search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கெய்க்வாட், ஜடேஜா
    X
    கெய்க்வாட், ஜடேஜா

    ஜடேஜாவை எக்காரணம் கொண்டும் சேர்க்காமல் விட்டுவிடக்கூடாது: முன்னாள் பயிற்சியாளர் சொல்கிறார்

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் இந்தியா மூன்று வேகப்பந்து வீச்சாளர்களுடன் விளையாடுமா? அல்லது 4 பேருடன் விளையாடுமா? என்பது இன்னும் உறுதி செய்யப்படாமல் இருக்கிறது.
    இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டம் சவுத்தாம்ப்டனில் நாளை தொடங்குகிறது. இரண்டு அணிகளிலும் ஆடும் லெவன் அணியில் இடம் பிடிக்கும் வீரர்கள் யார்? யார்? என்பதை தெரிந்து கொள்வதில்தான் ரசிகர்களும், விமர்சகர்களும் ஆர்வமாக உள்ளனர்.

    நியூசிலாந்து ஐந்து பந்து வீச்சாளர்களுடன் விளையாடும். அதில் நான்கு வேகப்பந்து வீச்சாளர்கள் இடம் பிடிப்பது உறுதி. இந்திய அணியிலும் ஐந்து பந்து வீச்சாளர்கள் விளையாடுவார்கள் என்பது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது.

    இந்தியா தற்போது வரை மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள், இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள் என்றால், அவர்கள் அஷ்வின் மற்றும் ஜடேஜா என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது.

    ஒருவேளை ஒரு சுழற்பந்து வீச்சாளர்கள் போதும், நான்கு வேகப்பந்து வீச்சாளர்களுடன் விளையாடினால் நன்றாக இருக்கும் என அணி நிர்வாகம் நினைத்தால் அஷ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோரில் ஒருவர்தான் இடம்பெற முடியும். இருவரில் அஷ்வின் இடம் பிடிப்பார். இப்படி ஒரு சூழ்நிலை ஏற்பட்டால் ஜடேஜா வெளியில் இருக்க வேண்டிய நிலை ஏற்படும்.

    இந்த நிலையில் மூன்று துறைகளிலும் சிறப்பாக செயல்படும் ஜடேஜாவை எக்காரணம் கொண்டும் ஆடும் லெவனில் இருந்து நீக்கக்கூடாது. அது இந்திய அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் கெய்க்வாட் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து கெய்க்வாட் கூறுகையில் ‘‘ஜடேஜாவை எக்காரணம் கொண்டும் ஆடும் லெவன் அணியில் நீக்கக் கூடாது. அவர் மூன்று துறைகளிலும் இந்திய அணிக்கு முக்கியமான சொத்து. அவர் டிரிபிள்-பிளஸ். மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் இங்கிலாந்து சீதோஷ்ண நிலையில் ஆதிக்கம் செலுத்த முடியும் என நான் நினைக்கவில்லை. நான்கு வேகப்பந்து வீச்சாளர்கள் இருந்தால் உதவியாக இருக்கும். மூன்று பேரும் போதுமானது.

    டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் விளையாடும் இந்திய அணி வீரர்கள்

    அணிக்கு ஒரு சுழற்பந்து வீச்சாளர் தேவை என்றால் அஷ்வின் சரியான நபர். ஆனால், ஜடேஜாவும் அணியில் சேர்க்கப்பட்டு, அவர் விளையாட வேண்டும். எத்தனை சர்வதேச அணிகள் தரம் வாய்ந்த இடது கை சுழற்பந்து வீச்சாளர்களை பெற்றுள்ளது?. ஜடேஜா உங்களுக்கு பந்து வீச்சாளராக மட்டும் அல்ல. பேட்ஸ்மேனாகவும், பீல்டராகவும் நிரூபித்துள்ளார். இதைவிட உங்களுக்கு வேற என்ன வேண்டும்?.

    நியூசிலாந்தை போன்று இந்தியாவும் சில போட்டிகளில் விளையாடியிருக்க வேண்டும். நியூசிலாந்து அணி ஏற்கனவே விளையாடி சீதோஷ்ணநிலைக்கு ஏற்ப அவர்களை தயார் செய்திருப்பார்கள். இந்தியாவுக்கும் இங்கிலாந்து மண்ணில் விளையாடிய அனுபவம் உள்ளது. இருந்தாலும் இறுதியாக சீதோஷ்ணநிலை எல்லாவற்றிற்கும் முக்கியமானது அல்ல என்பது எல்லோருக்கும் தெரியும். இங்கிலாந்தில் சிறந்த கிரிக்கெட் ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்’’ என்றார்.
    Next Story
    ×