என் மலர்
தோஷ பரிகாரங்கள்
அகஸ்தியர் நாடி நூலில், பிரசன்ன காண்டம் பகுதியில் உள்ள ஸ்ரீ தோரண கணபதி பிரசன்ன துதியை தினமும் மூன்று முறை படித்துவர, கடன் பிரச்சினைகள் யாவும் நீங்கும்.
ஸ்ரீ தோரண விநாயகரை வணங்கி வழிபட்டால், ருணம் எனும் கடன் தீரும். சக்தி தேவியர் தனியாகக் கோவில் கொண்டிருக்கும் திருத்தலங்களில், தோரண வாயிலைப் பார்த்தபடி, அம்பிகைக்கு வலப்புறமாக சன்னதி கொண்டிருப்பார். ஜடா மகுடமும், கழுத்தில் ருத்ராட்ச மாலையும், மேலிரு கரங்களில் அங்குச-பாசமும், கீழ் இரு கரங்களில் தந்தமும் மோதகமும் ஏந்தியவாறு அருள்வார், ஸ்ரீ தோரண கணபதி.
ஸ்ரீ தோரண கணபதி, தமது கையில் இருக்கும் தந்தத்தைப் பயன்படுத்தி, நமது வாழ்வில் உள்ள ருணம் எனும் கடன்களை தீர்த்து அருள்கிறார் என்று சிவாகம துதிகள் கூறுகின்றன. செவ்வாய்க்கிழமைகளில் ஸ்ரீ தோரண கணபதியைத் தரிசிப்பது விசேஷம். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் தோரண கணபதியை வழிபடலாம். இந்த மூன்று கிழமைகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, தொடர்ந்து 6 வாரங்கள் குறிப்பிட்ட கிழமைகளில் ஸ்ரீ தோரண விநாயகரை தரிசித்து அவருக்கு மூன்று நெய் தீபங்கள் ஏற்றி வைத்து வழிபட வேண்டும்.
அத்துடன் கணபதியின் மேகலை-பத்மபீடம் முன்பு அமர்ந்து, தோரணரின் மூல மந்திரத்தை 12 முறை ஜெபித்து, தோப்புக்கரணம் செய்து நமஸ்கரிக்க வேண்டும். மா, கொய்யா, மாதுளை, திராட்சை, ஆரஞ்சு என்று ஐந்து வகை பழங்களை படைத்து, அர்ச்சனை செய்து வணங்குவது விசேஷம். இதனால் விரைவில் நமது கடன்கள் யாவும் தீர்ந்து நிம்மதி பிறக்கும்.
ஆறு ஞாயிற்றுக் கிழமைகள் தோரண கணபதி சன்னதிக்கு சென்று அவருடைய சன்னதிக்கு பின் புறம் மூன்று நெய் தீபங்கள் ஏற்றி வைத்து, ஐந்து வகை பழங்கள் படைத்து, பிள்ளையார் துதிப் பாடல்களை பாடி, அர்ச்சனை செய்து வழிபட்டு வருவதால், வராக் கடன்களும் விரைவில் வசூலாகும். சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடத்தில் ஸ்ரீ சாரதாம்பாள் சன்னதியில் காப்பு கணபதியாக அருள்கிறார் ஸ்ரீ தோரண கணபதி, தமிழ்நாட்டில் பிள்ளையார்பட்டி, மயிலாடுதுறை, வடதேசத்தில் வாரணாசி ஆகிய தலங்களில் தோரண கணபதி வழிபாடு உண்டு.
ஆலயங்களுக்கு சென்று வழிபட இயலாத நிலையில், வீட்டிலேயே ஸ்ரீ தோரண கணபதியை மனதால் தியானித்து, அகஸ்தியர் நாடி நூலில், பிரசன்ன காண்டம் பகுதியில் உள்ள ஸ்ரீ தோரண கணபதி பிரசன்ன துதியை தினமும் மூன்று முறை படித்துவர, கடன் பிரச்சினைகள் யாவும் நீங்கும். வாழ்வில் வறுமைகள் அகன்று வளம் பெருகும்.
ஸ்ரீ தோரண கணபதி, தமது கையில் இருக்கும் தந்தத்தைப் பயன்படுத்தி, நமது வாழ்வில் உள்ள ருணம் எனும் கடன்களை தீர்த்து அருள்கிறார் என்று சிவாகம துதிகள் கூறுகின்றன. செவ்வாய்க்கிழமைகளில் ஸ்ரீ தோரண கணபதியைத் தரிசிப்பது விசேஷம். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் தோரண கணபதியை வழிபடலாம். இந்த மூன்று கிழமைகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, தொடர்ந்து 6 வாரங்கள் குறிப்பிட்ட கிழமைகளில் ஸ்ரீ தோரண விநாயகரை தரிசித்து அவருக்கு மூன்று நெய் தீபங்கள் ஏற்றி வைத்து வழிபட வேண்டும்.
அத்துடன் கணபதியின் மேகலை-பத்மபீடம் முன்பு அமர்ந்து, தோரணரின் மூல மந்திரத்தை 12 முறை ஜெபித்து, தோப்புக்கரணம் செய்து நமஸ்கரிக்க வேண்டும். மா, கொய்யா, மாதுளை, திராட்சை, ஆரஞ்சு என்று ஐந்து வகை பழங்களை படைத்து, அர்ச்சனை செய்து வணங்குவது விசேஷம். இதனால் விரைவில் நமது கடன்கள் யாவும் தீர்ந்து நிம்மதி பிறக்கும்.
ஆறு ஞாயிற்றுக் கிழமைகள் தோரண கணபதி சன்னதிக்கு சென்று அவருடைய சன்னதிக்கு பின் புறம் மூன்று நெய் தீபங்கள் ஏற்றி வைத்து, ஐந்து வகை பழங்கள் படைத்து, பிள்ளையார் துதிப் பாடல்களை பாடி, அர்ச்சனை செய்து வழிபட்டு வருவதால், வராக் கடன்களும் விரைவில் வசூலாகும். சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடத்தில் ஸ்ரீ சாரதாம்பாள் சன்னதியில் காப்பு கணபதியாக அருள்கிறார் ஸ்ரீ தோரண கணபதி, தமிழ்நாட்டில் பிள்ளையார்பட்டி, மயிலாடுதுறை, வடதேசத்தில் வாரணாசி ஆகிய தலங்களில் தோரண கணபதி வழிபாடு உண்டு.
ஆலயங்களுக்கு சென்று வழிபட இயலாத நிலையில், வீட்டிலேயே ஸ்ரீ தோரண கணபதியை மனதால் தியானித்து, அகஸ்தியர் நாடி நூலில், பிரசன்ன காண்டம் பகுதியில் உள்ள ஸ்ரீ தோரண கணபதி பிரசன்ன துதியை தினமும் மூன்று முறை படித்துவர, கடன் பிரச்சினைகள் யாவும் நீங்கும். வாழ்வில் வறுமைகள் அகன்று வளம் பெருகும்.
நெல்லை மாவட்டம் புளியங்குடி லட்சுமி நரசிங்க பெருமாள் கோவிலில் விசேஷம் என்ன வென்றால் இங்கு வந்து வழிபட்டால் தீராத கடன் பிரச்சினை தீரும்.
நெல்லை மாவட்டம் புளியங்குடியில் லட்சுமி நரசிங்க பெருமாள் கோவில் அமைந்திருக்கிறது. இக்கோவில் மதுரைக்கு தெற்கு, நெல்லைக்கு வடக்கு என இரண்டு பகுதிகளுக்கும் மத்தியில் ஒரே ஒரு தனி சன்னி தானத்தில் லெட்சுமி நரசிங்க பெருமாள் அருள்பாலிக்கிறார். இக்கோவிலில் உற்சவமூர்த்தி சுந்தர்ராஜ பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி, பெரியதிருவடி கருடாழ்வார், திருவடி ஆஞ்சநேயர் ஆகிய மூர்த்திகள் அருள் பாலித்து வருகிறார்கள்.
இக்கோவிலில் ஆகமம் பாஞ்சராத்ட்ரம ஆகமம் முறைப்படி நான்குகால பூஜை நடைபெறுகிறது. திருக்கோவிலின் விசேஷ நாட்களில் திருவிழா நாட்கள் சித்ரா பவுர்ணமி, கிருஷ்ணஜெயந்தி, உறியடி திருவிழா, புரட்டாசி சனி, ஸ்ரீராமநவமி, மார்கழி முப்பது நாட்களும் திருப்பாவை பாராயணம் நடைபெறும். மார்கழி மாதத்தில் வைகுண்ட ஏகாதசி, திருப்பாவை விழா, அனுமன் ஜெயந்தி ஆகியவை திருவிழா காலத்தில் நடைபெறுகிறது. இந்த கோவில் மேற்குத் தொடர்ச்சிமலை அடிவாரத்தில் கீழ்புறத்தில் அமைந்துள்ளது.
