என் மலர்tooltip icon

    உலகம்

    • ஹமாஸ் அமைப்பை முற்றிலும் அழிக்க போவதாக இஸ்ரேல் கூறியுள்ளது
    • 150 இஸ்ரேலியர்களின் கதி என்னவென்று இதுவரை தெரியவில்லை

    கடந்த சனிக்கிழமை காலை இஸ்ரேல் மீது பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பினர் திடீர் தாக்குதல் நடத்தினர். பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் உள்ளிட்ட பல இஸ்ரேலியர்கள் இதில் உயிரிழந்தனர். மேலும் பல இஸ்ரேலியர்களை பணய கைதிகளாக ஹமாஸ் கொண்டு சென்றது.

    இதை தொடர்ந்து ஹமாஸ் அமைப்பை முற்றிலும் அழிக்க போவதாக கூறி, இஸ்ரேல் அதை சேர்ந்தவர்களை காசா பகுதியில் தேடி தேடி வேட்டையாடி வருகிறது.

    இஸ்ரேல் அறிவித்திருக்கும் இந்த போர் 6-வது நாளாக இன்றும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காசா பகுதியின் மீது இஸ்ரேல் வான்வழியாக தொடர்ந்து குண்டு மழையை பொழிவதால் அப்பகுதியில் பல வீடுகள் சேதமடைந்தன. பலர் அண்டையில் உள்ள அரபு நாடுகளுக்கு அகதிகளாக செல்ல தொடங்கி விட்டனர்.

    காசாவில் பல லட்சம் மக்களுக்கு வீடு, மின்சாரம், எரிபொருள், குடிநீர், மருந்து பொருட்கள் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் இஸ்ரேல் துண்டித்து விட்டது. குண்டு வீச்சில் காயமடைந்தவர்களால் அங்குள்ள மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன.

    இந்நிலையில், மனிதாபிமான அடிப்படையில் பாலஸ்தீன மக்களுக்கு அவசர தேவைகள் சென்றடைய வழித்தடத்தை அமைத்து தரவும், குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு தடை விதிக்க வேண்டாம் என்றும் இஸ்ரேலுக்கு சில மனிதாபிமான அமைப்புகள் கோரிக்கை வைத்தன.

    இதற்கு இஸ்ரேல் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்து விட்டது.

    "காசாவிற்கு மனிதாபிமான உதவிகளா? எங்கள் நாட்டவர்களை ஹமாஸ் விடுவிக்காத வரை காசாவில் எந்த மின்சார சுவிட்சும் வேலை செய்யாது; எந்த குடிநீர் குழாயும் திறக்கப்பட மாட்டாது; எந்த எரிபொருள் வாகனமும் உள்ளே நுழைய முடியாது. மனிதாபிமானமாக நடந்து கொள்பவர்களிடம்தான் மனிதாபிமானத்தை காட்ட முடியும். தார்மீக கடமைகளை எங்களுக்கு எவரும் கற்று தர வேண்டாம்" என தனது அதிகாரபூர்வ எக்ஸ் கணக்கில் இஸ்ரேல் அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ் (Israel Katz) உறுதியாக கூறியுள்ளார்.

    ஹமாஸ் அமைப்பால் கடத்தி செல்லப்பட்டுள்ளதாக கூறப்படும் சுமார் 150 இஸ்ரேலியர்களின் கதி என்னவென்று இதுவரை தெரியவில்லை.

    பாலஸ்தீன பகுதியின் ஒரே மின்சார உற்பத்தி நிலையம் நேற்று எரிபொருள் இல்லாததால் முடங்கியது.

    • பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, முன்னாள் பாதுகாப்பு மந்திரி பென்னி காண்ட்ஸ் மற்றும் மந்திரிகளுடன் ஆலோசனை நடத்தி உள்ளார்.
    • ஹமாசுக்கு எதிரான போராட்டத்தை தொடர்வதில் உறுதியாக இருக்கிறோம்.

    இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்து ஹமாஸ் கமாண்டர் மஹ்மத் அல் ஜஹார் வீடியோ வெளியிட்ட நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறுகையில், ஹமாசுக்கு எதிரான போராட்டத்தை தொடர்வதில் உறுதியாக இருக்கிறோம். ஹமாஸ் அமைப்பின் ஒவ்வொரு உறுப்பினரையும் நசுக்கி அழிப்போம் என்றார்.

    இதே போல இஸ்ரேல் பாதுகாப்பு துறை மந்திரி யோவ் கேலன்ட் கூறுகையில், நாங்கள் ஹமாஸ் அமைப்பை பூமியில் இருந்து துடைத்து எறிவோம் என்றார்.

    இதற்கிடையே பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, முன்னாள் பாதுகாப்பு மந்திரி பென்னி காண்ட்ஸ் மற்றும் மந்திரிகளுடன் ஆலோசனை நடத்தி உள்ளார்.

    அப்போது கடந்த சனிக்கிழமை ஹமாஸ் அமைப்பின் தாக்குதல் மற்றும் அட்டூழியங்களை பட்டியலிட்ட அவர் ஹமாஸ் அமைப்பை வேரறுக்க தேவையான நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    மேலும் இஸ்ரேலுக்கு உலக தலைவர்களிடம் இருந்து கிடைத்த ஆதரவையும் அவர் விவரித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இஸ்ரேல் காசாவை முழுமையாக முற்றுகையிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • ஒரே ஒரு மின் நிலையம் இருந்த நிலையில் அங்கும் எரிபொருள் இல்லாததால் முடக்கியுள்ளது.

    இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினர் கடந்த சனிக்கிழமை முதல் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இஸ்ரேல் ராணுவம் பதிலடி நடவடிக்கையாக போர் விமானங்கள் மூலம் குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதல் இன்று 7-வது நாளாக நீடிக்கிறது.

    ஹமாஸ் படையினரை முழுமையாக ஒழிப்பதற்காக அவர்கள் வாழும் காசா பகுதிக்கு செல்லும் மின்சாரம், குடிநீர், உணவு உள்பட அனைத்து சேவைகளையும் இஸ்ரேல் தடுத்து நிறுத்தி உள்ளது. இந்த நிலையில் போர் விமானங்கள் மூலம் குண்டுகள் வீசுவதால் காசா மக்கள் நிலை குலைந்து போய் உள்ளனர்.

    உணவு, மருந்துக்கு திண்டாடும் நிலையில் உடமைகளை இழந்து மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறிடத் தொடங்கி உள்ளனர். இன்று காலை நிலவரப்படி சுமார் 4 லட்சம் பேர் காசாவில் இருந்து வெளியேறி இருப்பது தெரியவந்துள்ளது.

    இந்நிலையில், இஸ்ரேலின் பதில் தாக்குதலால் காசா நகரம் இருளில் மூழ்கியுள்ளது. இஸ்ரேல் காசாவை முழுமையாக முற்றுகையிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சுமார் 23 லட்சம் பேர் வசிக்கும் காசாவில் உணவு, எரிபொருளை முழுமையாக இஸ்ரேல் நிறுத்தியது. ஒரே ஒரு மின் நிலையம் இருந்த நிலையில் அங்கும் எரிபொருள் இல்லாததால் முடக்கியுள்ளது.

    இதையடுத்து, "உணவு, எரிபொருள் மற்றும் தண்ணீர் போன்ற உயிர் காக்கும் பொருட்கள் காசாவிற்குள் அனுமதிக்கப்பட வேண்டும்" என்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் வலியுறுத்தியுள்ளார்.

    தொடர்ந்து, "இதுவரை வான்வழி தாக்குதல் நடத்தி வந்த நிலையில் இனி தரைவழி தாக்குதலும் நடத்தப்படக்கூடும்" என்றும் இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    • உலகம் முழுவதும் எங்கள் செல்வாக்கை விரிவுபடுத்துவதே எங்களின் நோக்கம்.
    • முழு பிரபஞ்சமும் எங்கள் சட்டத்தின் கீழ் இருக்கும்.

