என் மலர்tooltip icon

    விளையாட்டு

    சுழற்பந்து வீச்சாளரான ரஷித் கான் உலகின் தலைசிறந்த டி20 கிரக்கெட் பந்து வீச்சாளராக திகழ்ந்து வருகிறார்.
    ஆப்கானிஸ்தான் அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான். தனது மாயாஜால சுழற்பந்து வீச்சு மூலம் உலக முன்னணி பேட்ஸ்மேன்களை அச்சுறுத்தி வருகிறார். ஐபிஎல், பிக் பாஷ் உள்ளிட்ட ஏராளமான டி20 லீக்கில் நட்சத்திர பந்து வீச்சாளராக திகழ்கிறார்.

    சமீபத்தில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் போட்டி டி20 அணியின் கேப்டனாக ஹஷ்மதுல்லா ஷாஹிதியை நிமியத்தது. துணைக் கேப்டனாக ரஹ்மத் ஷாவை நியமித்தது. ரஷித்கானை புதிய துணைக் கேப்டனாக நியமித்துள்ளது. ஆனால் கேப்டனாக நியமிக்கவில்லை.

    இந்த நிலையில் கேப்டன் பதவியை விரும்பவில்லை என ரஷித் கான் தெரிவித்துள்ளார். மேலும், இதுகுறித்து ரஷித் கான் கூறுகையில் ‘‘நான் ஒரு வீரராக சிறந்தவன் என்பதில் நான் மிகவும் தெளிவாக இருக்கிறேன். துணைக் கேப்டன் என்பது எனக்கு சிறந்தது. என்னுடைய ஆலோசனை தேவைப்படும்போது, கேப்டனுக்கு உதவியாக இருப்பேன். கேப்டன் பதவியில் இருந்து விலகி இருப்பது எனக்கு சிறந்தது.

    ஒரு வீரராக அணிக்கு சிறப்பாக செயல்பட விரும்புகிறேன். கேப்டனாக மாறுபட்ட கோணத்தில் யோசிப்பதைவிட, என்னுடைய பணி அணிக்கு மிகவும் சிறந்தது, அணிக்கான எனது செயல்பாடு பாதிக்கப்படுமோ, என்று நான் பயப்படுகிறேன். இது முக்கியமானது. இதனால் ஒரு வீரராக இருப்பது எனக்கு மகிழ்ச்சி. கிரிக்கெட் போர்டு, தேர்வுக்கு எந்த முடிவை எடுத்தாலும், அதற்கு துணையாக நான் இருப்பேன்’’ என்றார்.
    ரோகித் சர்மா அல்லது ஜஸ்பிரீத் பும்ரா ஆகியோரைச் சேர்ப்பது கூட பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு உதவும் என்று ரிஸ்லா ரெஹான் கூறி இருந்தார்.
    புதுடெல்லி:

    இந்தியா கேப்டன் விராட் கோலி உலகின் மிக பிரபலமான கிரிக்கெட் வீரர்களில் ஒருவர். அவருக்கு உலகம் முழுவதும் பெரும் ரசிகர்கள் உள்ளனர். பெண்கள் மத்தியில் விராட் கோலி மிகவும் பிரபலமானவர். 2019 உலகக் கோப்பையின் போது கிரிக்கெட் பரம ரசிகையான ரிஸ்லா ரெஹான் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

    ரிஸ்லா ரெஹான் ஒரு பாகிஸ்தான் பெண் ஆவர். ரிஸ்லா ரெஹான், துபாயில் 2018 ஆசிய கோப்பையின் போது முதன் முதலில் மீடியா உலகிற்கு அறிமுகமானார்.

    இந்திய அணியை ஆதரிப்பதற்காக 2019 உலகக்கோப்பை அரையிறுதிக்கு சற்று முன்னதாக மான்செஸ்டரில் ரிஸ்லா கலந்து கொண்டார், இது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

    நியூசிலாந்துடனான இந்தியாவின் அரையிறுதி மோதலுக்கு முன்னதாக ஒரு பேட்டியில் , ரிஸ்லா பாகிஸ்தான் அணி  கடைசி நான்கு போட்டிகளில் விளையாடும்  என்ற நம்பிக்கையில் முன்கூட்டியே டிக்கெட்டுகளை வாங்கியதாகக் கூறியிருந்தார்.பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிராக விளையாடும் என்று நினைத்துக்கொண்டேன், ஆனால் அது அவ்வாறு செயல்படவில்லை.

