என் மலர்tooltip icon

    விளையாட்டு

    மழைக்காரணமாக 2-வது டெஸ்டின் இரண்டாவது நாள் ஆட்டம் ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது.
    வெஸ்ட் இண்டீஸ்- பாகிஸ்தான் அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கிங்ஸ்டனில் நேற்று முன்தினம் தொடங்கியது. முதலில் விளையாடிய பாகிஸ்தான் முதல்நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 212 ரன் எடுத்து இருந்தது.

    கேப்டன் பாபர் ஆசம் 75 ரன் எடுத்தார். பவாத் ஆலம் 76 ரன் எடுத்திருந்தபோது காயத்தால் வெளியேறினார். பஹீம் அஸ்ரப் 23 ரன்னும் , முகமது ரிஸ்வான் 22 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். கேமர் ரோச் 3 விக்கெட்டும், ஜெய்டன் சீல்ஸ் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    நேற்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற இருந்தது. மழை மற்றும் ஆடுகள ஈரப்பதம் காரணமாக ஆட்டம் முற்றிலும் கைவிடப்பட்டது. மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது.
    சின்சினாட்டி ஓபன் டென்னிஸில் ஆடவர் பிரிவில் சுவரேவ் பெண்களில் ஒற்றையர் பிரிவில் ஆஸ்லே பார்டி, ஜில்டெச்மேன் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளனர்.
    அமெரிக்காவில் சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதன் அரை இறுதி ஆட்டம் ஒன்றில் 2-வது வரிசையில் உள்ள சிட்சிபாஸ் (கிரீஸ்) - அலெக்சாண்டர் சுவரேவ் மோதினார்கள். இதில் 3-வது வரிசையில் உள்ள சுவரேவ் 6-4, 3-6, 7-6, (7-4) என்ற செட் கணக்கில் சிட்சிபாசை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார்.

    அவர் இறுதி ஆட்டத்தில் ரஷியாவை சேர்ந்த ஆந்த்ரே ரூப்லேவை சந்திக்கிறார். இந்த போட்டியில் 4-வது வரிசையில் உள்ள ரூப்லேவ் அரை இறுதியில் 2-6, 6-3, 6-3 என்ற கணக்கில் முதல் நிலை வீரரான டேனில் மெட்வதேவை (ரஷியா) அதிர்ச்சிகரமாக வீழ்த்தினார்.

    பெண்கள் பிரிவு இறுதி ஆட்டத்தில் முதல்நிலை வீராங்கனையான ஆஸ்லே பார்டி (ஆஸ்திரேலியா)- ஜில்டெச்மேன் (சுவிட்சர்லாந்து) மோதுகிறார்கள்.

    ஆஸ்லே பார்டி அரை இறுதியில் 6-2, 7-5 என்ற செட் கணக்கில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை கெர்பரை (ஜெர்மனி) வீழ்த்தினார்.

    ஜில்டெச்மேன் அரை இறுதியில் 6-2, 6-4 என்ற நேர் செட் கணக்கில் 5-வது வரிசையில் உள்ள கரோலினா பிலிஸ்கோவாவை (செக் குடியரசு) அதிர்ச்சிகரமாக தோற்கடித்தார்.
    ஐ.பி.எல். தொடரின் இரண்டாம் பாதி ஆட்டங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19-ம் தேதி முதல் அக்டோபர் 15-ம் தேதி வரை நடைபெறுகிறது.
    அபுதாபி:

    ஐபிஎல் தொடரில் இதுவரை 29 போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில் மீதம் 31 போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. சமீபத்தில் ஐபிஎல் போட்டிகளுக்கான அட்டவணை வெளியிடப்பட்டது. 

    அதன்படி மொத்தம் உள்ள 31 போட்டிகள் 27 நாட்களில் நடத்தி முடிக்கப்பட உள்ளது. செப்டம்பர் 19-ம் தேதி மீண்டும் தொடங்கும் ஐ.பி.எல். தொடரில் முதாவது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோத உள்ளது.

