மீறுவது சரியல்ல. எனவேதான் நீ என்னை அறியும் முன்பாக, நான் உன்னை மறைந்திருந்து வீழ்த்தினேன். அடுத்து வரும் யுகத்தில் கர்ணனாக பிறக்கப்போகும் நீ, தீயவனான துரியோதனனோடு இருந்தாலும் என் சொல்படி நடப்பாய். அப்போது உனக்கு மோட்சம் தருவேன்' என்று உறுதியளித்தேன்.

    அதன்படிதான் அவனை குந்தியின் மகனாக, பாண்டவர்களின் மூத்தவனாக பிறவிக்கச் செய்து, துரியோதனன் பக்கம் அனுப்பினேன். எனினும் இறைவனான என் புத்தியை உள்ளிருத்தி, அதன்படியே வாழ்ந்தான். தன் தாய்க்கு செய்த சத்தியத்தின்படி, ஒரு முறைக்கு மேல் நாகாஸ்திரத்தை எய்தாமல் சத்தியம் காத்தான். அதனால்தான், முன்பு கூறியபடியே அவனுக்கு மோட்சம் அருள்கிறேன்" என்று கூறினார்.

    ஒரு ஆன்மாவுக்கு கிடைக்கக்கூடிய உச்சபட்ச உயர்வு, மோட்சம்தான். அது தாய்- தந்தையர் சொல்லைக் கேட்டு நடப்பதால் ஒருவருக்கு கிடைக்கும் என்பதை அகிலத்திரட்டு அம்மானை மூலம் இறைவன் நமக்கு உணர்த்துகிறார். மேலும் 'ராமபிரான், மறைந்திருந்து வாலியைக் கொன்றது சரியா? தவறா?' என்று உலகில் நடக்கும் பட்டிமன்ற வினாவிற்கு சரி என்ற விடையை தருவதோடு, அதற்கான காரணத்தையும் அகிலத்திரட்டு அம்மானை மூலமாக அளிக்கிறார்.

    ஸ்ரீமன் நாராயணர் தனது கிருஷ்ண அவதாரத்தை நிறைவு செய்துவிட்டு, திருவரங்கம் செல்லும் வழியில் சப்த மாதர்கள் மூலமாக பிறந்தவர்களே சான்றோர்கள் ஆவர். சான்றோர்களை பெற்றெடுத்த பிறகு, சப்த கன்னியர்கள் தவம் செய்வதற்காக கானகம் சென்றனர். அவர்கள் முன்பாக தோன்றிய திருமால், சப்த கன்னியர்கள் பூலோகத்தில் பிறவி எடுக்கும்போது, தாம் வைகுண்டராக அவதரித்து அவர்களை திருமணம் செய்வதாக கூறினார். அதன்படியே ஸ்ரீமன் நாராயணன், வைகுண்டராக அவதரித்து வந்தபோது சப்த மாதர்களை திருக்கல்யாணம் புரிந்தார்.

    இந்த திருக்கல்யாணத்தின்போது சப்தமாதர்களின் பெற்றோரை அழைத்த அய்யா, கைப்பிடித்து தரும்படி கூறினார். அப்போது அவர்கள் அய்யாவிடம் "இதற்கு முன்பே இவர்கள் உமக்கு மனைவியர் தானே" என்று சொல்லிவிட்டு, "இருந்தாலும் நீர் சொன்னதால் நாங்கள் கைப்பிடித்து கொடுக்கிறோம்" என்று சொல்லி கைபிடித்துக் கொடுத்தனர். திருமணத்தின்போது கைப்பிடித்து கொடுக்கின்ற பெரிய பாக்கியத்தை பிள்ளைகள் தங்களின் பெற்றோருக்கு கொடுக்க வேண்டும் என்பதை, இந்த அவதார திருக்கல்யாண லீலை மூலம் அய்யா வைகுண்டர் நமக்கு உணர்த்துகிறார். அய்யா வைகுண்டரின் வாக்குப்படி பெற்றோரை மதித்தும், அவர்களுக்கு கட்டுப்பட்டும், அவர்களுக்கு செய்ய வேண்டிய கடமையை சரியாக செய்தும் வாழ்வதுதான் பிள்ளைகளின் கடமையாகும்.

    இப்படிப்பட்ட உயர்ந்த தத்துவத்தைக் கொண்டிருந்த அய்யா வைகுண்டருக்கு, தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஆலயங்கள் எழுப்பப்பட்டு இருக்கின்றன. அவற்றில் ஒன்றுதான் சென்னை மணலிப் புதுநகரில் உள்ள 'அய்யா வைகுண்ட தர்மபதி' ஆகும். இந்த ஆலயத்தில் தினமும் மூன்று வேளை பணிவிடையும், மூன்று வேளையும் நித்திய அன்னதானமும், தினமும் மாலையில் வாகன பவனியும் நடைபெறுவது சிறப்புக்குரியதாகும். இந்த ஆலயத்தின் திருவிழா கடந்த 4-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 13-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை நடைபெறும் இந்த விழாவில், முக்கிய நிகழ்வாக 13-ந் தேதி காலை 11.30 மணிக்கு அய்யா வைகுண்டர் திருத்தேரில் பவனி வரும் நிகழ்வு நடைபெறுகிறது.

    • குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையிலான பக்தர்கள் பல்வேறு வேடங்களை அணிந்து வழிபடுகின்றனர்.
    • தென்மாவட்டங்களில் காணும் இடமெல்லாம் சுவாமி வேடங்களை அணிந்த பக்தர்களாகவே காட்சியளிப்பதால் தசரா திருவிழா களைகட்டியது.

    குலசேகரன்பட்டினம்:

    தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீஸ்வரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் பிரசித்தி பெற்ற தசரா திருவிழா கடந்த 3-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் வெவ்வேறு திருக்கோலங்களில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

    தசரா திருவிழாவையொட்டி, தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் உள்ளிட்ட தென்மாவட்டங்களில் பெரும்பாலான ஊர்களிலும் விரதம் இருந்து காப்பு கட்டி பல்வேறு வேடங்களை அணிந்த பக்தர்கள் ஒவ்வொரு ஊரிலும் வீதி வீதியாக சென்று காணிக்கை வசூலிக்கின்றனர். அந்தந்த ஊர்களில் உள்ள கோவில்களின் அருகில் பிறை அமைத்து தங்கியிருந்து அம்மனை வழிபடுகின்றனர்.