இம்மலை யில் தென்புறம் வாழை மலையாறு உற்பத்தியாகிறது. கோவிலுக்கு வடபுறம் நிட்சையப்ப நதி ஆறு உற்பத்தியாகிறது. இக்கோவில் சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பாக தோன் றியது. புளியங்குடியில் புளியமர வனப் பகுதியில் இக்கோவில் அமைந்துள்ளது. இதனால் கோவிலின் ஸ்தல விருட்சம் புளியமரம். கோவில் தீர்த்தம் லெட்சுமி தீர்த்தம். உக்கிரமாக இருக்கக்கூடிய நரசிம்ம மூர்த்தியை மகாலெட்சுமி தாயார் சாந்தப்படுத்தி அருள்காட்சி கிடைத்த ஸ்தலம். சுவாமிக்கு இடது மடியில் மகாலட்சுமி அமர்ந்திருக்கிறாள். லெட்சுமி நரசிங்கப்பெருமாள் சாந்தமாக காட்சியளிக்கிறார்.
இத்திருக்கோவிலில் விசேஷம் என்ன வென்றால் இங்கு வந்து வழிபட்டால் தீராத கடன் பிரச்சினை தீரும். எந்த நேரத்தில் தீரும் என்றால் நரசிம்ம பிரதோஷ காலத்தில் தீரும். சுவாதி நட்சத்திரத்தில் தரிசனம் செய்தால் குபேர சம்பத் கிடைக்கும். புதன்கிழமை சுக்கிர ஹோரையில் அன்று இரவு 7 முதல் 8 மணிக்குள் ஆண் பெண்ணுக்கு திருமணத்திற்காக அர்ச்சனை செய்தால் திருமணம் காரியங்கள் வெற்றியாகும். உக்கிரம் தணிக்க பானகத்தால் நெய்வேத்தியம் செய்தால் இது மிகவும் நன்று. மந்திர ராஜபதா ஷோத்திரம் பாராயணம் செய்தால் லெட்சுமி நரசிங்க பெருமாள் திருஅருள் பூரணமாக அருள்கடாட்சம் கிடைக்கும்.
வைகுண்ட ஏகாதசியும், பாவை விழாவும் நடைபெறும் மார்கழி மாதத்தில் முப்பது நாட்களும் கலந்து கொள்ளும் கன்னிகளுக்கு மார்கழியை தொடர்ந்து வரக்கூடிய தை மாதத்தில் திருமண யோகம் கிடைக்கும். மேலும் பாவை விழா பெண்கள் தெய்வ மகளிர் போல மிகுந்த வரங்கள் பெறுவதால், லெட்சுமி நரசிங்கப்பெருமாளுக்கு இணையில்லை. மேலும் கல்விக்கு அதிபதி மற்றும் புத்திகாரகர் புதன்கிழமையன்று அர்ச்சனை செய்தால் கல்வி வளமாக பெருகும்.
இக்கோவிலில் ஆகமம் பாஞ்சராத்ட்ரம ஆகமம் முறைப்படி நான்குகால பூஜை நடைபெறுகிறது. திருக்கோவிலின் விசேஷ நாட்களில் திருவிழா நாட்கள் சித்ரா பவுர்ணமி, கிருஷ்ணஜெயந்தி, உறியடி திருவிழா, புரட்டாசி சனி, ஸ்ரீராமநவமி, மார்கழி முப்பது நாட்களும் திருப்பாவை பாராயணம் நடைபெறும். மார்கழி மாதத்தில் வைகுண்ட ஏகாதசி, திருப்பாவை விழா, அனுமன் ஜெயந்தி ஆகியவை திருவிழா காலத்தில் நடைபெறுகிறது. இந்த கோவில் மேற்குத் தொடர்ச்சிமலை அடிவாரத்தில் கீழ்புறத்தில் அமைந்துள்ளது.
இம்மலை யில் தென்புறம் வாழை மலையாறு உற்பத்தியாகிறது. கோவிலுக்கு வடபுறம் நிட்சையப்ப நதி ஆறு உற்பத்தியாகிறது. இக்கோவில் சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பாக தோன் றியது. புளியங்குடியில் புளியமர வனப் பகுதியில் இக்கோவில் அமைந்துள்ளது. இதனால் கோவிலின் ஸ்தல விருட்சம் புளியமரம். கோவில் தீர்த்தம் லெட்சுமி தீர்த்தம். உக்கிரமாக இருக்கக்கூடிய நரசிம்ம மூர்த்தியை மகாலெட்சுமி தாயார் சாந்தப்படுத்தி அருள்காட்சி கிடைத்த ஸ்தலம். சுவாமிக்கு இடது மடியில் மகாலட்சுமி அமர்ந்திருக்கிறாள். லெட்சுமி நரசிங்கப்பெருமாள் சாந்தமாக காட்சியளிக்கிறார்.
இத்திருக்கோவிலில் விசேஷம் என்ன வென்றால் இங்கு வந்து வழிபட்டால் தீராத கடன் பிரச்சினை தீரும். எந்த நேரத்தில் தீரும் என்றால் நரசிம்ம பிரதோஷ காலத்தில் தீரும். சுவாதி நட்சத்திரத்தில் தரிசனம் செய்தால் குபேர சம்பத் கிடைக்கும். புதன்கிழமை சுக்கிர ஹோரையில் அன்று இரவு 7 முதல் 8 மணிக்குள் ஆண் பெண்ணுக்கு திருமணத்திற்காக அர்ச்சனை செய்தால் திருமணம் காரியங்கள் வெற்றியாகும். உக்கிரம் தணிக்க பானகத்தால் நெய்வேத்தியம் செய்தால் இது மிகவும் நன்று. மந்திர ராஜபதா ஷோத்திரம் பாராயணம் செய்தால் லெட்சுமி நரசிங்க பெருமாள் திருஅருள் பூரணமாக அருள்கடாட்சம் கிடைக்கும்.
வைகுண்ட ஏகாதசியும், பாவை விழாவும் நடைபெறும் மார்கழி மாதத்தில் முப்பது நாட்களும் கலந்து கொள்ளும் கன்னிகளுக்கு மார்கழியை தொடர்ந்து வரக்கூடிய தை மாதத்தில் திருமண யோகம் கிடைக்கும். மேலும் பாவை விழா பெண்கள் தெய்வ மகளிர் போல மிகுந்த வரங்கள் பெறுவதால், லெட்சுமி நரசிங்கப்பெருமாளுக்கு இணையில்லை. மேலும் கல்விக்கு அதிபதி மற்றும் புத்திகாரகர் புதன்கிழமையன்று அர்ச்சனை செய்தால் கல்வி வளமாக பெருகும்.
திருமணத் தடை, ராகு-கேது தோஷம் உள்ளவர்கள் சோமேஸ்வரர் திருக்கோவில் மூலவருக்கு அருகில் உள்ள புற்றுக்கு பால் ஊற்றி அபிஷேகம் செய்தால் தடைகள் நீங்கி காரியங்கள் கைக்கூடும்.
சேலம் மாவட்டம் நங்கவள்ளியில் 800 ஆண்டுகள் பழமையான லட்சுமி நரசிம்மர் மற்றும் சோமேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இதில் கருவறையில் லட்சுமி நரசிம்மர் சுயம்பு வடிவாகவும், அதனை ஒட்டி புற்றும் உள்ளது.
மார்கழி மாதத்தில் 30 நாட்களிலும் அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரை சிறப்பு பூஜை மற்றும் திருப்பாவை வழிபாடும், வைகுண்ட ஏகாதசி தினத்தில் சொர்க்கவாசல் திறப்பும் நடக்கிறது.
ஜாதக ரீதியாக தோஷம் உள்ளவர்கள் இக்கோவிலில் தங்கள் குழந்தையை தத்துக் கொடுத்து நெய் தீபம் ஏற்றி பூஜை செய்தால் தோஷம் நீங்குகிறது. திருமணத் தடை மற்றும் ராகு-கேது தோஷம் உள்ளவர்கள் மூலவர் அருகில் உள்ள புற்றுக்கு பால் ஊற்றி அபிஷேகம் செய்தால் தடைகள் நீங்கி காரியங்கள் கைக்கூடும்.
லட்சுமி ஹயக்கிரீவர் உற்சவருக்கு வியாழக்கிழமை தினத்தில் 108 ஏலக்காய் மாலை அணிவித்து வழிபட்டால் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும்.
