என் மலர்
முக்கிய விரதங்கள்
இந்த வருட ராகு-கேது பெயர்ச்சி இன்று 13-2-2019 நடக்கிறது. களத்திர தோஷம், புத்திர தோஷம் ஆகியவை நீங்குவதற்கு ராகுவை விரதம் இருந்து வழிபடுதல் வேண்டும்.
13-2-2019 ராகு-கேது பெயர்ச்சி
நவக்கிரகங்களில் சனியை விட செவ்வாயும், செவ்வாயை விட புதனும், புதனை விட குருவும், குருவை விட சுக்ரனும், சுக்ரனை விட சந்திரனும், சந்திரனை விட சூரியனும், இவர்கள் அனைவரையும் விட ராகுவும், கேதுவும் பலம் பொருந்தியவர்களாக விளங்குகின்றனர்.
சந்திரனையும், சூரியனையும் பலம் இழக்கும்படியாகவும், ஒளி குன்றும்படியாகவும் கட்டுப்படுத்தும் ஆற்றல் ராகு மற்றும் கேதுவிற்கு உண்டு. ராகுவிற்கு எந்த வீடும் சொந்தமில்லை. அதாவது எந்த ராசியும் ராகுவிற்கு சொந்தமாக இல்லை. ராகு எந்த ராசியில் இருக்கின்றாரோ, எந்த கிரகத்தினால் பார்க்கப்படுகின்றாரோ, எந்த இடத்தில் சேர்க்கை பெற்றுள்ளாரோ அந்த இடத்தின் பலன்களை முழுமையாக தருவார்.
ஒருவரது ஜாதகத்தில் அனுகூலம் தரும் நல்ல இடத்தில் ராகு இருந்து விட்டால், அந்த நபருக்கு நல்ல மனைவி, நல்ல வேலைக்காரர், ஆட்சி மற்றும் செல்வாக்கு ஆகியவை அமையும். பல்வேறு மொழிகளில் தேர்ச்சி பெறுவதற்கும் ராகுவே காரணமாகிறார். மருந்து, வேதியியல், நூதன தொழில் நுட்பக்கருவிகள் ஆகியவற்றுக்கும், அவ்வப்போது மாறி வரும் நவ நாகரிகத்திற்கும் ராகுவுடன் இணைந்த சுக்கரன் காரணமாக அமைகிறார். அரசியல் செல்வாக்கு, ஆட்சியுரிமை போன்றவற்றுக்கும் ராகுவின் அனுக்கிரகம் ஒருவருக்கு நிச்சயம் தேவை.
அனுகூல ராகு, கீழான ஒருவரை சக்கரவர்த்தியாக மாற்றும் வலிமை படைத்தவர். மந்திரஜாலம், கண்கட்டி வித்தை போன்றவைகளும் ராகுவின் அனுக்கிரகத்தால் தான் கைவரப் பெறும். ராகு ஒருவரை குபேரபுரிக்கு அழைத்துச் செல்வார். அதே நேரத்தில் ராகு தோஷம் ஒருவருக்கு அமைந்தால், அந்த நபர் மிகவும் கடுமையான பலன்களையும் அனுபவிப்பார்.
ஒருவரது ஜாதகத்தில் 7-வது இடத்தில் ராகு இருப்பதால் திருமணம் தாமதமாகிறது. இல்லற வாழ்க்கை சிறப்பதற்கும் ராகுவின் அனுக்கிரகம் தேவை. 5-ம் இடத்தில் இருக்கும் ராகுவால் புத்திர தோஷம் ஏற்படுகின்றது. ஆகவே களத்திர தோஷம், புத்திர தோஷம் ஆகியவை நீங்குவதற்கு ராகுவை விரதம் இருந்து வழிபடுதல் வேண்டும்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, திருநாகேஸ்வரம். இங்கு நாகநாத சுவாமி கோவில் இருக்கிறது. ராகு பகவான், சிவபெருமானை பூஜித்த சிறப்பு மிக்க தலம் இது. ஆதலால் தான் இந்த தலத்தை ‘திருநாகேஸ்வரம்’ என்று அழைக்கிறார்கள். பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த ஆலயத்தில், நாகநாத சுவாமி, பிறையணி அம்மன், கிரிகுஜாம்பிகை ஆகியோர் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள்.
இந்தக் கோவிலின் வெளிப் பிரகாரத்தில் தென் மேற்கு மூலையில் ராகு பகவான் தனது இரு தேவியருடன் எழுந்தருளியுள்ளார். புராண வரலாற்றின் படி இந்த தலத்தில் ராகுபகவான் நாகநாதசுவாமியை வழிபட்டார். எனவே இங்கு வந்து தன்னை வழிபடும் பக்தர்களுக்கு, சகல நன்மைகளையும் அளிக்கும் வரத்தை ராகு பகவான் பெற்றுள்ளார்.
சுசீல முனிவரின் பிள்ளையை, அரவாகிய ராகு தீண்டியது. இதனால் ராகுவிற்கு சாபம் ஏற்பட்டது. இந்த சாபம் நிவர்த்தி பெற, நான்கு தலங்களை வழிபட்டு முடிவில் திருநாகேஸ்வரத்தில் உள்ள நாகநாத சுவாமியை மகா சிவராத்திரி நாளில் வழிபட வேண்டும். அதன்படியே ராகு பகவான், நாகநாத சுவாமியை வழிபாடு செய்து சாபம் நீங்கப் பெற்றார்.
அதோடு இத்தல சிவபெருமான், ராகுவுக்கு ஒரு வரத்தையும் அளித்தார். “இத்தலத்திற்கு வந்து என்னை வழிபடும் பக்தர்கள், உன்னையும் வணங்கினால், உன்னால் ஏற்படக் கூடிய கால சர்ப்ப தோஷம், சர்ப்ப தோஷம், களத்திர தோஷம், புத்திர தோஷம் ஆகியவை நீங்கும்” என்று அருளினார்.
அதன்படி ராகு பகவானும் இந்த ஆலயத்தில் மங்கள ராகுவாக, நாககன்னி மற்றும் நாகவள்ளி ஆகிய இரு தேவியருடன் நிருதி மூலையில் அமர்ந்து, தன்னை வணங்கும் பக்தர்களுக்கு தோஷங்களை நீக்கி அருள்பாலிக்கிறார்.
பல்வேறு தோஷங்களால் பாதிக்கப்பட்டவர்கள், இத்தல சூரிய புஷ்கரணியில் நீராடி, நாகநாத சுவாமியை வழிபட்டு, பின்னர் ராகுவை வழிபட்டால் தோஷங்கள் நீங்கி நன்மை கிடைக்கும். இந்த ஆலயத்திற்கு தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் எண்ணற்ற பக்தர்கள் வந்து பால் அபிஷேகம் செய்து வழிபட்டு செல்கின்றனர். இங்குள்ள ராகு பகவானுக்கு, பாலாபிஷேகம் செய்யும்போது, அந்த பாலானது நீல நிறமாக மாறும் அதிசயம் நிகழ்கிறது.
இந்த ஆலயத்தில் ராகு-கேது பெயர்ச்சி நடைபெறும் நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். குறிப்பிட்ட நேரத்தில் நடைபெறும் பூஜையில் கலந்து கொண்டால் அதற்கேற்ற பலன்கள் கிடைக்கும். இந்த வருட ராகு-கேது பெயர்ச்சி 13-2-2019 (புதன்கிழமை) நடக்கிறது. இதையடுத்து திருநாகேஸ்வரம் ஆலயத்தில் உள்ள ராகு பகவானுக்கு லட்சார்ச்சனை, யாக சாலை பூஜை போன்றவை நடைபெறுகின்றன.
நவக்கிரகங்களில் சனியை விட செவ்வாயும், செவ்வாயை விட புதனும், புதனை விட குருவும், குருவை விட சுக்ரனும், சுக்ரனை விட சந்திரனும், சந்திரனை விட சூரியனும், இவர்கள் அனைவரையும் விட ராகுவும், கேதுவும் பலம் பொருந்தியவர்களாக விளங்குகின்றனர்.
சந்திரனையும், சூரியனையும் பலம் இழக்கும்படியாகவும், ஒளி குன்றும்படியாகவும் கட்டுப்படுத்தும் ஆற்றல் ராகு மற்றும் கேதுவிற்கு உண்டு. ராகுவிற்கு எந்த வீடும் சொந்தமில்லை. அதாவது எந்த ராசியும் ராகுவிற்கு சொந்தமாக இல்லை. ராகு எந்த ராசியில் இருக்கின்றாரோ, எந்த கிரகத்தினால் பார்க்கப்படுகின்றாரோ, எந்த இடத்தில் சேர்க்கை பெற்றுள்ளாரோ அந்த இடத்தின் பலன்களை முழுமையாக தருவார்.
ஒருவரது ஜாதகத்தில் அனுகூலம் தரும் நல்ல இடத்தில் ராகு இருந்து விட்டால், அந்த நபருக்கு நல்ல மனைவி, நல்ல வேலைக்காரர், ஆட்சி மற்றும் செல்வாக்கு ஆகியவை அமையும். பல்வேறு மொழிகளில் தேர்ச்சி பெறுவதற்கும் ராகுவே காரணமாகிறார். மருந்து, வேதியியல், நூதன தொழில் நுட்பக்கருவிகள் ஆகியவற்றுக்கும், அவ்வப்போது மாறி வரும் நவ நாகரிகத்திற்கும் ராகுவுடன் இணைந்த சுக்கரன் காரணமாக அமைகிறார். அரசியல் செல்வாக்கு, ஆட்சியுரிமை போன்றவற்றுக்கும் ராகுவின் அனுக்கிரகம் ஒருவருக்கு நிச்சயம் தேவை.
அனுகூல ராகு, கீழான ஒருவரை சக்கரவர்த்தியாக மாற்றும் வலிமை படைத்தவர். மந்திரஜாலம், கண்கட்டி வித்தை போன்றவைகளும் ராகுவின் அனுக்கிரகத்தால் தான் கைவரப் பெறும். ராகு ஒருவரை குபேரபுரிக்கு அழைத்துச் செல்வார். அதே நேரத்தில் ராகு தோஷம் ஒருவருக்கு அமைந்தால், அந்த நபர் மிகவும் கடுமையான பலன்களையும் அனுபவிப்பார்.
ஒருவரது ஜாதகத்தில் 7-வது இடத்தில் ராகு இருப்பதால் திருமணம் தாமதமாகிறது. இல்லற வாழ்க்கை சிறப்பதற்கும் ராகுவின் அனுக்கிரகம் தேவை. 5-ம் இடத்தில் இருக்கும் ராகுவால் புத்திர தோஷம் ஏற்படுகின்றது. ஆகவே களத்திர தோஷம், புத்திர தோஷம் ஆகியவை நீங்குவதற்கு ராகுவை விரதம் இருந்து வழிபடுதல் வேண்டும்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, திருநாகேஸ்வரம். இங்கு நாகநாத சுவாமி கோவில் இருக்கிறது. ராகு பகவான், சிவபெருமானை பூஜித்த சிறப்பு மிக்க தலம் இது. ஆதலால் தான் இந்த தலத்தை ‘திருநாகேஸ்வரம்’ என்று அழைக்கிறார்கள். பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த ஆலயத்தில், நாகநாத சுவாமி, பிறையணி அம்மன், கிரிகுஜாம்பிகை ஆகியோர் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள்.
