என் மலர்
கோவில்கள்
இந்தக் கோவில், கி.பி.7-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இதனைக் கட்டி முடிக்க சுமார் 100 ஆண்டுகள் ஆகியிருக்கலாம் என்பது வல்லுனர்களின் கருத்து.
குடைவரைக் கோவில்களுக்கு புகழ்பெற்றவை, எல்லோராவில் உள்ள குகைக்கோவில்கள். இது யுனெஸ்கோ சான்று பெற்றது. இங்கு மத ஒற்றுமையை உணர்த்தும் வகையில் பவுத்தம், இந்து, சமணம் ஆகியவற்றுக்கான குடைவரைகள் அமைந்துள்ளன. இவை ஒரே நேரத்தில் வழிபாட்டிலும் இருந்துள்ளன.
எல்லோராவில் ஒரே இடத்தில் 34 குடைவரைக் கோவில்கள் அமைந்துள்ளன. இதில் 1 முதல் 12 வரை பவுத்த கோவில்கள், 13 முதல் 29 வரை இந்து கோவில்கள், மீதமுள்ள ஐந்தும் சமணத்திற்கு உரியவை.
இதில் 16-ம் எண் கொண்ட குடைவரைக் கோவிலாக அமைந்ததுதான், கயிலாசநாதர் திருக்கோவில்.
இந்தக் கோவில், கி.பி.7-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இதனைக் கட்டி முடிக்க சுமார் 100 ஆண்டுகள் ஆகியிருக்கலாம் என்பது வல்லுனர்களின் கருத்து.
சிவபெருமான் வீற்றிருப்பதாக சொல்லப்படும் கயிலாய மலையைப் போன்ற அமைப்பில், இந்தக் கோவில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
சிவபெருமான் பார்வதி மற்றும் நந்தி, பூதகணங்களோடு கயிலையில் வீற்றிருந்தபோது, ராவணன் அந்த மலையை பெயர்த்தெடுக்க முயன்ற புராணக்கதை ஒன்று உண்டு. அந்தக் காட்சி இங்கே தத்ரூபமாக செதுக்கப்பட்டுள்ளது.
கருவறையில் கயிலாசநாதர் மேற்கு நோக்கி வீற்றிருக்கிறார்.
நந்தி மண்டபம், விமானம், இரண்டு கோபுரங்கள், இரண்டு அழகிய கல் தூண்கள் என்ற அமைப்பில் உள்ளஆலயத்தின் அடிபீடத்தில் அமைக்கப்பட்டுள்ள யானைகள், ஆலயத்தையே தாங்குவது போல் காட்சி தருகின்றன.
காண்பவர்களைக் கவரும் வகையிலான இந்த சிற்பக்கலைக்கூடம், மகாராஷ்டிரா மாநிலம் எல்லோராவில் இருக்கிறது. அவுரங்கபாத் நகரில் இருந்து சுமார் 30 கிலோமீட்டரில் இந்த இடத்தை அடையலாம்.
* இது ஒற்றைக்கல் ஆலயமாகும். மலையைக் குடைந்து, தேவையற்ற கற்களை நீக்கி மட்டுமே உருவாக்கப்பட்டது. மொத்த ஆலயமும் 85 ஆயிரம் கன மீட்டர் அளவுள்ள ஒரே பாறையில் வடிக்கப்பட்டிருக்கிறது.
* 148 அடி நீளம், 62 அடி அகலம், 100 அடி உயரம் கொண்ட பிரம்மிப்பூட்டும் இந்தக் கோவில், மேல் பகுதியில் இருந்து செங்குத்தாக செதுக்கப்பட்டிருக்கிறது.
எல்லோராவில் ஒரே இடத்தில் 34 குடைவரைக் கோவில்கள் அமைந்துள்ளன. இதில் 1 முதல் 12 வரை பவுத்த கோவில்கள், 13 முதல் 29 வரை இந்து கோவில்கள், மீதமுள்ள ஐந்தும் சமணத்திற்கு உரியவை.
இதில் 16-ம் எண் கொண்ட குடைவரைக் கோவிலாக அமைந்ததுதான், கயிலாசநாதர் திருக்கோவில்.
இந்தக் கோவில், கி.பி.7-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இதனைக் கட்டி முடிக்க சுமார் 100 ஆண்டுகள் ஆகியிருக்கலாம் என்பது வல்லுனர்களின் கருத்து.
சிவபெருமான் வீற்றிருப்பதாக சொல்லப்படும் கயிலாய மலையைப் போன்ற அமைப்பில், இந்தக் கோவில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
சிவபெருமான் பார்வதி மற்றும் நந்தி, பூதகணங்களோடு கயிலையில் வீற்றிருந்தபோது, ராவணன் அந்த மலையை பெயர்த்தெடுக்க முயன்ற புராணக்கதை ஒன்று உண்டு. அந்தக் காட்சி இங்கே தத்ரூபமாக செதுக்கப்பட்டுள்ளது.
கருவறையில் கயிலாசநாதர் மேற்கு நோக்கி வீற்றிருக்கிறார்.
நந்தி மண்டபம், விமானம், இரண்டு கோபுரங்கள், இரண்டு அழகிய கல் தூண்கள் என்ற அமைப்பில் உள்ளஆலயத்தின் அடிபீடத்தில் அமைக்கப்பட்டுள்ள யானைகள், ஆலயத்தையே தாங்குவது போல் காட்சி தருகின்றன.
காண்பவர்களைக் கவரும் வகையிலான இந்த சிற்பக்கலைக்கூடம், மகாராஷ்டிரா மாநிலம் எல்லோராவில் இருக்கிறது. அவுரங்கபாத் நகரில் இருந்து சுமார் 30 கிலோமீட்டரில் இந்த இடத்தை அடையலாம்.
* இது ஒற்றைக்கல் ஆலயமாகும். மலையைக் குடைந்து, தேவையற்ற கற்களை நீக்கி மட்டுமே உருவாக்கப்பட்டது. மொத்த ஆலயமும் 85 ஆயிரம் கன மீட்டர் அளவுள்ள ஒரே பாறையில் வடிக்கப்பட்டிருக்கிறது.
* 148 அடி நீளம், 62 அடி அகலம், 100 அடி உயரம் கொண்ட பிரம்மிப்பூட்டும் இந்தக் கோவில், மேல் பகுதியில் இருந்து செங்குத்தாக செதுக்கப்பட்டிருக்கிறது.
* கோவில் முழு வடிவம் பெறுவதற்காக வெட்டி நீக்கப்பட்ட பாறைகள் மட்டும் சுமார் 4 லட்சம் டன் எடை இருக்கும் என்கிறார்கள்.
இதையும் படிக்கலாம்... திருப்பாச்சூர் வாசீஸ்வரர் திருத்தலம்
ஈசனின் பேச்சை கேட்காமல் தன் தந்தை தட்சன் நடத்திய யாகத்தில் கலந்து கொள்ள சென்றதால், சிவபெருமானின் சாபத்தால் பூலோகத்தில் பார்வதியாக பிறந்து பூஜை செய்த தலம்.
சென்னையிலிருந்து 50 கி.மீ, திருவள்ளூர் பஸ் நிலையத்தில் இருந்து 3 கி.மீ. தூரத்தில் உள்ளது திருப்பாச்சூர் வாசீஸ்வரர் திருத்தலம்.
இத்திருத்தலம் 1500 ஆண்டுகளுக்கு முன் மூங்கில் காடாக இருந்த பகுதியில் லிங்கத்திற்கு மேலே புற்று வளர்ந்து மூடியது. அந்தப் புற்றின் மீது மேய்ச்சலுக்கு வந்த பசு தினந்தோறும் பால் சுரந்தது. இதை கண்ட இடையன் அங்குள்ள மன்னவனுக்கு தகவல் அளித்தார். இதை அறிந்த மன்னன் அங்கு செனறு புற்றின் அடியில் லிங்கம் இருந்ததைக் கண்டு சதுர வடிவில் ஆவுடையார அமைத்து கோயில் எழுப்பினான்.
மூங்கில் காடில் தோன்றியதால் சிவனுக்கு “பாசூர் நாதர்” என்ற பெயர் ஏற்பட்டது. பாசூர் என்றால் மூங்கில். மூங்கில் காட்டில் சுயம்புவாகத் தோன்றிய இடத்தில் ஆலயம் உள்ளதால் திருப்பாசூர் என்று பெயர் பெற்றது.
ஒரு முறை ஸ்ரீ ஆதிசங்கரர் வடமாநிலத்தில் இருந்து காஞ்சி நகருக்கு யாத்திரை சென்று கொண்டிருக்கும் பொழுது திருப்பாச்சூர் அருகே வரும்போது மூங்கில் காட்டின் அருகே வரும்போது உஷ்ண நிலையை கண்டு ஏதோ தீப்பற்றி எரிவது போல் உணர்ந்தார். பின்பு தன் ஞானதிருஷ்டியால் மூங்கிலை வெட்டும்போது லிங்கத்தின் மேல் தழும்பு ஏற்பட்டுள்ளது இதனால் சாமி உஷ்ணமாக இருப்பதை ஞானத்தில் அறிந்தார்.
பின்பு சுவாமியின் உஷ்ண நிலையை சாந்தம் அடைய கருவறை வெளியே அர்தம் மண்டபத்தில் சுவாமியின் வலது பக்கத்தில் சக்தி வாய்ந்த யந்திரங்களை ஸ்ரீசக்கரம், சிவபூஜை எந்திரமும் பிரதிஷ்டை செய்து சிவனை(பாசூர்) வழிபட்டார். அதன் பின்பு ஸ்வாமி உஷ்ண நிலையை குறைத்ததும் தனது யாத்திரையைத் தொடர்ந்தார்.
இத்திருத்தலத்தில் தெற்கு திசையில் 3 நிலை இராஜகோபுரமும், கிழக்கு திசையில் ஒரு முகப்பு வாயிலும் கொண்டு இவ்வாலயம் விளங்குகிறது. இவ்வாலயத்தில் 2 பிரகாரங்கள் உள்ளன. முதல் வெளிப் பிரகாரம் சுற்றி வரும்போது கிழக்குச் சுற்றில் பலிபீடம், கொடிமரம், நந்தி மண்டபம் உள்ளது மேலும் கிழக்கு நோக்கி இரட்டைகாளி, சொர்ணகாளிக்கு தனி சந்நிதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.
தெற்கு வெளிச் சுற்றிலிருந்து உட்பிரகாரம் செல்ல வழி உள்ளது. 2வது பிரகாரத்தில் மூலவர் வாசீஸ்வரர் சந்நிதியும், இறைவி தங்காதளி அம்மன் சந்நிதியும் தனித்தனி விமானங்களுடன் கிழக்கு நோக்கி அமைந்துள்ளன.
திருப்பாச்சூர் தலத்திலும் ஈசனுக்கு வலது புறம் அம்பிகையும் இந்த இரண்டு சந்நிதிகளுக்கு இடையே விநாயகர், வள்ளி தெய்வயானை சமேத சுப்ரமண்யர் என ஒரே வரிசையில் அனைவரும் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இத்தலத்தில் உள்ள ஸ்வாமி சுயம்பு லிங்கமாகும். இந்த சிவலிங்கத்தை யாரும் தீண்டுவதில்லை. இதனால் சுவாமி தீண்டாத் திருமேனி என்று அழைக்கப்படுகிறார்.
மூலவர் கருவறையில் நுழைவாயில் இடதுபுறம் ஏகாதச விநாயகர் சபை மற்றும் வினை தீர்த்த ஈஸ்வரர் லிங்கம் இருக்கிறது. இதில் 11 விநாயகர் சிலைகளில் ஒன்று மட்டும் வலம்புரி விநாயகர் மற்றும் கேது சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இங்கு கேது தோஷம் நிவிர்த்தி பரிகாரம் செய்ய 11 தேங்காய் கொண்டு தொடுக்கப்பட்ட மாலை, 11 வாழைப்பழம் கொண்டு தொடுக்கப்பட்ட மாலை, 11 கைப்பிடி அருகம்புல் மாலை அணிவித்து, 11 நெய் தீபமேற்றி பிரார்த்தித்துக் கொண்டால் மூன்று மாதங்களுக்குள் நினைத்தது நிறைவேறும் என்பது ஐதீகம்.
திருத்தலத்தில் அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகிய மூவராலும் தேவாரப் பாடல் பெற்ற தலம். தேவாரப் பாடல்பெற்ற 32 தொண்டை நாட்டுத் தலங்களுள் இது 16-வது தலம்.
ஈசனின் பேச்சை கேட்காமல் தன் தந்தை தட்சன் நடத்திய யாகத்தில் கலந்து கொள்ள சென்றதால், சிவபெருமானின் சாபத்தால் பூலோகத்தில் பார்வதியாக பிறந்து பூஜை செய்த தலம்.
ஸ்ரீ வீராகவப்பெருமாள் சூலை நோய் ஏற்பட்டு சிவபெருமானை வழிபாடு செய்ய பிரதிஷ்டை செய்யப்பட்ட திருமேனி வினை தீர்த்த ஈஸ்வரர் பூஜை விக்னங்கள் இன்றி நிறைவேற விநாயகப்பெருமானின் 11 சிலைகளை வீராகவப்பெருமாள் பிரதிஷ்டை செய்து வழிபட்ட திருத்தலம். இதில் திருப்பதி வெங்கடாஜலபதி தன் கல்யாணத்துக்கு பெற்ற கடனை செலுத்த வழிபாடு செய்த திருத்தலம்.
இத்தலத்தில் தினமும் அம்பிகை ஈசனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டதால் முதல் பூஜை அம்பிகைக்கு பின்னரே ஈசனுக்கு அபிஷேகம் நடைபெறுகின்றது.
அம்பிகை, திருமால், சந்திரன், பரத்வாஜார், பிருகு மகரிஷி, சுகர், ரிஷ்ய சிருங்கர், விசுவாமித்திரர் உள்ளிட்ட 10 சித்தர்கள் பூஜை செய்த தலம்.
இத்திருத்தலம் 1500 ஆண்டுகளுக்கு முன் மூங்கில் காடாக இருந்த பகுதியில் லிங்கத்திற்கு மேலே புற்று வளர்ந்து மூடியது. அந்தப் புற்றின் மீது மேய்ச்சலுக்கு வந்த பசு தினந்தோறும் பால் சுரந்தது. இதை கண்ட இடையன் அங்குள்ள மன்னவனுக்கு தகவல் அளித்தார். இதை அறிந்த மன்னன் அங்கு செனறு புற்றின் அடியில் லிங்கம் இருந்ததைக் கண்டு சதுர வடிவில் ஆவுடையார அமைத்து கோயில் எழுப்பினான்.
மூங்கில் காடில் தோன்றியதால் சிவனுக்கு “பாசூர் நாதர்” என்ற பெயர் ஏற்பட்டது. பாசூர் என்றால் மூங்கில். மூங்கில் காட்டில் சுயம்புவாகத் தோன்றிய இடத்தில் ஆலயம் உள்ளதால் திருப்பாசூர் என்று பெயர் பெற்றது.
ஒரு முறை ஸ்ரீ ஆதிசங்கரர் வடமாநிலத்தில் இருந்து காஞ்சி நகருக்கு யாத்திரை சென்று கொண்டிருக்கும் பொழுது திருப்பாச்சூர் அருகே வரும்போது மூங்கில் காட்டின் அருகே வரும்போது உஷ்ண நிலையை கண்டு ஏதோ தீப்பற்றி எரிவது போல் உணர்ந்தார். பின்பு தன் ஞானதிருஷ்டியால் மூங்கிலை வெட்டும்போது லிங்கத்தின் மேல் தழும்பு ஏற்பட்டுள்ளது இதனால் சாமி உஷ்ணமாக இருப்பதை ஞானத்தில் அறிந்தார்.
பின்பு சுவாமியின் உஷ்ண நிலையை சாந்தம் அடைய கருவறை வெளியே அர்தம் மண்டபத்தில் சுவாமியின் வலது பக்கத்தில் சக்தி வாய்ந்த யந்திரங்களை ஸ்ரீசக்கரம், சிவபூஜை எந்திரமும் பிரதிஷ்டை செய்து சிவனை(பாசூர்) வழிபட்டார். அதன் பின்பு ஸ்வாமி உஷ்ண நிலையை குறைத்ததும் தனது யாத்திரையைத் தொடர்ந்தார்.
இத்திருத்தலத்தில் தெற்கு திசையில் 3 நிலை இராஜகோபுரமும், கிழக்கு திசையில் ஒரு முகப்பு வாயிலும் கொண்டு இவ்வாலயம் விளங்குகிறது. இவ்வாலயத்தில் 2 பிரகாரங்கள் உள்ளன. முதல் வெளிப் பிரகாரம் சுற்றி வரும்போது கிழக்குச் சுற்றில் பலிபீடம், கொடிமரம், நந்தி மண்டபம் உள்ளது மேலும் கிழக்கு நோக்கி இரட்டைகாளி, சொர்ணகாளிக்கு தனி சந்நிதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.
தெற்கு வெளிச் சுற்றிலிருந்து உட்பிரகாரம் செல்ல வழி உள்ளது. 2வது பிரகாரத்தில் மூலவர் வாசீஸ்வரர் சந்நிதியும், இறைவி தங்காதளி அம்மன் சந்நிதியும் தனித்தனி விமானங்களுடன் கிழக்கு நோக்கி அமைந்துள்ளன.
திருப்பாச்சூர் தலத்திலும் ஈசனுக்கு வலது புறம் அம்பிகையும் இந்த இரண்டு சந்நிதிகளுக்கு இடையே விநாயகர், வள்ளி தெய்வயானை சமேத சுப்ரமண்யர் என ஒரே வரிசையில் அனைவரும் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இத்தலத்தில் உள்ள ஸ்வாமி சுயம்பு லிங்கமாகும். இந்த சிவலிங்கத்தை யாரும் தீண்டுவதில்லை. இதனால் சுவாமி தீண்டாத் திருமேனி என்று அழைக்கப்படுகிறார்.
மூலவர் கருவறையில் நுழைவாயில் இடதுபுறம் ஏகாதச விநாயகர் சபை மற்றும் வினை தீர்த்த ஈஸ்வரர் லிங்கம் இருக்கிறது. இதில் 11 விநாயகர் சிலைகளில் ஒன்று மட்டும் வலம்புரி விநாயகர் மற்றும் கேது சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இங்கு கேது தோஷம் நிவிர்த்தி பரிகாரம் செய்ய 11 தேங்காய் கொண்டு தொடுக்கப்பட்ட மாலை, 11 வாழைப்பழம் கொண்டு தொடுக்கப்பட்ட மாலை, 11 கைப்பிடி அருகம்புல் மாலை அணிவித்து, 11 நெய் தீபமேற்றி பிரார்த்தித்துக் கொண்டால் மூன்று மாதங்களுக்குள் நினைத்தது நிறைவேறும் என்பது ஐதீகம்.