மார்கழி மாதத்தில் 30 நாட்களிலும் அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரை சிறப்பு பூஜை மற்றும் திருப்பாவை வழிபாடும், வைகுண்ட ஏகாதசி தினத்தில் சொர்க்கவாசல் திறப்பும் நடக்கிறது.
ஜாதக ரீதியாக தோஷம் உள்ளவர்கள் இக்கோவிலில் தங்கள் குழந்தையை தத்துக் கொடுத்து நெய் தீபம் ஏற்றி பூஜை செய்தால் தோஷம் நீங்குகிறது. திருமணத் தடை மற்றும் ராகு-கேது தோஷம் உள்ளவர்கள் மூலவர் அருகில் உள்ள புற்றுக்கு பால் ஊற்றி அபிஷேகம் செய்தால் தடைகள் நீங்கி காரியங்கள் கைக்கூடும்.
லட்சுமி ஹயக்கிரீவர் உற்சவருக்கு வியாழக்கிழமை தினத்தில் 108 ஏலக்காய் மாலை அணிவித்து வழிபட்டால் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும்.
பில்லி சூனியம், ஏவல் உள்ளிட்ட பிரச்சினைகளிலிருந்து விடுபட ஸ்ரீ லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவிலுக்கு வந்து பக்தர்கள் பிரார்த்தனை செய்தால் அனைத்து பிரச்சினைகளுக்கும் சுமூக தீர்வு ஏற்படுகிறது.
திருப்பூர் மாவட்டம் அவினாசி - புளியம்பட்டி மெயின் ரோட்டில் 14-வது கிலோ மீட்டர் தொலைவிலிருந்து வலது புறகிளை ரோட்டில் 3 கி.மீ தொலைவில் உள்ள மங்கரசு வளையபாளையம் ஊராட்சி தாளக்கரையில் ஸ்ரீ லட்சுமி நரசிம்ம பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
இக்கோவில் 8-ம் நூற்றாண்டில் தோன்றியதாக வரலாறு கூறுகிறது. விழுப்புரம் மாவட்ட பகுதியில் உள்ள பரிக்கல், பூவரசம் குப்பம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் உள்ள கோவில்களில் நரசிம்ம பெருமாள் மடியில் லட்சுமி தாயார் அமர்ந்த கோலத்தில் தான் இருப்பார். ஆனால் தாளக்கரையில் லட்சுமி நரசிம்மர் தனித் தனியே நின்ற வண்ணம் காணப்படுகிறார். நரசிம்மர் கோரை பற்களுடன் நாக்கு தொங்கிய கோலத்திலும் கையில் சங்கு சக்கரமும் காலில் ஸ்ரீ சக்கரமும் இருந்தாலும் நின்ற கோலத்திலேயே நரசிம்மர் சாந்த சொரூபமாக உள்ளார்.
மூலஸ்தானத்தில் நரசிம்மர் கையில் சங்கு, சக்கரத்துடன் சாந்த மூர்த்தியாக சந்திர விமானத்தின் கீழ் அருளுகிறார். மூலஸ்தானத்தில் சுவாமி, மகாலட்சுமி, இருவருமே நின்ற கோலத்தில் இருப்பது விசேஷமான அமைப்பு. நரசிம்மர் பீடத்தில் ஸ்ரீசக்கரம் உள்ளது. அர்த்த மண்டபத்தில் சாளக்கிராமம் இருக்கிறது. இந்த சாளக்கிராமமே முதலில் நரசிம்மராக வழிபடப்பட்டுள்ளது. எனவே இதனை ஆதி மூர்த்தி என்கிறார்கள்.
இந்த கோவிலுக்கு முன்புறம் ஓடை உள்ளது. முற்காலத்தில் எப்போதும் வற்றாத ஜீவ நதியாக இந்த ஓடை திகழ்ந்துள்ளது. தாளம் என்றால் ஓடை என்ற பொருள் உண்டு. எனவே இத் தலம் தாளக்கரை என்று அழைக்கப்படுகிறது. சாமியின் ஈசாணி மூலையில் தெப்பக்குளம் உள்ளது. இந்த குளத்தில் இன்று வரை நீர் வற்றியதில்லை. இந்த குளத்திற்குள் தங்க தேர் இறங்கியதாக வரலாறு கூறுகிறது.
சேர, சோழ, பாண்டியர் காலத்தில் தோன்றிய இக்கோவிலில் நரசிம்மர் அருளால் தடைபடும். திருமணம், புத்திர பாக்கியம், தொழில், கடன் நிவர்த்தி, மன நிலை பாதிப்பு, பில்லி சூனியம், ஏவல் உள்ளிட்ட பிரச்சினைகளிலிருந்து விடுபட இக்கோவிலுக்கு வந்து பக்தர்கள் துளசிமாலை, எலுமிச்சை கனி ஆகியவற்றை சுவாமியின் முன் வைத்து பிரார்த்தனை செய்தால் அவர்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும் சுமூக தீர்வு ஏற்படுகிறது.
சொர்க்கவாசல் வழியாக (பரமபதம்) பக்தர்கள் வருவது போல் இக் கோவில் அமைய பெற்று உள்ளது. பக்தர்களுக்கு லட்சுமி கடாட்சம் கிடைக்கிறது.
இக்கோவில் 8-ம் நூற்றாண்டில் தோன்றியதாக வரலாறு கூறுகிறது. விழுப்புரம் மாவட்ட பகுதியில் உள்ள பரிக்கல், பூவரசம் குப்பம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் உள்ள கோவில்களில் நரசிம்ம பெருமாள் மடியில் லட்சுமி தாயார் அமர்ந்த கோலத்தில் தான் இருப்பார். ஆனால் தாளக்கரையில் லட்சுமி நரசிம்மர் தனித் தனியே நின்ற வண்ணம் காணப்படுகிறார். நரசிம்மர் கோரை பற்களுடன் நாக்கு தொங்கிய கோலத்திலும் கையில் சங்கு சக்கரமும் காலில் ஸ்ரீ சக்கரமும் இருந்தாலும் நின்ற கோலத்திலேயே நரசிம்மர் சாந்த சொரூபமாக உள்ளார்.
மூலஸ்தானத்தில் நரசிம்மர் கையில் சங்கு, சக்கரத்துடன் சாந்த மூர்த்தியாக சந்திர விமானத்தின் கீழ் அருளுகிறார். மூலஸ்தானத்தில் சுவாமி, மகாலட்சுமி, இருவருமே நின்ற கோலத்தில் இருப்பது விசேஷமான அமைப்பு. நரசிம்மர் பீடத்தில் ஸ்ரீசக்கரம் உள்ளது. அர்த்த மண்டபத்தில் சாளக்கிராமம் இருக்கிறது. இந்த சாளக்கிராமமே முதலில் நரசிம்மராக வழிபடப்பட்டுள்ளது. எனவே இதனை ஆதி மூர்த்தி என்கிறார்கள்.
இந்த கோவிலுக்கு முன்புறம் ஓடை உள்ளது. முற்காலத்தில் எப்போதும் வற்றாத ஜீவ நதியாக இந்த ஓடை திகழ்ந்துள்ளது. தாளம் என்றால் ஓடை என்ற பொருள் உண்டு. எனவே இத் தலம் தாளக்கரை என்று அழைக்கப்படுகிறது. சாமியின் ஈசாணி மூலையில் தெப்பக்குளம் உள்ளது. இந்த குளத்தில் இன்று வரை நீர் வற்றியதில்லை. இந்த குளத்திற்குள் தங்க தேர் இறங்கியதாக வரலாறு கூறுகிறது.
சேர, சோழ, பாண்டியர் காலத்தில் தோன்றிய இக்கோவிலில் நரசிம்மர் அருளால் தடைபடும். திருமணம், புத்திர பாக்கியம், தொழில், கடன் நிவர்த்தி, மன நிலை பாதிப்பு, பில்லி சூனியம், ஏவல் உள்ளிட்ட பிரச்சினைகளிலிருந்து விடுபட இக்கோவிலுக்கு வந்து பக்தர்கள் துளசிமாலை, எலுமிச்சை கனி ஆகியவற்றை சுவாமியின் முன் வைத்து பிரார்த்தனை செய்தால் அவர்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும் சுமூக தீர்வு ஏற்படுகிறது.
சொர்க்கவாசல் வழியாக (பரமபதம்) பக்தர்கள் வருவது போல் இக் கோவில் அமைய பெற்று உள்ளது. பக்தர்களுக்கு லட்சுமி கடாட்சம் கிடைக்கிறது.