    இந்தத் தொடரின் முதலாவது பாதியில் நடைபெற்ற முதல் லீக் போட்டியில் மும்பை அணியிடம் சென்னை அணி தோல்வியை தழுவியிருந்தது.

    இதற்கான பயிற்சிகளை மேற்கொள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் மும்பை இந்தியன்ஸ் என 2 அணியுமே தங்களது வீரர்களை பயோ பபுள் பாதுகாப்புடன் அமீரகம் அனுப்பி உள்ளன. அங்கு கடந்த 13-ம் தேதி முதல் குவாரண்டைனில் இருந்த வீரர்கள் தற்போது கொரோனா பரிசோதனைகளில் நெகட்டிவ் என்ற முடிவை பெற்றுள்ளனர்.

    இதற்கிடையே, எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் அனைவருமே நேற்று முன்தினம் தங்களது முதல்கட்ட பயிற்சியில் ஈடுபட்டனர். துபாயில் உள்ள ஐசிசி அகாடமியில் இந்த பயிற்சி முகாம் தொடங்கியது.  

    இந்நிலையில், ஐ.பி.எல். கிரிக்கெட் தொடருக்கான முதல் பயிற்சியை மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் நேற்று தொடங்கினர்.   அந்த அணியின் கேப்டன் ரோகித் சர்மா இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இருப்பதால், திட்டங்கள் ஏதும் இன்றி பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
    26 வயதான நாதன் எல்லிஸ் தனது முதல் சர்வதேச 20 ஓவர் போட்டியிலேயே ஹாட்ரிக் சாதனை படைத்தார். வங்காள தேசத்திற்கு எதிராக கடந்த 6-ந் தேதி நடந்த போட்டியில் அவர் 3 பந்துகளில் 3 விக்கெட்டை வீழ்த்தி முத்திரை பதித்தார்.

    புதுடெல்லி:

    14-வது ஐ.பி.எல். 20 ஓவர் போட்டி கடந்த ஏப்ரல் 9-ந் தேதி தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்றது.

    29 ஆட்டங்கள் முடிந்த நிலையில் அதாவது மே 2-ந் தேதி கொரோனா பாதிப்பு காரணமாக ஐ.பி.எல். போட்டி பாதியில் ரத்து செய்யப்பட்டது.

    எஞ்சிய ஐ.பி.எல். ஆட்டங்களை ஐக்கிய அரபு எமிரேட்சில் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி ஐ.பி.எல்.லின் 2-வது கட்ட போட்டிகள் அடுத்த மாதம் (செப்டம்பர்) 19-ந் தேதி முதல் அக்டோபர் 15-ந் தேதி வரை துபாய், அபுதாபி, ஷார்ஜா ஆகிய இடங்களில் நடக்கிறது.

    செப்டம்பர் 19-ந் தேதி நடைபெறும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

    ஐ.பி.எல். போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியில் இடம்பெற்று இருந்த ஆஸ்திரேலிய வீரர்கள் ரிச்சர்ட்சன், மெரிடித் ஆகியோர் விளையாடவில்லை. அவர்கள் விலகி உள்ளனர்.

    அவர்களுக்கு பதிலாக ஆஸ்திரேலியாவை சேர்ந்த வேகப்பந்து வீரர் நாதன் எல்லிசை பஞ்சாப் அணி நிர்வாகம் ஒப்பந்தம் செய்துள்ளது. பிப்ரவரி மாதம் நடந்த ஐ.பி.எல். ஏலத்தில் எந்த அணியும் அவரை ஏலத்தில் எடுக்க வில்லை. தற்போது நாதன் எல்லிசை எடுக்க 3 அணிகள் முயற்சி செய்தது. கடைசியில் பஞ்சாப்தான் வெற்றி பெற்றது.

    26 வயதான நாதன் எல்லிஸ் தனது முதல் சர்வதேச 20 ஓவர் போட்டியிலேயே ஹாட்ரிக் சாதனை படைத்தார். வங்காள தேசத்திற்கு எதிராக கடந்த 6-ந் தேதி நடந்த போட்டியில் அவர் 3 பந்துகளில் 3 விக்கெட்டை வீழ்த்தி முத்திரை பதித்தார்.

