என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Anjaneya shrine"

    • பூஜைக்காக வைக்கப்பட்டிருந்த 10க்கும் மேற்பட்ட தேங்காய்களை தனது பற்களால் கடித்து உறித்தார்.
    • பக்தர்கள் ஆச்சரியத்துடன் பார்வையிட்டதோடு தங்கள் செல்போன்களில் படம் பிடித்து அந்த வடமாநில இளைஞரை பயபக்தியுடன் வழிபட்டனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் பொங்கலூர் ஊராட்சிக்குட்பட்ட அலகுமலை கோவில் பிரசித்தி பெற்ற முருகர் தலமாக இருந்து வருகிறது. கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு தினந்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றது. கந்த சஷ்டி விழாவின் நான்காம் நாளான நேற்று காரிய சித்தி ஆஞ்சநேயர் சந்நிதி முன்பு வட மாநில இளைஞர் ஒருவர் தரிசனம் செய்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கு அருள் ஏற்பட்ட நிலையில் ஆஞ்சநேயர் போலவே பாவனை செய்து ஆஞ்சநேயர் சிலையிடம் இந்தியில் பேசியவாறு பூஜைக்காக வைக்கப்பட்டிருந்த 10க்கும் மேற்பட்ட தேங்காய்களை தனது பற்களால் கடித்து உறித்தார்.

    அனுமன் போலவே பாவனை செய்து அவர் தேங்காய்களை பற்களால் உறித்ததை கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் ஆச்சரியத்துடன் பார்வையிட்டதோடு தங்கள் செல்போன்களில் படம் பிடித்து அந்த வடமாநில இளைஞரை பயபக்தியுடன் வழிபட்டனர். சிறிது நேரத்திற்கு பின்பு அந்த இளைஞர் தன்னை ஆசுவாசப்படுத்தி கொண்டு இயல்பு நிலைக்கு திரும்பினார். இதனால் கோவில் வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. ஆஞ்சநேயர் போலவே பாவனை செய்து தேங்காயை பற்களால் உறித்து வழிபட்ட பக்தர்.

    • காதணியுடன் பிறந்த அனுமன்.
    • சூரியனின் சீடன் அனுமன்.

    காதணியுடன் பிறந்த அனுமன்

    மகாபாரதத்தில் கவச குண்டலங்களுடன் பிறந்தவர், கர்ணன். அதே போல் ராமாயணத்தில் காதில் அணிகலனுடன் பிறந்தவர் அனுமன். கிஷ்கிந்தாவின் இளவரசனாக இருந்த வாலி, பிற்காலத்தில் அஞ்சனைக்கு பிறக்கப் போகும் பிள்ளையால் தனக்கு ஆபத்து வரப்போகிறது என்பதை ஜோதிட வல்லுனர்களிடம் இருந்து அறிந்தான்.


    தன் எதிரியை கருவிலேயே அழிக்க நினைத்த வாலி, தங்கம், வெள்ளி, தாமிரம், இரும்பு உள்ளிட்ட பல உலோகங்களை சேர்த்து அம்பு ஒன்றை தயார் செய்தான். அதனை உறக்கத்தில் இருந்த அஞ்சனையின் வயிற்றில் எய்தான். ஆனால் அஞ்சனையின் வயிற்றில் இருந்த கரு, சிவபெருமானின் அம்சம் அல்லவா?.

    அந்த முக்கண்ணனின் கோபப் பார்வையில் அம்பு உருகி, அஞ்சனைக்கும் வயிற்றில் இருந்த கருவிற்கும் எந்த சேதத்தையும் ஏற்படுத்தவில்லை. அதோடு உருகிய அம்பு, அற்புத அணிகலன்களாக மாறி, கருவில் இருந்த குழந்தையின் காதுகளை அலங்கரித்தது. இதனால் அனுமன் பிறந்தபோதே, காதணிகளுடன் பிறந்ததாக புராணம் கூறுகின்றது.