அழகிய முருகன் கோவிலில் உள்ள ஸ்ரீசுப்பிரமணிய சுவாமியை வழிபட்டு மலையை வலம் வந்து வணங்கினால், விரைவில் தோஷம் நீங்கி, திருமண வரம் கைகூடும்.
புதுக்கோட்டையில் இருந்து பொன்னமராவதி செல்லும் வழியில் சுமார் 25 கி.மீ தொலைவில் தேனிமலை கிராமத்தில் அழகிய முருகன் கோயில் உள்ளது.
செவ்வாய் தோஷம் உள்ள ஆண்களும், பெண்களும் தொடர்ந்து ஏழு செவ்வாய்க்கிழமைகளில் ஓரை காலத்தில் இங்கு வந்து ஸ்ரீசுப்பிரமணிய சுவாமியை வழிபட்டு மலையை வலம் வந்து வணங்கினால், விரைவில் தோஷம் நீங்கி, திருமண வரம் கைகூடும்.
செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில், முருகக் கடவுளுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால் எதிரிகள் தொல்லை ஒழியும். பங்குனி உத்திர நாளில் புதுக்கோட்டை திருமயம், பொன்னமராவதி, அன்னவாசல், முதலான பல ஊர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்தும் பால்குடம் சுமந்து வந்தும் வழிபடுகின்றனர்.
மலையடிவாரத்தில், சுனை ஒன்று உள்ளது. இதில் நீராடிவிட்டு, முருகப்பெருமானை தரிசித்தால், சகல தோஷங்களும் நீங்கும். கார்த்திகை நட்சத்திர நாளில் இந்த முருகப் பெருமானுக்கு விளக்கேற்றி வழிபடுவது விசேஷம். ஸ்ரீவள்ளி- ஸ்ரீதெய்வானை சமேத முருகப் பெருமானுக்கு மாலை சார்த்தி, திருமாங்கல்ய பூஜை செய்து வழிபட்டால், விரைவில் கல்யாண வரம் கைகூடும்.
செவ்வாய் தோஷம் உள்ள ஆண்களும், பெண்களும் தொடர்ந்து ஏழு செவ்வாய்க்கிழமைகளில் ஓரை காலத்தில் இங்கு வந்து ஸ்ரீசுப்பிரமணிய சுவாமியை வழிபட்டு மலையை வலம் வந்து வணங்கினால், விரைவில் தோஷம் நீங்கி, திருமண வரம் கைகூடும்.
செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில், முருகக் கடவுளுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால் எதிரிகள் தொல்லை ஒழியும். பங்குனி உத்திர நாளில் புதுக்கோட்டை திருமயம், பொன்னமராவதி, அன்னவாசல், முதலான பல ஊர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்தும் பால்குடம் சுமந்து வந்தும் வழிபடுகின்றனர்.
மலையடிவாரத்தில், சுனை ஒன்று உள்ளது. இதில் நீராடிவிட்டு, முருகப்பெருமானை தரிசித்தால், சகல தோஷங்களும் நீங்கும். கார்த்திகை நட்சத்திர நாளில் இந்த முருகப் பெருமானுக்கு விளக்கேற்றி வழிபடுவது விசேஷம். ஸ்ரீவள்ளி- ஸ்ரீதெய்வானை சமேத முருகப் பெருமானுக்கு மாலை சார்த்தி, திருமாங்கல்ய பூஜை செய்து வழிபட்டால், விரைவில் கல்யாண வரம் கைகூடும்.
திருச்சி உய்யக் கொண்டான் திருமலை கோவிலில் உள்ள ஸ்ரீபாலாம்பிகையை வழிபட்டால் குழந்தைகளுக்கு ஏற்படும் தோஷம், திருஷ்டி போன்றவை நீங்கும்.
திருச்சியில் இருந்து வயலூர் செல்லும் வழியில் உய்யக் கொண்டான் திருமலை கோவில் உள்ளது. இங்கு உஜ்ஜீவனநாதர் ஸ்ரீபாலாம்பிகை, ஸ்ரீஅஞ்சனாட்சி சமேதராகக் அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார்.
இந்த ஈஸ்வரனுக்கு பானகம் படைத்து வழிபட ஆயுள் விருத்தியாகும் என்பது ஐதீகம். அதேபோல், ஸ்ரீஅஞ்சனாட்சி அம்பாளை வழிபட, கண் நோய்கள் அகலும். ஸ்ரீபாலாம்பிகையை வழிபட்டால் குழந்தைகளுக்கு ஏற்படும் தோஷம், திருஷ்டி போன்றவை நீங்கும். சில குழந்தைகள் எப்போதும் சுட்டித்தனமாக சேட்டை செய்து கொண்டே இருப்பார்கள்.
என்னதான் செய்தாலும் அவர்கள் கட்டுப்படமாட்டார்கள். அத்தகைய குழந்தைகளை அழைத்து வந்து ஸ்ரீபாலாம்பிகையிடம் வேண்டிக் கொள்கிறார்கள். இதனால், அந்தக் குழந்தைகளின் சேட்டைகள் குறையும். அவர்களுக்கு தீர்க்காயுள் வாய்க்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இந்த தலத்தில் பங்குனி பிரம்மோற்சவம் சிறப்புற நடைபெறும்.
இந்த ஈஸ்வரனுக்கு பானகம் படைத்து வழிபட ஆயுள் விருத்தியாகும் என்பது ஐதீகம். அதேபோல், ஸ்ரீஅஞ்சனாட்சி அம்பாளை வழிபட, கண் நோய்கள் அகலும். ஸ்ரீபாலாம்பிகையை வழிபட்டால் குழந்தைகளுக்கு ஏற்படும் தோஷம், திருஷ்டி போன்றவை நீங்கும். சில குழந்தைகள் எப்போதும் சுட்டித்தனமாக சேட்டை செய்து கொண்டே இருப்பார்கள்.
என்னதான் செய்தாலும் அவர்கள் கட்டுப்படமாட்டார்கள். அத்தகைய குழந்தைகளை அழைத்து வந்து ஸ்ரீபாலாம்பிகையிடம் வேண்டிக் கொள்கிறார்கள். இதனால், அந்தக் குழந்தைகளின் சேட்டைகள் குறையும். அவர்களுக்கு தீர்க்காயுள் வாய்க்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இந்த தலத்தில் பங்குனி பிரம்மோற்சவம் சிறப்புற நடைபெறும்.
தஞ்சாவூர் திருக்காட்டுப்பள்ளி அக்னீஸ்வரர் கோவிலில் உள்ள ஸ்ரீயோக தட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமைகளில் வழிபட திருமணத்தடை விலகும் என்பது ஐதீகம்.
தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் அக்னீஸ்வரர் கோவில் உள்ளது. யாகங்களில் ஊற்றப்படும் நெய்யைச் சாப்பிட்டதால் வயிற்று வலியும், அதில் போடப்படும் பொருட்களைச் சுட்டெரித்ததால் பாவமும் ஏற்பட... நொந்து போனார் அக்னி பகவான். சிவனிடம் முறையிட்டார். இந்தத் தலத்துக்கு வந்து, தீர்த்தம் ஏற்படுத்தி, அந்த நீரால் இறைவனை அபிஷேகம் செய்து வழிபட்டார். வரம் பெற்றார். பிறகு, சிவனாரிடம், இந்த தலத்துக்கு வந்து வணங்கும் பக்தர்களது வலியையும் பாவங்களையும் போக்கியருள வேண்டும் என அக்னிதேவன் வேண்டுகோள் விடுக்க, ‘அப்படியே ஆகட்டும்’ என அருளினார் சிவனார்.
இங்கேயுள்ள ஈசனுக்கு தீயாடிப்பர், அழலாடியப்பர், வன்னிவன நாதர், அக்னீஸ்வரர் என்றும், அம்பாளுக்கு அழகர்மங்கை, வார் கொண்ட முலையாள், சவுந்தரநாயகி என்றும் பெயர்கள் உண்டு. ஞானசம்பந்தர் மற்றும் நாவுக்கரசரால் பாடப்பெற்ற இந்தத் தலம், இரண்டு கோபுரங்களும் ஐந்து சுற்றுகளும் கொண்டு, அழகுறக் காட்சி தருகிறது. திருநாவுக்கரசரின் பதிகத்தைக் கேட்டு மகிழ, செவி சாய்த்து காட்சி தரும் கோட்டை விநாயகர் இங்கு உள்ளார். ரோமரிஷி வழிபட்ட தலங்களில் இதுவும் ஒன்று, மகா சிவராத்திரி நாளில், பிரம்மா இங்கு வந்து வழிபட்டுப் பலன் பெற்றார் என்கிறது தல புராணம்.
