என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    கவர்னர் மாளிகையில் நடந்த பொங்கல் விழாவில் கவர்னர் தமிழிசை, முதல்-அமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டனர்
    புதுச்சேரி:

    புதுவை கவர்னர்  மாளிகையில் பொங்கல் விழா  நடை பெற்றது. 

    கவர்னர் தமிழிசை தலைமை தாங்கினார். முதல்-அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமிநாராயணன்,  சாய்.ஜெ.சரவணன்குமார் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர். 

    உயர் அதிகாரிகள் பலரும் வேட்டி அணிந்து வந்திருந்தனர். பெண் அதிகாரிகள் பட்டு சேலையில் வந்து விழாவில் கலந்து கொண்டனர். கவர்னர் மாளிகை வாசலில் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. 

    தமிழர்களின் பாரம் பரியத்தை விளக்கும் வகையில் மாட்டு வண்டி மற்றும் உழவு  தொழிலுக்கு பயன்படுத்தும் பொருட்கள் வைத்து பொங்கல் விழா நடந்தது. 

    தொடர்ந்து  மாணவ-மாணவிகள் சார்பில் தமிழ் பாரம்பரிய  கலைநிகழ்ச்சி நடைபெற்றது.

    புதுவையில் பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. பக்தர்கள் கோவிந்தா.. கோவிந்தா.. கோஷம் என எழுப்பினர்
    புதுச்சேரி:
    கொரோனா கட்டுபாடுகள்  புதுவையில் விதிக்கப்பட்டு இருந்தாலும் வழிபாட்டு தலங்களுக்கு செல்ல பக்தர்களுக்கு  தடை ஏதும் விதிக்கப்படவில்லை.

    இதனால் புதுவையில் வழக்கமான நடவடிக்கைகளுடன்  சொர்க்கவாசல் திறப்பு விழா அனைத்து பெருமாள் கோவில்களிலும் நடைபெற்றது. நகரின் காந்தி வீதியில் உள்ள புகழ்பெற்ற வரத ராஜப்பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு  சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.

    சொர்க்கவாசல் திறந்த வுடன் முதலில் உற்சவர் வரதராஜ பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி சமேதகராக சொர்க்க வாசலில் எழுந்த ருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். அப்போது பக்தர்கள் பயபக்தியுடன் கோவிந்தா... கோவிந்தா என கோஷம் எழுப்பி வழிபட்டனர்.

    முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது என  கொரோனா கட்டுப்பாட்டு நிபந்தனைகளை பக்தர் கள் கண்டிப்பாக பின் பற்ற வேண்டும் என  தேவஸ்தானத்தினர் அறிவித்திருந்தனர். 

    இருப்பினும் பல கோவில்களில் பக்தர்கள் முககவசம் அணிந்து வந்தாலும் சமூக இடை வெளியை  பின்பற்ற முடியவில்லை. இதற்கு பக்தர்கள் அதிக அளவில் கூடியதும் காரணமாகும்.
    மோட்டார் சைக்கிளில் சென்றபோது லாஸ்பேட்டையில் பஸ் மோதி புது மாப்பிள்ளை பரிதாபமாக உயிரிழந்தார்.
    புதுச்சேரி:

    புதுவை லாஸ்பேட்டை முத்துலிங்கப்பேட்டையை சேர்ந்தவர் சுந்தர்ராஜன் (வயது32). இவர் நேற்று மாலை தனது மோட்டார் சைக்கிளில் கிழக்கு கடற்கரை சாலை நோக்கி சென்றுகொண்டிருந்தார்.

    அப்போது எதிரில் வந்த தனியார் பள்ளி பஸ் எதிர்பாரதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் சுந்தர்ராஜன் தூக்கி வீசப்பட்டார். பலத்த காயமடைந்த அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கோரிமேடு ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே சுந்தர்ராஜன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் கோரிமேடு போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். விபத்தில் பலியான சுந்தர்ராஜனுக்கு திருமணமாகி சில மாதங்கள்தான் ஆவதாக போலீசார் தெரிவித்தனர்.
    கவர்னரிடம் அதிகாரத்தை கொடுத்து விட்டு வேடிக்கை பார்க்கின்றனர். புதுச்சேரியில் ஜனாதிபதி ஆட்சி நடக்கிறதா? என முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி கேள்வி விடுத்தார்.
    புதுச்சேரி:

    படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து புதுச்சேரி காந்திநகரில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகம் முன்பு இளைஞர் காங்கிரஸ் சார்பில் பஜ்ஜி, வடை விற்கும் போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு இளைஞர் காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணபாரதி தலைமை தாங்கினார்.