இந்தக் கோவிலின் வெளிப் பிரகாரத்தில் தென் மேற்கு மூலையில் ராகு பகவான் தனது இரு தேவியருடன் எழுந்தருளியுள்ளார். புராண வரலாற்றின் படி இந்த தலத்தில் ராகுபகவான் நாகநாதசுவாமியை வழிபட்டார். எனவே இங்கு வந்து தன்னை வழிபடும் பக்தர்களுக்கு, சகல நன்மைகளையும் அளிக்கும் வரத்தை ராகு பகவான் பெற்றுள்ளார்.
சுசீல முனிவரின் பிள்ளையை, அரவாகிய ராகு தீண்டியது. இதனால் ராகுவிற்கு சாபம் ஏற்பட்டது. இந்த சாபம் நிவர்த்தி பெற, நான்கு தலங்களை வழிபட்டு முடிவில் திருநாகேஸ்வரத்தில் உள்ள நாகநாத சுவாமியை மகா சிவராத்திரி நாளில் வழிபட வேண்டும். அதன்படியே ராகு பகவான், நாகநாத சுவாமியை வழிபாடு செய்து சாபம் நீங்கப் பெற்றார்.
அதோடு இத்தல சிவபெருமான், ராகுவுக்கு ஒரு வரத்தையும் அளித்தார். “இத்தலத்திற்கு வந்து என்னை வழிபடும் பக்தர்கள், உன்னையும் வணங்கினால், உன்னால் ஏற்படக் கூடிய கால சர்ப்ப தோஷம், சர்ப்ப தோஷம், களத்திர தோஷம், புத்திர தோஷம் ஆகியவை நீங்கும்” என்று அருளினார்.
அதன்படி ராகு பகவானும் இந்த ஆலயத்தில் மங்கள ராகுவாக, நாககன்னி மற்றும் நாகவள்ளி ஆகிய இரு தேவியருடன் நிருதி மூலையில் அமர்ந்து, தன்னை வணங்கும் பக்தர்களுக்கு தோஷங்களை நீக்கி அருள்பாலிக்கிறார்.
பல்வேறு தோஷங்களால் பாதிக்கப்பட்டவர்கள், இத்தல சூரிய புஷ்கரணியில் நீராடி, நாகநாத சுவாமியை வழிபட்டு, பின்னர் ராகுவை வழிபட்டால் தோஷங்கள் நீங்கி நன்மை கிடைக்கும். இந்த ஆலயத்திற்கு தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் எண்ணற்ற பக்தர்கள் வந்து பால் அபிஷேகம் செய்து வழிபட்டு செல்கின்றனர். இங்குள்ள ராகு பகவானுக்கு, பாலாபிஷேகம் செய்யும்போது, அந்த பாலானது நீல நிறமாக மாறும் அதிசயம் நிகழ்கிறது.
இந்த ஆலயத்தில் ராகு-கேது பெயர்ச்சி நடைபெறும் நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். குறிப்பிட்ட நேரத்தில் நடைபெறும் பூஜையில் கலந்து கொண்டால் அதற்கேற்ற பலன்கள் கிடைக்கும். இந்த வருட ராகு-கேது பெயர்ச்சி 13-2-2019 (புதன்கிழமை) நடக்கிறது. இதையடுத்து திருநாகேஸ்வரம் ஆலயத்தில் உள்ள ராகு பகவானுக்கு லட்சார்ச்சனை, யாக சாலை பூஜை போன்றவை நடைபெறுகின்றன.
மாதந்தோறும் வருகிற சஷ்டியன்று முருகப்பெருமானை நினைத்து விரதம் இருந்து வழிபாடு செய்தால் நம் சங்கடங்கள் அனைத்தையும் தீர்த்தருள்வான் கந்தவேலன்.
சஷ்டி நாளான இன்று, விரதம் இருந்து சக்தியின் மைந்தன் குமரனை வேண்டுவோம். நம் சங்கடங்கள் அனைத்தையும் தீர்த்தருள்வான் கந்தவேலன்.
மாதந்தோறும் வருகிற சஷ்டியன்று முருகப்பெருமானை நினைத்து விரதம் இருப்பார்கள் பக்தர்கள். விரதமிருந்து அருகில் உள்ள முருகன் கோயிலுக்குச் சென்று, கண் குளிர அழகன் முருகனைத் தரிசித்துப் பிரார்த்தனை செய்வது வழக்கம்.
இதோ... இன்று சஷ்டி தினம். இன்று விரதம் இருந்து முருகப்பெருமானை நினைத்து பூஜியுங்கள். கந்தசஷ்டி கவசம் முதலானவை பாராயணம் செய்து வழிபடுங்கள்.
முருகனுக்கு செந்நிற மலர்கள் உகந்தவை. எனவே செம்பருத்தி, சிகப்பு ரோஜா, செவ்வரளி முதலான மலர்கள் சூட்டி, அழகனை இன்னும் அழகுப்படுத்துங்கள். சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து உங்கள் வேண்டுதல்களை மனதார அவனிடம் சொல்லுங்கள்.
உங்கள் சங்கடங்களையெல்லாம் தீர்த்தருள்வான் சக்திகுமாரன். தீராத வினைகளையும் தீர்த்தருள்வான் வேலவன்.
சஷ்டி நன்னாளில், விரதம் இருந்து அருகில் உள்ள முருகன் கோயிலுக்குச் செல்லுங்கள். முடிந்தால், நான்குபேருக்கேனும் உணவுப் பொட்டலம் வழங்குங்கள். நம்மையும் நம் வாழ்வையும் இன்னும் இன்னும் உயர்த்துவான் கார்த்திகேயன்.
மாதந்தோறும் வருகிற சஷ்டியன்று முருகப்பெருமானை நினைத்து விரதம் இருப்பார்கள் பக்தர்கள். விரதமிருந்து அருகில் உள்ள முருகன் கோயிலுக்குச் சென்று, கண் குளிர அழகன் முருகனைத் தரிசித்துப் பிரார்த்தனை செய்வது வழக்கம்.
இதோ... இன்று சஷ்டி தினம். இன்று விரதம் இருந்து முருகப்பெருமானை நினைத்து பூஜியுங்கள். கந்தசஷ்டி கவசம் முதலானவை பாராயணம் செய்து வழிபடுங்கள்.
முருகனுக்கு செந்நிற மலர்கள் உகந்தவை. எனவே செம்பருத்தி, சிகப்பு ரோஜா, செவ்வரளி முதலான மலர்கள் சூட்டி, அழகனை இன்னும் அழகுப்படுத்துங்கள். சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து உங்கள் வேண்டுதல்களை மனதார அவனிடம் சொல்லுங்கள்.
உங்கள் சங்கடங்களையெல்லாம் தீர்த்தருள்வான் சக்திகுமாரன். தீராத வினைகளையும் தீர்த்தருள்வான் வேலவன்.
சஷ்டி நன்னாளில், விரதம் இருந்து அருகில் உள்ள முருகன் கோயிலுக்குச் செல்லுங்கள். முடிந்தால், நான்குபேருக்கேனும் உணவுப் பொட்டலம் வழங்குங்கள். நம்மையும் நம் வாழ்வையும் இன்னும் இன்னும் உயர்த்துவான் கார்த்திகேயன்.
ஸ்ரீசரஸ்வதி தேவிக்கு உகந்த வசந்த பஞ்சமி தினமான இன்று விரதம் இருந்து பூஜைகள் செய்து வழிபாடு செய்வதால் ஆன்மீகத்தில் உயர்நிலைகளை அடையலாம் என்பது நம்பிக்கை.
இன்று வசந்த பஞ்சமி தினம். இது பசந்த் பஞ்சமி, ஸ்ரீபஞ்சமி என்ற பெயர்களிலும் வழங்கப்படுகின்றது. மானிடர்கள் பெற வேண்டிய மிக உயரிய செல்வம் ஞானமே அதை அருளும் சரஸ்வதி தேவி அவதரித்த தினமாதலால் ஸ்ரீ பஞ்சமி என்ற பெயரில் வழங்கப்படுகிறது. வங்காளத்தில் இது சரஸ்வதி பூஜை தினமாகவே கொண்டாடாப்படுகிறது.
ஸ்ரீசரஸ்வதி தேவிக்கு வசந்த பஞ்சமி தினத்தில் விரதம் இருந்து பூஜைகள் செய்து வழிபாடு செய்வதால் லௌகிக உலசில் அறிவு சார் கலைகளில் முன்னேற்றம் கிடைப்பது மட்டுமல்லாது ஆன்மீகத்தில் உயர்நிலைகளை அடைதலும் கிட்டும் என்பது நம்பிக்கை.
ஜோதிடத்தில் ஒரு ஜாதகத்தில் ஐந்தாவது இடம் நுண்ணறிவுக்கான இடமாக குறிக்கப்படுகின்றது. பஞ்சமி திதியன்று செய்யப்படும் இறைவழிபாடுகள், நுண்ணறிவை சரியான பாதையில் செலுத்த வல்லவை.
இந்தியாவில் தென் கிழக்கு மாகாணங்கள் சிலவற்றில் வசந்த பஞ்சமி தினம் புதுவருடத்துவக்கமாகவே கொண்டாடப்படுகிறது.
இன்றைய தினம் வசந்த பஞ்சமி தினத்தில் விரதம் இருந்து பூஜைகள் செய்வது மிகக்சிறப்பு. அக்ஷராப்பியாசத்திற்கும் கல்வி சம்வந்தமான புதிய முயற்சிகள் துவங்கவும் ஏற்ற தினம் இது. எந்த வகையான செயலாக இருந்தாலும் வெற்றிகரமாக முடிய இன்று தொடங்கலாம். ஸ்ரீகிருஷ்ணர், சாந்தீபனி முனிவரிடம் குருகுல வாசம் துவங்கிய நாளும் இன்று தான்.
இந்த விரத பூஜை கொஞ்சம் வித்தியாசமானது. பூஜை செய்ய உகந்த நேரம் காலை 9 முதல் 11 வரை. இது பூர்வாஹன காலம் என்று அழைக்கப்படுகிறது.
முதலில் தூய்மையான இடத்தை தேர்ந்தெடுத்து அங்கு கிழக்கு பார்த்து பூஜைமேடையை அமைக்க வேண்டும். கோலங்கள் முதலியவற்றால் அலங்கரிக்கவும். பூஜை துவங்கும் முன்பாக தூபங்கள் கமழச்செய்யும். தீபங்கள் ஒற்றைப்படை எண்ணிக்கையில் ஏற்றி வைத்தல் சிறப்பு.
பரிபூர்ணத்தை குறிக்கும் கலச ஸ்தாபனம் விநாயகர் பூஜை முதலியவற்றை முதலில் செய்ய வேண்டும். அதன் பின் ஸ்ரீவிஷ்ணுவையும் சிவனாரையும் விக்ரகங்கள் அல்லது படங்களில் ஆவாஹனம் செய்து பூஜைகள் செய்ய வேண்டும்.
அம்பினை சத்வ குண ஸ்வரூபிணி...அம்பிகையின் வெண்பட்டு வஸ்திரம், ஸ்படிக மாலை முதலிய சத்வ குணத்தையும் தூய்மையையும் குறிக்கின்றன. ஆகவே தத்வகுண ஸ்வரூபனான திருமாலி பூஜை செய்யப்படுகின்றார். சில புராணங்களின் படி, சரஸ்பதி தேவி, சிவனாரின் சகோதரியாக கருதப்படுகின்றாள். ஆகவே சிவனாரும் பூஜையில் இடம் பெறுகின்றார்.