    இஸ்ரேல்-காசா மோதல் நீடித்து வரும் நிலையில் ஹமாஸ் அமைப்பின் கமாண்டர் மஹ்மத் அல் ஜஹார் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

    இணையத்தில் வைரலாக பரவி வரும் அந்த வீடியோவில் அவர் பேசியிருப்பதாவது:-

    இஸ்ரேல் தான் எங்களின் ஆரம்ப இலக்கு. உலகம் முழுவதும் எங்கள் செல்வாக்கை விரிவுபடுத்துவதே எங்களின் நோக்கம். முழு பிரபஞ்சமும் எங்கள் சட்டத்தின் கீழ் இருக்கும்.

    லெபனான், சிரியாவில் உள்ள அனைத்து அரபு நாடுகளின் பாலஸ்தீனியர்கள் மற்றும் அரேபியர்களுக்கு எதிராக அநீதி, அடக்குமுறை மற்றும் கொலைகள், குற்றங்கள் இல்லாத 510 மில்லியன் சதுர கிலோ மீட்டர் கொண்ட நிலப்பரப்பு ஒரு அமைப்பின் கீழ் வரும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இதற்கிடையே இஸ்ரேலிய வீரர்கள் மற்றும் பொதுமக்களை பிணை கைதிகளாக வைத்திருக்கும் ஹமாஸ் அமைப்பினர் காசாவில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு பிணை கைதியை அனுப்பி அவர்களை தூக்கிலிட போவதாகவும் அச்சுறுத்தி உள்ளனர். ஆனால் இதற்கான எந்த அறிகுறியும் இல்லை எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    • உயிரிழந்தவர்களில் 260 பேர் குழந்தைகள் மற்றும் 230 பேர் பெண்கள் ஆவர்.
    • நகரின் பல பகுதிகள் இடிபாடுகளால் சிக்கி உள்ளது. 24 மணி நேரத்தில் 450 இலக்குகள் குண்டு வீசி தகர்க்கப்பட்டது.

    இஸ்ரேல், காசா படை மோதலில் இதுவரை 2,265 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேலில் 1,200 பேரும். காசாவில் 1,050 பேரும் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் 260 பேர் குழந்தைகள் மற்றும் 230 பேர் பெண்கள் ஆவர்.

    காசாவில் மின்சாரம், உணவு மற்றும் எரிபொருள் விநியோகம் துண்டிக்கப்பட்ட நிலையில், இஸ்ரேலிய விமானப்படை காசாவில் ஒரு பகுதியில் ஒன்றன் பின் ஒன்றாக கட்டிடங்களை குண்டுவீசி தரைமட்டமாக்கி வருகிறது.

    இதனால், நகரின் பல பகுதிகள் இடிபாடுகளால் சிக்கி உள்ளது. 24 மணி நேரத்தில் 450 இலக்குகள் குண்டு வீசி தகர்க்கப்பட்டது.

    இத்தாக்குதல்களால் காசா மக்கள் பள்ளிகளில் ஐக்கிய நாடுகள் சபையால் நடத்தப்படும் தங்குமிடங்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.

    அனைத்து சாலைகளும் அழிக்கப்பட்டுள்ளன' என ஹமாஸ் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 2,50 லட்சம் பேர் வீடுகளை விட்டு வெளியேறினர். 4 லட்சம் மக்கள் தண்ணீர் மற்றும் சுகாதார வசதிகள் கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.

    • லெபனான் மற்றும் சிரியாவை சேர்ந்த போராளிகள் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினர்.
    • இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினர் தொடர் தாக்குதலால் மேற்கு ஆசியாவில் பதற்றம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.

    இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் படையினர் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது. மறுபுறம், லெபனான் மற்றும் சிரியாவில் இருந்து ஹமாஸ் படையினருக்கு ஆதரவாக தாக்குதல்கள் தொடங்கியுள்ளன. இந்த மோதல் மேலும் பரவும் அபாயம் உள்ளதாக அச்சம் எழுந்துள்ளது.

