என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ஐபிஎல் தொடரில் 15 கோடி ரூபாய்க்கு மேல் ஏலம் எடுக்கப்பட்ட பேட் கம்மின்ஸ் விமர்சனத்திற்கு உள்ளாகிய நிலையில், கடைசி போட்டியில் அசத்தினார்.
    சர்வதேச கிரிக்கெட் அரங்கில் தலைசிறந்த அதிவேக பந்து வீச்சாளர்களில் ஒருவராக பேட் கம்மின்ஸ் திகழ்கிறார். ஆஸ்திரேலியாவை சேர்ந்த இவரை ஏலம் எடுக்க ஐபிஎல் அணிகள் கடும் போட்டியிட்டன. இறுதியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 15.5 கோடி ரூபாய் கொடுத்து ஏலம் எடுத்தது.

    ஐ.பி.எல். தொடரில் மொத்தம் 14 லீக் ஆட்டங்கள். ஒரு போட்டியில் 4 ஓவர்கள் வீசலாம். அப்படி என்றால் பேட் கம்மின்ஸ் 56 ஓவர்களில் 336 பந்துகள் வீச முடியும். ஒரு பந்துக்கு சுமார் 4.61 லட்சம் ரூபாய் சம்பளமாக பெறுவார்.

    ஐபிஎல் தொடக்கத்தில் அவரது பந்து வீச்சு சரியாக எடுபடவில்லை. ரன்கள் வாரிக்கொடுத்தார். இதனால் கடும் விமர்சனத்திற்கு உள்ளானார். முதல் 10 போட்டிகளில் மிகவும் சொற்ப விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தினார்.

    கடைசி நான்கு போட்டிகளில் 9 விக்கெட் வீழ்த்தியுள்ளார். குறிப்பாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான வாழ்வா? சாவா? போட்டியில் நான்கு விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

    இதனால் கொல்கத்தா ரசிகர்கள் கொடுத்த துட்டுக்கு கரெக்ட்டாக வேலை பார்த்துள்ளதாக கம்மின்ஸை பாராட்டியுள்ளனர்.
    சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை மும்பை இந்தியன்ஸ் அணி வீழ்த்தினால் ஆர்சிபி, டெல்லி, கொல்கத்தா ஆகியவற்றில் இரண்டு அணிகள் எளிதாக பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேறும்.
    ஐ.பி.எல். தொடரின் ஒவ்வொரு சீசனிலும் பெரும்பாலான அணிகள் முன்னதாகவே பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேறிவிடும். இதனால் கடைசி இரண்டு அல்லது மூன்று போட்டிகள் வெற்றி அல்லது தோல்வி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்பதால் விளையாடி ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் விளையாடப்படும்.

    ஆனால் இந்த சீசனில் அப்படி இல்லை. இரண்டு போட்டிகள் மட்டுமே மீதமுள்ள நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி மட்டுமே 9 வெற்றிகளுடன் பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

    ஆர்சிபி, டெல்லி கேப்பிட்டல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 7 வெற்றிகளுடனும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் 6 வெற்றிகளுடன் பிளேஆஃப்ஸ் சுற்றுக்காக காத்துக் கொண்டிருக்கிறது.

    இன்று ஆர்சிபி - டெல்லி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் வெற்றிபெறும் அணி பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேறும்.

    தோல்வியுறும் அணியும், கொல்கத்தாவும் 14 புள்ளிகள் பெற்றிருக்கும். நாளை மும்பை இந்தியன்ஸ் அணியுடன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி விளையாட இருக்கிறது. இதில் மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி அல்லது ஆர்சிபி பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேறும்.

    ஒருவேளை ஐதராபாத் அணி வெற்றி பெற்றால் கொல்கத்தா அணிக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும். ஒருவேளை கொல்கத்தாவுடன் குறைவான ரன் இருந்தால் இன்றைய போட்டியில் தோல்வியடையும் அணி வெளியேறும்.

