என் மலர்tooltip icon

    விளையாட்டு

    சர்வதேச அளவில் 7,500 ரன்கள் என்ற மைல் கல்லை அதிவேகத்தில் எட்டிய வீரர்களில் விராட் கோலி 9-வது இடத்தில் உள்ளார்.

    சவுத்தம்டன்:

    இந்தியா- நியூசிலாந்து அணிகள் இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இங்கிலாந்தில் உள்ள சவுத்தம்டனில் நேற்று முன்தினம் தொடங்குவதாக இருந்தது. ஆனால் மழையால் முதல் நாள் ஆட்டம் ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது.

    நேற்றைய 2-வது நாள் ஆட்டம் மழை பாதிப்பு இல்லாமல் திட்டமிட்ட நேரத்தில் தொடங்கியது. முதலில் விளையாடிய இந்திய அணி ஆட்டத்தின் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 146 ரன் எடுத்து இருந்தது.

    கேப்டன் விராட் கோலி 44 ரன்னும், ரகானே 29 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் உள்ளனர். ரோகித் சர்மா 34 ரன்னில் ஜேமிசன் பந்திலும், சுப்மன்கில் 28 ரன்னில் வாக்னர் பந்திலும், புஜாரா 8 ரன்னில் போல்ட் பந்திலும் ஆட்டம் இழந்தனர்.

    போதிய வெளிச்சம் இல்லாததால் நேற்றைய ஆட்டம் பாதிக்கப்பட்டது. 64.4 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டது. இன்றைய 3-வது நாள் ஆட்டம் மாலை 3 மணிக்கு தொடங்குகிறது.

    நேற்றைய டெஸ்ட் போட்டிக்கு கேப்டன் பொறுப்பு வகித்ததன் மூலம் விராட் கோலி புதிய சாதனை படைத்தார். அதிக டெஸ்ட் போட்டிக்கு கேப்டனாக இருந்த இந்தியர் என்ற வரலாற்றை படைத்தார். அவர் டோனி சாதனையை முறியடித்தார்.

    டோனி 60 டெஸ்டில் கேப்டனாக இருந்துள்ளார். இதில் 27 டெஸ்டில் வெற்றி கிடைத்தது. 18-ல் தோல்வி ஏற்பட்டது. 15 டெஸ்டு டிரா ஆனது. அவர் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று விட்டார். டெஸ்டில் இருந்து கடந்த 2014-ம் ஆண்டு ஓய்வு பெற்றார்.

    விராட் கோலி 61 டெஸ்டுக்கு கேப்டனாக பணியாற்றி உள்ளார். சர்வதேச அளவில் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த கிரேமி சுமித் ஒருவரே 100 டெஸ்டுக்கு கேப்டனாக இருந்துள்ளார். அவர் 109 போட்டிக்கு கேப்டன் பொறுப்பு வகித்தார். அவருக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆலன் பார்டர் 93 டெஸ்டுக்கு கேப்டனாக இருந்துள்ளார்.

    நேற்றைய ஆட்டத்தில் 10 ரன்னை தொட்ட போது விராட் கோலி 7,500 ரன்னை எடுத்தார். 154-வது இன்னிங்சில் அவர் இந்த ரன்னை தொட்டார். கவாஸ்கரும் இதே இன்னிங்சில் தான் 7,500 ரன்னை எடுத்து இருந்தார். தெண்டுல்கர் 144-வது இன்னிங்சில் இந்த ரன்னை எடுத்து இருந்தார்.

    சர்வதேச அளவில் 7,500 ரன்கள் என்ற மைல் கல்லை அதிவேகத்தில் எட்டிய வீரர்களில் விராட் கோலி 9-வது இடத்தில் உள்ளார். இந்திய வீரர்களில் அவருக்கு 4-வது இடம் கிடைத்துள்ளது. 

