என் மலர்tooltip icon

    டென்னிஸ்

    • ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸ் தொடர் நெதர்லாந்தில் நடக்கிறது.
    • இதில் பிரான்ஸ் வீரரான யூகோ ஹம்பர்ட் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    ஆம்ஸ்டர்டாம்:

    ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸ் தொடர் நெதர்லாந்தில் நடக்கிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.

    இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார், சுவிட்சர்லாந்தின் வாவ்ரிங்கா உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய அலெக்ஸ் டி மினார் 6-4, 6-2 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் பிரான்ஸ் வீரர் யூகோ ஹம்பர்ட் 6-4, 6-3 என்ற செட் கணக்கில் நெதர்லாந்தின் கெய் டென் ஓடனை வீழ்த்தி

    காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    • கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடக்கிறது.
    • கஜகஜஸ்தான் வீராங்கனை ரிபாகினா காலிறுதியில் தோல்வி அடைந்தார்.

    தோஹா:

    கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

    இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரிபாகினா, கனடாவின் விக்டோரியா எம்போகோ உடன் மோதினார்.

    இதில் முதல் செட்டை7-5 என எம்போகோ வென்றார். பதிலடியாக 2வது செட்டை ரிபாகினா 6-4 என கைப்பற்றினார்.

    வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை எம்போகோ 6-4 என வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    இதன்மூலம் உலகின் நம்பர் 2 வீராங்கனையான எலினா ரிபாகினா தொடரில் இருந்து வெளியேறினார்.

    • கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடக்கிறது.
    • போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் காலிறுதி சுற்றில் தோல்வி அடைந்தார்.

    தோஹா:

    கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

    இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் போலந்தின் இகா ஸ்வியாடெக், கிரீஸ் வீராங்கனை மரியா சக்காரி உடன் மோதினார்.

    சிறப்பாக ஆடிய ஸ்வியாடெக் முதல் செட்டை 6-2 என வென்றார். இதில் சுதாரித்துக் கொண்ட மரியா சக்காரி அடுத்த இரு செட்களை 6-4, 7-5 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    • ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸ் தொடர் நெதர்லாந்தில் நடக்கிறது.
    • இதில் முன்னணி வீரரான கிரீஸ் நாட்டைச் சேர்ந்த சிட்சிபாஸ் தோல்வி அடைந்தார்.

    ஆம்ஸ்டர்டாம்:

    ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸ் தொடர் நெதர்லாந்தில் நடக்கிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.

    இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் கிரீஸ் நாட்டைச் சேர்ந்த ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ், நெதர்லாந்தின் வான் டி ஜன்செல்ப் உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய ஜன்செல்ப் 6-4, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம் முன்னணி வீரரான சிட்சிபாஸ் 2வது சுற்றுடன் வெளியேறினார்.

    • ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸ் தொடர் நெதர்லாந்தில் நடக்கிறது.
    • முதல் சுற்றில் யூகி பாம்ப்ரி ஜோடி அதிர்ச்சி தோல்வி அடைந்தது.

    ஆம்ஸ்டர்டாம்:

    ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸ் தொடர் நெதர்லாந்தில் நடக்கிறது. இதில் முன்னணி வீரர்கள் பங்கேற்று உள்ளனர்.

    இந்நிலையில், ஆண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் நேரடியாக களமிறங்கிய இந்தியாவின் யூகி பாம்ப்ரி-ஸ்வீடனின் ஆண்ட்ரே கோரன்சன் ஜோடி, அமெரிக்காவின் வாசில் கிர்கோவ்-நெதர்லாந்தின் பர்ட் ஸ்டீவன்ஸ் ஜோடி உடன் மோதியது.

    இதில் யூகி பாம்ப்ரி ஜோடி 4-6, 3-6 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறியது.

    • கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடக்கிறது.
    • போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் 2வது சுற்றில் வென்றார்.

    தோஹா:

    கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

    இந்நிலையில், பெண்கள் பிரிவு காலிறுதி சுற்றுக்கு இகா ஸ்வியாடெக், ரிபாகினா ஆகியோர் முன்னேறினர்.

    இதில் போலந்தின் இகா ஸ்வியாடெக் 5-7, 6-1, 6-1 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் டாரியா கசட்கினாவை வீழ்த்தினார்.

    மற்றொரு போட்டியில் அதிரடியாக ஆடிய கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரிபாகினா, சீனாவின் குயின்வென் ஜெங்குவை 2-6, 6-2,

    7-5 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    • ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸ் தொடர் நெதர்லாந்தில் நடக்கிறது.
    • இதில் முன்னணி வீரரான கிரீஸ் நாட்டைச் சேர்ந்த சிட்சிபாஸ் வெற்றி பெற்றார்.

    ஆம்ஸ்டர்டாம்:

    ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸ் தொடர் நெதர்லாந்தில் நடக்கிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.

    இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் கிரீஸ் நாட்டைச் சேர்ந்த ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ், பிரான்சின் ஆர்தர் ரிண்டோனெக் உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய சிட்சிபாஸ் 7-5, 6-3 என்ற செட் கணக்கில் வென்று 2வது சுற்றுக்கு முன்னேறினார்.

    • பிரிட்டனைச் சேர்ந்த ஜெய் கிளார்க் முதல் சுற்றில் 4-6, 4-6 எனத் தோல்வியடைந்தார்.
    • இந்திய வீரர்கள் முகுந்த் சசிகுமார், ஆர்யன் லட்சுமணன் ஆகியோர் தோல்வியடைந்தனர்.