    டெல்லி கடந்த நான்கு போட்டிகளில் தோல்வியை சந்ததித்துள்ளது. ஆர்சிபி 3 தோல்வியை சந்தித்துள்ளது. சன்ரைசர்ஸ் ஐதராபாத் நான்கில் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
    ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேற முடியாத நிலையிலும், அந்த அணியின் ஆர்சர் தொடர் முழுவதும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
    ஐ.பி.எல். தொடரில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அணிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் ஒன்று. முதல் இரண்டு போட்டிகளில் ஸ்மித், சஞ்சு சாம்சன் அபாரமாக விளையாட, ஜாஃப்ரா ஆர்சர் சிறப்பாக பந்து வீச வெற்றி பெற்றது.

    இதனால் ராஜஸ்தான் அணி மிகவும் போட்டியான அணியாக இருக்கும் என கருதப்பட்டது, ஆனால் அதன்பிறகு மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அந்த அணியின் ஜாஃப்ரா ஆர்சர் மட்டும் சிறப்பாக பந்து வீசிய நிலையில் அவருக்கு துணையாக பேட்ஸ்மேன்களும் இருக்கவில்லை. பந்து வீச்சாளர்களும் இருக்கவில்லை.

    ஜாஃப்ரா ஆர்சர்

    இதனால் 6 வெற்றிகளுடன் பிளேஆஃப்ஸ் சுற்றில் இருந்து வெளியேறியுள்ளது. 14 போட்டிகளிலும் விளையாடிய ஆர்சர் 20 விக்கெட் வீழ்த்தி முதல் 6 பேர் பட்டியலில் உள்ளார். அவரது சிறப்பு அம்சமே ஒருவருக்கு சராசரியாக 6.55 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்ததாகும். 55.4 ஓவர்கள் வீசி 365 ரன்கள் விட்டுக்கொடுத்துள்ளார். அதிகபசட்சமாக 19 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் சாய்த்துள்ளார்.
    விராட்கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் ஸ்ரேயாஷ் அய்யர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றனர்.

    அபுதாபி:

    13-வது ஐ.பி.எல். 20 ஓவர் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்று வருகிறது.

    இந்தப் போட்டியில் இதுவரை 54 ஆட்டங்கள் முடிந்துள்ளன. இன்னும் 2 லீக் போட்டிகளே எஞ்சியுள்ளன. நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி மட்டுமே பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் அணியாக வாய்ப்பை இழந்தது. நேற்றைய ஆட்டங்களில் தோல்வியைத் தழுவியதன் மூலம் கிங்ஸ் லெவன் பஞ்சாப், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டன.

    பிளேஆப் சுற்றின் 3 இடங்களுக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், டெல்லி கேப்பிடல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் ஆகிய 4 அணிகள் போட்டியில் உள்ளன.

    பிளேஆப் சுற்றுக்கு 2-வதாக நுழையும் அணி எது என்பது இன்று தெரியும்.

    அபுதாபியில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் விராட்கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், ஸ்ரேயாஷ் அய்யர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன.

    இதில் வெற்றி பெறும் அணி புள்ளிகள் பட்டியலில் 2-வது இடத்தை பிடித்து, பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெறும். இரு அணிகளும் 7 வெற்றி, 6 தோல்வியுடன் 14 புள்ளிகள் பெற்றுள்ளன. தோல்வி அடையும் அணி மும்பை-ஐதராபாத் இடையே நாளை நடைபெறும் ஆட்டத்தின் முடிவை பொறுத்து தகுதி பெறும். இரு அணிகளும் கொல்கத்தாவை விட ரன் ரேட்டில் நல்ல நிலையில் இருப்பதால், தோற்றாலும் முன்னேறுவதற்கான நிலையில் உள்ளது.

    இந்த போட்டி தொடரின் லீக் ஆட்டம் நாளையுடன் முடிகிறது. நாளை நடைபெறும் கடைசி லீக் ஆட்டத்தில் மும்பை-ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.

    இந்த ஆட்டத்தில் ஐதராபாத் தோற்றால் வெளியேறும். கொல்கத்தா, பெங்களூர், டெல்லி அணிகள் தகுதி பெறும். ஐதராபாத் வெற்றி பெற்றால் அந்த அணி, இன்றைய ஆட்டத்தில் தோற்கும் அணி, கொல்கத்தா ஆகியவை 14 புள்ளியுடன் சமநிலையில் இருக்கும்.

