என் மலர்
வழிபாடு
- இன்று சங்கடஹர சதுர்த்தி.
- மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமிக்கு திருமஞ்சனம்.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு மார்கழி-3 (புதன்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: திருதியை நண்பகல் 12.04 மணி வரை பிறகு சதுர்த்தி
நட்சத்திரம்: பூரம் நாளை விடியற்காலை 4.09 மணி வரை பிறகு ஆயில்யம்
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
எமகண்டம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
சூலம்: வடக்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை
இன்று சங்கடஹர சதுர்த்தி. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்ம மூலவருக்கு திருமஞ்சனம். பிள்ளையார்பட்டி ஸ்ரீ கற்பக விநாயகர், திருநாரையூர் ஸ்ரீ பொள்ளாப் பிள்ளையார், திருவலஞ்சுழி ஸ்ரீ சுவேத விநாயகர், திருச்சி உச்சிப்பிள்ளையார் ஸ்ரீ மாணிக்க விநாயகர், மதுரை ஸ்ரீ முக்குறுணி பிள்ளையார், உப்பூர் ஸ்ரீ வெயிலுகந்த விநாயகப் பெருமான் கோவில்களில் சிறப்பு ஹோமம். மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமிக்கு திருமஞ்சனம். விருதுநகர் ஸ்ரீ விஸ்வநாதருக்கு அபிஷேகம். ஸ்ரீ ரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி புறப்பாடு. திருப்பெருந்துறை ஸ்ரீ மாணிக்க வாசகருக்கு அபிஷேகம். திருத்தணி முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம். ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-வெற்றி
ரிஷபம்-பாராட்டு
மிதுனம்-ஆர்வம்
கடகம்-உழைப்பு
சிம்மம்-தேர்ச்சி
கன்னி-நன்மை
துலாம்- உதவி
விருச்சிகம்-ஆக்கம்
தனுசு- நலம்
மகரம்-ஆதாயம்
கும்பம்-கவனம்
மீனம்-இன்பம்
- தென்னிந்தியா விலேயே உயர்ந்த ராஜகோபுரம் கொண்டது.
- நெல் சேமிப்பு கிடங்கு சக்கரத்தாழ்வார் சன்னிதிக்கு அருகில் இருக்கின்றது.
* 108 வைணவ தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம்' என்று அழைக்கப்படுவதுமான திருவரங்கம் அரங்கநாதர் கோவில், தென்னிந்தியா விலேயே உயர்ந்த ராஜகோபுரம் கொண்டது.
* 'அரங்கம்' என்றால் 'தீவு' என்று பொருள். காவிரி ஆற்றுக்கு நடுவே இருக்கும் தீவாகிய அரங்கத்தில் இறைவன் குடியிருப்பதால் இதை, திருவரங்கம்' என்றும், இத்தலத்தில் அருளும் பெருமாளை அரங்கநாதன் எனவும், தாயாரை அரங்கநாயகி என்றும் அழைக்கிறார்கள்.

* இக்கோவிலில் 20 அடி விட்டமும், 30 அடி உயர மும் கொண்ட நெல் சேமிப்பு கிடங்கு சக்கரத்தாழ்வார் சன்னிதிக்கு அருகில் இருக்கின்றது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அமைந்த இந்த நெல் சேமிப்பு கிடங்கு வட்ட வடிவம் கொண்டவை. மொத்தமாக 1500 டன் அளவிலான நெல்லை இதில் சேமிக்க முடியும். இதில் எந்த காலத்திலும் நெல் குறைந்து பற்றாக்குறை ஏற்பட்டதில்லை. அதேபோல, எவ்வளவு நெல் கொட்டினாலும் அதை ஏற்றுக்கொள்ளும் தன்மையை உடையது இந்த சேமிப்பு கிடங்கு.
* எல்லா கோவில்களிலும் உள்ள கொடிமரங்கள். கல் மற்றும் மரத்தால் செய்யப்பட்டிருப்பதால் அவை அசையாது. ஆனால் திருவரங்கத்தில் உள்ள ரங்க விலாஸ் மண்டபத்தின் அருகில் இருக்கும் கொடி மரத்தை வணங்கிவிட்டு மேலே பார்த்தால், அது அசைவது போல தோன்றும். அப்படி அசைவது போலத் தோன்றினால், நாம் வேண்டியது நிச்சயம் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.