திருத்தலத்தில் அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகிய மூவராலும் தேவாரப் பாடல் பெற்ற தலம். தேவாரப் பாடல்பெற்ற 32 தொண்டை நாட்டுத் தலங்களுள் இது 16-வது தலம்.
ஈசனின் பேச்சை கேட்காமல் தன் தந்தை தட்சன் நடத்திய யாகத்தில் கலந்து கொள்ள சென்றதால், சிவபெருமானின் சாபத்தால் பூலோகத்தில் பார்வதியாக பிறந்து பூஜை செய்த தலம்.
ஸ்ரீ வீராகவப்பெருமாள் சூலை நோய் ஏற்பட்டு சிவபெருமானை வழிபாடு செய்ய பிரதிஷ்டை செய்யப்பட்ட திருமேனி வினை தீர்த்த ஈஸ்வரர் பூஜை விக்னங்கள் இன்றி நிறைவேற விநாயகப்பெருமானின் 11 சிலைகளை வீராகவப்பெருமாள் பிரதிஷ்டை செய்து வழிபட்ட திருத்தலம். இதில் திருப்பதி வெங்கடாஜலபதி தன் கல்யாணத்துக்கு பெற்ற கடனை செலுத்த வழிபாடு செய்த திருத்தலம்.
இத்தலத்தில் தினமும் அம்பிகை ஈசனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டதால் முதல் பூஜை அம்பிகைக்கு பின்னரே ஈசனுக்கு அபிஷேகம் நடைபெறுகின்றது.
அம்பிகை, திருமால், சந்திரன், பரத்வாஜார், பிருகு மகரிஷி, சுகர், ரிஷ்ய சிருங்கர், விசுவாமித்திரர் உள்ளிட்ட 10 சித்தர்கள் பூஜை செய்த தலம்.
இத்திருத்தலத்தில் கேது தோஷம் நிவர்த்தி அடையும் இங்கு வழிபடுவர்களுக்கு திருமண பாக்கியம், உத்தியோகம், குழந்தை பாக்கியம், குடும்ப பிரச்சினை, கடன் பிரச்சினை தீரும் என்பது ஐதீகம்.
இதையும் படிக்கலாம்..பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோவில்
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் உள்ள முருகனது சிலை போகர் எனும் சித்தரால் உருவாக்கப்பட்டது. முருகனின் சிலை நவபாஷாணத்தல் வடிக்கப்பட்டது.
பழனி முருகன் கோவில் முருகனது அறுபடை வீடுகளில் மூன்றாவதாகும். இது தமிழ்நாட்டில், மதுரையில் இருந்து 100 கிமீ மேற்கே உள்ள பழனியில் அமைந்துள்ளது. இக்கோவில் மிகவும் புராதனமான கோவிலாகும். இது கடல்மட்டத்தை விட 1500 அடி உயர குன்றின் மீது அமைந்துள்ளது. இங்கு முருகன் தண்டாயுதபாணி சுவாமி என்ற பெயரில் கோவில் கொண்டுள்ளார்.
கோவில் வரலாறு :
ஒருநாள் நாரதர் மிக அரிதாக கிடைக்கும் ஞானப்பழத்தை சிவனுக்கு படைப்பதற்காக கொண்டு வந்தார். அப்பொழுது அருகிலுருந்த பார்வதி தேவி அந்த பழத்தை தனது குமாரர்களான விநாயகனுக்கும், குமரனுக்கும் பகிர்ந்து கொடுக்க விரும்பினாள். ஆனால் பரமசிவனோ பழத்தை பகிர்ந்தால் அதன் தனித்தன்மை போய்விடும் எனக்கூறி தனது மைந்தர்கள் இருவருக்கும் ஒரு போட்டியை அறிவித்தார். உலகத்தை யார் முதலில் சுற்றிவருகிறார்களோ அவர்களுக்கு ஞானப்பழத்தை பரிசாக அறிவித்தார்.
குமரன் தனது மயில் வாகனத்தில் ஏறி உலகத்தை சுற்றி வந்தார். விநாயகனோ தனது பெற்றோரை உலகமாக கருதி அவர்களை சுற்றி வந்து ஞானப்பழத்தை வென்றார். இதனால் ஏமாற்றமடைந்த குமரன் அனைத்தையும் துறந்து பழனி மலையில் குடியேறினான். அன்றிலிருந்து அவனது இந்த படை வீடு "பழம் நீ " (பழனி) என அழைக்கப்படுகிறது.
முருகன் சிலையின் சிறப்பு :
இங்குள்ள முருகனது சிலை போகர் எனும் சித்தரால் உருவாக்கப்பட்டது. முருகனின் சிலை நவபாஷாணத்தல் வடிக்கப்பட்டது. நவபாஷாணம் எனப்படுவது ஒன்பது வகையான நச்சுப்பொருட்கள் சேர்ந்தது. இந்த நவபாஷாண சிலை மீன்களைப் போன்று செதில்களை கொண்டதாக கூறப்படுகிறது.
தற்பொழுது இந்த சிலை பழுதுபட்டுள்ளது. சமீப காலம் வரை இரவில் இந்த சிலையின் மீது முழுவதுமாக சந்தனம் பூசப்பட்டு (சந்தனக்காப்பு) காலையில் அந்த சந்தனம் அனைத்து பக்தர்களுக்கும் சிறு வில்லை பிரசாதமாக வழங்கப்பட்டது. இது மிகச்சிறந்த மருந்தாக கருதப்படுகிறது.
போகர் சந்நிதி :
மலைக் கோவிலின் தென்மேற்கு பிரகாரத்தில் போகர் சந்நிதி உள்ளது. முருகனின் நவபாஷான சிலையை சித்தர் போகர் வடித்து தினமும் பூஜை செய்து வந்துள்ளார். அவர் கி.மு. 3000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்துள்ளார். போகர் ஒரு மருத்துவராக இருந்ததால், நவபாஷானங்களை கலந்து சிலை செய்ய முடிந்தது. இந்த கோவில் போகர் வழிபட்ட நவதுர்க்கா, புவனேஸ்வரி, மரகத லிங்கம் ஆகியவை உள்ளன. போகரின் சமாதி இங்கு அமைந்துள்ளது.
பூஜைகள் :
முருகனுக்கு தினமும் ஆறுகால பூஜை நடைபெறுகிறது. காலை 5 மணிக்கு முருகன் விஸ்வரூப தரிசனம் அளிக்கிறார். காலை 7.15 மணிக்கு விழாபூஜை நடைபெறுகிறது. காலை 8 மணிக்கு காலசாந்தி பூஜையும், பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜையும், மாலை 6 மணிக்கு சாயரட்சையும், இரவு 8 மணிக்கு ராக்கால பூஜையும் நடைபெறுகிறது.
தங்கரதம் :
ஒவ்வொரு கிருத்திகை தினத்தன்றும் மற்றும் விசேஷ நாட்களிலும் இரவு 7 மணிக்கு மலையில் கோவில் பிரகாரத்தைச் சுற்றி தங்கரதம், நாதஸ்வரம், திருப்புகழ் இசை மற்றும் கோவில் பரிவாரங்களுடன் வலம் வருகிறது. பக்தர்களும் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்ற தங்கரதம் இழுக்கிறார்கள்.
தங்கரதம் இழுக்க கிருத்திகை தினங்களில் ரூ. 2000மும் மற்ற சாதாரண நாட்களில் ரூ.1500மும் கட்டணம் செலுத்த வேண்டும். இக்கட்டணம் மாலை 4.30 மணிக்குள் தேவஸ்தான அலுவலகத்தில் பணமாக செலுத்த வேண்டும். தைப்பூசம், பங்குனி உத்திரம், தசரா பண்டிகையின் பத்து நாட்கள், சூரசம்ஹாரம், கார்த்திகை தீபம் ஆகிய நாட்களில் தங்கரதம் வலம் இல்லை. மயில் வாகனத்தில் முருகன் பவனி வர கட்டணம் ரூ. 300 ஆகும்.
விழாக்கள் :
பங்குனி உத்திரம், தைப்பூசம், கந்த சஷ்டி, அக்னி நட்சத்திரம் ஆகிய விழாக்கள் முக்கியமானவையாகும். வைகாசி விசாகம், திருக்கார்த்திகை மற்றும் பிற பண்டிகைகளும் இங்கு கொண்டாடப்படுகின்றன.
காவடி மற்றும் நடைப்பயணம் :
பக்தர்கள் காவடி கட்டி நடைப்பயணம் மேற்கொண்டு வந்து முருகனை வழிபடுவது மிகவும் சிறப்பான வழக்கமாகும். லட்சக்கணக்கானோர் தைப்பூசத் திருநாளன்று காவடிகட்டி நடைப்பயணம் மேற்கொண்டு இங்கு வந்து முருகனை தரிசிக்கின்றனர்.
வின்ச் சேவை :
1966 ஆண்டு தேவஸ்தானம் 22 டன் எடை இழுக்கும் திறன் கொண்ட வின்ச் சேவையை அறிமுகம் செய்தது. இதன் மூலம் 36 பயணிகள் பிரயாணம் செய்ய முடியும். இது 290 மீட்டர் (960 அடி) நீள ரயில் பாதையில் இழுக்கப்படுகிறது. மலையின் உயரம் 136 மீட்டர் (450 அடி) ஆகும். பிரயாண நேரும் 480 விநாடிகள் ஆகும்.
தினமும் காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை வின்ச் சேவை நடைபெறுகிறது. தற்சமயம் 3 பாதைகளில் வின்ச்கள் இயக்கப்படுகின்றன. கிருத்திகை மற்றும் பிற விழா நாட்களில் காலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை வின்ச் சேவை நடைபெறுகிறது. இதற்கான கட்டணம் பெரியவர்களுக்கு ரூ. 10 மற்றும் 3 வயது முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு கட்டணம் ரூ. 5 ஆகும்.
ரோப் கார் :
தற்போது மலைக்கு செல்ல ரோப் கார் வசதியும் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சில விநாடிகளில் மலை உச்சிக்கு சென்று விட முடியும். இதற்கான கட்டணம் பெரியவர்களுக்கு ரூ. 15 ஆகும்.
மேலும் விவரங்களுக்கு :
இணை ஆணையர்
அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி தேவஸ்தானம் அலுவலகம்
அடிவாரம், பழனி - 624 601.
கோவில் வரலாறு :
ஒருநாள் நாரதர் மிக அரிதாக கிடைக்கும் ஞானப்பழத்தை சிவனுக்கு படைப்பதற்காக கொண்டு வந்தார். அப்பொழுது அருகிலுருந்த பார்வதி தேவி அந்த பழத்தை தனது குமாரர்களான விநாயகனுக்கும், குமரனுக்கும் பகிர்ந்து கொடுக்க விரும்பினாள். ஆனால் பரமசிவனோ பழத்தை பகிர்ந்தால் அதன் தனித்தன்மை போய்விடும் எனக்கூறி தனது மைந்தர்கள் இருவருக்கும் ஒரு போட்டியை அறிவித்தார். உலகத்தை யார் முதலில் சுற்றிவருகிறார்களோ அவர்களுக்கு ஞானப்பழத்தை பரிசாக அறிவித்தார்.
குமரன் தனது மயில் வாகனத்தில் ஏறி உலகத்தை சுற்றி வந்தார். விநாயகனோ தனது பெற்றோரை உலகமாக கருதி அவர்களை சுற்றி வந்து ஞானப்பழத்தை வென்றார். இதனால் ஏமாற்றமடைந்த குமரன் அனைத்தையும் துறந்து பழனி மலையில் குடியேறினான். அன்றிலிருந்து அவனது இந்த படை வீடு "பழம் நீ " (பழனி) என அழைக்கப்படுகிறது.
முருகன் சிலையின் சிறப்பு :
இங்குள்ள முருகனது சிலை போகர் எனும் சித்தரால் உருவாக்கப்பட்டது. முருகனின் சிலை நவபாஷாணத்தல் வடிக்கப்பட்டது. நவபாஷாணம் எனப்படுவது ஒன்பது வகையான நச்சுப்பொருட்கள் சேர்ந்தது. இந்த நவபாஷாண சிலை மீன்களைப் போன்று செதில்களை கொண்டதாக கூறப்படுகிறது.
தற்பொழுது இந்த சிலை பழுதுபட்டுள்ளது. சமீப காலம் வரை இரவில் இந்த சிலையின் மீது முழுவதுமாக சந்தனம் பூசப்பட்டு (சந்தனக்காப்பு) காலையில் அந்த சந்தனம் அனைத்து பக்தர்களுக்கும் சிறு வில்லை பிரசாதமாக வழங்கப்பட்டது. இது மிகச்சிறந்த மருந்தாக கருதப்படுகிறது.
போகர் சந்நிதி :
மலைக் கோவிலின் தென்மேற்கு பிரகாரத்தில் போகர் சந்நிதி உள்ளது. முருகனின் நவபாஷான சிலையை சித்தர் போகர் வடித்து தினமும் பூஜை செய்து வந்துள்ளார். அவர் கி.மு. 3000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்துள்ளார். போகர் ஒரு மருத்துவராக இருந்ததால், நவபாஷானங்களை கலந்து சிலை செய்ய முடிந்தது. இந்த கோவில் போகர் வழிபட்ட நவதுர்க்கா, புவனேஸ்வரி, மரகத லிங்கம் ஆகியவை உள்ளன. போகரின் சமாதி இங்கு அமைந்துள்ளது.
பூஜைகள் :
முருகனுக்கு தினமும் ஆறுகால பூஜை நடைபெறுகிறது. காலை 5 மணிக்கு முருகன் விஸ்வரூப தரிசனம் அளிக்கிறார். காலை 7.15 மணிக்கு விழாபூஜை நடைபெறுகிறது. காலை 8 மணிக்கு காலசாந்தி பூஜையும், பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜையும், மாலை 6 மணிக்கு சாயரட்சையும், இரவு 8 மணிக்கு ராக்கால பூஜையும் நடைபெறுகிறது.
தங்கரதம் :
ஒவ்வொரு கிருத்திகை தினத்தன்றும் மற்றும் விசேஷ நாட்களிலும் இரவு 7 மணிக்கு மலையில் கோவில் பிரகாரத்தைச் சுற்றி தங்கரதம், நாதஸ்வரம், திருப்புகழ் இசை மற்றும் கோவில் பரிவாரங்களுடன் வலம் வருகிறது. பக்தர்களும் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்ற தங்கரதம் இழுக்கிறார்கள்.
தங்கரதம் இழுக்க கிருத்திகை தினங்களில் ரூ. 2000மும் மற்ற சாதாரண நாட்களில் ரூ.1500மும் கட்டணம் செலுத்த வேண்டும். இக்கட்டணம் மாலை 4.30 மணிக்குள் தேவஸ்தான அலுவலகத்தில் பணமாக செலுத்த வேண்டும். தைப்பூசம், பங்குனி உத்திரம், தசரா பண்டிகையின் பத்து நாட்கள், சூரசம்ஹாரம், கார்த்திகை தீபம் ஆகிய நாட்களில் தங்கரதம் வலம் இல்லை. மயில் வாகனத்தில் முருகன் பவனி வர கட்டணம் ரூ. 300 ஆகும்.
விழாக்கள் :
பங்குனி உத்திரம், தைப்பூசம், கந்த சஷ்டி, அக்னி நட்சத்திரம் ஆகிய விழாக்கள் முக்கியமானவையாகும். வைகாசி விசாகம், திருக்கார்த்திகை மற்றும் பிற பண்டிகைகளும் இங்கு கொண்டாடப்படுகின்றன.
காவடி மற்றும் நடைப்பயணம் :
பக்தர்கள் காவடி கட்டி நடைப்பயணம் மேற்கொண்டு வந்து முருகனை வழிபடுவது மிகவும் சிறப்பான வழக்கமாகும். லட்சக்கணக்கானோர் தைப்பூசத் திருநாளன்று காவடிகட்டி நடைப்பயணம் மேற்கொண்டு இங்கு வந்து முருகனை தரிசிக்கின்றனர்.
வின்ச் சேவை :
1966 ஆண்டு தேவஸ்தானம் 22 டன் எடை இழுக்கும் திறன் கொண்ட வின்ச் சேவையை அறிமுகம் செய்தது. இதன் மூலம் 36 பயணிகள் பிரயாணம் செய்ய முடியும். இது 290 மீட்டர் (960 அடி) நீள ரயில் பாதையில் இழுக்கப்படுகிறது. மலையின் உயரம் 136 மீட்டர் (450 அடி) ஆகும். பிரயாண நேரும் 480 விநாடிகள் ஆகும்.
தினமும் காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை வின்ச் சேவை நடைபெறுகிறது. தற்சமயம் 3 பாதைகளில் வின்ச்கள் இயக்கப்படுகின்றன. கிருத்திகை மற்றும் பிற விழா நாட்களில் காலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை வின்ச் சேவை நடைபெறுகிறது. இதற்கான கட்டணம் பெரியவர்களுக்கு ரூ. 10 மற்றும் 3 வயது முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு கட்டணம் ரூ. 5 ஆகும்.
ரோப் கார் :
தற்போது மலைக்கு செல்ல ரோப் கார் வசதியும் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சில விநாடிகளில் மலை உச்சிக்கு சென்று விட முடியும். இதற்கான கட்டணம் பெரியவர்களுக்கு ரூ. 15 ஆகும்.
மேலும் விவரங்களுக்கு :
இணை ஆணையர்
அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி தேவஸ்தானம் அலுவலகம்
அடிவாரம், பழனி - 624 601.
தொலைபேசி: +91-4545-241417 / 242236
இதையும் படிக்கலாம்...திருவேட்களம் பாசுபதேஸ்வரர் திருக்கோவில்
இந்த ஆலய இறைவனின் திருநாமம் பாசுபதநாதர், இறைவியின் திருநாமம் நல்லநாயகி, சற்குணாம்பாள் என்பதாகும். சம்பந்தர், அப்பர் ஆகியோரின் பாடல் பெற்ற தலம் இது.
சைவ திருத்தலங்களில் களம் என்பதாய் முடியும் திருத்தலங்கள் மூன்று. அவை திருஅஞ்சைக்களம், திருநெடுங்களம், திருவேட்களம். இவற்றில் திருஅஞ்சைக்களம், கேரளாவின் கொடுங்கோளூரில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. பாடல் பெற்ற சிவத்தலங்களில் மலைநாட்டில் அமைந்த ஒரே தலம் இதுவே. இத்தல இறைவன் பெயர் அஞ்சை களத்தீசர். இறைவியின் திருநாமம் உமையம்மை என்பதாகும்.
அடுத்து திருநெடுங்களம், திருச்சி–தஞ்சை நெடுஞ்சாலையில் தூவாக்குடியில் இருந்து 3 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. இது காவிரியின் தென்கரை தலங்களில் ஒன்றாகும். இறைவன் நெடுங்களநாதர், இறைவி மங்கள நாயகி. வங்கியசோழன், அகத்தியர் ஆகியோர் வழிபட்ட தலம் இது.
