என் மலர்tooltip icon

    பிரான்ஸ்

    • டேபிள் டென்னிசில் ஸ்ரீஜா அகுளா முதல் சுற்றில் வெற்றி பெற்றார்.
    • குத்துச்சண்டையின் முதல் சுற்றில் இந்திய வீராங்கனை நிகாத் ஜரின் வென்றார்.

    பாரீஸ்:

    பாரீஸ் ஒலிம்பிக்கில் இன்று நடந்த பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவு இறுதிச்சுற்றில் இந்தியாவின் மானு பாகெர்

    பங்கேற்றார்.

    8 பேர் கலந்து கொண்டதில் இந்திய வீராங்கனை மானு பாகெர் 221.7 புள்ளிகள் பெற்று 3-வது இடம் பிடித்தார். இதன்மூலம் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தினார். இதன்மூலம் ஒலிம்பிக்கில் இந்தியா பதக்க வேட்டையை தொடங்கியுள்ளது.

    கொரிய வீராங்கனைகள் தங்கம், வெள்ளி பதக்கம் வென்றனர். ஒலிம்பிக் போட்டியில் முதல் முறையாக இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய மானு பாகெர் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், பதக்கம் வென்றது குறித்து மானு பாகெர் கூறியதாவது:

    டோக்கியோவிற்குப் பிறகு நான் மிகவும் ஏமாற்றம் அடைந்தேன். அதைக் கடக்க எனக்கு மிக நீண்ட காலம் பிடித்தது. வெளிப்படையாகச் சொன்னால், இன்று நான் எவ்வளவு நன்றாக உணர்கிறேன் என்பதை என்னால் விளக்க முடியாது.

    என்னிடமுள்ள முழு ஆற்றலுடன் நான் போராடினேன். நான் வெண்கலத்தை வென்றதற்கு உண்மையிலேயே நன்றி உள்ளவனாக இருக்கிறேன்.

    நான் பகவத் கீதையைப் படித்தேன், நான் செய்ய வேண்டியதை எப்போதும் செய்ய முயற்சித்தேன். எல்லாவற்றையும் கடவுளிடம் விட்டுவிட்டேன். நாம் விதியை எதிர்த்துப் போராட முடியாது என தெரிவித்தார்.

    • துப்பாக்கி சுடுதலில் இந்திய வீராங்கனை மானு பாகெர் வெண்கலம் வென்றார்.
    • இதன்மூலம் ஒலிம்பிக்கில் இந்தியா பதக்க வேட்டையை ஆரம்பித்துள்ளது.

    பாரீஸ்:

    பாரீஸ் ஒலிம்பிக்கில் 50 கிலோ எடைப் பிரிவில் குத்துச்சண்டையில் இந்தியா சார்பில் நிகாத் ஜரின் முதல் சுற்று ஆட்டத்தில் ஜெர்மன் வீராங்கனையை எதிர்கொண்டார்.

    இதில் நிகாத் ஜரின் 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். 28 வயதான அவர் கால் இறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்துக்கு முன்னேறினார்.

    • பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் தகுதிச்சுற்றில் ரமிதா ஜிண்டால் வென்றார்.
    • இன்று டேபிள் டென்னிசில் ஸ்ரீஜா அகுளா முதல் சுற்றில் வெற்றி பெற்றார்.

    பாரீஸ்:

    பாரீஸ் ஒலிம்பிக்கில் இன்று நடைபெற்ற பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவு இறுதிச்சுற்றில் இந்தியாவின் மானு பாகெர்

    பங்கேற்றார்.

    8 பேர் கலந்து கொண்டதில் இந்திய வீராங்கனை மானு பாகெர் 221.7 புள்ளிகள் பெற்று 3வது இடம் பிடித்தார். இதன்மூலம் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தினார். இதன்மூலம் ஒலிம்பிக்கில் இந்தியா பதக்க வேட்டையை ஆரம்பித்துள்ளது.

    கொரிய வீராங்கனைகள் தங்கம், வெள்ளி பதக்கம் வென்றனர்.

    ஒலிம்பிக் போட்டியில் முதல் முறையாக இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய மானு பாகெர் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

    • பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து முதல் சுற்றில் வென்றார்.
    • பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் தகுதிச்சுற்றில் ரமிதா ஜிண்டால் வென்றார்.

    பாரீஸ்:

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் தொடக்க விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்திய நேரப்படி இரவு 11 மணி அளவில் ஒலிம்பிக் திருவிழா கோலாகலமாக தொடங்கியது.