    இதில் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, வைத்திலிங்கம் எம்.பி., வைத்தியநாதன் எம்.எல்.ஏ., மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்ர மணியன், இந்திரா நகர் தொகுதி பொறுப்பாளர் ராஜா குமார், இளைஞர் காங்கிரஸ் அகில இந்திய செயலாளர் லட்சுமி காந்தன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    போராட்டத்தின் போது பட்டம் பெறுவது போல் உடை அணிந்து வேலைவாய்ப்பு அலுவலகம் முன்பு அமர்ந்து பஜ்ஜி, வடை விற்பனை செய்தும், செருப்புக்கு பாலீஷ் போட்டும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக அவர்கள் கோஷங்கள் எழுப்பினர். இந்த போராட்டம் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    போராட்டத்தின்போது முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சிக்கு வந்து 6 மாதத்தில் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும், 10 ஆயிரம் காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என்று முதல்-அமைச்சர் கூறினார்.

    ஆனால் தற்போது பணியிடங்களை நிரப்ப நிதி இல்லை. மாநில அந்தஸ்து கிடைத்தால் தான் பணியிடங்களை நிரப்ப முடியும் என்று கூறி வருகிறார். அவர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.

    மத்திய அரசு கடந்த 2014-ம் ஆண்டு ஆட்சிக்கு வரும் போது ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று கூறியது. ஆனால் கடந்த 7 ஆண்டுகளில் 14 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கி இருக்க வேண்டும். கொரோனா வந்த பிறகு 24 கோடி பேர் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். பிரதமர் மோடி கதையும், முதல்-அமைச்சர் ரங்கசாமி கதையும் ஒன்று தான்.

    காவலர் பணியிடங்களை நிரப்ப நாங்கள் நடவடிக்கை எடுத்தோம். அப்போது கவர்னர் அனுமதி வழங்கவில்லை. தற்போது நிரப்பப்படுகிறது. காமராஜர் மணிமண்டபத்தை நாங்கள் கட்டி முடித்தோம். தற்போது திறந்து வைக்கின்றனர். 10 ஆயிரம் பேருக்கு பென்சன் வழங்க நாங்கள் ஒப்புதல் வாங்கி வைத்ததை தற்போது வழங்கியுள்ளனர்.

    புதுச்சேரியை பொறுத்தவரை வாக்குறுதி வழங்கும் அரசாக தான் உள்ளது. அரிசிக்காக ஒதுக்கிய பணத்தை எடுத்துதான் மக்களுக்கு மழைநிவாரணமாக ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசு மழை நிவாரணம் வழங்கவில்லை. கடனையும் தள்ளுபடி செய்யவில்லை. அதிகாரத்தை கவர்னரிடம் கொடுத்து வேடிக்கை பார்க்கின்றனர்.

    பேரிடர் மீட்பு குழுவின் தலைவர் முதல்-அமைச்சர் தான். ஆனால் அவர் அந்த கூட்டத்தை கூட்டவில்லை. கவர்னர் தான் கூட்டுகிறார். எனவே புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி நடப்பதாக தெரியவில்லை. ஜனாதிபதி ஆட்சி நடப்பது போல் உள்ளது.

    புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அனுமதி வழங்கியதால் தான் புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. தற்போது பொங்கல் கொண்டாட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    பொதுமக்கள் தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். பொங்கல் கொண்டாட்டத்தில் சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும். தற்போது உள்ள சூழலில் பா.ஜ.க. அமைச்சர்கள் கபடி விளையாடுகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    புதுவை அரசு ஆஸ்பத்திரியில் முன்பதிவு செய்து பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம். முன்பதிவு செய்த முன்கள பணியாளர்களுக்கும் தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    புதுச்சேரி:

    புதுவை இந்திராகாந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் மேற்படிப்பு மையத்தில் (புதுவை அரசு ஆஸ்பத்திரி) நேற்று முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி பூஸ்டர் டோஸ் போடும் பணி தொடங்கி உள்ளது.