    லெபனான் மற்றும் சிரியாவை சேர்ந்த போராளிகள் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினர்.

    லெபனான் போராளிக் குழுவான ஹெஸ் பொல்லா இஸ்ரேலிய ராணுவத் தளங்கள் மீது எதிர்ப்பு ஏவுகணைகளை வீசியது.

    இந்தத் தாக்குதல்களில் பல வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் பலர் காயமடைந்ததாகவும் ஹெஸ் பொல்லா அறிவித்தார். இந்தத் தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் உறுதி செய்துள்ளது.

    இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினர் தொடர் தாக்குதலால் மேற்கு ஆசியாவில் பதற்றம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. நாடுகளுக்கிடையே பிளவு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    மோதலில் தலையிட வேண்டாம் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்ற நாடுகளையும் கேட்டுக் கொண்டுள்ளார்.

    • உணவு, மருந்துக்கு திண்டாடும் நிலையில் உடமைகளை இழந்து மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறிடத் தொடங்கி உள்ளனர்.
    • தரைவழி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டால் இரு தரப்பிலும் சேதம் அதிகமாகும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

    ஜெருசலேம்:

    இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினர் கடந்த சனிக்கிழமை முதல் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இஸ்ரேல் ராணுவம் பதிலடி நடவடிக்கையாக போர் விமானங்கள் மூலம் குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தி வருகிறது.

    இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதல் இன்று (வியாழக்கிழமை) 7-வது நாளாக நீடித்தது.

    ஹமாஸ் படையினரை முழுமையாக ஒழிப்பதற்காக அவர்கள் வாழும் காசா பகுதிக்கு செல்லும் மின்சாரம், குடிநீர், உணவு உள்பட அனைத்து சேவைகளையும் இஸ்ரேல் தடுத்து நிறுத்தி உள்ளது. இந்த நிலையில் போர் விமானங்கள் மூலம் குண்டுகள் வீசுவதால் காசா மக்கள் நிலை குலைந்து போய் உள்ளனர்.

    உணவு, மருந்துக்கு திண்டாடும் நிலையில் உடமைகளை இழந்து மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறிடத் தொடங்கி உள்ளனர். இன்று காலை நிலவரப்படி சுமார் 4 லட்சம் பேர் காசாவில் இருந்து வெளியேறி இருப்பது தெரியவந்து உள்ளது.

    இதற்கிடையே லெபனான் மற்றும் சிரியாவில் இருந்தும் தாக்குதல் தொடங்கி உள்ளது. மும்முனை தாக்குதல் நடந்தாலும் அவை அனைத்தையும் சமாளித்துக் கொண்டு இஸ்ரேல் நாடு காசாவில் குண்டு வீச்சுக்களை தீவிரப்படுத்தி உள்ளது. இதனால் நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் நொறுங்கி சிதைந்து உள்ளது.

    இரு தரப்பிலும் பலியானோர் எண்ணிக்கை இன்று காலை நிலவரப்படி 4 ஆயிரத்தை கடந்து உள்ளது. 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். காசா எல்லையில் உள்ள மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன.

    இந்த நிலையில் இஸ்ரேலின் தெற்கு பகுதியில் தங்கள் எல்லையில் ஹமாஸ் படையினர் ஊடுருவிய பகுதிகளை முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருப்பதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. அங்கு தற்போது பீரங்கிகளையும் ராணுவ வீரர்களையும் இஸ்ரேல் குவித்து வருகிறது.

    விரைவில் அங்கிருந்து தரை வழி தாக்குதலையும் இஸ்ரேல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி தரை வழி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டால் இரு தரப்பிலும் சேதம் அதிகமாகும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

    போர் விரிவடைந்துக் கொண்டே செல்வதால் ஹமாஸ் படையினர் ஆயுத தாக்குதலை கைவிடாமல் மேலும் தீவிரப்படுத்தி உள்ளனர். இதனால் காசா நகரம் மீது இஸ்ரேல் போர் விமானங்கள் தொடர்ந்து குண்டு வீசி வருகின்றன.