சிவ, விஷ்ணு பூஜைகளுக்கு பின் சரஸ்பதி தேவியின் படத்திற்கு பூஜைசெய்ய வேண்டும். வெண்ணிற பட்டு வஸ்திரம் அல்லது மஞ்சள் நிற வஸ்திரம் சாற்றி மஞ்சள் நிற மலர்கள் அல்லது மல்லிகை மலர்களால் மாலைகள் சூட்டி, அலங்கரித்து, மல்லிகை, தாமரை, செண்பக மலர்களால் அஷ்டோத்திரம் கூறி அர்ச்சனை செய்யவும். அம்பிகையின் பன்னிரு திருநாமங்களை கூறி வழிபாடு செய்வது மிகவும் சிறப்பானதாக கருதப்படுகின்றது.
பூஜை தினத்தன்று மாலையிலோ அல்லது மறுநாள் காலையிலோ இயன்றதை நிவேதனமாக செய்து புனர் பூஜை செய்து அம்பிகையையும் மற்ற தேவதைகளையும் யதாஸ்தானம் செய்யவும்.
விருப்பமிருப்பவர்கள் மேற்கூறிய பூஜை முறைகளின் படி பூஜை செய்யலாம். சரஸ்வதி பூஜைக்கென சாரதா நவராத்திரியில் செய்யும் பூஜைமுறைகளையும் பின்பற்றலாம்.
விஸ்தாரமான பூஜைகள் செய்ய இயலாதோரும், ஸ்ரீசரஸ்வதி தேவியின் படம் அல்லது பிரதிமையை அலங்கரித்து வைத்து தெரிந்த சரஸ்வதி துதிகளை பாராயணம் செய்து இயன்ற நிவேதனங்கள் படைத்து வழிபாடு செய்யலாம்.
ஸ்ரீசரஸ்வதி தேவியை போற்றும் ஸ்ரீசரஸ்வதி அந்தாதி துதியை இன்றைய தினம் சொல்லி வழிபாடு செய்யலாம்.
ஸ்ரீசரஸ்வதி தேவிக்கு வசந்த பஞ்சமி தினத்தில் விரதம் இருந்து பூஜைகள் செய்து வழிபாடு செய்வதால் லௌகிக உலசில் அறிவு சார் கலைகளில் முன்னேற்றம் கிடைப்பது மட்டுமல்லாது ஆன்மீகத்தில் உயர்நிலைகளை அடைதலும் கிட்டும் என்பது நம்பிக்கை.
ஜோதிடத்தில் ஒரு ஜாதகத்தில் ஐந்தாவது இடம் நுண்ணறிவுக்கான இடமாக குறிக்கப்படுகின்றது. பஞ்சமி திதியன்று செய்யப்படும் இறைவழிபாடுகள், நுண்ணறிவை சரியான பாதையில் செலுத்த வல்லவை.
இந்தியாவில் தென் கிழக்கு மாகாணங்கள் சிலவற்றில் வசந்த பஞ்சமி தினம் புதுவருடத்துவக்கமாகவே கொண்டாடப்படுகிறது.
இன்றைய தினம் வசந்த பஞ்சமி தினத்தில் விரதம் இருந்து பூஜைகள் செய்வது மிகக்சிறப்பு. அக்ஷராப்பியாசத்திற்கும் கல்வி சம்வந்தமான புதிய முயற்சிகள் துவங்கவும் ஏற்ற தினம் இது. எந்த வகையான செயலாக இருந்தாலும் வெற்றிகரமாக முடிய இன்று தொடங்கலாம். ஸ்ரீகிருஷ்ணர், சாந்தீபனி முனிவரிடம் குருகுல வாசம் துவங்கிய நாளும் இன்று தான்.
இந்த விரத பூஜை கொஞ்சம் வித்தியாசமானது. பூஜை செய்ய உகந்த நேரம் காலை 9 முதல் 11 வரை. இது பூர்வாஹன காலம் என்று அழைக்கப்படுகிறது.
முதலில் தூய்மையான இடத்தை தேர்ந்தெடுத்து அங்கு கிழக்கு பார்த்து பூஜைமேடையை அமைக்க வேண்டும். கோலங்கள் முதலியவற்றால் அலங்கரிக்கவும். பூஜை துவங்கும் முன்பாக தூபங்கள் கமழச்செய்யும். தீபங்கள் ஒற்றைப்படை எண்ணிக்கையில் ஏற்றி வைத்தல் சிறப்பு.
பரிபூர்ணத்தை குறிக்கும் கலச ஸ்தாபனம் விநாயகர் பூஜை முதலியவற்றை முதலில் செய்ய வேண்டும். அதன் பின் ஸ்ரீவிஷ்ணுவையும் சிவனாரையும் விக்ரகங்கள் அல்லது படங்களில் ஆவாஹனம் செய்து பூஜைகள் செய்ய வேண்டும்.
அம்பினை சத்வ குண ஸ்வரூபிணி...அம்பிகையின் வெண்பட்டு வஸ்திரம், ஸ்படிக மாலை முதலிய சத்வ குணத்தையும் தூய்மையையும் குறிக்கின்றன. ஆகவே தத்வகுண ஸ்வரூபனான திருமாலி பூஜை செய்யப்படுகின்றார். சில புராணங்களின் படி, சரஸ்பதி தேவி, சிவனாரின் சகோதரியாக கருதப்படுகின்றாள். ஆகவே சிவனாரும் பூஜையில் இடம் பெறுகின்றார்.
சிவ, விஷ்ணு பூஜைகளுக்கு பின் சரஸ்பதி தேவியின் படத்திற்கு பூஜைசெய்ய வேண்டும். வெண்ணிற பட்டு வஸ்திரம் அல்லது மஞ்சள் நிற வஸ்திரம் சாற்றி மஞ்சள் நிற மலர்கள் அல்லது மல்லிகை மலர்களால் மாலைகள் சூட்டி, அலங்கரித்து, மல்லிகை, தாமரை, செண்பக மலர்களால் அஷ்டோத்திரம் கூறி அர்ச்சனை செய்யவும். அம்பிகையின் பன்னிரு திருநாமங்களை கூறி வழிபாடு செய்வது மிகவும் சிறப்பானதாக கருதப்படுகின்றது.
பூஜை தினத்தன்று மாலையிலோ அல்லது மறுநாள் காலையிலோ இயன்றதை நிவேதனமாக செய்து புனர் பூஜை செய்து அம்பிகையையும் மற்ற தேவதைகளையும் யதாஸ்தானம் செய்யவும்.
விருப்பமிருப்பவர்கள் மேற்கூறிய பூஜை முறைகளின் படி பூஜை செய்யலாம். சரஸ்வதி பூஜைக்கென சாரதா நவராத்திரியில் செய்யும் பூஜைமுறைகளையும் பின்பற்றலாம்.
விஸ்தாரமான பூஜைகள் செய்ய இயலாதோரும், ஸ்ரீசரஸ்வதி தேவியின் படம் அல்லது பிரதிமையை அலங்கரித்து வைத்து தெரிந்த சரஸ்வதி துதிகளை பாராயணம் செய்து இயன்ற நிவேதனங்கள் படைத்து வழிபாடு செய்யலாம்.
ஸ்ரீசரஸ்வதி தேவியை போற்றும் ஸ்ரீசரஸ்வதி அந்தாதி துதியை இன்றைய தினம் சொல்லி வழிபாடு செய்யலாம்.
அட்டமத்தில் சனி இருப்பவர்களும், பூச நட்சத்திரக்காரர்களும் ஏழறை ஆண்டு சனி இருப்பவர்களும் இந்த விரதத்தை மேற்கொள்ளுவதால் தொல்லைகள் குறைவதோடு நன்மையுண்டாகும்.
அட்டமத்தில் சனி இருப்பவர்களும், பூச நட்சத்திரக்காரர்களும் ஏழறை ஆண்டு சனி இருப்பவர்களும் இந்த விரதத்தை மேற்கொள்ளுவதால் தொல்லைகள் குறைவதோடு நன்மையுண்டாகும்.
பெருமாளை வணங்கி நவக்கிரக சந்நிதியில் நவக்கிரகங்களை வலம் வந்து சனீஸ்வரனுக்கு எள்ளை துணியிலே கட்டி நல்லெண்ணெய் ஊற்றித் தீபம் ஏற்றி முனிவர்கள் தேவரேமும் மூர்த்திகள் முதலியானார்கள் மனிதர்கள் வாழ்வும் உன்றன் மகிமையது அல்லால் உண்டோ கனிவுள தெய்வம் நீயே கதிர்சேய காகம் ஏறுஞ்சனியனே உனைத்துதிப்பேன் தமியேனுக்கருள் செய்வாயே! என்று தோத்திரம் சொல்லி வணங்குவதால் சகல துன்பங்களும் நீங்கப் பெற்று நீண்ட ஆயுள் கிடைக்கும்.
இந்த சனீஸ்வர விரதத்தை ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் அனுசரிக்க முடியாதவர்கள் புரட்டாசி மாதத்தில் வருகின்ற சனிக்கிழமைகளில் மட்டுமாவது அனுசரிக்கவேண்டும்.
பெருமாளை வணங்கி நவக்கிரக சந்நிதியில் நவக்கிரகங்களை வலம் வந்து சனீஸ்வரனுக்கு எள்ளை துணியிலே கட்டி நல்லெண்ணெய் ஊற்றித் தீபம் ஏற்றி முனிவர்கள் தேவரேமும் மூர்த்திகள் முதலியானார்கள் மனிதர்கள் வாழ்வும் உன்றன் மகிமையது அல்லால் உண்டோ கனிவுள தெய்வம் நீயே கதிர்சேய காகம் ஏறுஞ்சனியனே உனைத்துதிப்பேன் தமியேனுக்கருள் செய்வாயே! என்று தோத்திரம் சொல்லி வணங்குவதால் சகல துன்பங்களும் நீங்கப் பெற்று நீண்ட ஆயுள் கிடைக்கும்.
இந்த சனீஸ்வர விரதத்தை ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் அனுசரிக்க முடியாதவர்கள் புரட்டாசி மாதத்தில் வருகின்ற சனிக்கிழமைகளில் மட்டுமாவது அனுசரிக்கவேண்டும்.
அமாவாசை தினங்கள் என்பது மூதாதையர்களை வழிபடுவதற்குரிய தினமாகவே கருதப்படுகிறது. அன்றைய தினம் உரிய முறையில் விரதம் இருந்து பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்வது மிகவும் நன்மை அளிப்பதாகும்.
அமாவாசை தினங்கள் என்பது மூதாதையர்களை வழிபடுவதற்குரிய தினமாகவே கருதப்படுகிறது. அன்றைய தினம் நம்முடைய முன்னோர்களின் பசியும், தாகமும் அதிகரிக்கும், அந்த பசியைப் போக்க கறுப்பு எள் கலந்த தண்ணீரை தர்ப்பணம் செய்ய வேண்டும்.