இங்கே, பங்குனி உத்திரத் திருநாள் விசேஷம்! இந்த நாளில், அக்னித் தீர்த்தத்தில் (குளம் தற்போது கிணறாகி விட்டது) நீராடி, ஸ்ரீஅக்னீஸ்வரரை வழிபட்டால், இம்மையில் எல்லாச் செல்வங்களும் மறுமையில் நற்பிறப்பும் பெற்று, அனைத்துப் பாவங்களும் நீங்கப் பெறலாம் என்பது ஐதீகம்.
இங்குள்ள ஸ்ரீயோக தட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமைகளில் நெய் தீபமேற்றி, முல்லை மலர்களால் அர்ச்சித்து வழிபட கல்வித் தடை, திருமணத்தடை, தொழிலில் நசிவு என அனைத்தும் விலகி நலம் பெறலாம்.
பங்குனியில் பத்து நாள் பிரம்மோத்ஸவம் விமரிசையாக நடைபெறுகிறது. உத்திர நாளில் பஞ்சமூர்த்தி புறப்பாடு, காவிரியில் தீர்த்தவாரி என அமர்க்களப்படும். பத்து நாட்களும், சுவாமியும் அம்பாளும் திருவீதியுலா வருவதைக் காணக் கண்கோடி வேண்டும். இந்த நாளில் தரிசித்து வணங்கினால், விரைவில் கல்யாண மாலை உறுதி என்கின்றனர், பக்தர்கள்.
இங்கேயுள்ள ஈசனுக்கு தீயாடிப்பர், அழலாடியப்பர், வன்னிவன நாதர், அக்னீஸ்வரர் என்றும், அம்பாளுக்கு அழகர்மங்கை, வார் கொண்ட முலையாள், சவுந்தரநாயகி என்றும் பெயர்கள் உண்டு. ஞானசம்பந்தர் மற்றும் நாவுக்கரசரால் பாடப்பெற்ற இந்தத் தலம், இரண்டு கோபுரங்களும் ஐந்து சுற்றுகளும் கொண்டு, அழகுறக் காட்சி தருகிறது. திருநாவுக்கரசரின் பதிகத்தைக் கேட்டு மகிழ, செவி சாய்த்து காட்சி தரும் கோட்டை விநாயகர் இங்கு உள்ளார். ரோமரிஷி வழிபட்ட தலங்களில் இதுவும் ஒன்று, மகா சிவராத்திரி நாளில், பிரம்மா இங்கு வந்து வழிபட்டுப் பலன் பெற்றார் என்கிறது தல புராணம்.
இங்கே, பங்குனி உத்திரத் திருநாள் விசேஷம்! இந்த நாளில், அக்னித் தீர்த்தத்தில் (குளம் தற்போது கிணறாகி விட்டது) நீராடி, ஸ்ரீஅக்னீஸ்வரரை வழிபட்டால், இம்மையில் எல்லாச் செல்வங்களும் மறுமையில் நற்பிறப்பும் பெற்று, அனைத்துப் பாவங்களும் நீங்கப் பெறலாம் என்பது ஐதீகம்.
இங்குள்ள ஸ்ரீயோக தட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமைகளில் நெய் தீபமேற்றி, முல்லை மலர்களால் அர்ச்சித்து வழிபட கல்வித் தடை, திருமணத்தடை, தொழிலில் நசிவு என அனைத்தும் விலகி நலம் பெறலாம்.
பங்குனியில் பத்து நாள் பிரம்மோத்ஸவம் விமரிசையாக நடைபெறுகிறது. உத்திர நாளில் பஞ்சமூர்த்தி புறப்பாடு, காவிரியில் தீர்த்தவாரி என அமர்க்களப்படும். பத்து நாட்களும், சுவாமியும் அம்பாளும் திருவீதியுலா வருவதைக் காணக் கண்கோடி வேண்டும். இந்த நாளில் தரிசித்து வணங்கினால், விரைவில் கல்யாண மாலை உறுதி என்கின்றனர், பக்தர்கள்.
கால சர்ப்ப தோஷம் என்பது என்ன? கால சர்ப்ப தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் எந்த பரிகாரங்களை செய்தால் என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
கால சர்ப்ப தோஷம் என்பது என்ன? காலத்தால் மறுக்கப்பட்டவர்கள். காலம் கை கொடுக்காமல் கைவிடப்பட்டவர்கள். இதை எதிர்த்து நின்று மேலே வருகிறவர்கள் இருக்கிறார்களே அவர்களுக்கு 39 வயதிலிருந்து மிகவும் உச்சமாக இருக்கும். உச்சத்திற்கும் வருவார்கள். ஆனால் அதுவரைக்கு உண்டு இல்லை என்று ஆக்கும். குறிப்பாக 26 வயது வரை ஒரு வழியாக்கி விடும்.
அத்தகைய கால சர்ப்ப தோஷம் இருப்பவர்கள் கால பைரவரை வணங்குவதுடன் குலதெய்வ வழிபாட்டை மறக்காமல் செய்ய வேண்டும்.
அத்தகைய கால சர்ப்ப தோஷம் இருப்பவர்கள் கால பைரவரை வணங்குவதுடன் குலதெய்வ வழிபாட்டை மறக்காமல் செய்ய வேண்டும்.
நாகதோஷம் நீங்குவதற்கு தமிழ்நாட்டிலேயே சக்திவாய்ந்த தலமாக விளங்கிவரும் முண்டகக்கண்ணி அம்மன் திருக்கோயில் சென்னை மயிலாப்பூரில் அமைந்திருக்கிறது.
நாகதோஷம் நீங்குவதற்கு தமிழ்நாட்டிலேயே சக்திவாய்ந்த தலமாக விளங்கிவரும் முண்டகக்கண்ணி அம்மன் திருக்கோயில் சென்னை மயிலாப்பூரில் அமைந்திருக்கிறது. சென்னைப் பட்டணம் தோன்றுவதற்கு சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன்பாகவே இந்த அம்மன் அவதரித்ததாக ஆலய வரலாறு கூறுகிறது. ஆனால், அதையும் தாண்டி பல நூறு ஆண்டுகளுக்கு முன்பாகவே தோன்றியிருக்கக் கூடும் என்று பக்தர்கள் நம்புகிறார்கள். இந்த ஆலயத்தின் மகிமையே, அம்மன் சுயம்புவாக வடிவெடுத்து இருப்பதுதான்.
நாகதோஷம் இருப்பவர்கள் முண்டகக்கண்ணி அம்மனை வழிப்பட்டு, நாகக்கன்னி சிலை பிரதிஷ்டை செய்வதாக வேண்டிக்கொள்கிறார்கள். அதன்பிறகு, 48 நாட்களுக்கு நீரிலேயே நாகக்கன்னியை வைத்திருந்து, அதை ஆலயத்தின் முகப்பில் இருக்கிற மரத்தடியில் பிரதிஷ்டை செய்து, அதற்கு பாலாபிஷேகமும் வழிபாடும் நடத்தி வழிபடுவது இந்த ஆலயத்தின் விசேஷம். அதேபோல ஆடி மாதம் அம்மனுக்கு மஞ்சள், சந்தனம், குங்குமம் காப்பு மற்றும் அன்னாபிஷேகம் செய்வதும் இங்கு விசேஷம்.
ஆடிப்பூரத்துக்கு 1008 மலர் கூடைகள் எடுத்துவந்து அம்மனுக்கு பூச்சுடுதல் நடக்கும். நவராத்தி 10 நாளும் உற்சவ புறபாடு இருக்கும். 10 நாளும் 10 அலங்காரத்தில் அம்மன் காட்சி தருவாள். எல்லா விசேஷ நாளிலும் அம்மனுக்கு தங்கக் கவசம் சாற்றி வழிபாடு நடக்கும்.
நாகதோஷம் இருப்பவர்கள் முண்டகக்கண்ணி அம்மனை வழிப்பட்டு, நாகக்கன்னி சிலை பிரதிஷ்டை செய்வதாக வேண்டிக்கொள்கிறார்கள். அதன்பிறகு, 48 நாட்களுக்கு நீரிலேயே நாகக்கன்னியை வைத்திருந்து, அதை ஆலயத்தின் முகப்பில் இருக்கிற மரத்தடியில் பிரதிஷ்டை செய்து, அதற்கு பாலாபிஷேகமும் வழிபாடும் நடத்தி வழிபடுவது இந்த ஆலயத்தின் விசேஷம். அதேபோல ஆடி மாதம் அம்மனுக்கு மஞ்சள், சந்தனம், குங்குமம் காப்பு மற்றும் அன்னாபிஷேகம் செய்வதும் இங்கு விசேஷம்.
