என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
லார்ட்ஸ் டெஸ்ட் 2-வது நாள் முடிவில் இங்கிலாந்து 111-2: ஜோ ரூட் முன்னிலை பெற வைப்பாரா?
Byமாலை மலர்4 Jun 2021 3:49 AM GMT (Updated: 4 Jun 2021 3:49 AM GMT)
டேவன் கோவன் இரட்டை சதம் அடிக்க, நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 378 ரன்கள் குவிக்க, இங்கிலாந்து 2-வது நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 111 ரன்கள் எடுத்துள்ளது.
இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 378 ரன்கள் குவித்தது. அந்த அணியின் தொடக்க வீரர் இரட்டை சதம் விளாசினார்.
அதன்பின் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. ரோரி பேர்ன்ஸ், டாம் சிப்லி ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். சிப்லியை ரன்ஏதும் எடுக்க விடாமல் கைல் ஜேமிசன் எல்.பி.டபிள்யூ மூலம் வெளியேற்றினார். அடுத்து வந்த ஜாக் கிராவ்லி 2 ரன்னில் டிம் சவுத்தி பந்தில் வெளியேறினார்.
இதனால் இங்கிலாந்து 18 ரன்னுக்குள் 2-வது விக்கெட்டை இழந்தது. 3-வது விக்கெட்டுக்கு ரோரி பேர்ன்ஸ் உடன் ஜோ ரூட் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிலைத்து நின்று விளையாடியது. ரோரி பேர்ன்ஸ் 90 பந்தில் 8 பவுண்டரியுடன் அரைசதம் அடித்தார்.
இந்த ஜோடி நேற்றைய 2-வது நாள் ஆட்டம் முடியும் வரை மேலும் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டது. 2-வது நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 43 ஓவர்கள் விளையாடி 2 விக்கெட் இழப்பிற்கு 111 ரன்கள் எடுத்துள்ளது.
ரோரி பேர்ன்ஸ் 59 ரன்களுடனும், ஜோ ரூட் 42 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். தற்போது வரை இங்கிலாந்து 267 ரன்கள் பின்தங்கியுள்ளது.
இந்த ஜோடி இன்றைய 3-வது நாள் ஆட்டத்தில் குறைந்தது உணவு இடைவேளை வரையாவது தாக்குப்பிடித்து விளையாட வேண்டும். அதன்பின் ஜோ ரூட் பெரிய இன்னிங்ஸ் விளையாடி முதல் இன்னிங்சில் இங்கிலாந்தை முன்னிலைப் பெற வைத்தால், இங்கிலாந்து இந்த டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற வாய்ப்புள்ளது.
ஒருவேளை முதல் இன்னிங்சில் 50 ரன்களுக்கு மேல் குறைவாக பெற்றால், தோல்வியை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X