    இந்த அணிவகுப்பில் மொத்தம் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

    இன்று நடந்த பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து முதல் சுற்றில் வென்றார். பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் தகுதிச்சுற்றில் இந்தியாவின் ரமிதா ஜிண்டால் வென்றார்.

    இந்நிலையில், டேபிள் டென்னிஸ் பிரிவின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ஸ்ரீஜா அகுளா, ஸ்வீடன் வீராங்கனை கிறிஸ்டினாவுடன் மோதினார். இதில் அகுளா 4-0 என்ற புள்ளிக் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    • இன்று பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் தகுதிச்சுற்று போட்டி நடைபெற்றது.
    • பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் தகுதிச்சுற்றில் ரமிதா ஜிண்டால் வென்றார்.

    பாரீஸ்:

    உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இதில், 206 நாடுகளைச் சேர்ந்த 10,500-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    இந்நிலையில், இதில் இன்று நடைபெற்ற பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் தகுதிச்சுற்று போட்டியில் இந்திய வீராங்கனைகளான இளவேனில் மற்றும் ரமிதா ஜிண்டால் பங்கேற்றனர்.

    இந்தப் போட்டியில் முதல் 8 இடங்களைப் பிடிக்கும் வீராங்கனைகள் மட்டுமே இறுதிச்சுற்றுக்கு முன்னேற முடியும்.

    இதில் ரமிதா ஜிண்டால் சிறப்பாக செயல்பட்டு 5-வது இடத்தை பிடித்தார். இதன்மூலம் அவர் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.

    மற்றொரு இந்திய வீராங்கனையான இளவேனில் 10-வது இடத்தைப் பிடித்து வெளியேறினார்.

    • இயேசுவின் இறுதி இரவுணவு ஓவியத்தைப் பிரதி செய்யும் வகையில் டிராக் கிவீன் நிகழ்ச்சி அமைந்தது
    • அரை நிர்வாணமாக உடல் முழுவதும் நீல நிற சாயம் பூசி மேசையில் மீது படுத்திருந்தார்

    ஒலிம்பிக் ஜோதி ஏற்றத்துடன் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் இன்று தொடங்கியுள்ளது. அதற்கு முன்னதாக வெள்ளிக்கிழமை இரவு தொடக்கவிழா அணிவகுப்பு, வாணவேடிக்கை கலைநிகழ்ச்சிகள் என கொண்டாட்டங்கள் அமர்க்களப்பட்டது.

    அந்த வகையில் ஐபில் கோபுரத்தின் முன்னாள் சய்ன் நதியில் அமைக்கப்பட்ட மேடையில் லேடி காகா, செலின் டியோன் உள்ளிட்டோரின் நிகழ்ச்சிகள் நடந்தன. குறிப்பாகப் பிரபல ஓவியர் லியொனார்டோ டாவின்சியின் 'Last Supper' எனப்படும் இயேசுவின்  இறுதி இரவுணவு ஓவியத்தைப் பிரதி செய்யும் வகையில் அமைந்த டிராக் கிவீன் நிகழ்ச்சி கிறித்தவர்களின் மனதை புண்படுத்துவதாக உள்ளது என்ற விமர்சனம் எழுந்துள்ளது.

     

     

     

    அந்த நிகழ்ச்சியில் வெள்ளிக் கிரீடத்தை அணிந்து அரை நிர்வாணமாக உடல் முழுவதும் நீல நிற சாயம் பூசி மலர்களால் அலங்கரித்துக்கொண்டு , லாஸ்ட் சப்பரில் பரிமாறப்படும் உணவை குறிக்கும் விதமாக மேஜையில் படுத்திருந்தார். மேஜைக்கு பின்னால் உணவருந்தும் பாணியில் டிராக் குவீங்கள் எனப்படும் பெண்கள் அமர்த்திருந்தனர்.

    LGBTQ+ சமூகம் உட்பட அனைவரையும் பாலின சமத்துவத்தோடு கொண்டாடும் விதமாக இந்த நிகழ்ச்சி அமைத்துள்ளதாக முற்போக்கு சிந்தனையாளர்கள் பாராட்டி வருகின்றனர். ஆனால் இந்த நிகழ்ச்சி பாலினத்தை மையப்படுத்தி விரசமான முறையில் அமைந்துள்ளதாகச் சிலர் கருதுகின்றனர்.

