என் மலர்
விளையாட்டு



சவுத்தம்டன்:
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) சார்பில் முதலாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி அறிமுகப்படுத்தப்பட்டது.
2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 1-ந்தேதி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி தொடங்கப்பட்டது. டெஸ்டில் விளையாடும் 9 நாடுகள் இதில் பங்கேற்றன.
புள்ளிகள் அடிப்படையில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதி போட்டிக்கு தகுதி பெறும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக இந்த தொடரின் பல போட்டிகள் பாதிக்கப்பட்டது. இதனால் இறுதிப் போட்டிக்கு நுழையும் முறை மாற்றப்பட்டது.
வெற்றி சதவீத அடிப்படையில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதி போட்டிக்கு தகுதி பெறும் என்று அறிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் இறுதிப் போட்டிக்கு விராட்கோலி தலைமையிலான இந்திய அணியும், வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் தகுதி பெற்றன.
இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் இறுதிப் போட்டி இங்கிலாந்தில் உள்ள சவுத்தம்டன் நகரில் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.
இந்திய அணி நியூசிலாந்தை வீழ்த்தி முதல் ஐ.சி.சி. உலக டெஸ்ட் கோப்பையை வெல்லுமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.
இந்திய அணி கடைசியாக நியூசிலாந்துடன் விளையாடிய 2 டெஸ்டிலும் தோற்று இருந்தது. 2020-ம் ஆண்டு பிப்ரவரியில் நியூசிலாந்து மண்ணில் இந்த தோல்வி ஏற்பட்டது.
ஆனால் அதன் பிறகு இந்திய அணி ஆஸ்திரேலியா, இங்கிலாந்துக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் 2-1 என்ற கணக்கிலும் சொந்த மண்ணில் இங்கிலாந்தை 3-1 என்ற கணக்கிலும் வீழ்த்தி இருந்தது. இதனால் விராட்கோலி அணி மிகுந்த நம்பிக்கையுடன் இறுதி போட்டியில் விளையாடும்.
11 பேர் கொண்ட வீரர்கள் தேர்வு அணிக்கு சவாலாக இருக்கும். கூடுதல் பேட்ஸ்மேன் தேவைப்பட்டால் விகாரி களம் இறக்கப்படலாம். ஆல்ரவுண்டருக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டால் ஜடேஜாவுக்கு வாய்ப்பு கிடைக்கும்.
வேகப்பந்து வீரர்களில் முகமதுசமி, பும்ரா இடம் பெறுவார்கள். 3-வது வேகப்பந்து வீரராக தேர்வு பெறுவதில் இசாந்த் சர்மா, முகமதுசிராஜ் இடையே போட்டி நிலவுகிறது. ஆஸ்திரேலிய பயணத்தில் முகமது சிராஜ் சிறப்பாக வீசியதால் அவருக்கு அதிகமான வாய்ப்பு இருக்கிறது. ஆடுகளத்தின் தன்மையை பொறுத்து வீரர்கள் தேர்வு இருக்கும்.
தொடக்க வீரர்களாக ரோகித் சர்மாவும், சுப்மன்கில்லும் களம் இறங்குவார்கள். அதற்கு அடுத்த நிலையில் புஜாரா, கேப்டன் விராட் கோலி, ரகானே, ரிஷப்பண்ட் ஆகியோர் உள்ளனர்.
இங்கிலாந்து ஆடுகளங்களில் விராட்கோலி சிறப்பாக ஆடுவார். அவர் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது. அவர் 2 சதம் உள்பட 727 ரன் எடுத்துள்ளார். ரகானே 556 ரன்னும், புஜாரா 500 ரன்னும் எடுத்துள்ளனர். சுழற்பந்து வீச்சில் தமிழகத்தைச் சேர்ந்த அஸ்வின் தாக்கத்தை ஏற்படுத்துவாரா? என்று எதிர் பார்க்கப்படுகிறது.
நியூசிலாந்து அணி சமீபத்தில் இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் 1-0 என்ற கணக்கில் வீழ்த்தி டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. இதனால் வில்லியம்சன் தலைமையிலான அந்த அணி கூடுதல் பலத்துடன் திகழ்கிறது.
