என் மலர்
உக்ரைன்
- ரஷிய ராணுவம் ஓட்டல் மீது 2 ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது.
- இந்த தாக்குதலில் பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கீவ்:
உக்ரைன் மீதான ரஷியாவின் போர் 16 மாதங்களைக் கடந்து cடித்து கொண்டிருக்கிறது.
இதற்கிடையே, கிழக்கு உக்ரைனில் உள்ள கிராமடோர்ஸ்க் நகரில் உள்ள ஒரு உணவகம் மீது ரஷிய ராணுவம் 2 ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது.
அப்போது ஓட்டலுக்குள் ஏராளானோர் இருந்தனர். இந்த தாக்குதலில் 4 பேர் பலியானார்கள். 40-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர் என முதல் கட்ட தகவல் வெளியானது. அவர்கள் கட்டிட இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.
இந்நிலையில், ஓட்டல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் பலியானோர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. இதில் 3 குழந்தைகளும், 14 வயதுடைய இரட்டை சகோதரிகளும் அடங்குவர்.
- ஒரு உணவகம் மீது ரஷிய ராணுவம் இரண்டு ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது
- ஓட்டலுக்குள் ஏராளானோர் இருந்தனர். இந்த தாக்குதலில் 4 பேர் பலியானார்கள்.
உக்ரைன் மீதான ரஷியாவின் போர் நீடித்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கிழக்கு உக்ரைனில் உள்ள கிராம டோர்ஸ்க் நகரில் உள்ள ஒரு உணவகம் மீது ரஷிய ராணுவம் இரண்டு ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது.
அப்போது ஓட்டலுக்குள் ஏராளானோர் இருந்தனர். இந்த தாக்குதலில் 4 பேர் பலியானார்கள். 40-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அவர்கள் கட்டிட இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.
- சுமார் 7 லட்சம் பேர் இந்த அணையில் உள்ள நீரை நம்பி உள்ளனர்.
- அணையில் இருந்து தொடர்ந்து தண்ணீர் வெளியேறி வருகிறது.
கீவ் :
உக்ரைனின் கெர்சன் நகரில் உள்ள டினிப்ரோ ஆற்றின் மீது நோவா ககோவ்கா அணைக்கட்டு உள்ளது. 1956-ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த அணை 30 மீட்டர் உயரமும், 3.2 கிலோ மீட்டர் நீளமும் கொண்டது. சுமார் 7 லட்சம் பேர் இந்த அணையில் உள்ள நீரை நம்பி உள்ளனர்.
இங்கு மிகப்பெரிய நீர்மின் நிலையம் செயல்படுகிறது.
இந்தநிலையில் கடந்த 5-ந் தேதி உக்ரைனுக்கு எதிராக ரஷிய ராணுவத்தினர் வான்வழி தாக்குதல் நடத்தினர். இதில் ககோவ்கா அணைக்கட்டு உடைந்து தண்ணீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. இதற்கு ஐ.நா.சபை மற்றும் உலக நாடுகள் பலவும் கண்டனம் தெரிவித்தன. ஆனால் இந்த சம்பவத்துக்கு உக்ரைனும், ரஷியாவும் பரஸ்பரம் குற்றம்சாட்டி வருகின்றன.
இந்த சம்பவத்தால் உலகளாவிய உணவுச்சங்கிலியில் பாதிப்பு ஏற்படும் எனவும், லட்சக்கணக்கானோருக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படலாம் எனவும் ஐ.நா. சபை எச்சரிக்கை விடுத்தது.
இதற்கிடையே பல நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கியதால் சுமார் 40 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். எனினும் இந்த வெள்ளத்தில் மூழ்கி 15-க்கும் மேற்பட்டோர் பலியானதாக செய்திகள் வெளியாகின.
ஆனால் அணையில் இருந்து தொடர்ந்து தண்ணீர் வெளியேறி வருகிறது. இதனால் தற்போது பலி எண்ணிக்கை 48 ஆக உயர்ந்துள்ளதாக உக்ரைன் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
- ரஷியாவில் தற்போது நடைபெற்ற வரும் சூழ்நிலை குறித்து ஆலோசனை
- நீண்ட தூரம் சென்று தாக்கும் ஆயுதங்களை வழங்குமாறு ஜெலன்ஸ்கி கேட்டுள்ளார்
உக்ரைன்- ரஷியா இடையே கடந்த ஒன்றரை வருடத்திற்கு மேலாக சண்டை நடைபெற்று வருகிறது. இன்னும் சண்டை முடிவுக்கு வரவில்லை. தற்போது உக்ரைன் எதிர்தாக்குதல் நடத்தி வருகிறது. இதன்மூலம் சில கிராமங்களை மீண்டும் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர்.
