என் மலர்
உலகம்
- ஒவ்வொரு ஆண்டும் நோபல் பரிசு எனும் உலக புகழ் பெற்ற விருது வழங்கப்படுகிறது.
- மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம் மற்றும் அமைதிக்கான நோபல் பரிசுகள் வழங்கப்பட்டது.
சுவீடன் நாட்டை சேர்ந்த ஆல்பிரட் நோபல் (Alfred Nobel) எனும் வேதியியல் பொறியாளரின் பெயரால் 1901லிருந்து மருத்துவம், பவுதிகம், வேதியியல், இலக்கியம் மற்றும் உலக அமைதி ஆகிய 5 துறைகளில் மனித குலத்திற்கு பயனுள்ள சாதனைகளை புரிந்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் நோபல் பரிசு எனும் உலக புகழ் பெற்ற விருது வழங்கப்படுகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கும் பணி கடந்த 2ம் தேதி முதல் தொடங்கியது.
ஏற்கனவே, மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம் மற்றும் அமைதிக்கான நோபல் பரிசுகள் வழங்கப்பட்ட நிலையில், இன்று பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், 2023-24 ஆம் ஆண்டுக்கான பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு கிளாடியா கோல்டினுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
பாலின இடைவெளியின் முக்கிய ஆதாரங்களை ஆய்வில் வெளிப்படுத்தியமைக்காகவும், பெண்களுக்கான தொழில் வாய்ப்புகள் தொடர்பான ஆய்வுகளுக்காகவும் கிளாடியா கோல்டினுக்கு நோபல் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
- இஸ்ரேலுக்கு துணை நிற்பதாக பிரதமர் மோடி அறிவித்தார்
- இஸ்ரேலுக்கு செல்லும் முதல் இந்திய பிரதமராக மோடி 2017ல் சென்றார்
கடந்த சனிக்கிழமையன்று பாலஸ்தீன பயங்கரவாத அமைப்பான ஹமாஸ், இஸ்ரேல் மீது வான்வழியாக 5000க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை ஏவியது. மேலும் தரைவழியாகவும், நீர்வழியாகவும் தாக்குதல் நடத்தியது. இதில் 700க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர்.
இந்த எதிர்பாராத தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் மீது போர் அறிவித்து ஹமாஸ் பயங்கரவாதிகளை தீவிரமாக வேட்டையாடி வருகிறது. அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஆஸ்திரேலியா மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
இந்நிலையில் இது குறித்து தனது அதிகாரபூர்வ எக்ஸ் கணக்கில், "இந்த பயங்கரவாத தாக்குதல் அதிர்ச்சியளிக்கிறது. பலியான அப்பாவி இஸ்ரேலிய பொது மக்களின் குடும்பங்களுக்கு எங்களின் பிரார்த்தனைகள். இந்த கடினமான நேரத்தில் இஸ்ரேலுடன் இந்தியா துணை நிற்கிறது" என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
"இந்தியா, உலகில் ஒரு முக்கியமான நாடு. பயங்கரவாதத்தை குறித்த முழுமையான புரிதல் இந்தியாவிற்கு உள்ளதால் இஸ்ரேலை ஆதரிக்கிறது", என இந்தியாவிற்கான இஸ்ரேல் தூதர் நவோர் கிலோன் (Naor Gilon) தெரிவித்தார்.
பல தசாப்தங்களாக நடக்கும் இஸ்ரேல் பாலஸ்தீன பிரச்சனையில் இந்தியா, இஸ்ரேலை ஆதரித்ததில்லை. தற்போது இந்தியா எடுத்திருக்கும் ஆதரவு நிலை பல விமர்சனங்களையும், கேள்விகளையும் எழுப்பியுள்ளது.
1962ல் பிரதமர் ஜவகர்லால் நேருவின் தலைமையிலான இந்தியா, இந்திய-சீன போரில் இஸ்ரேலின் உதவியை பெற்றாலும் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்திற்கிடையே சமமான பார்வையை கொண்டிருந்தது.
1970-களில், பாலஸ்தீன ஆதரவு நிலை எடுத்த ஒரே அரபு நாடுகளல்லாத தேசமாக காங்கிரஸ் சார்பாக அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியின் தலைமையில் இந்தியா இருந்து வந்தது.
2000-வது ஆண்டில் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையிலான ஆட்சியில் இஸ்ரேல் நாட்டிற்கு சென்ற முதல் மத்திய அமைச்சராக இருந்தவர் எல்.கே. அத்வானி. அதே வருடம், இஸ்ரேலுக்கு செல்லும் முதல் வெளியுறவு துறை அமைச்சர் எனும் அந்தஸ்தை பெற்றவர் அவர் அரசை சேர்ந்த ஜஸ்வந்த் சிங்.