    இதனை மருத்துவ கண்காணிப்பாளர் செவ்வேள் தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியில் உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி கருணாநிதி, மக்கள் தொடர்பு அதிகாரி ஆத்மநாதன், கொரோனா பொறுப்பு அதிகாரி பாஸ்கர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

    இதன்படி 60 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கோவின் இணையதளத்தில் பதிவு செய்த பிறகு அவர்களது செல்போன்களில் வரும் குறுந்தகவலில் குறிப்பிடப்பட்டுள்ள தேதியில் வந்து தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். இதைத்தவிர அனைத்து சுகாதார ஊழியர்களும் தங்களுக்கான தடுப்பூசி பூஸ்டர் டோசையும் பெற்றுக்கொள்ளலாம்.

    மூத்த குடிமக்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் 60 வயதுக்கு மேற்பட்ட முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே இந்த மருத்துவமனையில் தடுப்பூசி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் முன்பதிவு செய்த முன்கள பணியாளர்களுக்கும் இங்கு தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    ரூ.23 கோடியில் கட்டப்பட்டுள்ள காமராஜர் மணி மண்டபத்தை 14 ஆண்டுக்கு பின் பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலம் இன்று திறந்து வைத்தார்.

    புதுச்சேரி:

    புதுவையில் 2007-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் முதல்-அமைச்சராக ரங்கசாமி இருந்த போது கருவடிக்குப்பம் சித்தானந்தா கோவில் அருகே ரூ.14 கோடியில் 3.75 ஏக்கரில் காமராஜருக்கு மணி மண்டபம் அமைக்க அடிக்கல் நாட்டினார்.

    இதையடுத்து 2009-ம் ஆண்டு நிதி நெருக்கடி காரணமாக இந்தப்பணி நிறுத்தப்பட்டது. 2014-ம் ஆண்டு ரூ.24 கோடி ஹட்கோ கடனுதவியில் மீண்டும் கட்டுமானப்பணி தொடங்கியது.

    அப்போது முதல்-அமைச்சராக இருந்த ரங்கசாமி 2-வது முறையாக காமராஜர் மணி மண்டபத்துக்கு அடிக்கல் நாட்டினார். இந்த மணி மண்டபத்தில், ஐ.ஏ.எஸ். பயிற்சி மையம், உலகத்தரம் வாய்ந்த நூலகம், 130 பேர் அமரக்கூடிய ஆடிட்டோரியம், 4 ஆயிரத்து 417 சதுர அடி தரைத்தளம், காமராஜர் சிலை, அவரின் வாழ்க்கை வரலாற்று புகைப்பட கண்காட்சிக்கூடம் அமைக்கப்பட்டன.

    ரூ.23 கோடியில் கட்டப்பட்டுள்ள காமராஜர் மணி மண்டபத்தை 14 ஆண்டுக்கு பின் பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலம் இன்று திறந்து வைத்தார்.

    இதேபோல ஆத்ம நிர்பார் பாரத் திட்டத்தின் கீழ் உலகத்தரம் வாய்ந்த சிறு, குறு, நடுத்தர தொழில்சார் தொழில்நுட்ப மையம் புதுவை தொழில்நுட்ப மையத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அதி நவீன எந்திரங்களுடன் கூடிய ரூ.122 கோடி மதிப்பிலான தொழில்நுட்ப மையத்தையும் பிரதமர் மோடி காணொலி மூலம் திறந்து வைத்தார்.

    இளைஞர்கள் உலகுக்கு முன்மாதிரியாக தகழ வேண்டும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசினார்.
    புதுச்சேரி: 

    தேசிய இளைஞர் தின தொடக்கவிழாவில் புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:-

    வளங்களை உருவாக்கி, உரிய பங்கை நிர்வாகத்துக்கு செலுத்தி, சேமித்து நல்ல காரணங்களுக்காக மக்களுக்கு பயன் படுத்துவதே நல்ல ஆட்சி. 

    பிரதமர் மோடி நல்லாட்சி யின் அடையாளமாக திகழ்கிறார். இளைஞர்கள் ஆற்றல் மிக்க கருவிகள். அவர்களால் விவேகானந்தர் உலகை மாற்ற விரும்பினார். இளம் இந்தியாவை தட்டி எழுப்பும் ஒரு நிகழ்வாக இந்த விழா புதுவையில் நடைபெறுவது பெருமைக்குரியது. 

