என் மலர்tooltip icon

    கோவில்கள்

    கோனார்க் சூரிய கோவிலுக்கு அருகிலேயே பாழடைந்த நிலையில் இரண்டு கோவில்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. அதிலொரு கோவில் சூரிய பகவானின் மனைவியான மாயாதேவியுடையது.
    யுனஸ்கோவின் உலகப் பாரம்பரிய சின்னங்களில் ஒன்று கோனார்க் கோவில். சூரிய பகவானை மூலவராக கொண்டிருக்கும் ‘கோனார்க்’ கோவில் ஆன்மிகத்தையும், அறிவியலையும் ஒன்றாக கலந்த ‘கால கடிகாரம்’ போல செயல்படுகிறது..! அதன் சுவாரசியத்தை விளக்கும் தகவல் தொகுப்பு இது...!

    யார் கட்டியது ?

    கீழை கங்கா் வம்சத்தைச் சோ்ந்த முதலாம் நரசிம்ம தேவன் என்ற மன்னனால், 13-ம் நூற்றாண்டில் (கி.பி. 1236-1264) கட்டப்பட்டது. இதனைக் கட்டி முடிக்க பேரரசின் 12 ஆண்டு கால வருமானமும் செலவிடப்பட்டது. இயற்கை பேரிடர்களை சந்தித்து, இப்போது சிதலமடைந்து நிற்கிறது.

    எங்கு இருக்கிறது..?

    இந்தியாவின் ஒடிசா மாநிலம், பூரி ரெயில் நிலையத்தில் இருந்து 31 கிலோமீட்டா் தொலைவில் இருக்கிறது.

    கால ஓட்டத்திற்கு ஏற்பவும், சூரியனின் நகர்வுக்கு ஏற்பவும், சூரிய ஒளி மூலவர் சிலை மீது படும் வகையில் கோவிலை கட்டியிருக்கிறார்கள்.

    கோவிலின் விமானம் சரியும் நிலையில் இருப்பதால், இங்குள்ள மூலவரான சூரியன் சிலை, பூரி ஜெகந்நாதர் ஆலயத்தில் வைக்கப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள். எனவே இங்கு உருவ வழிபாடு எதுவும் இல்லை.

    ஈர்ப்பு விசை தூண்

    இந்த ஆலயத்தில் தூண்களே கிடையாது. இருப்பினும் ஒவ்வொரு கற்களுக்கும் நடுவே நிறைய இரும்புத் துண்டுகள் உள்ளது. ஒரு முறை கோவில் மேற்பகுதி சேதமடைந்து விழுந்தபோது, கோபுர உச்சியில் சுமார் 50 டன் எடையிலான பிரம்மாண்ட காந்தக்கல் இருப்பதை கண்டுபிடித்தனர். அந்த காந்தக்கல்தான், இரும்பு துண்டுகளை வலுவாக ஈர்த்து, தூண்களுக்கான வேலையை செய்திருக்கிறது.

    சிறப்பு..!

    ஏழு குதிரைகள் பூட்டி, 24 சக்கரங்களைக் கொண்ட தேரில் சூரிய பகவான் எழுந்தருள்வது போல் இந்த கோவிலை உருவாக்கி உள்ளனர். ஏழு குதிரைகள் என்பது ஏழு நாட்களையும், 24 சக்கரங்கள் என்பது 24 மணி நேரத்தையும் குறிக்கும் விதத்தில் இந்த கோவிலின் அமைப்பு உள்ளது.

    மைதுன சிற்பங்கள்

    கஜுராஹோவில் இருப்பது போன்றே ஏராளமான மைதுன சிற்பங்கள் இங்கு இருக்கின்றன. இச்சிற்பங்கள் காலப்போக்கில் சற்றே சிதைந்து போயிருக்கின்றன.

    மாயாதேவி

    கோனார்க் சூரிய கோவிலுக்கு அருகிலேயே பாழடைந்த நிலையில் இரண்டு கோவில்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. அதிலொரு கோவில் சூரிய பகவானின் மனைவியான மாயாதேவியுடையது.
    பிரம்மச்சாரியாகவே கருதப்படும் விநாயகருக்கு, இந்த ஆலயத்தில் திருக்கல்யாணம் நடைபெறுவது மற்றொரு சிறப்பாகும். ஏனெனில் இங்கு விநாயகா், சித்தி- புத்தி என்ற இரண்டு மனைவி யருடன் காட்சியளிக்கிறார்.
    விநாயகரின் சிறப்புமிக்க ஆலயங்களில் புதுச்சேரியில் உள்ள மணக்குள விநாயகருக்கு தனி இடம் உண்டு. இந்தியாவிலேயே தங்கத்தால் ஆன மூலஸ்தான கோபுரம் இங்குதான் இருக்கிறது. இந்த ஆலயத்தில் காணப்படும் மேலும் பல சிறப்புகளைப் பற்றி அறிந்துகொள்வோம்.

    8 ஆயிரம் சதுர அடி பரப்பில் இந்த ஆலயம் அமைந்திருக்கிறது. இத்தல மூலவா் இருக்கும் இடம் ஒரு கிணறு ஆகும். பீடத்தின் இடதுபக்கம் மூல வருக்கு அருகிலேயே ஒரு சிறிய குழி காணப்படும். இதன் ஆழம் இதுவரை கண்டறியப்படவில்லை. மேலும் இதில் எப்போதும் நீர் இருந்துகொண்டே இருக்கும்.

    புதுச்சேரியில் மகாகவி பாரதியார் தங்கியிருந்த 10 ஆண்டுகளில், இந்த விநாயகப் பெருமானைப் போன்றி 40 பாடல்களைப் பாடியிருக்கிறார். இவை `நான்மணிமாலை' என்று வழங்கப்படுகிறது.

    பிரம்மச்சாரியாகவே கருதப்படும் விநாயகருக்கு, இந்த ஆலயத்தில் திருக்கல்யாணம் நடைபெறுவது மற்றொரு சிறப்பாகும். ஏனெனில் இங்கு விநாயகா், சித்தி- புத்தி என்ற இரண்டு மனைவி யருடன் காட்சியளிக்கிறார்.

    டச்சுக்காரா்கள், போர்ச்சுகீசியா்கள், டேனீஷ்காரர்கள், பிரெஞ்சுக்காரா்கள், ஆங்கிலேயா்கள் என 5 வெளிநாட்டவா்களின் ஆட்சிகளிலும் சிறப்புற்று விளங்கியவா், இந்த மணக்குள விநாயகா்.

    மணக்குள விநாயகர் கோவிலில் ஆவணி மாதம் நடைபெறும் பிரம்மோற்சவத்தின் போது, அனைத்து சமுதாயத்தைச் சோ்ந்தவா்களும், சுவாமி வாகனத்திற்கான ஏற்பாடுகளைச் செய் கிறார்கள்.

    கிழக்கு நோக்கி வீற்றிருந்து அருளாசி வழங்கும் இந்த விநாயகா், இடம்புரி விநாயகராக அருள்கிறார்.

    இத்தலத்தில் மாதம் தோறும் சங்கடஹர சதுர்த்தி தினத்தன்று 4 கால அபிஷேகங்களுடன் சிறப்பு பூஜைகள் நடைபெறும். அன்று பூஜையில் பங்கேற்றால் மிகுந்த பலன் கிடைக்கும். ஒவ்வொரு மாதமும் வரும் சதுர்த்தி அன்று பிள்ளையாரை வேண்டி, அன்று முழுவதும் உப வாசம் இருந்து மாலையில் கொழுக்கட்டை படையலிட்டு விரதத்தை முடித்தால் எல்லாத் தடைகளும் நிவர்த்தி யடைந்து திருமணம் நடைபெறும் என்பது பக்தா்களின் நம்பிக்கை.

