என் மலர்
புதுச்சேரி
புதுச்சேரி:
சிறுவர்களை கவர்வதற்காக மிட்டாய்களை பல வண்ணங்கள் மற்றும் வடிவங்களில் விற்பனை செய்கின்றனர்.
பல்லி மிட்டாய் என சிறுவர்களால் அழைக்கப்படும் மிட்டாய்கள் கண்ணாடி குப்பியில் அடைத்து விற்கப்படுகிறது.
இந்த குப்பிகள் ஊசிமருந்துக்கு பயன்படுத்தப்படும் 10 மி.லி. குப்பிகள் என தெரிகிறது. இந்த குப்பியில் எந்த பெயரும் கிடையாது. ஏற்கனவே மருந்து பயன்படுத்தப்பட்டு வீசி எறியப்பட்ட குப்பிகள் என தெரிகிறது. இந்த மிட்டாய்களை எடுத்துவிட்டு நுகர்ந்துபார்த்தால் குப்பியில் மருந்து வாசனை அடிக்கிறது. கோடை விடுமுறை காலம் என்பதால் சிறுவர்கள் இந்த மிட்டாய் பாட்டில்களை வாங்கி தின்கின்றனர்.
இது பெற்றோர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எந்த மருந்துக்காக பயன்படுத்தப்பட்ட குப்பியோ? இதனால் குழந்தைகளுக்கு பாதிப்பு வருமோ? என அஞ்சுகின்றனர்.
இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
புதுவை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள தாவரவியல் பூங்காவுக்கு சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
தாவரவியல் பூங்காவில் இயக்கப்படும் சிறுவர் ரெயிலை பார்வையிட்டார். அப்போது குழந்தைகளுடன் ரெயிலில் சென்று குதூகலமாக பேசினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, புதுவை திரைப்படத்துறையின் மனதுக்கு நெருக்கமான இடமாக உள்ளது. இங்கு விரைவில் திரைப்பட நகரம் உருவாக்கப்படும்.
புதுவை சீதோஷ்ண நிலைக்கு பிப்ரவரி மாதம் மலர் கண்காட்சி நடத்த வேண்டும் என கூறி உள்ளனர். கொரோனா தொற்றால் மலர் கண்காட்சி நடத்தப்படாமல் இருந்தது.
இந்த ஆண்டு நிச்சயமாக மலர் கண்காட்சி நடைபெறும். அதற்கு முன்பாக செயற்கை மலர் கண்காட்சி விழா நடத்த முடிவு செய்துள்ளோம்.
இதுமட்டுமின்றி மாடி தோட்டம், வீட்டு தோட்டத்தை ஊக்கப்படுத்துவதற்கு தோட்ட திருவிழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது என்றார்.
பின்னர் கடலூர் சாலையில் உள்ள வனத்துறை அலுவலகத்துக்கு சென்றார். அங்கு பராமரிக்கப்பட்டு வரும் வனவிலங்குகள் மற்றும் பறவைகளை பார்வையிட்டார். அங்கிருந்த பாம்பு மற்றும் மயில் உள்ளிட்ட பறவைகளை கையில் எடுத்து பார்த்தார்.
ஒரு பறவையை கையில் பிடித்துக்கொண்டு ‘நல்லா இருக்கீங்களா?’ என கேட்டார். இதனை அங்கிருந்த அதிகாரிகள் பார்த்து வியப்படைந்தனர்.
ஆய்வின்போது துணை வன பாதுகாவலர் வஞ்சுலவள்ளி மற்றும் வன அதிகாரிகள் உடன் இருந்தனர்.






