search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சரஸ்வதி"

    என் நாவில் நீ தங்கி குடியிருந்து சொற்பிழை பொருட்பிழை நீக்கி நல்லறிவும் நல்வாழ்வும் நீ தந்து தஞ்சமென்ற பிள்ளைகளுக்கு சாஸ்வதமான சரஸ்வதி தாயே உன் திருவடி சரணம் போற்றி... போற்றியே .....
    சரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காம ரூபிணி
    வித்யாரம்பம் கரிஷ்யாமி ஸித்திர் பவது மே ஸதா...
    ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்
    ஏய உணர்விக்கும் என் அம்மை -தூய
    உருப்பளிங்கு போல்வாள் என் உள்ளத்தினுள்ளே
    இருப்பளிங்கு வாராது இடர்.

    ஓம் கலைவாணியே போற்றி
    ஓம் கல்வியறிவு தருபவளே போற்றி
    ஓம் நான்முகனின் நாயகியே போற்றி
    ஓம் நான்முகனின் நாநுனியில் வசிப்பவளே போற்றி
    ஓம் சகல கலா வல்லித்தாயே போற்றி
    ஓம் ஏகவல்லி நாயகியே போற்றி
    ஓம் பிரம்மதேவரின் பத்தினியே போற்றி
    ஓம் பரசுராமரைப் பெற்றவளே போற்றி
    ஓம் கல்வியறிவிற்கு அதிபதியே போற்றி
    ஓம் மஹா மாயா சக்தியும் நீயே போற்றி
    ஓம் தாமரை மலரில் வாசம் செய்பவளே போற்றி
    ஓம் கேட்கும் வரமனைத்தும் தருபவளே போற்றி
    ஓம் ஞானமுத்திரை தருபவளே போற்றி
    ஓம் புத்தகம் கரத்தில் கொண்டவளே போற்றி
    ஓம் மஹா வித்தை நீயே தாயே போற்றி
    ஓம் மஹா பாதகங்களை துவம்சம் செய்பவளே போற்றி
    ஓம் அனைத்து யோகங்களையும் தருபவளே போற்றி
    ஓம் மஹாகாளி மஹாதுர்கா மஹாலஷ்மி நீயே போற்றி
    ஓம் உயரிய கல்வியை கேட்டபடி தருபவளே போற்றி
    ஓம் கற்றதற்கு ஏற்ற உயர்வாழ்வை வரமாய்த் தருபவளே போற்றி
    ஓம் சர்வ மந்த்ரங்களின் மூலாதாரப் பொருள் நீயே போற்றி
    ஓம் சர்வ மங்கள மந்திரங்கள் சித்தி யளிப்பவளே போற்றி
    ஓம் சர்வ மங்கள மாங்கல்ய பலம் தருபவளே போற்றி
    ஓம் சர்வ சாஸ்த்திரங்களின் உற்பத்தி ஸ்தலம் நீயே போற்றி
    ஓம் கற்றோரை சென்ற இடமெல்லாம் சிறப்பிக்கும் தாயே போற்றி
    ஓம் நல்லவர் நாவில் இருந்து நல்வாக்கு சொல்பவளே போற்றி
    ஓம் அற்புத மந்திரம் எழுதும் வாணியே போற்றி
    ஓம் அழகுவீணை இசைப்பவளே போற்றி
    ஓம் கலைகள் மூன்றிற்கும் மூலாதாரச் சுடரே போற்றி
    ஓம் கல்வியை உனது ரூபமாகக் கொண்டவளே போற்றி
    ஓம் யந்திர தந்திர மந்த்ரம் கற்றுத் தருபவளே போற்றி
    ஓம் தொழிற் கல்வி அனைத்தும் தருபவளே போற்றி
    ஓம் அனைத்து வாகனங்களின் சூட்சுமம் நீயே போற்றி
    ஓம் கணிதம் தந்த கலைவாணித் தாயே போற்றி