* ராமானுஜர் தனது 120-வது வயதில் இயற்கை எய்தினார். பொதுவாக, வைணவ சம்பிரதாயப்படி வைணவ பதவி அடைந்த துறவிகளை எரியூட்ட மாட்டார்கள். அதற்கு பதில் உடல் பள்ளியூட்டப்படும். அதாவது, சமாதியில் அமரவைத்து மூடப்படும்.
அதேபோல ராமனுஜரின் உடல் திருவரங்கத்தின் வசந்த மண்டபத்தில் பள்ளிப்படுத்தப்பட்டுள்ளது. அங்கே இருக்கும் ராமானுஜரின் உடல் இன்றும் உயிரோட்டத்துடன் காட்சியளிக்கிறது. ராமானுஜரின் உடல் பச்சைக்கற்பூரம் மற்றும் குங்குமத்தால் செய்யப்பட்ட கலவையால் மூடப்பட்டுள்ளது. 900 ஆண்டுகள் கடந்தும் ராமானுஜரின் உடல் அப்படியே காட்சித்தருவது அதிசயமாகும்.
- 18-ந்தேதி திருவைகுண்டம் கள்ளபிரானுக்கு பால் அபிஷேகம்.
- 20-ந்தேதி திருத்தணி முருகப் பெருமான் கிளி வாகன சேவை.
17-ந்தேதி (செவ்வாய்)
* சுவாமிமலை முருகப் பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.
* திருத்தணி முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம்.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஆண்டாளுக்கு அலங்கார திருமஞ்சனம்.
* திருப்பதி சமீபம் மங்காபுரம் சீனிவாசப் பெருமாள் புறப்பாடு.
* சமநோக்கு நாள்.
18-ந்தேதி (புதன்)
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்மருக்கு திருமஞ்சனம்.
* திருமயம் சத்திய மூர்த்தி புறப்பாடு.
* திருவைகுண்டம் கள்ளபிரானுக்கு பால் அபிஷேகம்.
* மேல்நோக்கு நாள்.
19-ந்தேதி (வியாழன்)
* சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைர வேல் தரிசனம்.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ராமருக்கு திருமஞ்சனம்.
* திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை.
* பெருஞ்சேரி வாகீசுவரர் புறப்பாடு.
* கீழ்நோக்கு நாள்.
20-ந்தேதி (வெள்ளி)
* சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.
* ராமேஸ்வரம் பர்வத வர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி தங்கப் பல்லக்கில் புறப்பாடு
* திருமாலிருஞ்சோலை கள்ளழகர் கோவிலில் சுந்தரவல்லி தாயார் புறப்பாடு.
* திருத்தணி முருகப் பெருமான் கிளி வாகன சேவை.
* கீழ்நோக்கு நாள்.
21-ந் தேதி (சனி)
* மன்னார்குடி ராஜ கோபால சுவாமி, திருச்சேறை சாரநாதப் பெருமாள், திருஇந்துளூர் பரிமள ரெங்கராஜர் தலங்களில் அலங்கார திருமஞ்சனம்.
* திருவைகுண்டம் கள்ளபிரானுக்கு பால் அபிஷேகம்.
* கீழ்நோக்கு நாள்.
22-ந்தேதி (ஞாயிறு)
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம்.
* திருத்தணி முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்.
* கீழ்த்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு.
* கீழ்நோக்கு நாள்.
23-ந்தேதி (திங்கள்)
* மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் சகல ஜீவகோடிகளுக்கு படியளந்து அருளிய லீலை.
* சங்கரன் கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் மூலவருக்கு அலங்கார திருமஞ்சனம்.
* மேல்நோக்கு நாள்
- நம்மை உயரச் செய்கின்ற பாவை நோன்பிற்கான வழிமுறைகளைக் கேளுங்கள்.
- அம்பலத்துப் பெருமானின் மலர்பாதங்களை காணும் பாக்கியம் நமக்கு கிடைத்திருக்கிறது.
திருப்பாவை
பாடல்:
வையகத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ! பாற்கடலுள்
பையத் துயின்ற பரமன் அடி பாடி
நெய்யுண்ணோம்; பாலுண்ணோம்; நாட்காலை நீராடி
மையிட்டெழுதோம்; மலரிட்டு நாம் முடியோம்;
செய்யாதன செய்யோம்; தீக்குறளைச்
சென்றோதோம்;
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யுமா றெண்ணி உகந்தேலோ ரெம்பாவாய்.