    • திடீரென ஹமாஸ் நடத்திய இந்த பயங்கரவாத தாக்குதல் உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது
    • எந்தவித குழப்பங்களுக்கும் இடம் தராமல் பயங்கரவாதத்தை எதிர்க்க வேண்டும் என்றார் ஹாரிஸ்

    கடந்த சனிக்கிழமையன்று பாலஸ்தீன பயங்கரவாத அமைப்பான ஹமாஸ், இஸ்ரேல் மீது ஒரு எதிர்பாராத தாக்குதலை நடத்தியது.

    வான்வழியாக 5000 ராக்கெட்டுகளை ஒரே நேரத்தில் வீசியும், தரை வழியாகவும், நீர் வழியாகவும் தாக்குதல் நடத்தி அந்நாட்டிற்குள்ளே ஹமாஸ் ஊடுருவியது. இத்தாக்குதலில் பல இஸ்ரேலியர்கள் பலியானார்கள்; பல இஸ்ரேலியர்கள் ஹமாஸ் பயங்கரவாதிகளால் பிணையக்கைதிகளாக பிடித்து செல்லப்பட்டனர். பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என அனைவர் மீதும் நடந்த இந்த தாக்குதல் உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

    இதில் ஆத்திரமடைந்த இஸ்ரேல், ஹமாஸ் பயங்கரவாத அமைப்பை முற்றிலும் ஒழிக்க போவதாக கூறி, பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் அவர்களை தேடித்தேடி வேட்டையாடி வருகிறது.

    இப்போர் 6-வது நாளாக இன்றும் தொடர்கிறது.

    இந்நிலையில், அமெரிக்கா உட்பட பல உலக நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

    இது குறித்து பேசிய அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் தெரிவித்ததாவது:

    எந்தவித குழப்பங்களுக்கும் இடம் தராமல் பயங்கரவாத செயல்களை கண்டிக்க வேண்டும். இது போன்ற பயங்கரவாத செயல்களை எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாது. இஸ்ரேலில் நடந்த தாக்குதல்களால் நான் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளேன். இஸ்ரேலை ஆதரித்துள்ள அமெரிக்காவின் நிலைப்பாடு மிகவும் உறுதியானது. தன்னை காத்து கொள்ள இஸ்ரேலுக்கு தேவைப்படும் அனைத்து உதவிகளையும் வழங்க நாங்கள் உறுதியுடன் உள்ளோம். அங்குள்ள அமெரிக்கர்களின் பாதுகாப்பே இப்போது மிகவும் முக்கியம். நானும் அதிபர் ஜோ பைடனும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவுடன் தொடர்பில் உள்ளோம். இஸ்ரேலிய மக்களுக்கு நாங்கள் உறுதுணையாக உள்ளோம் என்பதை தெரிவித்தோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஹமாஸ் தாக்குதலில் இருபதிற்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • டிராவிஸிற்கு சுமார் ரூ.25 லட்சம் ($30,000) பரிசு தொகையாக கிடைத்தது
    • 687 'பை' உணவு வகைகளை தயாரிக்கலாம் என்கின்றனர் சமையல் நிபுணர்கள்

    அமெரிக்காவில் கலிபோர்னியா மாநிலத்தில் ஹாஃப் மூன் பே (Half Moon Bay) பகுதியில் விவசாயிகளுக்கு ஒரு வித்தியாசமான போட்டி நடைபெற்றது. தங்கள் விவசாய நிலங்களில் மிக பெரிய பூசணிக்காய் வளர்ப்பதில் நடைபெற்ற அந்த போட்டியில் பல விவசாயிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். நீண்ட காலமாக நடைபெற்று வரும் இப்போட்டியில் இது 50-வது போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

    இதில் மின்னசோட்டா (Minnesota) மாநிலத்தை சேர்ந்த 43 வயதான தோட்டக்கலை வல்லுனரும், பயிற்சியாளருமான டிராவிஸ் கிரெய்கர் (Travis Greiger) என்பவரும் கலந்து கொண்டார்.