    தங்கத்தகடு போர்த்தப்பட்ட கொடிக்கம்பத்தின் உயரம் 18 அடி. இந்த ஆலயத்தில் காணாபத்திய ஆகம விதிப்படி வழிபாடுகள் நடைபெறுகின்றன.

    விநாயகருக்கு இத்தலத்து பக்தர்கள் தங்கள் நேர்த்திக் கடன்களாக எண்ணெய், பஞ்சாமிர்தம், பழ வகைகள், தேன், பால், தயிர், இளநீர், விபூதி, சந்தனம் ஆகியவற்றால் அபிேஷகம் செய்கிறார்கள். மேலும் சொர்ணாபிஷேகம், 108 கலசாபிஷேகம், சங்காபிஷேகம் ஆகியவற்றையும் செய்கிறார்கள்.

    வருடத்தின் மிக முக்கிய விசேஷ நாட்களான தமிழ் புத்தாண்டு தினம், தீபாவளி, பொங்கல் ஆகிய தினங் களிலும் கோவிலில் மூலவருக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.

    திருமண வரம், குழந்தை வரம் உள்ளிட்ட அனைத்துவிதமான வழிபாடுகளும் இங்கே நடத்தப்படுகிறது. புதிதாக தொழில் தொடங்குவோர், வாகன வழிபாட்டுக்காக இங்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை ஏராளம்.
    தென்காசி மாவட்டத்தில் அருள்வாக்கிற்கு பெயர் பெற்ற கடைய நல்லூர் தாலுகா, புளியங்குடி நகரில் அரசு மருத்துவமனை அருகில் கோபுர நகரில் அமைந்துள்ள முப்பெரும் தேவியர் பவானி அம்மன் ஆலயம்.
    உலகமே சக்தி மயமானது என்பதை மனிதர்களுக்கு உணர்த்தும் ஆன்மீக சொருபங்கள். இத்தகைய அருட் திறம் வாய்ந்த ஆலயங்களில் ஒன்று தான் தென்காசி மாவட்டத்தில் அருள்வாக்கிற்கு பெயர் பெற்ற கடைய நல்லூர் தாலுகா, புளியங்குடி நகரில் அரசு மருத்துவமனை அருகில் கோபுர நகரில் அமைந்துள்ள முப்பெரும் தேவியர் பவானி அம்மன் ஆலயம்.

    கோவில் உருவாக காரணம்

    சுமார் 11 வருடங்களுக்கு முன் சாதாரண ஒரு மொட்டை மாடியில் உள்ள ஒரு சிறு அறையையே கோவிலாக கொண்டு இத்தேவியர் தங்களை நாடி வரும் பக்தர்களின் கண்கண்ட தெய்வமாக விளங்கினர். சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு புற்றுக்கோவில் இருந்து பக்தர்கள் வழிபட்டு வந்தனர். அதனால் அந்த இடம் வாங்கப்பட்டு, சென்னை பெரியபாளையத்தில் இருந்து பிடிமண்கொண்டு வரப்பட்டு, ஒரு நன்நாளில் பூமிபூஜை போட்டு கட்டிட வேலை ஆரம்பிக்கப்பட்டது.

    வருடந்தோறும் சித்திரை மாதம் 2ம் செவ்வாய்க் கிழமை நாள்கால் நட்டி 10 நாட்கள் பெருந்திருவிழா நடைபெறும். இதில் 500க்கும் மேற்பட்ட அக்னிச்ட்டிகள், பால்குடம், தீர்த்தக்குடம், முளைப்பாரி ஊர்வலம் சிறப்பு அறுசுவை அன்னதானம் நடைபெறுவது இப்பகுதியில் பிரசித்தி பெற்றது.

    ஆடி மாத சிறப்புகள்

    ஆடி மாதம் வரும் பூரம் திருவிழா இங்கு மிகவும் பிரசித்தி பெற்றது. இந் நாளில் அம்மாக்களிடம் குழந்தை வரம் வேண்டி வரும் கன்னியர்களுக்கும், நீண்ட நாள் குழந்தை வரம் இல்லாதவர்களுக்கும், குழந்தை பாக்கியம் பெற்றவர்களுக்கும் இக்கோவிலில் வளையல் வளைகாப்பும், 21 வகையான சாதங்களும், பிரசாதமாக வழங்கப்படும். இந்த அருட்பிரசாதத்தை பெற்றவர்களுக்கு குழந்தைச் செல்வம் கட்டாயம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    அருள்வாக்கு

    ஒவ்வொரு ஐப்பசி மாதமும் முதல் வெள்ளிக் கிழமையன்று பெரும்பூஜை என்னும் சிறப்புப் பூஜை நடைபெறுகிறது. ஆன்மிக வாழ்க்கையில் 28ம் ஆண்டாக தொடர் புனித பயணம் மேற்கொள்ளும் குருநாதர் சக்தியம்மாளின் உடம்பிற்குள் ஸ்ரீ பெரிய பாளையத்து பவானி அம்மன் குடி கொண்ட நாளையே பெரும்பூஜையாக கொண்டாடப்படுகிறது.

    அன்றைய தினம் அம்மாக்களுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெறும் காலை 8 மணி முதல் குருநாதர் சக்தியம்மா சேலை அணிந்து முழு பெண் உருவத்தில் ஒரு கையில் தீச்சட்டியுடன் மகாசக்தி வாய்ந்த பவானி அம்மாவாக பக்தர்களுக்கு தலையில் கை வைத்து சொல்லும் அருள் வாக்கு என்னும் சிறப்பு நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.

    இப்பூஜையில் கலந்து கொண்டவர்களுக்கு வழங்கப்படும் பவானி அம்மன் அருள்வாக்கு 100 சதவீதம் பலித்து வருகிறது. பவானி அம்மாவாக அருள் வாக்கு தரும் சக்தியம்மாவே அனைத்து மக்களுக்கும் ஆன் மீகம் போதிக்கும் குருவாக விளங்குகிறார். இக்கோவிலில் கொடுக்கப்படும் மஞ்சள் காப்பு பிரசாதத்தை ‘ஜெய்பவானி’ என்று சொல்லி நெற்றியில் பூசிக் கொண்டால் அனைத்து செயல்களும் நன்மையாக நடக்கும்.
    புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமை அன்று இத்தல பூதநாராயணப் பெருமாளுக்கு, ஒரு படி அரிசி வாங்கிக்கொடுத்து, அன்னப்படையல் செய்து, பெருமாளை வழிபாடு செய்தால், இல்லத்தில் நிறைந்த செல்வம் வந்து தங்கும் என்பது ஐதீகம்.
    திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலயத்தின் சிறப்புகளில் ஒன்று, கிரிவலம். பவுர்ணமி தோறும் இங்குள்ள மலையை பக்தர்கள் அனைவரும் வலம் வந்து இறைவனை வழிபடுவார்கள். இங்கு சிவபெருமானே மலையாக இருப்பதால், அந்த மலையைச் சுற்றி கிரிவலம் வருவது பெரும் பிரசித்திப் பெற்றது. இந்த ஆலயத்தின் அருகில் அமைந்திருக்கும் இரட்டைப் பிள்ளையார் கோவிலும் வெகு பிரபலம். இந்த ஆலயத்திற்கு அருகில் பெருமாள் கோவில் ஒன்றும் உள்ளது. இது ‘பூதநாராயணப் பெருமாள் கோவில்’ என்று அழைக்கப்படுகிறது. ஆலயம் சிறியது என்றாலும் பழமை வாய்ந்ததாக உள்ளது.