    ஒவ்வொரு தசரா குழுவிலும் காளி, சிவன், பிரம்மன், விஷ்ணு, விநாயகர், முருகபெருமான், ராமர், கிருஷ்ணர், நாராயணர், அனுமர் உள்ளிட்ட பல்வேறு சுவாமி வேடங்களை அணிந்த பக்தர்கள் அணிவகுத்து செல்வது கண்கொள்ளாக் காட்சியாக உள்ளது. அரசன், குறவன், கரடி, கிளி, புலி போன்ற வேடங்களையும் சில பக்தர்கள் அணிந்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

    குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையிலான பக்தர்கள் பல்வேறு வேடங்களை அணிந்து வழிபடுகின்றனர்.

    தசரா குழுவினருடன் நாட்டுப்புற கலைஞர்களும் சென்று கரகாட்டம், சிலம்பாட்டம், மேற்கத்திய நடனம் போன்றவற்றை நடத்துகின்றனர். தென்மாவட்டங்களில் காணும் இடமெல்லாம் சுவாமி வேடங்களை அணிந்த பக்தர்களாகவே காட்சியளிப்பதால் தசரா திருவிழா களைகட்டியது.

    குலசேகரன்பட்டினம் கோவிலில் தசரா திருவிழாவின் 9-ம் நாளான இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 10 மணிக்கு அன்ன வாகனத்தில் கலைமகள் திருக்கோலத்தில் அம்மன் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றார்.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான மகிஷா சூரசம்ஹாரம் 10-ம் திருநாளான நாளை (சனிக்கிழமை) நடக்கிறது. அன்று இரவு 12 மணிக்கு அம்மன் சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரேஸ்வரர் கோவில் முன்பாக எழுந்தருளி, மகிஷாசூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.

    விழாவையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலில் குவிந்த வண்ணம் உள்ளனர்.

    • இன்று மகா நவமி. சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை.
    • மதுரை ஸ்ரீமீனாட்சியம்மன் கொலு மண்டபத்தில் சிவ பூஜை செய்தருளிய காட்சி.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு புரட்டாசி-25 (வெள்ளிக்கிழமை)

    பிறை: வளர்பிறை.

    திதி: அஷ்டமி காலை 7.22 மணி வரை. பிறகு நவமி.

    நட்சத்திரம்: உத்திராடம் நள்ளிரவு 1.42 மணி வரை. பிறகு திருவோணம்.

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    எமகண்டம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    சூலம்: மேற்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    இன்று மகா நவமி. சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை. திருப்பதி ஏழுமலையப்பன் ரதோற்சவம். மதுரை ஸ்ரீமீனாட்சியம்மன் கொலு மண்டபத்தில் சிவ பூஜை செய்தருளிய காட்சி. சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம். ஏனாதி நாத நாயனார் குரு பூஜை. சிருங்கேசி ஸ்ரீசாரதாபீடம் ஸ்ரீஅம்பாள் சிம்ம வாகனத்தில் சாமுண்டி அலங்காரத்தில் காட்சியருளல். ராமேஸ்வரம் ஸ்ரீபர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் காலை திருமஞ்சனம், மாலை ஊஞ்சல் சேவை. திருவிடைமருதூர் ஸ்ரீபிருகத் சுந்தரகுசாம்பிகை புறப்பாடு. லால்குடி ஸ்ரீசப்தரிஷீஸ்வரர் கோவிலில் அபிஷேகம். சிவகாசி ஸ்ரீவிஸ்வநாதர் சிறப்பு அபிஷேகம். திருத்தணி ஸ்ரீமுருகப்பெருமான் கிளி வாகன சேவை.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-போட்டி

    ரிஷபம்-புகழ்

    மிதுனம்-வெற்றி

    கடகம்-தனம்

    சிம்மம்-ஆர்வம்

    கன்னி-ஆதரவு

    துலாம்- அமைதி

    விருச்சிகம்-செலவு

    தனுசு- மாற்றம்

    மகரம்-லாபம்

    கும்பம்-ஜெயம்

    மீனம்-பெருமை

    • சரஸ்வதியை ஜப்பானில் 'பென் சைட்டென்' என்று குறிப்பிடுகின்றனர்.
    • ஜப்பானை காக்கும் தெய்வமாகவும் கருதப்படுகிறாள்.

    இந்தியாவின் ஆன்மிக கருத்துக்கள் மற்ற நாடுகளிலும் பின்பற்றப்படுகின்றன. அப்படி ஒரு வழிபாடாக ஜப்பான் நாட்டில் சரஸ்வதி வழிபாடு உள்ளது. அதைப் பற்றி இங்கே பார்ப்போம்.

    சரஸ்வதியை ஜப்பானில் 'பென் சைட்டென்' என்று குறிப்பிடுகின்றனர். ஜப்பானில் வணங்கப்படும் ஏழு அதிர்ஷ்ட தேவதைகளில் இவரும் ஒருவர்.


    இந்தியாவில் எழுதப்பட்ட பவுத்த நூலான 'சுவர்ண பிரபாச சூத்திரம்' மூலம்,6-ம் நூற்றாண் டுக்கும் 8-ம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் சரஸ்வதி வழிபாடு ஜப்பானில் பரவியதாக சொல்லப்படுகிறது. ஏனெனில் அந்த பவுத்த நூலில் சரஸ்வதி பற்றி விசேஷமாக சொல்லபட்டிருக்கிறது.

    ஜப்பான் நாட்டு வரலாறு மற்றும் புராணங்களின்படி சூரிய குலத்தில் தோன்றிய 'யமாடோ' வம்ச சக்கரவர்த்திகள், ஜப்பானை ஒரே நாடாக ஆட்சி புரிந்திருக்கின்றனர். அவர்கள் காலத்தில்தான், முன்னோர்கள் மற்றும் இயற்கை வழிபாடுகள், சடங்குகள் அதிகம் இருக்கும் ஷிண்டோ மதமும், புத்த மதமும் பரவின.