    ஓம் கணிப்பொறி யியலின் காரணி போற்றி
    ஓம் காலம் நேரம் வகுத்தவளே போற்றி
    ஓம் விஞ்ஞானத்தின் மூலாதாரமே போற்றி
    ஓம் அண்ட சராசரங்களின் இருப்பிடம் கணித்த தாயே போற்றி
    ஓம் வான சாஸ்திர அறிவின் பிறப்பிடம் நீயே போற்றி
    ஓம் வறுமையை போக்கும் கல்வித் தாயே போற்றி
    ஓம் இயல் இசை நாடகம் போதித்த கலைமகளே போற்றி
    ஓம் வீணை யொலியில் மந்த்ரம் மீட்டும் தாயே போற்றி
    ஓம் மூவுலகும் மயங்கும் வீணை மீட்டும் வீணா கான வாணி போற்றி
    ஓம் முத்தமிழும் தழைக்கச் செய்த அன்னையே போற்றி
    ஓம் வாக்கிற்கு அதிதேவதை நீயே தாயே போற்றி
    ஓம் சௌபாக்ய செல்வம் தரும் மந்த்ரம் நீயே போற்றி
    ஓம் வாழ்வைப் புனிதமாக்கும் மந்திரமே போற்றி
    ஓம் கலைவாணித் தாயே சரஸ்வதியே போற்றி
    ஓம் ரக்தபீஜ சம்ஹார மந்த்ரம் தந்த வாணீ போற்றி
    ஓம் அம்பிகை சாமுண்டி வராஹி யாவரும் நீயே போற்றி
    ஓம் முக்காலங்களிலும் முகிழ்ந்து உறைந்தவளே போற்றி
    ஓம் சுபாஷிணி சுபத்ரை விஷாலாட்சி மூவரும் நீயே போற்றி
    ஓம் பிரஹ்மி வைஷ்ணவி சண்டி சாமுண்டி நீயே போற்றி
    ஓம் பாரதி கோமதி நாயகி நாண்முகி தாயே போற்றி
    ஓம் மகாலஷ்மி மஹாசரஸ்வதி மகாதுர்கா நீயே போற்றி
    ஓம் விமலா மாகாளி மாலினி யாவரும் நீயே போற்றி
    ஓம் விந்திய விலாசினி வித்யா ரூபினி போற்றி
    ஓம் மஹா சக்தியினுள்ளே உறைபவள் போற்றி
    ஓம் சர்வ தேவியருள்ளும் உறைபவள் நீயே போற்றி
    ஓம் பொன்னும் மெய்ப்பொருளும் கல்வியினால் அருள்பவளே போற்றி
    ஓம் திருமால் உந்தியில் உதித்தவனின் துணைவி போற்றி
    ஓம் உலகின் எல்லா எழுத்திற்கும் மூலமே போற்றி
    ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் மந்திர எழுத்துகளின் ரூபமே போற்றி
    ஓம் மந்திர ராஜ்யத்தின் தேவி பீஜாட்ஸரி போற்றி
    ஓம் சர்வாம்பிகையே சத்தியவாசினி புத்தகவாசினியே போற்றி
    ஓம் சர்வ அபாயங்களையும் துவம்சிப்பவளே போற்றி
    ஓம் சாற்றுக் கவி நாநுனி யுரையும் அன்னையே போற்றி
    ஓம் காற்றில் கலந்த மந்திர ஒலியே போற்றி
    ஓம் வித்யா திருஷ்டா யுத்மா போற்றி
    ஓம் வாக்கின் தலைவியான வாக்தேவி போற்றி
    ஓம் விஞ்சு பகவதி உயர்புகழ் பிராம்ஹி போற்றி
    ஓம் சொல்லும் சொல்லின் மெய்ஞானப் பொருளே போற்றி
    ஓம் நீதித்துறை நடுநின்ற நாயகி போற்றி
    ஓம் பண் பரதம் கல்வி தருபவளே போற்றி
    ஓம் கற்றவர் நாவில் உறைபவளே போற்றி
    ஓம் யந்திர வாகன ஆயுதங்களின் அதிதேவதையே போற்றி
    ஓம் தேகத்தின் புத்திப் பகுதியில் உறைபவளே போற்றி