    2019 உலகக் கோப்பையின் போது அவர் அளித்த பேட்டியில், இந்திய கிரிக்கெட் அணியிடமிருந்து பாகிஸ்தானுக்கு பரிசு வழங்க விரும்பினால் நீங்கள் கேட்கும்  ஒரு விஷயம் என்ன என்று ரிஸ்லாவிடம் கேட்கப்பட்டது, ரிஸ்லா தயவுசெய்து எங்களுக்கு விராட் கோலி கொடுங்கள் என பதில் அளித்து இருந்தார். மேலும் ரோகித் சர்மா அல்லது ஜஸ்பிரீத் பும்ரா ஆகியோரைச் சேர்ப்பது கூட பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு உதவும் என்று அவர் மேலும் கூறி இருந்தார்.
    சுமித்தின் ‘பி’ மாதிரி ஜூன் 10 ஆம் தேதி சோதனை செய்யப்படும் என்றும் தற்போது அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பதாகவும் இந்திய மல்யுத்த சம்மேளன உதவி செயலாளர் வினோத் தோமர் கூறினார்.
    புதுடெல்லி:

    ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வரும் ஜூலை 23ம் தேதி ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க உள்ளன. இதில் பங்கேற்கும் வீரர்-வீராங்கனைகளுக்கு ஊக்க மருந்து சோதனை நடத்தப்பட்டு அவர்களின் உடல்தகுதி உறுதி செய்யப்படுகிறது.

    அவ்வகையில், இந்தியா சார்பில் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ள மல்யுத்த வீரர் சுமித் மாலிக்கிற்கு (125 கிலோ எடைப்பிரிவு) நடத்தப்பட்ட ஊக்கமருந்து சோதனையில்  தோல்வி அடைந்துள்ளார். எனவே, அவர் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியுடன் இணையமாட்டார் என தெரிகிறது. 

    சுமித் மாலிக் ஊக்க மருந்து சோதனையில் தோல்வி அடைந்தது இந்திய மல்யுத்த சம்மேளனத்திற்கு அதிர்ச்சி அளிக்கும் செய்தியாக அமைந்துள்ளது.

    ஒலிம்பிக் சின்னம்

    இதுபற்றி இந்திய மல்யுத்த சம்மேளன உதவி செயலாளர் வினோத் தோமர் கூறுகையில், ஊக்கமருந்து சோதனையில் சுமித் தோல்வி அடைந்ததால் அவர் டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வாய்ப்பு மங்கிவிட்டது. சுமித்தின் ‘பி’ மாதிரி ஜூன் 10 ஆம் தேதி சோதனை செய்யப்படும். இப்போதைக்கு அவர் தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்படுகிறார். அடுத்தகட்ட சோதனைக்குப் பிறகு, விசாரணை செய்து முடிவு அறிவிக்கப்படும். 

    சுமித் காயமடைந்ததால் சில மருந்துகளை பயன்படுத்தியிருக்கலாம். பி மாதிரி சோதனையிலும் பாசிட்டிவ் என வந்தால் அவர் தடை செய்யப்படலாம்’ என்றார்.
    மில்காசிங் ஆசிய விளையாட்டு போட்டியில் 4 முறை தங்க பதக்கங்களை வென்றுள்ளார். 400 மீட்டர் ஓட்டத்தில் ஆசிய விளையாட்டு போட்டியிலும், காமன்வெல்த் போட்டியிலும் தங்கம் வென்ற ஒரே வீரர் ஆவார்.

    சண்டிகர்:

    இந்தியாவில் முன்னாள் தடகள வீரர் மில்காசிங். 91 வயதான அவர் சமீபத்தில் கொரோனா தொற்றால் வீட்டிலேயே தனிமைப்படுத்திகொண்டார்.

    ஆனால் பாதிப்பு குறையாததால் மொகாலியில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவரது உடல்நிலை சீராக இருந்ததால் ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்ய குடும்பத்தினர் கோரிக்கை விடுத்தனர்.