மூன்றாவது திருவேட்களம். இது பூலோக கயிலாயம் எனப்படும் சிதம்பரத்திற்கு கிழக்கே 2 கிலோமீட்டர் தொலைவில், அண்ணாமலை பல்கலைக்கழக வளாகத்தில் இருக்கிறது. காவிரியின் வடகரை தலம். இறைவனின் திருநாமம் பாசுபதநாதர், இறைவியின் திருநாமம் நல்லநாயகி, சற்குணாம்பாள் என்பதாகும். சம்பந்தர், அப்பர் ஆகியோரின் பாடல் பெற்ற தலம் இது.
மகாபாரதத்தில் துரியோதனன் ஏற்பாட்டின்படி, தருமன் சகுனியோடு பகடையாடினான். பகடை ஆட்டத்தில் தோற்றவர் பன்னிரண்டு ஆண்டு வனவாசமும், ஓராண்டு அஞ்ஞாதவாசமும் (தலைமறைவு வாழ்க்கை) வாழவேண்டும் என்பது விதி. இதன்படி தோற்ற பாண்டவர்கள் வனவாசம் சென்றனர். வனவாசம் முடிந்து வந்ததும், பாண்டவர்கள் நாட்டிற்கு திரும்பி பங்கு கேட்பார்கள் என்பதால் அவர்களை போர் மூலமாக வீழ்த்த பல்வேறு தேசத்து அரசர்களையும், படைவீரர்களையும் துரியோதனன் திரட்டிக் கொண்டிருந்தான்.
இதுபற்றி பாண்டவர்களுக்கு வியாசர் தெரிவித்தார். பலம் பொருந்திய அவர்களது படைகளுடன் போரிட உங்களுக்கு தெய்வத்தின் அனுக்கிரகமும், பலமான அஸ்திரங்களும் தேவை என்பதையும் அவர் நினைவுறுத்தினார். விரைவாக படையை திரட்டும்படியும், தெய்வீக ஆற்றல் மிகுந்த அஸ்திரங்களை இறைவனிடம் கேட்டுப்பெறும் படியும் அறிவுறுத்தினார். இதற்கான ஆயத்தப்பணியில் பாண்டவர்கள் ஈடுபட்டனர்.
அர்ச்சுனன், தான் தவம் செய்ய தகுந்த இடம் தேடி அலைந்தான். அப்போது வயது முதிர்ந்த அந்தணர் வேடத்தில் வந்த இந்திரன், சிவனை நோக்கி தியானம் செய்யும்படி கூறினான். தவம் செய்ய உகந்த இடம் எது? என்று தன் மானசீக குருவான கிருஷ்ணரிடம் வேண்டினான் அர்ச்சுனன்.
அவனது வேண்டுதலால் மகிழ்ந்த கிருஷ்ணர், தில்லை வனமான சிதம்பரத்திற்கு அருகில் உள்ள மூங்கில் வனத்தை தேர்ந்தெடுக்குமாறு கூறி அனுப்பிவைத்தார். கிருஷ்ணர் கூறியபடி அவ்விடத்திற்கு வந்து சேர்ந்த அர்ச்சுனன், ஒற்றைக் காலில் நின்றபடி சிவனை நோக்கி தவம் மேற்கொண்டான்.
அர்ச்சுனன் தவம் செய்வதை அறிந்த துரியோதனன், மூகாசுரன் என்னும் அசுரனை அனுப்பி வைத்தான். அதே நேரத்தில் அர்ச்சுனனுக்கு அருள்புரிவதற்காக ஈசன், வேடுவ வேடம் கொண்டு அங்கு வந்தார். பன்றி உருவம் எடுத்து வந்த அசுரன், அர்ச்சுனனின் தவத்தை கலைக்க முயன்றான். இதை உணர்ந்த அர்ச்சுனன், அந்த பன்றியின் மீது அம்பு தொடுத்தான். அதைக் கண்டு விலகி ஓடிய பன்றியை, அம்பு துரத்திச் சென்று வீழ்த்தியது. கண் விழித்த அர்ச்சுனன், பன்றியைத் தேடி வந்தான். அங்கு அவன் கண்ட காட்சி திகைக்கச் செய்தது. தன்னுடைய அம்பு மட்டுமல்லாது, பன்றியின் மீது மற்றொரு அம்பும் தைத்திருந்தது.
அப்போது வேடன் உருவில் இருந்த ஈசன் அங்கு வந்தார். அவர், ‘பன்றியை எய்து வீழ்த்தியது நான்தான். ஆகையால் அதை வீழ்த்திய பெருமை என்னையே சாரும். அது எனக்கே சொந்தம்’ என்றார்.
அர்ச்சுனன் அதை ஏற்க மறுத்தான். இதனால் இருவருக்கும் இடையே தொடங்கிய சொற்போர், ஒரு கட்டத்தில் வில்போராக மாறியது. இந்த போரில் அர்ச்சுனனால் வெற்றி பெற முடியவில்லை. இதனால் அக்னி தேவனிடம் இருந்து பலம் பொருந்திய காண்டீபத்தை அர்ச்சுனன் பெற்றான். ஆனால் அதை சிவபெருமான் பறித்து இரண்டாக முறித்து எறிந்தார்.
இதுபொறுக்காத அர்ச்சுனன் முறிந்த அம்பை எடுத்து, ஈசனின் தலையில் அடித்தான். இதையடுத்து ஈசன், தன் காலால் அர்ச்சுனனை உந்தித்தள்ள அவன் மேல்நோக்கிச் சென்றான். அப்போதுதான், வந்திருப்பது சாதாரண வேடன் இல்லை என்பதை அர்ச்சுனன் உணர்ந்தான். ஈசனை நினைத்து மனமுருக மன்னிப்பு வேண்டினான். இதையடுத்து அவன் கீழே வரும் வேளையில் அங்கு ஒரு தீர்த்தத்தை உருவாக்கி அதில் விழச்செய்து காப்பாற்றினார்.
பின்னர் இறைவன் அம்பாளுடன் அர்ச்சுனனுக்கு காட்சி கொடுத்தார். மேலும் பாசுபத அஸ்திரத்தையும் அளித்தார். அர்ச்சுனனுடன் இறைவன் களம் புகுந்ததால், இந்த ஊர் திருவேட்களம் என்று அழைக்கப்படுகிறது. இறைவன் பாசுபத அஸ்திரம் வழங்கியதால், பாசுபதநாதர் என்று பெயர் பெற்றார். அர்ச்சுனன் விழுந்த தீர்த்தம் கிருபசாகரம் என்று அழைக்கப்படுகிறது. தல விருட்சம் மூங்கில். பாடல்பெற்ற காவிரி வடகரை சிவத்தலங்களில், இது இரண்டாவது திருத்தலமாகும். தலவரலாற்றின் அடிப்படையில் இவ்வாலயம் மகாபாரத வரலாற்றுடன் தொடர்புடையதாகவும், கவுரவர்களை வெல்ல பாண்டவர்களுக்கு வல்லமை அளித்த திருத்தலமாகவும் விளங்குகின்றது.
கோவில் அமைப்பு
மூன்று நிலைகளுடனும் ஐந்து கலசங்களுடனும் கிழக்கு நோக்கி கம்பீரமாக காட்சியளிக்கிறது ராஜகோபுரம். இதற்கு முன்பாக வளர்ந்து நிற்கும் நாகலிங்க மரமும், எதிரில் நான்கு பக்கமும் படிக்கட்டுகளுடன் அழகுற காட்சியளிக்கும் தல தீர்த்தமான கிருபாசாகரமும் கோவிலுக்கு கொள்ளை அழகு சேர்க்கின்றது. கோபுரத்தை வணங்கி உள்ளே சென்றால், துவாஜாரோகண மண்டபமும், பிரகார சுற்றில் சித்தி விநாயகர், சோமாஸ்கந்தர், நால்வருடன் சொக்கநாதர்–மீனாட்சி, சுப்பிரமணியர், மகாலட்சுமி, நவக்கிரகம், பைரவர், சந்திர–சூரியர் சன்னிதிகள் உள்ளன.
கர்ப்பக்கிரகம் மற்றும் அர்த்த மண்டபத்தின் கோஷ்டத்தில் உச்சி விநாயகர், நர்த்தன கணபதி, தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் வீற்றிருக்கின்றனர். சண்டிகேஸ்வரர் தனி சன்னிதியில் இருந்து அருள்புரிகிறார். கொடிமரம், பலிபீடம், நந்தியம்பெருமானையும் வணங்கி உள்ளே செல்ல, சபாமண்டபத்தில் வலதுபுறத்தில் கிரீடத்துடன் கூடிய நடராஜரும் சிவகாமியும் தரிசனம் தருகின்றனர். இடதுபக்கத்தில் நால்வர் உள்பட உற்சவ மூர்த்தங்கள் இடம்பெற்றுள்ளன. இவைகளில் விநாயகர், வள்ளிதேவசேனா சமேத முருகன், சோமாஸ்கந்தர், சற்குணாம்பிகை, அஸ்திரதேவர் ஆகியோரது திருவுருவங்கள் மிக நுட்பமாகவும் நேர்த்தியாகவும் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.
திருமேனியில் தழும்பு
கருவறையில் இறைவன் சிவலிங்க திருமேனியாக கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். அர்ச்சுனன் வில்லால் அடித்த தழும்பு இங்குள்ள இறைவன் திருமேனியில் உள்ளது. அம்பிகை சற்குணாம்பிகை தன் இருகரங்களில் நீலோத்பவ மலர், தாமரை மலர் ஏந்தி, மற்ற இருகரங்களில் வரத அபய முத்திரைக்காட்டி அருள்பாலிக்கின்றாள். அம்பிகை சன்னிதியின் நேர் எதிரில் மகாமண்டபத்தில் ஆலயத்தின் தலவரலாற்றுடன் தொடர்புடைய சிற்பங்கள் அழகுற வடிக்கப்பட்டுள்ளன. இறைவனும் இறைவியும் வேடுவ வடிவத்தில் நாய்களுடன் செல்வது, அர்ச்சுனனுடன் போர்புரிவது, அர்ச்சுனன் தவம் செய்வது, மூகாசுரன் தவத்திற்கு இடையூறு செய்வது, இந்திரன், ரிஷப வாகன காட்சி, அர்ச்சுன அஸ்திரம், அம்புகளை சமர்ப்பணம் செய்வது போன்ற வரலாற்றுடன் தொடர்புடைய காட்சிகள் அழகுததும்புவதாகவும், கலையுணர்வும் இறையுணர்வும் தருவதாகவும் படைக்கப்பட்டுள்ளன.
சுவாமிக்கும் அம்பிகைக்கும் அடுத்ததாக பிரகாரத்தில் உள்ள முருகன் சன்னிதி மிகவும் சிறப்புக்குரியதாகும். திருவாசியுடன் ஒரே கல்லில் வடிக்கப்பட்டுள்ள இந்தச் சிற்பம் நுணுக்கமான கலைவேலைப்பாடு கொண்டிருக் கிறது. அருணகிரிநாதர் தம் திருப்புகழில் இவ்வாலய முருகனை புகழ்ந்து பாடியுள்ளார். இருகைகளாலும் அம்புவிடக் கூடிய அமைப்பில், அர்ச்சுனனின் சிலை உள்ளது. பாசுபதம் ஏந்திய மூர்த்தியும், அர்ச்சுனன் சிலையும் மிக பழங்காலத்தில் குளத்திலிருந்து கிடைத்ததாக கூறப்படுகின்றது. தலவிருட்சமான மூங்கில் புனர்பூச நட்சத்திரத்திற்குரியது என்பதால், அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருவேட்கள நாயகனை தரிசிப்பது விசேஷம். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், அருணகிரிநாதர் ஆகியோரால் பாடப்பெற்ற இத்தலத்தை, நக்கீரர், பதஞ்சலி, வியாக்கிரபாதர் மற்றும் ஆன்மிக அடியார்கள் பலர் தரிசித்து இறையருள் பெற்றுள்ளனர்.
வைகாசி விழா
நாள்தோறும் ஐந்து கால பூஜைகள் நடந்தேறும் இந்தக் கோவிலின் முக்கிய விழா வைகாசி விசாகமாகும். காலை அர்ச்சுனன் தவத்திற்கு செல்லுதல், மாலை 5 மணியளவில் சுவாமி வேடரூபம், அம்பிகை வேடுவச்சி, பூதகணங்கள் வேடக்கணங்களாகச் செல்லுதல், ஊர்வாழ் பழங்குடியினர் பன்றி வேடம் அணிந்து புராணவரலாறு கலைநிகழ்ச்சியாக நடத்தப்படும். வாண வேடிக்கையுடன் பாசுபதம் வழங்குதல், பஞ்சமூர்த்திகள் வீதிவலம் என்று விழா களை கட்டும்.
அடுத்து திருநெடுங்களம், திருச்சி–தஞ்சை நெடுஞ்சாலையில் தூவாக்குடியில் இருந்து 3 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. இது காவிரியின் தென்கரை தலங்களில் ஒன்றாகும். இறைவன் நெடுங்களநாதர், இறைவி மங்கள நாயகி. வங்கியசோழன், அகத்தியர் ஆகியோர் வழிபட்ட தலம் இது.
மூன்றாவது திருவேட்களம். இது பூலோக கயிலாயம் எனப்படும் சிதம்பரத்திற்கு கிழக்கே 2 கிலோமீட்டர் தொலைவில், அண்ணாமலை பல்கலைக்கழக வளாகத்தில் இருக்கிறது. காவிரியின் வடகரை தலம். இறைவனின் திருநாமம் பாசுபதநாதர், இறைவியின் திருநாமம் நல்லநாயகி, சற்குணாம்பாள் என்பதாகும். சம்பந்தர், அப்பர் ஆகியோரின் பாடல் பெற்ற தலம் இது.
மகாபாரதத்தில் துரியோதனன் ஏற்பாட்டின்படி, தருமன் சகுனியோடு பகடையாடினான். பகடை ஆட்டத்தில் தோற்றவர் பன்னிரண்டு ஆண்டு வனவாசமும், ஓராண்டு அஞ்ஞாதவாசமும் (தலைமறைவு வாழ்க்கை) வாழவேண்டும் என்பது விதி. இதன்படி தோற்ற பாண்டவர்கள் வனவாசம் சென்றனர். வனவாசம் முடிந்து வந்ததும், பாண்டவர்கள் நாட்டிற்கு திரும்பி பங்கு கேட்பார்கள் என்பதால் அவர்களை போர் மூலமாக வீழ்த்த பல்வேறு தேசத்து அரசர்களையும், படைவீரர்களையும் துரியோதனன் திரட்டிக் கொண்டிருந்தான்.
இதுபற்றி பாண்டவர்களுக்கு வியாசர் தெரிவித்தார். பலம் பொருந்திய அவர்களது படைகளுடன் போரிட உங்களுக்கு தெய்வத்தின் அனுக்கிரகமும், பலமான அஸ்திரங்களும் தேவை என்பதையும் அவர் நினைவுறுத்தினார். விரைவாக படையை திரட்டும்படியும், தெய்வீக ஆற்றல் மிகுந்த அஸ்திரங்களை இறைவனிடம் கேட்டுப்பெறும் படியும் அறிவுறுத்தினார். இதற்கான ஆயத்தப்பணியில் பாண்டவர்கள் ஈடுபட்டனர்.
அர்ச்சுனன், தான் தவம் செய்ய தகுந்த இடம் தேடி அலைந்தான். அப்போது வயது முதிர்ந்த அந்தணர் வேடத்தில் வந்த இந்திரன், சிவனை நோக்கி தியானம் செய்யும்படி கூறினான். தவம் செய்ய உகந்த இடம் எது? என்று தன் மானசீக குருவான கிருஷ்ணரிடம் வேண்டினான் அர்ச்சுனன்.
அவனது வேண்டுதலால் மகிழ்ந்த கிருஷ்ணர், தில்லை வனமான சிதம்பரத்திற்கு அருகில் உள்ள மூங்கில் வனத்தை தேர்ந்தெடுக்குமாறு கூறி அனுப்பிவைத்தார். கிருஷ்ணர் கூறியபடி அவ்விடத்திற்கு வந்து சேர்ந்த அர்ச்சுனன், ஒற்றைக் காலில் நின்றபடி சிவனை நோக்கி தவம் மேற்கொண்டான்.
அர்ச்சுனன் தவம் செய்வதை அறிந்த துரியோதனன், மூகாசுரன் என்னும் அசுரனை அனுப்பி வைத்தான். அதே நேரத்தில் அர்ச்சுனனுக்கு அருள்புரிவதற்காக ஈசன், வேடுவ வேடம் கொண்டு அங்கு வந்தார். பன்றி உருவம் எடுத்து வந்த அசுரன், அர்ச்சுனனின் தவத்தை கலைக்க முயன்றான். இதை உணர்ந்த அர்ச்சுனன், அந்த பன்றியின் மீது அம்பு தொடுத்தான். அதைக் கண்டு விலகி ஓடிய பன்றியை, அம்பு துரத்திச் சென்று வீழ்த்தியது. கண் விழித்த அர்ச்சுனன், பன்றியைத் தேடி வந்தான். அங்கு அவன் கண்ட காட்சி திகைக்கச் செய்தது. தன்னுடைய அம்பு மட்டுமல்லாது, பன்றியின் மீது மற்றொரு அம்பும் தைத்திருந்தது.
அப்போது வேடன் உருவில் இருந்த ஈசன் அங்கு வந்தார். அவர், ‘பன்றியை எய்து வீழ்த்தியது நான்தான். ஆகையால் அதை வீழ்த்திய பெருமை என்னையே சாரும். அது எனக்கே சொந்தம்’ என்றார்.
அர்ச்சுனன் அதை ஏற்க மறுத்தான். இதனால் இருவருக்கும் இடையே தொடங்கிய சொற்போர், ஒரு கட்டத்தில் வில்போராக மாறியது. இந்த போரில் அர்ச்சுனனால் வெற்றி பெற முடியவில்லை. இதனால் அக்னி தேவனிடம் இருந்து பலம் பொருந்திய காண்டீபத்தை அர்ச்சுனன் பெற்றான். ஆனால் அதை சிவபெருமான் பறித்து இரண்டாக முறித்து எறிந்தார்.
இதுபொறுக்காத அர்ச்சுனன் முறிந்த அம்பை எடுத்து, ஈசனின் தலையில் அடித்தான். இதையடுத்து ஈசன், தன் காலால் அர்ச்சுனனை உந்தித்தள்ள அவன் மேல்நோக்கிச் சென்றான். அப்போதுதான், வந்திருப்பது சாதாரண வேடன் இல்லை என்பதை அர்ச்சுனன் உணர்ந்தான். ஈசனை நினைத்து மனமுருக மன்னிப்பு வேண்டினான். இதையடுத்து அவன் கீழே வரும் வேளையில் அங்கு ஒரு தீர்த்தத்தை உருவாக்கி அதில் விழச்செய்து காப்பாற்றினார்.