நியூசிலாந்து அணியின் பேட்டிங்கில் கேப்டன் வில்லியம்சன், டாம் லாதம், முன்னாள் கேப்டன் ரோஸ் டைலர், கான்வே ஆகியோரும் பந்துவீச்சில் போல்ட், சவுத்தி, அஜாஸ்படேல் ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.
இரு அணிகளும் நாளை மோதுவது 60-வது டெஸ்ட் ஆகும். இதில் இந்தியா 21-ல், நியூசிலாந்து 12-ல் வெற்றி பெற்றுள்ளன. 26 டெஸ்ட் டிரா ஆனது.
இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் இடையே நடந்த 2-வது டெஸ்ட்டுக்கான ஆடுகளம்போல உலக டெஸ்ட் இறுதிப் போட்டிக்கான பிட்ச் இருக்கும் என கருதப்படுகிறது.
இந்த டெஸ்ட் போட்டி இந்திய நேரடிப்படி மாலை 3.30 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெவிலிஷனில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.), டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் நம்பர் ஒன் இடத்தை இழந்து இருக்கிறார்.
முழங்கை காயம் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் விளையாடாததால் 9 புள்ளிகளை பறிகொடுத்த வில்லியம்சன் (886 புள்ளி) 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். இதனால் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் சுமித் (891 புள்ளி) மீண்டும் ‘நம்பர் ஒன்’ இடத்துக்கு முன்னேறினார். அவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்துக்கு பிறகு மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார். ஆஸ்திரேலிய வீரர் லபுஸ்சேன் (878 புள்ளி) 3-வது இடத்தில் நீடிக்கிறார். நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சோபிக்காத இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் (797 புள்ளி) ஒரு இடம் சறுக்கி 5-வது இடத்தை பெற்றுள்ளார். இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி (814 புள்ளி) ஒரு இடம் ஏற்றம் கண்டு 4-வது இடத்தை பிடித்து இருக்கிறார். இந்திய வீரர்கள் ரிஷாப் பண்ட், ரோகித் சர்மா (தலா 747 புள்ளி) கூட்டாக 6-வது இடத்தில் தொடருகின்றனர்.
பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் (908 புள்ளி) முதலிடத்திலும், இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஆர்.அஸ்வின் (850 புள்ளி) 2-வது இடத்திலும் நீடிக்கின்றனர். ஆல்-ரவுண்டர்கள் தரவரிசையில் வெஸ்ட்இண்டீஸ் வீரர் ஜாசன் ஹோல்டர் (412 புள்ளி) முதலிடத்திலும், இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா (386 புள்ளி) 2-வது இடத்திலும், ஆர்.அஸ்வின் (353 புள்ளி) 4-வது இடத்திலும் தொடருகின்றனர்.
சவுத்தம்டன்:
உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் இறுதி போட்டி இங்கிலாந்தில் உள்ள சவுத்தம்டன் நகரில் வருகிற 18-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை நடக்கிறது.
இதில் விராட் கோலி தலைமையிலான இந்தியா- வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
உலக டெஸ்ட் இறுதிப் போட்டிக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. வாஷிங்டன் சுந்தர், அக்ஷர் படேல், ஷர்துல் தாகூர், லோகேஷ் ராகுல், மயங்க் அகர்வால் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. அணி விவரம் வருமாறு:-
விராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா, சுப்மன் கில், புஜாரா, ரகானே, ரிஷப் பண்ட், அஸ்வின், ஜடேஜா, முகமது ஷமி, பும்ரா, இஷாந்த் சர்மா, முகமது சிராஜ், விர்த்திமான் சஹா, உமேஷ் யாதவ், விகாரி.
இந்தநிலையில் உலக டெஸ்ட் இறுதிப்போட்டிக்கு முன்பு பயிற்சி ஆட்டத்தில் விளையாடாதது பாதகமே என்று இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவரான புஜாரா தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
நியூசிலாந்து அணி உலக டெஸ்ட் இறுதிப்போட்டிக்கு முன்பு இங்கிலாந்துடன் 2 போட்டியில் விளையாடி உள்ளது. இதனால் அந்த அணி இங்கிலாந்தில் உள்ள சூழ்நிலையை நன்கு அறிந்து இருப்பார்கள். அவர்கள் எல்லாவகையிலும் தயாராக உள்ளார்கள். அதேநேரத்தில் இந்திய அணி பயிற்சி ஆட்டங்களில் விளையாடாமல் உலக டெஸ்ட் இறுதிப்போட்டியில் ஆடுவது பாதகமே.