அவ்வாறு செய்தால் அவர்களின் பசி அடங்கி, நமக்கு ஆசிகளை வழங்குவார்கள் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. அமாவாசை தோறும், ஒவ்வொரு வீட்டு வாசலிலும், முன்னோர்கள் நின்று கொண்டு எள் தண்ணீர் பெறுவதற்காக காத்துக் கொண்டிருப்பார்களாம். இந்த நாளில் உரிய முறையில் விரதம் இருந்து பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்வது மிகவும் நன்மை அளிப்பதாகும்.
அன்றைய தினம் கடல், ஆறு மற்றும் புண்ணிய நதிகளின் ஓரங்களில், இறந்த நம்முடைய முன்னோர்களுக்கு, தாய், தந்தையர்களுக்கு திதி கொடுக்கலாம். அவ்வாறு திதி கொடுப்பதற்கு, தமிழ்நாட்டில் ராமேஸ்வரம், வேதாரண்யம், திருவையாறு போன்ற தலங்களும், வடமாநிலங்களில் காசி, திரிவேணி சங்கமம் ஆகிய இடங்களும் சிறந்த இடங்களாக குறிப்பிடப்படுகின்றன.
திதி கொடுக்கும் அன்றைய தினம், விரதம் இருந்து சூரிய வழிபாடு செய்வது அவசியமான ஒன்றாகும். இறந்தவர்களின் நாள்,தேதி தெரியாதவர்களும், 12 அமாவாசையன்றும் திதி கொடுக்க முடியாதவர்களும் தை, ஆடி மகாளய அமாவாசை திதிகளில் திதி கொடுத்தால் ஆண்டு தோறும் திதி கொடுத்த பலன் கிடைப்பதாக ஐதீகம்.
அவ்வாறு செய்தால் அவர்களின் பசி அடங்கி, நமக்கு ஆசிகளை வழங்குவார்கள் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. அமாவாசை தோறும், ஒவ்வொரு வீட்டு வாசலிலும், முன்னோர்கள் நின்று கொண்டு எள் தண்ணீர் பெறுவதற்காக காத்துக் கொண்டிருப்பார்களாம். இந்த நாளில் உரிய முறையில் விரதம் இருந்து பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்வது மிகவும் நன்மை அளிப்பதாகும்.
அன்றைய தினம் கடல், ஆறு மற்றும் புண்ணிய நதிகளின் ஓரங்களில், இறந்த நம்முடைய முன்னோர்களுக்கு, தாய், தந்தையர்களுக்கு திதி கொடுக்கலாம். அவ்வாறு திதி கொடுப்பதற்கு, தமிழ்நாட்டில் ராமேஸ்வரம், வேதாரண்யம், திருவையாறு போன்ற தலங்களும், வடமாநிலங்களில் காசி, திரிவேணி சங்கமம் ஆகிய இடங்களும் சிறந்த இடங்களாக குறிப்பிடப்படுகின்றன.
திதி கொடுக்கும் அன்றைய தினம், விரதம் இருந்து சூரிய வழிபாடு செய்வது அவசியமான ஒன்றாகும். இறந்தவர்களின் நாள்,தேதி தெரியாதவர்களும், 12 அமாவாசையன்றும் திதி கொடுக்க முடியாதவர்களும் தை, ஆடி மகாளய அமாவாசை திதிகளில் திதி கொடுத்தால் ஆண்டு தோறும் திதி கொடுத்த பலன் கிடைப்பதாக ஐதீகம்.
நந்தா விரதம் பொதுவாக திருமண வயதில் இருக்கும் பெண்கள் தங்களுக்கு நல்ல குணங்களை கொண்ட ஆண் கணவராக கிடைக்க வேண்டி மேற்கொள்ளும் விரதமாகும்.
ஒவ்வொரு ஆண் மற்றும் பெண்ணின் வாழ்க்கையில் திருமணம் என்பது ஒரு முக்கிய நிகழ்வாக இருக்கிறது. திருமணம் செய்யும் வயதுகளில் இருக்கும் பல ஆண்கள் மற்றும் பெண்களுக்கும் இருக்கும் எதிர்கால வாழ்க்கை துணை பற்றிய பல எதிர்பார்ப்புகள் இருக்கும். ஆனால் பலருக்கும் அவர்களுக்கு வாய்த்த வாழ்க்கை துணை எதிர்பார்ப்புக்கு மாறாக இருக்கும் போது ஏமாற்றம் அடைகின்றனர். தங்களுக்கு ஏற்ற வாழ்க்கை துணை அமைவதற்கு சிவன் மற்றும் பார்வதி தேவியின் அருளை பெற இருக்க வேண்டிய “நந்தா விரதம்” குறித்து முன்னோர்கள் கூறியுள்ளனர். நந்தா விரதம் இருக்கும் முறை பற்றி இங்கு நாம் தெரிந்து கொள்ளலாம்.
பூமியில் மனித குலத்தில் பிறந்த பார்வதி தேவி சிவபெருமானையே தனது கணவராக அடைய விரும்பி, இந்த நந்தா விரதத்தை அனுஷ்டித்து, தன் விருப்பம் போலவே விரதத்தை கணவராக அடைந்தாள். இந்த நந்தா விரதம் பொதுவாக திருமண வயதில் இருக்கும் பெண்கள் தங்களுக்கு நல்ல குணங்களை கொண்ட ஆண் கணவராக கிடைக்க வேண்டி மேற்கொள்ளும் விரதமாகும். ஆனால் ஆண்களும் தங்களின் மனதிற்கினிய பெண்ணை மனைவியாக அடைய இவ்விரதத்தை அனுஷ்டித்து சிவன் மற்றும் பார்வதி தேவியை வணங்குவதால் விரும்பிய பலன் கிடைக்கும்.
இந்த நந்த விரதத்தை அனுஷ்டிப்பதற்கு சிறந்த காலமாக இருப்பது “பங்குனி மாத வளர்பிறை சப்தமி” தினமாகும். இத்தினத்தில் அதிகாலையிலேயே எழுந்து குளித்து முடித்து விட வேண்டும். எழுந்து அதிகாலை சூரியனை நமஸ்கரித்து “ஓம் நம சிவாய” மந்திரத்தை உங்களால் முடிந்த எண்ணிக்கையில் மந்திர உரு ஜெபிக்க வேண்டும். அன்றைய தினம் முழுவதும் வெறும் நீர் தவிர வேறு எவற்றையும் உண்ணாமலும், அருந்தாமலும் விரதம் இருப்பது நல்லது.
அன்றைய தினம் காலையில் வீட்டிலேயே ஏதேனும் ஒரு இனிப்பு உணவை தயாரித்து, பூஜையறையில் சிவபெருமானுக்கு நிவேதனமாக வைத்து வணங்க வேண்டும். பின்பு அருகிலுள்ள சிவன் கோயிலுக்கு வேண்டும். வெள்ளை நிற மலர்கள் மற்றும் வில்வ இலைகள் சிவபெருமானுக்கு சமர்ப்பித்து வணங்க வேண்டும். பின்பு வீட்டிற்கு திரும்பி காலை முதல் மாலை வரை சிவமந்திரங்கள் ஜெபம் மற்றும் சிவபுராணம் படித்தால் என சிவசிந்தனையிலேயே கழிக்க வேண்டும்.
பிறகு மாலையிலும் சிவன் கோயிலுக்கு சென்று சிவனை வழிபட வேண்டும். நந்தா விரதம் மேற்கொள்ளும் நாள் முழுவதும் எதுவும் உண்ணாமல் இவ்விரதம் இருந்து மாலை கோயிலில் சிவபெருமானை வழிபட்ட பின்பு சிவனுக்கு படைக்கப்பட்ட நைவேத்தியத்தை பிரசாதமாக சாப்பிட்டு விரதத்தை முடிக்க வேண்டும். இந்த விரதத்தின் முழுமையான பலனை பெறுவதற்கு விரதம் மேற்கொண்ட பிறகு வரும் ஏதேனும் ஒரு நாளில் உங்களின் பொருளதார சக்திக்கு ஏற்ப ஏழ்மை நிலையில் இருக்கும் குழந்தைகள், முதியவர்கள் மற்றும் யாசகர்களுக்கு அன்னதானம் அளிக்க விரதத்தின் பலன் உங்களுக்கு உடனடியாக கிடைக்கும்.
பூமியில் மனித குலத்தில் பிறந்த பார்வதி தேவி சிவபெருமானையே தனது கணவராக அடைய விரும்பி, இந்த நந்தா விரதத்தை அனுஷ்டித்து, தன் விருப்பம் போலவே விரதத்தை கணவராக அடைந்தாள். இந்த நந்தா விரதம் பொதுவாக திருமண வயதில் இருக்கும் பெண்கள் தங்களுக்கு நல்ல குணங்களை கொண்ட ஆண் கணவராக கிடைக்க வேண்டி மேற்கொள்ளும் விரதமாகும். ஆனால் ஆண்களும் தங்களின் மனதிற்கினிய பெண்ணை மனைவியாக அடைய இவ்விரதத்தை அனுஷ்டித்து சிவன் மற்றும் பார்வதி தேவியை வணங்குவதால் விரும்பிய பலன் கிடைக்கும்.
இந்த நந்த விரதத்தை அனுஷ்டிப்பதற்கு சிறந்த காலமாக இருப்பது “பங்குனி மாத வளர்பிறை சப்தமி” தினமாகும். இத்தினத்தில் அதிகாலையிலேயே எழுந்து குளித்து முடித்து விட வேண்டும். எழுந்து அதிகாலை சூரியனை நமஸ்கரித்து “ஓம் நம சிவாய” மந்திரத்தை உங்களால் முடிந்த எண்ணிக்கையில் மந்திர உரு ஜெபிக்க வேண்டும். அன்றைய தினம் முழுவதும் வெறும் நீர் தவிர வேறு எவற்றையும் உண்ணாமலும், அருந்தாமலும் விரதம் இருப்பது நல்லது.
அன்றைய தினம் காலையில் வீட்டிலேயே ஏதேனும் ஒரு இனிப்பு உணவை தயாரித்து, பூஜையறையில் சிவபெருமானுக்கு நிவேதனமாக வைத்து வணங்க வேண்டும். பின்பு அருகிலுள்ள சிவன் கோயிலுக்கு வேண்டும். வெள்ளை நிற மலர்கள் மற்றும் வில்வ இலைகள் சிவபெருமானுக்கு சமர்ப்பித்து வணங்க வேண்டும். பின்பு வீட்டிற்கு திரும்பி காலை முதல் மாலை வரை சிவமந்திரங்கள் ஜெபம் மற்றும் சிவபுராணம் படித்தால் என சிவசிந்தனையிலேயே கழிக்க வேண்டும்.
பிறகு மாலையிலும் சிவன் கோயிலுக்கு சென்று சிவனை வழிபட வேண்டும். நந்தா விரதம் மேற்கொள்ளும் நாள் முழுவதும் எதுவும் உண்ணாமல் இவ்விரதம் இருந்து மாலை கோயிலில் சிவபெருமானை வழிபட்ட பின்பு சிவனுக்கு படைக்கப்பட்ட நைவேத்தியத்தை பிரசாதமாக சாப்பிட்டு விரதத்தை முடிக்க வேண்டும். இந்த விரதத்தின் முழுமையான பலனை பெறுவதற்கு விரதம் மேற்கொண்ட பிறகு வரும் ஏதேனும் ஒரு நாளில் உங்களின் பொருளதார சக்திக்கு ஏற்ப ஏழ்மை நிலையில் இருக்கும் குழந்தைகள், முதியவர்கள் மற்றும் யாசகர்களுக்கு அன்னதானம் அளிக்க விரதத்தின் பலன் உங்களுக்கு உடனடியாக கிடைக்கும்.