    இந்த ஆலயத்தின் தெய்வமான பெருமாள், வெகுகாலமாக பூமியில் புதையுண்டு இருந்தார். அவர் தன்னை வெளிப்படுத்திக்கொண்ட பிற்பாடு, இவரை வழிபடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. இந்த சிறிய ஆலயத்திற்குள் தும்பிக்கை ஆழ்வார் எனப்படும் விநாயகர், ஆஞ்சநேயர், சுதர்சனப் பெருமாள் ஆகியோர் ஒரே சன்னிதியில் இருப்பது விசேஷமாகும். இங்கு கருடாழ்வாரும் காட்சி தருகிறார்.

    இந்தக் கோவிலில் புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமை அன்று, பூதநாராயணப் பெருமாளுக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்படும். அப்போது ஒரு மூடை அரிசியில் அன்னம் சமைத்து, அதனை பெருமாளுக்கு படைத்து சிறப்பு பூஜை செய்வார்கள். இறைவனுக்கு நைவேத்தியம் செய்யப்பட்டதும், இந்த அன்னம் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். இந்த அன்னத்தை வாங்கி சாப்பிட்டால், கல்வியில் சிறந்து விளங்கலாம் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.

    புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமை அன்று இத்தல பூதநாராயணப் பெருமாளுக்கு, ஒரு படி அரிசி வாங்கிக்கொடுத்து, அன்னப்படையல் செய்து, பெருமாளை வழிபாடு செய்தால், இல்லத்தில் நிறைந்த செல்வம் வந்து தங்கும் என்பது ஐதீகம். இந்தக் கோவில் கருவறையில் குழந்தை கண்ணனே, பூத நாராயணப் பெருமாளாக வீற்றிருந்து அருள்பாலிப்பதாக தல வரலாறு சொல்கிறது.

    கிருஷ்ணரைக் கொல்ல ஆயர்பாடிக்கு பூதகி என்ற அரக்கியை அனுப்பி வைத்தான், கம்சன். அந்த அரக்கி, நயவஞ்சமாக ஆயர்பாடி மாளிகைக்குள் நுழைந்து, குழந்தை கண்ணனைத் தூக்கிக் கொண்டு விண்ணில் பறந்தாள். அப்படி பறந்த வேளையில், தன்னுடைய மார்பில் இருந்து விஷப்பாலை, கண்ணனுக்குப் புகட்டினாள். ஆனால் குழந்தையாக இருந்த கண்ணன், அந்த பூதகியின் மார்பின் வழியாக அவள் ரத்தம் முழுவதையும் உறிஞ்சி குடித்தான். இதனால் அரக்கி இறந்து போனாள்.

    பூதகியிடம் விஷப்பால் உண்ட கண்ணனே, இங்கு ‘பூத நாராயணர்’ என்ற பெயரில் அருள்கிறார். இந்த ஆலய இறைவனை வேண்டிக்கொண்டால், அறிவும், ஞானமும் கிடைக்கும் என்கிறார்கள். மேலும் குழந்தைகளுக்கு உள்ள தீராத நோய், கண் திருஷ்டி போன்றவை அகலும்.
    இந்த கோவில் ராமேசுவரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து வடபுறத்தில் அழகன்குளம் கிராமத்தில் சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.
    ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் செல்லும் வழியில் அமைந்துள்ளது வரலாற்று சிறப்பு மிக்க அழகன்குளம் கிராமம். இந்த கிராமம் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் ஆய்வு செய்யப்பட்டு சங்ககாலம் கடந்து கி.மு. 3-ம் நூற்றாண்டினை சேர்ந்த பழமை வாய்ந்ததாகும். இங்கு தேவிபட்டினம், ராமேசுவரம் செல்லும் வழயில் கடலும்-வைகை ஆறும் சங்கமிக்கும் ஆற்றங்கரை சாலையில் அழகன்குளம் பஸ்நிறுத்தம் அருகில் அருள்பாலித்துக்கொண்டு உள்ளது ஸ்ரீ சந்தான கோபால கிருஷ்ணன் கோவில்.

    இந்த கோவிலின் பிரகாரம் 2007-ம் ஆண்டு கோவில் அறங்காவலர்களால் புனரமைக்கப்பட்டு இந்தியாவின் தலைசிறந்த ஸ்தபதிகளில் ஒருவரும், கன்னியாகுமரி விவேகானந்தர் நினைவு இல்லம், சென்னை வள்ளுவர் கோட்டம் மட்டுமல்லாது திருமலை திருப்பதியின் ஆஸ்தான ஸ்பதி மறைந்த எஸ்.கே. ஆச்சாரி கலைநயத்துடன் இந்த கோவிலை வடிவமைத்துள்ளார். இங்கு பெருமாள், ஆண்டாள், ஸ்ரீவிஷ்வக்சேனர், காலிங்க நர்த்தனர் சன்னதி அமைந்துள்ளது. இந்த கோவிலில் அறங்காவலர்கள் சார்பில் ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமியில் பெருமாள், கள்ளழகர் வேடம் அணிந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சூழ வைகை ஆற்றில் குதிரை வாகனத்தில் சந்தான கோபால கிருஷ்ணன் எழுந்தருள்வார்.

    அப்போது கருட வாகனத்தில் சாமி வீதிஉலா வரும் அழகை காண கோடி கண்கள் போதாது. இதுமட்டுமல்லாது மகர்நோன்பு, கிருஷ்ண ஜெயந்தி, அனுமன் ஜெயந்தி போன்றவையும் பெருமாளின் ரோகினி நட்சத்திரம் அன்று சிறப்பு பூஜைகளும் சிறப்பு அலங்காரமும் சிறப்பாக நடைபெறும். இங்கு திருமணம் மற்றும் குழந்தைபேறுக்காக பெருமாளை வணங்கி பலர் பலன்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    கோவிலின் திருவிழா காலங்களில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தகோடிகள் இங்கு வந்து சாமிதரிசனம் செய்வார்கள். இந்த கோவில் ராமேசுவரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து வடபுறத்தில் அழகன்குளம் கிராமத்தில் சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் அறங்காவலர்களாக வாசுகிஸ்ரீதரன், கிருஷ்ணன் மற்றும் குடும்பத்தினர், முக்கிய பிரமுகர்களின் ஆலோசனைகளை பெற்று கோவிலின் வளர்ச்சியை ஆண்டுதோறும் மிக சிறப்பாக செய்து வருகின்றனர்.

    தானத்தில் சிறந்தது அன்னதானம் என சொல்லும் கருத்துக்கு ஏற்ப திருவிழா காலங்களில் சுவையான சைவ உணவுகளை சமைத்து பலவகை காய்கறிகளுடன் பாயசமும் கூடிய உணவு வழங்கி வருகின்றனர்.
    சென்னை அடுத்த செங்கல்பட்டு அருகே உள்ளது, நென்மேலி கிராமம். இங்கு லட்சுமி நாராயணப் பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    சென்னை அடுத்த செங்கல்பட்டு அருகே உள்ளது, நென்மேலி கிராமம். அந்தக் காலத்தில் இந்த ஊர் ‘புண்டரீக நல்லூர்’, ‘பிண்டம் வைத்த நல்லூர்’ என்று அழைக்கப்பட்டு வந்துள்ளது. இங்கு லட்சுமி நாராயணப் பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது. இவ்வாலயம் காசி, கயா திருத்தலங்களுக்கு இணையாகப் போற்றப்படுகிறது. இந்த ஆலயத்தில் மகாளய அமாவாசை நாட்களில் தர்ப்பணம் செய்வது சிறப்பான பலனைப் பெற்றுத் தரும் என்கிறார்கள். இந்த ஆலயத்தின் உற்சவ மூர்த்தியாக ‘சிரார்த்த சம்ரட்சண நாராயணர்’ அருள்கிறார்.