    இதனை ஏற்று கடந்த மே மாத இறுதியில் ஆஸ்பத்திரியில் இருந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    இந்த நிலையில் மில்கா சிங்குக்கு திடீரென்று ஆக்சிஜன் அளவு குறைந்தது. உடனே அவரை சண்டிகரில் உள்ள மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி அமைப்பின் கொரோனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மில்கா சிங்கின் மனைவி நிர்மல் கவுரும் நிமோனியாவால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    மில்காசிங் ஆசிய விளையாட்டு போட்டியில் 4 முறை தங்க பதக்கங்களை வென்றுள்ளார். 400 மீட்டர் ஓட்டத்தில் ஆசிய விளையாட்டு போட்டியிலும், காமன்வெல்த் போட்டியிலும் தங்கம் வென்ற ஒரே வீரர் ஆவார்.

    1960-ம் ஆண்டு ரோம் ஒலிம்பிக் போட்டியில் 400 மீட்டர் ஓட்டத்தில் 4-வது இடத்தை பிடித்து பதக்கத்தை தவற விட்டார். அவருக்கு 1959-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

    இந்திய கிரிக்கெட் வாரியம், ஐ.பி.எல். போட்டியை ஐக்கிய அரபு எமிரேட்சில் நடத்துவதை தவிர வேறு எதை பற்றியும் சிந்திக்கவில்லை என திலிப் வெங்சர்கார் கூறியுள்ளார்.

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் திலீப் வெங்சர்கார் கூறியதாவது:-

    இந்திய கிரிக்கெட் வாரியம் எப்போதும் ஐ.பி.எல். மீது தனது கவனத்தை தக்க வைத்து கொள்ள விரும்புகிறது. கிரிக்கெட் வாரியம் தனது மனதில் வைத்திருக்கும் உள்நாட்டு கிரிக்கெட் வீரர்களின் நிலை என்ன? தொற்று நோய் கால கட்டத்தால் பல திறமையான நம்பிக்கையாளர்களுக்கு, அவர்களது திறமையை வெளிப்படுத்தவும், தேசிய அணியில் உரிமை கோரவும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

    தரமான வீரர்களை உள்ளூர் போட்டிகளில் இருந்துதான் பெறுவீர்கள்.இந்திய கிரிக்கெட் வாரியம், ஐபிஎல் போட்டியை ஐக்கிய அரபு எமிரேட்சில் நடத்துவதை தவிர வேறு எதை பற்றியும் சிந்திக்கவில்லை. இரானி கோப்பை மற்றும் துலீப் டிராபி போட்டியை உயிர் பாதுகாப்பான சூழலில் (கொரோனா காரணமாக) விளையாடுவது பற்றி நீங்கள் சிந்திக்க வேண்டிய நேரம் இது. இப்போட்டிகளை கர்நாடகாவில் நடத்தலாம்.

    கடந்த சீசனில் மு‌ஷடாக் அலி மற்றும் விஜ் ஹசாரே டிராபி மட்டுமே நடந்தது. ஆனால் டெஸ்ட் போட்டி டிராபி நடத்தவில்லை. தேசிய அணியில் ஒரு வீரர் காயமடைந்தால் அவருக்கு மாற்று வீரர் தேர்வு செய்ய வேண்டுமென்றால் அவரின் வடிவம் மற்றும் தகுதியை தீர்மானிக்க உங்கள் அளவு கோல் என்னவாக இருக்கும்? அதற்காக நீங்கள் உள்நாட்டு கிரிக்கெட்டில் கவனம் செலுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    லண்டன் சென்றடைந்த இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணியினர் அங்கிருந்து சவுத்தம்டனுக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு மைதான வளாகத்தில் உள்ள ஓட்டலில் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    சவுத்தம்டன்:

    விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் நடக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நியூசிலாந்துடன் மோதுகிறது. அதன்பின் இங்கிலாந்துடன் டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

    அதேபோல் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியும் இங்கிலாந்து சென்று டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் இங்கிலாந்துக்கு புறப்படுவதற்கு முன்பாக மும்பையில் உள்ள ஓட்டலில் தனிமைப்படுத்தப்பட்டனர்.