    மேலும் உலக கோப்பை போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியின் 3 பேர் கொண்ட மாற்று வீரர்கள் பட்டியலில் அவரும் இடம்பெற்றுள்ளார். இதனால்தான் ஐ.பி.எல். எஞ்சிய ஆட்டத்தில் அவருக்கு கடும் கிராக்கி ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    தனது கிரிக்கெட் வாழ்க்கையில் தன்னை மிரட்டிய இரு பேட்ஸ்மேன்கள் யார் என்பதை இலங்கை முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முரளிதரன் வெளியிட்டுள்ளார்.
    கொழும்பு:

    இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சு ஜாம்பவான் முத்தையா முரளிதரன். டெஸ்ட் கிரிக்கெட்டில் 800 விக்கெட்டுகளும்(133 டெஸ்ட்), ஒரு நாள் கிரிக்கெட்டில் 534 விக்கெட்டுகளும் (350 ஆட்டம்) வீழ்த்தி இருக்கிறார். இவ்விரு வடிவிலான கிரிக்கெட்டில் அதிக விக்கெட் கைப்பற்றிய உலக சாதனையாளர் இவர் தான். 2011-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டுக்கு விடைகொடுத்த முரளிதரன் தற்போது ஐ.பி.எல். போட்டியில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியின் பந்து வீச்சு ஆலோசகராக உள்ளார்.

    49 வயதான முரளிதரன் தான் விளையாடிய காலத்தில் பல பேட்ஸ்மேன்களின் வயிற்றில் புளியை கரைத்தவர். ஆனாலும் அவரையும் இரு பேட்ஸ்மேன்கள் நடுங்க வைத்துள்ள தகவலை அவரே இப்போது வெளியிட்டுள்ளார். டெஸ்ட் மற்றும் ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்தவரும், 100 சர்வதேச சதங்கள் விளாசிய ஒரே வீரருமான இந்திய சாதனை மன்னன் சச்சின் தெண்டுல்கரை கண்டு கூட அவர் பயப்படவில்லையாம். தன்னை மிரள வைத்த பேட்ஸ்மேன்களின் விவரத்தை இணையதளம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    எனது காலக்கட்டத்தில் பிரையன் லாரா ( வெஸ்ட் இண்டீஸ்), வீரேந்திர ஷேவாக் (இந்தியா) ஆகியோருக்கு பந்து வீசுவது தான் மிகவும் கடினமாக இருந்தது. எனக்கு எதிராக நிறைய அபாயகரமான பேட்ஸ்மேன்கள் விளையாடி இருக்கிறார்கள். ஆஸ்திரேலியாவின் ஆடம் கில்கிறிஸ்ட் கூட நான் எப்படி பந்து வீசுவேன் என்பதை கணிக்க முடியாமல் தடுமாறுவார். அவர் ஒரே ஒரு முறை மட்டும் எங்களுக்கு எதிராக 3-வது வரிசையில் இறங்கி 150 ரன்கள் எடுத்திருந்தார். ஆனால் மற்ற எல்லோரையும் காட்டிலும் ஷேவாக்கும், லாராவும் தான் எனக்கு அதிகமாக குடைச்சல் கொடுத்தவர்கள் ஆவர். இருவரும் நான் எப்படி பந்து வீசுவேன் என்பதை புரிந்து செயல்படுவார்கள்.

    ஷேவாக்குக்கு பந்து வீசும்போது நான் பயந்து இருக்கிறேன். ஏனெனில் அச்சமின்றி விளையாடக்கூடிய ஒரு ஆட்டக்காரர் ஷேவாக். டெஸ்ட் கிரிக்கெட்டில் 2 மணி நேரம் களத்தில் நின்றாலும் கூட 150 ரன்கள் திரட்டி விடுவார். ஒரு நாள் முழுவதும் விளையாடினால் ஸ்கோர் போர்டில் அவரது பெயரில் 300 ரன்களை காட்டும். அன்றைய தினம் முதல் பந்தை சந்தித்தாலும் சரி, 98 அல்லது 99 ரன்னில் இருந்தாலும் சரி. தடுப்பாட்டத்தில் ஈடுபடும் எண்ணம் அவருக்கு இருக்காது. மற்றவர்கள் இதே சூழலில் இருந்தால் ஒன்று, இரண்டு ரன் வீதம் எடுத்து சதத்தை நிறைவு செய்ய நினைப்பார்கள்.