விளக்கம்:
கண்ணன் வாழ்ந்த காலத்தில் அவனுடன் வாழும் பேறுபெற்ற மங்கையரே! நம்மை உயரச் செய்கின்ற பாவை நோன்பிற்கான வழிமுறைகளைக் கேளுங்கள்! நோன்பின் போது கண்களுக்கு மையிட்டும், கூந்தலில் பூச்சூடியும் அழகுபடுத்திக் கொள்ளாமல் இருப்போம். செய்யக்கூடாதவை என்று பெரியோர்களால் விலக்கப்பட்டவற்றை செய்யாது இருப்போம். பிறரைப் பற்றி புறங்கூறுவதை விட்டு விடுவோம். பாற்கடலில் துயில்கொள்கின்ற பரந்தாமனின் திருவடிகளை போற்றிப் பாடியபடி, வேண்டா வெறுப்பாய் கட்டாயத்தினால் நோன்பு நோற்காமல், மிகுந்த மகிழ்ச்சியுடன் அதிகாலையில் நீராடி கர்வம் இன்றி தானமும், தருமமும் செய்வோம்.
திருவெம்பாவை
பாடல்:
பாசம் பரஞ்சோதி கென்பாய் இராப்பகல்நாம்
பேசும்போ தெப்போதிப் போதார் அமளிக்கே
நேசமும் வைத்தனையோ? நேரிழையாய்!
நேரிழையீர்!
சீசீ இவையும் சிலவோ? விளையாடி
ஏசும் இடமீதோ? விண்ணோர்கள் ஏத்துதற்குக்
கூசும் மலர்பாதம் தந்தருள வந்தருளும்
தேசன் சிவலோகன் தில்லைச்சிற் றம்பலத்துள்
ஈசனார்க் கன்பர்யாம் ஆரேலோர் எம்பாவாய்!
விளக்கம் :
பகலும், இரவும் நாம் பேசும்போதெல்லாம், உன் அன்பெல்லாம் அந்த பரமனுக்கே உரியது என்பாய். இப்போது மலர்கள் தூவப்பட்ட படுக்கையின் மீது ஆசை கொண்டு விட்டாய் போலும்! (உறக்கத்தில் உள்ள பெண்). "சீசீ! நீங்கள் விளையாட்டாக ஏசுவதற்கு ஏற்ற இடம் இதுதானோ?!". (மற்ற பெண்கள்) "விண்ணுலகத் தேவர்களின் கண்களையும் கூசச் செய்கின்றதில்லை அம்பலத்துப் பெருமானின் மலர்பாதங்களை காணும் பாக்கியம் நமக்கு கிடைத்திருக்கிறது. நம் இல்லம் தேடி வந்து அருளும் இறைவனை நாம் நாடிச் செல்ல வேண்டாமா? பெண்ணே எழுந்திரு".
- பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு.
- ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ஆண்டாள் மூலவருக்கு திருமஞ்சன சேவை.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு மார்கழி-2 (செவ்வாய்க்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: துவிதியை நண்பகல் 1.11 மணி வரை பிறகு திருதியை
நட்சத்திரம்: புனர்பூசம் பின்னிரவு 3.31 மணி வரை பிறகு பூசம்
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
சூலம்: வடக்கு
நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ஆண்டாள் மூலவருக்கு திருமஞ்சன சேவை. சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். திருத்தணி முருகப்பெருமான் பால் அபிஷேகம். பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். ஸ்ரீ பெரும்புதூர் ஸ்ரீமணவாள மாமுனிகள் புறப்பாடு. ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகப் பெருமான் அபிஷேகம், அலங்காரம். திருநறை யூர் ஸ்ரீ சித்தநாதீசுவரர் கோவிலில் ஸ்ரீ சண்முகருக்கு சத்ரு சம்ஹார அர்ச்சனை. திருமா லிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் புறப்பாடு. வடபழனி, குன்றத்தூர், கந்தக்கோட்டம், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் காலை சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-உயர்வு
ரிஷபம்-உழைப்பு
மிதுனம்-அன்பு
கடகம்-பொறுமை
சிம்மம்-சுகம்
கன்னி-வரவு
துலாம்- முயற்சி
விருச்சிகம்-புகழ்
தனுசு- ஊக்கம்
மகரம்-நற்செயல்
கும்பம்-பயணம்
மீனம்-பாராட்டு
- மார்கழி மாதம்.. நிலவு பூரணமாக பிரகாசிக்கின்ற நல்ல நாள் இது.