    நிகர ரன் ரேட் அடிப்படையில் 2 அணிகள் பிளேஆப் சுற்றுக்கு முன்னேறும். பிளேஆப் சுற்று 5-ந் தேதி தொடங்குகிறது.

    தொடர்ந்து 3 அரை சதம் அடித்த ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம் எஸ் டோனி பாராட்டை தெரிவித்தார்.

    அபுதாபி:

    ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசி லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

    இதுவரை நடந்த 12 ஐ.பி.எல். போட்டியிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளேஆப் சுற்றுக்கு முன்னேறி இருந்தது. இந்த ஐ.பி.எல். தொடரில் தான் முதல்முறையாக அடுத்த சுற்றுக்கு தகுதி பெறவில்லை.

    சென்னை அணி 6 வெற்றி, 8 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று 7-வது இடத்தை பிடித்தது. சென்னையை போலவே பஞ்சாப்பும், ராஜஸ்தானும் 12 புள்ளிகள் பெற்றன. ரன் ரேட் அடிப்படையில் பஞ்சாப் 6-வது இடத்தையும், ராஜஸ்தான் கடைசி இடத்தையும் பிடித்தன.

    பஞ்சாப்புக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் சென்னை அணியின் தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் அரை சதம் அடித்தார். அவர் தொடர்ச்சியாக 3-வது அரை சதத்தை அடித்து முத்திரை பதித்தார்.

    இதையொட்டி அவரை கேப்டன் டோனி பாராட்டினார். இது தொடர்பாக டோனி கூறியதாவது:-

    ருதுராஜ் கெய்க்வாட் எப்போதுமே நன்றாக ஆடக் கூடியவர். அவரை கொரோனா 20 நாட்கள் முடக்கியது. இதனால் அவரை நாங்கள் கணிக்க நேரம் இல்லாமல் போய் விட்டது.

    அதனால்தான் டுபெலிசிஸ்-வாட்சனை தொடக்க வீரர்களாக அனுப்பினோம். அது சரியாக அமையவில்லை. கடைசியில் ருதுராஜ் தொடக்க வரிசையில் அபாரமாக ஆடினார்.

    இந்த ஐ.பி.எல். தொடர் மிகவும் கடினமானது. நிறைய தவறுகளை செய்தோம். கடைசி ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்ததில் பெருமை அடைகிறேன்.

    அடுத்த தொடருக்கான ஏலத்தை கிரிக்கெட் வாரியம் எப்படி தீர்மானிக்கிறது என்பதை பொறுத்து அடுத்த அணி அமையும். வீரர்களை மாற்றி அடுத்த 10 ஆண்டுகளுக்கான அணியை கட்டமைக்க வேண்டும்.

    ஐ.பி.எல். தொடங்கிய போது ஒரு அணியை உருவாக்கினோம். 10 ஆண்டுகள் சிறப்பாக சேவையாற்றினர். இனி அடுத்த தலைமுறையிடம் ஒப்படைக்க வேண்டியது தான்.

    அடுத்த தொடரில் மீண்டும் வருவோம். ஜெர்சி கையெழுத்தினால் நான் ஓய்வு பெறுவதாக நினைத்துவிட்டனர்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக 60 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம் கொல்கத்தா அணி வீரர்களுக்கு அந்த அணியின் கேப்டன் மார்கன் புகழாரம் சூட்டியுள்ளார்.

    துபாய்:

    ஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி கடைசி ஆட்டத்தில் 60 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்சை வீழ்த்தி வெளியேற்றியது. இந்த வெற்றி மூலம் அந்த அணி பிளேஆப் சுற்று வாய்ப்பில் நீடிக்கிறது. மும்பை-ஐதராபாத் அணிகள் மோதும் ஆட்டத்தின் முடிவை பொறுத்து அந்த அணியின் தலைவிதி இருக்கிறது.