பின்னர் இறைவன் அம்பாளுடன் அர்ச்சுனனுக்கு காட்சி கொடுத்தார். மேலும் பாசுபத அஸ்திரத்தையும் அளித்தார். அர்ச்சுனனுடன் இறைவன் களம் புகுந்ததால், இந்த ஊர் திருவேட்களம் என்று அழைக்கப்படுகிறது. இறைவன் பாசுபத அஸ்திரம் வழங்கியதால், பாசுபதநாதர் என்று பெயர் பெற்றார். அர்ச்சுனன் விழுந்த தீர்த்தம் கிருபசாகரம் என்று அழைக்கப்படுகிறது. தல விருட்சம் மூங்கில். பாடல்பெற்ற காவிரி வடகரை சிவத்தலங்களில், இது இரண்டாவது திருத்தலமாகும். தலவரலாற்றின் அடிப்படையில் இவ்வாலயம் மகாபாரத வரலாற்றுடன் தொடர்புடையதாகவும், கவுரவர்களை வெல்ல பாண்டவர்களுக்கு வல்லமை அளித்த திருத்தலமாகவும் விளங்குகின்றது.
கோவில் அமைப்பு
மூன்று நிலைகளுடனும் ஐந்து கலசங்களுடனும் கிழக்கு நோக்கி கம்பீரமாக காட்சியளிக்கிறது ராஜகோபுரம். இதற்கு முன்பாக வளர்ந்து நிற்கும் நாகலிங்க மரமும், எதிரில் நான்கு பக்கமும் படிக்கட்டுகளுடன் அழகுற காட்சியளிக்கும் தல தீர்த்தமான கிருபாசாகரமும் கோவிலுக்கு கொள்ளை அழகு சேர்க்கின்றது. கோபுரத்தை வணங்கி உள்ளே சென்றால், துவாஜாரோகண மண்டபமும், பிரகார சுற்றில் சித்தி விநாயகர், சோமாஸ்கந்தர், நால்வருடன் சொக்கநாதர்–மீனாட்சி, சுப்பிரமணியர், மகாலட்சுமி, நவக்கிரகம், பைரவர், சந்திர–சூரியர் சன்னிதிகள் உள்ளன.
கர்ப்பக்கிரகம் மற்றும் அர்த்த மண்டபத்தின் கோஷ்டத்தில் உச்சி விநாயகர், நர்த்தன கணபதி, தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் வீற்றிருக்கின்றனர். சண்டிகேஸ்வரர் தனி சன்னிதியில் இருந்து அருள்புரிகிறார். கொடிமரம், பலிபீடம், நந்தியம்பெருமானையும் வணங்கி உள்ளே செல்ல, சபாமண்டபத்தில் வலதுபுறத்தில் கிரீடத்துடன் கூடிய நடராஜரும் சிவகாமியும் தரிசனம் தருகின்றனர். இடதுபக்கத்தில் நால்வர் உள்பட உற்சவ மூர்த்தங்கள் இடம்பெற்றுள்ளன. இவைகளில் விநாயகர், வள்ளிதேவசேனா சமேத முருகன், சோமாஸ்கந்தர், சற்குணாம்பிகை, அஸ்திரதேவர் ஆகியோரது திருவுருவங்கள் மிக நுட்பமாகவும் நேர்த்தியாகவும் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.
திருமேனியில் தழும்பு
கருவறையில் இறைவன் சிவலிங்க திருமேனியாக கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். அர்ச்சுனன் வில்லால் அடித்த தழும்பு இங்குள்ள இறைவன் திருமேனியில் உள்ளது. அம்பிகை சற்குணாம்பிகை தன் இருகரங்களில் நீலோத்பவ மலர், தாமரை மலர் ஏந்தி, மற்ற இருகரங்களில் வரத அபய முத்திரைக்காட்டி அருள்பாலிக்கின்றாள். அம்பிகை சன்னிதியின் நேர் எதிரில் மகாமண்டபத்தில் ஆலயத்தின் தலவரலாற்றுடன் தொடர்புடைய சிற்பங்கள் அழகுற வடிக்கப்பட்டுள்ளன. இறைவனும் இறைவியும் வேடுவ வடிவத்தில் நாய்களுடன் செல்வது, அர்ச்சுனனுடன் போர்புரிவது, அர்ச்சுனன் தவம் செய்வது, மூகாசுரன் தவத்திற்கு இடையூறு செய்வது, இந்திரன், ரிஷப வாகன காட்சி, அர்ச்சுன அஸ்திரம், அம்புகளை சமர்ப்பணம் செய்வது போன்ற வரலாற்றுடன் தொடர்புடைய காட்சிகள் அழகுததும்புவதாகவும், கலையுணர்வும் இறையுணர்வும் தருவதாகவும் படைக்கப்பட்டுள்ளன.
சுவாமிக்கும் அம்பிகைக்கும் அடுத்ததாக பிரகாரத்தில் உள்ள முருகன் சன்னிதி மிகவும் சிறப்புக்குரியதாகும். திருவாசியுடன் ஒரே கல்லில் வடிக்கப்பட்டுள்ள இந்தச் சிற்பம் நுணுக்கமான கலைவேலைப்பாடு கொண்டிருக் கிறது. அருணகிரிநாதர் தம் திருப்புகழில் இவ்வாலய முருகனை புகழ்ந்து பாடியுள்ளார். இருகைகளாலும் அம்புவிடக் கூடிய அமைப்பில், அர்ச்சுனனின் சிலை உள்ளது. பாசுபதம் ஏந்திய மூர்த்தியும், அர்ச்சுனன் சிலையும் மிக பழங்காலத்தில் குளத்திலிருந்து கிடைத்ததாக கூறப்படுகின்றது. தலவிருட்சமான மூங்கில் புனர்பூச நட்சத்திரத்திற்குரியது என்பதால், அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருவேட்கள நாயகனை தரிசிப்பது விசேஷம். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், அருணகிரிநாதர் ஆகியோரால் பாடப்பெற்ற இத்தலத்தை, நக்கீரர், பதஞ்சலி, வியாக்கிரபாதர் மற்றும் ஆன்மிக அடியார்கள் பலர் தரிசித்து இறையருள் பெற்றுள்ளனர்.
வைகாசி விழா
நாள்தோறும் ஐந்து கால பூஜைகள் நடந்தேறும் இந்தக் கோவிலின் முக்கிய விழா வைகாசி விசாகமாகும். காலை அர்ச்சுனன் தவத்திற்கு செல்லுதல், மாலை 5 மணியளவில் சுவாமி வேடரூபம், அம்பிகை வேடுவச்சி, பூதகணங்கள் வேடக்கணங்களாகச் செல்லுதல், ஊர்வாழ் பழங்குடியினர் பன்றி வேடம் அணிந்து புராணவரலாறு கலைநிகழ்ச்சியாக நடத்தப்படும். வாண வேடிக்கையுடன் பாசுபதம் வழங்குதல், பஞ்சமூர்த்திகள் வீதிவலம் என்று விழா களை கட்டும்.
காலை 6.45 மணி முதல் 11.30 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் கோவில் நடை திறந் திருக்கும். சிதம்பரத்திலிருந்து பேருந்து, ஆட்டோ வசதி உள்ளது.
இந்த ஆலயத்தில் அனைத்துமே சாத்தாயி அம்மன் தான். அன்னைக்கு நான்கு கரங்கள். பாம்பு, பம்பை, சூலம், கிண்ணங்களை கரங்களில் தாங்கி, பீடத்தில் அமர்ந்த நிலையில் இன்முகத்துடன் அன்னை காட்சிதருகிறாள்.
அம்பாள் : ஸ்ரீ சாத்தாயி அம்மன்
மூர்த்தி : கருப்புசாமி, விநாயகர், ஸ்ரீ பிராமி, ஸ்ரீ மகேஸ்வரி, ஸ்ரீ கௌமாரி, ஸ்ரீ வைஷ்ணவி, ஸ்ரீ வராஹி, ஸ்ரீ இந்திராணி.
தலவிருட்சம் : ஆலமரம்.
தலச்சிறப்பு : அன்னை சாத்தாயி அம்மனின் ஆலயம் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. மகாமண்டப திருப்பணி தற்போது நடந்து கொண்டிருக்கிறது. கருவறையில் சப்த மாதர்களான பிராமி, மகேஸ்வரி, கெளமாரி, வைஷ்ணவி, வராஹி, இந்திராணி ஆகியோருக்கு நடுநாயகமாக, சாமுண்டியே சாத்தாயி அம்மன் என்ற திருநாமத்தில், கருவறையில் வடதிசை நோக்கி அருள்பாலிக்கிறாள். வலது புறம் சாஸ்தாவும் இடது புறம் விநாயகரும் அருள்பாலிக்கின்றனர். இந்த ஆலயத்தில் அனைத்துமே சாத்தாயி அம்மன் தான். அன்னைக்கு நான்கு கரங்கள். பாம்பு, பம்பை, சூலம், கிண்ணங்களை கரங்களில் தாங்கி, பீடத்தில் அமர்ந்த நிலையில் இன்முகத்துடன் அன்னை காட்சிதருகிறாள்.
அன்னை தன் கழுத்தில் தேள் மாலை அணிந்திருக்கிறாள். ஆம்! அன்னையின் விக்கிரகம் தேள் மாலையுடனேயே காணப்படுகிறது. பொதுவாக இந்த ஊரில் தேள் யாரையும் கடிப்பதில்லை என்றும், கண்ணில் படும் தேளை யாரும் அடிக்க மாட்டார்கள் என்றும் பக்தர்கள் கூறுகின்றனர். தேள் கடித்தால் அன்னையின் குங்குமத்தையும், விபூதியையும் பூசினால் தேளின் விஷம் விரைவாக இறங்கி விடும் என்பது நம்பிக்கையாக உள்ளது. அன்னையின் இடது புறம் மலையாள கருப்புசாமியின் சன்னிதி உள்ளது. ஆதியில் பூமியில் கிடைத்த கருப்புசாமியின் விக்கிரகம் சேதமடைந்ததால், புதியதாக சுதையில் உருவான கருப்புசாமி சிலை தற்போது மூலவராக பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது. ஆதி கருப்புசாமியின் சிலை, அர்த்த மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளது.
தல வரலாறு : இந்த கோவில் ஏறத்தாழ 1000 வருடம் பழமையானது. களத்து மேடு ஊரின் மேல் திசையில் எட்டிய தொலைவு வரை நெல் விளையும் பூமிதான். இந்த வயல் வெளிகளுக்கு இடையே ஒரு ஆலமரம். அந்த இடம் வயல் வெளிகளை விட சற்றே உயரமாகக் காட்சி தரும். திடல் போல் அமைந்திருக்கும் அந்த இடம்தான் ஊரின் களத்து மேடு. வயலில் விளையும் நெற்கதிர்களை அறுவடை செய்து, கட்டு கட்டாகக் கட்டி, இந்தக் களத்துக்கு கொண்டு வருவார்கள். பின், அதனை சிறு கட்டுகளாக கட்டி தரையில் அடித்து நெல் மணிகளை உதிரச் செய்வார்கள். பிறகு அந்த நெல் குவியலைத் தூற்றி, சாக்கு மூட்டைகளில் கட்டி வண்டியில் ஏற்றி வீட்டிற்கு கொண்டு செல்வார்கள். காலையில் தொடங்கும் இந்தப் பணி மாலை சூரியன் அஸ்தமிக்கும் நேரம் வரை நீடிக்கும். ஊர்மக்கள் அனைவரும் பரந்து விரிந்து கிடந்த அந்த களத்து மேட்டையே பயன்படுத்துவார்கள்.
அறுவடையான நெல்லை வீட்டிற்கு ஏற்றிச் சென்ற பின், சில பெண்கள் களத்து மேட்டில் நான்கு திசையிலும் சிதறிக் கிடக்கும் தானியத்தை கூட்டி ஒன்று சேர்த்து எடுத்துச் செல்வார்கள். அன்றும் அப்படித்தான். ஒரு பெண்மணி சிதறிக் கிடந்த நெல்லை கூட்டிக் கொண்டிருந்தாள். களத்தின் நடுவே ஒரு சிறு பள்ளம். அதில் நிறைய நெல் மணிகள். அந்தப் பெண் குனிந்து அந்த நெல்லை கைகளால் அள்ள முற்பட்டாள். திடீரென ஒரு குரல் அசரீரியாய் ஒலித்தது. அந்தப் பெண் திடுக்கிட்டாள். பயந்து போய் அங்கிருந்து எழுந்து செல்ல முயன்றாள். அம்மன் அசரீரி.. ‘பயப்படாதே!. நான் தான் சாத்தாயி பேசுகிறேன். ஆடி வெள்ளத்தில் கேரளாவில் இருந்து அடித்து வரப்பட்டு, இந்த களத்து மேட்டில் ஒதுங்கியிருக்கிறேன். என்னுடன் மலையாள கருப்புசாமியும் இருக்கிறார். எங்களுடன் என்னையும் சேர்த்து ஏழு பெண்கள் வந்தோம்’ என்று அந்தக் குரல் கூறியது. பதற்றம் அடைந்த அந்தப் பெண், "தாயே! நான் என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டாள்.
"எங்களுக்காக ஒரு கோவில் கட்டச்சொல். உலக்கை சப்தம் காதில் விழாத தொலைவில், ஊருக்கு வெளியே அந்தக் கோவில் இருக்க வேண்டும். நான் ஊரையும் ஊர் மக்களையும் காப்பாற்றுவேன்" என்று கூறியதுடன் அந்த குரல் ஓய்ந்தது. பதற்றத்தில் அந்தப் பெண்ணின் உடல் முழுவதும் வியர்வையில் நனைந்து போயிருந்தது. அதே பயத்துடன் ஊருக்குள் ஓடிச் சென்று, ஊர் பெரியவர்களிடம் நடந்ததைக் கூறினாள். ஊர் கூடியது மறுநாள் மேளதாளம், தாரை, தப்பட்டை முழங்க ஊர் மக்கள் அந்த களத்து மேட்டுக்குச் சென்றனர். சாத்தாயி அம்மன் சுட்டிக்காட்டிய இடத்தை கவனமாகத் தோண்டினர். அங்கே அழகான அம்மன் சிலை ஒன்று இருந்தது. கூடவே, கருப்புசாமி சிலையும் கிடைத்தது. அந்த அம்மனே சாத்தாயி அம்மன். ஊர் மக்கள் சிறு ஆலயம் கட்டி அங்கு அம்மனை பிரதிஷ்டை செய்தனர். கூடவே ஆறு அம்மன் சிலைகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டது. கருப்புசாமி என்ற மலையாள கருப்புசாமியை தனியாக பிரதிஷ்டை செய்தார்கள்.
நடைதிறப்பு : காலை 6.00 முதல் இரவு 8.00 வரை.
கோயில் முகவரி :
ஸ்ரீ சாத்தாயி அம்மன் கோவில்,
நங்கைவரம்,
கரூர் மாவட்டம்.
மூர்த்தி : கருப்புசாமி, விநாயகர், ஸ்ரீ பிராமி, ஸ்ரீ மகேஸ்வரி, ஸ்ரீ கௌமாரி, ஸ்ரீ வைஷ்ணவி, ஸ்ரீ வராஹி, ஸ்ரீ இந்திராணி.
தலவிருட்சம் : ஆலமரம்.
தலச்சிறப்பு : அன்னை சாத்தாயி அம்மனின் ஆலயம் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. மகாமண்டப திருப்பணி தற்போது நடந்து கொண்டிருக்கிறது. கருவறையில் சப்த மாதர்களான பிராமி, மகேஸ்வரி, கெளமாரி, வைஷ்ணவி, வராஹி, இந்திராணி ஆகியோருக்கு நடுநாயகமாக, சாமுண்டியே சாத்தாயி அம்மன் என்ற திருநாமத்தில், கருவறையில் வடதிசை நோக்கி அருள்பாலிக்கிறாள். வலது புறம் சாஸ்தாவும் இடது புறம் விநாயகரும் அருள்பாலிக்கின்றனர். இந்த ஆலயத்தில் அனைத்துமே சாத்தாயி அம்மன் தான். அன்னைக்கு நான்கு கரங்கள். பாம்பு, பம்பை, சூலம், கிண்ணங்களை கரங்களில் தாங்கி, பீடத்தில் அமர்ந்த நிலையில் இன்முகத்துடன் அன்னை காட்சிதருகிறாள்.
அன்னை தன் கழுத்தில் தேள் மாலை அணிந்திருக்கிறாள். ஆம்! அன்னையின் விக்கிரகம் தேள் மாலையுடனேயே காணப்படுகிறது. பொதுவாக இந்த ஊரில் தேள் யாரையும் கடிப்பதில்லை என்றும், கண்ணில் படும் தேளை யாரும் அடிக்க மாட்டார்கள் என்றும் பக்தர்கள் கூறுகின்றனர். தேள் கடித்தால் அன்னையின் குங்குமத்தையும், விபூதியையும் பூசினால் தேளின் விஷம் விரைவாக இறங்கி விடும் என்பது நம்பிக்கையாக உள்ளது. அன்னையின் இடது புறம் மலையாள கருப்புசாமியின் சன்னிதி உள்ளது. ஆதியில் பூமியில் கிடைத்த கருப்புசாமியின் விக்கிரகம் சேதமடைந்ததால், புதியதாக சுதையில் உருவான கருப்புசாமி சிலை தற்போது மூலவராக பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது. ஆதி கருப்புசாமியின் சிலை, அர்த்த மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளது.
தல வரலாறு : இந்த கோவில் ஏறத்தாழ 1000 வருடம் பழமையானது. களத்து மேடு ஊரின் மேல் திசையில் எட்டிய தொலைவு வரை நெல் விளையும் பூமிதான். இந்த வயல் வெளிகளுக்கு இடையே ஒரு ஆலமரம். அந்த இடம் வயல் வெளிகளை விட சற்றே உயரமாகக் காட்சி தரும். திடல் போல் அமைந்திருக்கும் அந்த இடம்தான் ஊரின் களத்து மேடு. வயலில் விளையும் நெற்கதிர்களை அறுவடை செய்து, கட்டு கட்டாகக் கட்டி, இந்தக் களத்துக்கு கொண்டு வருவார்கள். பின், அதனை சிறு கட்டுகளாக கட்டி தரையில் அடித்து நெல் மணிகளை உதிரச் செய்வார்கள். பிறகு அந்த நெல் குவியலைத் தூற்றி, சாக்கு மூட்டைகளில் கட்டி வண்டியில் ஏற்றி வீட்டிற்கு கொண்டு செல்வார்கள். காலையில் தொடங்கும் இந்தப் பணி மாலை சூரியன் அஸ்தமிக்கும் நேரம் வரை நீடிக்கும். ஊர்மக்கள் அனைவரும் பரந்து விரிந்து கிடந்த அந்த களத்து மேட்டையே பயன்படுத்துவார்கள்.
