என் மலர்
புதுச்சேரி
புதுவையில் மசாஜ் சென்டர், அழகுநிலையம் என்ற பெயரில் விபசாரம் கொடி கட்டி பறக்கிறது. இதை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதற்காக போலீசார் மசாஜ் சென்டர், அழகுநிலையங்களில் அதிரடி சோதனை செய்து வருகின்றனர்.
இந்தநிலையில் உருளையன்பேட்டை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் செயல்பட்ட மசாஜ் சென்டரில் சிறுமியை விபசாரத்தில் தள்ளியது தெரியவந்தது. இதுதொடர்பாக போக்சோ சட்டத்தின் கீழ் 40 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் இதுவரை 16 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்தநிலையில் மீதமுள்ள 24 பேரை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் தீவிரமாக இறங்கினர். இந்தநிலையில் முதலியார்பேட்டையை சேர்ந்த தனியார் வங்கி ஊழியர் ராஜ்குமார் (வயது 27), மூலக்குளத்தை சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினீயர் சுரேஷ் (34) ஆகிய 2 பேரும் சிறுமியை பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
பின்னர் 2 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடையவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
புதுச்சேரி:
புதுவை திருவள்ளூர் சாலையில் பிரபல தனியார் செல்போன் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் உதவிமேலாளராக பாக்க முடையான் பட்டை சேர்ந்த ராஜ்குமார்பணி புரிந்து வந்தார்.
இந்த அலுவலகத்தில் 5 ஊழியர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். கடந்த ஆண்டு 2 ஊழியர்கள் புதிதாக சேர்க்கப்பட்டனர். ஆனால், கடந்த ஓராண்டாக அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை.
இதற்கிடையே கடந்த ஆண்டு சேர்க்கப்பட்ட 2 ஊழியர்களுக்கு தற்போது புதிதாக சேர்க்கப்பட்டதாக பணி ஆணை வழங்கப்பட்டது.
கடந்த ஆண்டு பணியில் சேர்க்கப்பட்ட இந்த ஊழியர்களுக்கு புதிதாக பணி ஆணை வழங்கியதில் அலுவலக மானேஜர் கார்த்திகேயனுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து விசாரித்த போது, கடந்த ஆண்டு சேர்க்கப்பட்ட 2 ஊழியர்களின் சம்பள பணத்தை அவர்களுக்கு வழங்காமல் உதவி மேலாளர் ராஜ்குமார் தனது மனைவியின் வங்கி கணக்கில் செலுத்தி இருப்பது தெரிய வந்தது. மொத்தம் ரூ. 2 லட்சம் சம்பள தொகையை ராஜ்குமார் மோசடி செய்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து அந்த நிறுவன மேலாளர் கார்த்திகேயன் உருளையன் பேட்டை போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