இதற்கிடையே வாக்னர் கூலிப்படை திடீரென ரஷியாவிற்கு எதிராக திரும்பியது. எவ்ஜெனி புரிகோசின் தலைமையிலான வாக்னர் கூலிப்படை ரஷியாவின் ரோஸ்டோவ்-ஆன்-டான் ராணுவ கட்டுப்பட்டு மையத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாகவும், மாஸ்கோ நோக்கி முன்னோக்கி செல்ல இருப்பதாகவும் அறிவித்தது.
இதனால் ரஷியாவுக்கு இக்கட்டான நிலை ஏற்பட்டது. ஒரு பக்கம் உக்ரைனுக்கு எதிராக போரிட வேண்டும். மறுபுறம் துரோகியை ஒடுக்க வேண்டும். இதனால் புதின் வாக்னர் படை வீரர்களை கண்டதும் சுட உத்தரவிட்டார். இந்த நிலையில்தான் ரஷியாவின் மிகவும் நெருங்கிய நாடான பெலாரஸ் மத்தியஸ்தராக செயல்பட்டு, புரிகோசினிடம் பேச்சுவார்த்தை நடத்தியது.
அப்போது புரிகோசின் பெலாரஸ் செல்ல வேண்டும். வாக்னர் படை மீதான கிரிமினல் வழக்குகளை ரஷியா திரும்ப பெற வேண்டும் என ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதனால் வாக்னர் படை மாஸ்கோ நோக்கி செல்வதில் இருந்து பின்வாங்கியது.
இந்த பரபரப்பான சூழ்நிலை நடந்து கொண்டிருந்த வேலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.
இதுகுறித்து ஜெலன்ஸ்கி கூறுகையில் ''நான் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உடன் பேசினேன். நேர்மறை மற்றும் உத்வேகம் அளிக்கும் உரையாடல் நடைபெற்றது. உக்ரைன்- ரஷியா இடையிலான போர் மற்றும் தற்போது ரஷியாவில் நடைபெற்று வரும் சூழ்நிலை குறித்து விவாதித்தோம். சர்வதேச உத்தரவு நடைமுறைக்கு வரும்வரை, சர்வதேச நாடுகள் ரஷியாவுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன்'' என்றார்.
மேலும், நீண்ட தூரம் சென்று தாக்கும் ஆயுதங்களை வழங்குவது குறித்து ஜெலன்ஸ்கி பைடன் உடன் ஆலோசனை நடத்தியதை உறுதிப்படுத்திய வெள்ளை மாளிகை, இது தனி விசயம் என்று தெரிவித்துள்ளது.
- ஆப்பிரிக்கா தலைவர்கள் புதின் உடன் பேசுவது எப்படி லாஜிக்கல் ஆகும்
- புதின் உடன் பேச்சுவார்த்தை என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை
உக்ரைன்- ரஷியா இடையிலான போர் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. உக்ரைனின் ஐந்தில் ஒரு பகுதியை ரஷியா ஆக்கிரமித்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் உக்ரைன், பதில்தாக்குதல் நடத்தி ரஷியா ஆக்கிரமித்துள்ள இடங்களை மீட்க முயற்சி மேற்கொண்டு வருகிறது.
இதற்கிடையே ஆப்பிரிக்கா தலைவர்கள் இருநாடுகளுக்கு இடையிலான போரை முடிவுக்கு கொண்டுவர பேச்சுவார்த்தை நடத்த முன்வந்துள்ளனர். முதற்கட்டமாக நேற்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்தனர். அப்போது அமைதி பேச்சுவார்த்தை குறித்து ஆலோசித்ததாக தெரிகிறது.
ஆப்பிரிக்கா தலைவர்கள் இன்று ரஷிய அதிபர் புதினை சந்திக்க இருக்கிறார்கள்.