    குறிப்பாக வலதுசாரி சிந்தனைகளுடைய தொழிலதிபர் எலான் மஸ்க், பாஜக எம்.பி கங்கனா ரணாவத் இந்த நிகழ்ச்சிக்குக் கண்டனத்தைத் தெரிவித்து வருகின்றனர். கங்கனா ரனாவத் இதுகுறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில், ஏன் பாலினத்தை அவரவர் படுக்கையறையோடு மட்டும் வைத்துக்கொள்ள கூடாது என்று கேள்வியெழுப்பி கடுமையாக விமர்சித்துள்ளார். 

     

     

    • தகுதி சுற்றுக்குத் தகுதி பெறுவதற்காக இன்று நடந்த ரெபகேஜ் [repechage] சுற்றில் விளையாடினார்.
    • இன்று நடந்த போட்டியில் தொடக்கத்தில் பன்வார் பன்வார் முன்னிலையில் இருந்தார்

    ஒலிம்பிக் ஜோதி ஏற்றத்துடன் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் நேற்று தொடங்கியுள்ளது. கொண்டாட்டங்களுக்கு களைகட்டிய நிலையில் தற்போது போட்டிகளில் வீரர்களும் ரசிகர்களும் மும்முரமாகியுள்ளனர்.

    மொத்தமாக 32 விளையாட்டுகளைக் கொண்ட இந்த பாரிஸ் 2024 ஒலிம்பிக் தொடரில் 329 போட்டிகள் நடத்தப்படுகிறது. இந்தியா சார்பில் 16 விளையாட்டுகளில் 117 வீரர்கள் கலந்து கொள்கின்றனர்.

    இந்த நிலையில் முதலாவது நாளான இன்று நடைபெற்ற துடுப்புப்படகு போட்டியான ரோவிங் போட்டியில் இந்திய வீரர் பல்ராஜ் பன்வார் 7:07:11 நிமிடங்களில் இலக்கை கடந்து 4 ஆவது இடம் பிடித்தார்.

    4 வது இடம் பிடித்ததால் தகுதி சுற்றுக்கான வாய்ப்பை இந்திய வீரர் பல்ராஜ் பன்வார் இழந்துள்ள நிலையில் தகுதி சுற்றுக்குத் தகுதி பெறுவதற்காக இன்று நடந்த ரெபகேஜ் [repechage] சுற்றில் விளையாடினார்.

    இந்த போட்டியில், 7:12.41 நிமிடங்களில் இலக்கை கடந்து 2 வது இடம் பிடித்து காலிறுதிக்கு முன்னேறினார் பல்ராஜ் பன்வார். ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்து பன்வார் முன்னிலையில் இருந்தபோதிலும் இறுதிக்கட்டத்தில் மொனாக்கோ வீரர் குவென்டின் அடோஃனெல்லி [Quentin Antognelli] அவரை முந்தியதால் இரண்டாம் இடத்திற்கு பன்வார் சென்றார். இதனைத்தொடர்ந்தே மொனாக்கோ மற்றும் இந்தியா காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.

    அரியானா மாநிலத்தைச் சேர்ந்த 25 வயதாகும் பல்ராஜ் பன்வார் ஆசிய விளையாட்டு போட்டிகள் உட்பட பல்வேறு போட்டிகளில் பங்கேற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவை சேர்ந்த 117 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
    • பி.வி.சிந்து ஏற்கனவே 2 ஒலிம்பிக் பதக்கங்களை வென்றுள்ளார்.

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கியது. இதில் இந்தியாவை சேர்ந்த 117 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

    இந்திய பேட்மிட்டன் வீராங்கனை பி.வி.சிந்து இன்று நண்பகல் 12.50 மணிக்கு நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் லீக் சுற்று போட்டியில் மாலத்தீவை சேர்ந்த பாத்திமா நபாஹா உடன் மோதினார்.

    இப்போட்டியில் 21-9, 21-6 என்ற நேர் செட் கணக்கில் பாத்திமா நபாஹாவை வீழ்த்தி பி.வி.சிந்து அபார வெற்றி பெற்றார்.

    ஜூலை 31 ஆம் தேதி பி.வி.சிந்து தனது இரண்டாவது ஆட்டத்தில் எஸ்தோனியாவின் கிறிஸ்டின் குபாவை எதிர்கொள்கிறார்.