    ஆனால் ஷேவாக் சதத்தை பற்றி கவலைப்படமாட்டார். அந்த நிலையிலும் பந்தை சிக்சருக்கு விரட்டவே முயற்சிப்பார். ஆக்ரோஷமாக விளையாடுவது அவருக்கு பிடிக்கும். கில்கிறிஸ்ட், ஜெயசூர்யா போன்று தனிநபராக வெற்றி தேடித்தரக்கூடிய திறமைசாலி. 2009-ம் ஆண்டு மும்பையில் நடந்த டெஸ்டில் நான் அவருக்கு எப்படி பந்து வீசினாலும் அடித்து தள்ளினார். அந்த டெஸ்டில் அவர் 293 ரன்கள் குவித்து கேட்ச் ஆனார்.

    இதே போல் எல்லா திசையிலும் பந்தை விரட்டக்கூடியவர் பிரையன் லாரா. அவ்வளவு எளிதில் அவரை அவுட் ஆக்க முடியாது. அவர் எப்போது தவறு செய்வார் என காத்திருக்க வேண்டியது இருக்கும். ஒரு முறை கொழும்பில் நடந்த டெஸ்டில் அவர் இரட்டை சதம் அடித்தார். பந்து வீச்சுக்கு ஏற்ப தன்னை வெகு எளிதாக மாற்றிக்கொண்டு அருமையாக ஆடினார்.

    சச்சின் தெண்டுல்கர் மிகச்சிறந்த பேட்ஸ்மேன் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அவருக்கு எதிராக பந்து வீசியபோது நான் பயந்தது கிடையாது. ஏனெனில் அவர் எனது பந்து வீச்சை பெரிய அளவில் அடித்து நொறுக்கியது இல்லை. தெண்டுல்கரின் விக்கெட்டை சாய்ப்பது மிகவும் கடினம். எனது பந்து வீச்சுக்கு எதிராக விக்கெட்டை காப்பாற்றும் நோக்கில் விளையாடுவார். பந்து எப்படி வருகிறது என்பதை நன்றாக கவனித்து சாதுர்யமாக செயல்படுவார். இருப்பினும் எனது ஆப்-ஸ்பின் பந்து வீச்சுக்கு எதிராக தெண்டுல்கர் கொஞ்சம் பலவீனமாக ஆடுவதை பார்த்து இருக்கிறேன். இந்த வகை பந்து வீச்சில் அவரை பலமுறை அவுட் ஆக்கி இருக்கிறேன். எதுஎப்படி என்றாலும், ஷேவாக் அளவுக்கு அவர் என்னை காயப்படுத்தியதில்லை.

    இவ்வாறு முரளிதரன் கூறினார்.
    வெஸ்ட் இண்டீசுடனான இரண்டாவது டெஸ்டில் பாகிஸ்தானின் பாபர் அசாம், பவாத் ஆலம் ஜோடி சிறப்பாக ஆடி 150 ரன்களுக்கு மேல் சேர்த்தது.
    ஜமைக்கா:

    வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜமைக்காவில் தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, பாகிஸ்தான் அணி முதலில் களமிறங்கியது. முன்னணி வீரர்கள் 3 பேர் விரைவில் பெவிலியன் திரும்பினர். இதனால் 2 ரன்னுக்குள் 3 விக்கெட்டை இழந்து பாகிஸ்தான் திணறியது.

    அடுத்து இறங்கிய கேப்டன் பாபர் அசாம், பவாத் ஆலம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டனர். இருவரும் அரை சதமடித்து அசத்தினர்.

