என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    மோசடி
    X
    மோசடி

    தனியார் செல்போன் நிறுவனத்தில் ஊழியர்களின் சம்பள பணத்தை மனைவி கணக்கில் செலுத்தி மோசடி செய்த அதிகாரி

    புதுவையில் தனியார் செல்போன் நிறுவனத்தில் ஊழியர்களின் சம்பள பணத்தை மனைவி கணக்கில் செலுத்தி மோசடி செய்த அதிகாரி குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    புதுவை திருவள்ளூர் சாலையில் பிரபல தனியார் செல்போன் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் உதவிமேலாளராக பாக்க முடையான் பட்டை சேர்ந்த ராஜ்குமார்பணி புரிந்து வந்தார்.

    இந்த அலுவலகத்தில் 5 ஊழியர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். கடந்த ஆண்டு 2 ஊழியர்கள் புதிதாக சேர்க்கப்பட்டனர். ஆனால், கடந்த ஓராண்டாக அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை.

    இதற்கிடையே கடந்த ஆண்டு சேர்க்கப்பட்ட 2 ஊழியர்களுக்கு தற்போது புதிதாக சேர்க்கப்பட்டதாக பணி ஆணை வழங்கப்பட்டது.

    கடந்த ஆண்டு பணியில் சேர்க்கப்பட்ட இந்த ஊழியர்களுக்கு புதிதாக பணி ஆணை வழங்கியதில் அலுவலக மானேஜர் கார்த்திகேயனுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    இதையடுத்து விசாரித்த போது, கடந்த ஆண்டு சேர்க்கப்பட்ட 2 ஊழியர்களின் சம்பள பணத்தை அவர்களுக்கு வழங்காமல் உதவி மேலாளர் ராஜ்குமார் தனது மனைவியின் வங்கி கணக்கில் செலுத்தி இருப்பது தெரிய வந்தது. மொத்தம் ரூ. 2 லட்சம் சம்பள தொகையை ராஜ்குமார் மோசடி செய்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து அந்த நிறுவன மேலாளர் கார்த்திகேயன் உருளையன் பேட்டை போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×