    நம் நாட்டின் இளைஞர் களை புதுவையில் சந்திக்க விரும்பினேன். ஆனால், கொரோனா தொற்று பரவலில் இருந்து இளைஞர்களை காப்பது அரசின் கடமை என கருதி காணொலியில் விழா நடக்கிறது. 

    செல்வம், அறிவியல் வணிகம் என பல வழிகளில் நாட்டுக்கு பங்களிக்கலாம். பணம் இல்லாத கல்வி, அறம் இல்லாத செல்வம்,  மனித நேயம் இல்லாத அறிவியல் பயனற்றது மட்டுமல்ல, ஆபத்தானது. 

    தொண்டு,  ஒழுக்கம், மனிதநேயம், நன்னடத்தை ஆகியவை இந்திய இளை ஞர்களுக்கு உள்ள மிகப்பெரும் மதிப்பு. வலிமையான இளைஞர் இந்த குணாதிசயங்களை கொண்டிருக்க வேண்டும். இதற்கு பயிற்சியளிக்கவே திறமையான இளைஞர்கள், நிச்சயமான இளமை என்ற நோக்கத்துக்காகவே இந்த விழா நடத்தப்படுகிறது.

    இளைஞர்களின் வழிகாட்டிகள் பலர் இளமையிலேயே நம்மை விட்டுச்சென்றுவிட்டனர் என கூறுவார்கள். ஆனால் அவர்கள் தங்கள் வாழ்க்கை செய்தியை மிக வேகமாக சேர்த்துள்ளனர். ஆதிசங்கரர், மகாகவி பாரதி, சுவாமி விவேகானந்தர் இந்த வரிசையில் அடங்குவர். வாழ்க்கையில் சவால்கள் இயற்கையானவை. 

    அதை இளைஞர்கள் எதிர்கொள்ள தயாராக வேண்டும். மகான் அரவிந்தர், மகாகவி பாரதியார், வி.வி.எஸ்.ஐயர் போன்ற சிறந்த தலைவர்கள் ஆங்கிலேயர்களின் பிடியில் இருந்து தப்பி புதுவையில் வாழ்ந்தனர். 

    ஆங்கிலேயர்களை திகைப்படைய செய்த வ.உ.சி. புதுவைக்கு வந்து மகான் அரவிந்தரை ராஜரிஷி என்றார். பாரதியையும் சந்தித்தார். அவர் பல உண்மைகளை நான் கண்ட பாரதி என்ற நூலில் பதிவு செய்துள்ளார். 

    புதுவை ஞானபூமி, வேத பூமி என அழைக்கப்படுகிறது. புதுவை ஆன்மிக சித்தர்கள், முனிவர்கள் வாழ்ந்த தேசம். இங்கு பிரதமர் காமராஜர் மணிமண்டபத்தை திறந்து வைத்தது பெருமைக்குரியது. 

    அவர் அரசியல் நன்னடத்தையின் சின்னம். பள்ளி மாண வர்களுக்கு இலவச மதிய உணவு திட்டத்தை அறிமுகப்படுத்திய முதல் நபர் காமராஜர். 

    நம் நாடு பிரதமரின் வழியில் வல்லரசு நாடாக மாறி வருகிறது. மக்கள் தொகை என்பது வெறும் எண்ணிக்கை அல்ல. திறமையான பணியா ளர்களை, நாட்டிற்கு பங்களிக்கும் சக்தியாக எந்த எண்ணிக்கை மாறுகிறது. 

    ஆத்மநிர்பர் பாரத் திட்டம் நடைமுறைக்கு வந்த பின் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது. புதுவையிலும் இந்த மாற்றம் நடைபெறும். இந்த விழா இளைஞர்களுக்கு புத்துணர்ச்சி, புதிய யோசனைகள், படைப்புகளை உருவாக்க அழைத்துச்செல்லட்டும்.  நம் நாட்டு இளைஞர்கள் இந்த உலகுக்கு முன்மாதிரியாக மாற வேண்டும். நீங்கள் தேசத்தின் பெருமையாகவும், கண்ணியமாகவும் மாற வேண்டும். 

    இந்த உலகம் உங்களை உச்சத்தில் பார்க்க வேண்டும். இதை நீங்கள் செய்வீர்கள் என நம்புகிறேன். புதுவை மக்களின் நலனுக்காக தனி கவனம் செலுத்தி வரும் பிரதமருக்கு நன்றி. 