    அறிமுக டெஸ்டிலேயே கலக்கிய இந்திய வீராங்கனை ஷபாலி வர்மா முதல் இன்னிங்சில் 96 ரன்னும், 2வது இன்னிங்சில் 63 ரன்னும் எடுத்தார்.
    பிரிஸ்டோல்:

    இந்தியா-இங்கிலாந்து பெண்கள் அணிகள் இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி (4 நாள் ஆட்டம்) பிரிஸ்டோலில் நடந்தது.

    டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட் செய்தது. அந்த அணி முதல் இன்னிங்சில் 121.2 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 396 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. கேப்டன் நைட் 95 ரன்னும், பியூமாண்ட் 66 ரன்னும் எடுத்தனர், அசோபியா டுங்லி 74 ரன்னுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

    இந்தியா சார்பில் ஸ்நே ரானா 4 விக்கெட்டும், தீப்தி ஷர்மா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    அதன்பின், இந்திய அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீராங்கனைகளான ஸ்மிருதி மந்தனா, ஷபாலி வர்மா ஆகியோர் நல்ல தொடக்கம் அமைத்தனர். முதல் விக்கெட்டுக்கு 167 ரன்கள் சேர்த்த நிலையில் இந்த ஜோடி பிரிந்தது.

    அறிமுக டெஸ்டிலேயே கலக்கிய ஷபாலி வர்மா 96 ரன்னில் கேட்ச் ஆனார். மந்தனா 74 ரன்னில் வெளியேறினார். மற்ற வீராங்கனைகள் நிலைத்து நிற்கவில்லை. இதனால் இந்திய அணி முதல் இன்னிங்சில் 231 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.

    இங்கிலாந்து சார்பில் எக்கிள்ஸ்டோன் 4 விக்கெட்டும், நைட் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    பாலோ ஆன் பெற்ற இந்திய அணி இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்தது. ஷபாலி வர்மா சிறப்பாக ஆடி அரை சதமடித்தார். அவர் 63 ரன்னில் ஆட்டமிழந்தார். தீப்தி ஷர்மா 54 ரன்னும், பூனம் ராவத் 39 ரன்னும் எடுத்தனர்.

    ஸ்நே ரானா

    ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் ஸ்நே ரானா பொறுப்புடன் ஆடி 80 ரன்னுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அவருக்கு டனியா பாட்டியா நன்கு ஒத்துழைத்தார். அவர் 44 ரன்னுடன் களத்தில் உள்ளார். இந்த ஜோடி 104 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் உள்ளது.

    இறுதியில், இந்தியா இரண்டாவது இன்னிங்சில் 8 விக்கெட்டுக்கு 344 ரன்கள் எடுத்தது. 

    இங்கிலாந்து சார்பில் எக்கிள்ஸ்டோன் 4 விக்கெட்டும், நடாலி சீவர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதனால் இரு அணிகளுக்கு இடையிலான 4 நாள் கொண்ட ஒரே ஒரு டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. ஆட்ட நாயகி விருது இரு இன்னிங்சிலும் அரை சதமடித்து அசத்திய ஷபாலி வர்மாவுக்கு அளிக்கப்பட்டது.
    இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப்பின் முதல் நாள் ஆட்டம் தொடர் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது.
    சவுத்தம்டன்:

    இந்தியா- நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது உலகடெஸ்ட்- சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தின் சவுத்தம்டனில் நடைபெற்று வருகிறது.

    தொடர் மழையால் ‘டாஸ்’ கூட போடப்படாத நிலையில் முதல் நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. 

    இந்நிலையில், 2-வது நாளான இன்று டாஸ் போடப்பட்டதில் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்ஸ்சன் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.
     
    அதன்படி, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சுப்மன் கில் மற்றும் ரோகித் சர்மா களமிறங்கினர். 

    இருவரும் நிதான ஆட்டத்தை தொடர்ந்தனர், கிடைத்த சந்தர்ப்பத்தில் பவுண்டரிகளும் அடித்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 62 ரன்கள் சேர்த்தது.