வருடத்தில் 12 மாதங்களும் முக்கிய தினங்களில் விரதங்கள் இருக்கலாம். அதில் எந்தெந்த மாதத்தில் எந்தெந்த விரதங்கள் இருந்தால் என்ன பலன் கிடைக்கும் என்ற அறிந்து கொள்ளலாம்.
வருடத்தில் 12 மாதங்களும் முக்கிய தினங்களில் விரதங்கள் இருக்கலாம். அதில் எந்தெந்த மாதத்தில் எந்தெந்த விரதங்கள் இருந்தால் பலன் கிடைக்கும் என்ற நெறிமுறை உண்டு. அதன்படி விரதம் இருப்பது நல்லது.
1. வளர்பிறை சப்தமிதிதி - வாழ்வில் வளம்.
2. பௌர்ணமி - சிவன் - லட்சுமி கடாட்சம், சகல சௌக்யம்.
3. பௌர்ணமி - சித்திரகுப்தர் - ஆயுள் பலம், புண்ணிய பலம்.
4. சுக்கிலபட்சத்து சுக்ரவாரம் - வெள்ளி - பார்வதிதேவி - சர்க்கரை நிவேதனம் - இனியவாழ்வு அமைய.
5. பரணி நட்சத்திரம் - பைரவமூர்த்தி - தயிர்சாதம் நிவேதனம் - எதிரி பயம் போகும். தடைகள் விலகும்.
6. மூல நட்சத்திரம் - மகாலட்சுமி நாராயணன் இஷ்டசித்திகள் - விஷ்னுலோகம் அடைய.
7. சுக்லபட்ச திரிதியை - உமா - மகேஸ்வரர் - தானம் செய்தல் - சிறப்பான வாழ்க்கை,சிவலோகம் அடைய.
விரதங்கள் - வைகாசி
1. பௌர்ணமி - சிவன் - சிவனருள்.
2. விருஷப - ரிஷபவாகனத்தில் இருக்கும் உமாமகேஸ்வரர் - நீண்ட ஆயுள்,பொருள்,தானியம்,கல்வி,வாகன யோகம்.
3. விசாகம் - முருகன் - முருகன் அருள்,மழலைச் செல்வம்.
விரதங்கள் - ஆனி
1. வளர்பிறை சப்தமி திதி - துர்க்கந்தநாசன விரதம் - சருமநோய்கள் நீங்கும்.
2. ரம்பா த்ரிதியை - த்ரிதியை - விரதம்,சிவன் வழிபாடு - அரம்பையர்கள் வாழ்த்து,அழகு,செல்வம் நிறைந்து வாழ.
3. பௌர்ணமி - சிவன் - எண்ணியவை கைகூடும் .
விரதங்கள் - ஆடி
1. வளர்பிறை சப்தமி திதி - அபய சப்தமி விரதம் - சூரிய உலகில் இடம்.
2. பௌர்ணமி - சிவன் - பகை விலகும் - வரலட்சுமி - செல்வம்சேரவும்,மங்களங்கள் பெருகவும்.
விரதங்கள் - ஆவணி
1. வளர்பிறை சப்தமி திதி - சகல பாக்யம் கிட்டும்.
2. பௌர்ணமி - சிவன் - வேண்டியவை கிட்டும்.
விரதங்கள் - புரட்டாசி
1. ஜேஷ்டா - சுக்லபட்ச அஷ்டமி - சிவன், விநாயகர் பூஜை - சந்ததி சிறப்பாக வளர.
2. மகாலட்சுமி - துவாதசிமுதல்16 நாட்கள் - லட்சுமி பூஜை - சகல நலமும் வளமும் பெற.
3. தசாவதார - சுக்லதசமியன்று.
4. கதளி, கௌரி - சுக்லபட்ச சதுர்த்தசி - உமாமகேஸ்வர பூஜை - இஷ்ட சித்தி.
5. அந்தந்த - பூர்வபட்ச சதுர்தசி - விஷ்னு பூஜை - காரியம் ஈடேற.
6. பிரதமை/நவராத்திரி பிரதமை - சுக்லபட்ச பிரதமை (அஸ்த நட்சத்திரம் கூடினால் சிறப்பு) - ஓன்பது நாள் தேவி பூஜை - தீயசக்திகாளின் தாக்கம் விலக.
7. சஷ்டி - சுக்லபட்ச ஷஷ்டி - பரமேஸ்வரி பூஜை - அம்பிகையின் அருளாசி.
8. வளர்பிறை சப்தமி திதி - அனந்தசப்தமி - கண்ணொளி பிரகாசிக்கும்.
9. பௌர்ணமி - சிவன் - பெருட்செல்வம் பெருகும்.
10. அமுக்தா - சுக்லபட்ச சப்தமி - உமாமகேஸ்வரர் - புத்ர,பௌத்ர விருத்தி.
1. வளர்பிறை சப்தமிதிதி - வாழ்வில் வளம்.
2. பௌர்ணமி - சிவன் - லட்சுமி கடாட்சம், சகல சௌக்யம்.
3. பௌர்ணமி - சித்திரகுப்தர் - ஆயுள் பலம், புண்ணிய பலம்.
4. சுக்கிலபட்சத்து சுக்ரவாரம் - வெள்ளி - பார்வதிதேவி - சர்க்கரை நிவேதனம் - இனியவாழ்வு அமைய.
5. பரணி நட்சத்திரம் - பைரவமூர்த்தி - தயிர்சாதம் நிவேதனம் - எதிரி பயம் போகும். தடைகள் விலகும்.
6. மூல நட்சத்திரம் - மகாலட்சுமி நாராயணன் இஷ்டசித்திகள் - விஷ்னுலோகம் அடைய.
7. சுக்லபட்ச திரிதியை - உமா - மகேஸ்வரர் - தானம் செய்தல் - சிறப்பான வாழ்க்கை,சிவலோகம் அடைய.
விரதங்கள் - வைகாசி
1. பௌர்ணமி - சிவன் - சிவனருள்.
2. விருஷப - ரிஷபவாகனத்தில் இருக்கும் உமாமகேஸ்வரர் - நீண்ட ஆயுள்,பொருள்,தானியம்,கல்வி,வாகன யோகம்.
3. விசாகம் - முருகன் - முருகன் அருள்,மழலைச் செல்வம்.
விரதங்கள் - ஆனி
1. வளர்பிறை சப்தமி திதி - துர்க்கந்தநாசன விரதம் - சருமநோய்கள் நீங்கும்.
2. ரம்பா த்ரிதியை - த்ரிதியை - விரதம்,சிவன் வழிபாடு - அரம்பையர்கள் வாழ்த்து,அழகு,செல்வம் நிறைந்து வாழ.
3. பௌர்ணமி - சிவன் - எண்ணியவை கைகூடும் .
விரதங்கள் - ஆடி
1. வளர்பிறை சப்தமி திதி - அபய சப்தமி விரதம் - சூரிய உலகில் இடம்.
2. பௌர்ணமி - சிவன் - பகை விலகும் - வரலட்சுமி - செல்வம்சேரவும்,மங்களங்கள் பெருகவும்.
விரதங்கள் - ஆவணி
1. வளர்பிறை சப்தமி திதி - சகல பாக்யம் கிட்டும்.
2. பௌர்ணமி - சிவன் - வேண்டியவை கிட்டும்.
விரதங்கள் - புரட்டாசி
1. ஜேஷ்டா - சுக்லபட்ச அஷ்டமி - சிவன், விநாயகர் பூஜை - சந்ததி சிறப்பாக வளர.
2. மகாலட்சுமி - துவாதசிமுதல்16 நாட்கள் - லட்சுமி பூஜை - சகல நலமும் வளமும் பெற.
3. தசாவதார - சுக்லதசமியன்று.
4. கதளி, கௌரி - சுக்லபட்ச சதுர்த்தசி - உமாமகேஸ்வர பூஜை - இஷ்ட சித்தி.
5. அந்தந்த - பூர்வபட்ச சதுர்தசி - விஷ்னு பூஜை - காரியம் ஈடேற.
6. பிரதமை/நவராத்திரி பிரதமை - சுக்லபட்ச பிரதமை (அஸ்த நட்சத்திரம் கூடினால் சிறப்பு) - ஓன்பது நாள் தேவி பூஜை - தீயசக்திகாளின் தாக்கம் விலக.
7. சஷ்டி - சுக்லபட்ச ஷஷ்டி - பரமேஸ்வரி பூஜை - அம்பிகையின் அருளாசி.
8. வளர்பிறை சப்தமி திதி - அனந்தசப்தமி - கண்ணொளி பிரகாசிக்கும்.
9. பௌர்ணமி - சிவன் - பெருட்செல்வம் பெருகும்.
10. அமுக்தா - சுக்லபட்ச சப்தமி - உமாமகேஸ்வரர் - புத்ர,பௌத்ர விருத்தி.
கணவனை இழந்தவர்கள் ரதசப்தமி விரதம் அனுஷ்டித்தால், அடுத்து வரும் பிறவிகளில் இந்த நிலை ஏற்படாது என்று புராணங்கள் சொல்கின்றன.
உலகிற்கு ஒளி தரும் சூரிய பகவானுக்கு உரிய விரதங்களில், மிக முக்கியமானது ரத சப்தமி. தை மாத வளர்பிறையில் ஏழாவது நாள் இந்த விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் சூரியன் உலா வருவதால், திதிகளில் ஏழாவது நாள் சப்தமி விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது.
செல்வத்தைப் பெருக்கும் இந்த விரதம் மிகவும் எளிமையானது. ஏழு எருக்கன் இலைகளை, தலையில் ஒன்று, கண்களில் இரண்டு, தோள்பட்டைகளில் இரண்டு, கால்களில் இரண்டை வைத்து நீராட வேண்டும். தலையில் வைக்கும் இலையில், பெண்கள் மஞ்சள் பொடி மற்றும் அட்சதையும், ஆண்கள் அட்சதை மட்டும் வைத்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு செய்வது ஆரோக்கியத்தையும், செல்வ வளத்தையும் தரும். ரத சப்தமி நாளில் செய்யப்படும் தர்மத்திற்கு பலமடங்கு புண்ணியம் உண்டு. இந்த நாளில் தொடங்கும் தொழில் விருத்தியாகும். பெண்கள் உயர்நிலையை அடைவர். கணவனை இழந்தவர்கள் இந்த விரதம் அனுஷ்டித்தால், அடுத்து வரும் பிறவிகளில் இந்த நிலை ஏற்படாது என்று புராணங்கள் சொல்கின்றன. இந்த நாள் தியானம், யோகா செய்ய சிறந்தது.