    இவ்வாறு அவர் பேசினார்.
    ஆரோவில்லில் வெளிநாட்டினர் பங்கேற்கும் மஞ்சு விரட்டு நிகழ்ச்சிக்கு போலீசார் தடை விதித்துள்ளனர்.
    சேதராப்பட்டு: 
    ஒவ்வொரு ஆண்டும் பொங்கல்  பண்டிகையின்போது காணும் பொங்கல் அன்று குயிலாப் பாளையத்தில் நடக்கும் மஞ்சுவிரட்டு பிரசித்தி பெற்றது. 

    இந்த மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில் அதிகப்படியான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தமிழ் கலாச்சார உடை அணிந்து இதில் பங்கேற்பார்கள்.  மாடுகள் அலங்கரிக் கப்பட்டு மாட்டின் மீது பழங்களையும், பலூன் களையும் கட்டி  மாட்டை விரட்டுவார்கள். 

    அப்போது அங்கு கூடி யிருக்கும் வெளிநாட்டினர் உற்சாகத்துடன் இந்த நிகழ்ச்சியை காண்பதுண்டு. மேலும் தமிழர்களுடன் வெளி நாட்டினர் உறவினர் போல் உறவாடுவதும், ஒருவருக் கொருவர் மாறிமாறி முகத்தில் வண்ணங்களை பூசி மகிழ்ச்சியுடன் கொண்டாடும் இந்த விழாவினை காண நூற்றுக்கணக்கான வெளி யூர், உள்ளூர் பொது மக்கள் கூடுவதுண்டு.

    தற்போது நாடு முழுவதும் பரவி வரும் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று காரணமாக வருகிற 16&ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை)  தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளன. அதே நாளில்  காணும் பொங்கல் விழா என்பதால் அன்று மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியை வழக்கம்போல் நடத்த கோட்டக்குப்பம் துணை போலீஸ் சூப்பிரண்டு அருணிடம் குயிலாப்பாளையம் பஞ்சாயத்து நிர்வாகிகள் பேச்சு வார்த்தை நடத்தினர். 

    தமிழக அரசின் முழு ஊரடங்கு காரணமாக அன்று மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியை நடத்த கூடாது என்று துணை போலீஸ் சூப்பிரண்டு அருண் தெரிவித்தார்.

    இந்நிலையில் எளிமையாக நடத்திக் கொள்வதாக ஊர் பஞ்சாயத்து நிர்வாகிகள் கூறிவந்த நிலையில் முழுவதுமாக அன்றைக்கு எந்த நிகழ்ச்சியும் நடத்தக் கூடாது என்று துணை போலீஸ் சூப்பிரண்டு அருண் திட்டவட்டமாக கூறிய நிலையில், ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக நடைபெற்று வரும் இந்த மஞ்சுவிரட்டு நிகழ்ச்சிக்கு அனுமதி கோரி விழுப்புரம் மாவட்ட  கலெக்ட மோகனை குயிலாப்பாளையம் ஊர் பஞ்சாயத்து நிர்வாகிகள் சந்திக்க உள்ளனர்.
    ஜெயிலில் இருந்த மர்டர் மணிகண்டனை செல்போனில் ஆபாசமாக திட்டியதால் பாம் ரவி கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து புதிய தகவல்கள் வெளியாகி உள்ளது.
    புதுச்சேரி:

    புதுவை வாணரப்பேட்டையை சேர்ந்த பிரபல ரவுடி பாம் ரவி மற்றும் அவரது நண்பர் அந்தோணி ஆகியோர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 24&ந்தேதி நாட்டு வெடிகுண்டு வீசியும், அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் வெட்டியும் படுகொலை செய்யப்பட்டனர்.

    இதுகுறித்து முதலியார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.விசாரணையில் திப்ளானின் கொலைக்கு பழிக்குப்பழியாக சிறையில் உள்ள வினோத்,தீன் ஆகியோரின் தூண்டுதலின்பேரிலேயே இந்த கொலை நடந்தது தெரியவந்தது.மேலும் கொலைக்கு உதவியதாக வினோத்தின் தாய் ரமணி உள்பட 17 பேரை கைது செய்து  சிறையில் அடைத்தனர். கொலையில் தொடர்புடைய கூலிப்படையினரையும்,கொலைக்கு பிரான்சிலிருந்து பண உதவி செய்தவரையும் கைது செய்யும் நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் இந்த கொலையில் சிறையில் இருக்கும் பிரபல ரவுடியான மர்டர் மணிகண்டன் சம்பந்தப்பட்டிருப்பது.விசாரணையில் தெரியவந்தது.இதற்காக முதலியார்பேட்டை போலீசார் புதுவை கோர்ட்டில் அனுமதி பெற்று 2 நாட்கள் விசாரணை நடத்த மர்டர் மணிகண்டனை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் காவலில் எடுத்தனர். 