ஆடிப்பூரத்துக்கு 1008 மலர் கூடைகள் எடுத்துவந்து அம்மனுக்கு பூச்சுடுதல் நடக்கும். நவராத்தி 10 நாளும் உற்சவ புறபாடு இருக்கும். 10 நாளும் 10 அலங்காரத்தில் அம்மன் காட்சி தருவாள். எல்லா விசேஷ நாளிலும் அம்மனுக்கு தங்கக் கவசம் சாற்றி வழிபாடு நடக்கும்.
கருடனை வணங்கினால் பகவானை வணங்கிய பலன் உண்டு. கருடனை எந்த கிழமையில் வழிபட்டால் என்ன பிரச்சனைகள் தீரும் என்பது குறித்து பார்க்கலாம்.
கருடனை வணங்கினால் பகவானை வணங்கிய பலன் உண்டு. கருடனின் நல்ல, அழகான இறக்கைகள் யக்ஞங்கள் என்றும், காயத்ரி மகாமந்திரமே அவனுடைய கண்கள் என்றும், தோத்திர மந்திரங்கள் அவனுடைய தலை என்றும், சாம வேதமே அவனுடைய உடல் என்றும் வேதத்தில் கூறப்பட்டிருக்கிறது.
கருடனை ஞாயிற்றுக்கிழமைகளில் தரிசனம் செய்தால் நோய்கள் நீங்கும்.
திங்கள்கிழமை தரிசிக்க சுகங்கள் கிடைக்கும். துன்பங்களும் துயரங்களும் விலகும்.
செவ்வாய்க்கிழமையில் தரிசிக்க துணிவையும், மகிழ்ச்சியையும் அளிக்கும்.
புதன்கிழமைகளில் கருடனைத் தரிசித்தால் வஞ்சனை கொண்டவர் விலகுவர், விரோதிகள் அழிவர், வெற்றி உண்டாகும்.
வியாழக்கிழமைகளில் தரிசிக்க நீண்ட ஆயுளும், செல்வங்களும் வாய்க்கும்.
வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் கருடனை தரிசனம் செய்தால் லட்சுமி கடாட்சம் உண்டாகும்.
கருடனை ஞாயிற்றுக்கிழமைகளில் தரிசனம் செய்தால் நோய்கள் நீங்கும்.
திங்கள்கிழமை தரிசிக்க சுகங்கள் கிடைக்கும். துன்பங்களும் துயரங்களும் விலகும்.
செவ்வாய்க்கிழமையில் தரிசிக்க துணிவையும், மகிழ்ச்சியையும் அளிக்கும்.
புதன்கிழமைகளில் கருடனைத் தரிசித்தால் வஞ்சனை கொண்டவர் விலகுவர், விரோதிகள் அழிவர், வெற்றி உண்டாகும்.
வியாழக்கிழமைகளில் தரிசிக்க நீண்ட ஆயுளும், செல்வங்களும் வாய்க்கும்.
வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் கருடனை தரிசனம் செய்தால் லட்சுமி கடாட்சம் உண்டாகும்.
கண்திருஷ்டி தோஷங்கள் போன்ற தீவினைகள் நசியவும், பலவித எதிர்வினை சக்திகள் செயலிழக்கவும் செய்வது வளர்பிறை ‘பிரதமை’யன்று கருட தரிசனம் ஆகும்.
எந்த திதியன்று கருட தரிசனம் செய்கிறோமோ அந்தத் திதியின் அதிதேவதையின் அருளாசியும்,சுபிட்சங்களும் நமக்கு கிடைக்கும். கல்வி,ஞானம், அறிவு, படிப்பில் நல்ல உயர்வு, வெற்றி கிடைக்க வேண்டுவோர் வளர்பிறை ‘நவமி’ அன்று கருட தரிசனம் செய்ய வேண்டும்.
அஷ்ட ஐஸ்வர்யங்கள் லட்சுமி கடாட்சம் உண்டாக வேண்டுவோர் வளர்பிறை ‘அஷ்டமி’ திதி அன்று கருட தரிசனம் செய்ய வேண்டும். கண்திருஷ்டி தோஷங்கள் போன்ற தீவினைகள் நசியவும், பலவித எதிர்வினை சக்திகள் செயலிழக்கவும் செய்வது வளர்பிறை ‘பிரதமை’யன்று கருட தரிசனம் ஆகும்.
சந்திரனால் ஜாதகத்தில் உள்ள தோஷங்கள் விலக வளர்பிறை ‘திரிதியை’ அன்று கருட தரிசனம் செய்ய வேண்டும்.
சூரியனின் தோஷங்கள் விலக வளர்பிறை ஸப்தமி திதி அன்று கருட தரிசனம் செய்ய வேண்டும்.
செவ்வாய் சம்பந்தப்பட்ட தோஷங்கள் நிவர்த்தி ஆக வளர்பிறை ‘சஷ்டி’ அன்று கருட தரிசனம் செய்ய வேண்டும்.
விநாயகப்பெருமானின் அனுக்கிரகம் கிடைக்க ‘வளர்பிறை சதுர்த்தி’ அன்று கருட தரிசனம் செய்ய வேண்டும்.
புதனின் தோஷங்கள் நிவர்த்தி ஆகவும் நல்ல புத்தி உண்டாகவும் வேண்டுவோர் வளர்பிறை ‘துவாதசி’ அன்று கருட தரிசனம் செய்ய வேண்டும்.
கருட பகவானுக்கு உரிய திதி ‘பஞ்சமி’ ஆகும். எனவே ஆவணி மாதம் வருகின்ற கருட பஞ்சமி மிகவும் சிறப்பு. பொதுவாக பஞ்சமி திதி அன்று கருட தரிசனம் செய்வதால் ஈடு இணையற்ற சுப பலன்கள் உண்டாகும்.
தோஷங்கள் யாவும் நிவர்த்தி ஆக திரயோதசி திதி அன்று பிரதோஷ வேளையில் கருடதரிசனம் செய்யவேண்டும்.
மகாலட்சுமியின் அருளாசி உண்டாக வேண்டுவோர் ‘துவாதசி’ திதி அன்று கருட தரிசனம் செய்ய வேண்டும்.
புத்திர பாக்கியங்கள் சம்பந்தமான விஷயங்களுக்கும், குரு தோஷங்கள் நிவர்த்திக்கும் வாழ்வில் நல்ல மேம்பாடு அடையவும் வேண்டுவோர் தேய்பிறை ‘தசமி’திதி அன்று கருட தரிசனம் செய்ய வேண்டும்.
முனிவர்களின் அனுக்கிரகம் கிடைக்க வேண்டுமானால் தேய்பிறை ‘சப்தமி’ அன்று கருட தரிசனம் செய்யவும்.
குபேர சம்பத்து உண்டாக தேய்பிறை ‘பிரதமை’ அன்று கருட தரிசனம் செய்ய வேண்டும்.
எமபயம் நீங்கவும் மரண பயம் விலகவும் தேய்பிறை ‘நவமி’ அன்று கருட தரிசனம் செய்யவும்.
கோச்சார சனியால் ஏற்படும் பாதிப்புகள் விலக வேண்டின் தேய்பிறை ‘ஏகாதசி’ அன்று சனீஸ்வர வழிபாடு கொள்ள வேண்டும்.
ராகு கேதுக்களின் அனுக்கிரகம் கிடைக்கவும் ராகு கேது தசாபுத்தி நடைமுறையில் உள்ளவர்கள் தேய்பிறை ‘அஷ்டமி’ அன்று கருட தரிசனம் செய்ய நல்ல பலன்கள் நடைமுறைக்கு வரும்.
அமாவாசை திதி அன்று கருட தரிசனம் செய்வது பித்ருக்கள் ஆசீர்வாதத்தை பெற்றுத் தரும். இதனால் அளப்பறிய நன்மைகள் வாழ்வில் உண்டாகும்.
ஆண்குழந்தை வேண்டுவோர் அமாவாசை அன்று கருட தரிசனம் தொடர்ந்து செய்ய பலன் நிச்சயம்.
பெண் குழந்தை வேண்டுவோர் பவுர்ணமி அன்று கருட தரிசனம் செய்யவும்.
சிவனின் அருளாசி கிட்ட தேய்பிறை ‘திரயோதசி’ பிரதோஷ காலத்தில் கருட தரிசனம் செய்ய வேண்டும்.
திருமண பாக்கியம் உண்டாக தேய்பிறை ‘துவாதசி’ அன்று கருட தரிசனம் செய்ய வேண்டும். நல்ல வரன் கிடைக்கும்.