    விக்கெட் வீழ்த்திய கீமர் ரோச

    அணியின் எண்ணிக்கை 168 ஆக இருந்தபோது பாபர் அசாம் 75 ரன்னில் அவுட்டானார். பவாத் ஆலம் 76 ரன்னில் காயம் காரணமாக பெவிலியன் திரும்பினார்.

    முதல் நாள் முடிவில் பாகிஸ்தான் அணி 74 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் எடுத்துள்ளது. ரிஸ்வான் 22 ரன்னும், பஹீம் அஷ்ரப் 23 ரன்னும் எடுத்து அவுட்டாகாமல் உள்ளனர்.

    வெஸ்ட் இண்டீஸ் சார்பில் கீமர் ரோச் 2 விக்கெட், சீலஸ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
    குழந்தையின் அறுவை சிகிச்சைக்காக ஒலிம்பிக் பதக்கத்தை ஏலம்விட்ட போலந்து வீராங்கனையின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    வார்சாவ்:

    டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பெண்களுக்கான ஈட்டி எறிதலில் போலந்து நாட்டை சேர்ந்த 25 வயது வீராங்கனை மரியா ஆந்த்ரேஜிக் வெள்ளிப்பதக்கம் வென்றார்.

    இதற்கிடையே, போலந்து நாட்டை சேர்ந்த 8 மாத குழந்தையின் சிக்கலான அவசர இதய அறுவை சிகிச்சைக்கு நிதி இல்லாமல் தவித்த தம்பதி பேஸ்புக் மூலம் விடுத்து இருந்த வேண்டுகோளை மரியா பார்த்தார்.

    இந்நிலையில், ஒலிம்பிக் போட்டி முடிந்து 2 வாரத்திற்குள்ளே தனது வாழ்நாள் கனவாக கைப்பற்றிய பதக்கத்தை மரியா ஆன் லைன் மூலம் தனது வெள்ளிப்பதக்கத்தை ஏலத்தில் விட்டார். அதனை அங்குள்ள ஒரு தனியார் நிறுவனம் ரூ.93 லட்சத்துக்கு எடுத்தது.

    அந்தப் பணத்தை அவர் அறுவை சிகிச்சை செய்ய இருக்கும் குழந்தையின் பெற்றோருக்கு அனுப்பி வைத்து வியக்க வைத்துள்ளார்.

    அதேநேரம், பதக்கத்தை ஏலத்தில் வாங்கிய நிறுவனம் மரியாவின் பரந்த மனதை பாராட்டி இருப்பதுடன் அந்த பதக்கத்தை அவரிடமே திரும்ப வழங்க முடிவு செய்துள்ளது.
    முன்னணி வீரர்களான ரபேல் நடால் மற்றும் ரோஜர் பெடரர் ஆகியோர் அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து விலகியிருப்பது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.
    வாஷிங்டன்:

    அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி வரும்  30-ம் தேதி தொடங்கி  செப்டம்பர் 12 வரை நடைபெறவுள்ளது.

    இந்நிலையில், அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில்  இருந்து முன்னணி டென்னிஸ் வீரர் ரபேல் நடால் விலகுவதாக அறிவித்துள்ளார். காலில் ஏற்பட்ட காயம் காரணமாக 2021-ம் செஷனை  முடித்துக்கொள்வதாக நடால் அறிவித்துள்ளார்.

    காலில் ஏற்பட்ட காயத்தால் ஒரு வருடமாக அவதிப்படுகிறேன். இதற்குத் தீர்வு காண எனக்கு அவகாசம் தேவைப்படுகிறது என ரபேல் நடால் தெரிவித்துள்ளார்.

    அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து விலகுவதாக ரோஜர் பெடரர் அண்மையில் அறிவித்து இருந்த நிலையில், தற்போது ரபேல் நடாலும் அறிவித்துள்ளார். 
    ஐ.பி.எல். தொடரின் 2-ம் பகுதி அடுத்த மாதம் 19-ந்தேதி தொடங்கும் நிலையில் பிசிசிஐ, போட்டியை ஒளிபரப்பும் ஸ்டார் நிறுவனம், பங்கேற்கும் அணிகள் தயாராகி வருகின்றன.
    ஐ.பி.எல். 2021 சீசன் இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதம் 9-ந்தேதி தொடங்கியது. இந்தியாவில் கொரோனா தொற்றின் 2-வது அலை உச்சத்தை அடைந்து வந்த நிலையிலும் கடுமையான பாதுகாப்பு வளையத்தை உருவாக்கி பி.சி.சி.ஐ. வெற்றிகரமாக போட்டியை நடத்தியது.

    முதல்கட்ட போட்டிகள் சென்னை, மும்பையில் நடைபெற்றது. அதன்பின் 2-ம் கட்ட போட்டிகள் குஜராத், டெல்லியில் நடத்தப்பட்டன. அப்போது பாதுகாப்பு வளையத்தை தாண்டி வீரர்களை கொரோனா வைரஸ் தொற்று தாக்கியது. இதனால் மே 2-ந்தேதிக்குப்பின் போட்டிகள் நடத்தப்படவில்லை. அதன்பின் ஐபிஎல் தொடர் ஒத்திவைக்கப்பட்டது.

    பின்னர் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19-ந்தேதி முதல் அக்டோபர் 15-ந்தேதி வரை நடத்தப்படும் என பிசிசிஐ அறிவித்தது.

    போட்டி தொடங்குவதற்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில் அதற்கான வேலைகள் தொடங்கப்பட்டுள்ளன. டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அமீரகம் சென்று பயிற்சியில் ஈடுபடத் தொடங்கியுள்ளது.

    ஐ.பிஎல். போட்டிக்கான ஆர்வத்தை தூண்ட  ஸ்டார் நிறுவனம் அதிரடியான முடிவுகளை எடுத்துள்ளது. அதன் தொடர்ச்சியாக முதலில் டோனியை வைத்து ஒரு அசத்தலான புரமோவை உருவாக்கி அதை வெளியிட்டிருக்கிறார்கள்.

    கலரிங் செய்த சிகை அலங்காரம், ஜொலிக்கும் சட்டையுடன் எம்.எஸ். டோனி போடும் ஆட்டம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து, இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை ஐ.பி.எல். அதிகாரப்பூர்வ டுவிட்டர் இணைய தளம் வெளியிட்டுள்ளது.
    டி20 உலகக்கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணி திறமையானது, இந்த முறை கோப்பையை வெல்லும் என ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
    7-வது 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற அக்டோபர் 17-ந்தேதி முதல் நவம்பர் 14-ந்தேதி வரை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஒமனில் நடக்கிறது.

    இப்போட்டி தொடருக்கான 15 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணி நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆரோன் பிஞ்ச் கேப்டனாக நீடிக்கிறார். அவரும், ஸ்டீவ் ஸ்மித்தும் அணிக்கு திரும்பி உள்ளனர். அதேபோல் டேவிட் வார்னர், மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோய்னிஸ், கம்மின்ஸ், கேன் ரிச்சர்ட்சன் ஆகியோரும் அணிக்கு திரும்பி உள்ளனர்.

    முக்கிய வீரர்கள் உலகக்கோப்பைக்கான அணியில் இடம் பெற்று இருப்பது ஆஸ்திரேலியாவுக்கு சாதகமாக இருக்கும்.

    இந்த நிலையில் 20 ஓவர் உலக கோப்பையை வெல்லும் திறன் ஆஸ்திரேலிய அணிக்கு உள்ளது என்று அந்த அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    20 ஓவர் உலகக்கோப்பை போட்டிக்கு சிறந்த ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு கோப்பையை வெல்லும் திறன் உள்ளது. ஜோஷ் இங்லிஸ் வாய்ப்பு பெற்றிருப்பதை பார்க்க அருமையாக உள்ளது.