     ரோகித் சர்மா

    அணியின் எண்ணிக்கை 62 ஆக இருக்கும்போது ரோகித் சர்மா 34 ரன்னில் அவுட்டானார். அவரை தொடர்ந்து சுப்மன் கில்லும் 28 ரன்னில் வெளியேறினார்.

    அடுத்து இறங்கிய புஜாரா 8 ரன்னில் வெளியேறி அதிர்ச்சி அளித்தார். 

    தொடர்ந்து இறங்கிய கேப்டன் விராட் கோலி பொறுப்புடன் விளையாடினார், அவருக்கு ரகானேவும் நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார். இந்த ஜோடி பொறுமையாக விளையாடி 58 ரன்கள் சேர்த்தது. அணியின் எண்ணிக்கை 146 ஆக இருந்தபோது போதிய வெளிச்சமின்மையால் ஆட்டம் முன்னதாக முடித்துக் கொள்ளப்பட்டது.

    இரண்டாம் நாளில் இந்தியா 66.4 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்துள்ளது. விராட் கோலி 44 ரன்னுடனும், ரகானே 29 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    நியூசிலாந்து சார்பில் போல்ட், ஜேமிசன் மற்றும் வாக்னர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    முன்னாள் தடகள வீரர் மில்கா சிங் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், டெஸ்ட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி வீரர்கள் கருப்பு பட்டை அணிந்து விளையாடினர்.
    முன்னாள் தடகள வீரர் மில்கா சிங் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் டெஸ்ட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி வீரர்கள் கருப்பு பட்டை அணிந்து விளையாடி வருகின்றனர்.
    சவுத்தம்டன்:

    இந்தியா- நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டி இங்கிலாந்தின் சவுத்தம்டனில் நேற்று தொடங்க இருந்தது. 

    தொடர் மழை காரணமாக ‘டாஸ்’ கூட போடப்படாத நிலையில் முதல் நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில், 2-வது நாளான இன்று மழை பெய்யாததால், ஆட்டம் நடைபெற சாதகமான சூழல் ஏற்பட்டது. இதையடுத்து, டாஸ் போடப்பட்டதில் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்ஸ்சன் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி, இந்திய அணி பேட்டிங் செய்கிறது. தொடக்க ஆட்டக்காரர்களாக சிப்மன் கில் மற்றும் ரோகித் சர்மா களமிறங்கினர். 

    மில்கா சிங்

    இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் தடகள வீரர் மில்கா சிங் சிகிச்சை பலனின்றி காலமான செய்தி வீரர்களுக்கு தெரியவந்தது. இதனையடுத்து மில்கா சிங் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், டெஸ்ட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி வீரர்கள் கருப்பு பட்டை அணிந்து விளையாடி வருகின்றனர்.
    நியூசிலாந்துக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்திய அணி ஏற்கனவே அறிவித்த ஆடும் லெவனை மாற்றவில்லை
    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் கோலி தலைமையிலான இந்திய அணியும், வில்லியம்சன் தலைமயிலான நியூசிலாந்து அணியும் நேற்று மோத இருந்த நிலையில் மழை காரணமாக முதல் நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. 

    இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இன்று தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    இந்திய அணியில் இடம் பிடித்துள்ள 11 வீரர்கள் விவரம்:-

    1. விராட் கோலி (கேப்டன்), 2. ரோகித் சர்மா, 3. ஷுப்மான் கில், 4. புஜாரா, 5. ரகானே, 6. ரிஷப் பண்ட், 7. ஜடேஜா, 8.  அஷ்வின், 9. பும்ரா, 10. இஷாந் சர்மா, 11. முகமது ஷமி.

    நியூசிலாந்து: 

    டாம் லாதம், டிவான் கான்வே, கேன் வில்லியம்சன் (கேப்டன்), ராஸ் டெய்லர், ஹென்றி நிகோல்ஸ், வாட்லிங், கைல் ஜாமிசன், கொலின் டி கிராண்ட்ஹோம், டிரென்ட் பவுல்ட், டிம் சவுதி, நீல் வாக்னெர்.