செல்வத்தைப் பெருக்கும் இந்த விரதம் மிகவும் எளிமையானது. ஏழு எருக்கன் இலைகளை, தலையில் ஒன்று, கண்களில் இரண்டு, தோள்பட்டைகளில் இரண்டு, கால்களில் இரண்டை வைத்து நீராட வேண்டும். தலையில் வைக்கும் இலையில், பெண்கள் மஞ்சள் பொடி மற்றும் அட்சதையும், ஆண்கள் அட்சதை மட்டும் வைத்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு செய்வது ஆரோக்கியத்தையும், செல்வ வளத்தையும் தரும். ரத சப்தமி நாளில் செய்யப்படும் தர்மத்திற்கு பலமடங்கு புண்ணியம் உண்டு. இந்த நாளில் தொடங்கும் தொழில் விருத்தியாகும். பெண்கள் உயர்நிலையை அடைவர். கணவனை இழந்தவர்கள் இந்த விரதம் அனுஷ்டித்தால், அடுத்து வரும் பிறவிகளில் இந்த நிலை ஏற்படாது என்று புராணங்கள் சொல்கின்றன. இந்த நாள் தியானம், யோகா செய்ய சிறந்தது.
உத்தராயண காலம் தை மாதத்தில் தொடங்குவதால் தை அமாவாசையும், தட்சணாயன காலம் ஆடி மாதத்தில் தொடங்குவதால் ஆடி மாத அமாவாசையும் பிதுர் வழிபாட்டிற்கு ஏற்றவை என்றும் சாஸ்திர நூல்கள் கூறுகின்றன.
4-2-2019 தை அமாவாசை
ஒரு வருடத்தில் ஆடி மாதம் முதல் மார்கழி முடிய உள்ள ஆறு மாத காலமான தட்சிணாயனம் தேவர்களுக்கு இரவு நேரம் ஆகும். அந்த நேரத்தில் ஒருவரது முன்னோர்கள் அவரை காப்பாற்ற பித்ருலோகத்தில் இருந்து வருவார்கள் என்பதன் அடிப்படையில் அவர்களுக்கு ஆடி அமாவாசை தர்ப்பணம் அளிக்கப்படுகிறது. தர்ப்பணத்தை மகிழ்ச்சியுடன் ஏற்பதற்காக பித்ருலோகத்தில் இருந்து புறப்படும் முன்னோர்கள், புரட்டாசி மாத மகாளய அமாவாசையன்று பூமிக்கு வருவதால், புரட்டாசி மாதமும் அவர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கவேண்டும். பின்னர் தை மாதம் மறுபடியும் தங்களுடைய லோகத்துக்குத் திரும்பும் அவர்களுக்கு நன்றி சொல்லி வழியனுப்பும் விதமாக தை அமாவாசை தர்ப்பணமும் கொடுக்கப்பட வேண்டும் என்பது ஐதீகம்.
இந்த கலியுகத்தில் பிதுர்கள் கண்ணுக்கு தெரியாவிட்டாலும், சூட்சும வடிவில் நம்மை பார்த்து ஆசியளிப்பதாக சாஸ்திரங்கள் சொல்கின்றன. ஒருவரது பிள்ளை என்ற முழு தகுதியையும் ஒருவர் பெற வேண்டுமானால், வாழும் காலத்தில் பெற்றோரை கவனிப்பதோடு, இறப்புக்கு பிறகும் பிதுர் கடனை முறையாக செய்திருக்க வேண்டும். “பித்ருக்களுக்கும் தனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்று நினைப்பவன் புத்தியில்லாத மூடன்” என்று கடோபநிஷதத்தில் நசிகேதன் என்ற சிறுவனுக்கு எமதர்மன் கூறுகிறார்.
உத்தராயண காலம் தை மாதத்தில் தொடங்குவதால் தை அமாவாசையும், தட்சணாயன காலம் ஆடி மாதத்தில் தொடங்குவதால் ஆடி மாத அமாவாசையும் பிதுர் வழிபாட்டிற்கு ஏற்றவை என்றும் சாஸ்திர நூல்கள் கூறுகின்றன.
தந்தைக்கு பித்ரு கர்மாக்களை செய்பவர்கள் அமாவாசை தினத்திலும், அன்னைக்கு பித்ரு கர்மாக்களை செய்பவர்கள் பவுர்ணமி தினத்திலும் மேற்கொள்வது புராதன காலம் முதல் இருந்து வரும் வழக்கமாகும். தை அமாவாசை அன்று பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்தால், அவர்களின் அருளாசியால் எண்ணற்ற நன்மைகள் ஏற்படும். பித்ருக்களுக்கான கடனை சரியாக நிறைவேற்றுவதால் பல நன்மைகள் உண்டாகும்.
பித்ரு கடனை நிறைவேற்றினால் நன்மைகள் வளரும் என்று சிவபெருமான் ராமபிரானிடம் கூறியதன் அடிப்படையில் ராமர், தசரதருக்கும், ஜடாயுவுக்கும் எள் தர்ப்பணம் செய்து பிதுர் பூஜை செய்தார். பின்னர், சிவபெருமான் ராமரின் முன் தோன்றி, தர்ப்பணம் செய்ததால் அனைத்து பாவங்களும் நீங்கி நன்மைகள் தேடி வரும் என்று சொன்னதாக புராணங்கள் உரைக்கின்றன.
தை அமாவாசையன்று பித்ருக்கள் பூலோகம் செல்ல எமதர்மன் அனுமதி தரும் நிலையில் எம தூதர்கள் பித்ருக்களை சூரியனின் வாகனத்தில் பூலோகத்திற்கு அழைத்து வருவார்கள். பித்ருக்கள் அவர்களது சந்ததியினர்களான பிள்ளைகளையும் உறவினர்களையும் பார்க்க மிகுந்த பாசத்துடனும் வருவதாக ஐதீகம். அதனால், தை அமாவாசை அன்று பித்ரு தர்ப்பணம் செய்வது நல்லது. அதனால் பித்ருக்கள் மனம் குளிர்ந்து அளிக்கும் அவர்களது ஆசிகளால் குடும்பத்தின் துயரங்கள் யாவும் அகலும். பித்ரு சாபத்திற்கு ஆளாகியவர்களை தெய்வத்தால்கூட கருணை காட்டி உதவி செய்ய முடியாது என்கிறது கருட புராணம்.
மறைந்த பெற்றோர் மற்றும் மூதாதையரை மனதில் நினைத்து மேற்கண்ட நாட்களில் ஆறு, கடல் போன்ற புனித நீர்நிலைகளில் நீராடி தர்ப்பணம் செய்ய வேண்டும். தர்ப்பணம் என்பதற்கு திருப்தியுடன் செய்வது என்று பொருள். சிரார்த்தம் என்றால் சிரத்தையுடன் செய்வது என்று அர்த்தம். இயலாத பட்சத்தில், பக்தியுடன் மனதார பித்ருக்களை வழிபட்டு அரிசி, காய்கறி, பழம், தட்சிணை, வஸ்திரம் முதலானவற்றை ஏழைகளுக்கு தானம் செய்யலாம். பிறகு முன்னோர்களின் பிரதிநிதிகளாகவும், உயிரினங்களில் கூடி வாழ்ந்து, சேர்ந்து உண்ணும் வழக்கமும் கொண்ட உயர்ந்த ஜீவனான காகத்திற்கு உணவிடுவதன் மூலம் பித்ருக்களின் ஆசியைப் பெற முடியும்.
‘முன்னோர்களுக்கு மூன்று கை தண்ணீர்’ என்று சொல்வார்கள். அவர்களுக்கு செய்யும் தர்ப்பண பலன்களை நம்மிடம் இருந்து பெற்று பிதுர் தேவதைகளிடம் சூரியன் வழங்குகிறார். அந்த தேவதைகள் மறைந்த முன்னோரிடம் பலன்களை சேர்க்கின்றன என்பது ஐதீகம். அமாவாசை நாட்களில் தீர்த்தக்கரைகளில் நீராடும் போது, பிதுர்காரகராகிய சூரியனுக்கு இரு கைகளாலும் நீர் விடும் அர்க்கியம் செய்வது மிகுந்த நன்மை தரும். கடல் அல்லது புண்ணிய நதிகளில் நீராடியவுடன் முழங்கால் அளவு நீரில் நின்றுகொண்டு, சூரியனை நோக்கி மூன்று முறை அர்க்கியம் செய்வதன் மூலம் சூரியனின் அருளையும் பூரணமாக பெறலாம்.
ஒரு வருடத்தில் ஆடி மாதம் முதல் மார்கழி முடிய உள்ள ஆறு மாத காலமான தட்சிணாயனம் தேவர்களுக்கு இரவு நேரம் ஆகும். அந்த நேரத்தில் ஒருவரது முன்னோர்கள் அவரை காப்பாற்ற பித்ருலோகத்தில் இருந்து வருவார்கள் என்பதன் அடிப்படையில் அவர்களுக்கு ஆடி அமாவாசை தர்ப்பணம் அளிக்கப்படுகிறது. தர்ப்பணத்தை மகிழ்ச்சியுடன் ஏற்பதற்காக பித்ருலோகத்தில் இருந்து புறப்படும் முன்னோர்கள், புரட்டாசி மாத மகாளய அமாவாசையன்று பூமிக்கு வருவதால், புரட்டாசி மாதமும் அவர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கவேண்டும். பின்னர் தை மாதம் மறுபடியும் தங்களுடைய லோகத்துக்குத் திரும்பும் அவர்களுக்கு நன்றி சொல்லி வழியனுப்பும் விதமாக தை அமாவாசை தர்ப்பணமும் கொடுக்கப்பட வேண்டும் என்பது ஐதீகம்.
இந்த கலியுகத்தில் பிதுர்கள் கண்ணுக்கு தெரியாவிட்டாலும், சூட்சும வடிவில் நம்மை பார்த்து ஆசியளிப்பதாக சாஸ்திரங்கள் சொல்கின்றன. ஒருவரது பிள்ளை என்ற முழு தகுதியையும் ஒருவர் பெற வேண்டுமானால், வாழும் காலத்தில் பெற்றோரை கவனிப்பதோடு, இறப்புக்கு பிறகும் பிதுர் கடனை முறையாக செய்திருக்க வேண்டும். “பித்ருக்களுக்கும் தனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்று நினைப்பவன் புத்தியில்லாத மூடன்” என்று கடோபநிஷதத்தில் நசிகேதன் என்ற சிறுவனுக்கு எமதர்மன் கூறுகிறார்.
உத்தராயண காலம் தை மாதத்தில் தொடங்குவதால் தை அமாவாசையும், தட்சணாயன காலம் ஆடி மாதத்தில் தொடங்குவதால் ஆடி மாத அமாவாசையும் பிதுர் வழிபாட்டிற்கு ஏற்றவை என்றும் சாஸ்திர நூல்கள் கூறுகின்றன.
தந்தைக்கு பித்ரு கர்மாக்களை செய்பவர்கள் அமாவாசை தினத்திலும், அன்னைக்கு பித்ரு கர்மாக்களை செய்பவர்கள் பவுர்ணமி தினத்திலும் மேற்கொள்வது புராதன காலம் முதல் இருந்து வரும் வழக்கமாகும். தை அமாவாசை அன்று பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்தால், அவர்களின் அருளாசியால் எண்ணற்ற நன்மைகள் ஏற்படும். பித்ருக்களுக்கான கடனை சரியாக நிறைவேற்றுவதால் பல நன்மைகள் உண்டாகும்.
பித்ரு கடனை நிறைவேற்றினால் நன்மைகள் வளரும் என்று சிவபெருமான் ராமபிரானிடம் கூறியதன் அடிப்படையில் ராமர், தசரதருக்கும், ஜடாயுவுக்கும் எள் தர்ப்பணம் செய்து பிதுர் பூஜை செய்தார். பின்னர், சிவபெருமான் ராமரின் முன் தோன்றி, தர்ப்பணம் செய்ததால் அனைத்து பாவங்களும் நீங்கி நன்மைகள் தேடி வரும் என்று சொன்னதாக புராணங்கள் உரைக்கின்றன.