அறுவடையான நெல்லை வீட்டிற்கு ஏற்றிச் சென்ற பின், சில பெண்கள் களத்து மேட்டில் நான்கு திசையிலும் சிதறிக் கிடக்கும் தானியத்தை கூட்டி ஒன்று சேர்த்து எடுத்துச் செல்வார்கள். அன்றும் அப்படித்தான். ஒரு பெண்மணி சிதறிக் கிடந்த நெல்லை கூட்டிக் கொண்டிருந்தாள். களத்தின் நடுவே ஒரு சிறு பள்ளம். அதில் நிறைய நெல் மணிகள். அந்தப் பெண் குனிந்து அந்த நெல்லை கைகளால் அள்ள முற்பட்டாள். திடீரென ஒரு குரல் அசரீரியாய் ஒலித்தது. அந்தப் பெண் திடுக்கிட்டாள். பயந்து போய் அங்கிருந்து எழுந்து செல்ல முயன்றாள். அம்மன் அசரீரி.. ‘பயப்படாதே!. நான் தான் சாத்தாயி பேசுகிறேன். ஆடி வெள்ளத்தில் கேரளாவில் இருந்து அடித்து வரப்பட்டு, இந்த களத்து மேட்டில் ஒதுங்கியிருக்கிறேன். என்னுடன் மலையாள கருப்புசாமியும் இருக்கிறார். எங்களுடன் என்னையும் சேர்த்து ஏழு பெண்கள் வந்தோம்’ என்று அந்தக் குரல் கூறியது. பதற்றம் அடைந்த அந்தப் பெண், "தாயே! நான் என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டாள்.
"எங்களுக்காக ஒரு கோவில் கட்டச்சொல். உலக்கை சப்தம் காதில் விழாத தொலைவில், ஊருக்கு வெளியே அந்தக் கோவில் இருக்க வேண்டும். நான் ஊரையும் ஊர் மக்களையும் காப்பாற்றுவேன்" என்று கூறியதுடன் அந்த குரல் ஓய்ந்தது. பதற்றத்தில் அந்தப் பெண்ணின் உடல் முழுவதும் வியர்வையில் நனைந்து போயிருந்தது. அதே பயத்துடன் ஊருக்குள் ஓடிச் சென்று, ஊர் பெரியவர்களிடம் நடந்ததைக் கூறினாள். ஊர் கூடியது மறுநாள் மேளதாளம், தாரை, தப்பட்டை முழங்க ஊர் மக்கள் அந்த களத்து மேட்டுக்குச் சென்றனர். சாத்தாயி அம்மன் சுட்டிக்காட்டிய இடத்தை கவனமாகத் தோண்டினர். அங்கே அழகான அம்மன் சிலை ஒன்று இருந்தது. கூடவே, கருப்புசாமி சிலையும் கிடைத்தது. அந்த அம்மனே சாத்தாயி அம்மன். ஊர் மக்கள் சிறு ஆலயம் கட்டி அங்கு அம்மனை பிரதிஷ்டை செய்தனர். கூடவே ஆறு அம்மன் சிலைகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டது. கருப்புசாமி என்ற மலையாள கருப்புசாமியை தனியாக பிரதிஷ்டை செய்தார்கள்.
நடைதிறப்பு : காலை 6.00 முதல் இரவு 8.00 வரை.
கோயில் முகவரி :
ஸ்ரீ சாத்தாயி அம்மன் கோவில்,
நங்கைவரம்,
கரூர் மாவட்டம்.
இத்தல இறைவியின் பெயர் ‘பெரிய நாயகி.’ பெயருக்கேற்றாற்போல, 9.5 அடி உயரத்தில் அம்மன் பிரமாண்டமாக காட்சியளிக்கிறார். இவரது பாதத்தில் ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
மூலவர் – பிரகதீஸ்வரர்
அம்மன் – பெரியநாயகி
தல விருட்சம் – பின்னை, வன்னி
தீர்த்தம் – சிம்மக்கிணறு
பழமை – 1000 வருடங்களுக்கு முன்
ஊர் – கங்கை கொண்ட சோழபுரம்
மாவட்டம் – அரியலூர்
தஞ்சாவூரில் உள்ள பெரியகோவிலைப் போன்ற அமைப்போடு, பிரமாண்டமான முறையில் கட்டப்பட்டதுதான், கங்கைகொண்ட சோழபுரத்தில் அமைந்த பிரகதீஸ்வரர் கோவில். கருவறை லிங்கத்தின் அடியில் சந்திர காந்த கல் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இது வெயில் காலத்தில் குளிர்ச்சியையும், குளிர் காலத்தில் வெப்பத்தையும் அதிகரிக்கும் தன்மை கொண்டது.
தஞ்சை பெரியகோவிலை கட்டிய ராஜராஜசோழனின் மகன் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்டது இந்த ஆலயம்.
கி.பி. 1023-ல் கங்கை சம வெளியை வெற்றிகொண்ட பின்னர், அந்த வெற்றி நினைவாக இக்கோவில் அமைக்கப்பட்டது.
இத்தல இறைவியின் பெயர் ‘பெரிய நாயகி.’ பெயருக்கேற்றாற்போல, 9.5 அடி உயரத்தில் அம்மன் பிரமாண்டமாக காட்சியளிக்கிறார். இவரது பாதத்தில் ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆலயம் அமைக்கப்பட்டதும், தஞ்சாவூரில் இருந்த தலைநகரை முதலாம் ராஜேந்திரசோழன், கங்கைகொண்ட சோழபுரத்திற்கு மாற்றினான். சோழர்களின் இறுதிகாலம் வரை, அதாவது 250 ஆண்டுகள் அதுதான் தலைநகராக விளங்கியது.
ஒரே கல்லால் ஆன மூலவரின் திருநாமம், பிரகதீஸ்வரர். தமிழகத்திலேயே மிகப் பெரிய சிவலிங்கம் இதுதான். 13.5 அடி உயரம், 60 அடி சுற்றளவு கொண்டது. 25 மீட்டர் நீளமுள்ள வேஷ்டியும், 14 அடி உயரம் உள்ள மாலையும் அணிவிக்கப்படுகிறது. மூலவருக்கான வேஷ்டி தனியாக நெய்யப்படுகிறது.
கோவில் கோபுரம் 180 அடி உயரம் கொண்டது. 100 அடி வரை ஒரே சீராக அகலமாகவும், அதன் பின் 80 அடி உயரம் குறுகலாகவும் கட்டப்பட்டுள்ளது.
இத்தல நந்தியும் மிக பிரமாண்ட வடிவம் கொண்டது. சுண்ணாம்பு கல்லினால் செய்யப்பட்டது. இறைவனின் மூலஸ்தானத்தில் இருந்து 200 மீட்டர் இடைவெளியில் இந்த நந்தி அமைந்துள்ளது. தினமும் இந்த நந்தியின் மீது சூரிய ஒளிபட்டு, அது கருவறையில் உள்ள மூலவரின் மீது பிரதிபலிக்கும்.
இங்குள்ள நவக்கிரக சன்னிதி தாமரைப்பூ வடிவில் அமைந்துள்ளது. சூரியனுக்குரிய எந்திர வடிவில் 8 கிரகங்கள் இருக்க, நடுவில் 7 குதிரைகள் பூட்டிய தேரில் சூரியன் காட்சி தருகிறார். இந்த நவக்கிரகத்தை பக்தர்கள் வலம் வர முடியாதபடி அமைத்துள்ளனர்.
திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம், பதவி உயர்வு, பணியிட மாற்றம் வேண்டி இத்தல இறைவனை பக்தர்கள் பிரார்த்திக்கிறார்கள்.
அரியலூர் மாவட்டத்தில் உள்ளது, கங்கைகொண்ட சோழபுரம். அரியலூரில் இருந்து சுமார் 47 கிலோமீட்டர் தொலைவில் இந்த ஊர் இருக்கிறது.
அம்மன் – பெரியநாயகி
தல விருட்சம் – பின்னை, வன்னி
தீர்த்தம் – சிம்மக்கிணறு
பழமை – 1000 வருடங்களுக்கு முன்
ஊர் – கங்கை கொண்ட சோழபுரம்
மாவட்டம் – அரியலூர்
தஞ்சாவூரில் உள்ள பெரியகோவிலைப் போன்ற அமைப்போடு, பிரமாண்டமான முறையில் கட்டப்பட்டதுதான், கங்கைகொண்ட சோழபுரத்தில் அமைந்த பிரகதீஸ்வரர் கோவில். கருவறை லிங்கத்தின் அடியில் சந்திர காந்த கல் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இது வெயில் காலத்தில் குளிர்ச்சியையும், குளிர் காலத்தில் வெப்பத்தையும் அதிகரிக்கும் தன்மை கொண்டது.
தஞ்சை பெரியகோவிலை கட்டிய ராஜராஜசோழனின் மகன் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்டது இந்த ஆலயம்.
கி.பி. 1023-ல் கங்கை சம வெளியை வெற்றிகொண்ட பின்னர், அந்த வெற்றி நினைவாக இக்கோவில் அமைக்கப்பட்டது.
இத்தல இறைவியின் பெயர் ‘பெரிய நாயகி.’ பெயருக்கேற்றாற்போல, 9.5 அடி உயரத்தில் அம்மன் பிரமாண்டமாக காட்சியளிக்கிறார். இவரது பாதத்தில் ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆலயம் அமைக்கப்பட்டதும், தஞ்சாவூரில் இருந்த தலைநகரை முதலாம் ராஜேந்திரசோழன், கங்கைகொண்ட சோழபுரத்திற்கு மாற்றினான். சோழர்களின் இறுதிகாலம் வரை, அதாவது 250 ஆண்டுகள் அதுதான் தலைநகராக விளங்கியது.
ஒரே கல்லால் ஆன மூலவரின் திருநாமம், பிரகதீஸ்வரர். தமிழகத்திலேயே மிகப் பெரிய சிவலிங்கம் இதுதான். 13.5 அடி உயரம், 60 அடி சுற்றளவு கொண்டது. 25 மீட்டர் நீளமுள்ள வேஷ்டியும், 14 அடி உயரம் உள்ள மாலையும் அணிவிக்கப்படுகிறது. மூலவருக்கான வேஷ்டி தனியாக நெய்யப்படுகிறது.
கோவில் கோபுரம் 180 அடி உயரம் கொண்டது. 100 அடி வரை ஒரே சீராக அகலமாகவும், அதன் பின் 80 அடி உயரம் குறுகலாகவும் கட்டப்பட்டுள்ளது.
இத்தல நந்தியும் மிக பிரமாண்ட வடிவம் கொண்டது. சுண்ணாம்பு கல்லினால் செய்யப்பட்டது. இறைவனின் மூலஸ்தானத்தில் இருந்து 200 மீட்டர் இடைவெளியில் இந்த நந்தி அமைந்துள்ளது. தினமும் இந்த நந்தியின் மீது சூரிய ஒளிபட்டு, அது கருவறையில் உள்ள மூலவரின் மீது பிரதிபலிக்கும்.
இங்குள்ள நவக்கிரக சன்னிதி தாமரைப்பூ வடிவில் அமைந்துள்ளது. சூரியனுக்குரிய எந்திர வடிவில் 8 கிரகங்கள் இருக்க, நடுவில் 7 குதிரைகள் பூட்டிய தேரில் சூரியன் காட்சி தருகிறார். இந்த நவக்கிரகத்தை பக்தர்கள் வலம் வர முடியாதபடி அமைத்துள்ளனர்.
திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம், பதவி உயர்வு, பணியிட மாற்றம் வேண்டி இத்தல இறைவனை பக்தர்கள் பிரார்த்திக்கிறார்கள்.
அரியலூர் மாவட்டத்தில் உள்ளது, கங்கைகொண்ட சோழபுரம். அரியலூரில் இருந்து சுமார் 47 கிலோமீட்டர் தொலைவில் இந்த ஊர் இருக்கிறது.
நந்தீசனின் திருமணத்திற்காக இத்தலத்திலிருந்து உணவு வகைகள் சென்றதால் அன்றிலிருந்து இன்றுவரை சப்தஸ்தான விழாவின்போது இத்தலநாயகரும் திருமழபாடிக்கு எழுந்தருள்வார்.
சோழநாடு சோறுடைத்து என்பது இத்தலத்தை மையமாக கொண்டு சொல்லப்பட்டதுதான் எனில் மிகையில்லை. இத்தலம் திருவையாறு சப்த ஸ்தானத்தில் ஒன்றாகத் திகழ்கிறது. நந்தீசனின் திருமணத்திற்காக இத்தலத்திலிருந்து உணவு வகைகள் சென்றதால் அன்றிலிருந்து இன்றுவரை சப்தஸ்தான விழாவின்போது இத்தலநாயகரும் திருமழபாடிக்கு எழுந்தருள்வார். அதுபோல கௌதம மகரிஷிக்காக வயலில் நெல்லுக்கு பதிலாக அரிசியாக விளைந்த அந்த இடம் இன்றும் சோறுடையான் வாய்க்கால் என்று அழைக்கப்படுகிறது. தற்காலத்தில் அந்த வாய்க்காலில் ஒரு கதிர் மட்டும் அரிசியாகவே விளைந்து வருவதாகவும் கூறுகின்றனர்.
கோயிலின் வாயிலிலிருந்து நேரே உள்ளே நகர கருவறைக்கு அருகே கருணை கொப்பளிக்கும் முகத்தோடு அருளாள தம்பதியினர் அமர்ந்திருக்கிறார்கள். அடியார்களுக்கும், தம்மை நாடியவர்களுக்கும் அன்னமிட்ட அந்தக் கைகளை ஆதரவாகப் பிடித்து தம் பக்கத்தில் அமர்வித்துள்ளார் ஓதனவனேஸ்வரர். அன்னத்தோடு அரனின் அருளையும் பிசைந்திட்டு பெரும்பேறளித்த அவர்கள் முகம் இன்னும் மலர்ச்சியாக அருகே வருவோரைக் கண்டு அமுது செய்தீரா என உதடு பிரித்துக் கேட்பதுபோல் உள்ளது.
அதற்கு அருகேயே கௌதம மகரிஷி நின்றகோலத்தில் கைகூப்பி ஈசனை வணங்கும் காட்சி பார்ப்போரை நெக்குருகச் செய்கிறது. இத்தலத்திலேயே தன் ஆசிரமம் அமைத்து ஓதனவனின் மேன்மையை ஓயாது சொன்னவர் இவர். முப்பெருஞ்சுடருக்கு மத்தியில் பெருஞ்ஜோதியாகத் திகழுகிறார் ஓதனவனேஸ்வர் (ஓதனம் என்றால் அன்னம் என்பது பொருள்) எனும் தொலையாச் செல்வர்.
சமயக்குரவர் மூவர் பாடி பரவசித்திருந்த தலம் இது. கௌதமர் ஓதனவனேஸ்வரர் முன்பு திருமடம் அமைத்தார். அருளாள தம்பதி பற்றி ஊர் மக்கள் நெகிழ்ச்சியாகக் கூற உளம் குளிர்ந்தார். அன்னமிடுதலை விட வேறு தர்மம் உண்டோ என அதை வழிமொழிந்தார். அவ்வழியையே எனைத் தொடரச் சொல்லி ஈசன் என்னை இங்கு இயக்கினான் என்று கூற சோற்றுத்துறையே சிலிர்த்துக் குதூகளித்தது.
ஈசன் இன்னும் ஒருபடி மேலேபோய் அவ்வூரையே சோற்றுக்கடலில் ஆழ்த்திவிடத் துணிந்தார். அதை அறிந்த கௌதமர் வயல்வெளிகளை மெல்ல தமது அருட்கண்களால் துழாவினார். செந்நெற்கதிர்கள் சட்டென்று வெடித்தது. நெல் மணிகள் வெண்முத்துச்சரமாக, பொங்கிய சோறு அன்றலர்ந்த மல்லிகையாக மாறியிருப்பது பார்த்த அடியார்களும், பக்தர்களும் நமசிவாய...நமசிவாய...என விண்பிளக்க கோஷமிட்டனர். பச்சைவயலுக்கு பொன்காப்பிட்ட செந்நெற்கதிர்களுக்கு மத்தியில் வெண்முத்துக்கள் கோர்த்த மாலைபோல் அவ் விடம் ஒளிர்ந்தது.
ஊரார் வயலில் இறங்கி கூடைக்குள் சூடாக அன்னப் பருப்பை நீவியெடுக்க அழகாக கூடையில் சென்று அமர்ந்தது. அன்னமலர்கள் மலையாகக் குவிந்தது. ஈசனின் பேரணையாலும், கௌதமர் எனும் மகாகுருவின் அண்மையாலும் அவ்வூர் வளமாகத் திகழ்ந்தது. இன்றும் ஐப்பசி அன்னாபிஷேக பெருவிழா இங்கு சிறப்பாக நடக்கின்றது.
தில்லைக்கூத்தன் ஜடாபாரம் அலையப் பெருநாட்டியமாட சிரசில் பொங்கிய கங்கையின் துளிகள் பாரெங்கும் சிதறின. அவை பூமியில் பூவாக பூத்து லிங்கமாக மாறியது. இவற்றையே சுயம்புலிங்கங்கள் என்பார் ஆன்றோர்கள். அப்படித் தெறித்து வீழ்ந்து பொங்கிய சுயம்புலிங்கத்தில் திருச்சோற்றுத்துறையும் ஒன்று. சுயம்புப் பிழம்பின் ஈர்ப்பு காந்தமாக அருகே வருவோரை தமக்குள் ஏற்றுக்கொள்கிறது.
சோறு என்பது உண்ணும் சோறு என்று பொதுப் பொருள் உண்டு. அதேநேரம் சோறு என்பது வெண்மையின் அடையாளம். பேரின்பப் பெருக்கெடுக்கும் ஊற்று என இருவேறு பொருளுண்டு. அடியாற் மனதிற்கிணங்க பேரின்பத்தையும், உயிர்காக்கும் சோறும் இட்டு இன்பம் பெருக்குவான் இப்பெருமான். அப்பரடிகள் ‘‘சோற்றுத்துறை சோற்றுத்துறை என்பீராகில் துயர் நீங்கித் தூநெறிக்கட் சேரலாமே’’ என ஆனந்தம் பொங்கப் பேசுகிறார்.
முக்திக்கு செல்ல ஓதனவனேஸ்வரனின் பெயர் போதுமே என எளிய பாதையை அழகு வார்த்தைகளில் கோடிட்டுக் காட்டுகிறார். சோற்றுத்துறைநாதர் சோர்வை நீக்கி புத்தொளி பரப்புவதில் சமர்த்தர். தொலையாச் செல்வரின் அருகே செல்லச் செல்ல நம் துன்பங்கள் வெகு தொலைவில் சென்று மறையும். வறுமை அழித்து, பசிப்பிணி தகர்ப்பதில் இத்தல நாயகன் முதன்மையானவன்.