2003ல் வாஜ்பாய் அரசு நடைபெறும் போது இந்தியாவிற்கு வந்த முதல் இஸ்ரேலிய பிரதமர் எனும் அந்தஸ்துடன் ஏரியல் ஷெரோன் இங்கு சிறப்பான உபசரிப்பை பெற்றார்.
2004-2014 காலகட்டத்தில் பாலஸ்தீனிய ஆதரவு நிலையை விட்டு கொடுக்காமல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் டாக்டர். மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி இஸ்ரேலுடன் உறவை வளர்த்தது.
2014ல் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பா.ஜ.க.வின் நரேந்திர மோடி பிரதமரானார். அப்போது முதல் இஸ்ரேல்-இந்திய உறவு வலுப்பெற தொடங்கியது. பிறகு 2014, 2015, 2016 ஆகிய வருடங்களில் இரு தரப்பு முக்கிய தலைவர்களின் பரஸ்பர வருகை அதிகரித்தது. இரு நாடுகளுக்கிடையே பல ராணுவ ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் அளவிற்கு உறவு வலுவடைந்தது.
2017ல் மோடி இஸ்ரேலுக்கு சென்றதன் மூலமாக இஸ்ரேலுக்கு செல்லும் 'முதல் இந்திய பிரதமர்' எனும் அந்தஸ்தை பெற்றார்.
தற்போது இந்தியா வெளிப்படையாக இஸ்ரேல் ஆதரவை எடுத்திருப்பது அதன் வெளியுறவு கொள்கையில் ஒரு குறிப்பிடத்தகுந்த மாற்றம்.
தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் உள்ள போதெல்லாம் இஸ்ரேல் ஆதரவு நிலையை எடுத்து வருவதாக அரசியல் விமர்சிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
- 700க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் ஹமாஸ் அமைப்பின் தாக்குதலில் உயிரிழந்தனர்
- மிருகங்களோடு சண்டையிடுகிறோம்; அதற்கு ஏற்ற வழிமுறைகளில் போரிடுகிறோம்
தெற்கு இஸ்ரேல் பகுதியில் கடந்த சனிக்கிழமை காலை பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பு திடீர் தாக்குதல் நடத்தியது.
வான்வழியாக 5000க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை ஏவியும், தரை வழியாகவும், நீர் வழியாகவும் திட்டமிட்டு ஹமாஸ் அமைப்பினர் நடத்திய இத்தாக்குதலில் இஸ்ரேலில் பொதுமக்கள் பலரை உள்ளடக்கிய 700க்கும் மேற்பட்டவர்கள் பரிதாபமாக கொல்லப்பட்டனர்.
இத்தாக்குதல் நடவடிக்கையை சற்றும் எதிர்பாராத இஸ்ரேல், பதிலடியாக ஹமாஸ் அமைப்பின் மீது போர் தொடுத்திருக்கிறது. ஹமாஸ் ராணுவத்தை முற்றிலும் அழிக்க போவதாக தன் நாட்டு மக்களுக்கு உறுதியளித்துள்ள இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் முக்கிய பகுதிகளில் வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது.
காசா முனை (Gaza Strip) எனப்படும் முக்கிய பிரதேசத்தை முழுவதுமாக தங்கள் கட்டுப்பாட்டில் இஸ்ரேல் கொண்டு வந்து விட்டது.
"அப்பகுதியில் அனைத்தும் எங்கள் கட்டுப்பாட்டிற்கு வந்து விட்டது. அனைத்தும் மூடப்பட்டு விட்டது. மின்சாரம், உணவு, குடிநீர், எரிபொருள் உள்ளிட்ட எதுவும் அங்கு கிடைக்காமல் செய்து விட்டோம். நாங்கள் மனிதர்களோடு போரிடவில்லை; மிருகங்களோடு போரிடுகிறோம். அதற்கு ஏற்றவாறு நாங்கள் செயல்படுகிறோம்," என இது குறித்து இஸ்ரேல் ராணுவ அமைச்சர் யோவ் காலன்ட் (Yoav Gallant) தெரிவித்தார்.
- நிலநடுக்கத்தில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
- பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முன்வருமாறு தலிபான் அரசு பல்வேறு நாடுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
காபூல்:
ஆப்கானிஸ்தானில் நேற்று முன்தினம் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கம் அந்நாட்டை உலுக்கி உள்ளது. ஆப்கானிஸ்தான் வடமேற்கில் 35 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஹெராட் மாகாணத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் இது 6.3 ஆக பதிவானது.