- முதலும் முடிவும் இல்லாத சோதி சொரூபமாய் நின்ற சிவபெருமானைப் போற்றி.
திருப்பாவை
பாடல்:
மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்;
நீராடும் போதுவீர்! போதுமினோ நேரிழையீர்!
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்,
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்,
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்,
பாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய்.
விளக்கம்:
மார்கழி மாதம்.. நிலவு பூரணமாக பிரகாசிக்கின்ற நல்ல நாள் இது. அழகிய ஆபரணங்களை அணிந்த செல்லச் சிறுமிகளே, நீராடப் போகலாம் வாருங்கள். கூர்மையான வேலை ஏந்திப் போர்புரியும் நந்தகோபனின் மகனும், கண்ணனுடைய விளையாட்டுகளை அருகில் இருந்து காணும் பேறு பெற்ற அழகிய கண்களைக் கொண்ட யசோதையின் இளஞ்சிங்கம் போன்றவனும், மேகத்தின் நீல நிறம் கொண்டவனும், ஒளி மிகுந்த சந்திரன் போன்ற முகம் கொண்டும் விளங்கும் நாராயணன், இந்த பாவை நோன்பை நோற்றால், நமக்கு பறை வாத்தியத்தைத் தருவான். நோன்பு வெற்றி பெற்றால் ஊரும். நாடும் நலம்பெறும். உலகத்தவர் நம்மை புகழ்வார்கள், வாருங்கள்.
திருவெம்பாவை
பாடல்
ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் சோதியை
யாம்பாடக் கேட்டேயும் வாள்தடங்கண்
மாதே! வளருதியோ? வன்செவியோ நின்செவிதான்?
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய
வாழ்த்தொலி போய்
வீதிவாய்க் கேட்டதுமே விம்மி விம்மி மெய்மறந்து
போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டிங்கன்
ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னே! என்னே!'
ஈதே எந்தோழி பரிசேலோர் எம்பாவாய்.
விளக்கம்:
வாள் போல ஒளி வீசும் கண்களையுடைய பெண்ணே.. முதலும் முடிவும் இல்லாத சோதி சொரூபமாய் நின்ற சிவபெருமானைப் போற்றி, நாங்கள் பாடுவதைக் கேட்டபின்னும் நீ உறங்கிக் கொண்டிருக்கிறாயே! உன் காதுகள் அவ்வளவு உணர்ச்சியற்றுப் போய்விட்டதா? அந்த மகாதேவனின் பாதக் கமலங்களைப் போற்றி நாங்கள் பாடியதை வீதியில் கேட்டதுமே, ஒருத்தி பூக்கள் தூவிய படுக்கையில் இருந்து புரண்டு எழுந்தாள். நீயோ எந்த அசைவும் இன்றி படுத்துக் கிடக்கிறாயே! எமது கண்ணின் பாவை போன்ற பெண்ணே! இது என்ன அதிசயம்?
- சகல பெருமாள் கோவில்களிலும் திருப்பாவை, திருவெம்பாவை தொடக்கம்.