    ஓம் வேத தர்ம நீதி சாஸ்திரங்கள் வகுத்தவளே போற்றி
    ஓம் பூஜிப்போர் மனம் மகிழ்விப்பவளே போற்றி
    ஓம் அனைத்து புண்ய தீர்த்தங்களின் ரூபத்தவளே போற்றி
    ஓம் யமுனை நதி தீரத்தின் மையங் கொண்டவளே போற்றி
    ஓம் சர்வ ஜீவ காருண்ய மனம் கொண்ட மாதரசி போற்றி
    ஓம் பிரம்மா லோகத்தை மையம் கொண்ட பிரம்ம நாயகி போற்றி
    ஓம் உச்ச நிலை வறுமையையும் கற்ற வித்தை கொண்டு அழிப்பவளே போற்றி
    ஓம் சரணடைந்தவர்க்கு சாஸ்வத மானவளே போற்றி
    ஓம் வேதாந்த ஞானிகளின் ரூபத்தவளே போற்றி
    ஓம் எழு தாமரை யுறை புகழ் முன்றக் கரவுருள் போற்றி
    ஓம் பின்னமேதுமில்லாமல் தேவையானதை தருபவளே போற்றி
    ஓம் இடது ஒரு கையில் சுவடி கொண்டவளே போற்றி
    ஓம் இடது மறு கையில் ஞானாமிர்த கலசம் கொண்டவளே போற்றி
    ஓம் வலது ஒரு கையில் சின் முத்ரா கொண்டவளே போற்றி
    ஓம் வலது மறு கையில் சிருஷ்டியின் அட்சரமாலை கொண்டவளே போற்றி
    ஓம் பத்மாசனம் உறைபவளே போற்றி
    ஓம் புத்திப் பிரகாசம் தருபவளே போற்றி
    ஓம் வாக்கு வன்மை தருபவளே போற்றி
    ஓம் மனதில் தூய்மை சாந்தி அமைதி தருபவளே போற்றி
    ஓம் தத்துவ எழுத்து ரூபம் தாங்கிய தேவி போற்றி
    ஓம் மஹா நைவேத்யம் உவந்தவள் போற்றி
    ஓம் கற்பூர நீராஜனம் உவந்தவள் போற்றி
    ஓம் ஸ்வர்ண புஷ்பம் உவந்தவளே போற்றி
    ஓம் யுக தர்மம் கணித்தவளே சகலகலாவல்லியே போற்றி
    ஓம் ஸ்ரீசக்கர பூஜையின் மந்திர ரூபிணியே போற்றி
    ஓம் பதாம் புயத்தவளே சகலகலாவல்லியே போற்றி
    ஓம் கற்றறிஞர் கவிமழை தரும் கலாப மயிலே போற்றி
    ஓம் கண்ணும் கருத்தும் நிறை சகலாகலாவல்லியே போற்றி
    ஓம் வெள்ளோதிமைப் பேடே சகலகலாவல்லியே போற்றி
    ஓம் கண்கண்ட தெய்வமே சகலகாவல்லியே போற்றி
    ஓம் கல்விச் செல்வம் தந்தருள்வாய் கலைவாணியே
    போற்றி ... போற்றி ... போற்றி ... போற்றியே ....

    வாணி சரஸ்வதி என் வாக்கில் நீ குடியிருந்து  
    தாயே சரஸ்வதியே சங்கரி நீ என் முன் நடந்து
    என் நாவில் குடியிருந்து நல்லோசை தந்துவிட்டு
    கமலாசனத்தாலே எமைக் காத்து
    என் குரலில் நீயிருந்து கொஞ்சிடனும் பெற்றவளே ...

    என் நாவில் நீ தங்கி குடியிருந்து
    சொற்பிழை பொருட்பிழை நீக்கி
    நல்லறிவும் நல்வாழ்வும் நீ தந்து
    மங்கல வாழ்விற்கு வழி வகுத்து
    தஞ்சமென்ற பிள்ளைகளுக்கு
    சாஸ்வதமான சரஸ்வதி தாயே
    உன் திருவடி சரணம் போற்றி...
    உன் மலரடி சரணம் போற்றி ...போற்றியே .....
    ×