என் மலர்
விளையாட்டு
I see India have been saved by the weather …. 😜 #WorldTestChampionship
— Michael Vaughan (@MichaelVaughan) June 18, 2021
மும்பை:
இங்கிலாந்தின் சவுத்தம்டனில் இன்று பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் பேட்டியில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இந்திய அணி 6 பேட்ஸ்மேன்கள், 2 சுழற்பந்து வீச்சாளர்கள், 3 வேகப்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்குகிறது.
இந்த நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடும் இந்திய அணிக்கு முன்னாள் கேப்டனும், இந்திய கிரிக்கெட் வாரிய தலைவருமான சவுரவ் கங்குலி ஆலோசனை கூறி உள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் கோப்பையை இந்திய வீரர்கள் வெல்லுவார்கள் என்று நம்புகிறேன். ஆனால் நியூசிலாந்து அணியின் தரம் மற்றும் திறமையை கருத்தில் கொள்ளும்போது அது எளிதாக இருக்காது.
இந்தியாவின் சிறந்த வெளிநாட்டு சுற்றுப்பயணங்களை பார்த்தால் நாம் முதலில் பேட்டிங் செய்யும் போது எப்போதும் போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறோம்.
2002-ம் ஆண்டு லீட்ஸ் அல்லது 2018-ம் ஆண்டு தென்ஆப்பிரிக்காவில் பந்து வீச்சுக்கு சாதகமான சூழ்நிலையில் நாம் முதலில் பேட்டிங் செய்தோம். ஆரம்ப அழுத்தத்தை சமாளித்து ரன்களை எடுத்தோம். அப்படிதான் அந்த போட்டிகளில் வென்றோம்.
காலை வேளையில் மேக மூட்டமாக இருந்தாலும் இந்திய அணி டாஸ் ஜெயித்தால் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்ய வேண்டும். அதுதான் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களில் அணிக்கு சிறப்பாக இருந்தது. ரோகித் சர்மா மற்றும் சுப்மன்கில் ஒரு நல்ல தொடக்கத்தை கொடுக்க வேண்டும். அவர்கள் குறைந்தது 20 ஓவர்களாவது பேட்டிங் செய்ய வேண்டும்.
இது புஜாரா, கோலி மற்றும் ரிஷப்பண்ட் ஆகியோர் நல்ல அத்தளத்தை அமைக்க உதவும்.
கடந்த 30-35 ஆண்டுகளில் இதுதான் சிறந்த நியூசிலாந்து அணி. அவர்கள் இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்துள்ளதால் அதிகமான நம்பிக்கையுடன் இருப்பார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
இப்போட்டியின் ஸ்கோர் மற்றும் மற்ற விவரங்களை மாலைமலர் இணைய தளமான www.maalaimalar.com-ல் லைவாக உடனுக்குடன் காணலாம்.
இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி சவுத்தம்டனில் இன்று தொடங்குகிறது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) சார்பில் நடத்தப்படும் முதலாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் மொத்தம் 9 அணிகள் பங்கேற்றன. ஒவ்வொரு அணிகளும் தலா 6 டெஸ்ட் தொடர்களில் விளையாடின. கொரோனா அச்சத்தால் சில தொடர்கள் ரத்தாகின. இதில் பெற்ற புள்ளிகளின் சதவீதம் அடிப்படையில் டாப்-2 இடங்களை பிடித்த இந்தியாவும், நியூசிலாந்தும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன. ஆஸ்திரேலியா மயிரிழையில் இறுதிசுற்று வாய்ப்பை நழுவ விட்டது.