- திருவள்ளூர் ஸ்ரீ வீரராகவப் பெருமாள் புறப்பாடு.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு மார்கழி-1 (திங்கட்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: பிரதமை நண்பகல் 1.54 மணி வரை பிறகு துவிதியை
நட்சத்திரம்: திருவாதிரை பின்னிரவு 3.17 மணி வரை பிறகு புனர்பூசம்
யோகம்: சித்த, அமி2ர்தயோகம்
ராகுகாலம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
எமகண்டம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
சூலம்: கிழக்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை
சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். திருவள்ளூர் ஸ்ரீ வீரராகவப் பெருமாள் புறப்பாடு. திருவண்ணாமலை ஸ்ரீ சுப்பிரமணியர் தெப்ப உற்சவம். சகல பெருமாள் கோவில்களிலும் திருப்பாவை, திருவெம்பாவை தொடக்கம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்த ராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்குத் திருமஞ்சன சேவை. திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பன் கொலு தர்பார் காட்சி. திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் திருமஞ்சன சேவை. கோவில்பட்டி ஸ்ரீ பூவண்ணநாதர் புறப்பாடு. ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதிக்கு பால் அபிஷேகம். திருவிடைமருதூர் ஸ்ரீ பிருகத்சுந்தர குசாம்பாள் சமேத ஸ்ரீ மகாலிங்க சுவாமி, திருமயிலை ஸ்ரீ கற்பகாம்பாள் சமேத ஸ்ரீ கபாலீஸ்வரர், திருவான்மியூர் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ மருந்தீஸ்வரரர், பெசன்ட் நகர் ஸ்ரீ அராளகேசியம்மன் சமேத ஸ்ரீ ரத்தின கிரீஸ்வரர் கோவில்களில் காலை சிறப்பு சோமவார அபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-சுகம்
ரிஷபம்-சாதனை
மிதுனம்-முயற்சி
கடகம்-பெருமை
சிம்மம்-அன்பு
கன்னி-ஆர்வம்
துலாம்- குழப்பம்
விருச்சிகம்-சிரத்தை
தனுசு- நன்மை
மகரம்-உறுதி
கும்பம்-சுபம்
மீனம்-துணிவு
- வடிவுடையம்மன் கோவில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது.
- நாளை இரவு 8.30 மணி வரை ஆதிபுரீஸ்வரர் கவசம் திறந்திருக்கும்.
திருவொற்றியூர்:
திருவொற்றியூர் தியாகராஜ சாமி உடனுறை வடிவுடையம்மன் கோவில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. இக்கோவிலின் மூலவர் ஆதிபுரீஸ்வரர், ஆண்டு முழுவதும் தங்க முலாம் பூசப்பட்ட நாக கவசம் அணிவிக்கப்பட்ட நிலையில் பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.
ஆண்டுக்கொரு முறை கார்த்திகை மாத பவுர்ணமியை யொட்டி, 3 நாட்கள் மட்டும் ஆதிபுரீஸ்வரர் புற்றுவடிவ லிங்க திருமேனி மீது அணிவிக்கப்பட்டிருக்கும் நாக கவசம் திறக்கப்படும்.
அதன்படி நேற்று மாலை 6 மணிக்கு ஆதிபுரீஸ்வரர் மீது தங்க முலாம் பூசிய நாக கவசம் திறக்கப்பட்டது. தொடர்ந்து புனுகு, சாம்பிராணி, தைலாபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
சென்னை மற்றும் பல்வேறு பகுதியில் இருந்தும் சாமி தரிசனம் செய்ய வந்த ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அறநிலைய துறை உதவி ஆணையர் நற்சோனை தலைமையில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
தொடர்ந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் நாளை (திங்கட்கிழமை) இரவு 8.30 மணி வரை ஆதிபுரீஸ்வரர் கவசம் திறந்திருக்கும். பின்னர் அர்த்தஜாம பூஜைக்கு பிறகு மீண்டும் கவசம் அணிவிக்கப்படும்.
- ஜோதிட சாஸ்திரம் மார்கழி மாதத்தை 'தனுர் மாதம்' என்று குறிப்பிடுகிறது.
- மார்கழி மாதத்தில்தான் சிவனுக்கு உகந்த திருவாதிரை திருவிழா வருகிறது.
மார்கசீர்ஷம் - வடமொழியில் மார்கழி மாதத்தை குறிக்கும் சொல். 'மார்கம்' என்பது 'வழி' என்று பொருள்படும். 'சீர்ஷம்' என்பது 'தலை சிறந்தது அல்லது உயர்ந்தது' என்ற பொருளைத் தரும். இறைவனை அடைவதில் உயர்ந்த மாதமாக மார்கழி மாதம் இருக்கிறது என்பதையே 'மார்கசீர்ஷம்' என்ற சொல் நமக்கு உணர்த்துகிறது.
சூரிய பகவான் தனுசு ராசியில் பிரவேசிக்கும் மாதம் என்பதால், ஜோதிட சாஸ்திரம் மார்கழி மாதத்தை 'தனுர் மாதம்' என்று குறிப்பிடுகிறது. இந்த மாதம் ஒரு வழிபாட்டு மாதமாகும்.

'மாதங்களில் நான் மார்கழி' என்று பகவான் மகாவிஷ்ணு கூறியுள்ளார். இந்த மாதத்தில் தனுசு ராசியில் குருவின் வீட்டில் சூரியன் குடியேறுகிறார்.