இதன் தொடர்ச்சியாக 6 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் கட்டிடங்கள், வீடுகள் இடிந்து தரை மட்டமானது. அதில் இருந்தவர்கள் என்ன நடந்தது என்பது பற்றி அறியாமலேயே மண்ணோடு மண்ணாக இடிபாடுகளுக்குள் இடையில் சிக்கினார்கள்.
ஜிண்டாஜன்,ஜோர்ஜான் மாவட்டங்கள் தான் இந்த நிலநடுக்கத்துக்கு கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது. இங்குள்ள 12 கிராமங்கள் முற்றிலும் அழிந்து விட்டது. இந்த கிராமங்களை சேர்ந்தவர்கள் ஏராளமானவர்கள் உயிர் இழந்து விட்டனர்.
இந்த பகுதிகளில் மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இடிந்து விழுந்த கட்டிடங்கள் மற்றும் வீடுகளின் இடிபாடுகளை அகற்றும் பணி முடுக்கிவிடப்பட்டு உள்ளது.
இதில் தோண்ட, தோண்ட பலர் பிணமாக மீட்கப்பட்டு வருகின்றனர். இதனால் நிலநடுக்கத்தில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முதலில் 300 பேர் வரை இறந்ததாக கூறப்பட்டது. ஆனால் மீட்பு பணிகள் நடந்து வரும் பகுதிகளில் இருந்து தொடர்ந்து உடல்கள் மீட்கப்பட்டு வருவதால் இறந்தவர்களின் எண்ணிக்கை 2,445 ஆக அதிகரித்து உள்ளது. 9,240 பேர் படுகாயம் அடைந்து உள்ளனர்.
அவர்கள் அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் ஆஸ்பத்திரி நிரம்பி வழிகிறது. ஆஸ்பத்திரி வளாகத்திலும் தற்காலிமாக படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு அதில் காயம் அடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனால் அவர்களுக்கு தேவையான மருந்துகள், உணவு, உடை, குடிநீர் உள்ளிட்ட வசதிகள் இல்லாமல் அவதிப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முன்வருமாறு தலிபான் அரசு பல்வேறு நாடுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
சிகிச்சையில் உள்ள சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. மீட்பு பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இடிபாடுகள் அனைத்தும் முடிந்த பிறகு தான் இந்த நிலநடுக்கத்தில் எத்தனை பேர் இறந்தார்கள் என்பது தெரியவரும்.
இந்த நிலநடுக்கத்தால் ஹெராட் மாகாணத்தில் உள்ள கிராமங்கள் சின்னா பின்னமாகி உருக்குலைந்து காணப்படுகிறது. 1,320 வீடுகள் முற்றிலும் இடிந்து சேதமாகி கிடக்கிறது. ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். அவர்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த மிக மோசமான நிலநடுக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த பிப்ரவரி மாதம் துருக்கி மற்றும் சிரியாவில் நடந்த மிகப்பெரிய அளவிலான நிலநடுக்கத்துக்கு சுமார் 50 ஆயிரம் பேர் பலியானார்கள். இதன் தொடர்ச்சியாக இப்போது ஆப்கானிஸ்தானை உலுக்கிய நிலநடுக்கத்துக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டி உள்ளது.
- கனடாவின் உள்விவகாரங்களில் ஏற்கனவே சீனா, ரஷியாவின் தலையீடு இருப்பதாக குற்றச்சாட்டுகள் இருந்து வருகின்றன.
- நிஜ்ஜார் கடந்த 2015-ம் ஆண்டு பாகிஸ்தானில் இயங்கி வரும் ஐ.எஸ். இயக்கத்திடம் ஆயுத பயிற்சி மேற்கொண்டார்.
ஒட்டாவா:
கனடாவில் கடந்த ஜூன் மாதம் காலிஸ்தான் பயங்கரவாத தலைவர் ஹர்தீப்சிங் நிஜ்ஜார் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இவர் இந்தியாவில் தேடப்பட்ட பயங்கரவாதிகள் பட்டியலில் இடம் பெற்று இருந்தவர்.
இவரது கொலை பின்னணியில் இந்திய ஏஜெண்டுகளுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பரபரப்பு குற்றச்சாட்டுகளை பகிரங்கமாக தெரிவித்தார். இதற்கு கண்டனம் தெரிவித்த இந்தியா கனடாவின் குற்றச்சாட்டை மறுத்தது. இதன் காரணமாக இந்தியா-கனடா இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது.