இத்தலம் தஞ்சாவூரிலிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ளது. திருவையாறுக்கு அருகேயுள்ள கண்டியூரிலிருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ளது.
கோயிலின் வாயிலிலிருந்து நேரே உள்ளே நகர கருவறைக்கு அருகே கருணை கொப்பளிக்கும் முகத்தோடு அருளாள தம்பதியினர் அமர்ந்திருக்கிறார்கள். அடியார்களுக்கும், தம்மை நாடியவர்களுக்கும் அன்னமிட்ட அந்தக் கைகளை ஆதரவாகப் பிடித்து தம் பக்கத்தில் அமர்வித்துள்ளார் ஓதனவனேஸ்வரர். அன்னத்தோடு அரனின் அருளையும் பிசைந்திட்டு பெரும்பேறளித்த அவர்கள் முகம் இன்னும் மலர்ச்சியாக அருகே வருவோரைக் கண்டு அமுது செய்தீரா என உதடு பிரித்துக் கேட்பதுபோல் உள்ளது.
அதற்கு அருகேயே கௌதம மகரிஷி நின்றகோலத்தில் கைகூப்பி ஈசனை வணங்கும் காட்சி பார்ப்போரை நெக்குருகச் செய்கிறது. இத்தலத்திலேயே தன் ஆசிரமம் அமைத்து ஓதனவனின் மேன்மையை ஓயாது சொன்னவர் இவர். முப்பெருஞ்சுடருக்கு மத்தியில் பெருஞ்ஜோதியாகத் திகழுகிறார் ஓதனவனேஸ்வர் (ஓதனம் என்றால் அன்னம் என்பது பொருள்) எனும் தொலையாச் செல்வர்.
சமயக்குரவர் மூவர் பாடி பரவசித்திருந்த தலம் இது. கௌதமர் ஓதனவனேஸ்வரர் முன்பு திருமடம் அமைத்தார். அருளாள தம்பதி பற்றி ஊர் மக்கள் நெகிழ்ச்சியாகக் கூற உளம் குளிர்ந்தார். அன்னமிடுதலை விட வேறு தர்மம் உண்டோ என அதை வழிமொழிந்தார். அவ்வழியையே எனைத் தொடரச் சொல்லி ஈசன் என்னை இங்கு இயக்கினான் என்று கூற சோற்றுத்துறையே சிலிர்த்துக் குதூகளித்தது.
ஈசன் இன்னும் ஒருபடி மேலேபோய் அவ்வூரையே சோற்றுக்கடலில் ஆழ்த்திவிடத் துணிந்தார். அதை அறிந்த கௌதமர் வயல்வெளிகளை மெல்ல தமது அருட்கண்களால் துழாவினார். செந்நெற்கதிர்கள் சட்டென்று வெடித்தது. நெல் மணிகள் வெண்முத்துச்சரமாக, பொங்கிய சோறு அன்றலர்ந்த மல்லிகையாக மாறியிருப்பது பார்த்த அடியார்களும், பக்தர்களும் நமசிவாய...நமசிவாய...என விண்பிளக்க கோஷமிட்டனர். பச்சைவயலுக்கு பொன்காப்பிட்ட செந்நெற்கதிர்களுக்கு மத்தியில் வெண்முத்துக்கள் கோர்த்த மாலைபோல் அவ் விடம் ஒளிர்ந்தது.
ஊரார் வயலில் இறங்கி கூடைக்குள் சூடாக அன்னப் பருப்பை நீவியெடுக்க அழகாக கூடையில் சென்று அமர்ந்தது. அன்னமலர்கள் மலையாகக் குவிந்தது. ஈசனின் பேரணையாலும், கௌதமர் எனும் மகாகுருவின் அண்மையாலும் அவ்வூர் வளமாகத் திகழ்ந்தது. இன்றும் ஐப்பசி அன்னாபிஷேக பெருவிழா இங்கு சிறப்பாக நடக்கின்றது.
தில்லைக்கூத்தன் ஜடாபாரம் அலையப் பெருநாட்டியமாட சிரசில் பொங்கிய கங்கையின் துளிகள் பாரெங்கும் சிதறின. அவை பூமியில் பூவாக பூத்து லிங்கமாக மாறியது. இவற்றையே சுயம்புலிங்கங்கள் என்பார் ஆன்றோர்கள். அப்படித் தெறித்து வீழ்ந்து பொங்கிய சுயம்புலிங்கத்தில் திருச்சோற்றுத்துறையும் ஒன்று. சுயம்புப் பிழம்பின் ஈர்ப்பு காந்தமாக அருகே வருவோரை தமக்குள் ஏற்றுக்கொள்கிறது.
சோறு என்பது உண்ணும் சோறு என்று பொதுப் பொருள் உண்டு. அதேநேரம் சோறு என்பது வெண்மையின் அடையாளம். பேரின்பப் பெருக்கெடுக்கும் ஊற்று என இருவேறு பொருளுண்டு. அடியாற் மனதிற்கிணங்க பேரின்பத்தையும், உயிர்காக்கும் சோறும் இட்டு இன்பம் பெருக்குவான் இப்பெருமான். அப்பரடிகள் ‘‘சோற்றுத்துறை சோற்றுத்துறை என்பீராகில் துயர் நீங்கித் தூநெறிக்கட் சேரலாமே’’ என ஆனந்தம் பொங்கப் பேசுகிறார்.
முக்திக்கு செல்ல ஓதனவனேஸ்வரனின் பெயர் போதுமே என எளிய பாதையை அழகு வார்த்தைகளில் கோடிட்டுக் காட்டுகிறார். சோற்றுத்துறைநாதர் சோர்வை நீக்கி புத்தொளி பரப்புவதில் சமர்த்தர். தொலையாச் செல்வரின் அருகே செல்லச் செல்ல நம் துன்பங்கள் வெகு தொலைவில் சென்று மறையும். வறுமை அழித்து, பசிப்பிணி தகர்ப்பதில் இத்தல நாயகன் முதன்மையானவன்.
இத்தலம் தஞ்சாவூரிலிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ளது. திருவையாறுக்கு அருகேயுள்ள கண்டியூரிலிருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ளது.
திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும், அறப்பளீஸ்வரர் திருக்கோவிலைப் பற்றி, தங்களது தேவாரப் பாடல்களில் பதிவிட்டுள்ளனர். அந்த வகையில் இது ஒரு தேவார வைப்பு தலமாகும்.
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் அமைந்துள்ளது, அறப்பளீஸ்வரர் திருக்கோவில். முன்காலத்தில் இந்த மலை ‘அறமலை’ என்றே அழைக்கப்பட்டு வந்துள்ளது. தர்மதேவதையே, மலையாக உருக்கொண்டிருப்பதால் இந்தப் பெயர். திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும், அறப்பளீஸ்வரர் திருக்கோவிலைப் பற்றி, தங்களது தேவாரப் பாடல்களில் பதிவிட்டுள்ளனர். அந்த வகையில் இது ஒரு தேவார வைப்பு தலமாகும்.
இங்குள்ள மூலவரான அறப்பளீஸ்வரர், சுயம்பு மூர்த்தி ஆவார். அம்பாளின் திருநாமம், அறம்வளர்த்த நாயகி. ‘அறை’ என்பது ‘மலை’ என்றும் பொருள்படும். ‘பள்ளி’ என்பதற்கு ‘தங்கியிருத்தல்’ என்று பொருள். மலையின் மீது அமைந்துள்ள ஆலயத்தில் வீற்றிருப்பவர் என்பதால், இத்தல இறைவனுக்கு ‘அறைப்பள்ளீஸ்வரர்’ என்று பெயர் வந்துள்ளது. இதுவே காலப்போக்கில் மருவி ‘அறப்பளீஸ்வரர்’ என்றானது. இத்தல சிவலிங்கத்தின் உச்சியில் கலப்பை மோதியதால் ஏற்பட்ட தழும்பு காணப்படுகிறது.
இங்கு ஒரே இடத்தில் நின்று மூலவரான அறப்பளீஸ்வரர், அம்பாள், விநாயகர், முருகப்பெருமான் ஆகிய நால்வரையும் தரிசிக்க முடியும். அம்பாள் அறம்வளர்த்த நாயகியின் சன்னிதி முன்பாக உள்ள மண்டபத்தின் மேற்கு பகுதியில் அஷ்ட லட்சுமிகளுடன் கூடிய ஸ்ரீசக்கர யந்திரம் உள்ளது. இதன் கீழே நின்று வழிபட்டால் லட்சுமி கடாட்சம் கிடைக்கும்.
இத்தல தீர்த்தம் சக்தி மிக்கதாக சொல்லப்படுகிறது. ஒரு முறை இந்த தீர்த்தத்தில் இருந்த மீனைப் பிடித்து ஒருவர் சமைக்க முயன்றார். அப்போது ஈசனின் அருளால் வெட்டுப்பட்ட அந்த மீன்கள் மீண்டும் உடல் பொருந்தி தண்ணீருக்குள் தாவிச் சென்றதாக இந்த ஆலய இறைவனின் திருவிளையாடல் ஒன்று சொல்லப்படுகிறது. ஆலயத்தின் அருகில் ‘ஆகாய கங்கை’ என்ற பெயரில் அருவி உள்ளது. கோரக்க சித்தர், காலாங்கிநாத சித்தர் ஆகியோர் தங்கியிருந்த குகைகள், இந்த அருவிக்கு சற்று தொலைவில் காணப்படுகின்றன.
கோவில் சிறப்புகள் :
இக்கோவிலில் சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சிவலிங்கத்தின் உச்சியில் கலப்பை மோதியதால் ஏற்பட்ட தழும்பு காணப்படுகிறது. ஒரே இடத்தில் நின்று ஒரே நேரத்தில் அறப்பளீஸ்வரர், தாயம்மை,விநாயகர், முருகன் ஆகிய நான்கு தெய்வங்களையும் ஒரு சேர தரிசித்து மகிழும் அரிய அமைப்பு இக்கோவிலின் தனிச்சிறப்பாகும்.
அறம்வளர்த்தநாயகி சன்னிதி முன்மண்டபத்தின் மேற்பகுதியில் அஷ்ட லட்சுமிகளுடன் கூடிய ஸ்ரீசக்ர யந்திரம் உள்ளது. இதன் கீழே நின்று வழிபட லட்சுமி கடாட்சம் கிடைக்கும்.சுற்றுப்பிரகாரத்தில் வள்ளி, தேவசேனாவுடன் முருகனும், விநாயகர், காசி விஸ்வநாதர், விசாலாட்சி, லட்சுமி, சரஸ்வதி,தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், துர்க்கை, கால பைரவர், சூரியன், சந்திரன் ஆகியோர் எழுந்தருளியுள்ளனர்.
இயற்கை அன்னையின் அழகை ஒட்டு மொத்த குத்தகைக்கு எடுத்து கொண்ட மலை அழகிகளில் கொல்லிமலை சிறப்பு பெற்றது. தன் அழகை 17 மைல் தூரத்திற்கு விரித்திருக்கும் இந்த மலை ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பழமையும் சிறப்பும் உடையது.
இங்குள்ள மூலவரான அறப்பளீஸ்வரர், சுயம்பு மூர்த்தி ஆவார். அம்பாளின் திருநாமம், அறம்வளர்த்த நாயகி. ‘அறை’ என்பது ‘மலை’ என்றும் பொருள்படும். ‘பள்ளி’ என்பதற்கு ‘தங்கியிருத்தல்’ என்று பொருள். மலையின் மீது அமைந்துள்ள ஆலயத்தில் வீற்றிருப்பவர் என்பதால், இத்தல இறைவனுக்கு ‘அறைப்பள்ளீஸ்வரர்’ என்று பெயர் வந்துள்ளது. இதுவே காலப்போக்கில் மருவி ‘அறப்பளீஸ்வரர்’ என்றானது. இத்தல சிவலிங்கத்தின் உச்சியில் கலப்பை மோதியதால் ஏற்பட்ட தழும்பு காணப்படுகிறது.
இங்கு ஒரே இடத்தில் நின்று மூலவரான அறப்பளீஸ்வரர், அம்பாள், விநாயகர், முருகப்பெருமான் ஆகிய நால்வரையும் தரிசிக்க முடியும். அம்பாள் அறம்வளர்த்த நாயகியின் சன்னிதி முன்பாக உள்ள மண்டபத்தின் மேற்கு பகுதியில் அஷ்ட லட்சுமிகளுடன் கூடிய ஸ்ரீசக்கர யந்திரம் உள்ளது. இதன் கீழே நின்று வழிபட்டால் லட்சுமி கடாட்சம் கிடைக்கும்.
இத்தல தீர்த்தம் சக்தி மிக்கதாக சொல்லப்படுகிறது. ஒரு முறை இந்த தீர்த்தத்தில் இருந்த மீனைப் பிடித்து ஒருவர் சமைக்க முயன்றார். அப்போது ஈசனின் அருளால் வெட்டுப்பட்ட அந்த மீன்கள் மீண்டும் உடல் பொருந்தி தண்ணீருக்குள் தாவிச் சென்றதாக இந்த ஆலய இறைவனின் திருவிளையாடல் ஒன்று சொல்லப்படுகிறது. ஆலயத்தின் அருகில் ‘ஆகாய கங்கை’ என்ற பெயரில் அருவி உள்ளது. கோரக்க சித்தர், காலாங்கிநாத சித்தர் ஆகியோர் தங்கியிருந்த குகைகள், இந்த அருவிக்கு சற்று தொலைவில் காணப்படுகின்றன.
கோவில் சிறப்புகள் :
இக்கோவிலில் சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சிவலிங்கத்தின் உச்சியில் கலப்பை மோதியதால் ஏற்பட்ட தழும்பு காணப்படுகிறது. ஒரே இடத்தில் நின்று ஒரே நேரத்தில் அறப்பளீஸ்வரர், தாயம்மை,விநாயகர், முருகன் ஆகிய நான்கு தெய்வங்களையும் ஒரு சேர தரிசித்து மகிழும் அரிய அமைப்பு இக்கோவிலின் தனிச்சிறப்பாகும்.
அறம்வளர்த்தநாயகி சன்னிதி முன்மண்டபத்தின் மேற்பகுதியில் அஷ்ட லட்சுமிகளுடன் கூடிய ஸ்ரீசக்ர யந்திரம் உள்ளது. இதன் கீழே நின்று வழிபட லட்சுமி கடாட்சம் கிடைக்கும்.சுற்றுப்பிரகாரத்தில் வள்ளி, தேவசேனாவுடன் முருகனும், விநாயகர், காசி விஸ்வநாதர், விசாலாட்சி, லட்சுமி, சரஸ்வதி,தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், துர்க்கை, கால பைரவர், சூரியன், சந்திரன் ஆகியோர் எழுந்தருளியுள்ளனர்.
இயற்கை அன்னையின் அழகை ஒட்டு மொத்த குத்தகைக்கு எடுத்து கொண்ட மலை அழகிகளில் கொல்லிமலை சிறப்பு பெற்றது. தன் அழகை 17 மைல் தூரத்திற்கு விரித்திருக்கும் இந்த மலை ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பழமையும் சிறப்பும் உடையது.
நாமக்கல்லில் இருந்து சுமார் 55 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, கொல்லிமலை அறப்பளீஸ்வரர் திருக்கோவில்.
இதையும் படிக்கலாம்..துளசீஸ்வரர் திருக்கோவில்- செங்கல்பட்டு
பவுர்ணமி அன்று, அர்த்த ஜாம வழிபாட்டு வேளையில், வெள்ளை அரளி மலர் சாத்தி, துளசியால் அர்ச்சனை செய்து வழிபட்டால் ஒளிமயமான வாழ்வு அமையும்.
சென்னை அடுத்த செங்கல்பட்டு அருகே உள்ளது, சிங்கப்பெருமாள் கோவில். இங்கிருந்து வல்லக்கோட்டை செல்லும் பாதையில் உள்ளது, துளசீஸ்வரர் திருக்கோவில். அகத்தியரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவலிங்கங்களில் இதுவும் ஒன்று என்கிறது, தல புராணம். பவுர்ணமி அன்று, அர்த்த ஜாம வழிபாட்டு வேளையில், வெள்ளை அரளி மலர் சாத்தி, துளசியால் அர்ச்சனை செய்து வழிபட்டால் ஒளிமயமான வாழ்வு அமையும்.
சிவபெருமானுக்கும், பார்வதி தேவிக்கும் திருமணம் நடைபெற்றபோது, அதனைக் காண்பதற்காக அனைவரும் கயிலாயமலையில் குவிந்தனர். இதனால் வடக்கு பகுதி தாழ்ந்தும், தென் பகுதி உயர்ந்தும் காணப்பட்டது. உலகம் சமநிலையை அடைவதற்காக, குறுமுனிவரான அகத்தியரை, தென்பகுதிக்குச் செல்லும்படி சிவபெருமான் கட்டளையிட்டார். அதன்படி கயிலாயத்தில் இருந்து தென்பகுதிக்கு புறப்பட்டு வந்த அகத்தியர், வரும் வழியில் எல்லாம் சிவலிங்கங்களை பிரதிஷ்டை செய்து வழிபட்டார். இப்படி அவர் 108 லிங்கங்களை பிரதிஷ்டை செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அதில் ஒன்றுதான், இங்குள்ள துளசீஸ்வரர் என்ற பெயரில் உள்ள சிவலிங்கம். அகத்தியர் இந்தப் பகுதிக்கு வந்தபோது, சிவலிங்க பூஜை செய்ய நினைத்தார். ஆனால் இப்பகுதி முழுவதும் துளசிச் செடிகளால் சூழப்பட்டு இருந்தது. அப்போது அங்கு ஈசனின் அசரீரி கேட்டது. “அகத்தியா.. என்னைத் தேடி எங்கும் அலைய வேண்டாம். நான் இங்கே துளசிச் செடிகள் சூழ மறைந்திருக்கிறேன்” என்றார்.
ஈசனின் குரல் வந்த திசையை நோக்கி சென்ற அகத்தியருக்கு, துளசி செடிகளுக்கு இடையே, சுயம்பு லிங்கம் ஒன்று தென்பட்டது. அந்தப் பகுதியில் வேறு எந்த பூக்களும் கிடைக்க வாய்ப்பில்லாததால், துளசி இலைகளைக் கொண்டே இறைவனை அர்ச்சனை செய்து வழிபட்டார், அகத்தியப் பெருமான். சிவபெருமானும் தலைசாய்த்து அகத்தியரின் பூஜையை ஏற்றுக்கொண்டார். மேலும் சிவசக்தி வடிவமான அர்த்தநாரீஸ்வரர் தோற்றத்தில், அகத்தியருக்கு காட்சியளித்தார் என்கிறது தல வரலாறு.
