search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    எழுத்தறி நாதேசுவரர் திருக்கோவில்
    X
    எழுத்தறி நாதேசுவரர் திருக்கோவில்

    அருள்மிகு எழுத்தறி நாதேசுவரர் திருக்கோவில்- இன்னம்பூர்

    கல்வி பயிலத் தொடங்கும் முன், இங்கு உள்ள இறைவனை வழிபட்டால் கல்வி தடையின்றி பயிலும் அருள் கிடைக்கும். இன்று இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    சுவாமி : அருள்மிகு எழுத்தறிநாதர்.
    அம்பாள் : அருள்மிகு சுகந்த குந்தளாம்பிகை, நித்ய கல்யாணி.
    மூர்த்தி : விநாயகர், சுப்பிரமணியர், சூரியன், சந்திரன், பைரவர், நடராஜர், தட்சிணாமூர்த்தி நால்வர்.
    தீர்த்தம் : ஐராவத தீர்த்தம்.
    தலவிருட்சம் : பலா, செண்பகம்.

    தலச்சிறப்பு : ஐராவதம் வழிபட்ட தலம். அகத்தியர் வழிபட்டு இலக்கண உபதேசம் பெற்ற தலம். ஈசன் தாமே கணக்கெழுதிக் கொடுத்த தலமாகும். கல்வி பயிலத் தொடங்கும் முன், இங்கு உள்ள இறைவனை வழிபட்டால் கல்வி தடையின்றி பயிலும் அருள் கிடைக்கும். இத்திருக்கோயிலில் உள்ள சிவலிங்கம் பெரியதாகும்.

    தலவரலாறு : முன் ஒரு சமயத்தில் தான் பெற்ற சாபம் காரணமாக சூரியன் தன்னுடைய பொலிவை இழந்து ஒளி குறைந்து இருக்கும் சமயம் தனக்கு எங்கு சாபம் நிவர்த்தியாகும் என்று யோகிகளிடம் கேட்க பூர்வ ஜென்ம பாவ நிவர்த்தி தலமான ஐராவதம் வழிபட்ட இன்னம்பரில் உள்ள (ஐராவதேஸ்வரர் ) சுயம்புநாத சுவாமியை வழிபட்டால் சாபம் நிவர்த்தியாகும் எனக் கூறுகின்றனர்.

    இங்கு வந்து சிவ பெருமானை தரிசனம் செய்ய முயலும் பொழுது நந்தி, கொடிமரத்து விநாயகர், பலிபீடம் ஆகியன சிவபெருமானை மறைக்கவே தன் நிலையை அவர்களிடம் கூறி தனக்கு சாப விமோசனம் கிடைக்க உதவுமாறு வேண்டுகோள் விடுகின்றார். சூரியனின் வேண்டுகோளுக்கு செவி சாய்த்த நந்தி, கொடிமரத்து விநாயகர், பலிபீடம் ஆகியோர் சூரியன் வழிபட சற்று விலகி வழி கொடுத்தனர். நந்தி விலகிய தலங்களில் இந்த தலமும் ஒன்று.

    நடைதிறப்பு : காலை 7.00 மணி முதல் 12.00 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.00 மணி வரை.

    கோவில் முகவரி :

    அருள்மிகு எழுத்தறி நாதேசுவரர் திருக்கோயில்,
    சுவாமி மலை திருக்கோயிலின் இணைக்கோயிலாகும்.
    இன்னம்பூர் அஞ்சல்,
    திருப்புறம் பியம் (வழி) - 612 003,
    கும்பகோணம் வட்டம்,
    தஞ்சை மாவட்டம்.
    Next Story
    ×