மனிதர்களுக்கு ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாள். தை மாதம் தொடங்கி ஆனி வரை தேவர்களுக்கு பகல் பொழுதாகவும், ஆடி மாதம் முதல் மார்கழி வரை இரவுப்பொழுதாகவும் அமையும். அப்படிப் பார்க்கும்போது அதிகாலையான பிரம்ம முகூர்த்தம், தேவர்களுக்கு மார்கழி மாதம் வருகிறது.
தேவர்களுக்கான பிரம்ம முகூர்த்தம் என்பதால், இந்த மார்கழி மாதம் மனிதர்களுக்கு சிறந்த வழிபாட்டுக்குரிய மாதமாக போற்றப்படுகிறது.
சிறப்புகள் நிறைந்த மார்கழி மாதத்தில் அதிகாலையில் குளித்து விட்டு பாவை நோன்பு இருந்தால் மனதிற்கு பிடித்த கணவன் கிடைப்பார் என்பது நம்பிக்கை. மகத்துவம் நிறைந்த மார்கழியில் உலக நாட்டங்களைக் குறைத்து, இறைவனிடமும் அவர் திருவடி சார்ந்த செயல்பாடுகளிலுமே மனம் ஒன்ற வேண்டும் என்பதற்காகத்தான் வேறெந்த நிகழ்வுகளையும் நடக்காமல் பார்த்துக் கொண்டார்கள்.
அதன் வழியொட்டியே மார்கழியில் சுப நிகழ்வுகளைத் தவிர்க்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது. ஆனால் அதே நேரம் இறைவனிடம் மனம் லயிக்க வேண்டும் என்பதையும் நினைவில்கொள்ள வேண்டும்.

மார்கழியில் அதிகாலை எழுந்து குளித்து விட்டு வாசல் தெளிப்பது மனதுக்கு மட்டுமல்ல, உடலுக்கும் புத்துணர்ச்சி தரும். சூரியனிடம் இருந்து வருகிற ஓசோனின் தாக்கம் மார்கழி அதிகாலையில் அதிகமாக இருக்கும்.
இதனால் அதிகாலையில் வெளியே வருவதால் அந்த காற்றும், கதிரும் உடலை வலிமைப்படுத்தும் என்பதால்தான் அதிகாலை குளியலை முன்னோர்கள் அறிமுகம் செய்திருக்கிறார்கள்.
மார்கழி மாதத்தில்தான் சிவனுக்கு உகந்த திருவாதிரை திருவிழா வருகிறது. சிவபெருமானின் பக்தைகள் நோன்பு நோற்பதற்காகத் தோழியை எழுப்பச் செல்லும் காட்சி திருவெம்பாவையிலும் வருகிறது.
சிவனுடைய அடியார்களே கணவனாக வர வேண்டும், அவனோடு சேர்ந்து சிவனைத் தொழ வேண்டும் என்பதே திருவெம்பாவையில் வருகிற பாவை நோன்பின் நோக்கம்.
மார்கழி மாதத்தில் அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு வாசலில் கோலமிடுவது தொன்றுதொட்டு நடந்துவருகிறது. மாட்டுச் சாணத்தில் பிள்ளையார் பிடித்து வைத்து வழிபடுவதும் நடக்கும்.
மாட்டுச்சாண உருண்டையில் பூசணிப்பூவை செருகி, கோலத்துக்கு நடுவே வைப்பது மார்கழி முழுக்கவே நடைபெறும். சில வீடுகளில் அந்தப் பூ உருண்டையை வரட்டியாகத் தட்டி சேகரித்து சிறுவீட்டு பொங்கலன்று ஆற்றில் விடுவார்கள்.

மார்கழி மாதத்தில் பல புராதன நிகழ்வுகளும் நடந்துள்ளன. மகாபாரத யுத்தம் மார்கழி மாதத்தில் நடைபெற்றதாக இதிகாசம் கூறுகிறது. திருப்பாற்கடல் கடையப்பட்டபோது, முதலில் விஷம் எழுந்ததும், சிவன் அதனை உண்டு உலக மக்கள் அனைவரையும் காப்பாற்றியதும் இதே மார்கழி மாதத்தில்தான்.
இந்திரனால் பெரு மழை வெள்ளம் உருவாக்கப்பட்டு கோகுலத்தில் அனைவரும் துன்பப்பட்டபோது, கோவர்த்தனகிரி மலையை, கிருஷ்ணர் குடையாகப் பிடித்து மக்களை காப்பாற்றியதும் இந்த மார்கழி மாதத்தில்தான்.
