என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கருப்பு பட்டை அணிந்து விளையாடும் இந்திய வீரர்கள்
Byமாலை மலர்19 Jun 2021 10:34 AM GMT (Updated: 19 Jun 2021 10:34 AM GMT)
முன்னாள் தடகள வீரர் மில்கா சிங் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் டெஸ்ட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி வீரர்கள் கருப்பு பட்டை அணிந்து விளையாடி வருகின்றனர்.
சவுத்தம்டன்:
இந்தியா- நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டி இங்கிலாந்தின் சவுத்தம்டனில் நேற்று தொடங்க இருந்தது.
தொடர் மழை காரணமாக ‘டாஸ்’ கூட போடப்படாத நிலையில் முதல் நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில், 2-வது நாளான இன்று மழை பெய்யாததால், ஆட்டம் நடைபெற சாதகமான சூழல் ஏற்பட்டது. இதையடுத்து, டாஸ் போடப்பட்டதில் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்ஸ்சன் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி, இந்திய அணி பேட்டிங் செய்கிறது. தொடக்க ஆட்டக்காரர்களாக சிப்மன் கில் மற்றும் ரோகித் சர்மா களமிறங்கினர்.
இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் தடகள வீரர் மில்கா சிங் சிகிச்சை பலனின்றி காலமான செய்தி வீரர்களுக்கு தெரியவந்தது. இதனையடுத்து மில்கா சிங் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், டெஸ்ட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி வீரர்கள் கருப்பு பட்டை அணிந்து விளையாடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X