    விசாரணையில் பரபரப்பு தகவல் வெளியானதாக கூறப்படுகிறது.அதன் விபரம் வருமாறு:-

    மர்டர் மணிகண்டனிடம் வினோத்,தீன்,பாம் ரவி ஆகியோர் கூட்டாளிகளாக இருந்துள்ளனர்.பின்னர் மர்டர் மணிகண்டனுக்கும், பாம் ரவிக்குமிடையே யார் பெரியவர் என்ற பிரச்சினை  ஏற்பட்டதையடுத்து தனித்தனி கோஷ்டிகளாக செயல்பட்டு வந்தனர். 

    அதன்பின்னர்  சிறையில் இருந்து வெளியே வந்த பாம் ரவி தனக்கென ஆதரவாளர்களை திரட்டி அவர்கள் மூலம் மாமூல் வசூலிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தார்.ஒரு கட்டத்தில்   மணிகண்டனை செல்போனில் தொடர்பு கொண்டு அவரை பாம் ரவி ஆபாசமாக திட்டியதாக கூறப்படுகிறது.மேலும் மர்டர் மணிகண்டன் ஓரு ரவுடியின் மனைவியிடம் நெருக்கமாக  பழகி வந்ததாக தெரிகிறது.இதனை பாம் ரவி கண்டித்து செல்போனில் திட்டியதாக தெரிகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த மர்டர் மணிகண்டன் பாம் ரவியை கொலை செய்ய திட்டமிட்டு அதனை தனது கூட்டாளிகளிடம் கூறியுள்ளார்.இதன் பின்னரே இந்த கொலை சம்பவம் நடந்ததாக தெரிகிறது. விசாரணை முடிந்து மணிகண்டனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி மீண்டும் காலாப்பட்டு சிறையில் அடைக்கின்றனர்.
    ரூ.8 லட்சம் மோசடி செய்த ஆசிரியை மீது வக்கீல் போலீசில் புகார் செய்துள்ளார்.
    புதுச்சேரி:

    வக்கீலிடம் ரூ.8 லட்சம் மோசடி செய்ததாக அரசு பள்ளி ஆசிரியை மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

    வில்லியனூர் ஓம்சக்தி நகர் அரபிந்தோ வின்சிட்டி செந்தில்குமரன் வீதியை சேர்ந்தவர் ஜான்ஆண்ட்ரூ. இவர் வக்கீலாக பணிபுரிந்து வருகிறார்.  இவரது மனைவி புதுவையில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.  

    ஜான்ஆண்ட்ரூ    மீது 2017-ம் ஆண்டு முத்தியால்பேட்டை போலீசில் போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை சென்னை ஐகோர்ட்டு மூலம் தள்ளுபடி செய்ய ஜான்ஆண்ட்ரூ   முயற்சி செய்து வந்தார். 

    இதற்கிடையே இவரது மனைவியுடன் ஆசிரியையாக பணிபுரிந்த புதுவை செயிண்ட் தெரசா வீதியை சேர்ந்த பாலசுந்தரி என்பவர் தனக்கு சென்னை ஐகோர்ட்டில் தெரிந்தவர்கள் பலர் உள்ளனர். அவர்கள் மூலம் வழக்கு தள்ளுபடி செய்து தருவதாக ஜான் ஆண்ட்ருவிடம் கூறினார்.

    அதற்காக ஜான்ஆண்ட்ரூ விடமிருந்து ரூ-.10 லட்சம் வரை பாலசுந்தரி பெற்றதாக கூறப்படுகிறது. ஆனால் வழக்கை தள்ளுபடி செய்ய எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால்  ஜான்ஆண்ட்ரூ  பணத்தை திருப்பி கேட்டார்.