    இந்த வெற்றியால் கொல்கத்தா வீரர்களை கேப்டன் மார்கன் பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    191 ரன் என்பது நல்ல ஸ்கோர் ஆகும். பேட்ஸ் மேன்கள், பந்து வீச்சாளர்கள் என அனைவரும் சிறப்பாக செயல்பட்டனர். இந்த ஆட்டத்தில் இதற்கு மேல் சிறப்பாக விளையாடி இருக்க வேண்டும் என்று கருதவில்லை. இனி என்ன நடப்பது என்பது கடவுள் கையில்தான் இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இத்தாலியில் நடந்த பார்முலா1 கார் பந்தயத்தில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டன் முதலிடம் பிடித்தார்.
    இமோலா:

    இந்த ஆண்டுக்கான பார்முலா1 கார் பந்தயம் 17 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 13-வது சுற்றான எமிலியா ரோமக்னா கிராண்ட்பிரி பந்தயம் இத்தாலியின் இமோலா நகரில் நேற்று நடந்தது. 309.049 கிலோமீட்டர் பந்தய தூரத்தை நோக்கி வழக்கம் போல் 10 அணிகளைச் சேர்ந்த 20 வீரர்கள் காரில் சீறிப்பாய்ந்தனர். இதில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டன் (மெர்சிடஸ் அணி) 1 மணி 28 நிமிடம் 32.430 வினாடிகளில் இலக்கை கடந்து முதலிடம் பிடித்ததுடன் 26 புள்ளிகளையும் தட்டிச் சென்றார். இந்த சீசனில் அவரது 9-வது வெற்றி இதுவாகும். அவரை விட 5.783 வினாடி பின்தங்கிய பின்லாந்து வீரர் வால்டெரி போட்டாஸ் (மெர்சிடஸ் அணி) 2-வதாக வந்து 18 புள்ளிகளை பெற்றார்.

    13 சுற்று முடிவில் ஹாமில்டன் 282 புள்ளிகளுடன் சாம்பியன்ஷிப் பட்டத்தை நெருங்கி விட்டார். போட்டாஸ் 197 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளார். அதே சமயம் அணிகளுக்கான சாம்பியன்ஷிப் பட்டத்தை மெர்சிடஸ் அணி (479 புள்ளி) தொடர்ந்து 7-வது முறையாக உறுதி செய்திருக்கிறது. அடுத்த சுற்று போட்டி வருகிற 15-ந்தேதி துருக்கியில் நடக்கிறது.
    ஜிம்பாப்வேவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இப்திகார் அகமது சிறப்பாக பந்து வீச, பாபர் அசாம் பொறுப்புடன் ஆட 6 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வென்றது.
    ராவல்பிண்டி:

    ஜிம்பாப்வே அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டி மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

    கடந்த வெள்ளிக்கிழமை நடந்த முதல் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1- என முன்னிலை வகித்தது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி ராவல்பிண்டியில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

    பாகிஸ்தான் பந்து வீச்சாளர்கள் ஜிம்பாப்வே அணியின் முன்னணி வீரர்களை விரைவில் அவுட்டாக்கினர்.

    அந்த அணியின் வில்லியம்ஸ் மட்டும் தாக்குப் பிடித்து அரை சதம் கடந்தார். அவர் 75 ரன்னில் ஆட்டமிழந்தார். பிரியன் சாரி 25 ரன்னிலும், பிரெண்டன் டெய்லர் 36 ரன்னிலும் வெளியேறினர். இறுதியில், ஜிம்பாப்வே அணி 45.1 ஓவரில் 206 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.

    பாகிஸ்தான் சார்பில் இப்திகார் அகமது 5 விக்கெட்டும், முகமது மூசா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது. 

    தொடக்க ஆட்டக்காரர்களான அபித் அலி 21 ரன்னிலும், இமாம் உல் ஹக் 49 ரன்னிலும் அவுட்டாகினர். அடுத்து இறங்கிய கேப்டன் பாபர் அசாம் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். 

    இறுதியில் பாகிஸ்தான் அணி 35.2 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 208 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. பாபர் அசாம் 77 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி ஒருநாள் தொடரை 2-0 என கைப்பற்றியுள்ளது.

