என் மலர்
நீங்கள் தேடியது "Kyiv Court"
- நீதிமன்ற விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட ஒரு நபரால் அடையாளம் தெரியாத சாதனம் வெடித்துள்ளது.
- தலைநகரில் வசிப்பவர்கள் அந்த இடத்தை அணுக வேண்டாம்.
உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் மர்ம பொருள் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து உக்ரைனின் உள்துறை அமைச்சர் இகோர் க்ளைமென்கோ கூறுகையில், " கீவ்வின் ஷெவ்சென்கிவ்ஸ்கி நீதிமன்றத்தில் அவசரநிலை நிலவுகிறது. வெடிப்புச் சம்பவம் குறித்து காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. போலீஸ் விசாரணைக் குழுக்கள், சிறப்புப் படைகள், வெடிமருந்து நிபுணர்கள் மற்றும் பிற தேவையான சேவைகள் சம்பவ இடத்திற்கு வந்தன.
இந்த சம்பவத்தில் உயிரிழப்புகள் குறித்து உடனடி தகவல் எதுவும் இல்லை.
முதற்கட்ட தகவல்களின்படி, நீதிமன்ற விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட ஒரு நபரால் அடையாளம் தெரியாத சாதனம் வெடிக்கப்பட்டது.
தலைநகரில் வசிப்பவர்கள் அந்த இடத்தை அணுக வேண்டாம்" என்றிருந்தது.