    சூரியனின் சீடன்

    சிவபெருமானின் அவதாரமாக மண்ணில் தோன்றிய அனுமனுக்கு, குருவாக இருந்து கல்வி போதித்தவர் சூரிய பகவான். அதற்கு நன்றி செலுத்தும் விதமாக, "குருவே உங்களுக்கு என்ன குரு தட்சணை தர வேண்டும்?" என்று கேட்டார். அப்போது சூரியன், "வரும் காலத்தில் தன்னுடைய மகன் சுக்ரீவனுக்கு ஆலோசகராக இருந்து, அவனை வழிநடத்திச் செல்ல வேண்டும்" என்றார்.

    அதன்படிதான், சுக்ரீவன் தன்னுடைய அண்ணன் வாலியால் விரட்டிவிடப்பட்ட போதும், அவனுக்கு அருகிலேயே இருந்து அவனுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கினார், அனுமன். அவர்தான் ராமபிரான் மூலமாக வாலிக்கும், சுக்ரீவனுக்கும் இருந்த பகையை முடிவுக்கு கொண்டு வந்து, அவனை வானர அரசனாக்கினார்.


    ராமாயணம்-மகாபாரதம்

    ராமாயணத்தில் ராமருடன் மட்டுமல்லாது, மகா பாரதத்தில் கிருஷ்ணருடனும் பழகியவர், அனுமன். கிருஷ்ணர் கேட்டுக் கொண்டதற்கிணங்க, குருசேத்திரப் போரில் அர்ச்சுனனின் தேரின் மீது கொடியாக வீற்றிருந்தது அனுமனே, அந்த வகையில் அனுமனின் முன்பாகத்தான். கீதா உபதேசத்தை அர்ச்சுனனுக்கு கிருஷ்ண பரமாத்மா கூறினார்.

    கிருஷ்ணருக்கும், அனுமனுக்கும் பல ஒற்றுமைகள் உண்டு. மகாபாரதத்தில் நடந்த போரின் போது, அர்ச்சுனனின் சாரதியாக கிருஷ்ணர் இருந்தார். அதேபோல் அவனது தேரில் கொடியாக அனுமன் இருந்தார். மகாபாரதத்தில் பாண்டவர்களுக்காக, கவுரவர்களிடம் கிருஷ்ணர் தூது சென்றார்.

    ராமாயணத்தில் ராமருக்காக, ராவணனிடம் தூது சென்றவர், அனுமன். கிருஷ்ணர் கோவர்த்தன மலையை தூக்கி, கோகுல மக்களை காத்து நின்றார். அனுமன், சஞ்சீவி மலையை தூக்கி வந்து லட்சுமணனைக் காத்தார். எல்லாவற்றுக்கும் மேலாக விஸ்வரூபதரிசனம் தந்த தெய்வங்களின் பட்டியலில் கிருஷ்ணருக்கும், அனுமனுக்கும் இடமுண்டு.


    சிறிய திருவடி

    மகாபாரதத்தில் வரும் கிருஷ்ணன்- அர்ச்சுனன் நட்பை விட உயர்வானது, ராமாயணத்தில் ராமருக்கும், அனுமனுக்கும் உள்ள பந்தம். மகாபாரதத்தில் அர்ச்சுனனுக்காக கடவுளான கிருஷ்ணர் துணை நின்றார். ஆனால் ராமாயணத்தில் கடவுளான ராமருக்காக எந்த எதிர்பார்ப்பும் இல்லாது சேவை புரிந்தவர் அனுமன்.

    இப்படிப்பட்ட பெருமைக்குரியவர் என்பதால் தான் மகாவிஷ்ணு, கருடனுக்கு அடுத்தபடியாக தன்னுடைய வாகனமாக அனுமனையும் ஏற்றுக்கொண்டார். அதேசமயம் கருடனுக்கு இல்லாத பெருமை அனுமனுக்கு உண்டு.

    அது பெரிய திருவடியான கருடன் பெரும்பாலும் பெருமாள் கோவிலில் தனி சன்னிதியில் அல்லது பெருமாளுக்கு எதிரில்தான் அருள் பாலிப்பார். ஆனால் அனுமன் பெருமாள் கோவில்களில் இருந்தாலும், அவருக்கென்று தனியாகவும் பல ஆலயங்கள் எழுப்பப்பட்டு இருக்கின்றன. அதற்கு அவரது தியாகமும், தன்னலமற்ற இறை சேவையும்தான் காரணம்.

    ×