    செக்குடியரசு- குரோஷியா அணிகள் (‘டி’ பிரிவு) மோதிய மற்றொரு ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது.

    லண்டன்:

    ஐரோப்பிய கண்டத்தில் உள்ள நாடுகள் மட்டும் பங்கேற்ற “யூரோ” கோப்பை கால்பந்து போட்டி கடந்த 11-ந் தேதி தொடங்கியது. 11 நகரங்களில் இந்த போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

    ‘இ’ பிரிவில் நேற்று நடந்த ஆட்டத்தில சுவீடன் 1-0 என்ற கோல் கணக்கில் சுலோவாக்கியாவை வீழ்த்தியது. போர்ஸ்பெர்க் 77-வது நிமிடத்தில் பெனால்டி மூலம் இந்த கோலை அடித்தார். சுவீடன் பெற்ற முதல் வெற்றியாகும். அந்த அணி 4 புள்ளியுடன் முதலிடத்தில் உள்ளது. சுலோவாக்கியா முதல் தோல்வியை தழுவியது. அந்த அணி 3 புள்ளியுடன் 2-வது இடத்தில் உள்ளது.

    செக்குடியரசு- குரோஷியா அணிகள் (‘டி’ பிரிவு) மோதிய மற்றொரு ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது. 37-வது நிமிடத்தில் பேட்ரிக்ஸ்கிக் (செக் குடியரசு) பெனால்டி மூலம் கோல் அடித்தார். 47-வது நிமிடத்தில் குரோஷியா அணிக்காக இவான் பெர்சிச் கோல் அடித்தார்.

    இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு நடந்த ஆட்டத்தில் இங்கிலாந்து-ஸ்காட்லாந்து ( ‘டி’ பிரிவு ) மோதின.

    இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்று 2 -வது சுற்றுக்கு முன்னேறும் என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த போட்டி கோல் எதுவுமின்றி டிரா ஆனது. இதனால் இங்கிலாந்து மிகுந்த ஏமாற்றம் அடைந்தது.

    இந்தப் பிரிவில் செக் குடியரசு, இங்கிலாந்து அணிகள் ஒரு வெற்றி, ஒரு டிராவுடன் 4 புள்ளிகள் பெற்றுள்ளன. குரோஷியா, ஸ்காட்லாந்து அணிகள் ஒரு டிரா, ஒரு தோல்வியுடன் 1 புள்ளிகள் பெற்றுள்ளன.

    இன்று மாலை 6.30 மணிக்கு ‘எப்’ பிரிவில் நடைபெறும் ஆட்டத்தில் பிரான்ஸ்-அங்கேரி மோதுகின்றன. பிரான்ஸ் வெற்றி பெற்றால் 2-வது சுற்றுக்கு முன்னேறும்.

    இதேபிரிவில் 9.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் போர்ச்சுக்கல்- ஜெர்மனி அணிகள் மோதுகின்றன. ஜெர்மனி அணிக்கு இந்த ஆட்டம் முக்கியமானது. முதல் ஆட்டத்தில் பிரான்சிடம் தோற்றதால் வெற்றிபெற வேண்டிய நெருக்கடி உள்ளது.

    போர்ச்சுக்கல் தொடக்க ஆட்டத்தில் அங்கேரியை 3-0 என்ற கோல் கணக்கில் வென்று இருந்தது. இதனால் ஜெர்மனியை வீழ்த்தினால் நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறும்.

    நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் ஸ்பெயின்-போலந்து (‘இ’ பிரிவு) மோதுகின்றன. ஸ்பெயின் அணி தொடக்க ஆட்டத்தில் சுவீடனுடன் கோல் எதுவுமின்றி டிரா செய்தது. 2-வது சுற்றுக்கு முன்னேற இந்த ஆட்டத்தில் ஜெர்மனி வெற்றி பெற வேண்டும்.