    ஆனால் பாலசுந்தரி பணத்தை திருப்பி கொடுக்க வில்லை என தெரிகிறது. இதையடுத்து ஜான்ஆண்ட்ரூ   பெரியக்கடை போலீசில் புகார் செய்தார். போலீசார் பாலசுந்தரியை அழைத்து விசாரணை நடத்தினர். அப்போது பாலசுந்தரி ரூ-.8லட்சத்தை திருப்பி கொடுப்பதாக ஒப்புக்கொண்டார். அதற்கான காசோலையை ஜான்ஆண்ட்ரூ விடம் பாலசுந்தரி கொடுத்தார்.

    இதையடுத்து அந்த காசோலையை ரெட்டியார் பாளையத்தில்  உள்ள ஒரு தேசிய வங்கியில்ஜான்ஆண்ட்ரூ  செலுத்தினார். ஆனால் பாலசுந்தரி திடீரென அந்த காசோலையை முடக்கி வைத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் அந்த காசோலை திரும்ப வந்து விட்டது.

    இதைத் தொடர்ந்துஜான்ஆண்ட்ரூ  ரெட்டியார்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரில் தன்னிடம் ஆசிரியை பாலசுந்தரி ரூ.8 லட்சம் மோசடி செய்துவிட்டதாக தெரிவித்தார். இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கிரிக்கெட்போட்டியை பேட்டிங் மத்திய மந்திரி தொடங்கி வைத்தார்.
    சேதராப்பட்டு:

    புதுவை பா.ஜனதா இளைஞரணி சார்பில் மாநில அளவிலான நமோ கிரிக்கெட் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி தாகூர் கலைக்கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

     கடந்த 8-ந் தேதி தொடங்கிய கிரிக்கெட் போட்டியில் புதுவை, காரைக்கால், மாகி, ஏனாம் பகுதிகளைச் சேர்ந்த சுமார் 100 அணிகள் பங்கேற்று விளையாடுகின்றனர்.  4-வது நாள் நடந்த கிரிக்கெட் போட்டியை பார்வையிட மத்திய மந்திரி பானு பிரதாப்சிங் வர்மா வந்தார். அப்போது விளையாடிய அணிகளுக்கு டாஸ் போட்டார். டாஸ் வென்ற அணியினர் பேட்டிங் செய்தனர்.

    அப்போது மத்திய மந்திரி பேட்டிங் செய்தார். அவர் ஆர்வமாக கிரிக்கெட் விளையாடியது கிரிக்கெட் வீரர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியது. 

    இந்த நிகழ்ச்சியில் புதுவை பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன், சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய். ஜெ.சரவணன்குமார், செல்வகணபதி எம்.பி, நமோ கிரிக்கெட் போட்டியின் பொறுப்பாளர் வெங்கடேசன் எம்.எல்.ஏ., எம்.எல்.ஏ.க்கள் ஜான்குமார் கல்யாணசுந்தரம், ரிச்சர்டு,  ராமலிங்கம், அசோக் பாபு, பா.ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினர் காசிலிங்கம் என்ற ஏழுமலை ஆகியோர் கலந்து கொண்டனர். 

    நமோ கிரிக்கெட் போட்டியை நடத்தி வரும் பா.ஜனதா மாநில இளைஞர் அணி துணைத் தலைவர்கள் உமா சங்கர், ராக் பேட்டரி பொதுச் செயலாளர் வேல்முருகன், செயலாளர் அமல்ராஜ் ஆகியோரை மத்திய மத்திரி பானு பிரதப் சிங் வர்மா  பாராட்டினார்.

    புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் ரூ.122 கோடியில் அமைக்கப்பட்ட தொழில் நுட்ப மையம் மற்றும் கருவடிக்குப்பத்தில் ரூ.23 கோடியில் கட்டப்பட்டுள்ள காமராஜர் மணிமண்டபம் ஆகியவற்றையும் காணொலி வாயிலாக பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
    புதுச்சேரி:

    நாட்டின் 75-வது சுதந்திர தின ஆண்டையொட்டி 25-வது தேசிய இளைஞர் விழா இன்று (12-ந்தேதி) முதல் 16-ந்தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டது.

    நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 7,500 மாணவர்கள் பங்கேற்கும் இளைஞர் விழாவை தொடங்கி வைக்க பிரதமர் நரேந்திர மோடி புதுச்சேரி செல்ல இருந்தார்.