ஆனாலும் நாங்கள் நியூசிலாந்து அணியை எல்லா வகையிலும் சந்திக்க தயாராக இருக்கிறோம். அதற்காக நாங்கள் மெத்தனமாக இருக்க மாட்டோம். எங்கள் அணியின் பந்து வீச்சு வலுவானதாக இருக்கிறது.
20 ஓவர் உலக கோப்பை இறுதிப்போட்டி, ஒருநாள் போட்டி உலக கோப்பை இறுதி ஆட்டம் ஆகியவற்றை போலவே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியும் மிகப்பெரியதாகும்.
இவ்வாறு புஜாரா கூறி உள்ளார்.
My India XI:
— Wasim Jaffer (@WasimJaffer14) June 16, 2021
1- MI
2- KKR
3- CSK
4- RCB
5- DC
6- DC
7- CSK
8- DC
9- DC
10- PBKS
11- MI
Watch me decode this + thoughts on Southampton pitch + Potential weakness in NZ in this video here which also has a surprise guest😉https://t.co/trEVUgCAqx
#WTCFinalpic.twitter.com/XH0mKhbNnl
டாக்கா:
ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி 1998-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதுவரை 8 போட்டிகள் நடந்துள்ளது. கடைசியாக 2017-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த போட்டியில் பாகிஸ்தான் அணி இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றது.
இந்த நிலையில், 2025-ம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி போட்டியை நடத்த வங்காளதேசம் விருப்பம் தெரிவித்துள்ளது. இதை அந்நாட்டு கிரிக்கெட் வாரிய தலைவர் நஜூமுல் ஹசன் தெரிவித்தார். போட்டியை நடத்த தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் தங்களால் செய்ய முடியும் என்று அவர் கூறியுள்ளார்.
1998-ம் ஆண்டு அறிமுக ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபியை வங்காளதேசம் தான் நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டியில் விளையாடுகிறது. இதில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி (4 நாள் ஆட்டம்) பிரிஸ்டலில் உள்ள கவுண்டி மைதானத்தில் இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது. மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய பெண்கள் அணி 2014-ம் ஆண்டு நவம்பர் மாதத்துக்கு பிறகு விளையாடும் முதல் டெஸ்ட் இதுவாகும். அதாவது 7 ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்ட் போட்டியில் மீண்டும் கால்பதிக்கும் இந்திய அணி எப்படி செயல்பட போகிறது என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்தியா-இங்கிலாந்து அணிகள் இதுவரை 13 டெஸ்டில் நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 2-ல் இ்ந்தியாவும், ஒன்றில் இங்கிலாந்தும் வெற்றி கண்டன. 10 ஆட்டங்கள் டிரா ஆனது. இங்கிலாந்து மண்ணில் அந்த அணிக்கு எதிராக இந்திய அணி இதுவரை டெஸ்டில் தோற்றது கிடையாது. 8 ஆட்டங்களில் விளையாடி 2-ல் வெற்றியும், 6-ல் டிராவும் சந்தித்து இருக்கிறது.
அதே சமயம் ஹீதர் நைட் தலைமையிலான இங்கிலாந்து அணி சொந்த மண்ணில் இந்தியாவுக்கு எதிராக முதல் வெற்றியை பதிவு செய்ய தீவிரம் காட்டுகிறது. எனவே டெஸ்டில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது. இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை சோனி சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
இந்த போட்டியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ 2 கோல் அடித்தார். இதன்மூலம் 36 வயதான ரொனால்டோ ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் வரலாற்றில் அதிக கோல்கள் (மொத்தம் 11 கோல்) அடித்த வீரர் என்ற புதிய சாதனையை படைத்தார்.
இதற்கு முன் பிரான்சின் மைக்கேல் பிளாட்டினி 9 கோல் போட்டதே சாதனையாக இருந்தது. அவரது சாதனையை ரொனால்டோ முறியடித்துள்ளார்.