    இரண்டு வார தனிமைப்படுத்துதல் முடிவடைந்ததையடுத்து இந்திய வீரர்கள், வீராங்கனைகள் நேற்று முன்தினம் நள்ளிரவு மும்பையில் இருந்து தனி விமானத்தில் இங்கிலாந்துக்கு புறப்பட்டு சென்றனர்.

    லண்டன் சென்றடைந்த இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணியினர் அங்கிருந்து சவுத்தம்டனுக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு மைதான வளாகத்தில் உள்ள ஓட்டலில் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    இந்திய அணி வீரர்கள்

    வீரர்கள், வீராங்கனைகள் ஓட்டலில் 10 நாட்கள் தனிமைப்படுத்துதலை கடைப்பிடிக்கிறார்கள் என்று தெரிகிறது. அவர்களின் தனிமைப்படுத்துதல் காலம் தொடங்கி உள்ளது.

    இதையடுத்து இந்திய அணியினர் ஓட்டலில் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். தனிமைப்படுத்துதல் முடிந்த பிறகு பயிற்சியில் ஈடுபடுவார்கள்.

    இந்திய ஆண்கள் அணி வருகிற 18-ந் தேதி சவுத்தம்டனில் நடக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடுகிறது. பெண்கள் அணி 16-ந் தேதி பிரிஸ்டலில் தொடங்கும் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து பெண்கள் அணியுடன் மோதுகிறது.

    இங்கிலாந்து கிரிக்கெட் அணியன் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ் பிறந்த தினம் இன்று. 30 வயது நிறைவடைந்த நிலையில் 31-வது வயதிற்குள் நுழைந்துள்ளார்.
    இவர் நியூசிலாந்தில் உள்ள கிறிஸ்ட்சர்ச்சில் பிறந்தவர். இவரது தந்தை ஜெரார்ட் ஸ்டோக்ஸ் ரக்பி பயிற்சியாளர். இங்கிலாந்து ரக்பி அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டதால் ஸ்டோக்ஸ் தந்தை குடும்பத்துடன் இங்கிலாந்துக்கு குடிபெயர்ந்தார். அப்போது பென் ஸ்டோக்ஸ்க்கு 12 வயது. அப்பா ரக்பி பயிற்சியாளராக இருந்த போதிலும், ஸ்டோக்ஸ் கிரிக்கெட் போட்டியில் ஆர்வம் காட்டினார்.

    அவரது பெற்றோர் நியூசிலாந்து திரும்பிய போதிலும், பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்காக விளையாட விரும்பி இங்கிலாந்திலேயே தங்கிவிட்டார்.

    2011-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25-ந்தேதி இங்கிலாந்து ஒருநாள் கிரிக்கெட் அணியில் அயர்லாந்துக்கு எதிராக முதன்முதலாக அறிமுகம் ஆனார். அதன்பின் செப்டம்பர் மாதம் டி20 அணியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக அறிமுகம் ஆனார்.

    2013-ல் முதன்முறையாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்ட் தொடரில், அதுவும் ஆஷஸ் தொடரில் அறிமுகம் ஆனார்.

    இதுவரை 71 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 4631 ரன்களும் (10 சதம், 24 அரைசதம்), 163 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார். 98 ஒருநாள் போட்டியில் 2817 ரன்களும் (3 சதம், 21 அரைசதம்), 74 விக்கெட்டுகளும், 34 டி20 போட்டியில் 442 ரன்களும், 19 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளார்.

    தற்போது இங்கிலாந்து அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டராக உள்ளார். இங்கிலாந்தில் 2019-ம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 84 ரன்கள் எடுத்து இங்கிலாந்து வெற்றிக்கு (போட்டி டை, சூப்பர் ஓவர் டை, அதன்பின் அதிக பவுண்டரி, சிக்ஸ் அடிப்படையில் இங்கிலாந்து சாம்பியன்) முக்கிய காரணமாக இருந்தார். இந்த போட்டியில் ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.