    ஆற்காடு நவாப் காலத்தில் திவானாகப் பணிபுரிந்தவர், ஸ்ரீயாக்ஞ வல்கியரைக் குருவாகக் கொண்ட யாக்ஞ நாராயண சர்மா. இவரது மனைவி சரஸ வாணி. இவர்களுக்கு நென்மேலி தலத்தில் உள்ள பெருமாளின் மீது அளவுகடந்த பக்தி இருந்தது. அந்த பக்தியின் காரணமாக, அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய வரிப்பணத்தைக் கூட, ஆலயத்தின் திருப்பணிக்காக செலவிட்டுவிட்டனர். இதனால் அவர்களுக்கு அரசாங்கம் தண்டனை வழங்கியது.

    அந்த தண்டனையை ஏற்க விரும்பாத அந்த தம்பதி, திருவிடந்தை ஆலய திருக்குளத்தில் மூழ்கி தங்களுடைய உயிரை மாய்த்தனர். அவர்களின் ஈம காரியங்களைச் செய்ய வாரிசு என்று யாரும் இல்லை. இதனால் அவர்களின் ஆன்மா நற்கதி கிடைக்காமல் அலைந்தது. அவர்களின் ஆன்மாவுக்கு நன்மை செய்ய நினைத்த நென்மேலி லட்சுமி நாராயணப் பெருமாள், அந்த தம்பதியருக்கு ஈமக் காரியங்களை செய்ததாக தல வரலாறு சொல்கிறது. தினந்தோறும் பகல் 12 மணி முதல் 1 மணி வரையான காலம், பித்ருக்களின் காலம் என்று கருதப்படுகிறது. இந்த காலவேளையில் நடைபெறும் பூஜையை ஏற்றபடி, இத்தலப் பெருமாள் விரதமிருப்பதாக சொல்லப்படுகிறது.

    எனவே இந்த ஆலயத்தில் திதி செய்ய விரும்புபவர்கள், இங்கு பித்ரு கால பூஜை நடைபெறும் வேளையில், அதில் கலந்துகொண்டு பெருமாளிடம் தங்களின் காரியத்தை ஒப்படைக்க வேண்டும். இதனை திதி சம்ரட்சணம் என்கிறார்கள். அந்த நேரத்தில் பெருமாளுக்கு வெண் பொங்கல், தயிர் சாதம், பிரண்டை மற்றும் எள் கலந்து செய்த துவையல் ஆகியவை நைவேத்தியமாக படைக்கப்படுகிறது. இந்த நைவேத்தியங்களை ஏற்றுக்கொண்டு, நம்முடைய பித்ருக்களை திருப்திப்படுத்தும் பணியை பெருமாள் செய்வதாக நம்பிக்கை.

    முன்னோர்களின் திதி நாட்கள், அமாவாசை, ஏகாதசி போன்ற நாட்களில், இந்த ஆலயத்தில் நடைபெறும் பித்ரு கால பூஜையில் பங்கேற்பவர்களுக்கு, கயா மற்றும் காசிக்கு சென்று திதி கொடுத்த பலன் கிடைக்கும். இந்த ஆலயத்திற்கு வந்து வழிபடுபவர்களுக்கு, பித்ரு தோஷம் நீங்கும். முன்னோர்களின் சாபத்தால் தடைபட்டு வந்த காரியங்கள் விரைவாக நடைபெறும்.

    செங்கல்பட்டில் இருந்து திருக்கழுக்குன்றம் செல்லும் சாலையில், சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது, நென்மேலி திருத்தலம்.
    வாக்குக்கு அதிபதியாக இருப்பவர், சரஸ்வதி தேவி. இவர் பல ஆலயங்களில் பெண் தெய்வங்களின் பெயர்களின் வீற்றிருக்கிறார். அவற்றில் சில ஆலயங்களைப் பார்ப்போம்.
    உலகம் தோன்றிய போது முதலில் எழுந்த ஓசைக்கு ‘ஓம்’ என்று பெயர். இந்த ஓம்கார ஒலியில் இருந்துதான் வேதங்கள் தோன்றின. மந்திரங்கள் அனைத்துக்கும் ஓம்கார ஒலியே பிரதானம். அதில் இருந்து வாக்கு பிறந்தது. அதுவே மனிதர்களின் பேசும் மொழிகளாக பரந்து விரிந்தது. வாக்குக்கு அதிபதியாக இருப்பவர், சரஸ்வதி தேவி. இவர் பல ஆலயங்களில் பெண் தெய்வங்களின் பெயர்களின் வீற்றிருக்கிறார். அவற்றில் சில ஆலயங்களைப் பார்ப்போம்.

    பிரம்ம வித்யாம்பிகை

    திருவெண்காடு தலத்தில் மூலவராக சுவேதாரண்யேஸ்வரர் இருக்கிறார். அம்பாளாக, பிரம்ம வித்யாம்பிகை அருள்கிறாள். இந்த அம்மன், சரஸ்வதி தேவியாகவே வழிபடப்படுகிறாள். நவக்கிரகங்களில் மனிதர்களது புத்தியை இயக்கும் முக்கிய கிரகம் புதன். இவருக்கும் இங்கே சன்னிதி உள்ளது. கல்வி வளம் அளிப்பதுடன் புத்தியையும் வலுவாக மாற்றும் இந்த ஆலயம், சீர்காழியில் இருந்து 17 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

    கல்விக்கு அன்னை

    திண்டுக்கல்-வேடசந்தூர் சாலையில் 9 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, தாடிக்கொம்பு. இங்கு சவுந்தரராஜப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. மண்டூக மகரிஷி, தவம் இருந்த இடம் இது. இங்கே கல்வி அருளும் தெய்வங்களான ஹயக்ரீவர், சரஸ்வதிக்குத் தனித்தனியே சன்னிதிகள் உள்ளன. திருவோண நட்சத்திரத்தில் ஹயக்ரீவருக்கு தேன் அபிஷேக பூஜையுடன், தேங்காய், நாட்டுச் சர்க்கரை, நெய் கலந்த நிவேதனம் படைத்து, ஏலக்காய் மாலை அணிவித்து வேண்டிக் கொள்வது வழக்கம். சரஸ்வதி பூஜையன்று சரஸ்வதிதேவிக்கு விசேஷ பூஜைகள் நடைபெறும்.

    ஞான சரஸ்வதி

    திருச்சிராப்பள்ளி புறநகர்ப்பகுதியில் உள்ள உத்தமர்கோவில் கிராமத்தில் பிட்சாடனர் கோவில் உள்ளது. பிரம்மா பூவுலகிலேயே இருக்க வேண்டி பெருமாளை நோக்கி தவமிருந்த இடம். அப்போது பெருமாள் தோன்றி, அங்கேயே இருக்க அனுமதி அளித்ததுடன், தன்னை படைத்தவனை பார்க்க வேண்டுமென்று நிறைய பக்தர்கள் உன்னைக் காண இங்கே வருவார்கள் என்று ஆசீர்வதித்து, தன் அருகில் வைத்துக் கொண்டார். இங்கு பிரம்மாவுக்கும், சரஸ்வதிக்கும் தனியாக சன்னிதிகள் உள்ளன. இத்தலத்தில் ஞான சரஸ்வதியாக வணங்கப்படுவதுடன், அவளது கரங்களில் வீணை இல்லாமல், ஓலைச் சுவடியோடும், ஜபமாலையோடும் காட்சியளிக்கிறாள்.