தை அமாவாசையன்று பித்ருக்கள் பூலோகம் செல்ல எமதர்மன் அனுமதி தரும் நிலையில் எம தூதர்கள் பித்ருக்களை சூரியனின் வாகனத்தில் பூலோகத்திற்கு அழைத்து வருவார்கள். பித்ருக்கள் அவர்களது சந்ததியினர்களான பிள்ளைகளையும் உறவினர்களையும் பார்க்க மிகுந்த பாசத்துடனும் வருவதாக ஐதீகம். அதனால், தை அமாவாசை அன்று பித்ரு தர்ப்பணம் செய்வது நல்லது. அதனால் பித்ருக்கள் மனம் குளிர்ந்து அளிக்கும் அவர்களது ஆசிகளால் குடும்பத்தின் துயரங்கள் யாவும் அகலும். பித்ரு சாபத்திற்கு ஆளாகியவர்களை தெய்வத்தால்கூட கருணை காட்டி உதவி செய்ய முடியாது என்கிறது கருட புராணம்.
மறைந்த பெற்றோர் மற்றும் மூதாதையரை மனதில் நினைத்து மேற்கண்ட நாட்களில் ஆறு, கடல் போன்ற புனித நீர்நிலைகளில் நீராடி தர்ப்பணம் செய்ய வேண்டும். தர்ப்பணம் என்பதற்கு திருப்தியுடன் செய்வது என்று பொருள். சிரார்த்தம் என்றால் சிரத்தையுடன் செய்வது என்று அர்த்தம். இயலாத பட்சத்தில், பக்தியுடன் மனதார பித்ருக்களை வழிபட்டு அரிசி, காய்கறி, பழம், தட்சிணை, வஸ்திரம் முதலானவற்றை ஏழைகளுக்கு தானம் செய்யலாம். பிறகு முன்னோர்களின் பிரதிநிதிகளாகவும், உயிரினங்களில் கூடி வாழ்ந்து, சேர்ந்து உண்ணும் வழக்கமும் கொண்ட உயர்ந்த ஜீவனான காகத்திற்கு உணவிடுவதன் மூலம் பித்ருக்களின் ஆசியைப் பெற முடியும்.
‘முன்னோர்களுக்கு மூன்று கை தண்ணீர்’ என்று சொல்வார்கள். அவர்களுக்கு செய்யும் தர்ப்பண பலன்களை நம்மிடம் இருந்து பெற்று பிதுர் தேவதைகளிடம் சூரியன் வழங்குகிறார். அந்த தேவதைகள் மறைந்த முன்னோரிடம் பலன்களை சேர்க்கின்றன என்பது ஐதீகம். அமாவாசை நாட்களில் தீர்த்தக்கரைகளில் நீராடும் போது, பிதுர்காரகராகிய சூரியனுக்கு இரு கைகளாலும் நீர் விடும் அர்க்கியம் செய்வது மிகுந்த நன்மை தரும். கடல் அல்லது புண்ணிய நதிகளில் நீராடியவுடன் முழங்கால் அளவு நீரில் நின்றுகொண்டு, சூரியனை நோக்கி மூன்று முறை அர்க்கியம் செய்வதன் மூலம் சூரியனின் அருளையும் பூரணமாக பெறலாம்.
சனிப்பிரதோஷமான இன்று ஈஸ்வரனையும், சனீஸ்வரனையும் விரதமிருந்து வழிபடுவதால் அனைத்து விதமான தோஷங்களும் விலகும் என்பது அசைக்க முடியாத உண்மை.
சிவபெருமானை நாம் நாள் தோறும் வணங்குகிறோம். ஆனாலும் பிரதோஷ காலத்தில் எம்பெருமானை ஆலயம் சென்று வணங்குவது சிறந்த பயனை அளிக்கும். பிற தோஷங்களை நீக்கும் வலிமை பிரதோஷத்திற்கு உண்டு. சிவனுக்கு உகந்த விஷேசங்களில் பிரதோஷமும் ஒன்று. அதிலும் சனிக்கிழமை வரும் பிரதோஷம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.
சனிக்கிழமையில் வரும் பிரதோஷம் சனி பிரதோஷம் என்று அழைக்கப்படுகிறது. சாதாரண பிரதோஷ வழிபாடு தரும் பலன்கள் போன்று ஆயிரம் மடங்கு பலன் தரக்கூடியது இந்த சனி பிரதோஷம். ஈஸ்வரனையும், சனீஸ்வரனையும் அன்று விரதமிருந்து வழிபடுவதால் சனி பிரதோஷத்துக்கு கூடுதல் சிறப்பு கிடைத்துள்ளது.
சிவபெருமான் தேவர்களை காப்பாற்ற ஆலகால நஞ்சை உண்ட நாள் சனிக்கிழமை. எனவே, பிரதோஷ நேரம் சனிக்கிழமை அன்று வரும் சனி பிரதோஷம் என சிறப்பு பெறுகிறது.
இன்று அதிகாலை எழுந்து நீராடி, சிவாலயம் சென்று வழிபட வேண்டும். அன்று முழுவதும் உணவின்றி உபவாசம் இருந்து திருமுறைகளைப் படிக்க வேண்டும். பிரதோஷ நேரமான மாலை 4.30 மணிக்கு சிவாலயம் சென்று உள்ளம் உருகி ஐந்தெழுத்தை (சிவாய நம) ஓதி வழிபட வேண்டும்.
சனிக்கிழமையில் வரும் பிரதோஷம் சனி பிரதோஷம் என்று அழைக்கப்படுகிறது. சாதாரண பிரதோஷ வழிபாடு தரும் பலன்கள் போன்று ஆயிரம் மடங்கு பலன் தரக்கூடியது இந்த சனி பிரதோஷம். ஈஸ்வரனையும், சனீஸ்வரனையும் அன்று விரதமிருந்து வழிபடுவதால் சனி பிரதோஷத்துக்கு கூடுதல் சிறப்பு கிடைத்துள்ளது.
சிவபெருமான் தேவர்களை காப்பாற்ற ஆலகால நஞ்சை உண்ட நாள் சனிக்கிழமை. எனவே, பிரதோஷ நேரம் சனிக்கிழமை அன்று வரும் சனி பிரதோஷம் என சிறப்பு பெறுகிறது.
இன்று அதிகாலை எழுந்து நீராடி, சிவாலயம் சென்று வழிபட வேண்டும். அன்று முழுவதும் உணவின்றி உபவாசம் இருந்து திருமுறைகளைப் படிக்க வேண்டும். பிரதோஷ நேரமான மாலை 4.30 மணிக்கு சிவாலயம் சென்று உள்ளம் உருகி ஐந்தெழுத்தை (சிவாய நம) ஓதி வழிபட வேண்டும்.
மாதம் தோறும் அமாவாசை அன்று தர்ப்பணம் தர முடியாதோர், ஆண்டுக்கு ஒரு முறை வரும் தை அமாவாசையில் விரதம் இருந்து தர்ப்பணம் கொடுத்து, அனைத்து மாதத்திலும் தர்ப்பணம் தந்த பலனை பெறலாம்.
இப்பூமியில் உள்ள உயிர்களிலேயே உயர்ந்த பிறவியாக கருதப்படுவது மனிதப் பிறவி. மனித வாழ்வில் ஏற்படும் அனைத்து நிகழ்வுகளும் 9-ம் பாவம் என்னும் பாக்ய ஸ்தானத்தினால் தீர்மானம் செய்யப்படுகிறது. அந்த ஸ்தானம் வலிமை பெற்றவர்கள் சாதிக்க பிறந்தவர்கள். பாக்ய ஸ்தானத்தை வலிமைப்படுத்த பிரபஞ்சம் வழங்கிய மாபெரும் கொடைகள் இரண்டு. ஒன்று பித்ருக்கள் பூஜை, மற்றொன்று குலதெய்வ வழிபாடு.
‘பித்ருக்கள்’ என்பது நம் குடும்பத்தில் வாழ்ந்து மறைந்த முன்னோர்கள். அவர்கள் தங்களது சந்ததியினர் பாக்ய பலம் பெற, வாழ்வில் முன்னேற, தடைகள் அகல, பல தோஷங்கள் நிவர்த்தியாக வருடத்தில் சில குறிப்பிட்ட தினங்களுக்கு பூலோகம் வந்து ஆசி வழங்குவதாக ஐதீகம். அதில் அமாவாசை நாள் மிகவும் சக்தி பொருந்திய நாளாகும்.
மாதுர்காரகனாகிய சந்திரனும், பிதுர்காரகனாகிய சூரியனும் ஒன்றாக இணையும் காலமே, அமாவாசை எனப்படும் அந்த தினத்தில் மறைந்த முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் செய்து உணவு படையலிட்டு ஆசி பெறும் போது, நமது பாக்ய ஸ்தானம் வலிமை பெறும். இதன் மூலம் திருமணத்தடை, குழந்தை பிறப்பு தாமதம், வறுமை, நீடித்த நோய், கடன் தொல்லை போன்ற பிரச்சினைகளை நீக்கி கர்மவினைகளுக்குப் பரிகாரம் தேடிக் கொள்ளலாம்.
இயற்கையாக இறந்தவர்களின் ஆன்மாவிற்கு எளிதில் முக்தி கிடைத்துவிடும். மன வேதனை அடைந்து துர்மரணம் அடைந்தாலோ, கொடூரமான நோய் தாக்கத்தால் இறந்தாலோ, அவர்களின் ஆன்மா எளிதில் முக்தி அடைவதில்லை.
இயற்கையாக மரணித்து, முக்தி அடைந்தவரின் வீட்டில் சுப நிகழ்வு நடந்து கொண்டே இருக்கும். அகால மரணமடைந்த ஆத்மா முக்தி அடையும் வரை, சில மன வருத்தம் தரும் நிகழ்வு கள் குடும்பத்தில் நடைபெறக்கூடும். இதற்கு காரணம், அந்த ஆத்மா சாந்தியடைய அவர்களின் சந்ததியினர் வழிபாடு முறைகளை சரியாக செய்யாதது தான்.
இறந்த பிறகு ஆன்மாக்களுக்கு பிறவி குணம் இருக்காது. சாத்வீக குணம் வந்துவிடும். முறையான திதி, தர்ப்பணம் கிடைக்கப் பெறும் ஒவ்வொரு ஆத்மாவும் நற்சக்தி உடையது தான். அவர்களை முறையாக வழிபாடு செய்தால், தங்களின் அனைத்து சக்திகளையும் தன் சந்ததியினரின் முன்னேற்றத்திற்கு ஆசீர்வாதமாக வழங்குவார்கள்.
முன்னோர்களின் ஆன்மாக்களை யாரும் பார்க்க முடியாது, ஒவ்வொருவரையும் தனித்தனியாக வணங்கவும் முடியாது. எனவே பஞ்ச பூதங்களையும், நவக்கிரகங்களையும் முன் நிறுத்தி உரிய மந்திரங்களோடு செய்யப்படும் ‘தில ஹோமம்’, எத்தகைய துர்மரணமடைந்த ஆத்மாவையும் சாந்தியடைய செய்துவிடும். ஹோமம் செய்ய முடியாதவர்களுக்கு அமாவாசை வழிபாடு நல்ல பலன் தரும்.
