என் மலர்
புதுச்சேரி
காரைக்கால்:
காரைக்காலிலிருந்து கோட்டுச்சேரி, வடமட்டம், நெடுங்காடு வழியாக மயிலாடுதுறை, கும்பகோணத்துக்கு தமிழக மற்றும் புதுச்சேரி அரசுப் பஸ்கள், கடந்த பல ஆண்டுகளாக இயக்கப்பட்டு வந்தது. ஆனால், அண்மைக்காலமாக அவையாவும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், முதியோர், பள்ளி, கல்லூரி மாணவர்கள், வியாபாரிகள் வெகுவாக பாதிக்கப்பட்டு வருகின் றனர்.
எனவே, மீண்டும் அந்த வழித்தடங்களில் அரசு மற்றும் தனியார் பஸ் வசதிகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வழித் தடங்களில் அனுமதி பெற்றுள்ள ஷேர் ஆட்டோக்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காரைக்கால் அருகே நெடுங்காடு கடைத்தெரு பகுதியில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல் செய்தனர்.
நெடுங்காடு பகுதி செயலாளர் பாக்கியராஜ், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் திவ்ய நாதன் ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்ட செயலாளர் தமீம் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
தகவல் அறிந்த புதுச்சேரி சாலை போக்குவரத்து அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி 45 நாட்களில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித் ததையடுத்து, அனைவரும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
புதுச்சேரி அரசு சுகாதாரத்துறை சார்பில் மாநில எய்ட்ஸ் தடுப்பு உயர்நிலை குழு கூட்டம் அக்கார்டு ஓட்டலில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமை தாங்கினார். இதில் சுகாதாரத்துறை செயலாளர் உதயகுமார், இயக்குனர் ஸ்ரீராமுலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். தகவல் தொடர்பு மற்றும் பயிற்சி தேசிய நிதி ஆலோசகர் ராவத் உட்பல் தாஸ், ஷேர் இந்தியா நிறுவனம் சார்பில் சம்ருதி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
கூட்டத்தில் உயர்மட்ட குழு உறுப்பினர்களாக உள்ள மாவட்ட நீதிபதி, சட்டப்பணிகள் ஆணைய உறுப்பினர் செயலர், குடிமைப்பொருள் வழங்கல் துறை, சமூக நலத்துறை, மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை, தொழிலாளர் துறை உள்பட பல்வேறு துறையின் இயக்குனர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், எய்ட்ஸ் தொற்றுடன் வாழ்பவர்களுக்கு அரசு வழங்கும் உதவித்தொகையில் ரூ.500 உயர்த்தி வழங்குவது, எய்ட்ஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு விதவை பென்ஷன் பெறுவோருக்கு கூடுதலாக எய்ட்ஸ் தொற்றுக்கான உதவித்தொகையை சேர்த்து வழங்குவது என்று முடிவு செய்யப்பட்டது. மேலும் ஏ.ஆர்.டி. சிகிச்சை எடுத்துக்கொள்ள மருத்துவமனைக்கு சென்று வர அரசு ஒரு ஆண்டுக்கு வழங்கும் பயண படி ரூ.400 என்பதை ரூ.1,800 ஆக உயர்த்தி வழங்கவும், எய்ட்ஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் ரூ.1,025 மதிப்புள்ள சத்து பொருட்கள் வழங்குவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
மேலும் சிவப்பு ரேஷன்கார்டு வைத்துள்ள எய்ட்ஸ் நோயாளிகளை அந்தி யோதயா அன்ன யோஜனா திட்டத்தில் சேர்த்து அதற்கான குடும்ப அட்டை வழங்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.
இதற்கு ஆகும் செலவு ரூ.1 கோடியே 57 லட்சத்து 46 ஆயிரத்தை புதுவை அரசு ஏற்றுக்கொள்ளும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவித்தார்.
காரைக்கால் அருகே திருபட்டினம் கீழையூர் பகுதியில் வசிப்பவர்கள் வீரமணி, ஸ்டாலின், தமிழரசன்.
நேற்று மாலை மாசிமகத் திருவிழா முடிந்து, அனைவரும் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர். இன்று அதிகாலை 2 மணி சுமாருக்கு தமிழரசன் என்பவர் வீட்டில் தீ பற்றியது. சிறுது நேரத்தில் தொடர்ந்து அடுத்தடுத்தவர்களின் வீட்டுக்கும் தீ பரவியது. விபத்தை தொடர்ந்து அனைவரும் வீட்டை விட்டு உடனடியாக வெளியேறினார். நள்ளிரவு என்பதால் வீடு முழுவதும் எரிந்து சாம்பலானது.
காரைக்கால் மாவட்ட தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீ மற்ற வீடுகளுக்கு பரவாமல் அணைத்தனர். விபத்தில் சுமார் ரூ. 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் எரிந்து சாம்பலானது.
தீ விபத்து மின் கசிவு காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. தீ விபத்து குறித்து, திரு.பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுவை கோரிமேட்டில் ஜிப்மர் ஆஸ்பத்திரி இயங்கி வருகிறது.
இந்த ஆஸ்பத்திரியில் புதுவை தமிழகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து உள்புற நோயாளியாகவும் வெளிப்புற நோயாளியாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்று காலை ஜிப்மர் வளாகத்தில் உள்ள பழைய கட்டிடத்தில் உள்ள ரத்த மாதிரிகள் சேமிப்பு அறையில் திடீரென கரும்புகை வெளியேறியது. இதனை அறிந்த ஆஸ்பத்திரி ஊழியர் அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் இதுகுறித்து ஆஸ்பத்திரி காவலாளிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் உடனடியாக அறையின் உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த மின் வயரில் மின்கசிவு ஏற்பட்டு தீவிபத்து நடந்தது தெரியவந்தது.
இந்த திடீர் தீ விபத்தால் அங்கிருந்த கம்ப்யூட்டர், மின் பெட்டி உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் எரிந்து சேதமானது. ஆனால் பெரிய அளவிலான தீவிபத்தோ, பொருள் சேதமோ ஏற்படவில்லை.
இந்த சம்பவத்தால் ஆஸ்பத்திரி வளாகத்தில் இன்று காலை பரபரப்பு நிலவியது.






