என் மலர்
புதுச்சேரி
புதுச்சேரி:
புதுவை கோரிமேடு பூத்துறை சாலை அரிநமோ நகரை சேர்ந்தவர் அரிதாஷ். இவர் புதுவை காவல்துறையில் ஏட்டாக பணிபுரிந்து ஓய்வுபெற்றவர்.
இவரது மகன் மகேஷ் குமார் (வயது 35). இவர் புதுவை போலீஸ் பயிற்சி பள்ளியில் போலீஸ்காரராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு சுதா என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர்.
கடந்த சில நாட்களாக மகேஷ்குமார் மன அழுத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அதற்காக அவர் டாக்டரிடம் சிகிச்சையும் பெற்று வந்ததாக தெரிகிறது.
இதற்கிடையே வருகிற 19-ந்தேதி போலீஸ் பணிக்கான ஆட்கள் தேர்வு நடைபெற உள்ளதால் அதற்கான பணியில் மகேஷ்குமார் ஈடுபட்டு வந்தார்.
இந்த நிலையில் நேற்று காலை வழக்கம் போல் மகேஷ்குமார் கோரிமேட்டில் உள்ள போலீஸ் பயிற்சி பள்ளியில் உள்ள அலுவலகத்துக்கு பணிக்கு வந்தார்.
திடீரென அவர் பயிற்சி பள்ளியின் 2-வது மாடிக்கு சென்று அங்கிருந்து கீழே குதித்தார். இதில் தலை நசுங்கி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இறந்து போனார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீஸ் சூப்பிரண்டுகள் ரவிக்குமார், சுபம் கோஷ், தீபிகா மற்றும் இன்ஸ்பெக்டர் நாகராஜ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி மகேஷ்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பணி சுமை காரணமாக மகேஷ்குமார் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து கோரிமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
போலீஸ்காரர் மகேஷ் குமார் பணி செய்த அலுவலகத்தில் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மற்ற போலீசாரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நெட்டப்பாக்கம் அருகே மடுகரை எஸ்.பி.ஆர்.நகர் அய்யனார்கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது53). தொழிலாளி. இவருக்கு சித்ரா என்ற மனைவியும், நந்தகுமார் என்ற மகன் மற்றும் 2 மகள்கள் உள்ளனர்.
கடந்த 10 ஆண்டுகளாக முருகன் நீரழிவு மற்றும் ரத்த அழுத்த நோய் காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று மாலை முருகன் தனது மனைவியிடம் உணவு தயாரித்து கொடுக்கும்படி கூறினார். அதன்படி சித்ரா முட்டை தோசை தயார் செய்து கணவருக்கு கொடுத்தார். முருகன் அதனை சாப்பிட்டுக் கொண்டு இருந்தார்.
அப்போது திடீரென முட்டை தோசை தொண்டையில் சிக்கி முருகனுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. உடனே அவரை குடும்பத்தினர் மீட்டு காரில் புதுவை கதிர்காமம் அரசு மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே முருகன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து அவரது மகன் நந்தகுமார் கொடுத்த புகாரின் பேரில் மடுகரை புறக்காவல்நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
முட்டை தோசை தொண்டையில் சிக்கி தொழிலாளி மூச்சு திணறி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
புதுவையில் கடந்த சில நாட்களாக ஒற்றை இலக்கில் இருந்த கொரோனா பாதிப்பு நேற்று ஒரே நாளில் 900-ஐ தொட்டது.
தற்போது 2,355 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இதுவரை 1 லட்சத்து 27 ஆயிரத்து 629 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
1 லட்சத்து 31 ஆயிரத்து 866 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் நேற்று காணொலி மூலம் பிரதமர் மோடி புதுவையில் தேசிய இளைஞர் தின விழாவை தொடங்கி வைத்தார். இதற்கான விழா தனியார் ஓட்டலில் நடந்தது.
விழாவில் கவர்னர் தமிழிசை, முதல்-அமைச்சர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
தலைமை செயலாளர் அஸ்வினி குமார் விழாவிற்கு வந்தார். ஆனால் மேடையில் உட்காராமல் தனியாக நாற்காலியில் அமர்ந்து இருந்தார். இந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இதனால் அவர் கவர்னர் மாளிகையில் நடந்த பொங்கல் விழாவில் பங்கேற்கவில்லை. அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை பெறுவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.