முன்னோர்களுக்கு சிரார்த்தம் செய்யாதவனுக்கு ‘பித்ரு தோஷம்’ ஏற்படும். ஒரு வேளை அதிகமான புண்ணிய பலத்தால், ஒருவன் தன் வாழ்நாளில் பித்ரு தோஷத்தை அனுபவிக்காமல் போகலாம். ஆனால் அந்த பித்ரு தோஷம் அவனது வம்சத்தினரை பாதிக்கும். ஒருவர் தன் தலைமுறைக்கு சொத்து சேர்க்கா விட்டாலும் பரவாயில்லை, பித்ரு தோஷத்தை விட்டுச் செல்லக்கூடாது.
அமாவாசை அன்று முன்னோர்கள் ஆத்ம சாந்திக்காக செய்யப்படும் திதி, தர்ப்பண பூஜையானது, நம்முடைய வம்சாவழியினருக்கு பெரிதும் நலம் தரும். தர்ப்பணம் என்பது எள்ளும், நீரும் கொண்டு, வலது ஆள் காட்டி விரலுக்கும், கட்டை விரலுக்கும் இடையிலுள்ள பித்ரு பூம்ய ரேகைகள் வழியாக நீரை வார்த்து தரப்படுவதாகும். இந்த தர்ப்பண நீரின் சக்தியானது, பூமியின் ஆகர்ஷன சக்தியை மீறி, மேல்நோக்கி எழும்பிச் சென்று, பல கோடி மைல்களுக்கு தொலைவில் உள்ள பித்ரு லோகத்தை அடையும். தை அமாவாசையன்று, இந்த சக்தியானது மிகவும் அபரிமிதமாக பெருகுகிறது.
மாதம் தோறும் அமாவாசை அன்று தர்ப்பணம் தர முடியாதோர், ஆண்டுக்கு ஒரு முறை வரும் தை அமாவாசையில் தர்ப்பணம் கொடுத்து, அனைத்து மாதத்திலும் தர்ப்பணம் தந்த பலனை பெறலாம்.
‘பித்ருக்கள்’ என்பது நம் குடும்பத்தில் வாழ்ந்து மறைந்த முன்னோர்கள். அவர்கள் தங்களது சந்ததியினர் பாக்ய பலம் பெற, வாழ்வில் முன்னேற, தடைகள் அகல, பல தோஷங்கள் நிவர்த்தியாக வருடத்தில் சில குறிப்பிட்ட தினங்களுக்கு பூலோகம் வந்து ஆசி வழங்குவதாக ஐதீகம். அதில் அமாவாசை நாள் மிகவும் சக்தி பொருந்திய நாளாகும்.
மாதுர்காரகனாகிய சந்திரனும், பிதுர்காரகனாகிய சூரியனும் ஒன்றாக இணையும் காலமே, அமாவாசை எனப்படும் அந்த தினத்தில் மறைந்த முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் செய்து உணவு படையலிட்டு ஆசி பெறும் போது, நமது பாக்ய ஸ்தானம் வலிமை பெறும். இதன் மூலம் திருமணத்தடை, குழந்தை பிறப்பு தாமதம், வறுமை, நீடித்த நோய், கடன் தொல்லை போன்ற பிரச்சினைகளை நீக்கி கர்மவினைகளுக்குப் பரிகாரம் தேடிக் கொள்ளலாம்.
இயற்கையாக இறந்தவர்களின் ஆன்மாவிற்கு எளிதில் முக்தி கிடைத்துவிடும். மன வேதனை அடைந்து துர்மரணம் அடைந்தாலோ, கொடூரமான நோய் தாக்கத்தால் இறந்தாலோ, அவர்களின் ஆன்மா எளிதில் முக்தி அடைவதில்லை.
இயற்கையாக மரணித்து, முக்தி அடைந்தவரின் வீட்டில் சுப நிகழ்வு நடந்து கொண்டே இருக்கும். அகால மரணமடைந்த ஆத்மா முக்தி அடையும் வரை, சில மன வருத்தம் தரும் நிகழ்வு கள் குடும்பத்தில் நடைபெறக்கூடும். இதற்கு காரணம், அந்த ஆத்மா சாந்தியடைய அவர்களின் சந்ததியினர் வழிபாடு முறைகளை சரியாக செய்யாதது தான்.
இறந்த பிறகு ஆன்மாக்களுக்கு பிறவி குணம் இருக்காது. சாத்வீக குணம் வந்துவிடும். முறையான திதி, தர்ப்பணம் கிடைக்கப் பெறும் ஒவ்வொரு ஆத்மாவும் நற்சக்தி உடையது தான். அவர்களை முறையாக வழிபாடு செய்தால், தங்களின் அனைத்து சக்திகளையும் தன் சந்ததியினரின் முன்னேற்றத்திற்கு ஆசீர்வாதமாக வழங்குவார்கள்.
முன்னோர்களின் ஆன்மாக்களை யாரும் பார்க்க முடியாது, ஒவ்வொருவரையும் தனித்தனியாக வணங்கவும் முடியாது. எனவே பஞ்ச பூதங்களையும், நவக்கிரகங்களையும் முன் நிறுத்தி உரிய மந்திரங்களோடு செய்யப்படும் ‘தில ஹோமம்’, எத்தகைய துர்மரணமடைந்த ஆத்மாவையும் சாந்தியடைய செய்துவிடும். ஹோமம் செய்ய முடியாதவர்களுக்கு அமாவாசை வழிபாடு நல்ல பலன் தரும்.
முன்னோர்களுக்கு சிரார்த்தம் செய்யாதவனுக்கு ‘பித்ரு தோஷம்’ ஏற்படும். ஒரு வேளை அதிகமான புண்ணிய பலத்தால், ஒருவன் தன் வாழ்நாளில் பித்ரு தோஷத்தை அனுபவிக்காமல் போகலாம். ஆனால் அந்த பித்ரு தோஷம் அவனது வம்சத்தினரை பாதிக்கும். ஒருவர் தன் தலைமுறைக்கு சொத்து சேர்க்கா விட்டாலும் பரவாயில்லை, பித்ரு தோஷத்தை விட்டுச் செல்லக்கூடாது.
அமாவாசை அன்று முன்னோர்கள் ஆத்ம சாந்திக்காக செய்யப்படும் திதி, தர்ப்பண பூஜையானது, நம்முடைய வம்சாவழியினருக்கு பெரிதும் நலம் தரும். தர்ப்பணம் என்பது எள்ளும், நீரும் கொண்டு, வலது ஆள் காட்டி விரலுக்கும், கட்டை விரலுக்கும் இடையிலுள்ள பித்ரு பூம்ய ரேகைகள் வழியாக நீரை வார்த்து தரப்படுவதாகும். இந்த தர்ப்பண நீரின் சக்தியானது, பூமியின் ஆகர்ஷன சக்தியை மீறி, மேல்நோக்கி எழும்பிச் சென்று, பல கோடி மைல்களுக்கு தொலைவில் உள்ள பித்ரு லோகத்தை அடையும். தை அமாவாசையன்று, இந்த சக்தியானது மிகவும் அபரிமிதமாக பெருகுகிறது.
மாதம் தோறும் அமாவாசை அன்று தர்ப்பணம் தர முடியாதோர், ஆண்டுக்கு ஒரு முறை வரும் தை அமாவாசையில் தர்ப்பணம் கொடுத்து, அனைத்து மாதத்திலும் தர்ப்பணம் தந்த பலனை பெறலாம்.
மாதம் தோறும் வரும் ஏகாதசி அன்று விரதம் இருப்பவர்கள் சகல சவுபாக்கியங்களையும் அடைவர். இவ்விரதத்தால் உடல்நலமும் ஆரோக்கியத்துடன் திகழும்.
தேவர்களுக்கும், முனிவர்களுக்கும், மானிடர்களுக்கும் மிகுந்த தொல்லை அளித்து வந்தான் முரன் என்னும் அசுரன். இதனால் அவனை அழித்து தங்களை காக்குமாறு ஈசனை துதித்தனர். அவர்களை மகாவிஷ்ணுவை சரணடைய கூறினார் சிவபெருமான். அதன்படி அனைவரும் விஷ்ணுவை சரணடைந்தனர். அவர்களை காக்க எண்ணிய மகாவிஷ்ணு, அந்த அசுரனோடு போர் புரியத் தொடங்கினார். போர் 1000 ஆண்டுகள் கடுமையாக நீடித்தது. அதன் பிறகு மிகவும் களைப்படைந்தவராய் மகாவிஷ்ணு பத்ரிகாஸ்ரமத்தில் உள்ள ஒரு குகையில் படுத்து ஓய்வெடுத்தார்.
அந்த நேரத்தை தனக்கு சாதகமாக்கி கொண்டு, 'முரன்' பகவானை கொல்லத் துணிந்த போது, அவருடைய திவ்ய சரீரத்தில் இருந்து அவருடைய சக்தி ஒரு பெண் வடிவில் வெளிப்பட்டது. இவளை அசுரன் நெருங்கிய வேளையில் அவளிடம் இருந்து வெளிப்பட்ட ஓங்காரமே, அசுரனை எரித்து சாம்பலாக்கியது.
விழித்தெழுந்து நடந்ததைக் கண்ட நாராயணன், அந்த சக்திக்கு “ஏகாதசி” எனப் பெயரிட்டு உன்னை விரதம் இருந்து போற்றுவோருக்கு நான் சகல நன்மைகளையும் தருவேன் என வரமளித்து தன்னுள் மீண்டும் சக்தியை ஏற்றுக்கொண்டார். எனவே ஏகாதசி எனும் சக்தி விழிப்புடன் இருந்து நாராயணனின் அருளும் வரமும் பெற்ற ஏகாதசி நாளில் நாமும் கண்விழித்து விரதம் கடைபிடித்தால் அவரின் அருள் பரிபூரணமாக கிடைக்கப்பெற்று நீங்காப் புகழுடன் வாழ்வோம் என்பது ஐதீகம்.
அந்த நேரத்தை தனக்கு சாதகமாக்கி கொண்டு, 'முரன்' பகவானை கொல்லத் துணிந்த போது, அவருடைய திவ்ய சரீரத்தில் இருந்து அவருடைய சக்தி ஒரு பெண் வடிவில் வெளிப்பட்டது. இவளை அசுரன் நெருங்கிய வேளையில் அவளிடம் இருந்து வெளிப்பட்ட ஓங்காரமே, அசுரனை எரித்து சாம்பலாக்கியது.
விழித்தெழுந்து நடந்ததைக் கண்ட நாராயணன், அந்த சக்திக்கு “ஏகாதசி” எனப் பெயரிட்டு உன்னை விரதம் இருந்து போற்றுவோருக்கு நான் சகல நன்மைகளையும் தருவேன் என வரமளித்து தன்னுள் மீண்டும் சக்தியை ஏற்றுக்கொண்டார். எனவே ஏகாதசி எனும் சக்தி விழிப்புடன் இருந்து நாராயணனின் அருளும் வரமும் பெற்ற ஏகாதசி நாளில் நாமும் கண்விழித்து விரதம் கடைபிடித்தால் அவரின் அருள் பரிபூரணமாக கிடைக்கப்பெற்று நீங்காப் புகழுடன் வாழ்வோம் என்பது ஐதீகம்.