    கலைவாணி

    வாணியம்பாடியில் பெரியநாயகி உடனாய அதிதீஸ்வரர் கோவில் உள்ளது. ஒரு முறை பிரம்மனின் சாபத்தால் பேச்சை இழந்த கலைமகள், இந்த ஆலயத்தில் உள்ள ஈசனையும், அம்பாளையும் வழிபட்டு சாபம் நீங்கப் பெற்றாள். கலைவாணிக்கு அருள்செய்த ஈசன், அவளை வீணை மீட்டி பாடும்படி பணித்தார். இதனாலேயே இந்த ஊர் ‘வாணியம்பாடி’ என்று பெயர் பெற்றது. கோவிலின் முகப்பிலேயே சிவன், பார்வதியை கலைவாணி வழிபடும் சுதை சிற்பம் உள்ளது. தனிச் சன்னிதியில் வீணை மீட்டும் வாணி அருள் செய்கிறாள்.

    மாதங்கி தேவி

    சேலம் மன்னார்பாளையத்தில் சரஸ்வதி அம்சமான ராஜமாதங்கி அருள்பாலித்து வருகிறாள். கையில் வீணையுடன், இருபுறமும் சிவந்த அலகுகளுடன் பச்சைக்கிளிகள், சிம்மாசனமாய் கருவறையின் முன்புறம் கிளியாசனம் அமைத்திருக்க, மயில் போல் அமர்ந்து அருளாட்சி செய்கிறாள் ராஜமாதங்கி தேவி. அன்னை பராசக்தியின் மந்திரியாக இருக்கும் அவள், அறிவு வடிவமாக நின்று, தன்னை வழிபடும் பக்தர்களுக்கும் அறிவை குறைவில்லாமல் வாரி வழங்குகிறாள்.

    பிரம்மனுடன்

    சென்னை வண்டலூரை அடுத்த கேளம்பாக்கம் அருகில் ரத்தினமங்கலம் கிராமத்தில் லட்சுமி குபேரர் கோவிலின் கன்னி மூலையில் சரஸ்வதி உடனாய பிரம்மாவுக்கு தனிச்சன்னிதி அமைந்துள்ளது. இந்த தேவிக்கு மஞ்சள் காப்பு சாத்தி வழிபட்டு அந்த மஞ்சளை தினம் நெற்றியில் இட்டு வருபவர்களது தலை எழுத்து மாறும் என்பது பக்தர்களது நம்பிக்கையாகும். மேலும், மாணவ - மாணவியர்கள் அந்த மஞ்சளை அணிந்து கொண்டால், கல்வி மற்றும் ஞாபக சக்தி பெருகும் என்பதும் நம்பிக்கையாக இருந்து வருகிறது.

    கம்பர் வழிபட்ட சரஸ்வதி

    காஞ்சிபுரம் அருகே தாங்கி கிராமத்தில் சரஸ்வதி தனி ஆலயத்தில் அருளாசி வழங்கி வருகிறாள். சரஸ்வதியின் மேல் ஆழ்ந்த பக்தி கொண்ட கம்பர், ஓரடி உயரம் கொண்ட சரஸ்வதி தேவி சிலையை தாம் செல்லும் ஊர்கள்தோறும் எடுத்துச் செல்வார். ஒருசமயம் காஞ்சியிலிருந்து பொன்விளைந்த களத்தூர் செல்லும்போது, காஞ்சி - வாலாஜாபாத் சாலையில் உள்ள தாங்கி கிராமத்தில் வழிப்போக்கர் மண்டபத்தில் தங்கினார். அச்சமயம் அன்னை சரஸ்வதிக்கு திருக்கோவில் அமைந்தால் சிறப்பாக இருக்கும் என கம்பர் எண்ணியதாக சொல்லப்படுகிறது. ஆனால், ஆண்டுகள் பல ஆனபிறகு, கம்பரின் ஆழ்ந்த பக்தியின் காரணமாக, தாங்கி கிராமம் வழித்துணை விநாயகர் ஆலயத்தில் சரஸ்வதி சிலை புதைபொருளாகக் கிடைத்தது. இந்த அன்னைக்கு விநாயகர் ஆலயம் அருகிலேயே தனிக்கோவில் கட்டப்பட்டது.

    ஞானவாணி

    தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு வட்டத்தில் அமைந்துள்ளது, திருக்கண்டியூர். இங்கு பிரம்மனுக்கு தனிச் சன்னிதி உண்டு. இங்கு சரஸ்வதி தேவி, தனது கணவரோடு நான்கு கரங்களுடன் கல்வியும், ஞானமும் வழங்கும் ஞானவாணியாக வீற்றிருக்கிறாள்.இந்தக் கோவிலுக்கு எதிரில் ஹரசாபவிமோசனப் பெருமாள் ஆலயம் உள்ளது. பிரம்மாவின் தலையைக் கொய்ததால், ஈஸ்வரனுக்கு ஏற்பட்ட தோஷத்தை இப்பெருமாள் அகற்றியதாக ஐதீகம். இந்த ஆலயத்தில், கல்விக் கடவுள் ஹயக்ரீவருக்கு தனிச் சன்னிதி அமைந்துள்ளது.

    சொர்ணவல்லித் தாயார், பிரம்மா, மகாலட்சுமி, ஸ்ரீராமர், நட்சோதி மன்னன் போன்றவர்களே இத்திருக்கோவில் வந்து பித்ரு தர்ப்பணம் செய்துள்ளனர் என்றால், இக்கோவிலின் மகிமையும், பித்ரு தர்ப்பணத்தின் மகிமையும் நமக்கு விளங்கும்.
    மகாளய அமாவாசை தினத்தன்று திலதர்ப்பணபுரி கோவிலை தரிசிப்பது மிகப் பொருத்தமாக இருக்கும். இந்த திலதர்ப்பணபுரி திருக்கோவில் மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையில் அமைந்துள்ள பூந்தோட்டம் என்ற ஊருக்கு அருகில் உள்ளது. பூந்தோட்டத்தில் இருந்து எரவாஞ்சேரி செல்லும் சாலையில் சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

    தல மூர்த்தி : ஸ்ரீ முக்தீஸ்வரர்
    தல இறைவி : சொர்ணவல்லி
    தல தீர்த்தம் : பிரம்ம தீர்த்தம்
    தல விருட்சம் : மந்தார

    திலதர்ப்பணபுரி திலம் என்றால் எள், புரி என்றால் தலம். எள் தர்ப்பணம் செய்ய சிறந்த தலம் என்பது பொருள். இந்தியாவில் பித்ரு தலங்கள் 7 உள்ளன. அவை காசி, ராமேஸ்வரம், கயா, திரிவேணி சங்கமம், ஸ்ரீவாஞ்சியம், திருவெண்காடு, ஏழாவதாக திலதர்ப்பணபுரி விளங்குகிறது. ராமேஸ்வரத்தில் செய்யப்படும் பித்ருக்கள் சம்பந்தமான அனைத்து பூஜைகளும் திலதர்ப்பணபுரியிலும் செய்யப்படுகின்றன.

    ராமாயணத்தில் சீதையை ராவணன் கவர்ந்து செல்லும் போது ஜடாயு என்ற பறவை ராவணனிடம் இருந்து சீதையை காப்பாற்ற முயன்று சிறகுகள் வெட்டப்பட்டு இறந்தது. சீதையைத் தேடி ஸ்ரீ ராமரும், லட்சுமணனும் இலங்கையை நோக்கிப் பயணம் மேற்கொண்டனர். ஸ்ரீ ராமருக்கு தனது தந்தை தசரதனுக்குச் செய்ய வேண்டிய பித்ரு காரியங்களைச் செய்யாமல் இருப்பது மனதிற்கு மிகவும் வேதனையைக் கொடுத்தது.