இந்த நிலையில் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் சீனாவுக்கு தொடர்பு இருப்பதாக தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது. கனடாவின் உள்விவகாரங்களில் ஏற்கனவே சீனா, ரஷியாவின் தலையீடு இருப்பதாக குற்றச்சாட்டுகள் இருந்து வருகின்றன. நிஜார் கொலையில் இந்தியாவுக்கும், கனடாவுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருவதால் இதன் மூலம் சீனா பலன் அடைய திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் நிஜ்ஜார் கொலையில் சீனாவுக்கு சம்பந்தம் இருக்கலாமா? என்ற சந்தேகமும் தற்போது கிளம்பி இருக்கிறது.
நிஜ்ஜார் கடந்த 2015-ம் ஆண்டு பாகிஸ்தானில் இயங்கி வரும் ஐ.எஸ். இயக்கத்திடம் ஆயுத பயிற்சி மேற்கொண்டார். அவருக்கு சர்வ தேச அளவில் உள்ள பயங்கரவாத கும்பலுடன் தொடர்பு இருந்தது. மேலும் கனடாவிலும் காலிஸ்தான் ஆதரவு குழுக்களுக்கு அவர் பலமுறை ஆயுத பயிற்சி முகாம்கள் நடத்தி துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை கையாள்வது குறித்து பயிற்சிகளும் அளித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் தற்போது வரை இந்த கொலை யில் பல்வேறு சந்தே கங்கள் நிலவி வரு கிறது.
இந்த சூழ்நிலையில் கனடாவில் நடக்க இருந்த இசை நிகழ்சியை ரத்து செய்து விட்டதாக இந்திய பாடகர் குருதாஸ்மான் அறிவித்துள்ளார். பஞ்சாபை சேர்ந்த புகழ்பெற்ற பாடகரான குருதாஸ்மான் இந்த மாதம் 22- ந் தேதி முதல் 31-ந்தேதி வரை சுற்றுப்பயணம் செய்து இசை நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டு இருந்தார். இதற்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்து விட்டது.
தற்போது கனடா-இந்தியா இடையே உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் அவர் தனது இசை நிகழ்சியை ரத்து செய்து உள்ளார்.
இதையடுத்து இசை நிகழ்ச்சியை காண டிக்கெட் வாங்கியவர்களுக்கு பணம் திரும்ப கொடுக்கப்பட இருப்பதாக நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து இருந்த நிறுவனம் தெரிவித்து உள்ளது.
- இஸ்ரேல் தெற்கு பகுதியில் உள்ள மக்கள் ஹமாஸ் பயங்கரவாதிகளால் கடத்தி செல்லப்படும் காட்சிகள் இடம் பெற்று இருந்தன.
- ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேல் மக்களின் வீடுகளுக்குள் சென்று துப்பாக்கி சூடு நடத்த தொடங்கி உள்ளனர்.
இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகம் இன்று காலை வீடியோ ஒன்றை வெளியிட்டது. அந்த வீடியோவில் இஸ்ரேல் தெற்கு பகுதியில் உள்ள மக்கள் ஹமாஸ் பயங்கரவாதிகளால் கடத்தி செல்லப்படும் காட்சிகள் இடம் பெற்று இருந்தன. வேன், ஜீப் உள்பட பல வாகனங்களில் பெண்களை ஹமாஸ் பயங்கரவாதிகள் துப்பாக்கி முனையில் கடத்தி செல்லும் பதைபதைக்க வைக்கும் காட்சிகள் காணப்பட்டன. அந்த வீடியோவில் துப்பாக்கிகளுடன் ஹமாஸ் பயங்கரவாதிகள் மிரட்டுவதும் இடம் பெற்றுள்ளது.
இதுகுறித்து இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள எச்சரிக்கையில், "ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேல் மக்களின் வீடுகளுக்குள் சென்று துப்பாக்கி சூடு நடத்த தொடங்கி உள்ளனர். இந்த செயலுக்காக அவர்கள் மிகப்பெரிய விலையை கொடுத்தே தீர வேண்டும். எங்கள் நாட்டு மக்களை காக்க நாங்கள் அதிகபட்ச அதிரடிகளில் ஈடுபடுவோம்" என்று கூறப்பட்டுள்ளது.
- இஸ்ரேல்-ஹமாஸ் பயங்கரவாதிகள் இடையே ஏற்பட்டுள்ள போர் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயரத் தொடங்கி இருக்கிறது.
- சர்வதேச அளவில் பல நாடுகளில் பொருளாதார மந்த நிலை காணப்படுகிறது.
இஸ்ரேல்-ஹமாஸ் பயங்கரவாதிகள் இடையே ஏற்பட்டுள்ள போர் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயரத் தொடங்கி இருக்கிறது. இன்று காலை நிலவரப்படி கச்சா எண்ணெய் விலையில் 5 சதவீதம் அதிகரித்தது. இது சர்வதேச பொருளாதார விவகாரங்களில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. போர் நீடித்து மேலும் அதிகமாகும் சூழ்நிலையில் கச்சா எண்ணெய் விலை மேலும் உயர வாய்ப்புள்ளது.