ரியல் எஸ்டேட் சம்பந்தப்பட்ட விஷயங்களில் வெற்றியும், லாபமும், அபிவிருத்தியும் கிடைக்க வேண்டுவோர் தேய்பிறை, ‘சஷ்டியில்’ கருட தரிசனம் செய்ய வேண்டும்.
எந்த திதி அன்று கருட தரிசனம் செய்தாலும் அத்திதியின் அதி தெய்வ அருளாசியால் நமக்கு நல்ல பலன்களே விளையும்.
எனவே ‘ நித்திய கருட தரிசனத்தை ஒரு வழக்கமாக பழக்கமாக, தவமாக, வழிபாடாகக் கொண்டால் வாழ்வில் சகல சுபிட்சங்களையும் பெற்று வாழலாம்.
ஜென்ம நட்சத்திரம் வரும் தினத்தில் தவறாமல் கருட தரிசனம் செய்தே ஆக வேண்டும்.
அஷ்ட ஐஸ்வர்யங்கள் லட்சுமி கடாட்சம் உண்டாக வேண்டுவோர் வளர்பிறை ‘அஷ்டமி’ திதி அன்று கருட தரிசனம் செய்ய வேண்டும். கண்திருஷ்டி தோஷங்கள் போன்ற தீவினைகள் நசியவும், பலவித எதிர்வினை சக்திகள் செயலிழக்கவும் செய்வது வளர்பிறை ‘பிரதமை’யன்று கருட தரிசனம் ஆகும்.
சந்திரனால் ஜாதகத்தில் உள்ள தோஷங்கள் விலக வளர்பிறை ‘திரிதியை’ அன்று கருட தரிசனம் செய்ய வேண்டும்.
சூரியனின் தோஷங்கள் விலக வளர்பிறை ஸப்தமி திதி அன்று கருட தரிசனம் செய்ய வேண்டும்.
செவ்வாய் சம்பந்தப்பட்ட தோஷங்கள் நிவர்த்தி ஆக வளர்பிறை ‘சஷ்டி’ அன்று கருட தரிசனம் செய்ய வேண்டும்.
விநாயகப்பெருமானின் அனுக்கிரகம் கிடைக்க ‘வளர்பிறை சதுர்த்தி’ அன்று கருட தரிசனம் செய்ய வேண்டும்.
புதனின் தோஷங்கள் நிவர்த்தி ஆகவும் நல்ல புத்தி உண்டாகவும் வேண்டுவோர் வளர்பிறை ‘துவாதசி’ அன்று கருட தரிசனம் செய்ய வேண்டும்.
கருட பகவானுக்கு உரிய திதி ‘பஞ்சமி’ ஆகும். எனவே ஆவணி மாதம் வருகின்ற கருட பஞ்சமி மிகவும் சிறப்பு. பொதுவாக பஞ்சமி திதி அன்று கருட தரிசனம் செய்வதால் ஈடு இணையற்ற சுப பலன்கள் உண்டாகும்.
தோஷங்கள் யாவும் நிவர்த்தி ஆக திரயோதசி திதி அன்று பிரதோஷ வேளையில் கருடதரிசனம் செய்யவேண்டும்.
மகாலட்சுமியின் அருளாசி உண்டாக வேண்டுவோர் ‘துவாதசி’ திதி அன்று கருட தரிசனம் செய்ய வேண்டும்.
புத்திர பாக்கியங்கள் சம்பந்தமான விஷயங்களுக்கும், குரு தோஷங்கள் நிவர்த்திக்கும் வாழ்வில் நல்ல மேம்பாடு அடையவும் வேண்டுவோர் தேய்பிறை ‘தசமி’திதி அன்று கருட தரிசனம் செய்ய வேண்டும்.
முனிவர்களின் அனுக்கிரகம் கிடைக்க வேண்டுமானால் தேய்பிறை ‘சப்தமி’ அன்று கருட தரிசனம் செய்யவும்.
குபேர சம்பத்து உண்டாக தேய்பிறை ‘பிரதமை’ அன்று கருட தரிசனம் செய்ய வேண்டும்.
எமபயம் நீங்கவும் மரண பயம் விலகவும் தேய்பிறை ‘நவமி’ அன்று கருட தரிசனம் செய்யவும்.
கோச்சார சனியால் ஏற்படும் பாதிப்புகள் விலக வேண்டின் தேய்பிறை ‘ஏகாதசி’ அன்று சனீஸ்வர வழிபாடு கொள்ள வேண்டும்.
ராகு கேதுக்களின் அனுக்கிரகம் கிடைக்கவும் ராகு கேது தசாபுத்தி நடைமுறையில் உள்ளவர்கள் தேய்பிறை ‘அஷ்டமி’ அன்று கருட தரிசனம் செய்ய நல்ல பலன்கள் நடைமுறைக்கு வரும்.
அமாவாசை திதி அன்று கருட தரிசனம் செய்வது பித்ருக்கள் ஆசீர்வாதத்தை பெற்றுத் தரும். இதனால் அளப்பறிய நன்மைகள் வாழ்வில் உண்டாகும்.
ஆண்குழந்தை வேண்டுவோர் அமாவாசை அன்று கருட தரிசனம் தொடர்ந்து செய்ய பலன் நிச்சயம்.
பெண் குழந்தை வேண்டுவோர் பவுர்ணமி அன்று கருட தரிசனம் செய்யவும்.
சிவனின் அருளாசி கிட்ட தேய்பிறை ‘திரயோதசி’ பிரதோஷ காலத்தில் கருட தரிசனம் செய்ய வேண்டும்.
திருமண பாக்கியம் உண்டாக தேய்பிறை ‘துவாதசி’ அன்று கருட தரிசனம் செய்ய வேண்டும். நல்ல வரன் கிடைக்கும்.
ரியல் எஸ்டேட் சம்பந்தப்பட்ட விஷயங்களில் வெற்றியும், லாபமும், அபிவிருத்தியும் கிடைக்க வேண்டுவோர் தேய்பிறை, ‘சஷ்டியில்’ கருட தரிசனம் செய்ய வேண்டும்.
எந்த திதி அன்று கருட தரிசனம் செய்தாலும் அத்திதியின் அதி தெய்வ அருளாசியால் நமக்கு நல்ல பலன்களே விளையும்.
எனவே ‘ நித்திய கருட தரிசனத்தை ஒரு வழக்கமாக பழக்கமாக, தவமாக, வழிபாடாகக் கொண்டால் வாழ்வில் சகல சுபிட்சங்களையும் பெற்று வாழலாம்.
ஜென்ம நட்சத்திரம் வரும் தினத்தில் தவறாமல் கருட தரிசனம் செய்தே ஆக வேண்டும்.
விநாயகர் வழிபாடு பித்ரு தோஷத்தையும் போக்கும் வல்லமை பொண்டது. தாங்கள் மூதாதையர் இறந்த நாள் தெரியவில்லை என்றாலும் ஆதி விநாயகர் கோவிலில் எப்போது வேண்டுமானாலும் பித்ருகடன் செய்யலாம்.
விநாயகர் வழிபாடு பித்ரு தோஷத்தையும் போக்கும் வல்லமை பொண்டது.
கோதாவரி நதிக்கரையில் போகவதி என்னும் பட்டணத்தை நற்சோமதிமகராஜா என்பவன் ஆண்டு வந்தான். அவனது சபைக்கு நாரத மகரிஷி ஒரு சமயம் வந்தார். அப்போது, இந்தப் பூவுலகில் எந்த தலம் மிகவும் சிறந்த புண்ணியஸ்தலம்?...’ என மன்னன் கேட்டான்.
அதற்கு நாரதர், ‘‘எந்தப் புண்ணியத் திருத்தலத்தில் பித்ருக்கள் திலநீர் பிண்டதானத்தை எதிரே தோன்றி ஏற்பார்களோ, அதுவே உத்தமமான புண்ணியஸ்தலம்!... ’ என்று பதில் அளித்தார். தலத்தின் பெருமையை மன்னவனே அறியட்டும் என ஊர்ப் பெயரைக் கூடச் சொல்லாமல் விடை பெற்றார் நாரதர். நாரதர் சொன்னபடி நற்சோதி மன்னன் இந்தியாவில் உள்ள அனைத்து தலங்களிலும் தில் (எள்) தர்ப்பணமும், பிண்டதானமும் செய்து கொண்டு வந்தான். கும்பகோணம் வந்து காவிரி ஆற்றில் நீராடி தர்ப்பணமும் செய்தான்.