    அதை நேரத்தில் தன் பொருட்டு உயிரை விட்ட ஜடாயு பறவைக்கும் பித்ரு பூஜை செய்ய விரும்பினார் ஸ்ரீ ராமர். அவ்வாறாக இலங்கைக்கு செல்லும் பாதையில் இந்த திலதர்ப்பணிபுரிக்கு வந்து இங்குள்ள அரசலாற்றில் நீராடி தன் தந்தை தசரதனுக்கும், ஜடாயு பறவைக்கும் வந்து இங்குள்ள அரசலாற்றில் நீராடி தன் தந்தை தசரதனுக்கும், ஜடாயு பறவைக்கும் பித்ரு கடமைகளைச் செய்தார். அவர்களும் மனம் குளிர்ந்து ஸ்ரீராமரின் பித்ரு கைங்கர்யங்களை நேரில் வந்து ஏற்றுக் கொண்டு அவர்களை ஆசீர்வதித்தனர். இவ்வாறாக இத்தலம் பித்ரு தலம் ஆகியது.

    கோதாவரி நதிக் கரையில் போகவதி என்னும் ஊரை நட்சோதி மகாராஜா ஆண்டு கொண்டிருந்தார். அவரது அரசவைக்கு ஒருநாள் நாரதர் பெருமான் வருகை புரிந்தார். அரசர் நாரதரிடம், இந்தியத் திருநாட்டிலே எந்த தலம் புண்ணியத் தலமாக விளங்குகிறது என்று வினவினார்.

    அதற்கு நாரதர், எந்தத் திருத்தலத்தில் நாம் செய்யும் பிண்ட தானத்தை பித்ருக்கள் நேரில் வந்து பெற்றுச் செல்கின்றரோ, அந்தக் திருத்தலமே புண்ணியத் திருத்தலம், எனக் கூறினார். மன்னன் பல திருத்தலங்களுக்குச் சென்று, கடைசியாக திலதர்ப்பணபுரி திருத்தலம் வந்து, அமாவாசை அன்று பித்ரு பூஜைகள் செய்து, பிண்ட தானம் வழங்கினார். பித்ருக்கள் நேரில் வந்து பிண்ட தானம் பெற்று மனம் குளிர்ந்து ஆசி வழங்கினர்.

    திலதர்ப்பணபுரி திருத்தலம் நுழையும் போதே ஒரு சிறந்த, அரிய விஷயம் நம்மை வியப்படைய வைக்கிறது. திருக்கோயிலை பார்த்துக் கொண்டு, மேற்கு நோக்கி ஆதி விநாயகர் சன்னதி உள்ளது. இந்த விநாயகரை நரமுக விநாயகர், மனித முக விநாயகர் என்றும் அழைக்கின்றனர். வேழ முகம் தோன்றுவதற்கு முன்பாக உள்ள மனித முகத்துடன் கணபதி காட்சி தருகிறார். ஜடாமுடியுடனும், ஆனந்த முத்திரையுடனும் காட்சி தருகிறார்.

    திலகைப்பதி, கோவில்பத்து, சிதலபதி என்ற பெயர்களையும் உடைய திலதர்ப்பணபுரி ஆலய சிவ சன்னதியில், நம்பிக்கையோடு செய்யப்படும் எள் தர்ப்பணம், யாகம், அர்ச்சனை அனைத்தும் விசேஷம் வாய்ந்தது.

    திருக்கோயிலின் தெற்கு புறத்தில் ராமர் தன் கையாலேயே பிடித்து வைத்து பூஜை செய்த அழகநாதர் இருக்கிறார். நந்திகேஸ்வரர், நர்த்தன கணபதி, தட்சிணாமூர்த்தி, பிரம்மா, மகாவிஷ்ணு, அஷ்டபுஜ துர்க்கை, சண்டிகேஸ்வரர், நவகிரகங்கள், சூரியன், சந்திரன், பைரவர், நாயன்மார்களில் முதன்மையான நால்வர் சன்னதிகள் உள்ளன. இந்த சாமி சிலைகள் அனைத்தும் நுட்பமான வேலைபாடுகளுடன் அச்சில் வார்த்தது போல அழகாக உள்ளன.

    கிழக்கு நோக்கி பத்தாயிரம் ருத்ராட்சங்கள் கொண்ட ருத்ராட்சப் பந்தலின் கீழ் நாகம் குடை பிடிக்க ஸ்ரீ முத்தீஸ்வரர் அருள்பாலிக்கிறார். அருகிலேயே சொர்ணவல்லித் தாயார் சன்னதி உள்ளது.

    சிவபிரானின் சொல் பேச்சு கேட்காமல், பார்வதி தனது தந்தை நடத்தும் யாகத்திற்குச் சென்றார். அங்கு தனது தந்தை தட்சனால் அவமானப் படுத்தப்பட்டு திரும்பினார். அந்த பாவம் தீர இங்கு வந்து மந்தார மரம் ஒன்றை நட்டு வைத்து அங்கேயே குடிகொண்டார்.

    சில காலங்கள் கழித்து சிவன் மனம் மாறி பார்வதியை தன் இடபாகத்தில் அமர்த்திக் கொண்டார். பார்வதியால் நடப்பட்ட மந்தார மரமே இங்கு தலவிருட்சமாகக் திகழ்கிறது. பிதுர் லிங்கங்களுக்கு நேராக வலது காலை மண்டியிட்டு ரமர் தர்ப்பணம் செய்யும் காட்சி. நட்சோதி மன்னன் தர்ப்பணம் செய்யும் காட்சி போன்றவற்றை இத்திருக்கோயிலில் காணலாம்.

    இக்கோயில் மகாளய பட்சமாகிய 15 நாட்கள் விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. சாதி, மத பேதமின்றி அனைத்து மக்களுக்கும் செய்யப்படும் காருண்ய தர்ப்பணம் இங்கு மிக விசேஷம். சொர்ணவல்லித் தாயார், பிரம்மா, மகாலட்சுமி, ஸ்ரீராமர், நட்சோதி மன்னன் போன்றவர்களே இத்திருக்கோவில் வந்து பித்ரு தர்ப்பணம் செய்துள்ளனர் என்றால், இக்கோவிலின் மகிமையும், பித்ரு தர்ப்பணத்தின் மகிமையும் நமக்கு விளங்கும்.*
    பெருமாளும் லட்சுமியைத் தாங்கி லட்சுமி நரசிம்மராய் புன்னகை சிந்த இத்தலத்தில் எழுந்தருளினார். நங்கையாகிய லட்சுமி தோன்றிய இடம் நங்கைநல்லூராகி, நங்கநல்லூர் என மருவி அழைக்கப்படுகிறது.
    சுவாமி : ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர்

    தலச்சிறப்பு : ஐந்து தலை நாகத்தின் மீது அமர்ந்தபடி ஸ்ரீ லக்ஷ்மி ந்ருஸிம்ஹர் அருள்பாலிப்பது சிறப்பு ஆகும். கருட சேவை மஹோத்ஸ்வம் 24-05-2009 அன்று நடைபெற்றது. இதில் ஸ்ரீ லக்ஷ்மி ந்ருஸிம்ஹ பெருமாள் நங்கநல்லூர், ஸ்ரீ ஸ்ரீநிவாச பெருமாள் கீழ்கட்டளை, ஸ்ரீ ஒப்பிலியப்ப பெருமாள் இராம்நகர் மடிபாக்கம், ஸ்ரீ லக்ஷ்மி ந்ருஸிம்ஹ பெருமாள் ஆதம்பாக்கம், ஸ்ரீ கோதண்டராமர் மடிப்பாக்கம், ஸ்ரீ ஹயக்ரீவப் பெருமாள் நங்கநல்லூர், ஆறு பெருமாள்களும் ஒன்றாக சேவை சாதித்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். கோடானு கோடி புண்ணியம் செய்திருந்தால் மட்டுமே பெருமாளை பெரிய திருவடியாக கருடனில் சேவிக்க முடியும்.