தற்போது சர்வதேச அளவில் பல நாடுகளில் பொருளாதார மந்த நிலை காணப்படுகிறது. கச்சா எண்ணெய் விலை உயர்வால் இந்த பாதிப்பு மேலும் அதிகரிக்கக்கூடும்.
- ஹமாஸ் பயங்கரவாதிகள் மோட்டார் பொருத்தப்பட்ட பாரா-கேடர்களை பயன்படுத்தும் என்று இஸ்ரேலியப் படைகள் எதிர்பார்க்கவில்லை.
- போர் விமான கப்பலில் 5 ஆயிரம் வீரர்கள் உள்ளனர். இதில் பலவகை அரிய விமானங்கள் உள்ளன.
ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசி தாக்கி வருகின்றனர். இந்த தாக்குதலில் ஏராளமான இஸ்ரேலியர்கள் உயிரிழந்து உள்ளனர்.
சமீபத்திய மின்னல் வேக தாக்குதலுக்கு ஹமாஸ் பயங்கரவாதிகள் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு முன்பே ரகசியமாக திட்டமிடப்பட்டது தெரியவந்துள்ளது.
2014-ல் இது குறித்து உளவுத்துறை எச்சரித்தும் இஸ்ரேல் அலட்சியப்படுத்தியது. அதன் விளைவுகளை தற்போது இஸ்ரேல் கண்டு வருகிறது. ஹமாஸ் என்ற தீவிரவாத இயக்கம் பயங்கரவாதிகளை வெளிநாடுகளுக்கு அனுப்பி அவர்களுக்கு பயிற்சி அளித்துள்ளது.
அவர்கள் வெளிநாடுகளில் இருந்து, ஏவுகணைகளை தயாரித்தல், ஏவுதல், மனித வெடிகுண்டு உள்ளிட்ட பல்வேறு வகையான நவீன தொழில்நுட்பத்தை கையாள பயிற்சி பெற்றுள்ளனர்.
சமீபத்திய "ஆபரேஷன் ஆல்-அப்பா புயல்" போன்ற அம்சங்களைக் கொண்டிருக்க ஹமாஸ் தெளிவான திட்டங்களை வகுத்துள்ளது.
குறிப்பாக, ஹமாஸ் பயங்கரவாதிகள் மோட்டார் பொருத்தப்பட்ட பாரா-கேடர்களை பயன்படுத்தும் என்று இஸ்ரேலியப் படைகள் எதிர்பார்க்கவில்லை. காற்றில் பறந்து வந்து ஏவுகணைகளை வீசுகின்றனர்.
ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேலிய படை வீரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதில் பலர் உயிரிழந்தனர். துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களில் பலர் தற்கொலைப்படையைச் சேர்ந்தவர்கள் என நம்பப்படுகிறது.
இஸ்ரேல் மீதான தாக்குதலுக்குப் பிறகு ஹமாஸ் வீடியோவை சமூக ஊடகங்களில் வெளியிட்டது. அவர்கள் நகரங்களில் இறங்கி, கண்ணில் படும் பொதுமக்களையும், படை வீரர்களையும் பணயக்கைதிகளாக பிடித்தனர்.
இப்படி ஊடுருவிய நூற்றுக்கணக்கான மோட்டார் பொருத்தப்பட்ட கிளைடர்கள் பயங்கரவாதிகளிடம் இருப்பதாக நம்பப்படுகிறது.
கடலில் இருந்து சிறிய படகுகளில் காசா வழியாக இஸ்ரேலுக்குள் நுழைந்தனர். மறுபுறம், பயங்கரவாதிகளும் பிக்-அப் டிரக்குகளில் கனரக எந்திர துப்பாக்கிகளுடன் இஸ்ரேலுக்குள் விரைந்தனர்.
இஸ்ரேலுக்கு ஆதரவாக கிழக்கு மத்திய தரைக்கடலுக்கு விமானம் தாங்கி கப்பலை அனுப்ப அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க அதிகாரிகள் கூறுகையில்:-
அமெரிக்காவின் போர்டு கேரியர் கடற்படை குழு இஸ்ரேல் செல்ல உத்தரவிடப்பட்டு உள்ளது.
அந்த போர் விமான கப்பலில் 5 ஆயிரம் வீரர்கள் உள்ளனர். இதில் பலவகை அரிய விமானங்கள் உள்ளன.