‘எவ்வளவோ புண்ணிய நதிகளில் நீராடி தர்ப்பணம் செய்து விட்டேன். இன்னமும் பித்ருக்கள் யாரும் நேரில் காட்சி தந்து பிண்டங்களை வாங்க வில்லையே நம் நாட்டுக்கே திரும்பிச் சென்று விடலாமா?....’ என்று மனம் உடைந்து வருந்தினான் மன்னன். அப்போது நாரதர், மன்னன் முன் தோன்றினார். ‘‘கலங்காதே மன்னா! நான் கூறிய புண்ணியத்தலத்தின் அருகில் நீ வந்து விட்டாய் இங்கிருந்து கிழக்கே திருநாகேஸ்வரம் தலம். அதையடுத்து திருவீழிழலை... அதற்கு அப்பால் சிலகாததூரம் சென்றால் ‘திலதைப்பதி’ என்ற புண்ணியதலம் உள்ளது.
‘திலம்’ என்றால் ‘எள்’ என்று பொருள். ‘தர்ப்பணம்’ என்றால் இறந்தவர்களுக்காக செய்யப்படும் பித்ரு கடன்கள் ‘புரி’ என்றால் தலம். எனவே ‘திலதர்ப்பணபுரி’ என்றால் எள் தர்பணம் செய்ய சிறந்த தலம் என்று பொருள். இந்த ஆதி விநாயகர் கோவிலின் வழியாகச் சென்ற ஸ்ரீராமன் இங்கு தான் தன் தந்தை தசரத மகாராஜாவுக்கு பித்ருகடன் செய்துள்ளார்.
பித்ரு சாபம், பித்ரு தோஷம் போன்றவற்றுக்கு இங்கு நேரில் வந்து தர்ப்பணம் செய்து பரிகாரம் காணலாம். தவிர, தாங்கள் மூதாதையர் இறந்த நாள் தெரியவில்லை என்றாலும் இந்த ஆதி விநாயகர் கோவிலில் எப்போது வேண்டுமானாலும் பித்ருகடன் செய்யலாம். ஆதி விநாயகர் என்று அழைக்கப்படும் நரமுக கணபதி மனித உருவத்தோடு ஜடாமுடி ஆயுதங்களை இரு கைகளிலும், வலக்கையை இடக்காலின் மீது வைத்த படியும் காட்சி கொடுக்கிறார்.
ஆதியில் பார்வதி தேவி பிடித்து வைத்த மஞ்சள் பிள்ளையார் தான் இப்படி நரமுக விநாயகராகக் காட்சியளித்தார் என்று சொல்லப்படுகிறது.
இந்த கோவிலின் ஈசன் பெயர் முக்தீஸ்வரர். இறைவி பெயர் சொர்ணவல்லி.
திருவாரூர் - மயிலாடுதுறை செல்லும் பஸ்சில் ஏறி பூந்தோட்டம் என்ற ஊரில் இறங்க வேண்டும். பின்பு அங்கிருந்து எரவாஞ்சேரி வழித்தடத்தில் இரண்டு கிலோ மீட்டர் சென்றால் ஆதி விநாயகர் கோவிலை அடையலாம்.
கோதாவரி நதிக்கரையில் போகவதி என்னும் பட்டணத்தை நற்சோமதிமகராஜா என்பவன் ஆண்டு வந்தான். அவனது சபைக்கு நாரத மகரிஷி ஒரு சமயம் வந்தார். அப்போது, இந்தப் பூவுலகில் எந்த தலம் மிகவும் சிறந்த புண்ணியஸ்தலம்?...’ என மன்னன் கேட்டான்.
அதற்கு நாரதர், ‘‘எந்தப் புண்ணியத் திருத்தலத்தில் பித்ருக்கள் திலநீர் பிண்டதானத்தை எதிரே தோன்றி ஏற்பார்களோ, அதுவே உத்தமமான புண்ணியஸ்தலம்!... ’ என்று பதில் அளித்தார். தலத்தின் பெருமையை மன்னவனே அறியட்டும் என ஊர்ப் பெயரைக் கூடச் சொல்லாமல் விடை பெற்றார் நாரதர். நாரதர் சொன்னபடி நற்சோதி மன்னன் இந்தியாவில் உள்ள அனைத்து தலங்களிலும் தில் (எள்) தர்ப்பணமும், பிண்டதானமும் செய்து கொண்டு வந்தான். கும்பகோணம் வந்து காவிரி ஆற்றில் நீராடி தர்ப்பணமும் செய்தான்.
‘எவ்வளவோ புண்ணிய நதிகளில் நீராடி தர்ப்பணம் செய்து விட்டேன். இன்னமும் பித்ருக்கள் யாரும் நேரில் காட்சி தந்து பிண்டங்களை வாங்க வில்லையே நம் நாட்டுக்கே திரும்பிச் சென்று விடலாமா?....’ என்று மனம் உடைந்து வருந்தினான் மன்னன். அப்போது நாரதர், மன்னன் முன் தோன்றினார். ‘‘கலங்காதே மன்னா! நான் கூறிய புண்ணியத்தலத்தின் அருகில் நீ வந்து விட்டாய் இங்கிருந்து கிழக்கே திருநாகேஸ்வரம் தலம். அதையடுத்து திருவீழிழலை... அதற்கு அப்பால் சிலகாததூரம் சென்றால் ‘திலதைப்பதி’ என்ற புண்ணியதலம் உள்ளது.
அங்கு ஓடும் ‘அரசி’ லாற்றில் நீராடி, தென்புலத் தாராகிய உன் பித்ருக்களுக்கு தில தர்ப்பணமும், பிண்டதானமும் செய்தால் அவர்கள் உன் முன் தோன்றி அதை வாங்கி உண்பார்கள்...’ என்று அருளாசி வழங்கினார். திலதைப்பதி வந்த நற்சோதிமன்னன் அங்கே தவம் செய்து கொண்டிருந்த காலவ முனிவரை வணங்கி ஆசி பெற்றான்.
மன்னன் வந்த நோக்கம் அறிந்த முனிவர், சிவாலயத்துக்குள் அழைத்துச் சென்று பொற்கொடி அன்னையையும், மந்தாரவனேஸ்வரர் பெருமானையும் தரிசனம் செய்வித்தார்! அமாவாசை தினத்தன்று பிரம்ம தீர்த்தத்தில் நீராடி நடுப்பகலில் சங்கல்பத்துடன் திலதர்ப்பணம், பிண்டம் (அன்னம்) இவற்றை படைத்தான் மன்னன் பித்ருக்கள் அவன் முன் தோன்றி தங்கள் கரங்களால் பிண்டத்தை ஏந்தி சாப்பிட்டு மகிழ்ந்து நல்லாசி அளித்து மறைந்தனர்!
‘திலம்’ என்றால் ‘எள்’ என்று பொருள். ‘தர்ப்பணம்’ என்றால் இறந்தவர்களுக்காக செய்யப்படும் பித்ரு கடன்கள் ‘புரி’ என்றால் தலம். எனவே ‘திலதர்ப்பணபுரி’ என்றால் எள் தர்பணம் செய்ய சிறந்த தலம் என்று பொருள். இந்த ஆதி விநாயகர் கோவிலின் வழியாகச் சென்ற ஸ்ரீராமன் இங்கு தான் தன் தந்தை தசரத மகாராஜாவுக்கு பித்ருகடன் செய்துள்ளார்.
பித்ரு சாபம், பித்ரு தோஷம் போன்றவற்றுக்கு இங்கு நேரில் வந்து தர்ப்பணம் செய்து பரிகாரம் காணலாம். தவிர, தாங்கள் மூதாதையர் இறந்த நாள் தெரியவில்லை என்றாலும் இந்த ஆதி விநாயகர் கோவிலில் எப்போது வேண்டுமானாலும் பித்ருகடன் செய்யலாம். ஆதி விநாயகர் என்று அழைக்கப்படும் நரமுக கணபதி மனித உருவத்தோடு ஜடாமுடி ஆயுதங்களை இரு கைகளிலும், வலக்கையை இடக்காலின் மீது வைத்த படியும் காட்சி கொடுக்கிறார்.
ஆதியில் பார்வதி தேவி பிடித்து வைத்த மஞ்சள் பிள்ளையார் தான் இப்படி நரமுக விநாயகராகக் காட்சியளித்தார் என்று சொல்லப்படுகிறது.
இந்த கோவிலின் ஈசன் பெயர் முக்தீஸ்வரர். இறைவி பெயர் சொர்ணவல்லி.
திருவாரூர் - மயிலாடுதுறை செல்லும் பஸ்சில் ஏறி பூந்தோட்டம் என்ற ஊரில் இறங்க வேண்டும். பின்பு அங்கிருந்து எரவாஞ்சேரி வழித்தடத்தில் இரண்டு கிலோ மீட்டர் சென்றால் ஆதி விநாயகர் கோவிலை அடையலாம்.