தனிமைப்படுத்துதல் நடைமுறையை கடைப்பிடிக்க வேண்டும் என்பதற்காக விராட் கோலி தலைமையிலான இந்திய அணியினர் 15 நாட்களுக்கு முன்பே இங்கிலாந்துக்கு சென்று விட்டனர். பயிற்சி ஆட்டங்கள் இல்லாவிட்டாலும் இந்திய அணியினர் தங்களுக்குள் இரு அணியாக பிரிந்து பயிற்சி ஆட்டத்தில் விளையாடி தங்களை தயார்படுத்தி உள்ளனர். இங்கிலாந்து ஆடுகளத்தில் வேகமும், பவுன்சும் அதிகமாக இருக்கும். அதுவும் மேகமூட்டமான சீதோஷ்ண நிலை வந்து விட்டாலோ அல்லது மழை பெய்தாலோ பந்து தாறுமாறாக ‘ஸ்விங்’ ஆகத் தொடங்கி விடும். அதனால் வேகப்பந்து வீச்சை மிகவும் துல்லியமாக கணித்து நிதானமாக செயல்பட வேண்டியது அவசியம். தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மாவும், சுப்மான் கில்லும் நல்ல தொடக்கம் அமைத்து தந்தால் நிச்சயம் சவாலான ஸ்கோரை எட்ட முடியும். மிடில் வரிசையில் கேப்டன் விராட்கோலி, ‘பொறுமையின் சிகரம்’ புஜாரா ஆகியோரைத் தான் அணி அதிகமாக நம்பி இருக்கிறது. ஆஸ்திரேலிய மண்ணில் அதிரடியில் மிரட்டிய இளம் விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்டின் சூறாவளி பேட்டிங்கையும் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்க்கிறார்கள்.
பந்துவீச்சில் வேகப்பந்து வீச்சாளர்கள் ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, இஷாந்த் ஷர்மாவின் தாக்குதல் முக்கிய பங்கு வகிக்கும். அணி நிர்வாகம் நேற்றிரவு அறிவித்த ஆடும் லெவனில் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா ஆகிய இரு சுழற்பந்து வீச்சாளர்களும் இந்த டெஸ்டில் களம் இறங்குவது உறுதி செய்யப்பட்டது. ஆடுகளம் வறண்டு காணப்பட்டால் சுழற்பந்து வீச்சாளர்கள் வெகுவாக தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பு உண்டு.
ஐ.சி.சி. நடத்தும் போட்டிகளில் இந்திய அணி 1983-ம் ஆண்டில் 50 ஓவர் உலக கோப்பை, 2007-ம் ஆண்டில் 20 ஓவர் உலக கோப்பை, 2011-ம் ஆண்டில் 50 ஓவர் உலக கோப்பை, 2002-ம் ஆண்டில் ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பையை இலங்கையுடன் பகிர்வு, 2013-ம் ஆண்டில் சாம்பியன்ஸ் கோப்பை இப்படி 5 கோப்பைகளை வென்று இருக்கிறது.
ஆனால் விராட் கோலி கேப்டன் ஆன பிறகு இந்திய அணி எந்த ஐ.சி.சி. பட்டத்தையும் உச்சி முகர்ந்ததில்லை. அவரது தலைமையில் இந்தியஅணி 2017-ம் ஆண்டில் சாம்பியன்ஸ் கோப்பையில் இறுதிப்போட்டியிலும், 2019-ம் ஆண்டு ஒரு நாள் போட்டி உலக கோப்பையில் அரைஇறுதியிலும் தோல்வி கண்டது.
இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றிகரமான கேப்டன் என்ற பெருமையை பெற்றிருக்கும் 32 வயதான விராட் கோலி சரித்திரத்தில் இடம் பிடிக்க வேண்டும் என்றால் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் வாகை சூட வேண்டியது முக்கியமாகும். அது மட்டுமின்றி ஐ.சி.சி. போட்டிகளில் இந்திய அணி நியூசிலாந்தை புரட்டியெடுத்து 17 ஆண்டுகள் ஆகி விட்டது. அந்த நீண்ட கால சோகத்துக்கு முடிவு கட்டவும் இப்போது அருமையான சந்தர்ப்பம் கனிந்துள்ளது.