    அவர் ரன்களை குவிக்கக்கூடியவர். ஒட்டுமொத்தமாக இது ஒரு திறமையான வீரர்களை கொண்ட அணி என்று நான் நினைக்கிறேன். உலகக்கோப்பையை ஆஸ்திரேலியா வெல்லும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை நவோமி ஒசாகா சின்சினாட்டி டென்னிஸ் தொடரில், காலிறுதிக்கான வாய்ப்பை இழந்தார்.
    சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இந்திய நேரப்படி இன்று காலை நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவில் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 2-ம் நிலை வீராங்கனையான நவோமி ஒசாகா (ஜப்பான்) அதிர்ச்சி தோல்வி அடைந்தார். அவரை சுவிட்சர்லாந்தின் ஜில் டீச் மேன் 3-6, 6-3, 6-3 என்ற செட் கணக்கில் தோற்கடித்தார்.

    இந்த வெற்றி மூலம் அவர் கால் இறுதிக்கு தகுதி பெற்றார். அதேபோல் பெலிண்டா பென்சிக் (சுவிட்சர்லாந்து), கரோலினா, பிளிஸ்கோவா (செக் குடியரசு), பவுலா படோசா (ஸ்பெயின்) ஆகியோரும் கால் இறுதிக்கு தகுதி பெற்றனர்.

    ஜில் டீச் மேன்

    ஆண்கள் ஒற்றையர் பிரிவு 3-ம் சுற்று ஆட்டத்தில் சிட்சிபஸ் 5-7, 6-3, 6-4 என்ற செட்கணக்கில் சோரென்சோ கோனெகோவை (இத்தாலி) தோற்கடித்து கால் இறுதிக்கு முன்னேறினார்.

    ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரெவ், கஸ்பர் ரூட் நார்வே பெலிக்ஸ் ஆகர் அலியாசிம் (கனடா) ஆகியோர் கால் இறுதிக்கு தகுதிபெற்றனர்.
    இந்திய கேப்டன் விராட் கோலியை, இங்கிலாந்து முன்னாள் வீரர் நிக் காம்ப்டன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
    லண்டன்:

    லண்டன் லார்ட்ஸ் டெஸ்டில் இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை ஊதித்தள்ளியது. கடைசி நாள் வரை திரிலிங்காக நகர்ந்த இந்த டெஸ்டில் இரு அணி வீரர்கள் இடையே வாக்குவாதம், சீண்டல்களை அவ்வப்போது பார்க்க முடிந்தது. இதை சுட்டிகாட்டி இந்திய கேப்டன் விராட் கோலியை, இங்கிலாந்து முன்னாள் வீரர் நிக் காம்ப்டன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

    அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘மிகவும் இழிவாக பேசக்கூடிய ஒருவர் விராட் கோலி. 2012-ம் ஆண்டில் விளையாடி போது நானே மிரளும் அளவுக்கு அவர் என்னை நோக்கி அடுக்கடுக்காக வசைபாடினார். அதை ஒரு போதும் மறக்க முடியாது. அவரது இந்த செயலே அவர் எப்படிப்பட்டவர் என்பதை காட்டி விடும். சச்சின் தெண்டுல்கர், வில்லியம்சன், ஜோ ரூட் போன்ற தலைச்சிறந்த வீரர்கள் எல்லாம் களத்தில் மிகவும் கண்ணியமாக நடந்து கொள்வார்கள். அதற்கு நேர்மாறானவர் கோலி’ என்று சாடியுள்ளார்.

    காம்ப்டனின் பதிவை கண்ட இந்திய ரசிகர்கள் கொதித்து போயுள்ளனர். இங்கிலாந்து வீரர்கள் பும்ராவை திட்டி வம்பு இழுத்தபோது எங்கு இருந்தீர்கள்? இந்த மோசமான நடத்தைக்கு உங்கள் ஊரில் என்ன பெயர்? தென்ஆப்பிரிக்க வீரர் பிலாண்டர் தனது கடைசி டெஸ்டில் ஆடிய போது அவரை பட்லர் வேண்டுமென்றே கிண்டல் செய்தாரே? அப்போது எங்கு இருந்தீர்கள் என்று சகட்டு மேனிக்கு காம்ப்டனை வறுத்தெடுத்துள்ளனர்.

    ×