என் மலர்
உள்ளூர் செய்திகள்

கொரோனா வைரஸ்
புதுவை தலைமை செயலாளருக்கு கொரோனா
புதுவை தலைமை செயலாளருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை பெறுவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
புதுச்சேரி:
புதுவையில் கடந்த சில நாட்களாக ஒற்றை இலக்கில் இருந்த கொரோனா பாதிப்பு நேற்று ஒரே நாளில் 900-ஐ தொட்டது.
தற்போது 2,355 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இதுவரை 1 லட்சத்து 27 ஆயிரத்து 629 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
1 லட்சத்து 31 ஆயிரத்து 866 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் நேற்று காணொலி மூலம் பிரதமர் மோடி புதுவையில் தேசிய இளைஞர் தின விழாவை தொடங்கி வைத்தார். இதற்கான விழா தனியார் ஓட்டலில் நடந்தது.
விழாவில் கவர்னர் தமிழிசை, முதல்-அமைச்சர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
தலைமை செயலாளர் அஸ்வினி குமார் விழாவிற்கு வந்தார். ஆனால் மேடையில் உட்காராமல் தனியாக நாற்காலியில் அமர்ந்து இருந்தார். இந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இதனால் அவர் கவர்னர் மாளிகையில் நடந்த பொங்கல் விழாவில் பங்கேற்கவில்லை. அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை பெறுவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
புதுவையில் கடந்த சில நாட்களாக ஒற்றை இலக்கில் இருந்த கொரோனா பாதிப்பு நேற்று ஒரே நாளில் 900-ஐ தொட்டது.
தற்போது 2,355 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இதுவரை 1 லட்சத்து 27 ஆயிரத்து 629 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
1 லட்சத்து 31 ஆயிரத்து 866 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் நேற்று காணொலி மூலம் பிரதமர் மோடி புதுவையில் தேசிய இளைஞர் தின விழாவை தொடங்கி வைத்தார். இதற்கான விழா தனியார் ஓட்டலில் நடந்தது.
விழாவில் கவர்னர் தமிழிசை, முதல்-அமைச்சர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
தலைமை செயலாளர் அஸ்வினி குமார் விழாவிற்கு வந்தார். ஆனால் மேடையில் உட்காராமல் தனியாக நாற்காலியில் அமர்ந்து இருந்தார். இந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இதனால் அவர் கவர்னர் மாளிகையில் நடந்த பொங்கல் விழாவில் பங்கேற்கவில்லை. அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை பெறுவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Next Story