    ஏ.டி.பி. சேலஞ்சர் ஆண்கள் சர்வதேச டென்னிஸ் சாம்பியன்ஷிப்பான சென்னை ஓபன் தொடர் சென்னையில் நடைபெற்று வருகிறது.

    இன்று நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் இந்தத் தொடருக்கான முதல் நிலை வீரரான பிரிட்டனைச் சேர்ந்த ஜெய் கிளார்க் முதல் சுற்றில் கீரிஸ் நாட்டைச் சேர்ந்த ஐயோனிஸ் சிலாஸை எதிர்கொண்டார். இதில் ஜெய் கிளார்க் 4-6, 4-6 என நேர் செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினார்.

    சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் 183-வது இடத்தில் இருக்கும் கிளார்க் முதல் செட்டில் 3-0 என முன்னிலையில் இருந்தார். அதன்பின் 4-6 எனத் தோல்வியைத் தழுவினார்.

    இந்திய வீரர் ஆர்யன் லட்சுமணன் போலந்து வீரர் மேக்ஸ் காஸ்னிகவ்ஸ்கியிடம் 5-7, 2-6 எனத் தோல்வியடைந்தார்.

    2-வது சுற்றில் இந்தியாவைச் சேர்ந்த முகுந்த் சசிகுமார் கஜகஸ்தான் வீரர் டெனிஸ் யெவ்செயெவ்-யிடம் 6-3, 2-6, 3-6 எனத் தோல்வியடைந்தார்.

    • அரையிறுதி போட்டிகள் வரும் 15-ம் தேதி நடைபெற உள்ளன.
    • இறுதிப்போட்டி பிப்ரவரி 24-ம் தேதி நடைபெறுகிறது.

    புதுடெல்லி:

    ரஞ்சி கோப்பை தொடருக்கான போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்தத் தொடரின் லீக் போட்டிகள் முடிந்தன.

    இதையடுத்து, ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான காலிறுதி ஆட்டங்கள் நேற்றுடன் முடிந்தன.

    ஏ பிரிவில் இருந்து ஜார்க்கண்ட், ஆந்திரா

    பி பிரிவில் இருந்து கர்நாடகா, மத்திய பிரதேசம்

    சி பிரிவில் இருந்து பெங்கால், உத்தரகாண்ட்

    டி பிரிவில் இருந்து மும்பை, ஜம்மு காஷ்மீர்

    முதல் காலிறுதியில் உத்தரகாண்டும், 2வது காலிறுதியில் ஜம்மு காஷ்மீரும், 3வது காலிறுதியில் பெங்காலும், 4வது காலிறுதியில் கர்நாடகாவும் வென்றன.

    இந்நிலையில், காலிறுதி போட்டிகள் முடிந்து அரையிறுதி போட்டி பிப்ரவரி 15ம் தேதி தொடங்குகிறது.

    முதல் அரையிறுதியில் உத்தரகாண்டும், கர்நாடகாவும் மோதுகின்றன. 2வது அரையிறுதியில் ஜம்மு காஷ்மீரும், பெங்காலும் மோதுகின்றன.

    பிப்ரவரி 24-ம் தேதி இறுதிப்போட்டி நடைபெறுகிறது.

    • கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடக்கிறது.
    • போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் முதல் சுற்றில் வென்றார்.

    தோஹா:

    கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடக்கிறது. இதில் முன்னணி வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.

    இந்நிலையில், பெண்கள் பிரிவு 2வது சுற்றுக்கு இகா ஸ்வியாடெக், ரிபாகினா ஆகியோர் தேர்வாகினார்.

    இதில் போலந்தின் இகா ஸ்வியாடெக் இந்தோனேசியாவின் ஜேனிஸ் டென்னை 6-0, 6-1 என்ற செட் கணக்கில் எளிதில் வீழ்த்தினார்.

    மற்றொரு போட்டியில் அதிரடியாக ஆடிய கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரிபாகினா, சீனாவின் வாங் ஜின் யுவை 6-2, 6-4 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    • ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸ் தொடர் நெதர்லாந்தில் நடக்கிறது.
    • இதில் முன்னணி வீரரான ரஷியாவின் மெத்வதேவ் தோல்வி அடைந்தார்.

    ஆம்ஸ்டர்டாம்:

    ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸ் தொடர் நெதர்லாந்தில் நடக்கிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.

    இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் தரவரிசையில் நம்பர் 4 இடத்தில் உள்ளவரும், ரஷியாவைச் சேர்ந்தவருமான டேனில் மெத்வதேவ், பிரான்சின் யூகோ ஹம்பர்ட் உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய யூகோ ஹம்பர்ட் 7-6 (7-4), 3-6, 6-3 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம் மெத்வதேவ் முதல் சுற்றிலேயே தொடரில் இருந்து வெளியேறினார்.

    • கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடக்கிறது.
    • இரண்டாவது சுற்றில் அமெரிக்காவின் கோகோ காப் தோல்வி அடைந்தார்.

    தோஹா:

    கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடக்கிறது. இதில் முன்னணி வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.

    இந்நிலையில், பெண்கள் பிரிவு 2வது சுற்றில் நேரடியாக களமிறங்கிய நம்பர் 4 வீராங்கனையும், அமெரிக்காவைச் சேர்ந்த கோகோ காப், இத்தாலி வீராங்கனை எலிசபெட்டா உடன் மோதினார்.

    இதில் அதிரடியாக ஆடிய இத்தாலி வீராங்கனை எலிசாபெட்டா 6-4, 6-2 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    இதன்மூலம் கத்தார் ஓபன் தொடரில் இருந்து முன்னணி வீராங்கனையான கோகோ காப் வெளியேறினார்.

    ×