இந்தநிலையில் நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப்பின் ஜெலன்ஸ்கி கூறியிருப்பதாவது:-
ஆக்கிரமித்துள்ள உக்ரைன் பிராந்தியத்தில் இருந்து ரஷிய துருப்புகள் வாபஸ் பெற்ற பின்னரே, அமைதி பேச்சுவார்த்தைக்கான வாய்ப்பு உள்ளது. ரஷிய அதிபர் புதினை ஆப்பிரிக்கா தலைவர்கள் சந்திக்க இருக்கிறார்கள். இது அவர்களின் முடிவு. இது எப்படி பொருத்தமுடையதாக இருக்கும். உண்மையிலேயே இதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.
ஆக்கிரமிப்புக்காரர்கள் எங்கள் நிலத்தில் இருக்கும்போது, ரஷியாவுடன் எந்தவொரு பேச்சுவார்த்தைக்கும் தயாராகுவது, எங்களது நிலத்தை முடக்குவதாகும். அது எல்லாவற்றையும் முடக்குவதற்கு சமம். இது வலி மற்றும் துன்பம்.
எங்களுக்கு உண்மையான அமைதி தேவை. அதற்கு எங்களது நிலத்தில் இருந்து ரஷியா துருப்புகள் உண்மையாகவே வெளியேற வேண்டும்.
இவ்வாறு ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.
ரஷிய துருப்புகள் உக்ரைன் எல்லையில் இருந்து வெளியேறும் வரை புதின் உடன் பேச்சுவார்த்தை இல்லை என்பதில் ஜெலன்ஸ்கி உறுதியாக உள்ளார்.
- நவீன ஆயுதங்களை பயன்படுத்தி உக்ரைன் எதிர்தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது.
- சீனாவும் ஒரு அமைதி ஒப்பந்தத்திற்கான முயற்சிகளை செய்து வருகிறது.
ரஷியா-உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என பல்வேறு நாடுகளின் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அந்த வகையில், போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான வழிகளை ஆராய்வதற்காக ஆப்பிரிக்கத் தலைவர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளைக் கொண்ட தூதுக்குழுவினருடன் தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா இன்று உக்ரைன் வந்து சேர்ந்தார்.
கீவ் புறநகர் பகுதியான புச்சா பகுதி ரெயில் நிலையம் அருகே, உக்ரைன் சிறப்பு தூதுவர் மற்றும் தென்னாப்பிரிக்காவின் தூதுவர்கள் அவரை சந்தித்தனர்.
பிப்ரவரி 2022ல் உக்ரைனின் முழு அளவிலான படையெடுப்பின் உச்சகட்டமாக, புச்சா பகுதியில் நடத்தப்பட்ட மிருகத்தனமான தாக்குதலில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் தெருக்களிலும், வெகுஜன புதைகுழிகளிலும் சடலமாக கிடந்தனர். அந்த பகுதிக்கு ஆப்பிரிக்க தலைவர் வருகை தந்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
ஆப்பிரிக்க தூதுக்குழுவில் ஜாம்பியா, செனகல், உகாண்டா, எகிப்து, காங்கோ குடியரசு மற்றும் கொமோரோ தீவுகள் ஆகிய நாடுகளின் மூத்த அதிகாரிகளும் இடம்பெற்றுள்ளனர்.
தங்கள் தூதுக்குழுவுடன் தனித்தனியான சந்திப்புகளுக்கு, உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கி மற்றும் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் ஆகியோர் ஒப்புக்கொண்டதாக ராமபோசா கடந்த மாதம் கூறியிருந்தார்.
ரஷியாவின் உயர்மட்ட சர்வதேச பொருளாதார மாநாடு நடைபெற்று வரும் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகருக்கு ஆப்பிரிக்க தூத்துக்குழுவினர் இன்று செல்கிறார்கள். நாளை புதினைச் சந்திக்க தயாராகி வருகின்றனர்.
ஆப்பிரிக்க தலைவர்கள், சமாதானத்திற்கான முன்னெடுப்புகளைத் தொடங்குவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டிராமல், ரஷியாவிற்கு விதிக்கப்பட்டுள்ள கடுமையான சர்வதேச தடைகளுக்கிடையே ஆப்பிரிக்காவிற்கு மிகவும் தேவைப்படும் உர ஏற்றுமதிகளுக்கு எவ்வாறு பணம் செலுத்த முடியும் என்பதை மதிப்பிடுவதற்காகவும் பேச்சுவார்த்தை நடத்த போவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
போருக்கு மத்தியில் உக்ரைனில் இருந்து அதிகளவில் தானிய ஏற்றுமதியை உறுதி செய்வது பற்றியும், அதிக கைதிகளை பரிமாற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் அவர்கள் விவாதிக்க உள்ளனர்.
ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து ரஷிய படைகளை வெளியேற்றுவதற்காக, மேற்கத்திய நாடுகளால் வழங்கப்பட்ட நவீன ஆயுதங்களை பயன்படுத்தி உக்ரைன் எதிர்தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. முன்களப் பகுதியில் 1,000 கிலோமீட்டர் (600-மைல்) அளவுக்கு தாக்குதல்களில் ஈடுபட்டுள்ள நிலையில், ஆப்பிரிக்காவின் இந்த அமைதி முயற்சி முன்னெடுக்கப்பட்டிருக்கிறது.
போரை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சி நீண்ட காலம் நீடிக்கும் என மேற்கத்திய நாடுகளின் ஆய்வாளர்கள் மற்றும் ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சீனாவும் ஒரு அமைதி ஒப்பந்தத்திற்கான முயற்சிகளை செய்து வருகிறது. ஆனால், ரஷியாவும், உக்ரைனும் போர் நிறுத்தத்திற்கு சம்மதிப்பதற்கான அறிகுறி இல்லாததால், சீனாவின் முயற்சி வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளது.
- மூன்று ஏவுகணைகள் உக்ரைனின் மத்திய கிழக்கில் உள்ள டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் பகுதியில் உள்ள தொழில்துறை நிறுவல்களை தாக்கியது.
- ஒரு ஆளில்லா விமானம் மட்டும் கிரிமியாவின் மையப்பகுதியில் உள்ள ஒரு கிராமத்தைத் தாக்கியுள்ளது.
ரஷியா உக்ரைனுக்கு இடையே கடந்த ஓர் ஆண்டுக்கு மேலாக போர் நடந்து வருகிறது. உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து தாக்குதலை நடத்தி முக்கிய நகரங்களை கைப்பற்றி வருகிறது.
உக்ரைனும் ரஷியாவின் செயலை தடுக்கும் வகையில் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.
குறிப்பாக கடந்த சில வாரங்களாக ரஷியா முக்கிய உக்ரைன் நகரங்களுக்கு எதிராக தீவிர இரவு நேர தாக்குதலை நடத்தி வருகிறது. இதை வெற்றிகரமாக உக்ரைன் எதிர் தாக்குதல் மூலம் முறியடித்து வருகிறது.
இந்நிலையில், ரஷியா நேற்று இரவு நடத்திய தாக்குதலின்போது உக்ரைன் படை ஒரு ஏவுகணை மற்றும் 20 வெடி பொருட்களை அடங்கிய ஆளில்லா விமானங்களை வீழ்த்தியதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது. மற்ற மூன்று ஏவுகணைகள் உக்ரைனின் மத்திய கிழக்கில் உள்ள டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் பகுதியில் உள்ள தொழில்துறை நிறுவல்களை தாக்கியது.
இதற்கிடையே ரஷியாவால் நியமிக்கப்பட்ட கிரிமியா ஆளுநர் கூறுகையில், " உக்ரைன் தரப்பில் இருந்து ஏவப்பட்ட ஆளில்லா விமானங்களில் 9 விமானங்களை ரஷிய படைகள் எல்லையில் வீழ்த்தியது" என்றார்.
இதில், ஒரு ஆளில்லா விமானம் மட்டும் கிரிமியாவின் மையப்பகுதியில் உள்ள ஒரு கிராமத்தைத் தாக்கியுள்ளது. இதில், பல வீடுகளில் ஜன்னல்கள் சேதமடைந்தது.
- கருங்கடலில் இருந்து நடத்தப்பட்ட தாக்குதலில் நான்கு கலிபர் ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
- ஒடேசாவில் நடைபெற்ற தாக்குதல் குறித்து அந்த பகுதி நிர்வாகம் முகநூலில் பதிவிட்டுள்ளது.