    இந்த இரண்டு மதங்களும் இந்தியாவில் இருந்து சென்ற துறவிகளால், ஜப்பான் நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டதாக ஜப்பானிய ஆன்மிக இலக்கியங்களில் குறிப்புகள் காணப்படுகின்றன.

    ரிக் வேதத்தில் 'விரித்திரன்' என்ற பாம்பு வடிவ அசு ரனை, சரஸ்வதி அழித்த தகவல் உள்ளது. அதேபோல் ஜப்பானில் பாம்புகள் மற்றும் டிராகன் ஆகியவற்றுடன் தொடர்புடையவராக சரஸ்வதி கருதப்படுகிறார்.

    டோக் கியோ நகரில்இருந்து சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள எனோஷிமா தீவு உட்பட, ஜப்பான் முழுவதும் நூற்றுக்கணக்கான சரஸ்வதி கோவில்கள் உள்ளன. டோக்கியோ நகர கோவிலில் உள்ள சரஸ்வதி, ஜப்பானிய உடை அணிந்து, தாமரைப்பூவின் மீது அமர்ந்திருக்கிறார்.

    நான்கு கரங்களைக் கொண்ட இந்த தேவி, தன் கைகளில் ஒரு இசைக் கருவியை தாங்கியிருக்கிறார். எனோஷிமா தீவில் உள்ள கோவில்களை பற்றிய நூலில், 'அநவதப்தம்' என்ற ஏரியில் உள்ள டிராகன் அரசனின் மூன்றாவது மகள் சரஸ்வதி என்றும் சொல்லப்பட்டுள்ளது.


    'பென்சைட்டென்' என்ற சரஸ்வதி சக்தி பெற்ற தெய்வமாகவும், ஜப்பானை காக்கும் தெய்வமாகவும் கருதப்படுகிறாள். அதற்கு காரணம்,ஜப்பான் நீரால் சூழப்பட்ட தீவு நாடாக உள்ளது. அதை காப்பதற்கு நீரோடு தொடர்பு கொண்ட சரஸ்வதி துணை நிற்பதாக அவர்கள் நம்புகின்றனர்.

    மேலும், இனி மையான குரல், அதிர்ஷ்டம், அழகு, மகிழ்ச்சி, ஞானம், சக்தி ஆகியவற்றை அருளும் தெய்வமாகவும் அவள் போற்றப்படுகிறாள்.

    கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய புனிதநதிகள் நமது நாட்டில் மதிக்கப்படுவதைப்போல ஜப்பானி லும் நீர்நிலைகள், குளங்கள் ஆகிய வற்றை சரஸ்வதியாக பாவித்து வணங்குகிறார்கள். ஜப்பான் மீனவர்கள்.

    கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் போது, 'பென்சைட்டெனை வணங்கிய பின்னரே புறப்படுகிறார்கள். அங்கு உள்ள பிள்ளையார் ஷோட்டன்' எனவும், கருடன் 'கருரா' எனவும் அழைக்கப்படுகிறார்கள். மேலும், வாயு, வருணன் உள்ளிட்ட தேவர்களுக்கும் ஜப்பானில் சிலைகள் உள்ளன.

    கல்விக் கடவுளான சரஸ்வதி தேவி புத்த மதத்தில் ஞானம் அருளும் பெண் தெய்வமாக வழிபடப்படுகிறாள். இந்தியாவில் இருந்து ஜப்பானுக்கு கொண்டு செல்லப்பட்ட சரஸ்வதி வழிபாட்டை இன்றும் அங்கு உள்ள மக்கள் கடைப்பிடித்து வருகின்றனர்.


    நமது நாட்டின் சரஸ்வதி கையில் வீணை வைத்திருப்பதை போலவே, ஜப்பானிய பென்சைட்டெனும், தந்திகள் கொண்ட இசைக்கருவியை வைத்திருக்கிறாள். அந்த நாட்டு மக்கள், தங்களின் பிள்ளைகள் கல்வி, கலைகளில் சிறக்கவும், முக்கிய தேர்வுகளில் வெற்றி பெறவும் சரஸ்வதி கோவிலுக்கு சென்று வழிபடுகின்றனர்.

    ஜப்பான் பாரம்பரிய விழாக்களில் 'பென்சைட்டென்' தெய்வத்திற்கு சிறப்பு பூஜைகளை செய்து வழிபடுகின்றனர். கல்கத்தா நகரில் உள்ள இந்திய அருங்காட்சியகத்தில், ஜப்பானின் இந்து கடவுள் வழிபாடு தொடர்பான புகைப்படங்கள் நிறைய வைக்கப்பட்டு உள்ளன.

    • வடநாட்டில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது துர்காஷ்டமி.
    • நவராத்திரியில் எட்டாவது நாள் துர்க்காஷ்டமி நாளாக கொண்டாடப்படுகிறது.

    துர்காஷ்டமி தினத்தில் துர்கையின் நெற்றியிலிருந்து சாமுண்டா எனும் உக்கிர சக்தி தோன்றினாளாம். இவள் சண்டன் - முண்டன், ரக்த பீஜன் ஆகிய அசுரர்களை இந்த தினத்தில் அழித்தாள். எனவே, அதீத சக்தியும் வல்லமையும் கொண்டதாகத் திகழ்கிறது இந்த துர்காஷ்டமி தினம்.


    வடநாட்டில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது துர்காஷ்டமி. மக்கள் வண்ண வண்ண ஆடைகள் அணிந்து கர்பா நடனம் ஆடிக் கொண்டாடுவார்கள். அன்று முழுவதும் துர்கா மாதாவுக்கு கோலாகலமான வழிபாடுகள் நடைபெறும்.

    தேவிக்கு புனித பலியாக எலுமிச்சை, தேங்காய், பூசணிக்காய்கள் உடைத்து வழிபடுவார்கள், தீமையை அழிக்க வேண்டுவார்கள்.

