என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    68 பேருக்கு கொரோனா

    புதுவையில் 68 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
    புதுச்சேரி:

    புதுவையில் 2 ஆயிரத்து 30 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது

    இதில் புதிதாக 68 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. புதுவையில் 50, காரைக்காலில் 12, ஏனாமில் 5, மாகியில் ஒருவர் புதிதாக    தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

    புதுவையில் 82, காரைக்காலில் 17, ஏனாமில் 9, மாகியில் 5 பேர் என 113 பேர் சிகிச்சையில் குணமடைந்தனர். 

    புதுவை மாநிலத்தில் ஒட்டு மொத்தமாக இதுவரை ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 484 பேர் கொரோனா தொற்றால்  பாதிக்கப்பட்டுள்ளனர்.  ஒரு லட்சத்து 62 ஆயிரத்து 834 பேர் சிகிச்சையில் குணமடைந்துள்ளனர். 

    புதுவையில் 360, காரைக் காலில்  23, மாகியில் 15 பேர் என 654 பேர் வீட்டு தனிமையில் உள்ளனர். புதுவை மாநிலத்தில் இப்போது 691 பேர் கொரோனா  தொற்றுடன் உள்ளனர். மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 959 ஆக உள்ளது. 

    புதுவையில் 2-வது தவணை  உட்பட 15 லட்சத்து 59 ஆயிரத்து 790 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். இத்தகவலை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
    Next Story
    ×