ரஷியப் படைகள், தெற்கு உக்ரைனின் நகரமான ஒடேசா மீது இரவோடு இரவாக கப்பலிலிருந்து ஏவுகணைகளை வீசி தாக்கி உள்ளது. இன்று அதிகாலை கிழக்கு டொனெட்ஸ்க் பகுதியில் உள்ள வீடுகளை ஷெல் குண்டுகளை வீசி தாக்கி உள்ளது. இந்த தாக்குதல்களில் குறைந்தது 6 பேர் கொல்லப்பட்டனர். 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உக்ரைனுக்கு எதிரான 15-மாத கால போரில் ரஷியப் படைகள் வான்வழித் தாக்குதல்களை தீவிரப்படுத்தியிருப்பதாக உக்ரைனின் ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
"ஏழு வீடுகளின் மீது நடத்தப்பட்ட குண்டுவீச்சில் குறைந்தது மூன்று பேர் இறந்தனர் என்றும் கிராமடோர்ஸ்க் மற்றும் கான்ஸ்டான்டினோவ்கா நகரங்களில் பத்திற்கும் மேற்பட்ட வீடுகள் சேதமாகின" என்றும் டொனெட்ஸ்க் பிராந்திய ஆளுநர் பாவ்லோ கைரிலென்கோ டெலிகிராமில் பதிவிட்டுள்ளார்.
ஒடேசாவில் நடைபெற்ற தாக்குதல் குறித்து அந்த பகுதி நிர்வாகம் முகநூலில் பதிவிட்டுள்ளது. ஒரு உணவுக்கிடங்கின் மூன்று ஊழியர்கள் கொல்லப்பட்டனர் என்றும் ஏழு பேர் காயமடைந்தனர் என்றும், வீடுகள், ஒரு கிடங்கு, கடைகள் மற்றும் நகர்ப்புற கடைகள் சேதமடைந்தன என்றும் தெரிவித்திருக்கிறது. மேலும், ஆறு பேர் - காவலர்கள் மற்றும் அருகாமை வீட்டில் வசிப்பவர்கள் - காயமடைந்தனர் என்றும் இடிபாடுகளுக்கிடையே சிக்கியவர்களில், உயிர் பிழைத்தவர்களை தேடும் பணி ஈடுபட்டு வருவதாகவும், அந்த பதிவில் தெரிவித்துள்ளது.
ஒடேசா நகரம் மீது கருங்கடலில் இருந்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் நான்கு கலிபர் ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் மூன்று வான் பாதுகாப்புகளால் இடைமறிக்கப்பட்டன என்று பிராந்திய நிர்வாகம் தெரிவித்துள்ளது.
உக்ரைன் நிலப்பரப்பில் கிட்டத்தட்ட ஐந்தில் ஒரு பகுதியை ரஷியா ஆக்கிரமித்து தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- உக்ரைனின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள மிகப்பெரிய அணை உடைக்கப்பட்டது.
- உக்ரைனும், ரஷியாவும் அணையை குண்டு வைத்து தகர்த்ததாக பரஸ்பர குற்றம்சாட்டியது.
உக்ரைன்- ரஷியா போர் ஒன்றரை வருடத்திற்கு மேலாக நடைபெற்று வரும் நிலையில், உக்ரைனில் உள்ள டினிப்ரோ ஆற்றின் மீது கட்டப்பட்ட சோவியத்- காலத்து மிகப்பெரிய அணையான ககோவ்கா அணை ஜூன் 6-ம் தேதி உடைந்து 18 கியூபிக் கிலோமீட்டர் பரப்பளவு நீர், தென் உக்ரைன் பகுதியை மூழ்கடித்தது.
இதை ஆராய்ந்த நார்வே நிலநடுக்கவியலாளர்களும், அமெரிக்க செயற்கைக்கோள்களும் இது குண்டு வைத்து தகர்த்தது போன்று இருப்பதாக தெரிவித்தன. எனினும், இந்த அணை உடைந்ததற்கு உக்ரைனும், ரஷியாவும் பரஸ்பரம் குற்றம் சாட்டின.
இதன் தாக்கம் குறித்து கருத்து தெரிவித்திருக்கும் ஐ.நா. சபையின் உதவிகளுக்கான தலைவர் மார்ட்டின் கிரிஃபித்ஸ், இந்த தாக்குதலால் உலகளாவிய உணவுப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்றும் உணவுப் பொருட்களின் விலை உயர்வும், பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு குடிநீர் கிடைப்பதில் பிரச்சனைகளும் ஏற்படலாம் என தெரிவித்திருக்கிறார்.
