என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிழக்கு மாநில அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் மாநில செயலாளர் அன்பழகன் பேசிய கட்சி.
    X
    கிழக்கு மாநில அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் மாநில செயலாளர் அன்பழகன் பேசிய கட்சி.

    ஜெயலலிதா பிறந்த நாளை பெண்கள் தினமாக கொண்டாட வேண்டும்-அ.தி.மு.க. தீர்மானம்

    ஜெயலலிதா பிறந்த நாளை பெண்கள் தினமாக கொண்டாட வேண்டும்- என புதுவை அ.தி.மு.க. தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    புதுச்சேரி: 

    புதுவை கிழக்கு மாநில அ.தி.மு.க. சார்பில் மறைந்த தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாளை கொண்டாடுவது குறித்து மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் ஆலேசானைக்கூட்டம் நடந்தது.

    முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பாஸ்கர், ராஜாராமன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில்,  ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு கிழக்கு மாநில அ.தி.மு.க. சார்பில் வருகிற 24-ந்தேதி தலைமை கழகத்தில் ஏழை மக்களுக்கு, இலவச வேட்டி, சேலை, தட்டு வண்டி, தள்ளுவண்டி, சலவைப்பெட்டி, ஆதரவற்ற பெண்களுக்கு தையல் எந்திரம், மாணவர்களுக்கு பாட புத்தகங்கள், அன்னதானம் உட்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்பாக கொண்டாடுவது. 

    அரசு குழந்தைகள் மருத்துவமனையில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் தங்க மோதிரம் வழங்குவது. கிழக்கு மாநிலம் முழுவதும் ஒவ்வொரு தொகுதியிலும் நலத்திட்ட உதவிகள் வழங்குவது என தீர்மானிக்கப்பட்டது. 

    மேலும், ஜெயலலிதா பிறந்த நாளை பெண் குழந்தைகளின் பாதுகாப்பு தினமாக அறிவிக்க வேண்டும். ஜெயலலிதாவுக்கு வெண்கல சிலை அமைக்க வேண்டும் என புதுவை அசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

    நிகழ்ச்சியில் இணை செயலாளர்கள் கணேசன், திருநாவுக்கரசு, அன்பா னந்தம், துணை தலைவர் சின்னத்துரை, பொருளாளர் ரவிபாண்டுரங்கன், துணை செயலாளர்கள் முன்னாள் எம்.எல்.ஏ. பெரியசாமி, அன்பழக உடையார், மூர்த்தி,  ஜெயசேரன், கிருஷ்ணமூர்த்தி, காந்தி, மணவாளன், குமுதன், எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பாண்டுரங்கன், எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் மருதமலையப்பன், தொழிற்சங்க பேரவை செயலர் பாப்புசாமி, மகளிரணி செயலாளர் விஜயலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்
    Next Story
    ×