என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்

புதுவையில் மாடியில் இருந்து குதித்து போலீஸ்காரர் தற்கொலை

புதுச்சேரி:
புதுவை கோரிமேடு பூத்துறை சாலை அரிநமோ நகரை சேர்ந்தவர் அரிதாஷ். இவர் புதுவை காவல்துறையில் ஏட்டாக பணிபுரிந்து ஓய்வுபெற்றவர்.
இவரது மகன் மகேஷ் குமார் (வயது 35). இவர் புதுவை போலீஸ் பயிற்சி பள்ளியில் போலீஸ்காரராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு சுதா என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர்.
கடந்த சில நாட்களாக மகேஷ்குமார் மன அழுத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அதற்காக அவர் டாக்டரிடம் சிகிச்சையும் பெற்று வந்ததாக தெரிகிறது.
இதற்கிடையே வருகிற 19-ந்தேதி போலீஸ் பணிக்கான ஆட்கள் தேர்வு நடைபெற உள்ளதால் அதற்கான பணியில் மகேஷ்குமார் ஈடுபட்டு வந்தார்.
இந்த நிலையில் நேற்று காலை வழக்கம் போல் மகேஷ்குமார் கோரிமேட்டில் உள்ள போலீஸ் பயிற்சி பள்ளியில் உள்ள அலுவலகத்துக்கு பணிக்கு வந்தார்.
திடீரென அவர் பயிற்சி பள்ளியின் 2-வது மாடிக்கு சென்று அங்கிருந்து கீழே குதித்தார். இதில் தலை நசுங்கி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இறந்து போனார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீஸ் சூப்பிரண்டுகள் ரவிக்குமார், சுபம் கோஷ், தீபிகா மற்றும் இன்ஸ்பெக்டர் நாகராஜ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி மகேஷ்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பணி சுமை காரணமாக மகேஷ்குமார் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து கோரிமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
போலீஸ்காரர் மகேஷ் குமார் பணி செய்த அலுவலகத்தில் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மற்ற போலீசாரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