    நவராத்திரி புண்ணிய காலத்தில் வரும் எட்டாவது நாளான அஷ்டமி தினத்தை 'துர்காஷ்டமி' என்று புராணங்கள் போற்றும். மகாஷ்டமி, வீராஷ்டமி என்ற பெயர்களும் இந்த நாளுக்கு உண்டு.

    துர்காதேவியின் அம்சமான 64 யோகினிகளும் பிராம்மி, மாஹேஸ்வரி, வைஷ்ணவி, வாராஹி, நாரசிம்ஹி, இந்திராணி, சாமுண்டி ஆகிய சக்திகளும் ஒன்றிணைத்து செயலாற்றும் துடியான நாள் இது என்கின்றன ஞான நூல்கள். ஆகவே இந்த தினத்தில் அம்பாள் தரிசனமும் வழிபாடும் பன்மடங்கு பலனை அள்ளித் தரும் என்பர்.

    இளம் சிறுமியர் தேவியாக அலங்கரிக்கப்பட்டு ஊர்வலமாக அழைத்து வரப்படுவார்கள். மேற்கு வங்கத்திலும் இந்த நாளில் துர்கா பூஜை மிக சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

    தமிழகத்தை பொறுத்தவரை இந்த துர்காஷ்டமி கோவில்களில் விமரிசையாகவும் வீடுகளில் எளிமையாகவும் கொண்டாடப்படுகிறது.


    வீட்டில் கொலு வைத்திருப்பவர்கள், துர்காஷ்டமி நாளில்... ரக்தபீஜன் என்ற அசுரனை வதம் செய்தபிறகு, கருணையுடன் வீற்றிருக்கும் திருக்கோலத்தில் அம்பாளை அலங்கரித்து வழிபட வேண்டும்.

    அணிமா முதலான எட்டுச் சக்திகளும் புடைசூழ வீற்றிருக்கும் இந்த தேவி, அபய - வரதம், கரும்பு வில் மற்றும் மலர் அம்பு ஏந்திய நான்கு திருக்கரங்களுடன் காட்சி தருவாள்.

    இந்த நாளில் 9 வயதுள்ள குழந்தையை, துர்கையாக பூஜிக்க வேண்டும். இதனால் செயற்கரிய செயல்களையும் எளிதில் செய்து முடிக்கும் வல்லமை கிடைக்கும். எதிரிகளின் தொல்லைகள் விலகும், சத்ரு பயம் நீங்கும்.

    கொலு வைக்காதவர்கள் அன்றைய தினம் தங்கள் வீடுகளில் உள்ள அம்பிகை படம் அல்லது விக்ரகத்துக்கு முல்லை, மல்லிகை அல்லது வெண் தாமரை மலர்கள் சமர்ப்பித்து, சாம்பிராணி தூபமிட்டு, நல்லெண்ணெய் தீபமேற்றி, தேங்காய் சாதம், கொண்டைக்கடலை சுண்டல் ஆகியவற்றைப் படைத்து துர்கையை வணங்கலாம்.

    அப்போது துர்கைக்கு உரிய பாடல்களை மனமுருகிப் பாடி துதிக்கலாம். வீட்டில் வழிபட வசதி இல்லாதவர்கள் அன்றைய தினம் அருகில் இருக்கும் சிவாலயம் சென்று அங்கு கோஷ்டத்தில் எழுந்தருளியிருக்கும் துர்கைக்கு எலுமிச்சை தீபமேற்றி (வீட்டில் எலுமிச்சை தீபமேற்றக்கூடாது) செவ்வரளி மாலை - சிவப்பு வஸ்திரம் சாத்தி வழிபடலாம்.

    ராகு கால நேரத்தில் துர்கையை தரிசித்து வழிபடுவது விசேஷம். 

    • இன்று துர்காஷ்டமி.
    • சுவாமிமலை ஸ்ரீ முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு புரட்டாசி-24 (வியாழக்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: சப்தமி காலை 8.06 மணி வரை பிறகு அஷ்டமி

    நட்சத்திரம்: பூராடம் பின்னிரவு 2.09 மணி வரை பிறகு உத்திராடம்

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    எமகண்டம்: காலை 6 மணி முதல் 7.30 மணி வரை

    சூலம்: தெற்கு

    நல்ல நேரம்: காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    இன்று துர்காஷ்டமி. சுவாமிமலை ஸ்ரீ முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். கரூர் தான்தோன்றிமலை ஸ்ரீ கல்யாண வெங்கடேசப் பெருமாள் திருக்கல்யாணம். சதாபிஷேககஸ்நானம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை மற்றும் மைசூர் மண்டபம் எழுந்தருளல். உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் சூர்ணாபிஷேகம். தல்லாகுளம் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் சேஷ வாகனத்தில் சயனத் திருக்கோலம். மதுரை ஸ்ரீ மீனாட்சியம்மன் கொலு மண்டபத்தில் மகிஷாகரமர்த்தினி அலங்காரம். சிருங்கேரி ஸ்ரீ சாரதாபீடம் ஸ்ரீ அம்பாள் ராஜ ராஜேஸ்வரி அலங்கா ரம். திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமி மடத்தில் ஸ்ரீ ராகவேந்திரருக்கு திருமஞ்சனம். தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம். திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சவுமிய நாராயணப் பெருமாளுக்கு திருமஞ்சனம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-மாற்றம்

    ரிஷபம்-உயர்வு

    மிதுனம்-ஜெயம்

    கடகம்-உவகை

    சிம்மம்-முயற்சி

    கன்னி-நன்மை

    துலாம்- புகழ்

    விருச்சிகம்-நிம்மதி

    தனுசு- அனுகூலம்

    மகரம்-நலம்

    கும்பம்-விவேகம்

    மீனம்-ஆர்வம்

    • லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம்.
    • நள்ளிரவு 1.30 மணி வரை 7 மணி நேரம் நடந்தது.

