என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
முதல்நாள் ஆட்டம் மழையால் ரத்து: இந்தியா-நியூசிலாந்து டெஸ்டில் 6-வது நாளில் விளையாட வாய்ப்பு
சவுத்தம்டன்:
விராட் கோலி தலைமையிலான இந்தியா- வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணிகள் இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டம் இங்கிலாந்தில் உள்ள சவுத்தம்டன் நகரில் நேற்று தொடங்குவதாக இருந்தது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) முதல்முறையாக நடத்தும் இந்த போட்டியின் இறுதி ஆட்டத்துக்கு அதிக எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் முதல் நாள் ஆட்டத்திலேயே மழை விளையாடி விட்டது. மழை காரணமாக ஒரு பந்து கூட வீச முடியாமல் ரத்து செய்யப்பட்டது.
இந்த போட்டிக்கான விதிமுறைகள் குறித்து ஐ.சி.சி. ஏற்கனவே வெளியிட்டு இருந்தது. மழையால் ஆட்டம் பாதிக்கப்படும்போது மாற்று நாளில் போட்டியை நடத்தலாம் என்று தெரிவித்தது. 23-ந் தேதியை அதாவது 6-வது நாளை மாற்று நாளாக அறிவித்தது. இதுகுறித்து போட்டி நடுவர் முடிவு செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தது.
முதல் நாளில் 6 மணி நேர இழப்பு ஏற்பட்டு விட்டதால் மாற்று நாளில் இந்த போட்டி நடைபெற வாய்ப்பு இருக்கிறது. இதனால் 6-வது நாளில் இந்த டெஸ்ட் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து போட்டி நடுவர் 5-வது நாள் ஆட்டத்தின்போதுதான் தனது முடிவை அறிவிப்பார்.
இன்று 2-வது நாள் ஆட்டம் நடக்கிறது. வானிலை அறிவிப்புபடி அங்கு லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்