    இரு அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி நாளை ராவல்பிண்டியில் நடைபெறுகிறது.
    கேப்டன் மார்கன் அதிரடி அரை சதமடிக்க, பாட் கம்மின்ஸ் 4 விக்கெட் வீழ்த்த ராஜஸ்தானை வீழ்த்தி புள்ளிப் பட்டியலில் 4வது இடத்துக்கு முன்னேறியது கொல்கத்தா அணி.
    துபாய்:

    துபாயில் நடந்த ஐபிஎல் 54-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

    டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி கொல்கத்தா அணியின் நிதிஷ் ராணா, ஷுப்மான் கில் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

    நிதிஷ் ராணா டக் அவுட்டானார். ஷுப்மான் கில் 36 ரன்னிலும், ராகுல் திரிபாதி 39 ரன்னிலும் வெளியேறினர். தினேஷ் கார்த்திக் டக் அவுட் ஆக, அந்த்ரே ரஸல் 25 ரன்கள் எடுத்தார்.

    கேப்டன் மோர்கன் ஆட்டமிழக்காமல் 35 பந்தில் 68 ரன்கள் விளாச கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் குவித்துள்ளது.

    இதையடுத்து 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ராஜஸ்தான் அணி இறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ராபின் உத்தப்பா, பென் ஸ்டோக்ஸ் களமிறங்கினர்.

    முதலில் இருந்தே கொல்கத்தா அணியின் பாட் கம்மின்ஸ் பந்து வீச்சில் மிரட்டினார். முன்னணி ஆட்டக்காரர்களை விரைவில் பெவிலியனுக்கு அனுப்பினார்.

    உத்தப்பா 6 ரன், ஸ்டோக்ஸ் 18 ரன், ஸ்மித் 4 ரன், சஞ்சு சாம்சன் 1 ரன்னில் அவுட்டாகினட். ரியான் பராக் டக் அவுட்டானார்.

    ஜோஸ் பட்லர் ஓரளவு தாக்குப் பிடித்து 35 ரன்னில் அவுட்டானார். ராகுல் தெவாட்டியா 31 ரன்னில் வெளியேறினார்.

    இறுதியில் ராஜஸ்தான் அணி 9 விக்கெட்டுக்கு 131 ரன்கள் எடுத்தது. இதனால் கொல்கத்தா அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் புள்ளிப்பட்டியலில் 4வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

    கொல்கத்தா சார்பில் பாட் கம்மின்ஸ் 4 விக்கெட், ஷிவம் மாவி, வருண் சக்கரவர்த்தி தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.  
    மஞ்சள்தான் வாழ்க்கை என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ஆன சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார்.
    ஐ.பி.எல். தொடரில் சி.எஸ்.கே. அணி இன்று தன்னுடைய கடைசி லீக் ஆட்டத்தில் விளையாடியது. பஞ்சாப் அணியை வீழ்த்திய நிலையில், 14 போட்டிகளில் 6-ல் வென்றுள்ளது. ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறவில்லை என்றாலும் கடைசி மூன்று போட்டிகளில் வென்றது சென்னை அணி ரசிகர்களுக்கு மிகுந்த ஆறுதலாக அமைந்தது.

    நடப்பு ஐ.பி.எல். சீசனில் சென்னை அணியின் நட்சத்திர வீரரான சுரேஷ் ரெய்னா விளையாடவில்லை. தனிப்பட்ட காரணங்களுக்காக போட்டிகள் தொடங்குவதற்கு முன்பே அவர் விலகிவிட்டார். அவர் இல்லாதது சென்னை அணிக்கு மிகுந்த பின்னடைவாக அமைந்துவிட்டதாக ரசிகர்கள் வருத்தப்பட்டனர்.

    இந்நிலையில், தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சுரேஷ் ரெய்னா மஞ்சள்தான் வாழ்க்கை என்று குறிப்பிட்டுள்ளார். இதனால், நிச்சயம் அடுத்த ஐபிஎல் சீசனில் அவர் விளையாடுவார் என்றே தோன்றுகிறது. தோனியிடம் இன்று இதுதான் கடைசி போட்டியா எனக் கேட்கப்பட்டது போது நிச்சயமாக இல்லை என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்து இருந்தார். இருவரும் ஒரே மாதிரியான பதிலை கூறியுள்ளார்கள்.