    திருப்பதி:

    திருப்பதி பிரம்மோற்சவ விழாவில் நடைபெறும் உற்சவங்களில் கருட சேவை மிகவும் பிரசித்தி பெற்றது. ஆண்டுதோறும் கருட சேவையின் போது லட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பதியில் குவிந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    வழக்கமாக இரவு 7 மணிக்கு தொடங்கும் கருட சேவை 2 அல்லது 3 மணி நேரத்திற்குள் நிறைவடைந்து விடும். இதனால் பக்தர்கள் முழு திருப்தியுடன் கருட சேவை தரிசிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

    இந்த நிலையில் முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு திருப்பதியில் பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்ய அனைத்து வசதிகளும் செய்ய வேண்டுமென உத்தரவிட்டிருந்தார். இதற்காக திருப்பதி மலையில் பல்வேறு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

    திருப்பதி பிரம்மோற்சவ விழாவில் நேற்று இரவு கருட சேவை நடந்தது. இந்த ஆண்டு முன்கூட்டியே அதாவது மாலை 6.30 மணிக்கு தங்க கருட வாகனத்தில் தங்க வைர நகை அலங்காரத்துடன் ஏழுமலையான் எழுந்தருளினார். 4 லட்சம் பக்தர்கள் மாட வீதிகளில் திரண்டு இருந்தனர்.

    பக்தர்கள் பக்தி பரவசத்துடன் விண்ணை முட்டும் அளவுக்கு கோவிந்தா கோவிந்தா என கோஷங்களை எழுப்பினர். முதலில் ஏழுமலையானை தரிசனம் செய்த பக்தர்கள் மாட வீதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டு வெளியில் தரிசனத்திற்கு காத்திருந்த பக்தர்களை மாடவீதிகளில் அனுமதிக்கப்பட்டனர்.

    இதனால் பக்தர்கள் அனைவரும் சிரமம் இன்றி கருட சேவையை தரிசனம் செய்தனர். கருட சேவை முதல் முறையாக நள்ளிரவு 1.30 மணி வரை 7 மணி நேரம் நடந்தது.

    தேவஸ்தானத்தின் புதிய முயற்சியால் மனமுருக ஏழுமலையானை தரிசித்ததாக பக்தர்கள் தெரிவித்தனர்.

    திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பக்தர்களுக்கு 4 லட்சம் இளநீர் பாட்டில்கள், 3 லட்சம் மோர் பாட்டில்கள் மற்றும் 3 லட்சம் பிஸ்கட் பாக்கெட்டுகள் வழங்கப்பட்டன.

    பிரம்மோற்சவ விழாவின் 6-வது நாளான இன்று காலை ஏழுமலையான் அனுமந்த வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இன்று மாலை தங்க தேரோட்டம் நடக்கிறது.

    திருப்பதியில் நேற்று 82,043 பேர் தரிசனம் செய்தனர். 30,100 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.10 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. இலவச நேரடி தரிசனத்தில் வந்த பக்தர்கள் 20 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    • இன்று சரஸ்வதி ஆவாஹனம்.
    • காஞ்சிபுரம் ஸ்ரீ காமாட்சியம்மன் நவராத்திரி சிறப்பு அலங்காரக் காட்சி.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு புரட்டாசி-23 (புதன்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: சஷ்டி காலை 8.20 மணி வரை பிறகு சப்தமி

    நட்சத்திரம்: மூலம் பின்னிரவு 2.06 மணி வரை பிறகு பூராடம்

    யோகம்: மரண, அமிர்தயோகம்

    ராகுகாலம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    எமகண்டம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    சூலம்: வடக்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    இன்று சரஸ்வதி ஆவாஹனம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம் மதுரை ஸ்ரீ மீனாட்சி சொக்கநாதர், காஞ்சீபுரம் ஸ்ரீ காமாட்சியம்மன் நவராத்திரி சிறப்பு அலங்காரக் காட்சி. தல்லாகுளம் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் ராஜாங்க சேவை. குலசேகரப்பட்டினம் ஸ்ரீ முத்தாரம்மன் பூச்சப்பரத்தில் ஆனந்த நடராஜர் கோலத்துடன் காட்சி. ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ பெரிய பெருமாள் யானை வாகனத்தில் திருவீதியுலா. சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம் ஸ்ரீ அம்பாள் வீணை சாரதா அலங்காரத்தில் காட்சியருளல். மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமி சிறப்பு திருமஞ்சன அலங்கார சேவை. பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்ம மூலவருக்கு திருமஞ்சன சேவை. விருதுநகர் ஸ்ரீ விஸ்வநாதர் அபிஷேகம், அலங்காரம், வழிபாடு.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-நற்செய்தி

    ரிஷபம்-போட்டி

    மிதுனம்-சுகம்

    கடகம்-ஆதரவு

    சிம்மம்-அமைதி

    கன்னி-புகழ்

    துலாம்- உதவி

    விருச்சிகம்-உண்மை

    தனுசு- வெற்றி

    மகரம்-தனம்

    கும்பம்-நிறைவு

    மீனம்-சிறப்பு

    • தீமையை அழித்து நன்மை வெற்றி பெறும் நிகழ்வாக தசரா கருதப்படுகிறது.
    • விஜயதசமி என்ற பெயரிலும், தசரா என்ற பெயரிலும் இந்தியா முழுவதும் கொண்டாடப்படும்.

    இந்தியாவின் பிரசித்தி பெற்ற பண்டிகைகளில் ஒன்றாக தசரா திருவிழா பார்க்கப்படுகிறது. தீமையை அழித்து நன்மை வெற்றி பெறும் நிகழ்வாக இந்த தசரா விழா கருதப்படுகிறது.

    விஜயதசமி என்ற பெயரிலும், தசரா என்ற பெயரிலும் இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் இந்த விழா, முக்கியமான பண்டிகைகளில் ஒன்று.

    இந்தியாவின் தெற்கு, கிழக்கு, வடகிழக்கு என்ற பல மாநிலங்களிலும் மகிஷா சூரனை, துர்க்கை தேவி அழித்த தினமாகவும், தர்மத்தை (நீதியை) மீட்டெடுத்த தினமாகவும், தீமையை நன்மை வெற்றிகொண்ட தினமாகவும் 'தசரா' கொண்டாடப்பட்டாலும், இந்த விழா அந்தந்த இடங்களுக்கு ஏற்ற வகையில் வரலாற்று மற்றும் கலாசார நிகழ்வுகளை பதிவு செய்வதாக இருக்கிறது.