    ஆட்டத்தின் 13-வது நிமிடத்தில் ரோட்ரிக்ஸ் அர்ஜென்டினா அணிக்காக இந்த கோலை அடித்தார். 2-வது கோலை அடிக்க அந்த அணி கடுமையாக போராடியது. ஆனால் முடியவில்லை.

    பிரேசில்லா:

    47-வது கோபா கால்பந்து போட்டி பிரேசிலில் நடைபெற்று வருகிறது.

    இந்திய நேரப்படி இன்று அதிகாலை நடந்த ஆட்டத்தில் அர்ஜென்டினா- உருகுவே (‘ஏ’ பிரிவு) அணிகள் மோதின. இதில் அர்ஜென்டினா 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

    ஆட்டத்தின் 13-வது நிமிடத்தில் ரோட்ரிக்ஸ் அர்ஜென்டினா அணிக்காக இந்த கோலை அடித்தார். 2-வது கோலை அடிக்க அந்த அணி கடுமையாக போராடியது. ஆனால் முடியவில்லை. இதேபோல உருகுவே அணியும் பதில் கோல் அடித்து சமன் செய்ய முயன்றது. ஆனால் அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது.

    அர்ஜென்டினா பெற்ற முதல் வெற்றி இதுவாகும். அர்ஜென்டினா தொடக்க ஆட்டத்தில் சிலியுடன் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா செய்தது. அந்த அணி 3-வது ஆட்டத்தில் பராகுவேயை எதிர்கொள்கிறது.

    இதே பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் சிலி 1-0 என்ற கோல் கணக்கில் பொலிவியாவை தோற்கடித்தது. சிலி அணிக்காக 10-வது நிமிடத்தில் பிரர்டென் கோல் அடித்தார். சிலி அணியும் முதல் வெற்றியை பெற்றது. பொலிவியா 2-வது தோல்வியை தழுவியது. சிலி அணி 3-வது போட்டியில் உருகுவேவை எதிர்கொள்கிறது. 

    விராட் கோலி தலைமையிலான இந்தியா- வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணிகள் இடையேயான டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது.

    சவுத்தம்டன்:

    விராட் கோலி தலைமையிலான இந்தியா- வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணிகள் இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டம் இங்கிலாந்தில் உள்ள சவுத்தம்டன் நகரில் நேற்று தொடங்குவதாக இருந்தது.

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) முதல்முறையாக நடத்தும் இந்த போட்டியின் இறுதி ஆட்டத்துக்கு அதிக எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் முதல் நாள் ஆட்டத்திலேயே மழை விளையாடி விட்டது. மழை காரணமாக ஒரு பந்து கூட வீச முடியாமல் ரத்து செய்யப்பட்டது.

    இந்த போட்டிக்கான விதிமுறைகள் குறித்து ஐ.சி.சி. ஏற்கனவே வெளியிட்டு இருந்தது. மழையால் ஆட்டம் பாதிக்கப்படும்போது மாற்று நாளில் போட்டியை நடத்தலாம் என்று தெரிவித்தது. 23-ந் தேதியை அதாவது 6-வது நாளை மாற்று நாளாக அறிவித்தது. இதுகுறித்து போட்டி நடுவர் முடிவு செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தது.

    முதல் நாளில் 6 மணி நேர இழப்பு ஏற்பட்டு விட்டதால் மாற்று நாளில் இந்த போட்டி நடைபெற வாய்ப்பு இருக்கிறது. இதனால் 6-வது நாளில் இந்த டெஸ்ட் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து போட்டி நடுவர் 5-வது நாள் ஆட்டத்தின்போதுதான் தனது முடிவை அறிவிப்பார்.