    கருடனில் பெருமாள் வருவது மிக்க விசேஷம், அருள் பாலிப்பதில் ஒரு நொடி கூட தாமதிப்பதில்லை என்று தான் எல்லா திவ்ய தேசங்களிலும் கருடன் நின்ற கோலத்தில் எப்போதும் புறப்படத் தயாரான நிலையில் சேவை சாதிக்கின்றார். நதியில் விழுந்த கட்டை எதைப்பற்றியும் கவலைப் படாமல் கடலை அடைவதைப் போல காய்சினப் பறவை ஏறி அருள் பாலிக்கும் பெருமாளை பற்றினால் நாமும் முக்தி அடையலாம் என்பது நம்பிக்கை.

    தல வரலாறு : பரசுராமரின் தந்தையான ஜமதக்னி முனிவருக்கு பிரகலாதனுக்காக தூணைப்பிளந்து கொண்டு வந்த நரசிம்மரை தரிசிக்க வேண்டும் என்ற விருப்பம் ஏற்பட்டது. இதற்காக யாகம் ஒன்றை நடத்தினார். யாகத்தீயின் நடுவே உக்கிர கோலத்தோடு தோன்றினார் நரசிம்மர். அவரைக் கண்டு பரவசப்பட்ட ஜமதக்னி, சாந்தமாக இருக்கும் படியும், தான் பெற்ற தரிசனம் மற்றவர்களுக்கும் கிடைக்க வேண்டுமென வரம் கேட்டார். பெருமாளும் லட்சுமியைத் தாங்கி லட்சுமி நரசிம்மராய் புன்னகை சிந்த இத்தலத்தில் எழுந்தருளினார். நங்கையாகிய லட்சுமி தோன்றிய இடம் நங்கைநல்லூராகி, நங்கநல்லூர் என மருவி அழைக்கப்படுகிறது.

    நடைதிறப்பு : காலை 7.00 மணி முதல் 12.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை.

    திருவிழாக்கள் : நரசிம்ம ஜெயந்தி, கிருஷ்ண ஜெயந்தி.

    அருகிலுள்ள நகரம் : சென்னை.

    கோயில் முகவரி :

    ஸ்ரீ ஸர்வமங்கள ஸ்ரீ லக்ஷ்மி ந்ருஸிம்ஹ சுவாமி திருக்கோவில்,
    24 தில்லை கங்கா நகர்,
    நங்கநல்லூர், சென்னை - 600 061.
    கல்வி பயிலத் தொடங்கும் முன், இங்கு உள்ள இறைவனை வழிபட்டால் கல்வி தடையின்றி பயிலும் அருள் கிடைக்கும். இன்று இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    சுவாமி : அருள்மிகு எழுத்தறிநாதர்.
    அம்பாள் : அருள்மிகு சுகந்த குந்தளாம்பிகை, நித்ய கல்யாணி.
    மூர்த்தி : விநாயகர், சுப்பிரமணியர், சூரியன், சந்திரன், பைரவர், நடராஜர், தட்சிணாமூர்த்தி நால்வர்.
    தீர்த்தம் : ஐராவத தீர்த்தம்.
    தலவிருட்சம் : பலா, செண்பகம்.

    தலச்சிறப்பு : ஐராவதம் வழிபட்ட தலம். அகத்தியர் வழிபட்டு இலக்கண உபதேசம் பெற்ற தலம். ஈசன் தாமே கணக்கெழுதிக் கொடுத்த தலமாகும். கல்வி பயிலத் தொடங்கும் முன், இங்கு உள்ள இறைவனை வழிபட்டால் கல்வி தடையின்றி பயிலும் அருள் கிடைக்கும். இத்திருக்கோயிலில் உள்ள சிவலிங்கம் பெரியதாகும்.

    தலவரலாறு : முன் ஒரு சமயத்தில் தான் பெற்ற சாபம் காரணமாக சூரியன் தன்னுடைய பொலிவை இழந்து ஒளி குறைந்து இருக்கும் சமயம் தனக்கு எங்கு சாபம் நிவர்த்தியாகும் என்று யோகிகளிடம் கேட்க பூர்வ ஜென்ம பாவ நிவர்த்தி தலமான ஐராவதம் வழிபட்ட இன்னம்பரில் உள்ள (ஐராவதேஸ்வரர் ) சுயம்புநாத சுவாமியை வழிபட்டால் சாபம் நிவர்த்தியாகும் எனக் கூறுகின்றனர்.

    இங்கு வந்து சிவ பெருமானை தரிசனம் செய்ய முயலும் பொழுது நந்தி, கொடிமரத்து விநாயகர், பலிபீடம் ஆகியன சிவபெருமானை மறைக்கவே தன் நிலையை அவர்களிடம் கூறி தனக்கு சாப விமோசனம் கிடைக்க உதவுமாறு வேண்டுகோள் விடுகின்றார். சூரியனின் வேண்டுகோளுக்கு செவி சாய்த்த நந்தி, கொடிமரத்து விநாயகர், பலிபீடம் ஆகியோர் சூரியன் வழிபட சற்று விலகி வழி கொடுத்தனர். நந்தி விலகிய தலங்களில் இந்த தலமும் ஒன்று.

    நடைதிறப்பு : காலை 7.00 மணி முதல் 12.00 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.00 மணி வரை.

    கோவில் முகவரி :

    அருள்மிகு எழுத்தறி நாதேசுவரர் திருக்கோயில்,
    சுவாமி மலை திருக்கோயிலின் இணைக்கோயிலாகும்.
    இன்னம்பூர் அஞ்சல்,
    திருப்புறம் பியம் (வழி) - 612 003,
    கும்பகோணம் வட்டம்,
    தஞ்சை மாவட்டம்.
    இதுவரை, திதி-தர்ப்பணம் செய்யாதவர்களும், பிதுர் தோஷத்துக்கு ஆளானவர்களும் இங்கு வந்து, ‘தோசை’ முதலான உளுந்தால் ஆன உணவைப் படைத்து, அம்மனை வழிபட்டு பலனடையலாம் என்கிறார்கள்.
    நாகப்பட்டினம்-திருவாரூர் பாதையில் நாகையில் இருந்து சுமார் 14 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது வல்லங்குளம் ஸ்ரீமாரியம்மன் திருக்கோவில். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இரவில் இந்த ஊர் மக்கள் பலரும் கோவிலில் தங்குகின்றனர். மறுநாள் மாரியம்மனை தரிசித்து, வணங்கினால் நினைத்தது நிறைவேறும் என்பது நம்பிக்கை.

    இங்கே மாரியம்மனை மனதார வேண்டி, உளுந்தாலான பலகாரங்களை அம்மனுக்குப் படைத்து, பக்தர்களுக்கு விநியோகிக்கின்றனர். இதனால் அம்மனின் அருளோடு நம்முன்னோர்களின் ஆசியும் கிடைக்கும். இதுவரை, திதி-தர்ப்பணம் செய்யாதவர்களும், பிதுர் தோஷத்துக்கு ஆளானவர்களும் இங்கு வந்து, ‘தோசை’ முதலான உளுந்தால் ஆன உணவைப் படைத்து, அம்மனை வழிபட்டு பலனடையலாம் என்கிறார்கள்.

