என் மலர்
விளையாட்டு
இலங்கை கிரிக்கெட் அணி, வெஸ்ட்இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆன்டிகுவாவில் இந்திய நேரப்படி நேற்று அதிகாலை நடந்தது.
‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்து இருந்தது. 9.3 ஓவர்களில் அந்த அணி 46 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. குணதிலகா 9 ரன்னிலும், டிக்வெல்லா 4 ரன்னிலும், பதும் நிசங்கா 5 ரன்னிலும், பொறுப்பு கேப்டன் ஏஞ்சலோ மேத்யூஸ் 11 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.
5-வது விக்கெட்டுக்கு ஆஷென் பந்தரா, தினேஷ் சண்டிமாலுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிலைத்து நின்று ஆடி அணி அணியை சரிவில் இருந்து மீட்டனர். 20 ஓவர்களில் இலங்கை அணி 4 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் எடுத்தது. தினேஷ் சண்டிமால் 46 பந்துகளில் 3 பவுண்டரியுடன் 54 ரன்னும், ஆஷென் பந்தரா 35 பந்துகளில் 3 பவுண்டரி, 2 சிக்சருடன் 44 ரன்னும் எடுத்து களத்தில் இருந்தனர். வெஸ்ட்இண்டீஸ் அணி தரப்பில் பாபியன் ஆலென், கெவின் சின்கிளைர், ஜாசன் ஹோல்டர், ஒபெட் மெக்கா தலா ஒரு விக்கெட் கைப்பற்றினார்கள்.
பின்னர் 132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய வெஸ்ட்இண்டீஸ் அணியின் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் சரிந்தாலும், அந்த அணியின் வீரர்கள் அடித்து ஆடினார்கள். சுழற்பந்து வீச்சாளர் அகிலா தனஞ்ஜெயாவின் ஒரு ஓவரில் பாபியன் ஆலென் 3 சிக்சர்கள் பறக்கவிட்டு அணி வெற்றி இலக்கை எட்ட வைத்தார்.
19 ஓவர்களில் வெஸ்ட்இண்டீஸ் அணி 7 விக்கெட்டுக்கு 134 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஜாசன் ஹோல்டர் 14 ரன்னும் (23 பந்து, ஒரு சிக்சர்), பாபியன் ஆலென் 21 ரன்னும் (6 பந்து, 3 சிக்சர்) எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். சிமோன்ஸ் 26 ரன்னிலும், இவின் லீவிஸ் 21 ரன்னிலும், கிறிஸ் கெய்ல் 13 ரன்னிலும் கேப்டன் பொல்லார்ட் ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டம் இழந்தனர்.
இலங்கை அணி தரப்பில் லக்ஷன் சண்டகன் 3 விக்கெட்டும், டி சில்வா, சமீரா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். 13 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தியதுடன் அதிரடியாக 21 ரன்கள் திரட்டியும் ஆல்-ரவுண்டராக ஜொலித்த வெஸ்ட்இண்டீஸ் வீரர் பாபியன் ஆலென் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
இந்த வெற்றியின் மூலம் வெஸ்ட்இண்டீஸ் அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. முதலாவது ஆட்டத்தில் வெஸ்ட்இண்டீஸ் 4 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் இலங்கை 43 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்று இருந்தது.
இதனை அடுத்து இவ்விரு அணிகள் இடையே 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் நடைபெறுகிறது. இதில் முதலாவது ஆட்டம் ஆன்டிகுவாவில் நாளை (இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு) நடக்கிறது.
பாக்சம் சர்வதேச குத்துச்சண்டை போட்டி ஸ்பெயின் நாட்டில் உள்ள கேஸ்டில்லோனில் நடந்தது. இதில் ஆண்களுக்கான 63 கிலோ எடைப்பிரிவின் இறுதி சுற்றில் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றவரான இந்திய வீரர் மனிஷ் கவுசிக் 3-2 என்ற கணக்கில் டென்மார்க்கின் நிகோலாய் தெர்ட்யானை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். 69 கிலோ பிரிவு இறுதிப்போட்டியில் உலக சாம்பியன்ஷிப்பில் வெண்கலப்பதக்கத்தை வென்று இருக்கும் இந்திய வீரர் விகாஸ் கிருஷ்ணன் 1-4 என்ற கணக்கில் ஸ்பெயினின் டியாட் சிசோகாவிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்து வெள்ளிப்பதக்கத்துடன் திருப்தி கண்டார்.