மேலும் அவர் கூறியிருப்பதாவது:-
கோதுமை, பார்லி, சோளம், ராப்சீட், ராப்சீட் எண்ணெய், சூரியகாந்தி விதை மற்றும் சூரியகாந்தி எண்ணெய் உற்பத்தியில் உக்ரைன் மற்றும் ரஷியா முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த உடைப்பின் காரணமாக, வரப்போகும் பயிரிடும் காலங்களில் இவற்றை விதைப்பதிலும், அறுவடை செய்வதிலும் மிகப்பெரிய சிக்கல் வருவது தவிர்க்க முடியாதது.
சுமார் 7 லட்சம் பேர் வரை குடிநீருக்காக அணைக்கு பின்னால் உள்ள நீர்த்தேக்கத்தை நம்பியிருக்கின்றனர். இந்த உடைப்பின் காரணமாக சுத்தமான குடிநீர் இல்லாமல் மக்கள் நோய்வாய்ப்படும் வாய்ப்பும், குழந்தைகளுக்கு அதிகமான பாதிப்பும் ஏற்படும்.
ஜெனிவா உடன்படிக்கையின்படி ஏற்படுத்தப்பட்ட சட்டங்களுக்கு எதிரான வகையில், சிவிலியன் உள்கட்டமைப்புக்கு எதிராக இந்த பெரிய அளவிலான சேதம் ஏற்பட்டுள்ளது.
"யார் இதை (அணை தகர்ப்பு) செய்திருந்தாலும் ஜெனிவா உடன்படிக்கைகளை மீறியதாகும்" என்றும் கிரிஃபித்ஸ் கூறினார்.
- ரஷியாவின் கட்டுப்பாட்டில் இருந்த 7 கிராமங்களை மீட்டுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
- உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் சொந்த ஊரில் ரஷியா ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.
உக்ரைன்- ரஷியா இடையிலான போரில் கடந்த சில தினங்களாக உக்ரைனின் பதில் தாக்குதல் தீவிரமடைந்துள்ளது. ரஷியா ஆக்கிரமித்த பகுதிகளை மீட்க உக்ரைன் தீர்மானித்து, உக்கிரமான பதிலடி கொடுத்து வருகிறது. மேற்கத்திய நாடுகளின் உதவியோடு எதிர்தாக்குதல் நடத்தி வரும் உக்ரைன், ரஷியாவின் கட்டுப்பாட்டில் இருந்த 7 கிராமங்களை மீட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
நேற்று ஒரே நாள் இரவில் உக்ரைன் படைகள் ஜபோரிஜியா பகுதியில் உள்ள பெர்டியன்ஸ்க்கில் ஒரு கிலோமீட்டர் வரை முன்னேறியதாக அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் சொந்த ஊரில் ரஷியா ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 3 பேர் பலியானார்கள். பலர் காயம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில், தெற்கு உக்ரைனில் நடந்த ஏவுகணை தாக்குதலில் ரஷியாவின் மேஜர் ஜெனரல் செர்ஜி கோரியாச்சேவ் கொல்லப்பட்டதாக ரஷிய ஆதரவு வலைத்தள பதிவர்கள் தெரிவித்துள்ளனர். தெற்கு உக்ரைனில் 35வது படைப்பிரிவை வழிநடத்திச் சென்ற செர்ஜி கோரியாச்சேவ், நேற்று தெற்கு டோனெட்ஸ்க் பகுதியில் நடந்த சண்டையின்போது கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த சண்டையில்தான் உக்ரைன் தனது எதிர்தாக்குதல் மூலம் 4 கிராமங்களை விடுவித்துள்ளது.
ராணுவ அதிகாரி கோரியாச்சேவ் இதற்கு முன்பு டிரான்ஸ்னிஸ்ட்ரியா, மால்டோவாவில் அறிவிக்கப்பட்ட ராணுவமயமாக்கப்பட்ட பகுதி மற்றும் தஜிகிஸ்தானில் பணியாற்றியிருக்கிறார்.