    இப்படி, இந்த கோவிலின் பரிகார வழிபாடுகள் மட்டுமல்ல மாரியம்மன் இங்கு குடிகொண்ட கதையும் சுவாரஸ்யமானது தான். திருவண்ணாமலையை தலை நகராகக் கொண்டு ஆட்சி செய்த வல்லாள மகாராஜாவுக்கு குழந்தை பாக்கியம் வாய்க்கவில்லை. இதனால் வருந்திய மகாராஜா யாகங்கள் நிகழ்த்தி வழிபட்டார். இதன் பலனால் அரசி கருவுற்றாள். ஆனால் விதி வேறுவிதமாக விளையாடியது. ‘இந்த குழந்தை பிறந்தால் நாட்டுக்கு கேடு விளையும்’ என்று ஜோதிடர் எச்சரிக்க, கலங்கிப் போன போன மகாராஜா, செய்வதறியாது குழம்பினார்.

    இறுதியில் நாட்டு மக்களின் நலனே முக்கியம் என்று கருதி மனைவியையும், அவள் கருவில் வளரும் குழந்தையையும் அழிக்கத் திட்டமிட்டார். ஒருநாள் மனைவி அசந்திருந்த வேளையில் அவளை வெட்டுவதற்கு வாளை ஓங்கினார் மகாராஜா. அப்போது, ஆக்ரோஷமாகத் தோன்றினாள் பேச்சாயி அம்மன்.
    மகாராஜாவின் கையில் இருந்த வாளைப் பிடுங்கி எறிந்தாள், அவரைத் தன் காலில் போட்டு மிதித்தாள்.

    அரசியை தன்மடியில் கிடத்தி அவளுக்கு பிரசவம் பார்த்துக் குழந்தையையும், தாயையும் காப்பாற்றினாள், தனது தவறை உணர்ந்த மகாராஜா, பேச்சாயி அம்மனிடம் பாவபரிகாரம் குறித்து வேண்டினார். கீவளூரில் ஒரு குளம் வெட்டி பாவத்துக்குப் பரிகாரம் தேடிக்கொள் என்று கட்டளையிட்டாள் அம்மன். அதன் படியே செய்தார் மகாராஜா. அவரால் உருவாக்கப்பட்ட குளம் தான் ‘வல்லங்குளம்’ எனப்பட்டது.

    காலம் உருண்டோடியது ஏறத்தாழ 500-700 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த குளத்தில் இருந்து அம்மன் சிலை ஒன்றை மக்கள் கண்டெடுத்தனர். பிறகு அவர்கள் ஒரு கோவில் கட்டி அம்மனை பிரதிஷ்டை செய்தனர். வல்லங்குளத்தில் வெளிப்பட்டவள் ஆதலால் இவளுக்கு ஸ்ரீ வல்லங்குளத்து மாரியம்மன் என்று பெயர். பிரதான சாலையின் இடப்புறம் திருக்குளம், வலப்புறம் திருக்கோவில். இப்போது சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. உள்ளே நுழைந்தால், வலப்பக்கம் ஸ்ரீபேச்சாயி அம்மன், பின்புறம் ஸ்ரீசுப்ரமணியர் சந்நதி.

    நுழைவாயிலில் இருந்து அம்மனை நோக்கி காவலாளியின் தோற்றத்தில் அய்யனார் காட்சி தருகிறார். உள்ளே கிழக்கு நோக்கி கருணையே வடிவாகக் காட்சி தருகிறாள் வல்லங்குளத்து மாரியம்மன். சுற்று வட்டார ஊர்களில் எந்த சுபகாரியமாக இருந்தாலும் இந்த மாரியம்மனுக்குத் தான் முதல் தகவல் தெரிவிக்கின்றனர். இந்த பகுதியில், வெகுவிமரிசையாகக் கொண்டாடப்படும் கீவளூர் அஞ்சு வட்டத்தம்மன் ஆலய திருவிழாவின் போதும், முதலில் வீதி உலாவுக்கு அழைத்துச் செல்லப்படுவது ஸ்ரீவல்லங்குளத்து மாரியம்மன் தான்.
    விவசாயிகள், விவசாயம் செழிக்க நந்தியுடன் இணைந்த விநாயகரைத் தரிசித்து செல்கின்றனர். இது தவிர புது வாகனங்களுக்கும் பூஜை செய்யப்படுகிறது.
    மூலவர் -    காரணவிநாயகர்
    பழமை -    500 வருடங்களுக்கு முன்
    ஊர் - மத்தம்பாளையம்
    மாவட்டம் - கோயம்புத்தூர்

    வரலாறு: காரணவிநாயகர் கோவில் ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்டது. முன்னொரு காலத்தில் இவ்வூரைத் தாண்டியுள்ள மற்றொரு கிராம மக்கள் தங்கள் ஊரில் விநாயகர் கோவில் அமைக்க விரும்பி ஒரு சிலையை மாட்டு வண்டியில் எடுத்து வந்தனர். ஓரிடத்தில் வண்டியின் அச்சு முறியவே சிலையை இறக்கிவிட்டு, பழுது பார்த்தனர். மீண்டும் வண்டியில் சிலையைத் தூக்கி வைக்க முயன்ற போது அவர்களால் அசைக்கவே முடியவில்லை. அங்கேயே சிலையை வைத்து சிறு கோவிலும் கட்டினர்.

    ஒருமுறை ஆங்கிலேயர்கள் அவ்வழியே ரோடு அமைப்பதற்காக கோவிலை அகற்றும்படி மக்களிடம் கூறினர். மக்கள் மறுக்கவே, தாங்களே கோவிலை அகற்ற ஏற்பாடு செய்தனர். அன்று இரவில் ஒரு ஆங்கில அதிகாரியின் கனவில் ஏராளாமான யானைகள் அவரை விரட்டுவது போல் கனவு வந்தது. இதனால் மனம் மாறிய அந்த அதிகாரி, கோவில் இருந்த இடத்தில் மட்டும் வளைவாக ரோடு அமைக்க ஏற்பாடு செய்தார். இப்போதும் இவ்விடத்தில் ரோடு வளைவாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த இடத்தில் ஏதோ காரணத்தால் விநாயகர் அமர்ந்ததால் இவரை காரண விநாயகர் என்றே அழைக்கின்றனர். மேலும் இப்பகுதி மக்கள் பசு, காளைகளுடன் விவசாயப் பணிகளை நடத்தி வந்தனர். கால்நடைகளின் விருத்திக்காகவும், நோயற்ற வாழ்வுக்காகவும் சிவனின் வாகனமான நந்தியை விநாயகரின் அருகில் வைத்தனர். கருவறையிலேயே விநாயகர் அருகில் நந்தி இருப்பது விசேஷ அம்சம். இங்கு காரணமுருகன், ஆஞ்சநேயர், கரிவரதராஜா பெருமாள் சன்னதிகளும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

    பிரார்த்தனை: விவசாயிகள், விவசாயம் செழிக்க நந்தியுடன் இணைந்த விநாயகரைத் தரிசித்து செல்கின்றனர். இது தவிர புது வாகனங்களுக்கும் பூஜை செய்யப்படுகிறது.

    நேர்த்திக்கடன்: சிதறுகாய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

    காலை 8 மணி முதல் 6 மணி வரை கோவில் நடை திறந்திருக்கும்.
    ×