இந்த கப்பலில் உள்ள போர் விமானங்கள் எந்தவொரு சூழ்நிலையையும் சமாளிக்கும் திறன் வாய்ந்தவை. அதே போல் பயங்கரவாதிகளுக்கு கூடுதல் ஆயுதங்களை வழங்குபவர்கள் மீது ஒரு கண் வைத்திருக்கும்.
வர்ஜீனியாவை தளமாகக்கொண்ட விமானம் தாங்கி கப்பல் தற்போது மத்திய தரைக்கடலில் இருந்து இஸ்ரேல் நோக்கி விரைந்துள்ளது.
இதில் யுஎஸ்எஸ் நார்மண்டி, யுஎஸ்எஸ் தாமஸ் ஹட்னர், யுஎஸ்எஸ் ராம்பேஜ், யுஎஸ்எஸ் கார்னி, யுஎஸ்எஸ் ரூஸ்வெல்ட் மற்றும் எப்-35, ஏபி-15, எப்-16 மற்றும் ஏ-10 போர் விமானங்கள் தயார் நிலையில் உள்ளன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
அமெரிக்காவின் இந்த அதிநவீன போர்க்கப்பல் எதிரிகள் உள்ள பகுதிகளை நாசமாக்கும் சக்தி கொண்டது. பயங்கரவாதிகள் உள்ள இடங்களை குறி வைத்து துல்லியமாக தாக்கக்கூடிய ஆயுதங்கள் இதில் உள்ளன. மேலும் அதிநவீன கண்காணிப்பு கருவிகள் இதில் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் எதிரிகளை அமெரிக்க கப்பல் படை துல்லியமாக கணித்து அதற்கேற்றார் போல் தாக்குதல்களை நடத்தும். மத்திய தரைக்கடல் பகுதியில் உள்ள இந்த கப்பல் இஸ்ரேல் சென்றதும் பயங்கரவாதிகளுக்கு பேரழிவு ஏற்படும் என கூறப்படுகிறது.
- சுமார் 2 மணி நேரத்துக்கு பிறகுதான் இஸ்ரேல் தனது பதிலடியை ஆரம்பித்தது.
- பயங்கரவாதிகளை வேட்டையாடுவதற்கு வசதியாக 20 ஆயிரம் பேரை இஸ்ரேல் இடமாற்றம் செய்துள்ளது.
டெல்அவிவ்:
இஸ்ரேல் நாட்டுக்கும் அதன் அருகில் உள்ள பாலஸ்தீனத்தின் ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையே திடீரென போர் ஏற்பட்டு உள்ளது.
கடந்த சனிக்கிழமை காலை 6.35 மணிக்கு ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேலின் தெற்கு பகுதியில் 22 இடங்களில் ஊடுருவி அதிரடி தாக்குதலை நடத்தினார்கள். சுமார் 25 கிலோ மீட்டர் தூரம் இஸ்ரேலுக்குள் ஊடுருவிய பயங்கரவாதிகள் முக்கிய இடங்களில் குண்டுகளை வீசினார்கள்.
பல இடங்களில் குடியிருப்புக்குள் நுழைந்து பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்களை வலுக்கட்டாயமாக தங்களது வாகனங்களில் ஏற்றி பிணை கைதிகளாக பிடித்து சென்றனர். காசா பகுதிக்குள் அப்படி கொண்டு செல்லப்பட்ட நூற்றுக்கணக்கான பிணை கைதிகள் கதி என்ன ஆனது என்று தெரியவில்லை.
6.35 மணி முதல் 8.30 மணிக்குள் சுமார் 2 மணி நேரத்தில் 5 ஆயிரம் ராக்கெட்டுகளை ஏவி ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலால் முதலில் இஸ்ரேல் அதிர்ச்சியால் நிலை குலைந்தது. அந்த நாட்டின் வான் மண்டல பாதுகாப்பு கை கொடுக்காததால் இஸ்ரேலின் பல பகுதிகள் தரைமட்டமானது.
சுமார் 2 மணி நேரத்துக்கு பிறகுதான் இஸ்ரேல் தனது பதிலடியை ஆரம்பித்தது. காசாவில் ஹமாஸ் பயங்கரவாதிகளின் தலைமையகம் உள்பட பல கட்டிடங்கள் குண்டு வீசி தகர்க்கப்பட்டன. அடுத் தடுத்து ஏவுகணை தாக்கு தலையும் இஸ்ரேல் மேற்கொண்டது.
நேற்று 2-வது நாளாக இஸ்ரேலுக்கும், ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையே போர் நடந்தது. இதில் இஸ்ரேலில் சுமார் 700 பேரும், காசாவில் 500 பேரும் என சுமார் 1,200 பேர் பலியானார்கள். 10 ஆயிரம் பேர் காயம் அடைந்தனர்.