    பி.வி.சிந்து 2016 ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கமும் 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கல பக்கமும் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தனது மனைவியிடம் கேட்டுள்ள கவித்துவமான மன்னிப்பு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது
    • இத்தாலியக் கோடியை உயரத்திப்பிடிக்கும் போது என் கையில் இருந்து மோதிரம் நழுவியது

    இத்தாலிய உயரம் தாண்டுதல் வீரரும் ஒலிம்பிக் சாம்பியனுமான ஜியான்மார்கோ தாம்பெரி [ Gianmarco Tamberi] நேற்று தொடங்கிய பாரிஸ் ஒலிம்பிக்சில் பங்கேற்றுள்ளார். இத்தாலி நாட்டின் சார்பில் நேற்று முன் தினம் இரவு செய்ன் நதி [Seine River] மீது படகில் நடந்த தொடக்கவிழா அணிவகுப்பில் இத்தாலிய கோடியை அவர் ஏந்திச்சென்றார்.

     

    இந்நிலையில் அன்றைய இரவு தனது திருமண மோதிரத்தை செய்ன் நதியில் அவர் தொலைத்துள்ளார். அதற்கு அவர் தனது மனைவியிடம் கேட்டுள்ள கவித்துவமான மன்னிப்பு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மனுஷன் என்னமா பீல் பண்ணி எழுதியிருக்கிறார் என்று இணையவாசிகள் மனம் நெகிழ்ந்து வருகின்றனர்.

     

    மோதிரத்தை தொலைத்ததற்காக அவர் தனது மனைவியிடம் மன்னிப்பு கேட்டு எழுதியுள்ள இன்ஷ்டாகிராம் பதிவில், 'என்னை மன்னித்துவிடு அன்பே, இத்தாலியக் கோடியை உயரத்திப்பிடிக்கும் போது என் கையில் இருந்து மோதிரம் [என் கை விரலில் இருந்து] நழுய தருணத்தில் [அது படகின் உள்ளே விழுந்துவிடும் எடுத்துக்கொள்ளலாம்] என்று ஒரு சிறிய நம்பிக்கை இருந்தது.

    ஆனால் அது கீழே விழுந்து தவறான திசையில் எகிறி நதிக்குள் சென்றது. எதோ அது அங்கு தான் இருக்கவேண்டும் என்று விரும்பியதுபோல் இருந்தது. சில கணம் நான் உறைந்து நின்றேன். ஆனால் இது நடந்துதான் தீரும் என்றால் இந்த நதியை விட சிறந்த ஒரு இடத்தை என்னால் கற்பனை செய்திருக்க முடியாது. காதலின் நகரமான பாரிசில் உள்ள இந்த நதிப்படுகையில் அது [மோதிரம்] என்றென்றைக்கும் நிலைத்திருக்கும்.

     

    நேற்று நடந்த இந்த துரதிஷ்டவசமான சம்பவத்தில் ஒரு கவித்துவமான தன்மையும் இணைந்தே இருக்கிறது என்று நான் நினைக்கிறேன். நீ விரும்பினால் உனது மோதிரத்தையும் இந்த நதியில் வீசி விடலாம். அவ்வாறாக இருவரின் மோதிரங்களும் நதியில் ஒன்று சேரும். இதில் இன்னொரு நன்மையும் உள்ளது, நீ அடிக்கடி என்னிடம் கேட்பதுபோல், நாம் உறுதிமொழி கூறி புதிதாக மீண்டும் ஒருமுறை திருமணம் செய்துகொள்ளலாம்' என்று எழுதியுள்ளார். 

    • இந்திய வீராங்கனை பிரீத்தி பன்வர் வியட்நாமை சேர்ந்த வோ தி கிம்மை எதிர் கொண்டார்.
    • இதில் பிரீத்தி 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.

    பாரீஸ், ஜூலை. 28-

    பாரீஸ் ஒலிம்பிக்கில் குத்துச் சண்டையில் இந்தியா சார்பில் 2 வீரர்களும், 5 வீராங்கனைகளும் ஆக மொத்தம் 7 பேர் பங்கேற்றுள்ளனர்.

    இந்திய வீராங்கனை பிரத்தி பன்வர் இந்திய நேரடிப்படி நள்ளிரவு 12 மணிக்கு நடந்த முதல் சுற்று ஆட்டத்தில் வியட்நாமை சேர்ந்த வோ தி கிம்மை எதிர் கொண்டார். இதில் பிரீத்தி 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.

    20 வயதான அவர் கால் இறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில் கொலம்பியாவை சேர்ந்த யெனி அரியாசை சந்திக்கிறார். இந்த ஆட்டம் 31-ந்தேதி நடக்கிறது.

    • ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி முதல் போட்டியில் வெற்றி.
    • கொரியாவின் கிம் சோ யோங் - காங் ஹீ யோங் ஜோடியுடன் தனிஷா க்ராஸ்டோ - அஷ்வினி பொன்னப்பா ஜோடி மோதியது.

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இன்று நடைபெற்ற பேட்மிண்டன் பெண்கள் இரட்டையர் பிரிவின் லீக் ஆட்டத்தில் இந்தியாவின் தனிஷா க்ராஸ்டோ - அஷ்வினி பொன்னப்பா ஜோடி, கொரியாவின் கிம் சோ யோங் - காங் ஹீ யோங் ஜோடியுடன் மோதியது.

    இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய கிம் சோ யோங் - காங் ஹீ யோங் இணை 21-18, 21-10 என்ற செட் கணக்கில் தனிஷா க்ராஸ்டோ - அஷ்வினி பொன்னப்பா ஜோடியை வீழ்த்தியது.

    தனிஷா க்ராஸ்டோ - அஷ்வினி பொன்னப்பா ஜோடி தனது அடுத்த லீக் ஆட்டத்தில் ஜப்பானின் நமி மட்சுயாமா - ஷிஹாரு ஷிடா ஜோடி உடன் மோத உள்ளது.

    அதே சமயம் நேற்று நடந்த பேட்மிண்டனில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி, பிரான்சின் லூகாஸ் கோர்வீ-ரோனன் லபார் ஜோடியை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

    • ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் ஒன்றான சர்ஃபிங் எனப்படும் அலைச்சறுக்கு போட்டி குறித்த சுவாரஸ்ய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
    • கடைசியாக 68 வருடங்களுக்கு முன்பு 1956 ஆம் ஆண்டு ஒலிம்பிக்ஸ் போட்டிகளிலேயே இவ்வாறு நடந்தது.

    பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஒலிம்பிக்ஸ் போட்டிகள் நேற்று அதிகாலை ஒலிம்பிக் ஜோதி ஏற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. முதல் நாளில் பல்வேறு பிரிவுகளில் நடந்த முதற்கட்ட போட்டிகளில் பல்வேறு நாடுகளின் விளையாட்டு வீரர்கள் தங்களின் திறனை வெளிப்படுத்தியுள்ளனர்.

    மொத்தமாக 32 விளையாட்டுகளைக் கொண்ட இந்த பாரிஸ் 2024 ஒலிம்பிக் தொடரில் 329 போட்டிகள் நடத்தப்படுகிறது. இந்தியா சார்பில் 16 விளையாட்டுகளில் 117 வீரர்கள் கலந்து கொள்கின்றனர். இந்நிலையில் ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் ஒன்றான சர்ஃபிங் எனப்படும் அலைச்சறுக்கு போட்டி குறித்த சுவாரஸ்ய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

     

    ஆதவாது பிரான்ஸ் பாலினீசிய தீவுகளில் ஒன்றான தஹிட்டி[Tahiti] தீவின் கடல் பகுதியில் சர்ஃபிங் போட்டிகள் நடத்தப்பட உள்ளது. இது மற்ற ஒலிம்பிக்ஸ் போட்டிகள் நடக்கும் பாரிஸ் நகரில் இருந்து சுமார் 15,715 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது என்பதே இதில் உள்ள சுவாரஸ்யம். கடைசியாக 68 வருடங்களுக்கு முன்பு 1956 ஆம் ஆண்டு ஒலிம்பிக்ஸ் அரங்கில் இருந்து இவ்வளவு தொலைவில் ஸ்வீடனில் வைத்து குதிரையேற்ற போட்டிகள் போட்டிகள் நடத்தப்பட்டன.

     

    அதன்பிறகு தற்போது 15,715 கிலோமீட்டர் தொலைவில் சர்ஃபிங் போட்டிகள் நடத்தப்படுகின்றன. பிரான்ஸ் முழுவதும் ஒலிம்பிக் போட்டிகளைப் பரப்பும் முகமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்துள்ளது. இந்நிலையில் தஹிட்டி தீவில் ஒலிம்பிக்ஸ் கொண்டாட்டங்கள் பாரம்பரிய முறைப்படி நடந்து வருகிறது. இந்த வருட ஒலிம்பிக்ஸ் சர்ஃபிங் போட்டிகளில் 24 வீரர்கள் மற்றும் 24 வீராங்கனைகள் என மொத்தம் 48 சர்ஃபர்கள் பங்கேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது. 

    ×