    இவர் வளர்த்த பூசணிக்காய் மிக பெரியதாக தேர்ந்தெடுக்கப்பட்டு, இவர் முதல் பரிசை வென்றவராக அறிவிக்கப்பட்டார். டிராவிஸிற்கு சுமார் ரூ.25 லட்சம் ($30,000) பரிசு தொகையாக கிடைத்தது.

    அவர் தோட்டத்தில் விளைந்த 1,247 கிலோகிராம் எடையுள்ள பூசணிக்காயை பலரும் கண்டு வியந்தனர். டிராவிஸ் 30 வருடங்களுக்கும் மேலாக பூசணிக்காய் வளர்ப்பு உள்ளிட்ட விவசாயத்தில் பெரும் ஆர்வலராக செயல்பட்டு வருபவர்.

    டிராவிஸ் வளர்த்த பூசணிக்காயை கொண்டு அமெரிக்கர்கள் விரும்பி உண்ணும் 'பை' (pie) எனும் உணவு வகைகளை சுமார் 687 எண்ணிக்கைகள் வரை தயாரிக்க முடியும் என்கின்றனர் சமையல் நிபுணர்கள்.

    இப்போட்டியில் இரண்டாம் இடத்தை பிடித்தவர் வளர்த்த பூசணிக்காய் டிராவிஸ் வளர்த்ததை விட 113 கிலோகிராம்கள் எடை குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. 

    • இருதரப்பிலும் பலி எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
    • ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் இதுவரை 22 அமெரிக்கர்கள் உயிரிழந்துள்ளனர்.

    துபாய்:

    இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் திடீரென தாக்குதல் நடத்தினர். அத்துடன் பலர் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர். இதற்கு பதிலடியாக இஸ்ரேல் காசா மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் இரு பக்கமும் பலத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது.

    நேற்றைய 5-வது நாள் தாக்குதலுக்குப் பிறகு இருதரப்பிலும் பலி எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

    இஸ்ரேலுக்கு துணை நிற்போம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் இதுவரை 22 அமெரிக்கர்கள் உயிரிழந்துள்ளனர் என அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தெரிவித்தார்.

    அமெரிக்கர்கள் இஸ்ரேல் செல்வதற்கான பயணத்தை மறு ஆய்வு செய்யும்படியும், காசா நகருக்குச் செல்வதை தவிர்க்கும் படியும் அந்நாட்டு பாதுகாப்புத்துறை அறிவுறுத்தியுள்ளது.

    இஸ்ரேல்- ஹமாஸ் இடையே தொடர்ந்து 6வது நாளாக போர் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், இஸ்ரேல் போர் குறித்து சவுதி இளவரசர் முகமது பின் சல்மானும், ஈரான் ஜனாதிபதி இப்ராகிம் ரெய்சி ஆகியோர் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்தினர். பாலஸ்தீனத்திற்கு எதிரான போர்க்குற்றங்களை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தினர்.

    • இஸ்ரேலுக்கு துணை நிற்போம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
    • ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் இதுவரை 22 அமெரிக்கர்கள் உயிரிழந்தனர்

    வாஷிங்டன்:

    இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் திடீரென தாக்குதல் நடத்தினர். அத்துடன் பலர் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர். இதற்கு பதிலடியாக இஸ்ரேல் காசா மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் இரு பக்கமும் பலத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது.