பிற்காலத்தில் இங்கு ஈசனுக்கு ஆலயம் எழுப்பப்பட்டது. இன்றும் இத்தல இறைவனுக்கு துளசி இலை கொண்டுதான் அர்ச்சனை செய்கிறார்கள். பொதுவாக சிவபெருமானுக்கு வில்வ இலையால்தான் அர்ச்சனை செய்யப்படும், துளசி இலை என்பது, பெருமாளுக்கு உகந்தது. ஆனால் இங்கு சிவனுக்கு துளசி இலை அர்ச்சனை செய்யப்படுவது விசேஷமாக பார்க்கப்படுகிறது. துளசியை விரும்பி ஏற்றுக்கொண்டதால், இறைவனுக்கு ‘துளசீஸ்வரர்’ என்று பெயர். அதே நேரம் அம்பாளின் திருநாமம் ‘வில்வநாயகி.’ ஆனந்தவல்லி என்ற திருப்பெயரும் உண்டு.
துளசீஸ்வரரை திங்கட்கிழமை அன்று, துளசியால் அர்ச்சித்து வழிபட்டால் சிவனருள் கிட்டும். ஜாதகத்தில் சந்திரபலம் குறைந்திருப்பவர்கள், திங்கட்கிழமை அன்று சந்திர ஓரையில் இத்தல ஈசனை துளசியால் அர்ச்சித்து வழிபடலாம். இதனால் சந்திர தோஷம் விலகும். பவுர்ணமி அன்று, அர்த்த ஜாம வழிபாட்டு வேளையில், வெள்ளை அரளி மலர் சாத்தி, துளசியால் அர்ச்சனை செய்து வழிபட்டால் ஒளிமயமான வாழ்வு அமையும். மகாசிவராத்திரி அன்று இங்கு 4 கால பூஜை நடைபெறும். இதில் மூன்றாம் கால பூஜையில், இத்தல ஈசனை மகாவிஷ்ணு வழிபடுவதாக ஐதீகம்.
அமைவிடம்
செங்கல்பட்டு அருகில் உள்ள சிங்கப்பெருமாள்கோவில் என்ற ஊரில் இருந்து, ஒரகடம் செல்லும் மார்க்கத்தில் திருக்கச்சூர் என்ற ஊர் வரும். அங்கிருந்து இரண்டாக பிரியும் சாலையில் நேராகச் சென்றால், சுமார் 6 கிலோமீட்டர் தூரத்தில் கொளத்தூர் என்ற ஊரில் இந்த ஆலயம் அமைந்துள்ளது.
சிவபெருமானுக்கும், பார்வதி தேவிக்கும் திருமணம் நடைபெற்றபோது, அதனைக் காண்பதற்காக அனைவரும் கயிலாயமலையில் குவிந்தனர். இதனால் வடக்கு பகுதி தாழ்ந்தும், தென் பகுதி உயர்ந்தும் காணப்பட்டது. உலகம் சமநிலையை அடைவதற்காக, குறுமுனிவரான அகத்தியரை, தென்பகுதிக்குச் செல்லும்படி சிவபெருமான் கட்டளையிட்டார். அதன்படி கயிலாயத்தில் இருந்து தென்பகுதிக்கு புறப்பட்டு வந்த அகத்தியர், வரும் வழியில் எல்லாம் சிவலிங்கங்களை பிரதிஷ்டை செய்து வழிபட்டார். இப்படி அவர் 108 லிங்கங்களை பிரதிஷ்டை செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அதில் ஒன்றுதான், இங்குள்ள துளசீஸ்வரர் என்ற பெயரில் உள்ள சிவலிங்கம். அகத்தியர் இந்தப் பகுதிக்கு வந்தபோது, சிவலிங்க பூஜை செய்ய நினைத்தார். ஆனால் இப்பகுதி முழுவதும் துளசிச் செடிகளால் சூழப்பட்டு இருந்தது. அப்போது அங்கு ஈசனின் அசரீரி கேட்டது. “அகத்தியா.. என்னைத் தேடி எங்கும் அலைய வேண்டாம். நான் இங்கே துளசிச் செடிகள் சூழ மறைந்திருக்கிறேன்” என்றார்.
ஈசனின் குரல் வந்த திசையை நோக்கி சென்ற அகத்தியருக்கு, துளசி செடிகளுக்கு இடையே, சுயம்பு லிங்கம் ஒன்று தென்பட்டது. அந்தப் பகுதியில் வேறு எந்த பூக்களும் கிடைக்க வாய்ப்பில்லாததால், துளசி இலைகளைக் கொண்டே இறைவனை அர்ச்சனை செய்து வழிபட்டார், அகத்தியப் பெருமான். சிவபெருமானும் தலைசாய்த்து அகத்தியரின் பூஜையை ஏற்றுக்கொண்டார். மேலும் சிவசக்தி வடிவமான அர்த்தநாரீஸ்வரர் தோற்றத்தில், அகத்தியருக்கு காட்சியளித்தார் என்கிறது தல வரலாறு.
பிற்காலத்தில் இங்கு ஈசனுக்கு ஆலயம் எழுப்பப்பட்டது. இன்றும் இத்தல இறைவனுக்கு துளசி இலை கொண்டுதான் அர்ச்சனை செய்கிறார்கள். பொதுவாக சிவபெருமானுக்கு வில்வ இலையால்தான் அர்ச்சனை செய்யப்படும், துளசி இலை என்பது, பெருமாளுக்கு உகந்தது. ஆனால் இங்கு சிவனுக்கு துளசி இலை அர்ச்சனை செய்யப்படுவது விசேஷமாக பார்க்கப்படுகிறது. துளசியை விரும்பி ஏற்றுக்கொண்டதால், இறைவனுக்கு ‘துளசீஸ்வரர்’ என்று பெயர். அதே நேரம் அம்பாளின் திருநாமம் ‘வில்வநாயகி.’ ஆனந்தவல்லி என்ற திருப்பெயரும் உண்டு.
துளசீஸ்வரரை திங்கட்கிழமை அன்று, துளசியால் அர்ச்சித்து வழிபட்டால் சிவனருள் கிட்டும். ஜாதகத்தில் சந்திரபலம் குறைந்திருப்பவர்கள், திங்கட்கிழமை அன்று சந்திர ஓரையில் இத்தல ஈசனை துளசியால் அர்ச்சித்து வழிபடலாம். இதனால் சந்திர தோஷம் விலகும். பவுர்ணமி அன்று, அர்த்த ஜாம வழிபாட்டு வேளையில், வெள்ளை அரளி மலர் சாத்தி, துளசியால் அர்ச்சனை செய்து வழிபட்டால் ஒளிமயமான வாழ்வு அமையும். மகாசிவராத்திரி அன்று இங்கு 4 கால பூஜை நடைபெறும். இதில் மூன்றாம் கால பூஜையில், இத்தல ஈசனை மகாவிஷ்ணு வழிபடுவதாக ஐதீகம்.
அமைவிடம்
செங்கல்பட்டு அருகில் உள்ள சிங்கப்பெருமாள்கோவில் என்ற ஊரில் இருந்து, ஒரகடம் செல்லும் மார்க்கத்தில் திருக்கச்சூர் என்ற ஊர் வரும். அங்கிருந்து இரண்டாக பிரியும் சாலையில் நேராகச் சென்றால், சுமார் 6 கிலோமீட்டர் தூரத்தில் கொளத்தூர் என்ற ஊரில் இந்த ஆலயம் அமைந்துள்ளது.
இந்த கோவிலில் புத்தாண்டு திருவிழா, தைமாத திருவிழா, திருப்பாவாடை அன்னக்கூடை திருவிழா, பவுத்திர உற்சவம், திருக்கல்யாணம், ஊஞ்சல் சேவை, கருடசேவை, கிருஷ்ணஜெயந்தி ஆகியவை முக்கிய விழாக்களாக நடக்கின்றன.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தாலுகா, பெரணமல்லூர் ஒன்றியம், இஞ்சிமேடு கிராமத்தில், ஸ்ரீ பெருந்தேவிதாயார் சமேத வரதராஜபெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஸ்ரீ வரதராஜபெருமாள் தனி சன்னதி, ஸ்ரீ பெருந்தேவி தாயார் சன்னதி, கல்யாண லட்சுமி நரசிம்மர் சன்னதி, ராமர், லட்சுமணர், சீதாதேவி, ஆஞ்சநேயர், கருடாழ்வார் தனி சன்னதிகள் உள்ளன. இதுபோல் 5 நிலை கொண்ட ராஜகோபுரம், சக்கரத்தாழ்வார் சன்னதி, அலமேலு மங்கை தாயார் சன்னதி, நாகதோஷம் நீங்கும் சன்னதி ஆகியவை கட்டும் கட்டிட திருப்பணிகள் நடந்து வருகிறது. ஸ்ரீ ரங்கசடகோப கட்டிட திருப்பணிகள் மற்றும் கொடி மரம் ஏற்பாடு செய்யப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது.
பிரதி மாதம் சுவாதி நட்சத்திரம், மூல நட்சத்திரம் ஆகிய நட்சத்திர நாட்களில் 27 நட்சத்திர தோஷங்கள் நீங்குவதற்கு மகாயாகம் நடத்தப்படுகிறது. இதில் திருமணத்தடை, வேலை வாய்ப்பு, குழந்தை பாக்கியம், உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும் பல்வேறு நன்மைக்காகவும் யாகம் நடத்தப்படுகிறது.
பிரதிமாதம் உத்திரம் நட்சத்திரத்தில் கோ சாலையில் உள்ள பசுக்களுக்கு சிறப்பு பூஜை நடைபெறுகிறது. இதில் வியாபாரம், திருமணநாள், பிறந்த நாள், குழந்தை வரம், பெயர் சூட்டுதல், நோய் நொடி இல்லாமல் வாழ்வதற்கும் முன்பதிவு செய்து கொண்டு கோ பூஜையில் கலந்து கொண்டு வழிபடலாம்.
இந்த கோவிலில் புத்தாண்டு திருவிழா, தைமாத திருவிழா, திருப்பாவாடை அன்னக்கூடை திருவிழா, பவுத்திர உற்சவம், திருக்கல்யாணம், ஊஞ்சல் சேவை, கருடசேவை, கிருஷ்ணஜெயந்தி ஆகியவை முக்கிய விழாக்களாக நடக்கின்றன. மேலும் இந்த கோவிலில் உள்ள ராமர், லட்சுமணர், சீதாதேவி சன்னதி பரத்வாஜ் முனிவரால் வழிபாடு செய்யப்பட்ட திருத்தலம். ராமர், லட்சுமணர் வைத்திருக்கும் வில்லில் மேல்புறத்தில் நரசிம்மர் திருஉருவம் உள்ளதால், வணங்கி செல்லும் பக்தர்களுக்கு நன்மைகள் நடக்கிறது.
பல்வேறு கோரிக்கைகளை பெருந்தேவி தாயாரிடம் வைத்து மண் அகல்விளக்கில் தீபம்ஏற்றி 48 நாள் மஞ்சள் வைத்து வணங்கி வந்தால் நன்மைகள் நடக்கும்.
இஞ்சிமேட்டை சேர்ந்த ஸ்ரீ சடகோபராமாஜர் தேசிகன், ஸ்ரீரங்க சடகோப யதீந்த்ர தேசிகன் அகோபலி மடத்தின் 34-வது பட்டம் மற்றும் 42-வது பட்டம் வகித்தார்கள். ஆன்மிக பணிகள் செய்தார்கள்.
வந்தவாசி-சேத்துப்பட்டு சாலையில் உள்ள சின்னகொழப்பலூரில் இறங்கி இஞ்சிமேட்டிற்கு செல்லலாம்.
ஆரணி-வந்தவாசி சாலையில் உள்ள சட்டதாங்கல் கூட்ரோடு பெரணமல்லூர் வழியாக இஞ்சிமேட்டிற்கு செல்லலாம்.
சென்னையில் இருந்து 148, 208, 422, 341, 130, 247 காஞ்சீபுரத்திலிருந்து மேல்மலையனூர் செல்லும் வழி, வந்த வாசி-பெங்களூரு அரசு பஸ்சில் இஞ்சிமேடு வரதராஜ பெருமாள் கோவிலுக்கு செல்லலாம்.
பிரதி மாதம் சுவாதி நட்சத்திரம், மூல நட்சத்திரம் ஆகிய நட்சத்திர நாட்களில் 27 நட்சத்திர தோஷங்கள் நீங்குவதற்கு மகாயாகம் நடத்தப்படுகிறது. இதில் திருமணத்தடை, வேலை வாய்ப்பு, குழந்தை பாக்கியம், உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும் பல்வேறு நன்மைக்காகவும் யாகம் நடத்தப்படுகிறது.
பிரதிமாதம் உத்திரம் நட்சத்திரத்தில் கோ சாலையில் உள்ள பசுக்களுக்கு சிறப்பு பூஜை நடைபெறுகிறது. இதில் வியாபாரம், திருமணநாள், பிறந்த நாள், குழந்தை வரம், பெயர் சூட்டுதல், நோய் நொடி இல்லாமல் வாழ்வதற்கும் முன்பதிவு செய்து கொண்டு கோ பூஜையில் கலந்து கொண்டு வழிபடலாம்.
இந்த கோவிலில் புத்தாண்டு திருவிழா, தைமாத திருவிழா, திருப்பாவாடை அன்னக்கூடை திருவிழா, பவுத்திர உற்சவம், திருக்கல்யாணம், ஊஞ்சல் சேவை, கருடசேவை, கிருஷ்ணஜெயந்தி ஆகியவை முக்கிய விழாக்களாக நடக்கின்றன. மேலும் இந்த கோவிலில் உள்ள ராமர், லட்சுமணர், சீதாதேவி சன்னதி பரத்வாஜ் முனிவரால் வழிபாடு செய்யப்பட்ட திருத்தலம். ராமர், லட்சுமணர் வைத்திருக்கும் வில்லில் மேல்புறத்தில் நரசிம்மர் திருஉருவம் உள்ளதால், வணங்கி செல்லும் பக்தர்களுக்கு நன்மைகள் நடக்கிறது.
பல்வேறு கோரிக்கைகளை பெருந்தேவி தாயாரிடம் வைத்து மண் அகல்விளக்கில் தீபம்ஏற்றி 48 நாள் மஞ்சள் வைத்து வணங்கி வந்தால் நன்மைகள் நடக்கும்.
இஞ்சிமேட்டை சேர்ந்த ஸ்ரீ சடகோபராமாஜர் தேசிகன், ஸ்ரீரங்க சடகோப யதீந்த்ர தேசிகன் அகோபலி மடத்தின் 34-வது பட்டம் மற்றும் 42-வது பட்டம் வகித்தார்கள். ஆன்மிக பணிகள் செய்தார்கள்.
வந்தவாசி-சேத்துப்பட்டு சாலையில் உள்ள சின்னகொழப்பலூரில் இறங்கி இஞ்சிமேட்டிற்கு செல்லலாம்.
ஆரணி-வந்தவாசி சாலையில் உள்ள சட்டதாங்கல் கூட்ரோடு பெரணமல்லூர் வழியாக இஞ்சிமேட்டிற்கு செல்லலாம்.
சென்னையில் இருந்து 148, 208, 422, 341, 130, 247 காஞ்சீபுரத்திலிருந்து மேல்மலையனூர் செல்லும் வழி, வந்த வாசி-பெங்களூரு அரசு பஸ்சில் இஞ்சிமேடு வரதராஜ பெருமாள் கோவிலுக்கு செல்லலாம்.
எத்தனை துன்பங்கள் நம் மனதில் இருந்தாலும் வாழைமர பாலசுப்ரமணியனை பார்த்த மாத்திரத்திலேயே நொடிப்பொழுதில் காணாமல் போகும் படி வசீகரத்துடன் அருள்பாலித்து வருகிறார்.
இறைவனே தேடி வந்து குடியிருக்கும் கிராமம்தான் விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள துலுக்கன்குறிச்சி என்ற சிறிய கிராமம். இக்கோவில் சிவகாசியிலிருந்து சங்கரன்கோவில், கழுகுமலை செல்லும் மெயின்ரோட்டில் அமைந்துள்ளது. சிவகாசியில் இருந்து 17 கிலோ மீட்டர் தூரமாகும்.
பெயர்க்காரணம்
150 ஆண்டுகளுக்கு முன்னர் முருகப்பெருமான் மீது அன்பும் ஆழ்ந்த பக்தியும் கொண்டிருந்த வேலாயுதம் என்ற பக்தருக்கு காட்சி கொடுத்து தான் வாழைமரத்தில் குடியிருப்பதாக கூறி அருள்பாலிப்பதால் வாழைமர பாலசுப்பிரமணிய சுவாமி எனஅழைக்கப்படுகிறது. துலுக்கன்குறிச்சி கிராமத்தில் வாழ்ந்த தேரியப்பர்-வீரம்மாள் தம்பதிக்கு மகனாக பிறந்தவர் வேலாயுதம்.
இவர் தினமும் அதிகாலை வெம்பக்கோட்டை வைப்பாற்றில் குளித்துவிட்டு வனமூர்த்திலிங்காபுரம் விநாயகர் கோவிலில் உள்ள முருகனை தரிசித்துவிட்டு அன்றாட பணிகளை செய்வதையே வழக்கமாக கொண்டிருப்பார். வைத்திய முறை தெரிந்து வைத்திருந்தார். அங்குள்ள மக்களுக்கு வைத்தியம் செய்வதற்கு பணம் வாங்குவதில்லை. தர்ம சிந்தனையுடன் வைத்தியத்தின் மூலம் நோய் நீக்கியதால் மக்கள் பக்தியை கண்டு சித்தர் என்று போற்றினார்கள்.
வேலாயுதம் வழக்கம்போல் ஒருநாள் அதிகாலை எழுந்து வெம்பக்கோட்டை வைப்பாற்றில் குளித்துவிட்டு முருகனை தரிசனம் செய்ய செல்லும்போது ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் ஆற்றை கடக்க முடியாமல் போனது. அதனால் முருகனை தரிசிக்க முடியாமல் தன் இல்லம் வந்து விட்டார். அன்று முழுவதும் வேதனையுடன் இருந்தார்.
இரவு முருகனின் திருநாமத்தை சொல்லியவாறு கண் அயர்ந்த போது கந்தன் கனவில் வந்து வேலாயுதா என்னை காண எங்கும் செல்ல வேண்டாம். நானே உன்னை தேடி வந்து விட்டேன். நீ ஆசையாக பராமரித்து வரும் வாழைத்தோட்டத்தில் ஒரே ஒரு குலை தள்ளிய வாழை மரத்தில் மட்டும் தான் இருப்பதாக சொல்லி மறைந்தார். மறுநாள் காலை வேளையிலும் குளித்து விட்டு தன்னுடைய தோட்டத்தை நோக்கி ஓடிச் சென்றார் மெய் மறந்து செய்வதறியாது திகைத்து நின்றார். காரணம் கனவில் முருகன் கூறிய படி குலையுடன் வாழை மரம் இருந்து அதிசயம் கண்டு மனமுருகி வேண்டி நின்றார். இச்செய்தி பரவியதால் வாழைமரத்தை பக்தர்கள் வழிபட்டனர்.