மகாவிஷ்ணுவுக்கு உகந்த வைகுண்ட ஏகாதசி வருவது மார்கழியில்தான். பெண்கள் அதிகாலையில் நீராடி பாவை நோன்பு நோற்று பெருமாளை வணங்கி திருப்பாவை பாடுகின்றனர். அந்த கண்ணனே தங்களுக்கு கணவனாக வரவேண்டும் என்பது பல பெண்களின் கனவாக உள்ளது.
அனுமன் ஜெயந்தி வருவதும் இந்த மார்கழியில்தான். இவ்வளவு சிறப்புவாய்ந்த மார்கழியில் விடியற்காலம் விஷ்ணு சகஸ்ரநாமம் படிப்பது மற்றும் திருப்பாவை படிக்க இறைவன் அருள் கிடைக்கும்.
- இன்று பவுர்ணமி, பாஞ்சராத்ர தீபம்.
- திருத்தணி ஸ்ரீமுருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு கார்த்திகை-30 (ஞாயிற்றுக்கிழமை)
பிறை: வளர்பிறை.
திதி: பவுர்ணமி பிற்பகல் 3.13 மணி வரை. பிறகு பிரதமை.
நட்சத்திரம்: மிருகசீரிஷம் பின்னிரவு 3.37 மணி வரை. பிறகு திருவாதிரை.
யோகம்: சித்தயோகம்.
ராகுகாலம்: மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை
எமகண்டம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
சூலம்: மேற்கு
நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை
இன்று பவுர்ணமி, பாஞ்சராத்ர தீபம். ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீவைகுண்டபதி பால்அபிஷேகம். திருவண்ணாமலை ஸ்ரீஅபித்குசாம்பிகை ஸ்ரீஅருணாசல நாயகர் கைலாசகிரி பிரதட்சணம், ஸ்ரீபராசக்தி அம்மன் தெப்பம். கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள சன்னதி எதிரில் உள்ள ஸ்ரீஅனுமனுக்கு திருமஞ்சன சேவை. சூரியனார்கோவில் ஸ்ரீசூரியநாராயணருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள கோவில் குளக்கரை ஸ்ரீஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை. திருத்தணி ஸ்ரீமுருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம். ராமேஸ்வரம் ஸ்ரீபர்வதவர்த்தினியம்மன் ஊஞ்சல் காட்சி. வைத்தீஸ்வரன் கோவில் ஸ்ரீஅங்காரகருக்கும் ஸ்ரீசெல்வமுத்துக்குமார சுவாமிக்கும் அபிஷேகம், அலங்காரம் வழிபாடு. ஸ்ரீவாஞ்சியம் ஸ்ரீவாஞ்சியநாத சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம் வழிபாடு. சாத்தூர் ஸ்ரீவேங்கடேசப் பெருமாள் புறப்பாடு.
இன்றைய ராசிபலன்
மேஷம்-லாபம்
ரிஷபம்-பக்தி
மிதுனம்-வெற்றி
கடகம்-பண்பு
சிம்மம்-பணிவு
கன்னி-சுபம்
துலாம்- நன்மை
விருச்சிகம்-சாதனை
தனுசு- கீர்த்தி
மகரம்-மேன்மை
கும்பம்-வரவு
மீனம்-ஜெயம்
- மகாதீபத்தை வருகின்ற 23-ந் தேதி வரை தரிசிக்கலாம்.
- ஆருத்ரா தரிசனம் நாளில் நடராஜ பெருமானுக்கு திலகமிடப்பட்ட பின்னர் பிரசாதமாக வழங்கப்படும்.
வேங்கிக்கால்:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப விழாவையொட்டி நேற்று மகாதீபம் ஏற்றப்பட்டது.
அண்ணாமலை உச்சியில் ஏற்றப்பட்ட மகாதீபம் 11 நாட்கள் பக்தர்களுக்கு காட்சி தரும். தினசரி மாலை 6 மணிக்கு ஏற்றப்படும் தீபம் மறுநாள் காலை 6 மணிக்கு குளிர்விக்கப்படும். மகாதீபத்தை வருகின்ற 23-ந் தேதி வரை தரிசிக்கலாம்.