இதேபோல் பெண்களுக்கான 75 கிலோ இறுதி சுற்றில் ஆசிய சாம்பியனான இந்திய வீராங்கனை பூஜா ராணி 0-5 என்ற கணக்கில் உலக போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றவரான நவோமி கிரஹாமிடம் (அமெரிக்கா) வீழ்ந்து வெள்ளிப்பதக்கம் பெற்றார். 57 கிலோ பிரிவின் இறுதிப்போட்டியில் இந்திய இளம் வீராங்கனை ஜாஸ்மின் 0-5 என்ற கணக்கில் முன்னாள் ஐரோப்பிய சாம்பியனான இர்மா தெஸ்டாவிடம் (இத்தாலி) தோல்வி அடைந்து வெள்ளிப்பதக்கத்தை சொந்தமாக்கினார். இந்த போட்டியில் இந்தியா ஒரு தங்கம், 8 வெள்ளி, ஒரு வெண்கலம் என மொத்தம் 10 பதக்கங்களை அள்ளியது.
மும்பை:
இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான கேப்டன் மகேந்திரசிங் டோனி. இந்திய அணிக்கு 2 உலக கோப்பைகளை வென்று பெருமை சேர்த்தவர் டோனி. 2007-ல் 20 ஓவர் உலக கோப்பையும், 2011-ல் ஒருநாள் போட்டி உலக கோப்பையும் அவரது தலைமையிலான அணி கைப்பற்றி முத்திரை பதித்தது.
மேலும் டோனி தலைமையில் 2013-ல் ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. ஐ.சி.சி. நடத்தும் அனைத்து தொடர்களின் கோப்பையை வென்ற ஒரே கேப்டன் டோனி ஆவார்.
கேப்டன் பதவி மட்டு மல்லாமல் பேட்டிங்கிலும் அவர் பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளார். 2005-ல் அறிமுகமான அவர் கடந்த ஆண்டு சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக டோனி அறிவித்தார். ஐ.பி.எல். போட்டிகளில் மட்டும் ஆடி வருகிறார்.
இந்த நிலையில் டோனிக்கு கேப்டன் பதவி கிடைத்தது எப்படி என்பது குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவரும், தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவருமான சரத்பவார் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
2007-ல் இந்திய அணி இங்கிலாந்து சென்றது நினைவில் இருக்கிறது. அப்போது ராகுல்டிராவிட்தான் கேப்டன். அப்போது நான் இங்கிலாந்தில் இருந்தேன். டிராவிட் என்னை சந்தித்தார்.
இந்திய அணியை வழி நடத்த முடியாதது பற்றி என்னிடம் அவர் தெரிவித்தார். கேப்டன் பொறுப்பு பேட்டிங்கை பாதிப்பது குறித்தும் தெரிவித்தார். இதனால் கேப்டன் பொறுப்பில் இருந்து தன்னை விடுவிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
இதைத் தொடர்ந்து தெண்டுல்கரிடம் அணியை வழிநடத்துமாறு கேட்டுக் கொண்டேன். ஆனால் அவர் மறுத்து விட்டார். இருவரும் (தெண்டுல்கர், டிராவிட்) அணியை வழி நடத்த விரும்பாவிட்டால் என்ன செய்வது என்று தெண்டுல்கரிடம் கேட்டேன்.

இந்திய அணியை வழிநடத்துவதற்கு நம்மிடம் மேலும் ஒரு வீரர் இருக்கிறார். அவர் வேறு யாருமில்லை எம்.எஸ்.டோனி என்றார் தெண்டுல்கர். இதற்கு பிறகு டோனியிடம் கேப்டன் பதவியை வழங்கினோம்.
இவ்வாறு சரத்பவார் கூறினார்.
டோனி முதலில் 20 ஓவர் போட்டிக்கு கேப்டன் ஆனார். அதைத் தொடர்ந்து ஒருநாள் போட்டி, டெஸ்ட்டுக்கு கேப்டனாக இருந்தார். 2018 வரை அவர் கேப்டன் பொறுப்பில் இருந்தார்.