    நேற்றைய 5-வது நாள் தாக்குதலுக்குப் பிறகு இருதரப்பிலும் பலி எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

    இதற்கிடையே, இஸ்ரேலுக்கு துணை நிற்போம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் இதுவரை 22 அமெரிக்கர்கள் உயிரிழந்துள்ளனர் என அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் இதுவரை 22 அமெரிக்கர்கள் உயிரிழந்துள்ளனர் மற்றும் 17 பேர் மாயமாகினர். வரும் நாட்களில் இந்த எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்பதை நாம் அறிவோம். அமெரிக்கர்களில் பலரை ஹமாஸ் அமைப்பினர் பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்துள்ளனர் என தெரிவித்தார்.

    மேலும், அமெரிக்கர்கள் இஸ்ரேல் செல்வதற்கான பயணத்தை மறு மதிப்பீடு செய்யும்படியும், காசா நகருக்குச் செல்வதை தவிர்க்கும் படியும் அந்நாட்டு பாதுகாப்புத்துறை அறிவுறுத்தல் வெளியிட்டுள்ளது.

    • பல பகுதிகள் மற்றும் சாலைகளின் பாதுகாப்பை இஸ்ரேல் ராணுவம் ஏற்றுக்கொண்டுள்ளது.
    • இஸ்ரேலில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

    இஸ்ரேல் - ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு இடையிலாக நடந்து வரும் போர் 5-வது நாளை எட்டியுள்ளது. இந்நிலையில் காசா மீதான வான்வழித் தாக்குதலுடன் தரைவழி தாக்குதலையும் அதிகரிக்க இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது. இஸ்ரேல் ராணுவம் அதிகமான ராணுவ துருப்புகளை தெற்கு இஸ்ரேல் பகுதியில் நிலைநிறுத்தியுள்ளது. கனரக ராணுவத் தளவாடங்களுடன் ரிசர்வ் படைகளும் அழைக்கப்பட்டுள்ளன.

    ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதலைத் தொடங்கியதில் இருந்து பல கொலைகள் நிகழ்ந்த காசா எல்லைப்பகுதிகளின் கட்டுப்பாட்டை மீட்டுவிட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. அங்கு பல பகுதிகள் மற்றும் சாலைகளின் பாதுகாப்பை இஸ்ரேல் ராணுவம் ஏற்றுக்கொண்டுள்ளது. இதேபோல, அமெரிக்காவில் இருந்து அதிநவீன ஆயுதங்களுடன் வந்த முதல் விமானம் இஸ்ரேலின் நேவடிம் விமானநிலையத்தில் இறங்கியுள்ளதை அந்நாட்டு ராணுவம் உறுதி செய்தது. இந்த ஆயுதங்கள் ஒருகுறிப்பிடத்தகுந்த தாக்குதல் மற்றும் கூடுதல் பலத்தினை உருவாக்க பயன்படுத்தப்படும் என்றும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

    இதனிடையே இஸ்ரேல் குண்டு வீச்சில் ஐ.நா. ஊழியர்கள் 9 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்த சூழலில் இஸ்ரேலில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு, எதிர்க்கட்சித்தலைவர் பென்னி இடையேயான பேச்சுவார்த்தைக்குப்பின் இந்த அறிவிப்பு வெளியானது. அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டதைத்தொடர்ந்து போர் மேலாண்மை அமைச்சரவை அமைக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் லெபனானில் இருந்து இஸ்ரேலிய வான்வெளிக்குள் ஊடுருவியதாக சந்தேகிக்கப்படும் தகவல்கள் கிடைத்துள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

    இதனைத்தொடர்ந்து வடக்கு நகரமான மாலோட்- தர்ஷிகாவில் வசிக்கும் பொதுமக்கள் வீட்டிலேயே இருக்குமாறும், கதவுகளைப் பூட்டிக்கொள்ளுமாறும், ஊடுருவல் சாத்தியம் குறித்து எச்சரிக்கும்படியும் இஸ்ரேலிய முகப்புக் கட்டளை தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    வடக்கு இஸ்ரேலில் சைரன்கள் தொடர்ந்து ஒலி எழுப்பி வருகின்றன, உயிரிழப்புகள் பற்றிய உறுதியான அறிக்கைகள் எதுவும் வெளியாகவில்லை.

    ×