    ஒமைக்ரான் தொற்று காரணமாக பிரதமர் வருகை ரத்து செய்யப்பட்டது. 5 நாள் கொண்டாட இருந்த இந்த விழா 2 நாட்களாக குறைக்கப்பட்டது.

    புதுச்சேரியில் 25-வது தேசிய இளைஞர் விழாவை பிரதமர் மோடி டெல்லியில் இருந்து காணொலி மூலம் தொடங்கி வைத்தார். மாணவர்கள் அவரவர் மாநிலங்களில் இருந்து காணொலி வாயிலாக பங்கேற்றனர்.

    இதே போல புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் ரூ.122 கோடியில் அமைக்கப்பட்ட தொழில் நுட்ப மையம் மற்றும் கருவடிக்குப்பத்தில் ரூ.23 கோடியில் கட்டப்பட்டுள்ள காமராஜர் மணிமண்டபம் ஆகியவற்றையும் காணொலி வாயிலாக பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் புதுச்சேரி கவர்னர் தமிழிசை, முதல்-மந்திரி ரங்கசாமி, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    தேசிய இளைஞர் விழாவை தொடங்கி வைத்த பிறகு பிரதமர் மோடி பேசியதாவது:-

    2022-ம் ஆண்டு இந்திய இளைஞர்களுக்கு மிகவும் முக்கியமானது. இன்றைய இளைஞர்கள் நாட்டுக்காக வாழ வேண்டும், நமது சுதந்திரப் போராட்ட வீரர்களின் கனவுகளை நிறைவேற்ற வேண்டும்.

    இளைஞர்களின் வலிமை இந்தியாவை மேலும் உயரத்திற்கு கொண்டு செல்லும். இன்றைய இளைஞர்களிடம் ‘முடியும்’ என்ற மனப்பான்மை உள்ளது.

    இது ஒவ்வொரு தலைமுறையினருக்கும் உத்வேகம் அளிக்கிறது. இளைஞர்களின் பலத்தால் டிஜிட்டல் பணபரிவர்த்தனையில் இந்தியா மிகவும் முன்னேறியுள்ளது. இன்று இந்திய இளைஞர்கள் உலகளாவிய முன்னேற்றத்துக்கு அச்சாரமிடுகிறார்கள்.

    15 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டம் கடந்த 3-ந்தேதி நாடு முழுவதும் தொடங்கப்பட்டது. 2 கோடிக்கும் மேற்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி போடுவதில் இளைஞர்களின் பொறுப்புணர்வை பாராட்டுகிறேன்.

    மகன்களும், மகள்களும் சமம் என்று நாங்கள் நம்புகிறோம். இதை நினைத்து மகள்களின் முன்னேற்றத்துக்காக திருமண வயதை 21 ஆக உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது. மகள்களும் தங்கள் வாழ்க்கை உருவாக்க முடியும். அவர்களுக்கு அதிக நேரம் கிடைக்கும்.

    இன்று இந்தியா 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப்களை கொண்ட வலுவான சுற்றுச்சூழல் அமைப்பைக் கொண்டுள்ளது, அவற்றில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஸ்டார்ட்அப்கள் கடந்த 6, 7 மாதங்களில் கொரோனா தொற்று நோய் பரவிய காலத்தில் முன்வைக்கப்பட்ட சவால்களுக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்டன.

    போட்டி மற்றும் வெற்றி என்பதே இதன் மந்திரம். இந்தியாவில் எல்லையற்ற 2 சக்திகளாக மக்கள்தொகை மற்றும் ஜனநாயகம் உள்ளன என்பதை உலகம் ஒப்புக்கொண்டுள்ளது.

    இந்திய இளைஞர்கள் மக்கள்தொகை சார்ந்தும் அந்த பகுதிகளையும் சார்ந்தும் ஒற்றுமையாக உள்ளனர். இந்தியா தனது இளைஞர்களின் வளர்ச்சியை சார்ந்தே உள்ளது.

    புதுவையில் தொழில்நுட்ப மையம் திறக்கப்பட்டுள்ளது. உலகை மாற்றும் தொழில்நுட்பங்களை நமது இளைஞர்கள் பயன்படுத்துவது மிகவும் முக்கியம். புதிய தொழில்நுட்ப மையம் அந்த திசையில் ஒரு முக்கியமான படியாக அமையும்.

    இவ்வாறு மோடி பேசினார்.



    ×