இந்த நிலையில் இன்று (திங்கட்கிழமை) 3-வது நாளாக இஸ்ரேல் ராணுவத்துக்கும், ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையே சண்டை நீடித்தது. இன்று அதிகாலை இரு தரப்பினரும் ராக்கெட் குண்டுகளை ஏவி தாக்குதலை நடத்தினார்கள். இதற்கிடையே 22 வழிகளில் இஸ்ரேலுக்குள் ஊடுருவிய ஹமாஸ் பயங்கரவாதிகளை வேட்டையாடும் நடவடிக்கையை இன்று இஸ்ரேல் தீவிரப்படுத்தியது.
இதற்காக இஸ்ரேல் தெற்கு பகுதிகளுக்கு கூடுதல் ராணுவம் அனுப்பி வைக்கப்பட்டது. அவர்கள் இஸ்ரேல் தெற்கு பகுதியில் பதுங்கி இருக்கும் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் இஸ்ரேல் தெற்கு பகுதிக்கும் காசாவுக்கும் இடையே உள்ள பகுதி மிக பயங்கரமான போர்க்களமாக மாறி உள்ளது.
பயங்கரவாதிகளை வேட்டையாடுவதற்கு வசதியாக 20 ஆயிரம் பேரை இஸ்ரேல் இடமாற்றம் செய்துள்ளது. பொதுமக்களை ராணுவ பதுங்கு அரங்குகளுக்கு வருமாறு அழைப்பு விடுத்து உள்ளனர். எனவே வரும் நாட்களில் ஹமாஸ் பயங்கரவாதிகள் மீதான தாக்குதல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பயங்கரவாதிகளை வேட்டையாடும் பணியில் முன்களத்தில் நிற்கும் இஸ்ரேல் வீரர்களில் இதுவரை சுமார் 54 பேர் உயிரிழந்துள்ளனர். என்றாலும் நீண்ட காலம் போருக்கு தாங்கள் தயாராக இருப்பதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. எனவே போர் மேலும் உக்கிரம் ஆகும் என்று கூறப்படுகிறது.
- இசை விழா நடைபெற்ற இடத்தில் ஹமாஸ் துப்பாக்கிச்சூடு
- பலரை பிணைக் கைதிகளாக ஹமாஸ் பிடித்துச் சென்றுள்ளது
இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் நேற்று முன்தினம் திடீரென்று தாக்குதல் நடத்தினர். 20 நிமிடத்திற்குள் 5 ஆயிரம் ஏவுகணைகள் வீசி தாக்குதல் நடத்தினர். மேலும், தரை வழியாக இஸ்ரேல் எல்லைக்குள் நுழைந்து கண்ணில் கண்டவர்களையெல்லாம் சுட்டுத் தள்ளினர்.
இஸ்ரேலில் ஜெவிஷ் விடுமுறை கொண்டாடப்பட்டு வந்தது. சனிக்கிழமை காஸா- இஸ்ரேல் எல்லையில் உள்ள கிராமப் பகுதியில் இசை விழா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான ஆண்கள்- பெண்கள் என இளையோர் கலந்து கொண்டனர்.
வெளிநாடுகளை சேர்ந்த இசைக்கலைஞர்களும் கலந்து கொண்டனர். இந்த விழாவில் காஸா பயங்கரவாதிகள் திடீரென புகுந்து அதிரடி தாக்குதல் நடத்தினர். இதனை எதிர்பாராத இளைஞர்கள் தப்பியோட முயற்சி செய்தனர். இதனால் இந்த இடம் போர்க்களமாக காட்சியளித்தன. ஒரே கூச்சல் குழப்பம் நிலவியது. தங்களுடன் வந்தவர்களை பார்க்க முடியாத வகையில் தப்பித்தால் போதும் என்ற நிலைக்கு ஒவ்வொருவரும் தள்ளப்பட்டனர்.
ஹமாஸ் பயங்கரவாதிகளிடம் இருந்து தப்பிக்க, அங்கும் இங்கும் ஓடி மறைய முயற்சித்தனர். பலர் காருக்கு அடியில் பதுங்கி கொண்டனர். சுமார் ஆறு மணி நேரம் எந்தவித சத்தமும் போடாமல் தங்களது உயிரை காப்பாற்றிக் கொண்டனர்.
இந்த தாக்குதல் காரணமாக அந்த இடத்தில் இளைஞர்கள் உடல்கள் சிதிறக் கிடந்தன. கிட்டத்தட்ட 260 பேர் உடல்கள் அந்த இடத்தில் இருந்து மீட்கப்பட்டதாக, இஸ்ரேல் மீட்பு அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. விழா அமைப்பாளர்கள், விழாவில் கலந்து கொண்டு மாயமானவர்களை கண்டுபிடிக்க பாதுகாப்புப் படைக்கு வேண்டுகோள் வைத்துள்ளனர்.