    இங்கே இந்தியா முழுமைக்குமாக உள்ள மாநிலங்களில் தசரா கொண்டாட்டங்களைப் பற்றி பார்க்கலாம்.


    தென்னிந்தியா

    கர்நாடகா மாநிலம் மைசூர் நகரில், 'நாடா ஹப்பா' எனப்படும் மாநில விழாவாக 'தசரா' கொண்டாடப்படுகிறது. இந்த விழாவின்போது மைசூர் அரண்மனை ஒளியூட்டப்படும்.

    அலங்கரிக்கப்பட்ட யானையின் மீது தங்க மண்டபத்தில் சாமுண்டேஸ்வரி தேவியின் சிலை இடம்பெற்று, அது ஊர்வலமாக கொண்டு வரப்படும்.

    அப்போது அந்த ஊர்வலத்தின் முன்பாக, கலாசார நிகழ்ச்சிகள், இசை, நடனம் மற்றும் கண்காட்சியும் இடம் பெறும். அது அந்த நகரின் வாழ்வியலை உயிர்ப்பித்துக் காட்டுவதாக அமையும்.


    தமிழ்நாட்டின் தென்கோடியில் உள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கிறது, குலசேகரன்பட்டினம் என்ற ஊர். இங்குள்ள ஞானமூர்த்தீஸ்வரர் சமேத முத்தாரம்மன் கோவிலில் நடைபெறும் தசரா பெருவிழா மிகவும் பிரசித்திப் பெற்ற தாகும். இது ஒரு கிராமிய விழா போன்று நடைபெறுவதுதான், இதன் சிறப்பாக கருதப்படுகிறது.

    10 நாள் கொண்டாட்டமான இந்த விழாவில், கோவிலுக்கு வரும் பக்தர்கள் பலரும் அம்மனுக்கு விரதம் இருந்து மாலை அணிந்து கொள்வார்கள். ஒவ்வொருவரும் தங்களின் நேர்ச்சைக்கு தகுந்தபடி, ஒவ்வொரு வேடம் அணிந்து கோவிலுக்கு வந்து அம்மனை வழிபாடு செய்வார்கள். அதில் தெய்வங்கள், மனிதர்கள், விலங்குகள், அரக்கர்கள் உள்ளிட்ட வேடங்களும் அடங்கியிருக்கும்.

    தென்னிந்தியாவின் சில பகுதிகளில், அறிவு, இசை மற்றும் கலைகளின் தெய்வமான சரஸ்வதி தேவிக்கு, விஜயதசமி அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இதன் முக்கிய நிகழ்வு 'வித்யாரம்பம்'. இந்த நாளில் பிள்ளைகளின் கற்றல் மற்றும் எழுத்துகளை தொடங்குவதை பலரும் செய்கிறார்கள். இதனால் கல்வியில் அவர்கள் சிறந்து விளங்குவார்கள் என்பது நம்பிக்கையாக இருக்கிறது.

    வித்யாரம்பம் சடங்கிற்காக கோவில்கள் மற்றும் கலாசார மையங்களில் மக்கள் கூடுவார்கள். அங்கு பெற்றோர், தங்களின் குழந்தைகளுக்கு பச்சை அரிசி பரப்பிய தட்டில், தங்கள் மொழியின் முதல் எழுத்தை எழுதவைத்து படிப்பை தொடங்கச் செய்வார்கள்.


    வட இந்தியா

    உத்தரபிரதேசம், டெல்லி, இமாச்சலப் பிரதேசம் போன்ற மாநிலங்களில், தசரா பெருவிழாவானது 'ராமலீலா' என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. 10 நாட்கள் நடைபெறும் இந்த கொண்டாட்ட விழாவானது, ராமாயண காவியத்தை நாடகமாக மக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் நடைபெறுகின்றன.

    ராவணன், மேகநாதன், கும்பகர்ணன் ஆகியோரின் உருவ பொம்மைகளை எரிப்பதுடன் இந்த விழா நிறைவு பெறுகிறது. 10 தலையுடன் செய்யப்பட்ட பிரமாண்டமான ராவணனின் உருவ பொம்மையின் மீது, பலவிதமான வண்ண பட்டாசுகள் சுற்றி அலங்கரிக்கப்பட்டிருக்கும். அம்பின் நுனியில் தீ பற்ற வைத்து, பொம்மையின் மீது எய்துவார்கள்.

    இதில் ராவணனின் உருவ பொம்மை வெடித்துச் சிதறி, வானில் வர்ணஜாலத்தைக் காட்டும். தீமையில் இருந்து கிடைக்கும் விடுதலை பெருநாளாக வடஇந்தியாவில் தசரா கொண்டாடப்படுகிறது.


    கிழக்கு இந்தியா

    மேற்கு வங்காளம், அசாம் மற்றும் ஒடிசாவில், 10 நாட்கள் நடைபெறும் துர்க்கா பூஜையின் நிறைவு நாளாக 'தசரா' பார்க்கப்படுகிறது. துர்க்கா தேவியின் பிரமாண்டமான சிலைகள், அலங்கரிக்கப்பட்ட பந்தல்களில் வைத்து 10 நாட்களும் வணங்கப்படும்.

    10-வது நாளில் இந்த சிலைகள் அங்குள்ள ஆறுகள் அல்லது பிற நீர்நிலைகளில் கரைக்கப்படுகின்றன. இந்த விழாவில் பாடுதல், நடனம் ஆகியவையும் அடங்கும்.


    மேற்கு இந்தியா

    மகாராஷ்டிராவில் நடைபெறும் தசரா விழாவானது, செழிப்புக்கான தெய்வத்தின் ஆசீர்வாதமாக பார்க்கப்படுகிறது. மக்கள் நல்லெண்ணத்தின் அடையாளமாக, தங்கத்தை அடையாளப்படுத்தும் 'ஆப்டா' இலைகளை தங்களுக்குள் பரிமாறிக்கொள்வார்கள்.