ஒருமுறை செவல்பட்டி ஜமீன் அரண்மனையில் பிரதான கணக்கு பிள்ளையின் ஒரே மகனுக்கு திருமண விழாவுக்காக அந்த வாழை மரத்தை வெட்டி சென்றனர். ஆனால் வேலாயுதம் வாழைமரத்தை வெட்ட அனுமதிக்க மறுத்துவிட்டார். இதனால் மணமகன் தானே நேரில் சென்று வாழை மரத்தை வெட்டிக் கொண்டு வருவதாக கூறி தோட்டத்துக்கு சென்றார். அவரிடமும் வேலாயுதம் தான் வாழைமரம் தரமுடியாது என்று உறுதியாக கூறினார். ஆனால் வேலாயுதம் சொல்வதைக் கேட்காமல் தன் கையில் இருந்த அரிவாளால் மரத்தை ஓங்கி வெட்டினான்.
அடுத்த கணம் வெட்டிய வாழையிலிருந்து ரத்தம் வெளியேறி நாகமாக மாறி மணமகனின் காலை தீண்டியது. சிறிது நேரத்தில் மணமகன் இறந்துவிட்டான். கணக்குப்பிள்ளை அழுது புரண்டார். தன் மகனை காப்பாற்றுமாறு வேலாயுதம் காலில் விழுந்து கெஞ்சினார். என்னால் ஒன்றும் செய்ய முடியாது என்று முருகனிடம் கேளுங்கள் என கூறினார். நீங்கள் நினைத்தால் காப்பற்றலாம் என வேண்டினார்கள். வேலாயுதம் தன் கையிலிருந்த பிரம்பால் இறந்த மணமகன் மீது முருகா.. முருகா... முருகா.. என 3 முறை திருநாமத்தை கூறிவிட்டார். உடனே ஒரு அதிசயம் நடந்தது,
இறந்த மணமகன் உயிர் பெற்றான். இதை கண்ட ஜமீன்தார் இந்த இடத்தில் வாழைமர பாலசுப்ரமணியனுக்கு ஒரு கட்டிடம் அமைத்து கொடுத்தார். அதன்படி கோவில் அமைக்கப்பட்டது. கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு வேலாயுதம் ஆசி வழங்கினார். அருள்வாக்கு கூறி அனைவருக்கும் நன்மைகள் செய்து வந்தார். இவரது காலத்திற்கு பின்பு அவருடைய மகன் தேரியப்பர் கோவில் திருப்பணியை செய்து வந்தார். ஒருமுறை ஏற்பட்ட திடீர் புயல் மழை நாள் வெள்ளத்தால் கோவில் இடிந்து போனது. இடிந்துபோன கோவிலை புதுப்பிக்கும் வண்ணம் சிறிய அளவில் கோவில் கட்டப்பட்டது.
தேரியப்பர் வாரிசுதாரர்கள் பிழைப்புக்காக வெளியூர் சென்றுவிட கோவில் பராமரிப்பின்றி சிதிலமடைந்து ஆண்டுக்கு ஒரு முறை வைகாசி விசாகம் தோறும் பால்குடம் எடுத்து வழிபட்டு வருகின்றனர். வாயு மூளையில் உற்சவர் சிலை அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. கருவறையில் புன்னகை தவழும் முகத்துடன் நின்ற நிலையில் இடது கையை தொடையில் வைத்தபடி வலது கையில் அபய முத்திரை பின்னர் வாழைமரம் இருக்குமாறு அற்புத வடிவமைப்புடன் அமைக்கப்பட்டுள்ளது. எத்தனை துன்பங்கள் நம் மனதில் இருந்தாலும் வாழைமர பாலசுப்ரமணியனை பார்த்த மாத்திரத்திலேயே நொடிப்பொழுதில் காணாமல் போகும் படி வசீகரத்துடன் அருள்பாலித்து வருகிறார்.
பெயர்க்காரணம்
150 ஆண்டுகளுக்கு முன்னர் முருகப்பெருமான் மீது அன்பும் ஆழ்ந்த பக்தியும் கொண்டிருந்த வேலாயுதம் என்ற பக்தருக்கு காட்சி கொடுத்து தான் வாழைமரத்தில் குடியிருப்பதாக கூறி அருள்பாலிப்பதால் வாழைமர பாலசுப்பிரமணிய சுவாமி எனஅழைக்கப்படுகிறது. துலுக்கன்குறிச்சி கிராமத்தில் வாழ்ந்த தேரியப்பர்-வீரம்மாள் தம்பதிக்கு மகனாக பிறந்தவர் வேலாயுதம்.
இவர் தினமும் அதிகாலை வெம்பக்கோட்டை வைப்பாற்றில் குளித்துவிட்டு வனமூர்த்திலிங்காபுரம் விநாயகர் கோவிலில் உள்ள முருகனை தரிசித்துவிட்டு அன்றாட பணிகளை செய்வதையே வழக்கமாக கொண்டிருப்பார். வைத்திய முறை தெரிந்து வைத்திருந்தார். அங்குள்ள மக்களுக்கு வைத்தியம் செய்வதற்கு பணம் வாங்குவதில்லை. தர்ம சிந்தனையுடன் வைத்தியத்தின் மூலம் நோய் நீக்கியதால் மக்கள் பக்தியை கண்டு சித்தர் என்று போற்றினார்கள்.
வேலாயுதம் வழக்கம்போல் ஒருநாள் அதிகாலை எழுந்து வெம்பக்கோட்டை வைப்பாற்றில் குளித்துவிட்டு முருகனை தரிசனம் செய்ய செல்லும்போது ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் ஆற்றை கடக்க முடியாமல் போனது. அதனால் முருகனை தரிசிக்க முடியாமல் தன் இல்லம் வந்து விட்டார். அன்று முழுவதும் வேதனையுடன் இருந்தார்.
இரவு முருகனின் திருநாமத்தை சொல்லியவாறு கண் அயர்ந்த போது கந்தன் கனவில் வந்து வேலாயுதா என்னை காண எங்கும் செல்ல வேண்டாம். நானே உன்னை தேடி வந்து விட்டேன். நீ ஆசையாக பராமரித்து வரும் வாழைத்தோட்டத்தில் ஒரே ஒரு குலை தள்ளிய வாழை மரத்தில் மட்டும் தான் இருப்பதாக சொல்லி மறைந்தார். மறுநாள் காலை வேளையிலும் குளித்து விட்டு தன்னுடைய தோட்டத்தை நோக்கி ஓடிச் சென்றார் மெய் மறந்து செய்வதறியாது திகைத்து நின்றார். காரணம் கனவில் முருகன் கூறிய படி குலையுடன் வாழை மரம் இருந்து அதிசயம் கண்டு மனமுருகி வேண்டி நின்றார். இச்செய்தி பரவியதால் வாழைமரத்தை பக்தர்கள் வழிபட்டனர்.
ஒருமுறை செவல்பட்டி ஜமீன் அரண்மனையில் பிரதான கணக்கு பிள்ளையின் ஒரே மகனுக்கு திருமண விழாவுக்காக அந்த வாழை மரத்தை வெட்டி சென்றனர். ஆனால் வேலாயுதம் வாழைமரத்தை வெட்ட அனுமதிக்க மறுத்துவிட்டார். இதனால் மணமகன் தானே நேரில் சென்று வாழை மரத்தை வெட்டிக் கொண்டு வருவதாக கூறி தோட்டத்துக்கு சென்றார். அவரிடமும் வேலாயுதம் தான் வாழைமரம் தரமுடியாது என்று உறுதியாக கூறினார். ஆனால் வேலாயுதம் சொல்வதைக் கேட்காமல் தன் கையில் இருந்த அரிவாளால் மரத்தை ஓங்கி வெட்டினான்.
அடுத்த கணம் வெட்டிய வாழையிலிருந்து ரத்தம் வெளியேறி நாகமாக மாறி மணமகனின் காலை தீண்டியது. சிறிது நேரத்தில் மணமகன் இறந்துவிட்டான். கணக்குப்பிள்ளை அழுது புரண்டார். தன் மகனை காப்பாற்றுமாறு வேலாயுதம் காலில் விழுந்து கெஞ்சினார். என்னால் ஒன்றும் செய்ய முடியாது என்று முருகனிடம் கேளுங்கள் என கூறினார். நீங்கள் நினைத்தால் காப்பற்றலாம் என வேண்டினார்கள். வேலாயுதம் தன் கையிலிருந்த பிரம்பால் இறந்த மணமகன் மீது முருகா.. முருகா... முருகா.. என 3 முறை திருநாமத்தை கூறிவிட்டார். உடனே ஒரு அதிசயம் நடந்தது,
இறந்த மணமகன் உயிர் பெற்றான். இதை கண்ட ஜமீன்தார் இந்த இடத்தில் வாழைமர பாலசுப்ரமணியனுக்கு ஒரு கட்டிடம் அமைத்து கொடுத்தார். அதன்படி கோவில் அமைக்கப்பட்டது. கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு வேலாயுதம் ஆசி வழங்கினார். அருள்வாக்கு கூறி அனைவருக்கும் நன்மைகள் செய்து வந்தார். இவரது காலத்திற்கு பின்பு அவருடைய மகன் தேரியப்பர் கோவில் திருப்பணியை செய்து வந்தார். ஒருமுறை ஏற்பட்ட திடீர் புயல் மழை நாள் வெள்ளத்தால் கோவில் இடிந்து போனது. இடிந்துபோன கோவிலை புதுப்பிக்கும் வண்ணம் சிறிய அளவில் கோவில் கட்டப்பட்டது.
தேரியப்பர் வாரிசுதாரர்கள் பிழைப்புக்காக வெளியூர் சென்றுவிட கோவில் பராமரிப்பின்றி சிதிலமடைந்து ஆண்டுக்கு ஒரு முறை வைகாசி விசாகம் தோறும் பால்குடம் எடுத்து வழிபட்டு வருகின்றனர். வாயு மூளையில் உற்சவர் சிலை அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. கருவறையில் புன்னகை தவழும் முகத்துடன் நின்ற நிலையில் இடது கையை தொடையில் வைத்தபடி வலது கையில் அபய முத்திரை பின்னர் வாழைமரம் இருக்குமாறு அற்புத வடிவமைப்புடன் அமைக்கப்பட்டுள்ளது. எத்தனை துன்பங்கள் நம் மனதில் இருந்தாலும் வாழைமர பாலசுப்ரமணியனை பார்த்த மாத்திரத்திலேயே நொடிப்பொழுதில் காணாமல் போகும் படி வசீகரத்துடன் அருள்பாலித்து வருகிறார்.
இது திருமண தோஷம், புத்திர தோஷம் நோய்களை தீர்க்கும் நிவர்த்தி தலமாக அமைந்துள்ளது. திருமண தடை நீங்கவும் குழந்தை பாக்கியம் பெறவும் நோய்நொடி என்று பெருவாழ்வு வாழவும் சகல சவுபாக்கியம் உடன் வாழையடி வாழையாய் வாழ்வாங்கு வாழ்ந்த ஸ்ரீ வாழைமர பாலசுப்ரமணிய சுவாமி ஆலயம் வந்து வணங்கி வளமோடு வாழ்க என வாழ்த்துவோம்.
இந்த மலை உச்சியை அடைய, செங்குத்தான பாறை மற்றும் பாறைகளால் ஆன படி, ஏணிப்படி, கரடு முரடான பாதை என சுமார் 5 கிலோமீட்டா் தொலைவுக்கு மலை ஏற வேண்டும்.
கயிலாயத்தில் வீற்றிருந்த பார்வதிதேவி, சிவபெருமானிடம், `பூமியில் பிறந்த மனிதா்கள், அறம், பொருள், இன்பம், வீடுபேறு அடைய சிறந்த தலம் ஏதும் உள்ளதா?' என்று கேட்டாள். அதன்படி சிவபெருமான் கைகாட்டிய மலையே, `பர்வதமலை.'
இதையடுத்து பார்வதி தேவி இந்த மலைக்கு வந்து தவம் செய்து இறைவனின் அருளைப் பெற்றாள். பார்வதி தவம் புரிந்ததாலேயே இது `பார்வதிமலை' என்று அழைக்கப்பட்டு, காலப்போக்கில் `பர்வதமலை' என்றானதாக சொல்கிறார்கள். இங்குள்ள அம்பாள், `பிரம்மராம்பிகை' என்ற பெயருடன் வீற்றிருக்கிறாள்.
இந்த மலையின் சிறப்பைப் பற்றி இங்கே பார்க்கலாம்.
திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அருகே உள்ள கடலாடி என்ற இடத்தில் இருந்து தொடங்குகிறது, பா்வதமலை.
சுமார் 4 ஆயிரத்து 500 அடி உயரம் கொண்ட இந்த மலையின், செங்குத்தான பாறைகளின் உச்சியில் கோவில் அமைந்துள்ளது.
கயிலாயத்தில் இருந்து சிவபெருமான் தென்பகுதிக்கு வந்தபோது, அவரது காலடி பட்ட முதல் இடம் இது என்று சொல்லப் படுகிறது.
ராமாயண காலத்தில் அனுமன் சஞ்சீவி மலையை எடுத்துச் சென்றபோது, அதில் இருந்து விழுந்த ஒரு சிறு பகுதியே இந்த பா்வதமலை என்ற நம்பிக்கையும் உள்ளது. இதற்குச் சான்றாக, இங்கே ஏராளமான மூலிகைச் செடிகள் நிறைந்திருக்கின்றன.
கயிலாய மலையை தரிசிக்க இயலாதவா்கள், இந்த மலையை தரிசித்து வழிபட்டாலே அந்தப் பலனை அடைந்துவிட முடியும்.
இந்த மலை உச்சியை அடைய, செங்குத்தான பாறை மற்றும் பாறைகளால் ஆன படி, ஏணிப்படி, கரடு முரடான பாதை என சுமார் 5 கிலோமீட்டா் தொலைவுக்கு மலை ஏற வேண்டும்.
இந்த ஆலயத்திற்கு கதவுகளே கிடையாது. கோவிலுக்கு அர்ச்சகரும் இல்லை. இங்குள்ள பிரம்மராம்பிகை பேரழகுடன் வீற்றிருப்பதைக் காணலாம்.
மலை உச்சியில் மிகப்பெரிய திரிசூலம் ஒன்று உள்ளது.
மலையின் அடிவாரத்தில் பச்சையம்மன் கோவில் இருக்கிறது. இதன் வெளிப்புறத்தில் சப்த முனிகள் கம்பீரமாக எழுந்தருளி அம்பிகையை வழிபடுகிறார்கள்.
சித்ரா பவுர்ணமி, ஆடிப்பூரம், ஆடிப்பதினெட்டு, கார்த்திகை தீபம் போன்றவை இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. இங்கு தீபம் ஏற்றி ஒருநாள் அபிஷேக, ஆராதனை செய்தால் வருடம் முழுவதும், பூஜை செய்த பலன் கிடைக்கும்.
பர்வதமலையில் அமர்ந்து தியானம் செய்தால், அவா்களுக்கு அம்பிகை ஞானத்தை வழங்குவாள்.
இங்கு விநாயகர், முருகன், ஆஞ்சநேயர் ஆகியோருக்கும் சன்னிதிகள் உள்ளன. பவுர்ணமி நாளில் இங்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.
இதையடுத்து பார்வதி தேவி இந்த மலைக்கு வந்து தவம் செய்து இறைவனின் அருளைப் பெற்றாள். பார்வதி தவம் புரிந்ததாலேயே இது `பார்வதிமலை' என்று அழைக்கப்பட்டு, காலப்போக்கில் `பர்வதமலை' என்றானதாக சொல்கிறார்கள். இங்குள்ள அம்பாள், `பிரம்மராம்பிகை' என்ற பெயருடன் வீற்றிருக்கிறாள்.
இந்த மலையின் சிறப்பைப் பற்றி இங்கே பார்க்கலாம்.
திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அருகே உள்ள கடலாடி என்ற இடத்தில் இருந்து தொடங்குகிறது, பா்வதமலை.
சுமார் 4 ஆயிரத்து 500 அடி உயரம் கொண்ட இந்த மலையின், செங்குத்தான பாறைகளின் உச்சியில் கோவில் அமைந்துள்ளது.
கயிலாயத்தில் இருந்து சிவபெருமான் தென்பகுதிக்கு வந்தபோது, அவரது காலடி பட்ட முதல் இடம் இது என்று சொல்லப் படுகிறது.
ராமாயண காலத்தில் அனுமன் சஞ்சீவி மலையை எடுத்துச் சென்றபோது, அதில் இருந்து விழுந்த ஒரு சிறு பகுதியே இந்த பா்வதமலை என்ற நம்பிக்கையும் உள்ளது. இதற்குச் சான்றாக, இங்கே ஏராளமான மூலிகைச் செடிகள் நிறைந்திருக்கின்றன.
கயிலாய மலையை தரிசிக்க இயலாதவா்கள், இந்த மலையை தரிசித்து வழிபட்டாலே அந்தப் பலனை அடைந்துவிட முடியும்.
இந்த மலை உச்சியை அடைய, செங்குத்தான பாறை மற்றும் பாறைகளால் ஆன படி, ஏணிப்படி, கரடு முரடான பாதை என சுமார் 5 கிலோமீட்டா் தொலைவுக்கு மலை ஏற வேண்டும்.
இந்த ஆலயத்திற்கு கதவுகளே கிடையாது. கோவிலுக்கு அர்ச்சகரும் இல்லை. இங்குள்ள பிரம்மராம்பிகை பேரழகுடன் வீற்றிருப்பதைக் காணலாம்.
மலை உச்சியில் மிகப்பெரிய திரிசூலம் ஒன்று உள்ளது.
மலையின் அடிவாரத்தில் பச்சையம்மன் கோவில் இருக்கிறது. இதன் வெளிப்புறத்தில் சப்த முனிகள் கம்பீரமாக எழுந்தருளி அம்பிகையை வழிபடுகிறார்கள்.
சித்ரா பவுர்ணமி, ஆடிப்பூரம், ஆடிப்பதினெட்டு, கார்த்திகை தீபம் போன்றவை இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. இங்கு தீபம் ஏற்றி ஒருநாள் அபிஷேக, ஆராதனை செய்தால் வருடம் முழுவதும், பூஜை செய்த பலன் கிடைக்கும்.
பர்வதமலையில் அமர்ந்து தியானம் செய்தால், அவா்களுக்கு அம்பிகை ஞானத்தை வழங்குவாள்.
இங்கு விநாயகர், முருகன், ஆஞ்சநேயர் ஆகியோருக்கும் சன்னிதிகள் உள்ளன. பவுர்ணமி நாளில் இங்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.