ஹமாஸ் பயங்கரவாதிகள், இந்த விழாவில் கலந்து கொண்டவர்களில் பலரை பிணைக் கைதியாக பிடித்து சென்றுள்ளனர். இஸ்ரேலில் இதுவரை 700-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதில் இந்த விழாவில் கலந்து கொண்டவர்கள் அதிக அளவில் உயிரிழந்துள்ளனர்.
- இஸ்ரேலில் தற்போது நடப்பது அச்சமும், வேதனையும் அளிக்கிறது.
- பயங்கரவாதமும், போரும் தீர்வுகளை கொண்டுவருவதில்லை.
வாடிகன் நகரில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு பிரார்த்தனைக்கு பிறகு பொதுமக்கள் மத்தியில் பேசிய கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் இஸ்ரேல்-ஹமாஸ் போர் குறித்து வேதனை தெரிவித்தார்.
இது குறித்து அவர் பேசுகையில், "இஸ்ரேலில் தற்போது நடப்பது அச்சமும், வேதனையும் அளிக்கிறது. பயங்கரவாதமும், போரும் தீர்வுகளை கொண்டுவருவதில்லை, மரணத்தை மட்டுமே கொண்டு வருகின்றன. போர் ஒரு தோல்வி. ஒவ்வொரு போரும் தோல்விதான். எனவே போரை உடனடியாக நிறுத்தும்படி இருதரப்பையும் வேண்டுகிறேன்" என்றார்.
இதனிடையே இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே பதற்றம் அதிகரித்து வருவது குறித்து கவலை தெரிவித்துள்ள சீனா, நிலைமை மேலும் மோசமடைவதை தவிர்க்கவும், பொதுமக்களைப் பாதுகாக்கவும் அமைதி காக்கும்படி இருதரப்பையும் வலியுறுத்தியுள்ளது.
- ஹமாஸ் பயங்கரவாதிகள் திடீரென இஸ்ரேல் மீது தாக்குதல்
- இருபக்கமும் சேர்ந்து பலி ஆயிரத்தை தாண்டியுள்ளது
ஹமாஸ் பயங்கரவாதிகள் திடீரென இஸ்ரேல் எல்லைக்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர். பொதுமக்களை சுட்டுக்கொன்று, பிணைக் கைதிகளாக பிடித்து சென்றுள்ளனர். இதற்கு இஸ்ரேல் பதிலடி கொடுக்க தொடங்கியுள்ளது.
இதற்கிடையே நேற்று ஐ.நா. அவசர கூட்டம் நடைபெற்றது. பூட்டிய அறைக்குள் இந்த கூட்டம் நடைபெற்றது. அப்போது ஹமாஸின் இந்த கொடூர தாக்குதலுக்கு, அனைத்து (15) உறுப்பினர் நாடுகளும் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. ஆனால், சில நாடுகள் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு மட்டும் கண்டனம் தெரிவித்துள்ளன.
கூட்டம் முடிவடைந்த பின், அமெரிக்காவின் துணை தூதர் ராபர்ட் வுட் கூறுகையில் ''பெரும்பாலான சிறந்த நாடுகள் தங்களது கண்டனத்தை தெரிவித்தன. ஆனால், சில கவுன்சில் உறுப்பினர்கள் கண்டனம் தெரிவிக்கவில்லை. பொதுவாக அவர்கள் யார் என்று கூற முடியும்'' என்றார்.
ஐ.நா.வுக்கான ரஷிய தூதர் வாஸ்சிலி நெபன்ஜியா கூறுகையில் ''கூட்டத்தில் நாங்கள் கண்டனம் தெரிவிக்கவில்லை என்பதை சொல்ல அமெரிக்க முயற்சி செய்தது. ஆனால், நாங்கள் கண்டனம் தெரிவிக்கவில்லை என்பது உண்மையல்ல'' என்றார், மேலும், ''மக்கள் மீதான அனைத்து தாக்குதலுக்கும் நாங்கள் கண்டனம் தெரிவிக்கிறோம். இது என்னுடைய கருத்து'' என்றார்.
சீனாவுக்கான தூதர் ''பொதுமக்கள் மீதான அனைத்து தாக்குதலுக்கும் கண்டனம் தெரிவிக்கிறோம்'' என்றார். ஆனால், ஹமாஸ் என்ற பெயரை அவர் உச்சரிக்கவில்லை.
இறுதியில் ஐ.நா. உடனடியாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.