    குஜராத்தில் நடைபெறும் தசரா பெருவிழா, உற்சாகத்தின் உச்சகட்டமாக அமையும். இந்த விழாவில் கர்பா, தாண்டியா போன்ற நடனங்கள் வண்ணமயமான உடைகளுடன், துடிப்பான ஆடலும் அமைந்திருக்கும்.


    வடகிழக்கு இந்தியா

    திரிபுரா போன்ற மாநிலங்களில், துர்க்கா பூஜையின் முடிவைக் குறிக்கும் வகையில் ஊர்வலங்கள் மற்றும் கலாசார நிகழ்வுகளுடன் தசரா கொண்டாடப்படுகிறது. துர்க்கை சிலைகள் கரைக்கும் நிகழ்ச்சி மிகுந்த பக்தியுடனும், உற்சாகத்துடனும் நடத்தப்படுகிறது.

    • கல்விக்கான தெய்வமாக சரஸ்வதி வணங்கப்படுகிறார்.
    • புத்திக்கூர்மை, சொல் வன்மை, கலைகளில் வெற்றி கிடைக்கும் என்பது நம்பிக்கை.

    இந்து சமயத்தின் கல்விக்கான தெய்வமாக சரஸ்வதி வணங்கப்படுகிறார். முப்பெரும் தேவியர் என்று அழைக்கப்படுபவர்களில் ஒருவரான சரஸ்வதி, கல்வியின் அதிபதியாக கருதப்படுகிறார். இந்த தேவியை வணங்குபவர்களுக்கு, கல்வியில் நாட்டம் உண்டாகும்.

    புத்திக்கூர்மை, சொல் வன்மை, கலைகளில் வெற்றி கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. வருகிற 11-10-2024 (வெள்ளிக்கிழமை) சரஸ்வதி பூஜை கொண்டாடப்பட உள்ள நிலையில், கல்வியில் சிறந்து விளங்க வழிபட வேண்டிய சில ஆலயங்கள் உங்களுக்காக...


    பிரம்ம வித்யாம்பிகை

    திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில், 'பிரம்ம வித்யாம்பிகை' என்ற பெயரில் அம்பாள் வீற்றிருக்கிறார். இந்த அன்னையை, சரஸ்வதியின் வடிவமாகவே கருதுகிறார்கள்.

    நவக்கிரகங்களில் மனிதர்களது புத்தியை இயக்கும் முக்கிய கிரகம், புதன். ஜாதக ரீதியாக புதன் அமைந்திருப்பதைப் பொறுத்தே கல்வி, ஞாபக சக்தி மற்றும் கற்பனை வளம் ஆகியவை தீர்மானிக்கப்படுகின்றன.

    திருவெண்காடு தலத்தில் புதன் பகவானுக்கு தனி சன்னிதி உள்ளது. எனவே இந்த கோவிலில் வழிபடுவது, கல்வி வளம் அளிப்பதுடன் புத்தியையும் வலுவாக மாற்றுகிறது. சீர்காழியில் இருந்து 17 கி.மீ. தொலைவில் உள்ளது இந்த ஆலயம்.


    ஓலைச் சுவடியுடன் சரஸ்வதி

    திருச்சியின் புறநகர்ப்பகுதியில் உத்தமர்கோவில் என்ற கிராமம் இருக்கிறது. இங்கு பிச்சாண்டவர் கோவில் அமைந்துள்ளது. சிவபெருமான், பிச்சாடனராக வந்து தோஷம் நீங்கப்பெற்ற இடம் என்பதால் இவ்வாறு அழைக்கப்படுகிறது.

    பிரம்மனுக்கு பூலோகத்தில் கோவில்கள் இல்லை என்பது பலரும் அறிந்த விஷயம்தான். அதே நேரம் தனி சன்னிதிகளில் பிரம்மன் வீற்றிருக்கும் ஆலயங்கள் பல உள்ளன. அப்படி ஒரு ஆலயம்தான், பிச்சாண்டவர் கோவில்.

    பூவுலகிலேயே தங்கியிருக்க வேண்டும் என்ற பிரம்மனின் ஆசையை, இத்தல இறைவன் நிறைவேற்றியதாக சொல்லப்படுகிறது. இங்கு பிரம்மா, சரஸ்வதிக்கு சன்னிதிகள் உள்ளன.

    இத்தலத்தில் `ஞான சரஸ்வதி' என்ற பெயரில் வணங்கப்படும் சரஸ்வதியின் கையில் வீணை இல்லை. ஓலைச் சுவடியும், ஜெப மாலையும் மட்டுமே உள்ளன.


    வீணை இல்லாத சரஸ்வதி

    திருமறைக்காடு என்னும் வேதாரண்யத்தில் உள்ளது வேதாரண்யேஸ்வரர் திருக்கோவில். இத்தல இறைவனை, நான்கு வேதங்களும் வணங்கியதாக ஐதீகம். இவ்வாலய அம்பிகையின் திரு நாமம், 'யாழைப் பழித்த மொழியம்மை' என்பதாகும்.

    இவ்வாலய பிரகாரத்தில் பிரமாண்ட தோற்றத்தில் சரஸ்வதி வீற்றிருக்கிறார். இந்த சரஸ்வதியின் கையில் வீணை இல்லை. சுவடியை மட்டும் கையில் ஏந்தியிருக்கிறார். இவ்வாலய அம்மனின் குரல், யாழை விட மிகவும் இனிமையானது என்பதால், இங்கே சரஸ்வதி வீணை இன்றி இருப்பதாக சொல்லப்படுகிறது.

    இவ்வாலயத்திலும் கல்வி கேள்விகளில், கலைகளில் வெற்றி பெற நினைப்பவர்கள் வழிபாடு செய்யலாம். திருத்துறைப்பூண்டியில் இருந்து 35 கி.மீ. தொலைவில் இக்கோவில் அமைந்துள்ளது.


    ஹயக்ரீவரும்.. சரஸ்வதியும்..

    திண்டுக்கல்லில் இருந்து வேடசந்தூர் செல்லும் சாலையில் சுமார் 9 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, தாடிக்கொம்பு திருத்தலம். இங்கு சவுந்தரராஜப் பெருமாள் அருள்பாலிக்கிறார்.