- உக்ரைன் எதிர்தாக்குதல் நடத்தி வரும் நிலையில் ரஷியா அதிரடி தாக்குதல்
- உக்ரைன் அதிபர் ரஷிய கொலைக்காரர்களின் தாக்குதல் என கடும் விமர்சனம்
உக்ரைன்- ரஷியா இடையிலான போர் 475 நாட்களை தாண்டி சென்று கொண்டிருக்கிறது. ரஷியா ஆக்கிரமித்த பகுதிகளை மீட்க உக்ரைன் தீர்மானித்துள்ளது. மேற்கத்திய நாடுகளின் உதவியோடு எதிர்தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் ஏழு கிராமங்களை மீட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் சொந்த ஊரில் ரஷியா ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. உக்ரைனின் மையப்பகுதியில் இருக்கும் கிரிவி ரிஹ் என்ற இடத்தில் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது. இந்த தாக்குதலில் 3 பேர் பலியானார்கள். 20 -க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
கப்பலில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை ஐந்து மாடி கட்டிடத்தை தாக்கியதாகவும், இதில் அந்த கட்டிடம் தீப்பிடித்து எரிந்தாகவும் டினிபிரோபெட்ரோவிஸ்க் பிராந்திய கவர்னர் தெரிவித்துள்ளார். மேலும், மக்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதாகவும், மீட்கும்பணி நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
16 மாதங்களாக நடைபெற்று வரும் தாக்குதலில் தற்போது இந்த ஊர் சிக்கியுள்ளது. ஏவுகணை அடுக்குமாடி குடியிருப்பை தாக்கியது, ஜன்னல்கள் உடைந்தது உள்ளிட்ட படங்களை ஜெலன்ஸ்சி வெளியிட்டுள்ளார். மேலும் பயங்கரவாத ஏவுகணைகள் எனக் குறிப்பிட்டுள்ள அவர், ரஷியாவின் கொலைக்காரர்கள் தொடர்ந்து கட்டிடங்கள், கிராமங்கள் மற்றும் மக்களுக்கு எதிராக போரை தொடர்கின்றனர் எனத் குறிப்பிட்டுள்ளார்.
நேற்றிரவு முழுவதும் பல்வேறு இடங்களை குறிவைத்து ரஷியா ஏவுகணை தாக்குதல் நடத்தியதாகவும், ஆனால் ஏவுகணைகளை வான் பாதுகாப்பு ஆயுதங்கள் மூலம் முறியடித்துவிட்டதாகவும், சேதம் குறித்து உடனடி தகவல் ஏதும் கிடைக்கவில்லை எனவும் கிவ் ராணுவ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
உக்ரைன் ஏழு கிராமங்களை மீண்டும் கைப்பற்றியதாக அறிவித்த நிலையில் ரஷியா இந்த தாக்குதலை நடத்தியுள்ளது.
- ரஷியாவின் தாக்குதல்களை உக்ரைன், தனது நட்பு நாடுகளின் உதவிகளோடு எதிர்கொண்டு வருகிறது.
- தெற்கு சபோரிஜியா பகுதியில் உள்ள லோப்கோவோ, லெவாட்னே மற்றும் நோவோடரிவ்கா கிராமங்கள் மீண்டும் கைப்பற்றப்பட்டன.
உக்ரைன் -ரஷியா இடையிலான போர் ஒரு ஆண்டுக்கு மேலாக தொடர்ந்து வருகிறது. ரஷியாவின் தாக்குதல்களை உக்ரைன், தனது நட்பு நாடுகளின் உதவிகளோடு எதிர்கொண்டு வருகிறது. இருப்பினும், ரஷியா தனது போரை முடிவுக்கு கொண்டுவருவதாக இல்லை.
இந்த நிலையில், கிழக்கு மற்றும் தெற்கு உக்ரைனில் உள்ள ஏழு கிராமங்களை ரஷியப் படைகளிடம் இருந்து கைப்பற்றியதாக உக்ரைன் தகவல் தெரிவித்துள்ளது.
கடந்த வார இறுதியில் நடத்தப்பட்ட தாக்குதல் நடவடிக்கைகளில் கிழக்கு மற்றும் தெற்கு உக்ரைனில் உள்ள ஏழு கிராமங்களை ரஷியப் படைகளிடம் இருந்து மீட்டுள்ளதாக துணை பாதுகாப்பு அமைச்சர் கன்னா மல்யார் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், "தெற்கு சபோரிஜியா பகுதியில் உள்ள லோப்கோவோ, லெவாட்னே மற்றும் நோவோடரிவ்கா கிராமங்கள் மீண்டும் கைப்பற்றப்பட்டன.
கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பிரதேசத்தின் பரப்பளவு 90 சதுர கிலோமீட்டர்கள் ஆகும்" என்றார்.