    பென் ஸ்டோக்ஸ்

    2017-ம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 102 ரன்கள் எடுத்து அணியை வெற்றி பெற வைத்தது அவரது ஆட்டத்தில் முக்கியமான ஒன்று. அதேபோல் 2019-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஹெட்டிங்லே-யில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் அதிரடியாக விளையாடி ஆட்டமிழக்காமல் 135 ரன்கள் குவித்து 350 ரன்களுக்கு மேலான இலக்கை எட்டி இங்கிலாந்து அணி வெற்றி பெற உறுதுணையாக இருந்தார்.
    இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டம் இங்கிலாந்து சவுத்தாம்ப்டன் மைதானத்தில் வருகிற 18-ந்தேதி தொடங்குகிறது.
    இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி நியூசிலாந்து அணிக்கெதிராக ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டம், இங்கிலாந்துக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகியவற்றில் விளையாடுவதற்கான நேற்றுமுன்தினம் இரவு மும்பையில் இருந்து புறப்பட்டு இங்கிலாந்து சென்றடைந்தது.

    வீரர்கள் தங்கனை தனிமைப்படுத்திக் கொண்டு அதன்பின் பயிற்சி மேற்கொள்வார்கள். இறுதி ஆட்டம் நடைபெறும் மைதானத்தில் இந்திய அணி வீரர்கள் குறிப்பிட்ட நேரத்தை செலவிட்டனர். ரோகித் சர்மா, ரிஷப் பண்ட், உமேஷ் யாதவ், பும்ரா சவுத்தாம்ப்டன் மைதானத்தில் இருந்து எடுத்துக் கொண்ட படத்தை வெளியிட்டுள்ளனர்.
    கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் போட்டி தொடர் பாதியிலேயே ரத்து செய்யப்பட்டு ஒத்திவைக்கப்பட்டது.
    பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு ஆண்டுதோறும் பிப்ரவரி- மார்ச் மாதங்களில் பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் தொடரை நடத்தி வருகிறது. கொரோனா தொற்று தாக்கம் இருந்த நிலையில் 2021 சீசன் ரசிகர்கள் இன்றி நடைபெற்று வந்தது.

    பயோ-பபுள் தோல்வியடைந்து வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனால் தொடர் உடனடியாக ரத்து செய்யப்பட்டு ஒத்திவைக்கப்பட்டது. அதன்பின் ஐக்கிய அரபு அமீரகத்தில் போட்டியை நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தீர்மானித்தது. இதனால் அமீரக அரசிடமும், கிரிக்கெட் போர்டிடமும் அனுமதி கேட்டது. அவர்களும் அனுமதி கொடுத்தனர்.

    வீரர்களுக்கான பயணம், தனிமைப்படுத்துதல், ஓட்டல்கள் ஏற்பாடு செய்தல் போன்ற பணிகளை செய்து முடித்தது பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு. இந்த நிலையில் வருகிற 9-ந்தேதி முதல் ஜூன் 24-ந்தேதி வரை மீதமுள்ள போட்டிகள்  நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    டேவன் கோவன் இரட்டை சதம் அடிக்க, நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 378 ரன்கள் குவிக்க, இங்கிலாந்து 2-வது நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 111 ரன்கள் எடுத்துள்ளது.
    இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 378 ரன்கள் குவித்தது. அந்த அணியின் தொடக்க வீரர் இரட்டை சதம் விளாசினார்.

    அதன்பின் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. ரோரி பேர்ன்ஸ், டாம் சிப்லி ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். சிப்லியை ரன்ஏதும் எடுக்க விடாமல் கைல் ஜேமிசன் எல்.பி.டபிள்யூ மூலம் வெளியேற்றினார். அடுத்து வந்த ஜாக் கிராவ்லி 2 ரன்னில் டிம் சவுத்தி பந்தில் வெளியேறினார்.

    இதனால் இங்கிலாந்து 18 ரன்னுக்குள் 2-வது விக்கெட்டை இழந்தது. 3-வது விக்கெட்டுக்கு ரோரி பேர்ன்ஸ் உடன் ஜோ ரூட் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிலைத்து நின்று விளையாடியது. ரோரி பேர்ன்ஸ் 90 பந்தில் 8 பவுண்டரியுடன் அரைசதம் அடித்தார்.

    இந்த ஜோடி நேற்றைய 2-வது நாள் ஆட்டம் முடியும் வரை மேலும் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டது. 2-வது நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 43 ஓவர்கள் விளையாடி 2 விக்கெட் இழப்பிற்கு 111 ரன்கள் எடுத்துள்ளது.