    மண்டூக மகரிஷி தனது சாபம் அகல தவம் செய்த திருத்தலம் இதுவாகும். இங்கே கல்வி அருளும் தெய்வங்களான ஹயக்ரீவர், சரஸ்வதி ஆகியோருக்குத் தனித்தனி சன்னிதிகள் இருக்கின்றன.

    திருவோண நட்சத்திரத்தில் ஹயக்ரீவருக்கு தேன் அபிஷேகம் செய்தும், தேங்காய், நாட்டுச் சர்க்கரை, நெய் கலந்த நைவேத்தியத்தை படைத்தும், ஏலக்காய் மாலை அணிவித்தும் வழிபடுவது, சிறப்பான பலனைத் தரும். சரஸ்வதி பூஜையன்று இத்தல சரஸ்வதி தேவிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

    • 10-ந்தேதி துர்க்காஷ்டமி.
    • 12-ந்தேதி குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் சூரசம்கார பெருவிழா.

    3-ந்தேதி (செவ்வாய்)

    * சஷ்டி விரதம்.

    * திருப்பதி ஏழுமலையான் மோகினி அலங்காரம்.

    * கரூர் தான்தோன்றி கல்யாண வேங்கடேசப் பெருமாள் வெள்ளி சேஷ வாகனத்தில் பவனி.

    * குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் சிம்ம வாகனத்தில் பவனி.

    * சமநோக்கு நாள்.

    9-ந்தேதி (புதன்)

    * திருப்பதி ஏழுமலையான் அனுமன் வாகனத்தில் பவனி.

    * திருவில்லிபுத்தூர் பெரிய பெருமாள், உப்பிலியப்பன் கோவில் சீனிவாசப் பெருமாள் யானை வாகனத்தில் திருவீதி உலா.

    * சிருங்கேரி சாரதாம்பாள் ராஜராஜேஸ்வரி அலங்காரம்.

    * கீழ்நோக்கு நாள்.

    10-ந்தேதி (வியாழன்)

    * துர்க்காஷ்டமி.

    * மதுரை பிரசன்ள வேங்கடேசப் பெருமாள் சேஷ வாகனத்தில் பவனி.

    * திருவில்லிபுத்தூர் பெரிய பெருமாள் கண்ணாடி சப்பரத்தில் உலா.

    * மதுரை மீனாட்சி அம்மன் கொலு மண்டபத்தில் மகிசாசூரமர்த் தினி அலங்காரம்.

    * கீழ்நோக்கு நாள்.

    11-ந்தேதி (வெள்ளி)

    * சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை, மகாநவமி.

    * மதுரை பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் வெண்ணெய் தாழி சேவை.

    * குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் அன்ன வாகனத்தில் கலைமகள் கோலத்துடன் காட்சி.

    * மதுரை மீனாட்சி அம்மன் கொலுமண்டபத்தில் சிவபூஜை.

    * மேல்நோக்கு நாள்.

    12-ந்தேதி (சனி)

    * விஜயதசமி.

    * திருப்பதி ஏழுமலையான் பல்லக்கில் உற்சவம்.

    * குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் சூரசம்கார பெருவிழா.

    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் மாடவீதி உலா.

    * மேல்நோக்கு நாள்,

    13-ந்தேதி (ஞாயிறு)

    * சர்வ ஏகாதசி.

    * கரூர் தான்தோன்றி கல்யாண வேங்கடேசப் பெருமாள் கஜலட்சுமி வாகனத்தில் பவனி.

    * திருவரங்கம் நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி அலங்கார திருமஞ்சனம்.

    * திருவில்லிபுத்தூர் ஆண்டாள், ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.

    * மேல்நோக்கு நாள்.

    14-ந்தேதி (திங்கள்)

    * வைஷ்ணவ ஏகாதசி.

    * திருவில்லிபுத்தூர் பெரிய பெருமாள் தீர்த்தவாரி.

    * சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.

    * திருத்தணி முருகப்பெருமான் பால் அபிஷேகம்.

    * மேல்நோக்கு நாள்.

    • இன்று சஷ்டி விரதம்.
    • திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் மோகினி அலங்காரம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு புரட்டாசி-22 (செவ்வாய்க்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: பஞ்சமி காலை 8.06 மணி வரை பிறகு சஷ்டி

    நட்சத்திரம்: கேட்டை நள்ளிரவு 1.35 மணி வரை பிறகு மூலம்

    யோகம்: சித்த, அமிர்தயோகம்

    ராகுகாலம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    சூலம்: வடக்கு

    நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    இன்று சஷ்டி விரதம். சுவாமிமலை முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். குலசேகரப் பட்டினம் ஸ்ரீ முத்தாரம்மன் சிம்ம வாகனத்தில் மகிஷாசுரமர்த்தினி திருக்கோலத்துடன் காட்சி. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் மோகினி அலங்காரம். கரூர் தான்தோன்றிமலை ஸ்ரீ கல்யாண வேங்கடேசப் பெருமாள் வெள்ளி சேஷ வாகனத்தில் பவனி. சிருங்கேரி ஸ்ரீ சாரதாபீடம் ஸ்ரீ அம்பாள் மோகினி அலங்கார தரிசனம். திருநறையூர் ஸ்ரீ சித்தநாதீஸ்வரர் கோவிலில் ஸ்ரீ சண்முகருக்கு சத்ரு சம்கார அர்ச்சனை. திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகர் கோவில்களில் காலை சிறப்பு அபிஷேகம், அலங்காரம். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதி யம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். திருச்செங்காட் டங்குடி ஸ்ரீ உத்திரபதீஸ்வரர் அபிஷேகம், அலங்காரம், வழிபாடு.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-பக்தி

    ரிஷபம்-நன்மை

    மிதுனம்-சிந்தனை

    கடகம்-பரிசு

    சிம்மம்-உற்சாகம்

    கன்னி-பணிவு

    துலாம்- வெற்றி

    விருச்சிகம்-உயர்வு

    தனுசு- லாபம்

    மகரம்-உதவி

    கும்பம்-நற்சொல்

    மீனம்-புகழ்

    ×