நியூசிலாந்து அணியை பொறுத்தவரை சமீபத்தில் இங்கிலாந்து மண்ணில் நடந்த டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது, மனரீதியாக அவர்களின் நம்பிக்கைக்கு உத்வேகம் அளித்துள்ளது. முழங்கை காயத்தில் இருந்து கேப்டன் கேன் வில்லியம்சன் மீண்டு விட்டதால் அது நியூசிலாந்துக்கு மேலும் உற்சாகத்தை தந்துள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் அறிமுக போட்டியிலேயே இரட்டை சதம் விளாசிய கான்வே, கேப்டன் வில்லியம்சன், டாம் லாதம், ராஸ் டெய்லர் ஆகியோர் அவர்களின் பேட்டிங் வரிசைக்கு வலு சேர்க்கிறார்கள்.
எல்லாவற்றுக்கும் மேலாக நியூசிலாந்தின் பந்து வீச்சு அசுர பலம் வாய்ந்ததாக விளங்குகிறது. வேகப்பந்து வீச்சாளர்கள் டிரென்ட் பவுல்ட், டிம் சவுதி, நீல் வாக்னெர் ஆகியோர் நீண்ட காலமாக அபாயகரமான கூட்டணியாக இருக்கிறார்கள். ‘ஸ்விங்’ மற்றும் ‘ஷாட்பிட்ச்’ தாக்குதல் தொடுப்பதில் கில்லாடிகள். வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான சூழல் உருவாகி விட்டால் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு பெரும் குடைச்சலாக இருப்பார்கள்.
நியூசிலாந்து அணி ஐ.சி.சி. போட்டிகளில் இதுவரை 2000-ம் ஆண்டில் சாம்பியன் கோப்பையை மட்டுமே வென்றுள்ளது. 2015 மற்றும் 2019-ம் ஆண்டு 50 ஓவர் உலக கோப்பையில் இறுதிப்போட்டி வரை வந்து தோற்று போனது. கடந்த 7 ஆண்டுகளில் பெரிய அளவில் எழுச்சி பெற்றுள்ள நியூசிலாந்து அணிக்கு உலக அளவிலான கோப்பை ஏக்கத்தை தணிக்க இதைவிட சிறந்த வாய்ப்பு கிட்டாது. ஆக, நியூசிலாந்து வீரர்களும் எல்லா வகையிலும் வரிந்து கட்டி நிற்பார்கள். இரு அணியினரும் ஏறக்குறைய சரிசம பலத்துடன் மல்லுகட்டுவதால் இந்த டெஸ்ட் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
நேரம் இழப்பீடு இன்றி 5 நாட்களும் போட்டி முழுமையாக நடந்து டிராவில் முடிந்தால் கோப்பை இரு அணிகளுக்கும் கூட்டாக பகிர்ந்து அளிக்கப்படும் என்று ஐ.சி.சி. ஏற்கனவே அறிவித்து விட்டது. ஆனால் சவுத்தம்டனில் போட்டி நடக்கும் 5 நாட்களும் மழை குறுக்கீடு இருக்கும் என்று அங்குள்ள வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதில் முதல் நாளில் மழை கொஞ்சம் அதிகமாகவே பெய்யக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு நாளும் மழை மற்றும் மோசமான வானிலையால் ஆட்டம் பாதிக்கப்பட்டால் விரயமாகும் நேரம் முழுமையாக கணக்கிடப்பட்டு அந்த நேரம் மாற்று நாளான (ரிசர்வ் டே) 6-வது நாளில் ஒதுக்கப்பட்டு தொடர்ந்து விளையாட வைக்கப்படும். அதே சமயம் 5-வது நாளுக்குள் முடிவு கிடைத்து விட்டால், நேரம் கணக்கீடு மற்றும் கூடுதல் நாள் தேவை இருக்காது.
இந்த போட்டியில் கோப்பையை உச்சிமுகரும் அணிக்கு கதாயுதத்துடன் ரூ.11¼ கோடியும், 2-வது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.5¾ கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்படும்.