டோனி தலைமையில் இந்திய அணி 72 இருபது ஓவர் போட்டியில் விளையாடி உள்ளது. இதில் 41-ல் வெற்றி, 28-ல் தோல்வி கிடைத்தது. ஒரு ஆட்டம் டை ஆனது. 2 போட்டி முடிவில்லை.
200 ஓருநாள் போட்டியில் 110-ல் வெற்றி கிடைத்தது. 74 ஆட்டத்தில் தோல்வி ஏற்பட்டது. 5 ஆட்டம் டையில் முடிந்தது. 11 ஆட்டம் முடிவில்லை.
டோனி தலைமையில் இந்திய அணி 60 டெஸ்டில் விளையாடி உள்ளது. இதில் 27 போட்டியில் வெற்றி கிடைத்தது. 18-ல் தோல்வி ஏற்பட்டது. 15 ஆட்டம் டிரா ஆனது.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து அந்த அணிக்கு எதிராக 5 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடியது. இதில் இரு அணிகளும் தலா 2 ஆட்டங்களில் வென்று தொடர் சமனிலையில் இருந்தது.
இந்நிலையில், ஆஸ்திரேலியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் நேற்று நடந்தது.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 8 விக்கெட்டுக்கு 142 ரன்கள் சேர்த்தது. வேட் 29 பந்துகளில் 3 பவுண்டரி, 2 சிக்சருடன் 44 ரன்கள் குவித்தார். கேப்டன் ஆரோன் பிஞ்ச் 36 ரன்கள் எடுத்தார்.
அடுத்து களம் இறங்கிய நியூசிலாந்து 15.3 ஓவர்களில் 143 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. மார்டின் கப்தில் அதிரடியாக ஆடி 46 பந்துகளில் 4 சிக்சர், 7 பவுண்டரியுடன் 71 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கான்வே 36 ரன்னும், பிலிப்ஸ் 34 ரன்னும் எடுத்துள்ளனர்.
இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியவுக்கு எதிரான டி20 தொடரை 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது நியூசிலாந்து.
ஆட்ட நாயகன் விருது மார்டின் கப்திலுக்கும், தொடர் நாயகன் விருது இஷ் சோதிக்கும் அளிக்கப்பட்டது.



மொத்தம் 56 லீக் போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில் சென்னை, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, டெல்லி, அகமதாபாத் ஆகிய மைதானங்களில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறுகின்றன.
கொரோனா அச்சம் காரணமாக கடந்தாண்டு ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவருமாக விளங்கிய சுனில் கவாஸ்கர் 1971-ம் ஆண்டு மார்ச் 6-ந் தேதி போர்ட் ஆப் ஸ்பெயினில் தொடங்கிய வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின் மூலம் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அறிமுகம் ஆனார். 5 ஆட்டங்கள் கொண்ட அந்த தொடரை இந்திய அணி 1-0 என்ற கணக்கில் கைப்பற்றி சாதனை படைத்தது. தனது அறிமுக தொடரிலேயே கவாஸ்கர் 4 சதம், 3 அரைசதம் உள்பட 774 ரன்கள் குவித்து பிரமாதப்படுத்தினார். 1987-ம் ஆண்டில் ஓய்வு பெற்ற அவர் 125 டெஸ்டில் ஆடி 34 சதம் உள்பட 10,122 ரன்களும், 108 ஒருநாள் போட்டியில் விளையாடி 3,092 ரன்களும் எடுத்துள்ளார்.
71 வயதான கவாஸ்கர் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி 50 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. ஆமதாபாத்தில் நடந்த இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான கடைசி டெஸ்ட் போட்டியின் 3-வது நாளான நேற்று மதிய உணவு இடைவேளையின் போது அவருக்கு இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய் ஷா நினைவு பரிசாக தொப்பியை வழங்கி கவுரவித்தார். முன்னதாக கவாஸ்கர் ஸ்டேடியத்தில் ‘கேக்’ வெட்டி சிறப்பித்தார். முன்னாள் வீரர்கள் பலரும் அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளனர். ‘நான் அவரது ஆட்டத்தை வியந்து பார்த்ததுடன் அவரை போன்று உருவாக முயற்சித்தேன். அதில் ஒருபோதும் மாற்றமில்லை. அவர் தான் என்றும் எனது கதாநாயகன்’ என்று சச்சின் தெண்டுல்கர் கூறியுள்ளார்.