    இன்று 2-வது நாள் ஆட்டம் நடக்கிறது. வானிலை அறிவிப்புபடி அங்கு லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

    நவோமி ஒசாகா தற்போது தனிப்பட்ட முறையில் தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் நேரத்தை செலவிட்டு வருகிறார்.
    லாஸ் ஏஞ்சல்ஸ்:

    உலகின் 2-ம் நிலை டென்னிஸ் வீராங்கனையும், 4 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவருமான நவோமி ஒசாகா (ஜப்பான்) சமீபத்தில் பிரெஞ்ச் ஓபனில் முதலாவது சுற்றில் வெற்றி பெற்றதுடன் தொடரில் இருந்து பாதியிலேயே விலகினார். வழக்கமான செய்தியாளர் சந்திப்பு நடைமுறையை தவிர்த்ததால் அபராதத்திற்கு உள்ளான ஒசாகா, தான் மிகுந்த மன அழுத்தத்திற்கும், பதற்றத்திற்கும் உள்ளாகி இருப்பதாகவும், அதில் இருந்து மீள்வதற்கு ஓய்வு தேவைப்படுவதாகவும் அப்போது கூறினார்.

    இந்த நிலையில் வருகிற 28-ந்தேதி லண்டனில் தொடங்கும் விம்பிள்டன் டென்னிசில் பங்கேற்பதில்லை என்று 23 வயதான ஒசாகா முடிவு எடுத்துள்ளார்.

    இதை உறுதிப்படுத்திய அவரது செய்தி தொடர்பாளர் ஸ்டூவர்ட் டுகிட், ‘இந்த ஆண்டில் ஒசாகா விம்பிள்டனில் ஆடமாட்டார். தற்போது தனிப்பட்ட முறையில் தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் நேரத்தை செலவிட்டு வருகிறார். டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்குள் அவர் தயாராகி விடுவார். உள்நாட்டு ரசிகர்களின் முன்னிலையில் ஒலிம்பிக்கில் களம் காண ஆர்வமுடன் இருக்கிறார்’ என்றார்.

    முன்னதாக ஸ்பெயின் வீரர் ரபெல் நடாலும் விம்பிள்டனில் இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.
    யூரோ கோப்பை கால்பந்து தொடரில் சுவீடன், செக் குடியரசு மற்றும் இங்கிலாந்து அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளன.
    செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் நேற்று நடந்த ‘இ’ பிரிவு லீக் ஆட்டம் ஒன்றில் சுவீடன்-சுலோவாகியா அணிகள் சந்தித்தன.

    முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதனால் 0-0 என சமனிலையில் இருந்தது.

    இரண்டாவது பாதியில் ஆட்டத்தின் 77வது நிமிடத்தில் தனக்கு கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை சுவீடன் வீரர் எமில்ஸ் போர்ஸ் பெர்க் கோலாக்கினார். இறுதியில், சுவீடன் அணி 1-0 என்ற கோல் கணக்கில் சுலோவாகியாவை வீழ்த்தியது.

    இரவில் கிளாஸ்கோவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் குரோஷியா அணி, செக் குடியரசை (டி பிரிவு) எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது. எனினும், செக் குடியரசு நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது.

    இன்று அதிகாலை நடந்த மற்றொரு ஆட்டத்தில் இங்கிலாந்து, ஸ்காட்லாந்து அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் இரு அணி வீரர்களாலும் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை.

    இறுதியில், இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 0 - 0 என சமனில் முடிந்தது. ஆனாலும் இங்கிலாந்து அணி அடுத்த சுற்றுவாய்ப்பை தக்கவைத்துக் கொண்டது.
    இங்கிலாந்து பெண்கள் அணிக்கெதிராக இந்திய வீராங்கனை ஷபாலி வர்மா இரண்டு இன்னிங்சிலும் 50 ரன்களுக்கு மேல் எடுத்து சாதனைப் படைத்துள்ளார்.
    இங்கிலாந்து- இந்தியா பெண்கள் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் உள்ள பிரிஸ்டோலில் நடைபெற்று வருகிறது.