இந்த மைதானத்தில் இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராக 2 டெஸ்டில் விளையாடி இரண்டிலும் தோற்று இருக்கிறது. நியூசிலாந்து இங்கு டெஸ்டில் கால்பதிப்பது இதுவே முதல்முறையாகும். கொரோனா கட்டுப்பாடு காரணமாக இங்கு 4 ஆயிரம் ரசிகர்கள் மட்டுமே நேரில் பார்க்க அனுமதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
போட்டிக்கான இரு அணிகளின் பட்டியல் வருமாறு:-
இந்தியா: ரோகித் சர்மா, சுப்மான் கில், புஜாரா, விராட் கோலி (கேப்டன்), அஜிங்யா ரஹானே, ரிஷாப் பண்ட், அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, பும்ரா, இஷாந்த் ஷர்மா.
நியூசிலாந்து: டிவான் கான்வே, டாம் லாதம், கேன் வில்லியம்சன் (கேப்டன்), ராஸ் டெய்லர், ஹென்றி நிகோல்ஸ் அல்லது வில் யங், வாட்லிங், கைல் ஜாமிசன் அல்லது மேட் ஹென்றி, அஜாஸ் பட்டேல், டிரென்ட் பவுல்ட், டிம் சவுதி, நீல் வாக்னெர்.
இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.
32-வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் அடுத்த மாதம் (ஜூலை) 23-ந் தேதி முதல் ஆகஸ்டு 8-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கான இந்திய பெண்கள் ஆக்கி அணி நேற்று அறிவிக்கப்பட்டது.
அனுபவத்தையும், இளமையையும் சரிசமமான கலவையாக கொண்டுள்ள 16 பேர் கொண்ட இந்திய அணியில் 8 வீராங்கனைகள் 2016-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் விளையாடியவர்கள். 8 வீராங்கனைகளுக்கு இது முதலாவது ஒலிம்பிக் போட்டியாகும். அணியின் கேப்டனாக ராணி ராம்பால் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய பெண்கள் அணி ஒலிம்பிக் போட்டியில் அடியெடுத்து வைப்பது இது 3-வது முறையாகும். ஏற்கனவே இந்திய அணி 1980, 2016-ம் ஆண்டுகளில் தகுதி பெற்று இருந்தது. இந்திய அணி வீராங்கனைகள் தற்போது பெங்களூருவில் உள்ள சாய் பயிற்சி மையத்தில் பயிற்சி மேற்கொண்டு வருகிறது. ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய பெண்கள் ஆக்கி அணி வருமாறு:-
கோல்கீப்பர்: சவிதா, பின்களம்: தீப் கிரேஸ் எக்கா, நிக்கி பிரதான், குர்ஜித் கவுர், உதிதா, நடுகளம்: நிஷா, நேஹா, சுஷிலா சானு, மோனிகா, நவ்ஜோத் கவுர், சலிமா டெடி, முன்களம்: ராணி ராம்பால், நவ்னீத் கவுர், லால்ரெம்சியாமி, வந்தனா கட்டாரியா, ஷர்மிளா தேவி.
16-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் (யூரோ) போட்டி 11 நாடுகளில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 24 அணிகள் 6 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் 16 அணிகள் நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறும்.
இந்த தொடரில் ரோம் நகரில் நேற்று முன்தினம் இரவு நடந்த ‘ஏ’ பிரிவு லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் இத்தாலி அணி, சுவிட்சர்லாந்தை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் 19-வது நிமிடத்தில் கார்னர் வாய்ப்பில் கோலை நோக்கி அடிக்கப்பட்ட பந்தை துள்ளிக்குதித்து தன்வசப்படுத்திய இத்தாலி அணியின் கேப்டன் ஜியார்ஜியோ செலினி அதனை அதிரடியாக கோல்வலைக்குள் அடித்தார். ஆனால் வீடியோ நடுவரின் உதவியுடன் இதனை மறுபரிசீலனை செய்ததில் பந்து செலினி கையில் பட்டது தெரியவந்ததால் அது கோல் இல்லை என்று அறிவிக்கப்பட்டது.