11 நாட்கள் நிறைவடைந்த பின்னர் தீப கொப்பரை எடுத்து வரப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்படும். இதைத் தொடர்ந்து ஆயிரம் கால் மண்டபத்தில் தீப கொப்பரை பாதுகாப்பாக வைக்கப்பட்டு ஆருத்ரா தரிசனம் நாளில் நடராஜ பெருமானுக்கு திலகமிடப்பட்ட பின்னர் பிரசாதமாக வழங்கப்படும்.
நேற்று நள்ளிரவு 12 மணிக்கு பல்வேறு வாகனங்களில் ஸ்ரீவிநாயகர், ஸ்ரீவள்ளி தெய்வானை சமேத ஸ்ரீமுருகப்பெருமான், ஸ்ரீ உண்ணாமுலையம்மன் சமேத ஸ்ரீஅருணாச லேஸ்வரர், ஸ்ரீபரா சக்தியம்மன், ஸ்ரீசண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள் பவனி நடைபெற்றது.
தீபத்திருவிழாவின் தொடர் நிகழ்வாக, இன்று இரவு ஸ்ரீசந்திரசேகரர் தெப்பல் உற்சவமும், நாளை இரவு ஸ்ரீபராசக்தியம்மன் தெப்பல் உற்சவமும், நாளை மறுதினம் இரவு ஸ்ரீசுப்பிரமணியர் தெப்பல் உற்சவமும் நடைபெறுகின்றன.
- இன்று சர்வாலய தீபம், வைகாசன தீபம். பவுர்ணமி பூஜை.
- ஸ்ரீவாஞ்சியம் ஸ்ரீமுருகப் பெருமான் திருவீதியுலா.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு கார்த்திகை-29 (சனிக்கிழமை)
பிறை: வளர்பிறை.
திதி: சதுர்த்தசி மாலை 4.15 மணி வரை. பிறகு பவுர்ணமி.
நட்சத்திரம்: ரோகிணி நாளை காலை 4.16 மணி வரை. பிறகு மிருகசீரிஷம்.
யோகம்: அமிர்த, சித்தயோகம்.
ராகுகாலம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
எமகண்டம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
சூலம்: கிழக்கு
நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
இன்று சர்வாலய தீபம், வைகாசன தீபம். பவுர்ணமி பூஜை. ஸ்ரீவாஞ்சியம் ஸ்ரீமுருகப் பெருமான் திருவீதியுலா. மன்னார்குடி ஸ்ரீராஜகோபால சுவாமி புறப்பாடு. திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசல நாயகர் சந்திரசேகரர் தெப்போற்சவம் ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள் மதுரை ஸ்ரீகூடலழகர், திருவள்ளூர் ஸ்ரீவீரராகவப் பெருமாள் தலங்களில் அலங்கார திருமஞ்சன சேவை. குச்சனூர் ஸ்ரீசனிபகவான் திருமஞ்சனம். திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஸ்ரீவரதராஜ மூலவர், கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் கோவிலில் வரதராஜ மூலவர் தலங்களில் திருமஞ்சனம். திருவட்டாறு ஸ்ரீஆதிகேசவப் பெருமாள் திருமஞ்சன சேவை. உப்பிலியப்பன் கோவில், ஸ்ரீனிவாசப் பெருமாள் ஸ்திர வார திருமஞ்சன அலங்கார சேவை. திருஇந்தளூர் ஸ்ரீபரிமளரெங்கராஜ பெருமாள், திருச்சேறை ஸ்ரீசாரநாதப் பெருமாள் தலங்களில் அலங்கார திருமஞ்சனம். ஆழ்வார்திருநகர் ஸ்ரீநம்மாழ்வார் புறப்பாடு. திருப்பரங்குன்றம் ஸ்ரீஆண்டவர் புறப்பாடு. திருமொகூர் ஸ்ரீகாளமேகப் பெருமாள் ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீைவகுண்டபதி திருமஞ்சனம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-நிறைவு
ரிஷபம்-பக்தி
மிதுனம்-மாற்றம்
கடகம்-வெற்றி
சிம்மம்-விருப்பம்
கன்னி-ஜெயம்
துலாம்- நட்பு
விருச்சிகம்-தெளிவு
தனுசு- மகிழ்ச்சி
மகரம்-தாமதம்
கும்பம்-வரவு
மீனம்-சுகம்