    முன்னதாக தோனி போட்டிக்கு பின்ன தெரிவித்த கருத்துக்களையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். அடுத்த ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே அணியில் பெரிய அளவில் மாற்றம் இருக்கும் என்று தோனி கூறியுள்ளார். அத்துடன் புதிய தலைமுறைக்கு இடம் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

    சீனியர் வீரர்களுக்கு அடுத்த ஐ.பி.எல். சீசனில் வாய்ப்பு இருக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
    எங்களது ஒட்டுமொத்த குரூப்பையும் மாற்ற வேண்டியுள்ளது. அடுத்த 10 ஆண்டுகளை கணக்கில் கொண்டு மாற்றங்களை கொண்டு வரவேண்டும் என டோனி தெரிவித்துள்ளார்.
    ஐபிஎல் தொடரில் இன்று தனது கடைசி லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணியை 9 விக்கெட் வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றி பெற்றாலும், 6 வெற்றிகள் மட்டுமே பெற்றுள்ளதால், பிளே ஆஃப் வாய்ப்பை ஏற்கனவே இழந்துவிட்டது சென்னை சூப்பர் கிங்ஸ். இனி அடுத்த ஐபிஎல் சீசன்தான்.

    போட்டி முடிந்த பின்னர் பேசிய தோனி, ‘‘இது மிகவும் வித்தியாசமான ஒரு சீசனாக அமைந்துவிட்டது. நாங்கள் நிறைய தவறுகள் செய்துவிட்டோம். கடந்த நான்கு போட்டிகளில் நாங்கள் எப்படி விளையாட வேண்டும் என்பதை காட்டிவிட்டோம். எங்களுடைய வீரர்களை நினைத்தால் பெருமையாக இருக்கிறது. ஏனெனில் 7-8 போட்டிகள் தோல்வி அடைந்திருப்பது மிகவும் நெருக்கடியானது. உங்களால் கிரிக்கெட்டை மகிழ்ச்சியாக விளையாட முடியாது.

    எங்களது ஒட்டுமொத்த குரூப்பையும் மாற்ற வேண்டியுள்ளது. அடுத்த 10 ஆண்டுகளை கணக்கில் கொண்டு மாற்றங்களை கொண்டு வரவேண்டும். எங்களுக்காக 10 ஆண்டுகள் விளையாடிய வீரர்களை கொண்டு ஐபிஎல் தொடரை தொடங்கினோம். அவர்கள் 10 வருடம் நல்ல ஒத்துழைப்பை கொடுத்தார்கள். இனி, அடுத்த தலைமுறையிடம் அணியை கொடுக்க வேண்டியுள்ளது.

    வலிமையுடன் மீண்டு வருவோம். அப்படி மீண்டு வருவதுதான் எங்களின் வழக்கம். நாங்கள் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறோம். இன்னும் இரண்டு புள்ளிகள் இருந்திருந்தால் ப்ளே ஆஃப்க்கு செல்ல வாய்ப்பாக இருந்திருக்கும். இந்த சீசனில்தான் ஒரே ஒரு டீம் சிறப்பாக விளையாடியுள்ளது. அல்லது பெரும்பாலான அணிகள் சிறப்பாக விளையாடியுள்ளது’’ என்றார்.
    மோர்கன் அதிரடியாக விளையாடி 68 ரன்கள் விளாச, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 192 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது கொல்கத்தா.
    துபாயில் நடக்கும் ஐபிஎல் 54-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி கொல்கத்தா அணியின் நிதிஷ் ராணா, ஷுப்மான் கில் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். நிதிஷ் ராணா ரன்ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். ஷுப்மான் கில் 24 பந்தில் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ராகுல் திரிபாதி 34 பந்தில் 39 ரன்கள் எடுத்தார். 

    தினேஷ் கார்த்திக் டக்அவுட் ஆக, அந்த்ரே ரஸல் 11 பந்தில் 25 ரன்கள் அடித்தார். கேப்டன் மோர்கன் ஆட்டமிழக்காமல் 35 பந்தில் 68 ரன்கள் விளாச கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் குவித்துள்ளது.
    ×