26-வது நிமிடத்தில் இத்தாலி அணி முதல் கோல் அடித்தது. சக வீரர் டொமினிகோ பிரார்டி கடத்தி கொடுத்த பந்தை இத்தாலி அணியின் மானுவல் லோகாடெல்லி கோலாக்கினார். 52-வது நிமிடத்தில் மானுவல் லோகாடெல்லி மீண்டும் ஒரு கோல் அடித்தார். 89-வது நிமிடத்தில் இத்தாலி அணி வீரர் சிரோ இம்மொபிள் இன்னொரு கோல் போட்டார்.
முடிவில் இத்தாலி அணி 3-0 என்ற கோல் கணக்கில் சுவிட்சர்லாந்தை வீழ்த்தி தொடர்ச்சியாக 2-வது வெற்றியை ருசித்தது.
இந்த வெற்றியின் மூலம் இத்தாலி 2-வது சுற்றுக்கு (நாக்-அவுட்) முதல் அணியாக முன்னேறியது. அந்த அணி தனது முதல் ஆட்டத்தில் துருக்கியை வென்று இருந்தது. முதலாவது ஆட்டத்தில் வேல்சுடன் (1-1) டிரா கண்டு இருந்த சுவிட்சர்லாந்து அணி சந்தித்த முதல் தோல்வி இதுவாகும். இத்தாலி அணி தனது கடைசி 29 சர்வதேச போட்டிகளில் தோல்வியை சந்திக்காமல் (24 வெற்றி, 5 டிரா) வீறுநடை போட்டு வருகிறது. அதில் கடைசி 10 ஆட்டங்களில் கோல் எதுவும் விட்டுக்கொடுக்காததும் அடங்கும்.
புச்சாரெஸ்டில் நேற்று நடந்த ‘சி’ பிரிவு லீக் ஆட்டத்தில் உக்ரைன் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வடக்கு மாசிடோனியாவை தோற்கடித்து முதல் வெற்றியை தனதாக்கியது. உக்ரைன் அணியில் ஆன்ட்ரி எர்மாலன்கோ 29-வது நிமிடத்திலும், ரோமன் யாரெம்சக் 34-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். 83-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை உக்ரைன் வீரர் ருஸ்லன் மாலினோவ்ஸ்கி வீணாக்கினார்.
இதே போல் கோபன்ேஹகனில் நடந்த பி பிரிவு ஆட்டத்தில் நம்பர் ஒன் அணியான பெல்ஜியம் 2-1 என்ற கோல் கணக்கில் டென்மார்க்கை தோற்கடித்தது. 2-வது நிமிடத்திலேயே டென்மார்க் கோல் போட்டு அதிர்ச்சி அளித்த போதிலும், பிற்பாதியில் பெல்ஜியம் வீரர்கள் ஹசார்ட் (55-வது நிமிடம்), கெவின் டி புருனே (70-வது நிமிடம்) ஆகியோர் கோல் அடித்து தங்கள் அணியை காப்பாற்றினர். 2-வது வெற்றியை சுவைத்த பெல்ஜியம் அடுத்த சுற்றை உறுதி செய்தது.
இன்று நடைபெறும் லீக் ஆட்டங்களில் சுவீடன்-சுலோவக்கியா (இ பிரிவு, இந்திய நேரம்: மாலை 6.30 மணி), குரோஷியா-செக் குடியரசு (டி பிரிவு, நேரம்: இரவு 9.30 மணி), இங்கிலாந்து-ஸ்காட்லாந்து (டி பிரிவு, நேரம்: நள்ளிரவு 12.30 மணி) ஆகிய அணிகள் மோதுகின்றன.