    இந்திய அணியில் 17 வயது 139 நாட்களே ஆன இளம் வீராங்கனை ஷபாலி வர்மா அறிமுகமானார். முதல் இன்னிங்சில் 96 ரன்கள் எடுத்து சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். 2-வது இன்னிங்சிலும் சிறப்பாக விளையாடினார். இன்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் ஆட்டமிழக்காமல் 55 ரன்கள் எடுத்துள்ளார்.

    இதனால் டெஸ்டின் இரண்டு இன்னிங்சிலும் 50 ரன்களுக்கு மேல் அடித்த இளம் கிரிக்கெட்டர் வரிசையில் சச்சின் தெண்டுல்கருக்கு அடுத்த இடத்தை பிடித்துள்ளார்.

    சச்சின் தெண்டுல்கர் 1990-ம் ஆண்டு 17 வயது 107 நாட்கள் ஆகும்போது இரண்டு இன்னிங்சிலும் இங்கிலாந்துக்கு எதிராக 50 ரன்கள் எடுத்த இளம் வீரர் என்ற பெருமையை பெற்றிருந்தார்.

    ஷபாலி வர்மா

    தற்போது ஷபாலி வர்மா 17 வயது 139 நாட்களில் சாதனைப் படைத்து 2-வது இடத்தை பிடித்துள்ளார். இங்கிலாந்தை சேர்ந்த சார்லோட் எட்வர்ட்ஸ் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 1998-ல் 18 வயது 232 நாட்களில் இரண்டு இன்னிங்சிலும் அரைசதத்திற்கு மேல் அடித்திருந்தார்.
    ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி, மழையால் ஒருவேளை தடைபட்டால் ரிசர்வ் டே பயன்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி சவுத்தம்டன் ரோஸ் பவுல் ஸ்டேடியத்தில் இன்று தொடங்குவதாக இருந்தது. ஆனால் மழை காரணமாக முதல் நாள் ஆட்டம் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. ஒருவேளை ஐந்து நாட்களில் முடிவு கிடைக்காவிடில் ‘ரிசர்வ் டே (மாற்றுநாள்)’ ஒதுக்கப்படும் என ஐசிசி அறிவித்துள்ளது.

    ரிசர்வ் டே ஒதுக்கப்படுவது போட்டியின் முதலிலேயே உறுதியாக கூற இயலாது. கடைசி நாளின் கடைசி நேரத்தில்தான் முடிவு செய்யப்படும்.

    ஒருநாளைக்கு சராசரியாக 90 ஓவர்கள் வீசப்பட வேண்டும். வெளிச்சமின்மை, மோசமான வானிலை, மழை குறுக்கீடு காரணமான ஆட்டம் தடைபட்டால், அடுத்த நாள் தடைபட்ட ஓவர்கள் கூடுதலாக வீசும் வகையில் கூடுதல் நேரம் ஒதுக்கப்படும். அதாவது 90 ஓவர்களுக்குப் பதில் 105 ஓவர்கள் வரை வீசப்படும். இவ்வாறு அடுத்த நாள் ஒதுக்கப்பட்டு, கடைசி நாளில் ஆட்டம் முடியாமல், ஓவர்கள் வீச வேண்டிய அவசியம் இருந்தால் மட்டும் ‘ரிசர்வ் டே’ ஒதுக்கப்படும்.

    இன்றைய முதல்நாள் ஆட்டம் முழுவதும் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் 90 ஓவர்கள் கூடுதலாக வீசப்பட வேண்டும். அடுத்த நான்கு நாட்களில் சராசரியாக கூடுதலாக 15 ஓவர்களில் வீசப்பட்டாலும், 60 ஒவர்கள் மட்டுமே வீச முடியும்.

    இதனால் ஐந்து நாட்களில் போட்டி முடிவடையவில்லை என்றால், ரிசர்வ் டே கட்டாயமாக ஒதுக்கப்படும்.
    ×