    ரோரி பேர்ன்ஸ் 59 ரன்களுடனும், ஜோ ரூட் 42 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். தற்போது வரை இங்கிலாந்து 267 ரன்கள் பின்தங்கியுள்ளது.

    இந்த ஜோடி இன்றைய 3-வது நாள் ஆட்டத்தில் குறைந்தது உணவு இடைவேளை வரையாவது தாக்குப்பிடித்து விளையாட வேண்டும். அதன்பின் ஜோ ரூட் பெரிய இன்னிங்ஸ் விளையாடி முதல் இன்னிங்சில் இங்கிலாந்தை முன்னிலைப் பெற வைத்தால், இங்கிலாந்து இந்த டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற வாய்ப்புள்ளது.

    ஒருவேளை முதல் இன்னிங்சில் 50 ரன்களுக்கு மேல் குறைவாக பெற்றால், தோல்வியை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும்.
    பிரெஞ்சு ஓபன் போட்டியில் இருந்து ஜப்பான் வீராங்கனை நவாமி ஒசாகா விலகியநிலையில், காயம் காரணமாக ஆஸ்திரேலியாவின் ஆஷ்லி பார்ட்டியும் விலகியுள்ளார்.
    பாரிஸ்:

    பிரெஞ்ச்-ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இரண்டாவது சுற்றில் ஸ்பெயின் வீரர் ரபேல் நடால், பிரான்ஸ் வீரர் ரிச்சர்ட் கேஸ்கேட் ஆகியோர் மோதினர்.

    இதில், 12 முறை சாம்பியனான அனுபவ வீரரான நடால் 6-0, 7-5, 6-2 என்ற நேர் செட்களில் கேஸ்கேட்டை தோற்கடித்து முன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.
    டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டனில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியா சார்பில் பங்கேற்க ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற பி.வி.சிந்து தகுதி பெற்று இருக்கிறார்.
    புதுடெல்லி:

    டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டனில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியா சார்பில் பங்கேற்க ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்றவரும், உலக சாம்பியனுமான பி.வி.சிந்து தகுதி பெற்று இருக்கிறார். ஒலிம்பிக் போட்டிக்காக தீவிரமாக தயாராகி வரும் 25 வயதான பி.வி.சிந்து அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

    பேட்மிண்டனில் பெண்கள் பிரிவை பொறுத்தமட்டில் ‘டாப்-10’ வீராங்கனைகள் அனைவரும் ஒரே மாதிரியான தரத்தை உடையவர்கள். ஒரு வீராங்கனை (நடப்பு சாம்பியன் கரோலினா மரின் காயத்தால் விலகல்) விளையாடவில்லை என்பதற்காக அதனை எளிதாக எடுத்து கொள்ள முடியாது. மற்ற சிறந்த வீராங்கனைகளான தாய் ஜூ யிங், ராட்சனோக், நஜோமி ஒகுஹரா, அகானே யமாகுச்சி ஆகியோர் ஒலிம்பிக் களத்தில் உள்ளனர். எனவே நான் எந்த வகையிலும் மெத்தனமாக இருக்க முடியாது. அதுவும் ராட்சனோக் போன்று மிகவும் திறமையான, தந்திரமான ஒன்றிரண்டு வீராங்கனைகள் உள்ளனர். அவர்களை கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.

    கொரோனா பாதிப்பால் கிடைத்த இடைவெளி என்னை பொறுத்தமட்டில் திறமையையும், ஆட்ட நுணுக்கத்தையும் மேம்படுத்த கிடைத்த நல்ல வாய்ப்பாகும். வழக்கமாக தவறுகளை திருத்தி கொள்ளவும், புதிய திறன்களை கற்றுக்கொள்ளவும் நேரம் கிடைக்காது. ஏனெனில் அதற்கு அதிக நேரம் பிடிக்கும். எனவே கிடைத்து இருக்கும் இந்த நல்ல சமயத்தை புதிய நுணுக்கத்தையும், திறனையும் கற்றுக் கொள்வதற்கு பயன்படுத்தி வருகிறேன். ஒலிம்பிக் போட்டியில் எனது ஆட்டத்தில் நீங்கள் புதிய நுணுக்கங்களை பார்க்கலாம்.

    இவ்வாறு
    சிந்துகூறினார்.
    ×